ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143450 topics in this forum
-
டெஸோ நடத்துவதாக அறிவித்திருக்கும் மார்ச் 12 வேலை நிறுத்தத்துக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார் திமுக தலைவர் கலைஞர். இது குறித்து அவர் இன்று கடித அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், ‘’12. 3. 2013 அன்று தமிழகத்தில் பொது வேலை நிறுத்தம்! “டெசோ அமைப்பின் வேண்டுகோள் இது! இலங்கையில் சிங்களப் பேரினவாத அதிபர் ராஜபக்சேவால் நடத்தப்பட்ட தெல்லாம் தமிழினப் படுகொலையே; அவர் அடுக்கடுக்காகச் செய்த தனைத்தும் போர்க் குற்றங்களே; அவர் தனது மன சாட்சியை நசுக்கி அழித்து விட்டு மீறியதெல்லாம் மனித உரிமைகளையே; எனவே அவரைச் சர்வ தேசப் போர்க் குற்றவாளி என்று அறிவிக்கவேண்டும்; இலங்கையில் நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள் பற்றி, நம்பகத் தன்மையுடன் கூடிய சுதந்திரமான சர…
-
- 0 replies
- 820 views
-
-
போருக்குப் பின்னரான இலங்கையில் குறிப்பாக வடபகுதியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருப்பதனால், தமக்கு உரிய பாதுகாப்பளிக்கப்பட வேண்டும், இத்தகைய வன்முறைகளில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் மூலம் தண்டித்து வன்முறைகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வவுனியாவில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பேரணி நடத்திய பெண்கள் கோரியிருக்கின்றார்கள். இதேவேளை, வலது குறைந்த, கண்பார்வையற்ற, செவிப்புலனற்ற, வாய் பேச முடியாத பெண்கள் அரச அலுவலகங்களில் தமக்குரிய சேவைகளைப் பெற்றுக்கொள்ளத்தக்க வகையில் உட்கட்டமைப்பு வசதிகளையும், ஆளணி வசதிகளையும் செய்து தர வேண்டும் என்று சமூக சேவை அமைச்சிடம் அவர்கள் கோரிக்கையும் விடுத்திருக்கின்றார்கள். அரச செயலகங்களுக்குச் செல்கின்ற வாய…
-
- 0 replies
- 251 views
-
-
பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்குமாறு பிரித்தானிய மகாராணியிடம் கோரிக்கை இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டை புறக்கணிக்குமாறு பிரித்தானிய மகாராணியிடம் கோரிக்கை முன்வைக்கப்படும் என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் சைமன் டென் சேக் தெரிவித்துள்ளார். கடந்த 2011ம் ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகையன்று தங்காலை பிரதேச சுற்றுலா விடுதியொன்றில் சாக்கீ குர்ஹாம் என்ற பிரிட்டன் பிரஜையான சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பணியாளர் கொலை செய்யப்பட்டமை குறித்து முறையான விசாரணை இடம்பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். குறித்த கொலையையும், நபருடன் இருந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கும் உட்ப…
-
- 0 replies
- 410 views
-
-
இலங்கையில் தனி ஈழம் அமைப்பது தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தி.மு.க பொருளாளர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியத்; தலைநகர் புதுடில்லியில் டெசோ அமைப்பு சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் தலைமை உரையாற்றியபோது, இந்தக் கருத்துகளை ஸ்டாலின் தெரிவித்தார். இந்தக் கருத்தரங்கில் மத்திய முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு, திமுக எம்.பி. கனிமொழி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன், தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி., சுப்ரியா சுலே உள்ளிட்டோர் பங்கேற்றனர். சேனல் 4 தொலைக்காட்சியின் ” நோ ஃபயர் ஜோன்” ஆவணப் படத்த…
-
- 2 replies
- 490 views
-
-
சென்னையில் இடம்பெறவிருந்த ஆசிய தடகளப் போட்டிகள் கொழும்புக்கு மாற்றம் சென்னையில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த ஆசிய தடகள “கிராண்ட் பிரிக்ஸ்” தொடரின் மூன்றாவது சுற்றுப் போட்டிகள் கொழும்புக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டுக்கான ஆசிய தடகள “கிராண்ட் பிரிக்ஸ்” போட்டிகள் மூன்று சுற்றுகளாக நடைபெறவுள்ளது. முதலிரண்டு சுற்றுகள் மே 05ம் திகதி தாய்லாந்தில் உள்ள பங்காக் நகரிலும் மே 08ம் திகதி சோன்புரி நகரிலும் மூன்றாவது சுற்றுப் போட்டிகள், சென்னையில் மே 16ம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப் போட்டியில் இலங்கை வீரர்கள் கலந்து கொள்வர் என்பதால் இப் போட்டியை சென்னையில் நடத்த முடியாது என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால் சென்னையில் நடைபெறவிருந்த ஆசிய த…
-
- 0 replies
- 304 views
-
-
இசைப்பிரியா பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்தமை மன்னிக்க முடியாத குற்றமாகும் மார் 8, 2013 விடுதலைப் புலிகள் இயக்கத்தை சார்ந்தவர் என்றாலும் இசைப்பிரியா என்ற பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்தமை மன்னிக்க முடியாத குற்றமாகும். யுத்த காலப்பகுதியில் வடக்கில் பெண்களுக்கு எதிராக மிக மோசமான வன்கொடுமைகள் இடம்பெற்றுள்ளன என்று எதிர் கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். வன்கொடுமைகள் இடம்பெற்றுள்ளன என்று எதிர்க் கட்சித் தலைவரும் ஐக்கிய தேசயிக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இவ்வாறு நாட்டில் தொடர்ந்தும் ஜனநாயகத்திற்க எதிரான வன்முறைகள் இடம்பெறும் போது மனித உரிமைகள் தொடர்பிலான ஐ.நா. சாசன…
-
- 0 replies
- 843 views
-
-
இலங்கைக்கு அமெரிக்கா நிதியுதவி வெள்ளிக்கிழமை, 08 மார்ச் 2013 09:06 இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு ஆதரவு மற்றும் பாதுகாப்பு என்பவற்றை அதிகரிக்கும் செயற்றிட்டத்துக்கும் நாட்டில் நல்லிணக்கத்தை வளர்க்கும் செயற்றிட்டத்துக்கும் தலா 500,000 அமெரிக்க டொலர் நிதி வழங்கப் போவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நேற்று அறிவித்துள்ளது. அமெரிக்க தொண்டர் நிறுவனங்களுக்கு மட்டும் இது வழங்கப்படும். பயங்கரவாத இயக்கப்பட்டியலில் உள்ள நிறுவனங்களுக்கு ஆதரவான திட்ட முன்மொழிவுகள் ஏற்கப்பட மாட்டாது எனவும் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் பிரச்சினைகளை துருவி ஆராயும் வகையான புலனாய்வு ஊடகத்துறையில் சுதந்திர ஊடகங்களின் வலுவை அதிகரிக்கின்ற ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு, உதவி என்பவற்றை அதிகரிக்கின்…
-
- 0 replies
- 410 views
-
-
மிஹின் லங்காவிற்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் வெள்ளிக்கிழமை, 08 மார்ச் 2013 14:22 இலங்கை மிஹின் லங்கா நிறுவனத்திற்கு தொலைபேசியினூடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இந்த மாதம் 25 ஆம் திகதிக்குள் மிஹின் லங்கா அலுவலகத்தை மூடிவிடுமாறும் இல்லாதபட்சத்தில் ஆபத்தான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் குறித்த தொலைபேசி அழைப்பில் கூறப்பட்டதாக மிஹின்லங்கா அதிகாரிகள் முறையிட்டுள்ளனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60289-2013-03-08-08-53-56.html
-
- 0 replies
- 241 views
-
-
ஈழத் தமிழர் படுகொலைக்கு இந்தியாவும் உடந்தையாகவே இருந்தது. புலிகளின் கடற்படையை இந்திய கடற்படையே ஒழித்தது என இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவருமான யஸ்வந் சின்கா தெரிவித்துள்ளார். லோக்சபாவில் இன்று நடைபெற்ற இலங்கை தொடர்பான சிறப்பு விவாத்தின் போது பேசிய அவர், இலங்கையில் நமது காலத்தில் நடந்த துயரம் கொடூரமானது. கனத்த இதயத்துடன் இந்த விவாதத்தில் பங்கேற்கிறேன். இலங்கையில் மிகப் பெரும் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. மனித உரிமை மீறல்கள் நடந்தேறி வருகின்றன இலங்கை ராணுவ பங்கர் ஒன்றில் 12வயது சிறுவன் பாலச்சந்திரன் பிஸ்கட் போன்ற ஒன்றை கொறித்துக் கொண்டிருக்கும் அந்தக் காட்சியையும் அவன் சிறிது நேரத்தில் சுட்டுப் படுகொலை செய்யப்படுவதையும் …
-
- 36 replies
- 2.1k views
-
-
தனி ஈழம் வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை என்று டி.ஆர்.பாலு தெரிவித்தார் ஆனால் தற்போது தனி ஈழம் கேட்க வில்லை. தமிழர் தாக்கப்படுவது தொடர்ந்தால் தனி ஈழம் கோரிக்கையை மீண்டும் எழுப்புவோம் என திமுக பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் தொடர்பாக மக்களவையில் விவாதம் தொடங்கியது. இலங்கை தமிழர் விவாதம் மற்றும் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து மக்களவையில் விவாதிக்க பட வேண்டும் திமுக, அதிமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தியது. இலங்கை விவகாரம் பற்றி அவை விதி 193ன் கீழ் விவாதிக்க மக்களவைத் தலைவர் மீராகுமார்…
-
- 6 replies
- 949 views
-
-
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை காப்பாற்றும் நோக்கில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி அவசரமாக அமெரிக்காவுக்கு சென்று ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சார்பில் தாக்கல் செய்யப்படும் தீர்மானத்தை நீர்த்துப்போக வைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், வோஷிங்டனில் [Aerica washington ] அமெரிக்க உயர்அதிகாரிகளுடன் சுப்பிரமணியசாமி ஆலோசனை நடத்தியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையில் லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதை உலகம் முழுவதும் உள்ள மனிதநேய ஆர்வலர்கள் வன்மையாக கண்டித்து வருகிறார்கள். இந்நிலையில் இலங்கை சென்று மகிந்த ராஜபசவை சந்தித்து உரையாடினார் சுப்பிரமணிய சாமி. ஜெனிவாவில் நடக்கும் …
-
- 16 replies
- 1.7k views
-
-
பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்காக படையினரை நீதிமன்றில் நிறுத்த முடியாது என்றார் 07 மார்ச் 2013 பொன்சேகா – விக்கிலீக்ஸ் - விசேட மொழியாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள் யுத்தம் இடம்பெறும் போது பெதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்காக படையினரை நீதிமன்றில் நிறுத்த முடியாது என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார் என விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம் திகதி அப்போதைய இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளக் இந்த குறிப்பை அனுப்பி வைத்துள்ளார். அப்போதைய இராணுவத் தள…
-
- 1 reply
- 457 views
-
-
முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அநீதிகள் தொடர்பிலான கடிதம் ஒன்றை முஸ்லிம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலி, ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூனுக்கு அனுப்பியுள்ளார். இது குறித்து எமது செய்திப்பிரிவுக்கு அவர் விளக்கமளித்தார். இதற்கிடையில் முஸ்லிம்களுக்கு அநீதியான விடயங்கள் தொடர்பில், பொதுபல சேனா அமைப்பை தலையிட வேண்டாம் என்று கோரி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஹலால் சான்றிதழ் தொடர்பிலும் அவர் எமக்கு கருத்து வெளியிட்டார். http://www.hirunews.lk/tamil/54768
-
- 2 replies
- 512 views
-
-
2006ம் ஆண்டு காலப்பகுதியில் மிகவும் வலுவான நிலையில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு அமெரிக்காவும் இலங்கையும் மேற்கொண்ட சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது. விக்கிலீக்ஸ் இணையத்தளம் இதனை வெளியிட்டுள்ளது. கடற்புலிகளால் அரசாங்கத்தின் கடற்படையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஒன்றை தொடர்ந்து அமெரிக்காவின் தூதுவராக அப்போது இருந்த ரொபர் ஓ பிளக் ராஜாங்க திணைக்களத்துக்கு எழுதிய கடிதம் ஒன்று விக்கிலீக்ஸில் வெளியாகியுள்ளது. இதில், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படமுடியாத அளவில் மிகவும் வலிமையாக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் 2006ம் ஆண்டு நவம்பர் 9ம் திகதி இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் 5 பட…
-
- 33 replies
- 1.7k views
-
-
"இதுதான் பிரபாகரன் வீடு!'' ''இது தமிழ்செல்வன் மீது பம்ப் அடிச்ச இடம்!'' ''இங்கேதான் புலிகள் கடைசியாக விழுந்தாங்க!'' - இவை எல்லாம் வன்னி நிலம்பற்றிய சிங்கள சுற்றுலாப் பயணிகளின் குறிப்புகள். ஈழத்தில் போர் முடிந்து நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும், 'காணாமல்போன எங்கள் உறவுகள் எங்கே? - என்ற கேள்வி மட்டுமே மக்களிடம் எஞ்சியிருக்கிறது. கூட்டுக் கொலைகளுக்கும், பாலியல் வன்முறைகளுக்கும், கடத்தலுக்கும், சாட்சிகளாக நின்ற ஈழ மக்கள் பேசவே அஞ்சும் நிலை இன்று. விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், திருகோணமலை அரசியல் துறைப் பொறுப்பாளராகவும் இருந்து இறுதிப் போரில் சரணடைந்து காணாமல்போனவர் தளபதி எழிலன். இவருடைய மனைவி ஆனந்தியின் போர் வாக்குமூலம் இது... ''2009 ஜனவரியிலிருந்து ஒர…
-
- 28 replies
- 2.2k views
-
-
போரால் பாதிக்கப்பட்டோருக்கு லெபாராவின் செயற்கை உறுப்புக்கள் வழங்கும் திட்டம்! மார் 8, 2013 போரால் பாதிக்கப்பட்ட தாயக மக்களிற்கு 'லெபாரா நிதியத்தினால்' (Lebara Foundation) வழங்கப்பட்டுவரும் பல்வேறு பணித்திட்டங்களின் ஒரு கட்டமாக 500 பேருக்கு செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டுள்ளன. போரினால் பல்லாயிரக்கணக்கானோர் தமது உறுப்புக்களை இழந்திருப்பதாக கணிப்பிடப்பட்டுள்ள பின்புலத்தில் முதற் கட்டமாக வன்னிப் பெருநிலப்பரப்பின் முல்லைத்தீவு கிளிநொச்சி வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலுள்ள 500 பேருக்கு செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டுள்ளன. செயற்கை உறுப்புக்களைப் பொருத்துதல் மட்டுமன்றிஇ பொருத்திய பின்னர் தேவையான உதவிகள் மற்றும் உடலுறுப்புக்களின் வளர்ச்சிக்கு ஏற்ப அவற்றை மாற்…
-
- 0 replies
- 401 views
-
-
யாழில் படையினரின் ஊர்தி பயிற்சியால் மக்கள் அச்சம்! மார் 8, 2013 யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் சிறிலங்காப் படையினர் படை வாகனப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதால் மக்கள் மத்தியில் மீண்டும் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. படை பயிற்சி முகாம்களில் நடைபெறவேண்டிய வாகனப் பயிற்சிகள் தற்போது குடாநாட்டு வீதிகளில் நடைபெறுகின்றமை குறித்து குடாநாட்டிலுள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகள் பலரும் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர். போர்க் களங்களில் பயன்படுத்தப்படும் பவள் கவச வாகனங்களைக் கொண்டுவந்து மக்கள் மத்தியில் வைத்துப் படையினருக்கு பயிற்றுவிப்பதால் மக்களிடையே யுத்த மனோபாவம் மேலோங்கியுள்ளதையும் அவதானிக்க முடிகிறது. ஜெனிவாவில் மனித உரிமைகள் அமர்வு நடைபெற்று வருகின்றது. அதிலும் சிறி…
-
- 0 replies
- 310 views
-
-
http://youtu.be/pYh-FbuhNXs
-
- 0 replies
- 723 views
-
-
யுத்தம் முடிவடைந்து நீதிமன்ற முறைமையை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை: ரவூப் ஹக்கீம் யுத்தம் முடிவடைந்து சமாதானம் நிலவும் இக் காலப்பகுதியில் நாடு முழுவதிலும் நீதிமன்ற முறைமையை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருப்பதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மன்னம்பிட்டிய பகுதியில் புதிய சுற்றுலா நீதவான் நீதிமன்ற கட்டிடம் ஒன்றை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். நீதிமன்ற முறைமையை வலுப்படுத்துவதற்காக தேவையான வசதிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பெற்றுக்கொடுக்கப்படுகின்றன. கடந்த காலம் முழுவதிலும் நிலவிய யுத்தம் காரணமாக இப் பிரதேசத்தின் மக்கள் பாரிய இன்னல்களுக்கு …
-
- 4 replies
- 403 views
-
-
இந்த வருடத்துக்கான ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளை சென்னையில் நடத்த தமிழக அரசாங்கம் மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, ஆசிய கிரான்பிரிக்ஸ் போட்டிகளை கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி இந்த போட்டி மே மாதம் 12ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. இலங்கையின் மனித உரிமை நிலவரங்களை காரணம் காட்டி, ஜுன் -ஜுலை மாதங்களில் நடைபெறவிருந்த ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளை தமிழகத்தில் நடத்த அனுமதிக்கப் போவதில்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் அறிவித்திருந்தார். இந்த நிலையில் அதற்கு முன்னதாக நடைபெறும் கிரான்பிரிக்ஸ் போட்டிகளை கொழும்பில் நடத்துவதாக, ஆசிய மெய்வல்லுனர் சம்மேளனம் தீர்மானித்துள்ளது. http://www.hirunews.lk/tamil/54770
-
- 0 replies
- 395 views
-
-
தமிழர்களின் வலியை இந்தியர்கள் அனைவருமே உணர்கிறார்கள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். மக்களைவையில் இலங்கை பிரச்னை மீதான விவாதத்தின் போது அவர் இதனை தெரிவித்தார். மேலும் அவர், இலங்கையில் தமிழர்கள் சரிசமமாக வாழ வேண்டும் என்றே இந்தியா விரும்புகிறது என்றார். அடுத்த நாடுகளிடம் பெரிய அண்ணனாக, காவலராக இந்தியா நடந்து கொள்ள முடியாது என்றும், நீதியை நிலை நாட்ட சில நடவடிக்கைகள் அவசியம் என்பதை இந்தியா நம்புகிறது என்றார். ஜெனீவா தீர்மானம் மீது நல்ல முடிவு எடுக்கப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 13 வது அரசியல் சட்ட திருத்தத்தை இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் மக்களைவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்…
-
- 3 replies
- 667 views
-
-
2002ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ம் திகதி கைச்சாத்திடப்பட்ட ரணில் - பிரபா யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு வயது 11 வருடங்கள். அன்றைய சர்வதேச சூழலை கிஞ்சித்தும் உள்வாங்கிக் கொள்ளாது பிரபாகரன் ஒப்பந்தம் கைச்சாத்தாகி 7 ஆண்டுகளில் புலிகள் இயக்கத்தின் கடைசி ஆயுதத்தையும் மெளனிக்கச் செய்தார். தமிழ் மக்களின் 60 வருட தேசியக் கனவு 2009 மே 19 ஒரு பகல் கனவாகிப்போனது. யுத்த வெற்றியில் ஒரு ஜனாதிபதி தேர்தலை நிகழ்த்தி பெரும் வெற்றி பெற்ற மகிந்த பாராளுமன்ற தேர்தலிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றார். மகிந்தவின் யுத்த வெற்றிக்கு பெரும் பங்காற்றிய மேற்குலகம் யுத்த முடிவின் பின் இலங்கையில் ஒரு புதிய அரசியல் சகாப்தத்தை உருவாக்க அவருக்கு நான்கு ஆண்டுகள் அவகாசம் கொடுத்தது. இந்த மாத முட…
-
- 10 replies
- 1.2k views
-
-
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா தீர்மானம் தாக்கல் செய்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தியாவின் நிலைப்பாடு பற்றி இன்னும் முடிவு செய்யப்பட்வில்லை. இந்த நிலையில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா.மனித உரிமை ஆணையம் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், இலங்கையில் கைதான விடுதலைப்புலிகளை விசாரிக்க சிறப்பு இராணுவ நீதிமன்றம் அமைக்க வேண்டும், மனித உரிமைகள் மீறல் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை தெரிவித்திருந்தது. இதையடுத்து இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் அமெரிக்கா திருத்தம் செய்துள்ளது. ஐ.நா. மனித உரிமை ஆணைய அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை இல…
-
- 3 replies
- 754 views
-
-
இலங்கையின் வட பகுதிக்கு நேரில் சென்றுள்ள அமெரிக்க தூதரக அரசியல் துறை அலுவலர் ஜேக்கப் ஸ்ரிக்கி, அங்குள்ள மனித உரிமை நிலைமைகள், நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தல் போன்ற விடங்களில் இன்னும் முன்னேற்றம் காணப்பட வேண்டியிருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தமது வடபகுதிக்கான பயணம் குறித்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ஜேக்கப் ஸ்ரிக்கி, வடபகுதியின் மனித உரிமை நிலைமைகள் மிகுந்த கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது என்றும், கொழும்புக்குச் செல்வதற்காக வந்த மக்கள் வவுனியாவில் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது ஒரு சம்பவமாக இருந்த போதிலும், இந்த பகுதியின் நிலைமைகளை விளக்குவதற்கானதொரு சிறந்த உதாரணமாக இந்து அமைந்திருக்கின்றது என்றும் கூறினார். இதேபோன்று நல்ல…
-
- 0 replies
- 456 views
-
-
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் 99 வீதமான பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தி வருவதாகவும், இதனை உலக நாடுகள் சரியாக கவனிக்க வேண்டுமெனவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் கடந்த 26ம் திகதி ஆற்றிய உரை தொடர்பில் அவர் இந்த விளக்கத்தைக் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைப் பேரவையில் தாம் அளித்த விளக்கத்தை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். யுத்தத்தின் பின்னர் நாட்டில் ஏற்பட்ட அபிவிருத்தியை நேரில் கண்டறிந்து கொள்ளுமாறு தாம் உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். …
-
- 3 replies
- 779 views
-