Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உலகத்தமிழர் பேரவையின் மூன்றாவது ஆண்டு விழாவைக் குறிக்கும் வண்ணம், பிரிட்டனின் நாடாளுமன்றக் கட்டிட வளாகத்தில் நடந்த நிகழ்வொன்றில் பேசிய பிரிட்டிஷ் அமைச்சர்கள் மற்றும் சர்வதேச பிரமுகர்கள், இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் பிற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஒரு முழுமையான, வெளிப்படையான, நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணையை வலியுறுத்தினார்கள். விழாவில் பேசிய பிரிட்டிஷ் துணைப் பிரதமரும், லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான, நிக் க்ளெக், பிரிட்டிஷ் அரசியல்வாதிகள் பொதுவாக தாராளவாத விழுமியங்களான, சகிப்புத்தன்மை, மனித உரிமைகளைப் பேணுதல், பல்லினக் கலாச்சாரத்தை ஊக்குவிப்பது, மாறுபட்ட கருத்தை மதிப்பது மற்றும் கருத்து சுதந்த…

  2. டெல்லி: இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இந்தியாதான் தீர்மானம் கொண்டு வந்திருக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. டி. ராஜா வலியறுத்தியுள்ளார். ராஜ்யசபாவில் இன்று நடைபெற்ற இலங்கை போர்க் குற்றம் தொடர்பான சிறப்பு விவாதத்தில் பேசிய அவர், இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு மாற வேண்டும். இலங்கையில் போர் முடிவுற்ற பின்னரும் திட்டமிட்டபடியான தமிழர் இனப்படுகொலை தொடர்கிறது. இலங்கையுடன் நட்பு பாராட்டுகிற இந்திய அரசு மனசாட்சியோ பதில் சொல்லட்டும்.. தமிழர் இனப்படுகொலைக்கு உதவுகிறீர்களா? கடந்த ஆண்டு ஜெனிவா தீர்மானம் கொண்டுவரப்பட்ட பின்னர் இலங்கையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. யாழ்ப்பாண மாணவர்கள் எவ்வித காரணமுமின்றி கைது செய்யப்பட்டிருக்கின்றன…

    • 4 replies
    • 649 views
  3. டேவிட் கமரூன் இலங்கையில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் காயங்களை ஆற்ற முடியும் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். க்ளோபல் தமிழ் போராம் அமைப்பின் மூன்றாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு லண்டனில் நடைபெறவுள்ள அமர்வுகளுக்கான வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் நிரந்தரமான சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டுமென்பதே பிரித்தானியாவின் விருப்பமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நல்லிணக்கம், நீதி, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமே சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொட…

  4. மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்படும் எந்த யோசனையையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை - இலங்கை அரசு [Wednesday, 2013-02-27 08:26:01] ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்படும் எந்த யோசனையையும் எதிர்ப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமர்வில் இந்த அறிவிப்பை இலங்கை வெளியிட்டுள்ளது. இலங்கை தொடர்பில், அமரிக்க, உதவி ராஜாங்க செயலர் எஸ்தர் பிரிமர் நேற்று அமர்வின் போது வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே இலங்கை தமது அறிவிப்பை விடுத்துள்ளது. இலங்கை தொடர்பில் மற்றும் ஒரு யோசனை முன்வைக்கப்பட்டு அதன் நடைமுறைப்படுத்தலை சர்வதேச சமூகம் கண்காணிக்கும் என்று அமெரிக்க உதவி இராஜாங்க ச…

    • 8 replies
    • 1.5k views
  5. இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க போவதில்லை: கனடியப் பிரதமர் உறுதி! [Wednesday, 2013-02-27 07:48:15] இந்த ஆண்டு இறுதியில் கொழும்பில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் உச்சிமாநாட்டைப் புறக்கணிக்கும் முடிவில் இருந்து தாம் பின்வாங்கப் போவதில்லை என்று கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் அறிவித்துள்ளார். கனடிய நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலைமைகள் முன்னேற்றமடையாது போனால், அங்கு நடைபெறும் கொமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று அறிவித்திருந்தேன். அந்த அறிக்கையை வெளியிட்ட பின்னர், அங்கு ஏற்பட்டுள்ள மாற்றங்கள் கவலையளிக்கிறது. அந்த நாடு மோசமான திசையில் சென்று கொண்டிருக்கிறது என்று தெரிவ…

  6. 'விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம், தங்க நகைகள் மற்றும் கப்பல்கள் எங்கே" என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட போஸ்டர்களை ஒட்டிக்கொண்டிருந்த மூன்று பேர் மோதர பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். 'ஊழலுக்கு எதிரான குரல்" என்ற அமைப்பின் பெயரில் போஸ்டர்கள் ஒட்டிக்கொண்டிருந்த நடராஜா, லக்ஷ்மன் மற்றும் எசேல ஆகியோரே இவ்வாறு மோதர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. http://www.seithy.com/breifNews.php?newsID=76981&category=TamilNews&language=tamil

  7. படையினர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் புதிய காணொளி குறித்து இராணுவம் அளித்துள்ள விளக்கம் By Nirshan Ramanujam 2013-02-27 15:03:56 உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையானது ஊகத்தின் பேரில் ஆக்கத்திறன் மூலம் வெளியிடப்பட்டதொன்று மட்டுமன்றி உண்மைகளுக்கு அப்பாற்பட்டதொன்றென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார். இலங்கைப் படையினர் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டு மனித உரிமைகள் கண்காணிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள காணொளி தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, மனித உரிமைகள் கண்காணிப்பகம் இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுடன் கூடிய படைப்பு வரும் வரை எவ்வித முறைப்பாடுகளும் இருக்கவில்ல…

  8. 4,000 அதிபர்களுக்கு இராணுவப் பயிற்சியும் பட்டமும் புதன்கிழமை, 27 பெப்ரவரி 2013 11:56 நான்காயிரம் பாடசாலை அதிபர்கள் பயிற்சி படையணி தலைமையகத்தில் நடைபெறவுள்ள நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருப்பது இந்த நாட்டின் பாடசாலைகளில் 50 சதவீதத்திலும் கூடுதலானவற்றை இராணுமயப்படுத்தும் என்ற விசனத்தை தோற்றுவித்துள்ளது. அதிபர் சேவை தரம் i., ii ஐ சேர்ந்தவர்களும் அதிபர்களாக கடமை புரியும் கல்வி நிர்வாகச் சேவை உத்தியோகஸ்தர்களும் மார்ச் மாதம் 4ஆம் 5ஆம் 6ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நேர்முகப் பரீட்சைக்கு தோற்றுமாறு கேட்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பயிற்சி முடிந்த பின் இராணுவப் பட்டங்களான லெப்டினன், மேஜர், கப்டன் ஆகியன வழங்கப்படலாம் என பயிற்சி படையணியின் பேச்சாளர் ஒருவர் கூறினார். …

  9. அரசாங்கம் தானாக தேடிக்கொண்ட வினைக்கு அவர்களே பதில் செல்ல வேண்டும் : கயந்த கருணாதிலக எமது நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்கு நாம் விரும்பவில்லை. அரசாங்கம் தானாக தேடிக்கொண்ட வினைக்கு அவர்களே பதில் செல்ல வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார். கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஜெனீவா மனித உரிமைகள் தொடர்பில் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எமது தாய் நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்கு நாம் ஒரு போதும் விரும்பவில்லை. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவ…

  10. ஐ.நா. மனித உரிமை பேரவையின் 22வது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு வழங்குமென அமெரிக்கா நம்பிக்கை கொண்டுள்ளதென சர்வதேச விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி வெளிவிவகார அமைச்சர் எஸ்தர் பிரிமீர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்த வேண்டும். அத்துடன், நீண்டகாலமாக நிலவிவரும் இனப்பிரச்சினைக்கும் தீர்வுகாணப்படவேண்டும். அதுவரை இலங்கை தொடர்பில் இந்தப் பேரவையின் செயற்பாடுகள் முடிவடைந்துவிட்டன என ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடரில் நேற்று செவ்வாய்க்கிழமை  உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். …

  11. உலக நாடுகளை ஏமாற்றும் இலங்கையை இந்தியா ஏன் நம்ப வேண்டும். ஜெர்மனியின் நாஜி முகாம்களில் நடக்காத கொடூரங்கள் இலங்கையில் நடைபெற்றது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜா தெரிவித்தார். இலங்கை போர்குற்றம் குறித்து மாநிலங்களவையில் கருத்து தெரிவிக்கும் போதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இலங்கை தமிழர்களுக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ அரசு செய்து வரும் துரோகத்தை மறைத்து தமிழ் சமூகத்தை ஏன் மத்திய அரசு ஏமாற்றவேண்டும். இலங்கையில் திட்டமிட்ட இனப்படுகொலை நடக்கிறது. அரசை விமர்சிக்கும் இலங்கை ஊடகங்கள் தாக்கப்படுகின்றன. தமிழரை பாதுகாக்க இந்தியா நடவடிக்கை எடுத்திருக்க வே…

  12. கிளிநொச்சியனை சேர்ந்தவர் இராமேஸ்வரத்தில் கைது! பிப் 27, 2013 விசா முடிந்த நிலையில் தமிழகத்தில் தங்கியிருந்த கிளிநொச்சியினை சேர்ந்த ஒருவர் ராமேஸ்வரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தமது விசா காலம் நிறைவடைந்த நிலையில் சுமார் இரண்டு வருடங்கள் தமிழகத்தில் தங்கியிருந்துள்ளார்.கிளிநொச்சியை சேர்ந்தவர் ஸ்ரீராம் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை சென்ற இவர் தமது விசா காலம் முடிந்த நிலையிலும் சினிமா நடிகராகும் ஆசையில் சென்னையில் தொடர்ந்து தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில் தாயகத்தில் உள்ள தமது தாயாரை காண சிறிலங்கா செல்ல முயற்சித்த வேளையிலேயே மண்டபம் கரையோர காவல்துறையினரால் இவர் கைது செய்யப்பட்டார். இராமேஸ்வரம் காவல…

  13. இலங்கை: ஜெனிவா தீர்மானத்தை பற்றி எதுவும் சொல்ல முடியாது: சல்மான் குர்ஷித் கைவிரிப்பு..! டெல்லி: இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அறிவித்திருக்கிறார். ராஜ்யசபாவில் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக இன்று நடைபெற்ற சிறப்பு விவாதத்தின் முடிவில் சல்மான் குர்ஷித் பேசுகையில், இலங்கை அண்டை நாடு. வேறு ஒரு நாட்டின் பிரச்சனையில் நாம் தலையிட முடியாது. இலங்கையில் போர் நடைபெற்ற காலம் அந்த நாட்டின் வரலாற்றில் மிக மோசமான காலமாகும். போர் தொடர்பான வெளியான காட்சிகள் மனதைப் பிசைகின்றன. உறுப்பினர்கள் உருக்கமான கருத்தை நாங்கள் மதிக்கிறோம். இலங்கை தமிழர் பிரச…

  14. இலங்கையில் தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட மேலும் ஒரு பரபரப்பு காணொளிக் காட்சி ஐ.நா. சபையில் இன்று (27) திரையிடப்படுகிறது. சமீபத்தில் சேனல்-4 தொலைக்காட்சி 2-வதாக போர்க்குற்ற மீறல்கள் தொடர்பான காணொளிக் காட்சிகளை வெளியிட்டது. அதில் தலைவர் பிரபாகரன் அவரது மகன் 12 வயது பாலச்சந்திரன் ஆகியோர் இலங்கை ராணுவத்தால் முகாமில் பிடித்து கொல்லப்பட்ட தகவல் வெளியானது. மேலும் தமிழர்கள் படுகொலை காட்சிகளும் சித்ரவதைப்படும் காட்சிகளும் இடம் பெற்று இருந்தது. இது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைப்பதாக உள்ளது. இதையடுத்து இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இலங்கையின் போர்க் குற்றம் தொடர்பாக மேலும் ஒரு தீர்மானம் ஐ.நா. மனித உரிமை அமைப்பால் கொண்டு…

  15. தி லாஸ்ட் பேஸ் - இறுதிக் கட்டம் - மனதை உறைய வைக்கும் மற்றுமொரு காணொளி ஐநாவில் வெளியீடப்படுகிறது 27 பெப்ரவரி 2013 ஈழத்தில் தமிழினப் படுகொலையை மகா குரூரமாக அரங்கேற்றிய இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றத்துக்கு ஆதரவாக மேலும் ஒரு வீடியோ இன்று ஐநாவில் வெளியிடப்படுகிறது. இலங்கை இறுதிக்கட்ட போரில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான அப்பாவி தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது. இதற்கான வீடியோ ஆதாரங்கள் 2009-லிருந்து படிப்படியாக வெளியிடப்பட்டு வருகிறது. சனல் 4 தொலைக்காட்சியின் பங்கு இதில் மிகப் பெரியது. இதன் அடிப்படையில் இலங்கை அரசு மீது ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் போர்க்குற்ற மீறல் தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. இந்தியாவின் ஆதரவோடு அது நிறைவேற்றப்பட்டது நினைவிருக்கலாம். சமீபத்…

  16. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டிருப்பது தொடர்பில் எழுந்திருக்கும் உணர்வலைகள், ஈழத் தமிழர் விவகாரத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வழிவகுக்குமா என்பதான விவாதங்கள், பலவும் உணர்ச்சிகரமான உரையாடல்களாகவே முடிந்து போவதை அவதானிக்க முடிகிறது. இந்த உணர்ச்சிகர உரையாடல்களில் ஈழத் தமிழினத்தின் மீது தொடர்ந்து கட்டமைக்கப்படும், நுண்ணரசியல் ஆளுமை குறித்த அவதானிப்பு அற்றுப் போவதையும் காணமுடிகிறது. வெளியாகியுள்ள பாலச்சந்திரனின் கொலை தொடர்பான படங்கள் நடந்த கொடுமையைச் சொல்லும் அதேவேளை, இதே காலப் பகுதியில் வெளியாகியுள்ள மற்றுமொருபடம் நடக்கவிருக்கும் அரசியற் கொடுமையை விளக்குவதாக அமைந்திருக்கிறது. ஆனால் உணர்ச்சிகர உரையாடல்கள் எவற்றிலும் அந்தப் படம் உண…

  17. வேளாங்கண்ணிக்கு சென்ற இலங்கையர்கள் திருப்பியனுப்பப்பட்டனர் செவ்வாய்க்கிழமை, 26 பெப்ரவரி 2013 09:22 0 COMMENTS இந்தியாவில் உள்ள வேளாங்கண்ணி ஆலயத்துக்கு செல்வதற்காக வந்த இலங்கையர்களைக் கொண்ட குழு ஒன்றை திருவாரூர் மாவட்ட பொலிஸார் இடைவழியில் இடைமறித்துள்ளனர். மேலும், பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்வதற்காக திரும்பிச்செல்லுமாறும் இந்தக் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59578-2013-02-26-03-52-42.html

  18. இறுதிக் கட்டப் போரில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்களின் மரணத்துக்கு இன்று உலக சாட்சி​யாக இருப்​பது சனல்-4 வெளியிட்ட 'நோ பயர் ஸோன்' வீடியோக்களும் புகைப்படங்களும்​தான். பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் புகைப்​படங்கள், ரமேஷின் வீடியோ தொடங்கி ஆயிர​மாயிரம் ஈழத் தமிழர்களின் குருதியற்ற உடல்கள் வரை விரியும் அந்த வீடியோ காட்சிகள் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் மரண சாசனம். நோ பயர் ஸோன்' வீடியோக்களின் தயாரிப்பாளர் கேலம் மெக்ரே-வைத் தொடர்பு கொண்டோம். அவர் சொன்ன தகவல்கள் அத்தனையும், இலங்கை அரசுக்கு எதிரான குற்றப்பத்திரிகை. கே: பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படங்கள் யாரால் எடுக்கப்பட்டது? ப: பாலச்சந்திரன் இருக்கும் புகைப்படங்கள் வீடியோ பதிவி…

  19. இருமனப்போக்கில் பான் கீ மூன் By General 2013-02-27 09:21:03 இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் ஐக்கிய நாடுகள் சபையின் இருமனப்போக்கு தொடர்ந்தும் காணப்பட்டே வருவதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயதான மகன் இலங்கை இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை சித்தரித்துக் காட்டும் நிழற்படங்கள் குறித்து செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு நன்கு தெரியுமென அவரது பேச்சாளர் கடந்தவாரம் இன்னர் சிற்றி பிரஸிடம் தெரிவித்திருந்தார். இத்தகைய நிழற்படங்கள் சனல் 4 தொலைக்காட்சி சேவையின் புதிய ஆவணத்திரைப்படமான போர் அற்ற வலயம் இலங்கையின் கொலைக்களங்கள் காணொளியில்…

  20. இலங்கையில் வெப்பமான காலநிலை புதன்கிழமை, 27 பெப்ரவரி 2013 10:03 ஈரப்பதன் குறைவடைந்து வெப்பநிலை அதிகரித்துவருகின்றமையால் எதிர்வரும் நாட்களில் இலங்கையில் வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பல பகுதிகளில் வெப்பநிலை உயர்வடைந்து காணப்படுவதாகவும் ஆகவும் கூடியதாக இரத்தினபுரியில் 34 பாகை செல்சியல் வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. (வை.பி.) http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59653-2013-02-27-04-34-56.html

  21. இரண்டு இலங்கையர்களின் புகலிடக் கோரிக்கையை கனடா நிராகரிப்பு 27 பெப்ரவரி 2013 இரண்டு இலங்கையர்களின் புகலிடக் கோரிக்கையை கனடா நிராகரித்துள்ளது. எம்.வி. சன் சீ கப்பலின் மூலமாக கனடாவிற்குள் பிரவேசித்தவர்களே இவ்வாறு புகலிடக் கோரிக்கை விண்ணப்பம் செய்துள்ளனர். கனடாவின் மத்திய நீதிமன்றம் குறி;த்த இலங்கையர்களின் புகலிடக் கோரிக்கையை நிராகரித்துள்ளது. குறித்த கப்பலில் பயணித்த காரணத்திற்காக கனேடிய குடிவரவு குடியகழ்வுத்திணைக்களம் ஏற்கனவே புகலிடம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த இலங்கையர்களை கனடா நாடு கடத்தினால் சொந்த நாட்டில் அவர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். எவ்வாறெனினும் இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிமன்றம், குறித்த புக…

  22. அமெரிக்க கடற்படையினர் சவேந்திரா சில்வாவை அழைத்தமை குறித்து தூதரகம் அதிருப்தி 27 பெப்ரவரி 2013 அமெரிக்கக் கடற்படையினர், ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வாவை அழைத்தமைக்கு அமெரிக்கத் தூதரகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் அமெரிக்கக் கடற்படையினர் விசேட சொற்பொழிவொன்றை ஆற்றுவதற்காக சவேந்திரா சில்வாவிற்கு அழைப்பு விடுத்திருந்தனர். நியூயோர்க்கின் சென் குவான்டீகோ பல்கலைக்கழகத்தில் இந்த விசேட சொற்பொழிவு ஆற்றப்பட்டது. சவேந்திர சில்வாவை அழைப்பது குறித்து ஆலோசனையை பெற்றுக் கொண்டிருக்க வேண்டுமென தூதரகம், அந்நாட்டு ராஜாங்கத் திணைக்கதளத்திடம் தெரிவித்துள்ளது. பயங்கரவாத ஒழிப்பு தொடர்பில் சவேந்திர சில்வா உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கத…

  23. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை: அமெரிக்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன், இலங்கையில் இனப் பிரச்சினைக்கான உரிய தீர்வினை அந்நாட்டு அரசு பெற்றுக் கொடுக்கவில்லை எனவும் அமெரிக்காவின் சர்வதேச நிறுவனங்களுக்கான துணைச் செயலாளர் எஸ்தர் பிரிம்மர் குறிப்பிட்டுள்ளார். ஜெனீவாவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஐநா மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத் தொடரின் 2வது நாள் உரையின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜெனீவாவில் நடைபெ…

  24. இராணுவ புலனாய்வுப் பிரிவினரின் துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் போராளி பலி திம்புலாகல பிரதேசத்தில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். வாழைச்சேனை பிரதேசத்தில் பார் ஒன்றை கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்படுள்ளது. இந்த முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் தேடுதலை மேற்கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதன்போது கொள்ளையிடப்பட்ட காருடன் சந்தேகநபர் ஒருவர் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் எனவும் புனர்வாழ்வு பெற்றவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நபர் பல கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புபட்டவர் என முறைப்பாடு கிடைக்கப்ப…

  25. இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு அயர்லாந்து, லிபியாவிடம் கோரிக்கை இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிக்குமாறு அயர்லாந்து, லிபிய தூதர்களை சந்தித்து திமுக எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஜெனீவாவில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை ஆதரிக்குமாறு உலக நாடுகளிடம் திமுக வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக டெல்லியில் உள்ள பல்வேறு நாட்டு தூதர்களை திமுக எம்பிக்கள் சந்தித்து இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு கோரி வருகின்றனர். இன்று (26) இது தொடர்பாக அயர்லாந்து, லிபிய தூதர்களை சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். இந்த சந்திப்பின்போது திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன், ரித்திஷ், டிகேஎஸ் இளங்கோவன், தயாநிதி மாறன் ஆ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.