ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143449 topics in this forum
-
2002 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகியோர் இடையில் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கில் கையெழுத்திடப்பட்ட போர் நிறுத்தம் தொடர்பான சமாதான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டு, இந்த வருடத்துடன் 11 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது. 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி இந்த சமாதான புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. நோர்வேயின் நேரடி தலையீட்டின் கீழ், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கையெடுத்திட்டனர். ரணில் விக்ரமசிங்க வவுனியாவில் இருந்தவாறும், பிரபாகரன் கிளிநொச்சியில் இருந்தவாறும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். நோர்வேயின் தூதுவர் ஜோ…
-
- 0 replies
- 438 views
-
-
தமிழர் பகுதிகளுக்கு மேலதிக அதிகாரங்களை வழங்கும் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக சிறிலங்கா அளித்த வாக்குறுதி விடயத்தில், எந்த விட்டுக் கொடுப்புக்கும் இடமில்லை என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று தம்மைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமே அவர் இந்த வாக்குறுதியைக் கொடுத்துள்ளார். தமிழர்களுக்கு மேலதிக அதிகாரங்களை வழங்கும் வகையில், 13வது திருத்தத்துக்கும் அப்பாற்பட்ட தீர்வை தமது நாடு நடைமுறைப்படுத்தும் என்று சிறிலங்கா அதிபர் வாக்குறுதி அளித்துள்ளார் என்றும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விடயத்தில் இந்தியா விட்டுக் கொடுக்காது என்றும் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை மன…
-
- 0 replies
- 386 views
-
-
சம உரிமை இயக்கத்தினால் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் கெயெழுத்து வேட்டையொன்று இன்று மட்டக்களப்பு தனியார் பஸ் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சம உரிமை இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இம்மொபெரும் கையெழுத்து வேட்டையில் வட-கிழக்கில் இரானுவ ஆட்சியை உடன் நிறுத்து, -கிழக்கில் அரசியல் சிறைக்கைதிகளை உடன் விடுதலை செய், கைதுகள் கடத்தல்களை உடன் நிறுத்து, மக்களிடம் கொள்ளையிடுவதை உடன் நிறுத்து, வட-கிழக்கு மக்களின் வாழ்வுரிமையை உறுதி செய் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இக்கையெழுத்து வேட்டை இடம்பெற்று வருகின்றது. மட்டக்களப்புக்கு பிரயாணிகள், பாதசாரிகள், வியாபாரிகள் மட்டு வாழ் மக்கள் என பலரும் இக்கையெழுத்து வேட்டையில் கையொப்பமிட்டு வருகின்றன…
-
- 0 replies
- 377 views
-
-
பான் கீ மூனிடம் இலங்கை பதில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது 23 பெப்ரவரி 2013 ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம், இலங்கை அரசாங்கம் பதில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி டொக்டர் பாலித கொஹணேவினால் இந்த அறிக்கை, பான் கீ மூனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இலங்கைக்கு எதிராக அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளார். இந்த அறிக்கையின் நகல் பிரதி இலங்கை அரசாங்கத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்தப் பதில…
-
- 1 reply
- 405 views
-
-
தமிழர் பகுதிகளுக்கு மேலதிக அதிகாரங்களை வழங்கும் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக சிறிலங்கா அளித்த வாக்குறுதி விடயத்தில், எந்த விட்டுக் கொடுப்புக்கும் இடமில்லை என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகனை நேற்றுச் சந்தித்தனர். இதன்போதே அவர் இந்த வாக்குறுதியை அளித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர்களுக்கு மேலதிக அதிகாரங்களை வழங்கும் வகையில், 13வது திருத்தத்துக்கும் அப்பால் சென்று தீர்வை தமது நாடு நடைமுறைப்படுத்தும் என்று சிறிலங்கா ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விடயத்தில் இந்தியா விட்டுக் கொடுக்காது என்று …
-
- 1 reply
- 797 views
-
-
பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை படையினர் தடுத்து வைத்திருந்த பின்னர் சுட்டுக் கொன்றனர் என்பது தொடர்பான ஆதாரங் களை சனல் 4 வெளியிட்டதை அடுத்து இந்திய நாடாளுமன்றத்தில் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது. சிறுவன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது தொடர்பான காட்சிகளை சனல் 4 தொலைக் காட்சி வெளியிட்டதும் அதன் தாக்கம் இந்திய தேசத்திலேயே அதிகமாக பிரதிபலிப்பதைக் காணமுடியும். பாலச்சந்திரன் கொல்லப்பட்ட காட்சி மட்டு மன்றி வன்னிப் போர் நிலைமைகளை சனல் 4 வெளியிட்ட போதெல்லாம் இந்திய தேசத்தில், இலங்கை அரசுக்கு எதிரான கோங்கள் எழுந்ததை மறுக்க முடியாது. இலங்கையில் நடந்த சம்பவங்களுக்கு இலங்கையில் அல்லவா எதிர்ப்பு ஏற்பட வேண்டும்? ஆனால் இந்தியாவில் அல்லவா குழப்பம் ஏற் படுகின்றது. இதுபற்றி யாரேனும் சிந்தித்…
-
- 0 replies
- 415 views
-
-
உலக வரலாற்றை ஒருகணம் திரும்பிப் பார்க் கின்ற போது எங்கள் நாட்டில் நடக்கின்ற இன வாதப் பேயாட்டத்தை நினைத்து அழாமல் இருக்க முடியாது. அர்த்தமில்லாத - கடந்தகால, நிகழ்கால சம்ப வங்களுக்காக எதிர்காலத்தில் கண்ணீர் விடுகின்ற கொடூரங்கள் நடந்தேறுவது குறித்து உலகம் மெளனம் சாதிப்பது மகா கொடுமை. ஆம்! வியட்நாம் பேரழிவில் ஒன்பது வயது நிரம்பிய சிறுமி ஒருத்தி ஆடைகள் எதுவுமின்றி நிர்வாணமாக ஓடிச்செல்கின்றாள். யுத்தத்தின் கொடூரத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக ஆடையின்றி நிர்வாணமாக ஓடுகின்ற அந்தச் சிறுமியின் அவலத்தைக் கண்ட போர் புரிவோர், வியட்நாம் போரை முடி புக்குக் கொண்டுவருவதென திடசங்கற்பம் செய் கின்றனர். உலகில் நடந்த மிகக் கொடூரமான யுத்தம் என்று வர்ணிக்கப்படுகின்ற வியட்நாம் யு…
-
- 0 replies
- 735 views
-
-
-
- 4 replies
- 893 views
-
-
இலங்கைக் கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு UNHCR புகழாரம் 23 பெப்ரவரி 2013 இலங்கைக் கடற்படையினரின் நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் பாராட்டியுள்ளது.நடுக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மியன்மார் படகுப் பயணிகளை மீட்டு அவர்களுக்கு தேவையான அவசர முதலுதவிகளை வழங்கியமை பாராட்டுக்குரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா நோக்கிப் படகில் பயணிக்க முயற்சித்த குறித்த மியன்மார் பிரஜைகளில் 90க்கும் மேற்பட்டவர்கள் பட்டினி மற்றும் ஏனைய நோய்களினால் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.இலங்கைக் கடற்பரப்பிற்குள் நிர்க்கதியான நிலையில் காணப்பட்ட மியன்மார் பிரஜைகளை அவசரமாக மீட்டு அவர்களுக்கு தேவையான முதலுதவிகளை கடற்படையினர் வழங்கியுள்ளனர். இவ்வாறான பணிகளின்…
-
- 1 reply
- 350 views
-
-
சிவனொளிபாத மலையில் ஹெலி இறங்கு தளம் சனிக்கிழமை, 23 பெப்ரவரி 2013 12:11 சிவனொளிபாத மலையில் ஹெலி இறங்கு தளம் ஒன்றை நிர்மாணிப்பது தொடர்பில் ஆலோசனை செய்யப்பட்டு வருகின்றது. சிவனொளிபாதமலை மா மடுவைக்கு சில கிலோமீற்றர் தூரத்தில் ஹெலிகெப்டர் இறங்கும் வகையிலேயே இந்த இறங்கு தளத்தை நிர்மாணிப்பது தொடர்பில் கலந்துரையாடப்படுகின்றது. சிவனொளிபாத மலைக்கு தரிசனத்திற்கு செல்கின்ற அதி முக்கிய பிரமுகர்கள் மற்றும் சுற்றுலாத்துறையினரை கவனத்தில் கொண்டே இந்த தளத்தை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டள்ளதாக இரத்தினபுரி சமன் தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே சுனில் சாந்த வீரசேகர தெரிவித்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59447-2013-02-23-06-44-43.html
-
- 0 replies
- 449 views
-
-
கொழும்பில் இணங்காணப்பட்டுள்ள காணிகள் சுவீகரிக்கப்படும் By General 2013-02-23 09:55:04 கொழும்பின் அபிவிருத்தி வலயங்களாக இணங்காணப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள காணிகள் தேவையேற்றபடின் நகர அபிவிருத்தி அமைச்சினால் சுவீகரிக்கப்படும் என்று அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அமர்வின் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. ரோஸி சேனநாயக்கவினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். முன்னதாக கேள்வி எழுப்பிய ரோஸி சேனநாயக்க எம்.பி. கொழும்பு 10 சங்கராஜ மாவத்தையில் அமைந்துள்ள பிஸிஸி நிறுவனத்துக்குச் சொந்தமான காணி நகர அபிவிருத்தி அதிகார சபையினால் சுவீகரிக்கப்பட்டது. இது எந்த …
-
- 1 reply
- 404 views
-
-
ஈழத்தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பை உலகின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் வெளிக்கொண்டு வந்ததில் சனல் 4 தொலைக்காட்சியினதும் அதன் பணியாளர்களினதும் பங்களிப்பு மிக முக்கியமானது.ஆனால், அவர்களுக்கான உறுதியான ஆதாரங்கள் எவ்வாறு கிடைக்கின்றது எனபது பலருக்கு தெரியாமலே இருந்து வந்தது. இந்தநிலையில், தமக்கான ஆதாரங்களை இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் (Journalists for Democracy in Sri Lanka) என்ற அமைப்பே வழங்கியதாக சனல் 4 ன் பணியாளரும், நோ பயர் சூன் (No Fire Zone) என வெளிவர இருக்கும் ஆவணப்படத்தின் தயாரிப்பாளருமான கெலம் மக்ரே வெளிப்படுத்தியுள்ளார். தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி காண்பதற்கான போராட்டத்தில் இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் என்ற அமைப்பின…
-
- 1 reply
- 584 views
-
-
கொடியேற்றத்துடன் கச்சைதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஆரம்பம் பிப் 23, 2013 இன்று 7 மணியளவில் காலை கொடியேற்றத்துடன் கச்சைதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஆரம்பமாக உள்ளது. இதன்படி நாளை காலை திருப்பலி பூஜையும் நடைபெறவுள்ளது. இத் திருவிழா நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கான வடமாகாணம் உட்பட ஏனைய மாவட்டங்களிலும் உள்ள பொரும்பாலானவர்கள் அங்கு சென்றிருக்கின்றனர். இதே போன்று இந்நதியாவில் இருந்தும் பெரும்பாலானவர்கள் திருவிழாவில் நலந்து கொள்ள அங்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கச்சைதீவில் செல்லும் மக்களுக்கான குடிநீர், உணவு, தங்குமிடங்கள் போன்றவற்றின் ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து விசேட படகுச் சேவைகளும் நடத்தப்பட்ட…
-
- 0 replies
- 410 views
-
-
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை அரசியல் கட்சியாக பதிவு செய்யும் நோக்கில் அதன் நடவடிக்கைகளை விஸ்தரிக்கும் வகையில் உயர் பீடம் ஒன்றை அமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இன்று மாலை கொழும்பில் நடைபெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை பதிவுசெய்ய வேண்டும் என தமிழரசுக் கட்சியை தவிர ஏனைய கட்சிகள் கோரிவந்த நிலையில் அது தொடர்பில் இழுபறி நிலை காணப்பட்டு வந்தது. எனினும் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அது தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டபோது உயர் பீடம் அமைக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்சியிலிருந்தும் தலா மூவர் இந்த உயர் பீடத்தில் உள்ளடக்க…
-
- 7 replies
- 575 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்வரும் 28ஆம் திகதி பிரித்தானியாவுக்கான விஜயத்தை மேற்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்த விஜயத்தில் பங்குகொள்கின்றனர். அனைத்துலக தமிழர் பேரவையின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் அமையவுள்ளது. எதிர்வரும் 25ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாடு ஆரம்பமாகவுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரித்தானியா செல்வது முக்கியமானதாக கருதப்படுகிறது. http://www.hirunews.lk/tamil/53904
-
- 3 replies
- 598 views
-
-
பிரபாகரனின் மகன் கொலை விவகாரத்தை விவாதிக்க அனுமதி மறுத்ததால், நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது. இதனால், சபை மதியம் 12 வரை ஒத்தி வைக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் 14 வயது மகன் பாலசந்திரன் சிங்கள இராணுவத்தினரால் பிடித்து வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட தகவலை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டது. இதற்கு தமிழகத்தில் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று தொடங்கிய நாடாளுமன்றத் கூட்டத்தொடரிலும் இந்தப் பிரச்னை எழுப்பப்பட்டது. பிரபாகரன் மகன் கொலை பற்றி விசாரணை நடத்த வேண்டும். இதுபற்றி சபையில் விவாதிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அனைத்து எம்.பிக்களும் ஒரே நேரத்தில் எழுந்து இந்தக் கோரி…
-
- 1 reply
- 485 views
-
-
'இலங்கை - இந்தியா ஆகிய இரு நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் நல்லெண்ணமும் ஒற்றுமையும் நிலவுவதற்காக தமக்கிடையில் உள்ள குரோதங்களை இல்லாமல் செய்ய தீவிரமாக செயற்பட வேண்டும். அமெரிக்க தீர்மானங்கள் ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தில் எடுக்கப்படும் போது இந்தியாவுக்கு ஒரு சங்கடமான நிலைமை ஏற்படாத வகையில் முதல் படியாக அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்' என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'எனது அபிப்பிராயப்படி பொறுப்புள்ள சிலரின் பொறுப்பற்ற கூற்றுக்களால் மஹிந்த சிந்தனை தனது மதிப்பை இழந்து…
-
- 12 replies
- 608 views
-
-
ஐக்கிய நாடுகளுக்குத் "தண்ணி' காட்டுகிறது இலங்கை அமந்தபெரேரா: சர்வதேச அழுத்தங்களால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கான ஆதரவு சரிந்து விடவில்லை.அது இப்போது ஒரு வருடாந்த நிகழ்வு ஆகிவிட்டது. ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அதன் வருடாந்தக் கூட்டத் தொடரின் முதலாவது அமர்வை பெப்ரவரியில் நடத்துவதற்கு தயாராகி வரும் வேளையில் இலங்கை அரசாங்கம் தன்மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான சகல முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. 3 தசாப்தகால இரத்தக்களறி யுத்தத்தின் பின்னர் கடந்த வருடத்துடன் முடிவடைந்த மூன்று வருடங்களாக சர்வதேச அழுத்தங்களை தட்டிக் கழிக்கும் முயற்சியில் அரசாங்கம் வெற்றி கண்டு வந்துள்ளது. ஆனால் கடந…
-
- 4 replies
- 690 views
-
-
சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும் ‘போர் தவிர்ப்பு வலயம்’ ஆவணப்படம் முதல் முறையாக நாளை புதுடெல்லியில், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் திரையிட்டுக் காண்பிக்கப்படவுள்ளது. புதுடெல்லியில் உள்ள அரசியலமைப்பு கழகத்தில் (Constitution Club) நாளை பிற்பகல் 4.30 மணிக்கு இந்த ஆவணப்படத்தின் 20 நிமிடக் காட்சிகள் திரையிடப்படவுள்ளன. இதையடுத்து, மாலை 5 மணியளவில் குழுநிலை விவாதம் ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதில், அனைத்துலக மன்னிப்புச் சபையின் இந்தியாவுக்கான பிரதம நிறைவேற்று அதிகாரி ஜி.அனந்தபத்மநாதன், போர் தவிரப்பு வலயம் ஆவணப்படத்தின் இயக்குனர் கல்லும் மக்ரே, ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்தின் பிரதம செய்தி ஆசிரியர் எம்.ஆர்.நாராயணசாமி…
-
- 6 replies
- 964 views
-
-
-சுபுன் டயஸ் பயங்கரவாதத்தை எவ்வாறு வெற்றி கொள்வது என்பது தொடர்பில் அமெரிக்க கடற்படையினருக்கு ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதி பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவினால் பயிற்சிக் கருத்தரங்கொன்று அளிக்கப்பட்டுள்ளது. 'பயங்கரவாதத்தை எதிர்க்கொள்வது' என்ற தலைப்பில் அமெரிக்காவிலுள்ள கடற்படை பயிற்சிப் பல்கலைக்கழகத்தில் இந்த பயிற்சிக் கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59434-2013-02-22-15-55-58.html
-
- 16 replies
- 911 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட புகைப்படங்களை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நிராகரித்துள்ளதுடன், யார் இதனை எடுத்தார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ள 'நோ பயர் சோன்' புகைப்படங்களை பாதுகாப்பு செயலாளர் நிராகரித்துள்ளார். அத்துடன், குறித்த புகைப்படங்களில் இராணுவ அடையாளங்களே இல்லை எனவும் அவ்வாறான படங்களை பார்த்துவிட்டு, அச்சிறுவன் இராணுவத்தின் பதுங்கு குழியில் உள்ளார் என சனல் 4 தொலைக்காட்சி எவ்வாறு கூற முடியும் எனவும் பாதுகாப்பு செயலாளர் கேள்வி எழுப்பியுள்ளார். புகைப்படங்களை வெட்டி ஒட்டும் வேலையை இவர்கள் பல காலங்களாகவே செய்துகொண்டிர…
-
- 12 replies
- 1.3k views
-
-
மன்னார் மாவட்டம் ஈச்சலவக்கை , சன்னார் கிராம மாணவர்களுக்கு உதவுங்கள். மன்னார் மாவட்டம் ஈச்சலவக்கை , சன்னார் ஆகிய கிராமங்களில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையான கல்விகற்கும் வயதில் உள்ள 118மாணவமாணவிகளுக்கான அடிப்படைத் தேவைகளாக சப்பாத்துக்கள் , புத்தகப்பைகள் , கற்றல் உபகரங்கள் தேவைப்படுகின்றன. போரால் மிகவும் பாதிப்புற்று வறுமைக்கோட்டின் கீழ் உள்ள இக்கிராமங்களில் வாழும் 250வரையிலான குடும்பங்களின் பிள்ளைகளது கல்வியை மேம்படுத்த முடியாத நிலமையில் பெற்றோர்கள் சிரமங்களை அனுபவிக்கின்றனர். பெரும்பாலுமான பிள்ளைகள் குடும்பத்தில் தாய் அல்லது தந்தை அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவரையேனும் யுத்தத்தில் இழந்துள்ளார்கள். இக்குழந்தைகளின் உளவள நிலமைகள் கூட மிகவும் கவலையான நி…
-
- 2 replies
- 563 views
-
-
-கெலும் பண்டார, யொஹான் பெரேரா போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம மீண்டுமொருமுறை நாடாளுமன்றத்தில் தகாத வார்த்தைகளை பிரயோகித்து தர்ம சங்கடத்தில் சிக்கிக்கொண்டார். நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் ஆபாசமான வார்த்தைகளை நாடாளுமன்றினுள் பிரயோகித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரனவின் கேள்விக்கு பதிலளிக்கையில் “நீங்கள் எனது பிரதான மனைவியில் கிராமத்திலிருந்து வந்தவர். ஆகையினால் கண்டிப்பாக உங்களது கேள்விக்கு பதிலளிப்பேன். இவ்விடயத்தினை பொது இடத்தில் கதைப்பதற்கு நான் வெட்கப்படவில்லை” என்று குமார வெல்கம - நாடாளுமன்றில் குறிப்பிட்டார். எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சரை உசுப்பேற்றி இப்படியான தகாத வார்த்த…
-
- 0 replies
- 372 views
-
-
அவுஸ்திரேலிய படகுப் பயணத்திற்கு எதிராக நட்சத்திர கிரிக்கட் வீரர்களான முத்தையா முரளீதரன் மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.புகலிடம் கோரி சட்ட விரோதமான முறையில் ஆயிரக் கணக்கான இலங்கையாகள் படகு மூலம் அவுஸ்திரேலியா சென்றடைகின்றனர். படகுப் பயணத்தின் ஆபத்துக்களை விபரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட விவரணச் சித்திரத்தில் குறித்த கிரிக்கட் நட்சத்திரங்கள் தோன்றியுள்ளனர்.ஆங்கிலம், தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் இந்த விவரணச் சித்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களிடம் குடும்ப உறுப்பினர்கள் சிக்கித் தவிப்பதனை ஊக்குவிக்க வேண்டாம் என முரளீதரன் மற்றும் மாலிங்க ஆகியோர், அவுஸ்திரேலியா வாழ் இலங்கையர்களிடம் கோரியுள்ளனர். பலவந்தமான…
-
- 3 replies
- 659 views
-
-
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரவிருக்கின்ற தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார். தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று காலை சந்தித்தனர். பிரதமரை சந்திப்பு தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவிருக்கின்ற தீர்மானத்தை இந்தியா ஆதரவளிக்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பது தொடர்பாக பி…
-
- 15 replies
- 2k views
-