Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளுள் ஒருவரான வீமனின் தாயார் தற்கொலைக்கு முயற்சி – 19 பெப்ரவரி 2013 அபாயகரமான நிலையில் வைத்தியசாலையில் அனமதி – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் காணாமல் போனரது நிலை பற்றிய தகவல்கள் ஏதும் வெளித்தெரியாத நிலையில் அவர்களது குடும்ப அங்கத்தவர்களது தற்கொலை வீதம் என்றுமில்லாத அளிவில் அதிகரித்துச் செல்கின்றது. இன்று அதிகாலை அவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்த விடுதலைப்புலிகளது மூத்த தளபதிகளுள் ஒருவரான வீமனின் தாயார் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு நித்திரையிலிருந்து எழுந்து அவர் தற்கொலைக்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த போதும் இன்று காலையே அவர் மீட்கப்பட்டிருந்தார். இதனால் உடலெங்கும் நஞ்சு பரவுண்டு அபாயகரமான நிலையிலேயே அ…

  2. உயர் பாதுகாப்பு வலய காணி உரிமையாளர்களுக்கு நஷ்டஈடாம்;காணி அமைச்சர் தெரிவிப்பு வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலுள்ள அரச காணிகள் தொடர்பில் தகவல் ஆராயும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். இதன்படி அரச காணிகளில் வசித்துவரும் தமிழ் மக்களை பிறிதொரு பிரதேசத்தில் மீள்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் ஒவ்வொரு பிரதேச சபை செயலாளர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும், இராணுவ காவலரண்கள் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் மட்டுமல்ல எனவும் நாட்டின் பல பாகங்களிலும் உள்ளது எனவே இராணுவ காவலரங்கள் உள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எ…

  3. மன்னர் சபைக்கு வந்த நெசவாளி ஒருவன் அறி ஞர்களுக்கும் நல்லவர்களுக்குமே நான் கொண்டு வந்துள்ள ஆடை தெரியும் எனக் கூறுகிறான். இரண்டு கைகளையும் உயர்த்தி இதோ! எனது கரத்தில் இருக்கும் இந்த ஆடை மன்னர் பெரு மானுக்கு மிகவும் பொருத்துடையது என்கிறான். அவனின் கையில் எந்த ஆடையுமில்லையாயி னும் அறிஞர்களுக்கும் நல்வர்களுக்குமே குறித்த ஆடை தெரியும் என்று நெசவாளி கூறிய தால் சபையிலிருந்த மன்னன் முதல் மந்திரி பிர தானிகள் வரை அனைவரும் நெசவாளி கொண்டு வந்த ஆடை மிகவும் அற்புதமானதென்றனர். இப்போது, தான் கொண்டுவந்த ஆடையை மன்னனுக்கு அணிவிக்கப் போவதாக அவன் கூற, மன்னன் தான் அணிந்திருந்த ஆடைகளை களைந்து கொள்கிறான். அதோ! மன்னன் நிர்வாணமாக நிற்கிறான். நெசவாளி, தான் கொண்டுவந்த ஆடையை மன்னனுக்கு அணிவிப்ப…

  4. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகனுக்கு உணவையும், தண்ணீரையும் கொடுத்துவிட்டு அடுத்த கணமே சுட்டுத்தள்ளியிருக்கும் இலங்கை இராணுவம், தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாக கூறுவது நகைப்புக்குரியது என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்புக்காக இராணுவ முகாம்கள் அமைந்துள்ள நிலங்கள் சுவீகரிக்கப்படும் என இராணுவப் பேச்சாளர் பி.பி.சி ஊடகத்திற்கு வழங்கியுள்ள கருத்துத் தொடர்பில், விளக்கமளிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். விடயம் தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில், ஒரு பாலகனுக்கு, பிஸ்கட்டும் தண்ணீரும் கொடுத்துவிட்டு, அடுத்த கணமே மிக அருகிலிருந்து நெஞ்சில் சுட்டு படுகொலை செ…

  5. போர் வெற்றிகொள்ளப்பட்ட போதிலும், சமாதானம் தோல்வியடைந்துள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்தார். மக்கள் கட்சியின் தலைவர் விஜயகுமாரதுங்கவின் நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: மக்கள் கட்சியின் கொள்கைகள் குறித்து அமைச்சர் ராஜித சேனாரட்ண கருத்து வெளியிட்டமை மகிழ்ச்சி அளிக்கின்றது. இன்றைய சூழ்நிலைகளின் அடிப்படையில் கருத்து வெளியிடுவோருக்கு நாளை என்னவாகும் என்று தெரியாது. கடந்த ஏழு ஆண்டுகளாக நான் துன்புறுத்தப்பட்டுள்ளேன். ஊடகங்கள் அது குறித்து கேள்வி எழுப்புகின்றன. ஆனால் நான் அழுத்தங்கள் பற்றிய தகவல்களை வெளியிடப் போவதில்லை. அனைத்து மக்களும், அனைத்து நிலைமைகளும் மாற்றமடையும் எ…

  6. தெல்லிப்பழை அமைதி ஆர்ப்பாட்டத்தில் உள்நுழைந்து குழப்பம் விளைவித்த சட்டவிரோதிகளை நான் என் கண்களால் கண்டேன். இந்தச் சம்பவம் நடந்த சில நிமிடங்களில் இவர்களது படங்கள் இணையத்தளம் மூலம் உலகம் முழுக்க காட்சிப்படுத்தப்பட்டன. இன்று அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும் அந்தப் படங்கள் தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்பட்ட படங்கள் எனவும் அரசாங்கம் கூறுகிறது. இதேவேளை, நேற்று உலகம் முழுக்க காட்சிப்படுத்தப்பட்டுள்ள புலிகளின் தலைவர் பிரபாகாரனின் மகன் என்று சொல்லப்படும் பாலகன் சம்பந்தப்பட்ட படங்களையும் தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்பட்ட படங்கள் என இதே அரசாங்கம் கூறுகிறது. ஒரே கதையை தெல்லிப்பழையிலும் ஜெனீவாவிலும் சொல்லி உலகத்தின் முன்னால் சிரிப்பாய் சிரிக்கும் நிலைமையில், பொய் சொல்லக்கூட த…

  7. இலங்கைக்கு எதிராக ஐ.நா கொண்டு வரும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்கும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார். திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு சென்ற வாசன் அங்கு, மறைந்த காந்தியின் சீடர் ஜெகநாதனின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் ஜெகநாதனின் மனைவி கிருஷ்ணம்மாள், மகன் டாக்டர் பூமிகுமார், டாக்டர் சத்யா ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் திண்டுக்கல்லில் நிருபர்களிடம் அவர் பேசுகையில், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் தண்ணீர் தேவை பற்றியும், தண்ணீர் இல்லாததால் ஏற்படும் அவல நிலை குறித்தும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசிடம் மீண்டும் தெரிவிப்போம். காவிரி நதி நீர் பங்கீட்டில்,…

    • 3 replies
    • 527 views
  8. பாலச்சந்திரன் ஒளிப்படங்கள்: நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை - சல்மான் குர்சித் [ புதன்கிழமை, 20 பெப்ரவரி 2013, 00:11 GMT ] [ கார்வண்ணன் ] விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சிறிலங்காப் படையினரால் உயிருடன் பிடித்து வைத்துக் கொல்லப்பட்ட ஒளிப்படங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் தெரிவித்துள்ளார். நேற்று ஊடகங்களில் வெளியான பாலச்சந்திரனின் ஒளிப்படங்கள் குறித்து, இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய போது, “சிறிலங்கா இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்படும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளையமகனின் ஒளிப்படங்களைப் பார்த்தேன்…

  9. மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில், பார்வதியம்மாள் நினைவு அஞ்சலி [படங்கள்] பார்வதியம்மாளின் நினைவு நாளையொட்டி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான தாயகத்தில், அவரது திருஉருவப் படத்திற்கு கழகத்தின் சட்டத்துறைச் செயலாளரும், உயர்நிலைக்குழு உறுப்பினருமான ஜி.தேவதா மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். உயர்நிலைக்குழு உறுப்பினர் இமயம் ஜெபராஜ், மாநில மகளிர் அணிச் செயலாளர் குமரி விஜயகுமார், பகுதிச் செயலாளர்கள் தி. நகர் பீடா இரவி, சேப்பாக்கம் மார்க்கெட் சேகர், எழும்பூர் தென்றல் நிசார், ஆயிரம்விளக்கு ரெட்சன் அம்பிகாபதி மற்றும் தேவராஜ், ஜார்ஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். ‘தாயகம்’ தலைமைக் கழகம் சென்னை-8 …

  10. பூநகரியில் குடும்பஸ்தரை சிறிலங்கா படையினர் தண்ணீர் பவுஸரால் நசித்துக் கொன்றனர் பிப் 20, 2013 பூநகரியிலுள்ள வயலில் நெல் அறுவடையை மேற்கொண்டுவிட்டு களைப்பால் வீதியில் வந்து படுத்துறங்கிய குடும்பஸ்தரை சிறிலங்கா படையினர் தண்ணீர் பவுஸரால் நசித்துக் கொன்றுள்ளனர். இரண்டு குடும்பஸ்தர்கள் படுத்துறங்கிய போது ஒருவரை பலமாக நசித்ததால் அவர் அந்த இடத்திலேயே பலியானார். மற்றைய குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் பூநகரி செட்டியார் குறிச்சியைச் சேர்ந்த த.இரத்தினசிங்கம் என்ற 32 வயதுக் குடும்பஸ்தரே பலியானவராவார். இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார். இவரின் குடும்பம் மிகுந்த கஷ்டத்தில் வாடியதால் வயலில் க…

  11. ராஜபக்சவின் பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளை அமெரிக்காவும், மேற்குலக அரசாங்கங்களும், வெளிப்படையாகவும் திரும்பத் திரும்பவும் கண்டித்தபோதும், அந்த வார்த்தைகள் எல்லாமே செவிடன் காதில் கூறியதாகி விட்டது. இவ்வாறு அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘வொசிங்டன் போஸ்ட்‘ நாளிதழ், ‘சிறிலங்காவின் வீணடிக்கப்பட்ட வாய்ப்புகள்‘ என்ற தலைப்பில் நேற்று எழுதியிருந்த ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இதன் மொழியாக்கம்- கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம், தீவின் சிறுபான்மை தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த போராளிகளுடனான 26 ஆண்டு கால உள்நாட்டுப் போரில் தீர்க்கமான வெற்றியைப் பெற்றது. அந்தப் போருக்கான செலவு கொடூரமானதாக இருந்தது. சிறிலங்கா அரசா…

  12. சென்னை: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலசந்திரன் இலங்கை ராணுவத்தால் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டது, மன்னிக்க முடியாத மாபெரும் போர்க் குற்றமாகும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதனால் இலங்கை மீது சர்வதேச பொருளாதாரத் தடையைக் கொண்டு வர மத்திய அரசு அமெரிக்காவுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர், சிறுவன் பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தால் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது கொஞ்சம் கூட மனிதாபிமானமற்ற செயல். ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சியில் நடந்தது தான் நினைவுக்கு வருகிறது. ஹிட்லர் ஆட்சியில் யூதர்கள் இன்ப…

  13. பாலச்சந்திரன் படுகொலை பின்னணியில் போர்க்குற்ற விசாரணையை துரிதப்படுத்த கூட்டமைப்பு வேண்டுகோள் 'ஜெனிவா மாநாட்டில் இலங்கை அரசு புரிந்த போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஒன்றரை மணிநேரம் ஒளிபரப்பப்படவுள்ள காணொளியில் உள்ள ஒரு பகுதியே பாலச்சந்திரன் படுகொலை தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள். இதைவிட நெஞ்சை உருக்கும் கொடூரமான சம்பவங்கள் வெளிவரக்கூடும். எனவே, இந்தியா உட்பட உலக நாடுகள் தாமதிக்காது இலங்கை அரசு மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளைத் துரிதப்படுத்தவேண்டும்.' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற …

  14. 22 வது மனித உரிமை கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25ம் திகதி தொடக்கம் மார்ச் 22ம் திகதி வரை ஜெனிவா ஐ.நா சபையினுள் நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினரால் தொடர்ச்சியான கவனஈர்ப்பு கண்காட்சியும், ஒன்றுகூடலும் நடைபெறவுள்ளன. அந்தவகையில் பெப்ரவரி 25ம் திகதி தொடக்கம் மார்ச் 10 ம் திகதி வரையும் ஸ்ரீலங்கா அரசாங்கம் 1948 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையும் தமிழினம் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு சார்ந்த புகைப்படங்கள் சர்வதேச பார்வைக்கு வைக்கப்படவுள்ளன. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஆதரவில் மனித நேய செயற்பாட்டாளர்கள் தமிழ் இன அழிப்பின் நிழற்படங்களை பார்வைக்கு வைக்கவுள்ளனர்.. அத்துடன் சுவிஸ் தமிழ் இளைய…

  15. மார்ச் 4 – சிங்கள கொலைகார அரசை எதிர்த்து, தமிழமெங்கும் கருப்புக்கொடி கண்டன அறப்போர் சென்னையில் இலங்கைத் தூதரகம் முற்றுகை: வைகோ அறிக்கை -- சங்கொலி மதிமுக நேரம் Wednesday, February 20th 2013. பிரிவு featured, மதிமுக, முதன்மைச்செய்திகள் உலகத்தின் மனசாட்சியை உலுக்கிய ஈழத்தமிழர் படுகொலைக் காட்சிகள், சேனல்-4 காணொளி ஆதாரங்களோடு, ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்து கொண்டு இருக்கின்றன. 2010 ஆகஸ்டு 25 இல், ஈழத்தமிழ் இளைஞர்கள் எட்டுப் பேர் அம்மணமாக, கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில், தரையில் மிதித்துத் தள்ளப்பட்டு, சிங்கள இராணுவத்தினரால் பிடறியில் சுட்டுக்கொல்லப்பட்ட, கோரக் கொலைகளை சேனல்-4 வெளியிட்டது, நம் நெஞ்சில் நெருப்பைக் கொட்டியது. 2010 டிசம்பர் 02 ஆ…

  16. பாலச்சந்திரனின் புகைப்படங்கள் வெளியானதால் சென்னையில் பதட்டம்: - ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் அலுவலகம் மீது கல்வீச்சுத் தாக்குதல் [Wednesday, 2013-02-20 13:41:29] சென்னையில் உள்ள ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் அலுவலகம் மீது மர்ம நபர்கள் இன்று (20) காலை தாக்குதல் நடத்தியுள்ளனர். சென்னை கோடம்பாக்கம் - நுங்கம்பாக்கம் சாலையில் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் அலுவலகம் உள்ளது. ‌இன்று அதிகாலை 2.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சிலர் திடீரென கற்களை வீசி தாக்கினர். இதில் அலுவலக கண்ணாடி பலத்த சேதமடைந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடாத்தி வருகின்றனர். தமிழீழ விடுதலைப் ப…

  17. Sri Lanka's Ambassador to Italy summoned back Tue, Feb 19, 2013, 10:29 pm SL Time, ColomboPage News Desk, Sri Lanka. Feb 19, Colombo: Sri Lanka's Ambassador to Italy Asitha Perera has been recalled to the island before he finished his term, diplomatic sources said. A group of Sri Lankans led by Buddhist monks held a protest before the Sri Lanka Embassy in Rome demanding the removal of the Ambassador Asith Perera. Liberal Party member Asitha Perera was appointed as Ambassador to Italy in November 2011. He was accredited to Greece, Cyprus, Malta and Albania. He was a former MP elected in September 1994 through an alliance the Liberal Party had with the Sri Lanka Musl…

  18. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைப் பேரவை விசாரணை நடத்த வேண்டும் - HRW 20 பெப்ரவரி 2013 யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணை நடத்த வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக சுமத்தப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானது என மனித உரிமை கண்காணிப்பகம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளது. 2012ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், இலங்கை அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மனித உரி…

  19. இராணுவ மேஜரை தாக்கிய மாலக சில்வா, வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி! [Wednesday, 2013-02-20 07:46:43] இராணுவ மேஜர் அதிகாரி ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக இனங்காணப்பட்டுள்ள அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா வெளிநாடுகளிற்கு செல்ல சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை 18-02-2013 அன்று நடைபெற்ற போதே மாலக்க சில்வா வெளிநாடுகளிற்கு செல்வதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியுள்ளது. மாலக்க சில்வா சார்பில் ஆஜரான சட்டத்தரணியின் வேண்டுகோளுக்கிணங்க இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 5ஆம் திகதிவரை வெளிநாட்டுப் பயணங்களுக்கு அனுமதி வேண்டும் என வழக்கு விசாரணைகளின் போது மாலக்க சில்வாவின் சட்டத்தரணி வே…

  20. இலங்கைக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யப்படவில்லை – பிரித்தானியா 20 பெப்ரவரி 2013 இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்யவில்லை என பிரித்தானியா அறிவித்துள்ளது. கடந்த ஆண்டில் இரண்டு மில்லியன் பவுண்ட் பெறுமதியான ஆயுதங்களை பிரித்தானியா, இலங்கைக்கு விற்பனை செய்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் பர்ட் தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவத்திற்கு ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு சிறு ஏற்றுமதியாளர்களுக்கு அரசாங்கம் அனுமதியளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சுமார் இரண்டு மில்லியன் பவுண்ட் பெறுமதியான ஆயுதங்களை பிரித்தானிய சிறு ஆயுத ஏற்றுமதியாளர்கள், இலங்கைக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக பிரித்தானியா ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன. எனினும், இந்தத் …

  21. போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து சிறீலங்கா தப்பிக்க முடியாது! - சனல்-4 செவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2013 17:43 சிறீலங்காஅரசாங்கம் போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து தப்பிக்க முடியாது என சனல்-4 தொலைக்காட்சியின் இயக்குனர் கெல்லம் மக்ரே தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன், சிறீலங்கா இராணுவத்தினரால் கொடூரமாக கொல்லப்பட்டது தொடர்பான புகைப்படங்களை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் மணல் மூடைகளுக்கு நடுவே பரிதாபமாக, 12 வயதான பாலச்சந்திரன் அமர்ந்திருக்கும் படம் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், பாலச்சந்திரன் பிஸ்கட் போன்ற எதையோ சாப்பிடுகிறார். அதே கமராவில் தான், பாலச்சந்திரன் சுடப்பட்…

  22. அன்பான புலம் பெயர் தமிழ் உறவுகளே உறங்கிவிட்டீர்களா ? இனியும் பொறுத்தால் எமக்கு விடுதலை இல்லை !! இதுதான் சரியான காலம் எழுந்து களமாட வாருங்கள் ....... உங்களுடைய விடுதலைக்காக நீங்கள்தான் போராட வேண்டும் வீதி வீதியாய் இறங்கி போராடிய தமிழா.....நீங்கள் எங்கே... நாம் எல்லோராலும் முடியும் ஓரணியாக செயல்ப்படுவோம் வாரீர்.... . தயவு செய்து என் கருத்தை யாழ்கள உறவுகள் இழிவு படுத்தாமல் முன்னின்று இவ் வரலாற்று கடமையை ஏற்று உங்களால் இயன்றளவு உணர்வாளர்களை அணுகி உலக நாடுகள் திரும்பிப்பார்க்குமளவுக்கு மாபெரும் போராட்டத்தை வழிநடத்த அவர்களின் உதவியை கேட்போமாக. இந்திய தமிழ் உணர்வாளர்களுக்கு இருக்கிற அக்கறை கூட எமக்கில்லை. எமக்காக உயிர்நீத்த அந்த உறவுகளை நினைத்து பார்த்து போராடுவோம் வ…

  23. மன்னாரில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட அரச ஊடகவியலாளர்கள் காணாமல் போனமை தொடர்பில் விசாரனை. [Tuesday, 2013-02-19 17:47:40] மன்னார் மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளர்கள் நால்வருக்கு கடந்த பல மாதங்களாக தொடாந்தும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வந்த நிலையில் இறுதியாக கடந்த மாதம் 16 ஆம் திகதி(16-01-2013) மன்னார் மாவட்ட ஊடாகவியலாளர்கள் 4 பேரூக்கு சியாத் இயக்கம் என்ற பெயரில் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. குறித்த மிரட்டல் கடிதம் 2 அரச ஊடகவியலாளர்களுக்கும்,2 தனியார் ஊடகவியலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த 2 அரச ஊடகவியலாளர்களினது தொடர்புகளும் கடந்த மாசி ம…

  24. விடுதல‌ை‌ப்பு‌லிக‌ள் அமை‌ப்‌பி‌ன் தலைவ‌ர் ‌பிரபாகரன் மக‌ன் ‌வீடியோவை பா‌ர்‌த்த ‌பின்னரே கரு‌த்து தெரிவிக்க முடியும் என முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர். விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் பிரபாகரன் இராணுவ பாதுகாப்பில் இருந்தபோதே கொலை செய்யப்பட்டதாக செனல்4 ஊடகத்தினால் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதனையடுத்து ம‌னித உ‌ரிமைகளை ‌மீ‌‌றிய இல‌ங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜப‌க்ஷவை த‌ண்டி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று த‌மிழக அர‌சிய‌ல் க‌ட்‌சிக‌ள் வ‌லியுறு‌த்‌தி வரு‌கி‌ன்றன. இ‌ந்த ‌நில‌ை‌யி‌ல் செனல்4 ஊடகத்தினால் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் குறித்து செய்தியாளர்கள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கேட்டுள்ளனர். இத‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌‌த்த ஜெயல‌லித…

  25. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன், பாலச்சந்திரன் இராணுவத்தினரிடம் காவலில் இருந்தபோது படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சனல்4 ஊடகம் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் எதுவும் உண்மையில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரானவர்களின் திட்ட மிட்ட செயற்பாடுகளே இவை. நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கில் பொய்யான தகவல்களையும், வதந்திகளையும் திட்டமிட்ட வகையில் பரப்பி வருகிறார்கள். நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலே இராணுவத்துக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கப்படுகின்றன. இக்குற்றச்சாட்டுக்கள் இலங்கைக்கு புதியதல்ல. இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.