ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143449 topics in this forum
-
பல்வேறு கட்சிகளும், அமைப்புக்களும், பொதுமக்களும், மாணவர்களும் இலங்கைக்கெதிராக தமிழகத்தில் போர்க்கோலம் பூண்டு நிற்கின்றனர் என்பதை இன்றும் கடந்த இரண்டு மூன்று நாட்கள் நிகழ்வுகளும் காட்டுகின்றன. பா.ஜ.க. கண்டனம்: தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், ’’தமிழக மீனவர்கள் 22 பேர் இலங்கை ராணுவத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடுமை தொடர்கதையாகவே நீண்டு கொண்டிருக்கிறது. இலங்கை வாழ் தமிழர்களைத்தான், வாழவிடாமல் வஞ்சிக்கிறது என்ற நிலையில் தமிழக மீனவர்களையும் அடிக்கடி பிடித்து வைத்துக் கொள்வதும் அவர்களது உடமைகளை பறிப்பதுமான தன் அட்டூழியத்தை தொடர்கிறது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர் முடிந்துவிட்ட நிலையிலும்கூட, அமைதியை நிலைநாட்ட வேண்டிய த…
-
- 0 replies
- 448 views
-
-
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை நாளை திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அறிவித்துள்ளனர். மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி தலைமையில் வைகோ, பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், வணிகர் சங்கங்களின் பேரவையின் தலைவர் த.வெள்ளையன் ஆகியோர் இணைந்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் சனிக்கிழமை செய்தியாளர்…
-
- 2 replies
- 353 views
-
-
மன்னார் பேராயர் தற்கொலை குண்டுதாரிகளை சந்தித்துள்ளார் 04 மார்ச் 2013 மன்னார் பேராயர் அதி வணக்கத்திற்குரிய அருட் திரு ஜோசப் சௌந்தரநாயகம் ஆண்டகை, தமிழீழ விடுதலைப் புலி தற்கொலைக் குண்டுதாரிகளை சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மன்னார் பேராயருடன், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜயலத் ஜயவர்தனவும் கலந்து கொண்டதாகக் குறிப்பிடப்படுகிறது. வெலிக்கடை மற்றும் மகசீன் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களை சந்தித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடாத்திய பெண்ணை கொழும்பிற்கு அழைத்து வந்தவர், ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை கொலை செய்வதற்காக தற…
-
- 3 replies
- 625 views
-
-
இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகனான பாலச்சந்திரன், வீட்டில் பெரும்பாலும் நண்பர்களின் துணையின்றி தனியாகத்தான் இருப்பார் என்று அவருடன் இருந்த பாதுகாவலர் தெரிவித்துள்ளார். பாலச்சந்திரனின் சகோதரர் சார்ள்ஸ் அன்ரனி கணினியிலேயே அதிகம் இணைந்திருப்பார். அவரது சகோதரி துவாரகா புத்தகம் படித்துக் கொண்டிருப்பார். அதனால் வீட்டில் இருக்கும்போது, பாலச்சந்திரன் தனிமையில்தான் இருப்பார். பாதுகாப்பு காரணங்களுக்காக மற்ற சிறுவர்களுடன் விளையாட அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று கொழும்பில் இருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பெயர் கூற விரும்பாத பாலச்சந்திரனின் பாதுகாவலர் தெரிவித்தார். வீட்டில் த…
-
- 1 reply
- 1.2k views
-
-
வெலிஓயா சிங்களப் பிரிவுடன் தமிழ்க் கிராமங்கள் இணைப்பு; அரசின் செயலுக்கு கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு இலங்கை அரசால் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட "வெலிஓயா' சிங்களப் பிரதேச செயலர் பிரிவில் சில தமிழ்க் கிராமங்களை இணைப்பதற்கு எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ளடங்கியிருந்த 9 சிங்களக் கிராமங்களை ஒன்றிணைத்து வெலிஓயா என்ற புதிய பிரதேச செயலர் பிரிவு 2011 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. இந்தப் பிரதேச செயலர் பிரிவில் 2 ஆயிரத்து 125 வாக்காளர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தப் பிரதேச செயலர் பிரிவுடன் ஐந்து தமிழ்க் கிராமங்களை இ…
-
- 0 replies
- 391 views
-
-
ஜப்பான் உள்ளிட்ட ஐந்து நாடுகள் தயாரித்த, இலங்கை குறித்த கண்துடைப்பு அறிக்கையை ஏற்றுக்கொண்டார் பான் கீ மூன்! [Monday, 2013-03-04 06:56:02] ஜப்பான் உள்ளிட்ட ஐந்து நாடுகளால் தயாரித்து வழங்கப்பட்ட இலங்கை தொடர்பான கண்துடைப்பு அறிக்கையை ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னர் சிட்டி பிரஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் 22ம் திகதி ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி பாலித்த கோஹன்ன மற்றும் ஜப்பானின் ஐக்கிய நாடுகளுக்கான தூதுவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இதில் ஜப்பான் உள்ளிட்ட ஐந்து ஆசிய நாடுகள் தயாரித்த அறிக்கை பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்டது. இந்த அறிக்கையில் இலங்கை அரசாங்கம்…
-
- 0 replies
- 589 views
-
-
இலங்கை மீதான பிரேரணை ஜெனிவாவில் இன்று தாக்கல்; பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தமிழ் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இலங்கை அரசுக்கு எதிரான அமெரிக்கப் பிரேரணை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இன்று தாக்கல் செய்யப்படும் என்று ஜெனிவாத் தகவல்கள் கூறுகின்றன. இலங்கை மீது கடந்த ஆண்டு (2012 மார்ச்) அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் கூறப்பட்ட விடயங்களை இலங்கை அரசு நிறைவேற்றத் தவறிய நிலையில் இந்தப் பிரேரணை கொண்டுவரப்படுகின்றது. இலங்கை அரசினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும்படியும் அதற்கான ஆலோசனைகள் மற்றும் தொழில் நுட்ப உதவிகளை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்திடம் இருந்து பெற்றுக…
-
- 0 replies
- 384 views
-
-
குடும்பத்துடன் தப்பிக்கக் கூடிய வாய்ப்புக்கள் இருந்தும் இறுதிவரை புறமுதுகு காட்டாமல் தன் மக்களுடன் இருந்து; உயிர் நீத்த பிரபாகரனை விமர்சிக்கும்; உரிமை உலகிலுள்ள எவருக்கும் இல்லை - வீ. ஆனந்தசங்கரி “மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்” என்ற பழமொழி இன்றையை சூழ்நிலையில் எனக்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளது. விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டுமென நான் என்றும் எண்ணியவன் அல்ல. அவர்கள் கையாண்ட சில வழி முறைகளை ஒழிவு மறைவின்றி சுட்டிக்காட்டியும் கண்டித்தும் வந்துள்ளேன். அவ்வாறு நான் நடந்து கொண்டமைக்கு முக்கிய காரணம் நான் வன்முறையை எதிர்க்கும் காந்தியவாதியாக ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்தவன் என்பதாலேயாகும். நான் யாரையும் அடையாளம் காட்டி குற்றம் சாட்டு…
-
- 6 replies
- 1.2k views
-
-
கலாநிதி விக்ரமபாகு கருணாலட்ன தலைமையிலான லங்கா சமசமாஜக கட்சியின் பிரதிநிதியாக சுந்தரம் மஹேந்திரன் ஜெனீவா சென்றுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தொடர்பில் முறையிடவுள்ளார். இவர் காணமல் போனோரை தேடிக் கண்டறியும் குழுவின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59923-2013-03-03-10-25-53.html
-
- 2 replies
- 346 views
-
-
சேலத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான உருவபொம்மையை எரித்து போராட்டம். சேலத்தில் ராஜபக்சே உருவபொம்மையை எரித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத் தினர். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13097:selam&catid=36:tamilnadu&Itemid=102
-
- 0 replies
- 245 views
-
-
கருணை உள்ளம் படைத்த கஜனின் முயற்சியால்,1956இல் இருந்து இன்றுவரை தொடர்கின்ற தமிழின அழிப்பின் ஆதாரங்களை ,புகைப்பட வடிவிலும் கலர்ப்பட வடிவிலும், யெனிவா முன்றலில் 25-02-13 திங்கள் கிழமை தொடக்கம் மார்ச் 4ம் திகதி திங்கள் கிழமை வரைக்கும், அனைத்து இனமக்களின் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. அத்துடன் கஜன் அவர்கள் தனது அடையாள உண்ணா விரதத்தையும் இன்று திங்கள் கிழமை தொடக்கம் மார்ச் 4ம் திகதி வரை நீடிக்கவுள்ளார். இந்த நிகழ்விற்கான சகல ஒழுங்குகளையும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரும்,இழையோர் அமைப்பினரும் செய்து வருகின்றனர்.கஜன் அவர்களுடன் சூரிச் நகரில் வாழும்,மனித நேய செயற்பாட்டாளர் திரு.சிவா (64வயது)அவர்களும் உறுதுணையாக தொடர்ந்து நிற்கின்றார். இப்படங்கள்,இலங்கையி…
-
- 4 replies
- 734 views
-
-
அரசாங்கத்தினுள் குழுநிலை மோதல்கள் இடம்பெற்றுவருவதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம்சுமத்தியுள்ளது. கண்டியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த கருத்தை வெளியிட்டார். அரசாங்கத்தின் ஆயுள் மிகக் குறுகியதாகவே உள்ளது. அரசாங்கத்தினுள் உள்ள ஒரு அமைச்சரே கூறுகிறார் தமக்கு உயிரச்சுறுத்தல் இருக்கின்றது என்று. ஒரு பிரதான கட்சியின் செயலாளருக்கே இந்த நிலையென்றால் மற்றவர்கள் நிலைமையை யோசித்துப்பாருங்கள் என்று லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார். எவ்வாறாயினும். பிபில பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, சிறிலங்கா சுதந்திர கட்சியின் கூட்டு அ…
-
- 0 replies
- 291 views
-
-
இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து ஆராய ஐ.நாவின் சிறப்பு நிபுணர்குழு நிச்சயமாக இலங்கை வரவுள்ளது. அதை இந்த அரசால் தடுக்கமுடியாது. தடுப்பதற்கான எந்த நடவடிக்கையையும் அது மேற்கொள்ளவில்லை. வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து நாட்டில் மனித உரிமைகளை உறுதிப்படுத்த அரசால் ஒருபோதும் முடியாது. கடந்த ஜெனிவா கூட்டத் தொடரில் அமெரிக்காவிடம் நாட்டை மண்டியிட வைத்த அமைச்சர் மஹிந்த சமரசிங்கவை இம்முறை கூட்டத் தொடருக்கு அனுப்பியதில் எந்தப் பயனும் இல்லை. இவ்வாறு ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கோ, இந்தியாவுக்கோ, அமெரிக்காவுக்கோ இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்த வேண்ட…
-
- 0 replies
- 413 views
-
-
ஐக்கிய தேசியக்கட்சிக்குள் ஷரீயா சட்டத்தை அமுல்படுத்துவேன் என்று அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கலேவெலவில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன்,மக்களை தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஏற்பாடு செய்கின்றபோது கட்சி அமைப்பாளர்கள் முறையாக நடந்துக்கொள்கின்றார்களா? இல்லையா? என்பது தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்படும் என்றும் அக்குழு வழங்குகின்ற தீர்ப்புக்கு அமைய அவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59934-2013-03-04-02-55-24.html
-
- 0 replies
- 367 views
-
-
வெளிநாடுகளில் பணியாளர்களாக சென்றுள்ள இலங்கையர்களின் நிதியே அரசாங்கத்தின் பிரதான வருமானமாக மாறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீ.ஹரிசன் இதனைத் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் பணியாற்றி வரும் இலங்கையர்களின் நிதியினால் கிடைக்கின்ற வருமானம் மாத்திரமே தற்போது அரசாங்கத்தின் பிரதான வருமானமாக காணப்படுகிறது. எனினும் அவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பில் அரசாங்கம் போதிய அக்கறை செலுத்துவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.hirunews.lk/tamil/54476
-
- 1 reply
- 328 views
-
-
மலேசியா தலை நகர் கோலாலம் பூரில் அமைந்துள்ள பிறிப்பில் உள்ள லிப்ரின் இந்தியதமிழினப் படுகொலை செய்த போர் குற்றவாளி மகிந்த ராஜ பக்சவை சர்வதேச நீதி மன்றத்தில் ஏற்றி தூக்குத் தண்டனை தர வேண்டும் தமிழீழத் தேசியத் தலைவரின் இளைய மகன் பலச் சந்திரனை கொடூரமாக சுட்டுக் கொன்ற கொடிய சிங்களவனுடன் நாம் சேர்ந்து வாழ முடியாது தமிழீழத்துக்கான வாக்கெடப்பு உலகத் தமிழர் இடையில் நடைபெற வேண்டும் எனவும் போர் குற்றவாளி மகிந்தராஜ பக்சவின் உருவப் பொம்மையை ஊர்வலமாக எடுத்துச் சென்று இறுதியில் கொடுங் கோலன் ராஜபக்சவின் உருவப் பொம்மையை தூக்கிலிட்டு பின்பு அமைதிப் பேரணிக்கு வந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் ராஜபக்சவின் உருவப் பொம்மைக்கு செருப்பால் அடித்து மரியாதை செலுத்திய பின் தீக்கிரையாக்கப்பட்டது. …
-
- 3 replies
- 911 views
-
-
இன்று பாரிசில் மூர்த்தி அண்ணாவின் அஞ்சலி நிகழ்வு தமிழர் புனர்வாழ்வுக்கழகம் சார்பில் நடைபெற்றது 16.00 மணிக்கு S.K. Rajan அவர்கள் தொகுத்து வழங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. இந்தியாவிலிருந்து நெடுமாறன் ஐயா வைகோ அண்ணா மற்றும் செய்தியாளர் அம்துல் ஐகவார் ஆகியோரது பேச்சுக்கள் ஒலிபரப்பப்பட்டன. அத்துடன் கங்கை அமரன் அவர்கள் நேரில் வந்து தனது அவருடனான தொ டர்புகள்மற்றும் சந்திப்புக்கள் அவரது பல்முக ஆற்றல்கள் பற்றி சொன்னார். மேலும் புனர்வாழ்வுக்கழக தலைவர் சுந்தர் முன்னைநாள் தலைவர்கள் தா. விநாயகமூர்த்தி பாலச்சந்திரன் அத்துடன் கவிஞர் யெயா என பலரும் உரையாற்றினர். அவர்களது பேச்சுக்கள் அனைத்திலும் இருந்து.. சிறைச்சாலையில் நடந்த சித்திரைவதைகளினால் அங்கயீன…
-
- 2 replies
- 904 views
-
-
கடந்த வருடம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் அமெரிக்கா நிறைவேற்றிய பிரேரணையை அடிப்படையாக கொண்டே, இந்த முறை சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணையும் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் ராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் பெட்ரிக் வென்ட்ரெல் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில், இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டிருந்தது. எனினும் அவற்i நிறைவேற்ற போதுமான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்திராத நிலையில், இது தொடர்பில் மேலும் செயற்பாடுகளை கோரி இந்த முறை பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதேவேளை அமெரிக்காவின் …
-
- 7 replies
- 650 views
-
-
இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய இன்று திங்கட்கிழமை கிளிநொச்சிக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது கிளிநொச்சியிலுள்ள படைத்தளங்களுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதுடன் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/59919-2013-03-03-09-51-19.html
-
- 0 replies
- 387 views
-
-
அமெரிக்க - இலங்கை உறவு முறிந்து போனது ஏன்? அமெரிக்க - இலங்கை உறவுகளுக்கு, போரின் போது இடம்பெற்ற குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் விவகாரம் தான் பெரும் சிக்கலாக மாறியுள்ளது என்று, சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் பணிகளை முடித்து திரும்பிய அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புரெனிஸ் முன்னர் குறிப்பிட்டதாக, ஒரு விக்கிலீக்ஸ் தகவல் வெளியாகியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வரும் வரை, அமெரிக்க - இலங்கை உறவுகள் ஒன்றும் மோசமான கட்டத்தை அடைந்திருக்கவில்லை. மிகவும் நன்றாகவே தான் இருந்தது. என்கின்றார் இன்போ தமிழின் இராணுவ ஆய்வாளர் சுபத்ரா அவர்கள்........." விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்தபோது, அதற்காக மகிழ்ச்சி தெரிவித்த நாடுகளில் அமெரிக்காவு…
-
- 6 replies
- 787 views
-
-
ஜெனீவாவில் நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர் இலங்கை பிரதிநிதிகள் - தயான் ஜயதிலக்க [sunday, 2013-03-03 18:02:59] ஜெனீவாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கைப் பிரதிநிதிகள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக பிரான்ஸிற்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். நாம் சொல்லும் விடயங்களை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளும் என்ற நிலைப்பாடு முக்கியமானது. ஜெனீவா பிரதிநிதிகளை கொழும்பில் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் கட்டுப்படுத்த முயற்சிப்பது பொருத்தமாகாது. குறிப்பிட்ட வரையறைகளுக்கு உட்பட்டு செயற்படுவது நெருக்கடிகளை ஏற்படுத்தக் கூடும். உலக நாடுகளை இலகுவில் சமாளிக்க முடியும் என அரசாங்கம் கருதுவது நியாயமற்றது. அனைத்து நாடுகளும் தங்களைப் போன்ற கொள்கைகளை கொண்டிருக்காது என்பதனை அரசாங்கம் …
-
- 2 replies
- 577 views
-
-
ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்படும் இலங்கை மீதான் போர்க்குற்றச் சாட்டுத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கோரி இன்று ஒரு நாள் தொடர்முழக்க உண்ணாநோன்பு போராட்டம் நடைபெறுகிறது. கடந்த ஒரு மாதத்தில் தமிழகம் முழுவதிலும் பலவகையான போராட்டங்களை இதே காரணத்துக்காக நாம் தமிழர் கட்சி நடத்தி வந்தது. கடந்த மாதம் இதே போல் புதுவையிலும் ஒரு நாள் போராட்டம் நடைபெற்றது. புதுவை, கும்ப கோணம், திருச்சி முதலிய இடங்களில் நடைபெற்ற போராட்டங்கள் முத்திரை பதித்தன. இன்று பல்லாவரத்தில் நடைபெறும் போராட்டம் பல இயக்கங்களின் தலைவர்களையும் செயல்பாட்டாளர்களையும் ஒருங்கிணைத்து நடைபெறுகிறது. ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா எதிர்க்க வேண்டுமென்று இலங்கை அரசு பலவித முயற்சிகளில் …
-
- 2 replies
- 464 views
-
-
இந்திய அரசே ஜெனீவாவில் நடைபெறும் ஜ.நா மனிதஉரிமைகள் ஆணையக கூட்டத்தில் தமிழ்மக்களின் கோரிக்கையினை வலியுறுத்த கோரி இந்தியப் பிரதமரை நோக்கிய கோரிக்கையோடு மாணவர்கள் வணிகர்கள் தமிழ் உணர்வாளர்களின் அஞ்சல்அட்டை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். http://www.sankathi24.com/news/27596/64//d,fullart.aspx
-
- 0 replies
- 458 views
-
-
நீதிக்கான பிரச்சார நெடும் பயணம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை பிரான்சின் தலைநகர் பரிசில் தொடர்கின்றது. பரிஸ் லாச்சப்பல் பகுதியில் இன்று மதியம் அமைதி வணக்கத்துடன் ஆரம்பமான இப்பிராச்சாரப் பயணம் பரிசின் முக்கிய வீதிகள் ஊடாக நகர்ந்து நகரின் பல இடங்களிலும் பிரச்சாரங்கள் இடம்பெறவுள்ளன. இப்பிரச்சாரப் பயணத்தின் தேவை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தி அவர்கள் விளக்கவுரை ஒன்றை நிகழ்த்தினார். முன்னால், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பிராந்தியப் பொறுப்பாளர் நவம் அவர்களும் முன்னாள் மாணவர் பேரவையை சேர்ந்த பொ.சத்தியசீலன் அவர்களும் இணைந்து ஆரம்பித்து வைத்த இப்பிரச்சாரப் பயணம் இலண்டனின் பல்வேறு இடங்களிலும் நடைபெற்ற…
-
- 0 replies
- 496 views
-
-
-எஸ்.எம்.மும்தாஜ் சிலாபத்தில் பாதிரியார் ஒருவர் இனந்தெரியாதோரினால் நேற்று சனிக்கிழமை இரவு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். சிலாபம், அம்பகந்தவில கத்தோலிக்க திருச்சபையின் பாதிரியாரே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். சிலாபம், இரணவில வீதியில் வெலிஹேன பிரதேசத்திலேயே பாதிரியார் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். சிலாபத்திலிருந்து அம்பகந்தவில தேவாலயத்திற்கு தான் வானில் சென்றுகொண்டிருந்தபோது, வெலிஹேன பிரதேசத்தில் குழப்பம் ஒன்று இடம்பெற்றுக்கொண்டிருந்தது. இந்த நிலையில் தனது வாகனம் அந்த இடத்தை கடந்து செல்ல முற்பட்டபோது அங்கிருந்த ஒருவர் தனது வாகனத்தை தாக்கியுள்ளார். வாகனத்தை தாக்கியதை அடுத்து இது தொடர்பில் விசாரிப்பதற்காக தான் வாகனத்திலிருந்து இறங்கியப…
-
- 2 replies
- 433 views
-