Jump to content

புறமுதுகு காட்டாமல் தன் மக்களுடன் இருந்து; உயிர் நீத்த பிரபாகரனை விமர்சிக்கும் உரிமை எவருக்கும் இல்லை - சங்கரி


Recommended Posts

குடும்பத்துடன் தப்பிக்கக் கூடிய வாய்ப்புக்கள் இருந்தும் இறுதிவரை புறமுதுகு காட்டாமல் தன் மக்களுடன் இருந்து; உயிர் நீத்த பிரபாகரனை விமர்சிக்கும்; உரிமை உலகிலுள்ள எவருக்கும் இல்லை - வீ. ஆனந்தசங்கரி
 
“மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்” என்ற பழமொழி இன்றையை சூழ்நிலையில் எனக்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளது. விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டுமென நான் என்றும் எண்ணியவன் அல்ல. அவர்கள் கையாண்ட சில வழி முறைகளை ஒழிவு மறைவின்றி சுட்டிக்காட்டியும் கண்டித்தும் வந்துள்ளேன். அவ்வாறு நான் நடந்து கொண்டமைக்கு முக்கிய காரணம் நான் வன்முறையை எதிர்க்கும் காந்தியவாதியாக ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்தவன் என்பதாலேயாகும். நான் யாரையும் அடையாளம் காட்டி குற்றம் சாட்டுவேனாயின் அதை வைத்தே ஒரு பூகம்பத்தையே வெடிக்க வைத்திருப்பர்.  
 
கடந்த பல ஆண்டுகளாக விடாதே பிடி என்று அடம் பிடித்து தூண்டிவிட்டு ஒரு இக்கட்டான நிலைமைக்கு தமிழ் மக்களையும் விடுதலைப் போராளிகளையும் யார் கொண்டுவந்தார்களோ அவர்களில் அநேகர் இன்று குத்துக்கரணம் அடித்து அரசோடு ஒட்டிக்கொண்டு விட்டார்கள். அதனால் மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டநிலையில் எதுவித மாற்றமும் இதுவரை ஏற்படவில்லை. இரட்டை வேடம் போட்ட சிலர் போராளிகளுக்கு துரோகம் செய்த கே.பி போன்ற பலர் பற்றி மூச்சு விடுவதில்லை. அத்தகையவர்களுடன் இவர்களுக்கு இரகசிய உறவும் உண்டு. இன்று தமிழ் மக்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கின்ற சிலர் அவர்களுடன் உறவு வைத்திருக்கிறார்கள். “வேலையற்றவர்கள்;தான் ஆயுதம் ஏந்தி போராடினார்கள்” என்று கூறியவர் உத்தமராக உலகுக்கு காட்டப்படுகின்றார். கல்வியை, உற்றார் உறவினர்களை துறந்து போராடிய இலட்சிய இளைஞன் வேலையற்றவன். இதில் என்ன நியாயம் இருக்கிறது. கடந்த வருடம் ஜெனீவா போகாமைக்கு பொய்யான காரணங்கள் பலவற்றைக் கூறி மக்களை ஏமாற்றியவர்கள் உண்மை விளம்பிகள். இன்று ஏன் ஜெனீவா செல்ல வேண்டும் என்பதற்கு போதிய விளக்கம் தர முடியாதவர்கள் விற்பன்னர்கள். 
 
அன்று நான் எழுதிய கடிதங்கள் பலவற்றில் சிலவற்றையேனும் விடுதலைப் புலிகளின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தால் பிரபாகரனும், அவரின் குடும்பமும் மற்றும் ஆயிரக்கணக்கான மக்களும் காப்பாற்றப்பட்டிருப்பார்கள். ஜெனீவா பிரச்சனை என்ற ஒரு பிரச்சனையே இருந்திருக்காது. விடுதலைப் புலிகளை காலத்துக்குக் காலம் நல்வழிப்படுத்தி போராட்டத்துக்கு வலுச் சேர்க்கத் தவறிவிட்டு இன்று எல்லோரையும் பூண்டோடு பரலோகத்துக்கு அனுப்பி விட்டு உத்தமர்கள் போல் நடிப்பவர்கள் பலரில், முன்னிலையில் நிற்பவர்,பொய்யையும் புரட்டையும் கூறி என்மீது குற்றம் சாட்டும் அரியநேந்திரன் அவர்களிடம் ஒன்று கேட்க விரும்புகின்றேன். வன்னியில் ஏறக்குறைய பதினைந்து போராட்டங்கள் - கவனயீர்ப்பு போராட்டம், உண்ணா விரதப் போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் என நடந்துள்ளன. இவற்றில் எந்தப் போராட்டத்தில் தலைவர் அவர்கள் கலந்து கொண்டார்கள்? இதுவரை பதினைந்து போராட்டங்களையும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் வெற்றிகரமாக நடத்தியிருந்தும் ஒன்றில் கூட பங்குபற்றாத ஒருவர், இதுபோன்ற ஒன்றையேனும் நடத்தாதவர் தம்பி அரியநேந்திரன., சத்தியம் தவறாது 50 ஆண்டுகளுக்கு மேல் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவன் நான், வன்முறையை கண்டித்தவன், பட்டம் பதவிகளுக்கு அலையாதவன,; எக்கருத்தையும் துணிந்து கூறிய, கூறிக் கொண்டிருக்கின்ற என்னை விமர்சிக்கும் தகுதி வேறு எவருக்கும் இருந்தாலும் வெறும் பொய்யிலேயே அரசியல் நடத்திய அரியநேந்திரன் என்பவருக்கு நிச்சயமாக இல்லை. அவருடைய அரசியல் கோழைத்தனமான அரசியல். அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதுதான் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டனர். அவர்கள் சமாதானத்துக்கு வர ஆர்வம் காட்டியவேளை தன் பங்கை சரியாக செய்திருந்தால் ஜெனீவா பிரச்சனை இன்று இருந்திருக்காது.
 
எனது கண்ணிலிருந்து இலகுவாக கண்ணீர் எந்தச் சந்தர்ப்பத்திலும் வருவதில்லை. ஆனால் பிரபாகரனுடைய பிள்ளை பாலச்சந்திரனின் முதுகிலே அல்லாமல் நெஞ்சிலே குண்டு பாய்ந்த அடையாளத்தை கண்டவுடன் அதிர்ந்து போனேன். என்னையறியாமலேயே கண்ணீர் சிந்திவிட்டேன். சரி பிழை ஒருபுறமிருக்க, பிரபாகரனின் கழுத்தில் சயனைட் குப்பியும் கடைசி நேரத்தில் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றக்கூடிய வாய்ப்புக்களும் சாதனங்களும் பல இருந்தும் மக்களை விட்டு ஓட விரும்பாத காரணத்தினால் புறமுதுகு காட்டாமல் உயிர்நீத்த அவரைப் பற்றியோ வேறு யாரைப் பற்றியுமோ விமர்சிக்கின்ற உரிமை அரியநேந்திரனுக்கு மட்டுமல்ல உலகிலுள்ள எவருக்கும் இல்லை. இவ்வளவு தீவிரமாக செயல்படும் இவர் புலிகள் சரணடைய தயாராக இருந்த அந்த இக்கட்டான நேரத்தில் பேச வேண்டியவர்களுடன் பேசி அல்லது வற்புறுத்தியிருந்தால் நிச்சயமாக சகலரையும் காப்பாற்றியிருக்க முடியும். அப்படி செய்வார் என்றே நினைத்தேன். நானே முன்னின்று பாடுபட்டிருப்பேன்.
 
படுகொலை செய்யப்பட்ட சிறுவன் பாலச்சந்திரன் உட்பட கொலையுண்ட எமது மக்கள் அனைவரினது தொடர்பிலும் நீதி விசாரணை நடாத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எதற்கும் இடமில்லை என்பதனையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இதேநேரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளில் இந்தியாவைப் பற்றி மாத்திரமே நான் கருத்துத் தெரிவித்தேன். ஏனைய நாடுகள் பற்றி எதுவுமே கூறவில்லை என்பதனை சரியாகப் புரிந்துகொள்ள இவர்கள் ஏன் மறுக்கின்றார்கள்? இந்தியா ஓh வல்லரசு. அவர்களுக்கு 47 நாட்டுத் தலைவர்களையும் தொடர்புகொள்வது பெரிய விடயமல்ல. அதை செய்துவிட்டு தன் பங்கை சிந்தித்து செய்திருக்கலாம். 
 
எமது மக்களுக்கான அரசியல் தீர்வு என்பது இந்தியாவின் ஆதரவு இல்லாமல் ஒருபோதும் சாத்தியமாகாது. இலங்கை மீதான இந்தியாவின் செல்வாக்கு எந்த விதத்திலும் பாதிக்கப்படுவது எமது மக்களின் நலன்களுக்கு நல்லதல்ல என்பதே நான் நன்கு சிந்தித்து எடுத்த முடிவு. நான் கூறியது எனது கருத்தை. தவறு என்றால் சுட்டிக்காட்லாமே. நான் என்ன அடம் பிடித்தேனா?
 
ஊடகம் ஒன்றில் மிகப் பெரிய எழுத்தில் “ஆனந்தசங்கரி மறைமுகமாக அரசுக்கு ஆதரவாக செயல்படுகின்றாரோ என ஐயம்” என அரியநேந்திரன் கேள்வி எழுப்பியிருந்தார். என்னால் எழுதப்பட்டதாக மூன்று கடிதங்களை ஆதாரமாக காட்டியிருந்தார். முதலாவது ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக வரும் பிரேரணைக்கு ஆதரவளிக்க வேண்டும் என கூட்டமைப்பும், தமிழ் மக்களும் சொல்கின்ற நிலையில் இதற்கு மாறாக இந்தியா நடுநிலைமை வகிக்க வேண்டும் என்று அவர் கூறுகின்றார். இவர் ஏதோ தமிழ் மக்கள் சார்பிலும், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பிலும் ஏகபிரதிநிதி போல் பேசுகிறார். இந்த அதிகாரத்தை இவருக்கு யார் கொடுத்தார்? இரண்டாவது இலங்கை தொடர்பில் மென்போக்கை இந்தியா கடைபிடிக்க வேண்டும் என ஆலோசனை கூறியது என மற்றொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.  இத்தகைய பொய் உத்தமர்களுக்கு ஏற்றதல்ல. இத்தகைய கடிதம் ஒன்று இருப்பின் அதனை உடன் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். 
 
இறுதியாக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் “உயர்மட்டக் குழு” அமைப்பது தொடர்பில் தீர்மானிக்கப்பட்ட நிலையில் அது சந்தேகம் எனக் கூறியது. இக் கூட்டத்தில் அடுத்த மாதம் 20ம் திகதி வரையில் தமிழரசுக் கட்சியின் செயற்குழுவை கூட்ட நேரமில்லை என்று அக் கூட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட பிரமுகர்கள் மூவரும் கூறினார்கள். இருந்தும் அடுத்த நாளே அவர்கள் கூடி வேறு சில முடிவுகளை எடுத்தார்கள். ஆனால் உயர்மட்டக்குழு அமைப்பதற்கு இரண்டு மணித்தியாலங்கள் அவர்களுக்கு கிடைக்கவில்லை இதுவே எனது சந்தேகத்துக்குக் காரணம். இவர்களிடம் வேறு மாற்றுத் திட்டம் இருப்பதாக எண்ணினேன் அது தவறா? இதனால்தான் நான் அது சந்தேகம் என்று கூறினேன். அரசு எவ்வளவு தம்பட்டம் அடித்தாலும் மக்களை பட்டினி போட்டு சித்திரவதை செய்கிறது. பல தலைமுறையாக சேர்த்து வைத்த அத்தனை சொத்துக்களும் அழிக்கப்பட்டும், திருடப்பட்டும் முறையான வீடின்றி தகரக் கொட்டகைகளிலும் கூடாரங்களிலும், பாம்பு நுளம்பு போன்ற விஷசத்துக்களுக்கும் மத்தியில் வாழ்;ந்து கொண்டு எதுவித தொழில் வாய்ப்போ வருமானமோ இன்றி உற்றார் உறவினரை இழந்தும், பிரிந்தும் சொல்லொணா துன்பங்களையும் அனுபவித்துக் கொண்டிருப்பது போதாதென்று பல் வேறு நாடுகளைச் சேர்ந்த அரச சார்பற்ற நிறுவனங்கள் புலிகளின் முகவர்கள்; என பொய் முத்திரைகுத்தி அத்தகைய நிறுவனங்களை வடக்கே காலடி எடுத்து வைக்காமல் அரசு தடைவிதித்த செயல் மிக மோசமானதும், கண்டிக்கப்பட வேண்டியதுமாகும். இந் நிறுவனங்கள் செயற்பாட்டில் இருந்த காலத்தில் இங்கு பட்டினிச் சாவுகள் இருக்கவில்லை. வேலை வாய்ப்புக்களும் கிடைத்தது. 
 
ஏதாவது ஒரு நாடு துணிந்து வந்து தமிழ் மக்களுக்கு பல் வேறு உதவிகளையும் செய்து தொண்டாற்றி வருகிறது என்றால் அது இந்தியா மாத்திரமேயாகும். மற்றைய நாடுகள் அரசின் ஊடாகவே உதவின. இதில் மக்களுக்கு கிடைத்தது சிறு துளியேயாகும். இந்த அரசாங்கம் திட்டமிட்டு இந்தியாவின் உதவியை ஏற்க மறுத்து புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டால் அதன் விளைவு பாரதூரமானதாகும் அதுவும் எமது மக்களையே பாதிக்கும். முன் யோசனை இன்றி நாம் செயல்படக்கூடாது. நாம் மேற்கொள்ளும் தவறான முடிவுகள் எமது மக்களை நிரந்தரமாக பாதிக்கக்கூடும். சோல்ல முடியாத துன்பமாகவும் அது ஏற்படலாமென நான் எண்ணினேன். இது தவறா? இது எனது மனதில் தோன்றியது தவறா? பெரிய குற்றமா? அப்படியானால் அரியநேந்திரனின் வழிகாட்டலில் நடக்கட்டும். நான் யார் அதை எதிர்ப்பதற்கு
 
சிறிமா பண்டாரநாயக்கா ஆட்சிக்காலத்தில் 1972 இல் தந்தை செல்வாவும், திரு.அமிர்தலிங்கம் குடும்பமும் இந்திய தலைவர்களை சந்திக்கச் சென்று திரும்பினார்கள் என்ற ஒரே காரணத்துக்காக முழு தமிழ்ச் சமுதாயமும் அரசுக்கு விண்ணப்பித்து அனுமதி பெற்ற பின்பே இந்தியா செல்ல முடியும் என கட்டுப்பாடு 1972 இல் விதிக்கப்பட்டது. (Exit permit) தந்தை செல்வாவோ அமிர் குடும்பமோ வெறுமனே வியாபாரத்துக்கு சென்றவர்கள் அல்ல. அவர்கள் சென்றது அரசியல் நோக்கமாகும். 
 
எது எப்படியிருந்தாலும் திரு அரியநேந்திரனுக்கு இருக்கும் அறிவுக்கும் ஆற்றலுக்கும் தூர நோக்கத்துக்கும் எனது அறிவு, ஆற்றல் ஈடு கொடுக்க முடியாது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். மக்கள் நலன் கருதியே நான் எனது கருத்துக்களை வெளியிட்டேன் அது தவறு எனின் மக்கள் என்னை மன்னிக்கட்டும். அரசாங்கம் சார்பில் பேசுகிறேன் அல்லது வக்காலத்து வாங்குகிறேன் என்று மக்களுக்கு யார் கூறினாலும் அவர்கள் நம்பமாட்டார்கள். ஏனெனில் நான் பட்டம், பதவி கேட்கவோ, வாங்கியோ பழக்கப்படாதவன் என்பது உலகறிந்த விடயமாகும். அரியநேந்திரனுக்கு பாராளுமன்ற பதவி எப்படி வந்தது என்பதை அறிய மக்கள் ஆவலாக உள்ளனர்.
 
 
வீ. ஆனந்தசங்கரி
செயலாளர்நாயகம்- த.வி.கூ
Link to comment
Share on other sites

 எனது கண்ணிலிருந்து இலகுவாக கண்ணீர் எந்தச் சந்தர்ப்பத்திலும் வருவதில்லை.

 

ஆனால் பிரபாகரனுடைய பிள்ளை பாலச்சந்திரனின் முதுகிலே அல்லாமல் நெஞ்சிலே குண்டு பாய்ந்த அடையாளத்தை கண்டவுடன் அதிர்ந்து போனேன். என்னையறியாமலேயே கண்ணீர் சிந்திவிட்டேன். சரி பிழை ஒருபுறமிருக்க, பிரபாகரனின் கழுத்தில் சயனைட் குப்பியும் கடைசி நேரத்தில் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றக்கூடிய வாய்ப்புக்களும் சாதனங்களும் பல இருந்தும் மக்களை விட்டு ஓட விரும்பாத காரணத்தினால் புறமுதுகு காட்டாமல் உயிர்நீத்த அவரைப் பற்றியோ வேறு யாரைப் பற்றியுமோ விமர்சிக்கின்ற உரிமை அரியநேந்திரனுக்கு மட்டுமல்ல உலகிலுள்ள எவருக்கும் இல்லை.

 

 

இது மட்டும் நூறுவீதம் உண்மை !

Link to comment
Share on other sites

ஏன் விமர்சிக்கும் உரிமை இல்லை..?

 

போர் நடந்தபோது மற்றவரின் பிள்ளைகளை போருக்கு அனுப்பிவிட்டு தன் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார் என்றார்கள்..

 

போர் முடிந்தபின்னால் மொக்குத்தனமாக எல்லாமே அழிந்துவிட்டது என்கிறார்கள்..

 

ஆகவே இந்த உலகில் மாறாதது ஒன்று விமர்சனம் ஒன்றுதான்.. :rolleyes:

 

 

Link to comment
Share on other sites

எனது கண்ணிலிருந்து இலகுவாக கண்ணீர் எந்தச் சந்தர்ப்பத்திலும் வருவதில்லை.

ஆனால் பிரபாகரனுடைய பிள்ளை பாலச்சந்திரனின் முதுகிலே அல்லாமல் நெஞ்சிலே

குண்டு பாய்ந்த அடையாளத்தை கண்டவுடன் அதிர்ந்து போனேன். என்னையறியாமலேயே

கண்ணீர் சிந்திவிட்டேன். சரி பிழை ஒருபுறமிருக்க, பிரபாகரனின் கழுத்தில்

சயனைட் குப்பியும் கடைசி நேரத்தில் தன்னையும் தன் குடும்பத்தையும்

காப்பாற்றக்கூடிய வாய்ப்புக்களும் சாதனங்களும் பல இருந்தும் மக்களை விட்டு

ஓட விரும்பாத காரணத்தினால் புறமுதுகு காட்டாமல் உயிர்நீத்த அவரைப் பற்றியோ

வேறு யாரைப் பற்றியுமோ விமர்சிக்கின்ற உரிமை அரியநேந்திரனுக்கு மட்டுமல்ல

உலகிலுள்ள எவருக்கும் இல்லை.

இது மட்டும் நூறுவீதம் உண்மை !

Link to comment
Share on other sites

ஏதாவது ஒரு நாடு துணிந்து வந்து தமிழ் மக்களுக்கு பல் வேறு உதவிகளையும் செய்து தொண்டாற்றி வருகிறது என்றால் அது இந்தியா மாத்திரமேயாகும். மற்றைய நாடுகள் அரசின் ஊடாகவே உதவின. இதில் மக்களுக்கு கிடைத்தது சிறு துளியேயாகும்

"ஆயிரம் பொய்யை சொல்லித்தன்னும் ஒரு கலியாணத்தை கட்டு"

 

நான் நேரத்திற்கே இப்படி பிரச்சனை வரும் என்றதால்த்தான் ஆனந்த சங்கரியை யாரும் கூட்டமைப்பிலிருந்து தாக்க கூடாது. அது நமது உரிமை மட்டுமே என்று எழுதினனான்.

 

வெண்ணை திரண்டுவரும் நேரம், முதல் அமைச்சர் பதவிக்காக அவர் தாழியை உடைத்துவிடுவார் என்பது இந்த கூட்டமைபினருக்கு விள்ங்காது. 

 

எப்பிடியோ K.P.யயும் ஒரு போடு போட்டிருக்கிறார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பாலச்சந்திரனின் புகைப் படத்தைப் பார்த்து என்னை அறியாமலேயே கண்ணீர் சிந்தினேன்: ஆனந்தசங்கரி
  By General 
2013-03-04 09:25:40
படுகொலை செய்யப்பட்ட பிரபாகரனுடைய பிள்ளை பாலச்சந்திரன் உட்பட கொலையுண்;ட எமது மக்கள் அனைவரினது தொடர்பிலும் நீதி விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார்.
 
பிரபாகரனுடைய பிள்ளை பாலச்சந்திரனின் முதுகில் அல்லாமல் நெஞ்சிலே குண்டு பாய்ந்த அடையாளத்தை கண்டவுடன் அதிர்ந்து போனேன். என்னை அறியாமலேயே கண்ணீர் சிந்தி விட்டேன் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தலைப்பை மாத்திவிடுங்கள் ( டக்கி புலம்பெயர் தமிழர்கள் தலைவருக்கு நன்றிக்கடனாக இருக்கட்டாம் என்று) இல்லாவிட்டால் இப்படியான செய்திகளை வாசிக்கமாட்டேன்
    • "மாயா"     செப்டம்பர் 22, 1995 , என்னால் மறக்க முடியாத ஒருநாளாக இன்னும் என் மனதை வருத்திக்கொண்டு இருக்கிறது. அன்று தான் என் அன்பு சிநேகிதி இறந்த தினம். அவர் சாதாரணமாக இறக்கவில்லை, அந்த கொடுமையை நினைத்தால் எவருமே கதிகலங்குவார்கள். அவளும் அவளின் மாணவிகளும் புத்தரின் தர்ம போதனைக்கும் உலக நீதிக்கும் எதிராக துண்டு துண்டாக உடல்கள் சிதறி நாகர்கோவில் மகாவித்தியாலத்தில் பிற்பகல் 12.50 மணியளவில் விமானப் படையினரின் குண்டுத் தாக்குதலில் 21 - 26 மாணவர்கள் உட்பட கொல்லப் பட்ட தினம் ஆகும். அது தான் நான் இன்று, இந்த கார்த்திகை தினத்தில் நேரத்துடன் துயிலில் இருந்து எழும்பி யன்னல் வழியாக ஆகாயத்தை வெறுத்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.   அரசியல், யுத்தம், சமதானம் என்பவற்றைப் பற்றிப் புத்தர் தெளிவான கருத்துடையவராயிருந்தார். அஹிம்சையும் சமாதானமுமே பௌத்தம் உலகுக்கு விடுக்கும் செய்தி. இது எல்லாராலும் நன்கு அறியப்பட்டதொரு விஷயம். எந்தவிதமான பலாத்காரத்தையும் அது ஏற்றுக்கொள்வதில்லை. கொல்லாமையே அதன் மூலாதாரமான கொள்கை. 'நீதியான யுத்தம்' என்று சொல்லக் கூடியது ஒன்றுமில்லை. இது ஒரு போலிப் பெயர். துவேஷம், கொடுமை, இம்சை, கொலை என்பவை நேர்மையானவையெனக் காட்டும் நோக்கமாக ஆக்கப்பட்டதொரு அர்த்தமற்ற வார்த்தை.   பௌத்த மதத்தின்படி 'நீதியான யுத்தம்' என்று ஒன்றுமில்லை. 'இது நீதி, இது அநீதி' என்று தீர்மானிப்பது யார்? நாங்கள் துவங்கும் யுத்தம் எப்பொழுதும் நீதியானது. மற்றவர்கள் துவங்கும் யுத்தம் அநீதியானது. பௌத்தம் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொள்வதில்லை.   ரோஹினி ஆற்று நீர்ப் பிரச்சினை சம்பந்தமாகச் சாக்கியரும், கோலியரும் பிணங்கிக் கொண்டு சண்டை செய்ய முற்பட்டபோது பகவான் யுத்தகளத்துக்குப் போய் பிணக்கைத் தீர்த்துச் சண்டையை நிறுத்தினார். அஹிம்சையை அவர் போதித்தது மாத்திரமன்றி, சமாதானத்தை நிலை நாட்டக் காரிய பூர்வமான நடவடிக்கையை எடுத்தார். பகவானுடைய அறிவுரையைக் கேட்டு அஜாதசத்து என்ற மன்னன் வஜ்ஜிராச்சியத்தோடு உண்டான சண்டையை நிறுத்தினான்.   நான் சைவ மதத்தவன் என்றாலும் புத்த பெருமானை நேசிக்கிறேன் அவரின் இந்த கொள்கைக்காக! ஆனால் இன்று அவரின் புதல்வர்கள் என்று கூறும் பலர், இதை பின்பற்றுவதாக எனக்குத் தெரியவில்லை. அது தான் அந்த குண்டுகள் பொழிந்த ஆகாயத்தை பார்த்தபடி என் சினேகிதியை இந்த கார்த்திகை நாளில் நினைவு கூறுகிறேன்!   என் சினேகிதியை தற்செயலாக தற்காலிக இடமாற்றத்தை அடுத்து வேலையை பாரம் எடுக்க பருத்தித்துறைக்கு சென்ற பொழுது, பருத்தித்துறை பேரூந்து நிலையத்தில் சந்தித்தேன். அவர் ஒரு இளம் ஆரம்ப பள்ளி ஆசிரியை. அவர் தான் என் புது அலுவலகத்துக்கான பாதைக்கு வழி காட்டியதுடன், தன் வீடும் அதற்கு அருகில் என்று, கூடவே கதைத்து கொண்டும் வந்தார். ஒரு சில நிமிடங்களில் பரிமாறி கொண்ட கவர்ச்சிகரமான அப்பாவித்தனமான பார்வைகள் அவளின் குறும்புத்தனம் மிக்க இனிய குரல்கள், பெண்மையின் வளைவு நெளிவுகளை வெளிப்படுத்தும் அவளின் அழகிய கோலமும் குனிந்த நடையும் வாரம் நகர்ந்தும் என்னால் மறக்க முடியவில்லை. அவளின் பெயர் மாயாதேவி , நாகர்கோவில் மகாவித்தியால ஆசிரியை, இவ்வளவும் தான் எனக்குத் தெரியும். ஒரு சில நிமிடங்கள் தானே அவளுடன் பழக்கம். அவளை முழுமையாக அறிய அன்று ஆவல் இருந்தாலும், எடுத்தவுடன் அதுகளை கேட்டு குழப்பக்கூடாது என்று பேசாமல் இருந்துவிட்டேன்.   முதிர்ச்சியற்ற காதல் இப்படிச் சொல்லும்: `நான் உன்னைக் காதலிக்கிறேன். ஏனென்றால் நீ எனக்கு வேண்டும்.’ முதிர்ச்சியடைந்த காதல் இப்படிச் சொல்லும்: `எனக்கு நீ வேண்டும். ஏனென்றால், நான் உன்னைக் காதலிக்கிறேன்.’ ‘ - இதைச் சொன்னவர் அமெரிக்க சமூக உளவியலாளர் எரிக் ஃப்ரோம் (Erich Fromm). காதலுக்குத் தேவையான அடிப்படையான மனப்பக்குவம் இதுதான். அப்படித்தான் நானும் இருந்தேன்.   அவள் விண்ணில் இருந்து வந்த தேவதையின் உடல் எடுத்து வந்தது போல் இருந்தாள். அவளை சுற்றி ஒரு பிரகாச சூழ்நிலை நிலவிக்கொண்டு இருப்பதாய் அன்று அவதானித்தேன். அந்த அழகு எப்படி வர்ணிப்பது என்று எனக்கு தெரியவில்லை. அவளின் படைப்பில் வெறுக்கிற மாதிரி ஒரு அம்சம் கூட இல்லை. நான் சும்மா சொல்லவில்லை. அவள் மலர்ந்துகொண்டு இருக்கும் ஒரு பன்னீர் மலர்! 'பன்னீர் மலர் சொரியும் மேகங்களே எங்கள் பரந்தாமன் மெய் அழகை பாடுங்களே!' என்று ஒரு பாடல் கேட்ட ஞாபகம். உண்மையில் 'பன்னீர் மலர் சொரியும் மேகங்களே என் நண்பியின் மெய் அழகை பாடுங்களே!' என்று தான் என் உள்ளம் அசை போடுகிறது!. எப்படியும் அவளை சந்திக்கவேண்டும் என்று அன்று ஒரு நாள், அவள் பாடசாலை முடிய வரும் பேருந்துக்காக, நேரத்துடன் வேலையில் இருந்து புறப்பட்டு காத்திருந்தேன்.   'இளந்தளிரைப் போன்று மென்மையாகவும் தாமரைக்கொடியைப் போன்ற மெதுமெதுவென்று இருக்கும் கரங்கள் என்னைத் தழுவவேண்டும். அவளின் வசீகரமான புன்முறுவல் என் மார்பில் சாய்ந்து கொட்டிடவேண்டும். அப்பொழுது உணர்ச்சிக் கொந்தளிப்புக்கள் இன்பத்தை பொழியவேண்டும்' இப்படி என் மனம் மகிழ்ந்து கொண்டு, நான் என்னையே மறந்து கனவில் மிதந்த அந்த தருவாயில், 'ஹாய்' என்ற அந்த அவளின் இனிய குரல் என்னை மீண்டும் பூமிக்கு வர வைத்தது. 'ம்ம்ம் என்ன இன்று நேரத்துடன் வேலை முடிந்ததா ?' அவள் தான் தொடர்ந்தாள், நான் என்னை சமாளித்துக்கொண்டு, இல்லை ஒரு தனிப்பட்ட விடயமாக கொஞ்சம் வெளியே வந்தேன், இனி திரும்பவும் வேலைக்கு போகப் போகிறேன் என என் கதையை மாற்றினேன். அப்ப தான் அவளுடன் ஒன்றாய் நடக்க முடியும்!   கொஞ்சம் எனக்கு பசி, வாங்க தேநீரும் வடையும் சாப்பிட்டுவிட்டு போவோம் என கூப்பிட, அவள் கொஞ்சம் தயங்கினாலும், பின் ஓகே என்று வந்தாள். அது தான் என் முதல் வெற்றி! கொஞ்சம் கொஞ்சமாக அவளை அறியத் தொடங்கியதுடன் என்னைப்பற்றியும் சொன்னேன். அவள் தொடக்கத்தில் கொஞ்சம் அச்சம் நாணம் கொண்டாலும், போகப் போக அன்னியோன்னியமாக பழகத் தொடங்கினாள். அது என் இரண்டாவது வெற்றி!   அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல் நிச்சமும் பெண்பாற் குரிய என்ப."   என்றார் தொல்காப்பியர். இது களவியலுக்கு மட்டும் தான்! ஒரு காதல் சுவைக்கு மட்டும் தான் என்ற உண்மையை அவளிடம் கண்டேன்! இப்ப நான் மட்டும் அல்ல அவளும் எனக்காக காத்திருக்கிறாள். இப்ப நான் மோட்டார் சைக்கிளில் வர ஆரம்பித்ததால், நான் காலை நேரத்துடன் வந்து அவளை பாடசாலையில் இறக்கிவிட தொடங்கினேன். அவள் என்னை கட்டிப்பிடித்துக்கொண்டு செல்லக் கதைகளும் பேச தொடங்கிவிட்டாள். அந்த சிலநிமிட பயணம், சொர்க்கம் என்று ஒன்று இருந்ததால் அங்கே போனமாதிரி இருந்தது!   ஒரு சில மாதம் கழிய, செப்டம்பர் 22, 1995 , அவளுக்கு என் காதலின் அடையாளமாக ஒரு அழகிய மோதிரம் எம் இருவரின் படத்துடன், அன்று அவளை, பாடசாலையில் இறக்கிவிடும் பொழுது, திடீரென ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, அவளின் விரலில் நானே போட்டுவிட்டேன். அவள் அப்படியே திகைத்து நின்றாள், ஒன்றுமே பேசவில்லை, ஆனந்த கண்ணீர் சொட்டு சொட்டாக அவள் கன்னத்தை நனைத்தன. அது தான் நான் கொடுத்த முதல் முத்தம் கூட. திரும்பி, சுற்றி பார்த்தாள், நாம் ஒரு மரத்தின் அடியில் நின்றதால், எம்மைக் காணக்கூடியதாக ஒருவரும் தெரியவில்லை. திடீரென அவசரம் அவசரமாக என்னை இழுத்து, வாயுடன் வாய்சேர்த்து முத்தம் தந்துவிட்டு, சட்டென அந்த மோதிர விரலை பார்த்தபடியே பாடசாலைக்குள் ஓடி விட்டாள். வழமையாக சொல்லும் 'போயிட்டு வருகிறேன்' கூட சொல்லவில்லை ?   அவள் இன்று ஒன்றும் சொல்லாமல் பாடசாலைக்குள் போனது எனோ எனக்கு ஒரு மாதிரி இருக்க, என் மதிய இடைவெளியில், சாப்பிடுவதை தவிர்த்து, அவளை ஒருக்கா பார்க்க வேண்டும் என்ற அவா உந்த, மோட்டார் சைக்கிளில் அவளிடம் போனேன். போகும் பொழுது, பாடசாலைக்கு கொஞ்சம் அருகில் இருந்த கடை ஒன்றில் அவளுக்கு, அவள் மிகவும் விரும்பும் இருதய அமைப்பில் அமைந்த ஆல்கஹால் பிரீ டார்க் சாக்லேட் [alcohol free dark chocolate] பெட்டி ஒன்றை வாங்கி, மீண்டும் மோட்டார் சைக்கிளில் எற, பெரும் குண்டுகள் வெடிக்கும் சத்தம் பாடசாலை பக்கம் இருந்து கேட்டது. போர்விமானமும் கூவிக்கொண்டு பறந்தன, கடைக்கார முதலாளி கடையை உடனடியாக மூடிக்கொண்டு, தம்பி, ஒரு இடமும் போகவேண்டாம் என்று என்னையும் பதுங்கு குழிக்குள் இழுத்து சென்றார்.   நான் ரசித்த உடல் துண்டு துண்டாக அன்று மாலை என்னால் போய் பார்க்க முடிந்தது. அவளின் மற்றும் மாணவர்களின் பெற்றோரின் அழுகுரல் ஒரே சோகமயமாக அங்கு காட்சி அளித்தது. நான் அவளின் கையை, நான் போட்டுவிட்ட மோதிரம் மூலம் அடையாளம் கண்டேன்.     "அழகான என் செல்ல நண்பியே அன்பான ஒரே நம்பிக்கை நட்சத்திரமே அளப்பெரும் துயரில் என்னைத் தள்ளி அமைதியாய் சொல்லாமல் மறைந்தது ஏனோ ?"   "வாய் மூடி தலை குனிந்து வான் உயர துள்ளி குதித்து வாழ்க்கை காண கனவு கண்டவளே வாட்டம் தந்து மௌனமாகியது எனோ?"   "என் அழகான காதல் செல்லமே என்னை விட்டு போக வேண்டாம்? என் குறும்பு இளவரசி இல்லாமல் எனக்கு இனி மகிழ்ச்சி எனோ?"   "பள்ளி அறையில் புத்தகங்களுக்கு இடையில் பகுதி பகுதியாக உன்னை கண்டுஎடுத்தேன் பரவி இருந்த இரத்த சொட்டுக்குள் பச்சை சேலை சிவந்தது எனோ?"   "மச்சம் கொண்ட உன் இளம்கால் மல்லாந்து என்னைப் பார்ப்பதைக் கண்டேன் மயான அமைதியில் உற்று நோக்கினேன் மடிந்தவிரலில் மோதிரம் என்னை அழைப்பதுஎனோ?"     நேரம் இப்ப அதிகாலை இரண்டு மணி, இன்னும் நல்ல இருட்டு, பனி எங்கும் பொழிந்து கொண்டு இருந்தது. நான் இப்ப வெளிநாட்டில், மனைவி பிள்ளைகளுடன் வாழ்கிறேன். அது உலக வாழ்க்கை. ஆனால் என் மனம் இன்னும் அவளையே நினைக்கிறது. அவளுக்காக ஒரு தீபம் ஏற்ற இப்பவே இந்த கார்த்திகை தினத்தில் எழும்பிவிட்டேன். என் மனைவி இன்னும் சரியான தூக்கத்தில், பிள்ளைகள் தங்கள் தங்கள் அறையில். யன்னலுக்கு வெளியே, இது கிராமப்புறம் என்பதால் சிறு மரப்பத்தைகள் [woods]. வானம் அமைதியாக இருந்தது. நான் கொஞ்சம் என் பார்வையை கிழே இறக்கி மரப்பத்தையை பார்த்தேன்.   கழுத்தில் இருந்து கால்வரை வெள்ளை நிற முழு அங்கியுடன், தனது முகத்தை நீண்ட கரும் கூந்தலால் மறைத்துக்கொண்டு, என்னை நோக்கி என் மாயாவின் உடல் அமைப்பிலேயே ஒரு பெண் உருவம் வருவதைக் கண்டேன்!   அருகில் அருகில் வர, தன் முடியை, தன் வலது கையால் வாரி முதுகுப் பின்னல் போட்டாள். நான் போட்டுவிட்ட அந்த மோதிரம் இன்னும் அந்த விரலில் இருப்பதைக் கண்டேன். அது ஒளிர்ந்து கொண்டு இருந்தது. அதே புன்முறுவல், அதே நாணம், அதே நடை! என்னால் நம்பவே முடியவில்லை!. 'ம்ம் வாங்க, உங்க மாயா கூப்பிடுகிறாள், நான் தான் உங்க மனைவி, உதறித்த தள்ளுங்கள் அவளை, கட்டிலில் படுத்திருப்பவளை'   இரண்டு கைகளையும் நீட்டி என்னை அழைத்தபடி நெருங்கி வந்து கொண்டு இருந்தது. என்னை அறியாமலே நான் யன்னலூடாக குதித்து வெளியே போக, யன்னலை அகல துறந்து, அதில் எற, ஒரு காலை தூக்கி வைத்தும் விட்டேன். மற்ற காலை தூக்க முயலும் பொழுது தான் , யாரோ என் காலை பிடித்து இழுப்பது தெரிந்தது. நான் திரும்பி பார்க்கவே இல்லை, என் மாயாவையே, அந்த அழகு தேவதையே பார்த்துக் கொண்டு ' மாயா, என் செல்லமே, நான் வாரெனடா கண்ணு' என்று சத்தம் போட்டு அலறியே விட்டேன்.   பிள்ளைகளும் சத்தம் கேட்டு ஓடிவந்து அப்பா, அப்பா என , மனைவியுடன் சேர்ந்து என்னை யன்னலால் குதிக்க விடாமல் உள்ளுக்குள் இழுத்துவிடார்கள். மனைவி என்னை கட்டிப்பிடித்து, உங்கள் மாயா எனக்கும் சகோதரி தான், எனக்கும் நண்பி தான். காலை நாம் குடும்பமாக இந்த , இனிவரும் ஒவ்வொரு கார்த்திகை தினத்திலும் விளக்கேற்றுவோம். இப்ப வந்து படுங்க, என பிள்ளைகளும் சேர்ந்து என்னை மீண்டும் கட்டிலில் படுக்க வைத்தனர். நான் அவர்களுக்காக கண்மூடி விடியும் மட்டும் இருந்தாலும், அந்த உருவம், என் மாயா என் மனதில் இருந்து அகலவே இல்லை !   "இறந்த அவளின் சூக்கும உடல் இளமுறுவலுடன் என் முன் வந்தது இலக்குமி போல அழகாய் தோன்றி இதழ் குவித்து முத்தம் தந்து"   "பழைய மெல்லிசை முணுமுணுத்து பதுங்கி என் கண்கள் பார்த்து பதுமையாக என் முன் நின்று பணிந்து அழைத்து வா என்றது"   "என் அழகிய குட்டி கண்மணியே எதற்காக உன் உயிரை மாய்த்தாய்? எழுச்சி தந்து நம்பிக்கை விதைத்து என்னை விட்டு விலகியது எனோ?"   "இறந்ததாக நான் உன்னை நம்பவில்லை இன்றும் உனக்காக நான் காத்திருக்கிறேன் இளந் தென்றல் தொடும் அடிவானத்தில் இரவும்பகலும் உன்னைத் தேடி அலைகிறேன் ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • ஊடகத்துறை சார்ந்தவர்கள் அனேகமாக உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்கும் பணிகளைச் செய்யும்போது, அந்த உண்மைகளின் சூட்டினால் அவர்களே தாக்கப்பட்டு அவதிப்படுவதைக் காண்கின்றோம். இதில் சாதாரண மக்களை விடவும் அதிகாரம் உள்ளவர்களால் தாக்கப்படும் போது உயிருக்கே ஆபத்து நேர்ந்துவிடுவதையும் கண்டுள்ளோம். இங்கே துமிலன் அவர்களின் அறிக்கையால் உண்மைஅறிந்த காவல்துறை மன்னிப்புக் கேட்டாலும், இது தனக்கு நேர்ந்த ஒரு அவமானமாக, இழிவாக அந்தத்  துறையின் அதிகாரவர்க்கம் அதனை எண்ணவைத்து, துமிலன் தொடரப்போகும்  செய்திகளில் சிறு தவறு கண்டாலும் அதனை ஊதிப் பெருப்பித்து தனது சூட்டைத் தணிக்க முற்படலாம். ஆகவே துமிலன் தனது தொடரப்போகும் பணியை, மிகவும் அவதானமாகவும், கவனமாகவும் மேற்கொள்ள வேண்டுமென வேண்டுகிறேன்.🙌  
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.