Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைப் பேரவை விசாரணை நடத்த வேண்டும் - HRW 20 பெப்ரவரி 2013 யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணை நடத்த வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக சுமத்தப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானது என மனித உரிமை கண்காணிப்பகம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளது. 2012ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், இலங்கை அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மனித உரி…

  2. இராணுவ மேஜரை தாக்கிய மாலக சில்வா, வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி! [Wednesday, 2013-02-20 07:46:43] இராணுவ மேஜர் அதிகாரி ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக இனங்காணப்பட்டுள்ள அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா வெளிநாடுகளிற்கு செல்ல சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை 18-02-2013 அன்று நடைபெற்ற போதே மாலக்க சில்வா வெளிநாடுகளிற்கு செல்வதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியுள்ளது. மாலக்க சில்வா சார்பில் ஆஜரான சட்டத்தரணியின் வேண்டுகோளுக்கிணங்க இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 5ஆம் திகதிவரை வெளிநாட்டுப் பயணங்களுக்கு அனுமதி வேண்டும் என வழக்கு விசாரணைகளின் போது மாலக்க சில்வாவின் சட்டத்தரணி வே…

  3. இலங்கைக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யப்படவில்லை – பிரித்தானியா 20 பெப்ரவரி 2013 இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்யவில்லை என பிரித்தானியா அறிவித்துள்ளது. கடந்த ஆண்டில் இரண்டு மில்லியன் பவுண்ட் பெறுமதியான ஆயுதங்களை பிரித்தானியா, இலங்கைக்கு விற்பனை செய்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் பர்ட் தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவத்திற்கு ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு சிறு ஏற்றுமதியாளர்களுக்கு அரசாங்கம் அனுமதியளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சுமார் இரண்டு மில்லியன் பவுண்ட் பெறுமதியான ஆயுதங்களை பிரித்தானிய சிறு ஆயுத ஏற்றுமதியாளர்கள், இலங்கைக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக பிரித்தானியா ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன. எனினும், இந்தத் …

  4. போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து சிறீலங்கா தப்பிக்க முடியாது! - சனல்-4 செவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2013 17:43 சிறீலங்காஅரசாங்கம் போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து தப்பிக்க முடியாது என சனல்-4 தொலைக்காட்சியின் இயக்குனர் கெல்லம் மக்ரே தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன், சிறீலங்கா இராணுவத்தினரால் கொடூரமாக கொல்லப்பட்டது தொடர்பான புகைப்படங்களை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் மணல் மூடைகளுக்கு நடுவே பரிதாபமாக, 12 வயதான பாலச்சந்திரன் அமர்ந்திருக்கும் படம் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், பாலச்சந்திரன் பிஸ்கட் போன்ற எதையோ சாப்பிடுகிறார். அதே கமராவில் தான், பாலச்சந்திரன் சுடப்பட்…

  5. அன்பான புலம் பெயர் தமிழ் உறவுகளே உறங்கிவிட்டீர்களா ? இனியும் பொறுத்தால் எமக்கு விடுதலை இல்லை !! இதுதான் சரியான காலம் எழுந்து களமாட வாருங்கள் ....... உங்களுடைய விடுதலைக்காக நீங்கள்தான் போராட வேண்டும் வீதி வீதியாய் இறங்கி போராடிய தமிழா.....நீங்கள் எங்கே... நாம் எல்லோராலும் முடியும் ஓரணியாக செயல்ப்படுவோம் வாரீர்.... . தயவு செய்து என் கருத்தை யாழ்கள உறவுகள் இழிவு படுத்தாமல் முன்னின்று இவ் வரலாற்று கடமையை ஏற்று உங்களால் இயன்றளவு உணர்வாளர்களை அணுகி உலக நாடுகள் திரும்பிப்பார்க்குமளவுக்கு மாபெரும் போராட்டத்தை வழிநடத்த அவர்களின் உதவியை கேட்போமாக. இந்திய தமிழ் உணர்வாளர்களுக்கு இருக்கிற அக்கறை கூட எமக்கில்லை. எமக்காக உயிர்நீத்த அந்த உறவுகளை நினைத்து பார்த்து போராடுவோம் வ…

  6. மன்னாரில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட அரச ஊடகவியலாளர்கள் காணாமல் போனமை தொடர்பில் விசாரனை. [Tuesday, 2013-02-19 17:47:40] மன்னார் மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளர்கள் நால்வருக்கு கடந்த பல மாதங்களாக தொடாந்தும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வந்த நிலையில் இறுதியாக கடந்த மாதம் 16 ஆம் திகதி(16-01-2013) மன்னார் மாவட்ட ஊடாகவியலாளர்கள் 4 பேரூக்கு சியாத் இயக்கம் என்ற பெயரில் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. குறித்த மிரட்டல் கடிதம் 2 அரச ஊடகவியலாளர்களுக்கும்,2 தனியார் ஊடகவியலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த 2 அரச ஊடகவியலாளர்களினது தொடர்புகளும் கடந்த மாசி ம…

  7. விடுதல‌ை‌ப்பு‌லிக‌ள் அமை‌ப்‌பி‌ன் தலைவ‌ர் ‌பிரபாகரன் மக‌ன் ‌வீடியோவை பா‌ர்‌த்த ‌பின்னரே கரு‌த்து தெரிவிக்க முடியும் என முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர். விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் பிரபாகரன் இராணுவ பாதுகாப்பில் இருந்தபோதே கொலை செய்யப்பட்டதாக செனல்4 ஊடகத்தினால் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதனையடுத்து ம‌னித உ‌ரிமைகளை ‌மீ‌‌றிய இல‌ங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜப‌க்ஷவை த‌ண்டி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று த‌மிழக அர‌சிய‌ல் க‌ட்‌சிக‌ள் வ‌லியுறு‌த்‌தி வரு‌கி‌ன்றன. இ‌ந்த ‌நில‌ை‌யி‌ல் செனல்4 ஊடகத்தினால் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் குறித்து செய்தியாளர்கள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கேட்டுள்ளனர். இத‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌‌த்த ஜெயல‌லித…

  8. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன், பாலச்சந்திரன் இராணுவத்தினரிடம் காவலில் இருந்தபோது படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சனல்4 ஊடகம் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் எதுவும் உண்மையில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரானவர்களின் திட்ட மிட்ட செயற்பாடுகளே இவை. நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கில் பொய்யான தகவல்களையும், வதந்திகளையும் திட்டமிட்ட வகையில் பரப்பி வருகிறார்கள். நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலே இராணுவத்துக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கப்படுகின்றன. இக்குற்றச்சாட்டுக்கள் இலங்கைக்கு புதியதல்ல. இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்க…

  9. பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் சுட்டுக்கொல்லப்பட்ட விதத்தை நினைத்துப் பார்க்கும் போதே நெஞ்சம் பிளக்கிறது; ஈரக்குலை நடுங்குகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் சிங்களப் படையினரிடம் சிக்கிய விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் மிகக் கொடூரமான முறையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டதற்கான புகைப்பட ஆதாரங்களை லண்டனிலிருந்து வெளியாகும் தி இண்டிபெண்டண்ட் நாளிதழும், சேனல்-4 தொலைக்காட்சியும் வெளியிட்டுள்ளன. அந்த நாளிதழ் வெளியிட்டுள்ள 4 புகைப்படங்களில் முதல் இரு படங்களில், இலங்கை ராணுவத்திற்கு சொந்தமான பதுங்கு குழியி…

  10. சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மண்டியிட மாட்டார் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஹரிஸ்பத்துவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சில வெளிநாட்டு சக்திகள் இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ என்பது யார் எங்கிருந்து வந்தார் என்பதனை சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெறவுள்ள நிலையில் சில உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் இலங்கைக்கு எதிராக செயற்படுவதில் தீவிரம் காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்க…

  11. உறுப்பு நாடுகளின் வாதப்பிரதி வாதங்களை அடிப்படையாகக் கொண்டே பிரேரணையில் திருத்தங்களை மேற்கொள்வதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் இறுதியானதொரு முடிவை எடுக்கவுள்ளது அமெரிக்கா. ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படவுள்ள பிரேரணையின் நகலை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையை அமெரிக்கா நேற்று முதல் ஆரம்பித்துள்ளது. குறித்த பிரேரணையின் உள்ளடக்கங்கள் தொடர்பில் அங்கத்துவ நாடுகளின் அபிப்பிராயங்களை அறிந்து கொள்வதற்காகவே அமெரிக்கா இந்த நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது. இதன்பிரகாரம் குறித்த பிரேரணையின் உள்ளடக்கங்களை ஆராய்ந்த பின்னர், அதுதொடர்பில் தமது நிலைப்பாட்டை அங்கத்துவ நாடுகள் அமெரிக்காவிடம் இராஜதந்திர மட்டத்தி…

  12. ஈகைப் பேரொளி முருகதாஸ் அவர்களின் 4 ஆண்டு நினைவு நாளில் பிரித்தானியா Harrow நகரில் ஆரம்பமாகிய நீதி கேட்டு ஐநாவை நோக்கிச் செல்லும் "தமிழ் வான்" இரண்டு நாட்களை கடந்து இன்று அதிகாலை 1:30 மணிக்கு பிரான்ஸ் நாட்டுக்குள் நுழைந்திருன்கின்றது. கடந்த இரண்டு நாட்களாக Harrow , London நகரங்களில் " தமிழ் வான்" நடமாடும் கண்காட்சி ஊடாக ஈழத்தமிழர்களின் மீது சிங்கள இனவெறி அரசு முன்னெடுக்கும் இனவழிப்பை பிரித்தானியா மக்களுக்கு எடுத்துரைக்கும் பணியில் ஆரம்பித்திருந்தது. சிங்கள அரசு தமிழ் மக்கள் மீது 65 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு கோணங்களில் முன்னெடுக்கும் இனவழிப்பை எடுத்துரைக்கும் முகமாக கண்காட்சி வைக்கப்பட்டு , காணொளி ஊடாக தமிழ் இன அழிப்பு ஆதாரங்கள் காண்பிக்கப்பட்டது . …

  13. இலங்கை அரசின் இனப்படுகொலை! இந்தியா இன்னும் மௌனம் காப்பது ஏன்? – தொல்.திருமாவளவன் கண்டனம் -- வன்னி அரசு நேரம் Tuesday, February 19th 2013. பிரிவு featured, ஈழம், முதன்மைச்செய்திகள், விடுதலைச்சிறுத்தைகள் 0/0 முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதை உலகம் அறியும். அந்தக் கொடூரம் நடந்து நான்கு ஆண்டுகள் ஆகப்போகும் நிலையிலும் அந்த இனப்படுகொலைக் குற்றவாளிகளான ராஜபக்சே கும்பல் அதிகாரத்தில் நீடித்துக்கொண்டிருக்கிறது. இப்போது பார்ப்பவர்களை நெஞ்சம் பதறவைக்கும் புகைப்பட ஆதாரத்தை சேனல் 4 நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. மேதகு பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் என்ற …

  14. முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஹலால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பொருட்களை எதிர்காலத்தில் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஹலால் விவகாரம் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவிற்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. இதன்போதே இந்த இணக்கம் காணப்பட்டுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஹலால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பொருட்களை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. அத்துடன் ஏனைய மதத்தினருக்கு ஹலால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பொருட்களை வழங்குவதற…

    • 0 replies
    • 537 views
  15. இந்த மாத இறுதியில் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. வின் மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரில், இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு ஐரோப்பிய ஒன்றியம் தனது ஆதரவை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது. ஐரோப்பிய யூனியனின் இந்த முடிவை இராஜதந்திர வட்டாரங்களும் உறுதி செய்துள்ளன. ஐரோப்பிய யூனியனின் இந்த முடிவால் இலங்கை அரச தரப்பு மத்தியில் பெரும் அதிர்வலைகள் கிளம்பத் தொடங்கியுள்ளன. ஐ.நா.வின் மனித உரிமைகள் சபையின் 22 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகி 4 கட்டங்களாக மார்ச் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத் தொடரின் போது அமெரிக்காவினால், இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு அமெரிக்…

  16. சிறிலங்காவுக்கு எதிராக பதினொரு நாடுகள் பிப் 19, 2013 சிறிலங்காவுக்கு எதிராக, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை ஆதரிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. பிரசெல்சில் நேற்று நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில் பொறுப்புக்கூறலையும், நல்லிணக்கத்தையும் வலியுறுத்துவதை இலக்காக கொண்டு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரிக்கும் என்று இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் ஒஸ்ரியா, அயர்லாந்து, ஜேர்மனி, இத்தாலி, ஸ்பெய்ன், சுவிற்சர்ல…

    • 2 replies
    • 689 views
  17. இலங்கைக்கு எதிரான பிரேரணையின் நகலை வெளியிட்டது அமெரிக்கா! – உறுப்பு நாடுகளின் கருத்தறிய முயற்சி!! ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையின் நகலை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகளுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கையை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது. அத்துடன், பிரேரணையின் நகலை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடமும் அமெரிக்கா கையளித்துள்ளது. குறித்த பிரேரணையின் உள்ளடக்கங்கள் தொடர்பில் அங்கத்துவ நாடுகளின் அபிப்பிராயங்களை அறிந்து கொள்வதற்காகவே அமெரிக்கா இவ்வாறு அனுப்பி வருகின்றது. இதன்பிரகாரம் குறித்த பிரேரணையின் உள்ளடக்கங்களை ஆராய்ந்த பின்னர், அதுதொடர்பில் தமது நிலைப்பாட்டை அங்கத்துவ நாடுகள் அமெரிக்காவிடம் தெரிவிக…

    • 5 replies
    • 1.2k views
  18. யாழில். காலாவதியான பொருட்களின் விற்பனை அதிகரிப்பு பிப் 19, 2013 யாழ். மாவட்டத்தில் காலாவதியான பொருட்கள் மற்றும் விலைப்பட்டியல் சட்ட முறைகளை வர்த்தகர்கள் கடைப்பிடிக்க தவறுவதுடன், காலாவதியான பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது’ என்று யாழ். மாவட்ட பாவனையாளர் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி என்.சிவசீலன் தெரிவித்தார். ‘யாழ். நகரப்பகுதி வர்த்தக நிலையங்களில் பரிசோதனை மேற்கொண்ட வேளையில், 18 வர்த்தக நிலையங்களில் காலாவதியான பொருட்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகாமாக அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது’ என்றும் அவர் கூறினார். யாழ். நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்…

  19. ஆறு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பாகிஸ்தான் கடற்படையின் தூதுக்குழுவொன்று இன்று செவ்வாய்கிழமை கொழும்பை வந்தடைந்துள்ளது. நான்கு பேர் கொண்ட இந்த தூதுக்குழுவிற்கு கட்டளை தளபதி மெஹ்பூப் இலாஹி தலைமை தாங்குகின்றார். இரு நாடுகளும் பயங்கரவாத எதிர்ப்பு போரில் தமக்குள்ள அனுபவங்களை பகிர்ந்துகொள்வதே இந்த விஜயத்தின் நோக்கமாகும். இரு நாடுகளுக்கும் இடையில் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற படை அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாகவே இந்த விஜயம் அமைகின்றது. இந்த தூதுக்குழுவினர் இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ஜனத கொலம்பேஜ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்திக்கவுள்ளனர். இதேவேளை இந்த தூதுக்குழுவினர் கிழக்கு மற்றும் தென் கடற் படை தலைமையகங்களுக்கும் விஜயம் ம…

    • 0 replies
    • 387 views
  20. இதுதான் தமிழ்ச் சாதியின் விதியா? சின்னஞ்சிறு பிள்ளைகளையும் படுகொலை செய்த, சிங்களவன் கொடுமையை எதிர்த்துக் கேள்வி கேட்பாரே கிடையாதா? உலகில் நீதியே செத்துவிட்டதா? வைகோ அறிக்கை -- சங்கொலி மதிமுக நேரம் Tuesday, February 19th 2013. பிரிவு featured, மதிமுக, முதன்மைச்செய்திகள் 0/0 நம் இருதயங்களை வெட்டிப் பிளக்கும் துன்பச் செய்தியாக, தமிழ் ஈழ தேசியத் தலைவர், தமிழ்க்குலத்தின் தவப்புதல்வன், மேதகு பிரபாகரன் அவர்களின் இளைய மகன், 12 வயதே நிரம்பிய பாலச்சந்திரன், சிங்கள இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட கோரச் சம்பவத்தை, வீடியோ ஆதாரத்தோடு சேனல் 4 வெளியிட்டு உள்ளது. ஐந்து குண்டுகள் பாலச்சந்திரன் மார்பிலே பாய்ந்து உள்ளன. சண்டை நடந்தபோது, இருத…

  21. முஸ்லிம்களாலும் கிறிஸ்தவர்களாலும் சிங்களவர்களுக்கு அச்சுறுத்தல் – மிரட்டுகிறது பொதுபலசேனா [ திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2013, 05:43 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] ஹலால் உணவைப் புறக்கணிக்குமாறு சிறிலங்காவின் கடும்போக்கு பௌத்த அமைப்பான பொது பலசேனா அமைப்பு கோரியுள்ளது மீண்டும் மதரீதியான பதற்றத்தை உருவாக்கியுள்ளது. மகரகமவில் நேற்று நடந்த பொதுபலசேனா அமைப்பின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சிங்களவர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக வெளியிடப்பட்டுள்ள கருத்து சிறுபான்மையினரிடையே கலக்கத்தை உருவாக்கியுள்ளது. நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்…

  22. இதயத்தை அறுக்கும் ஈழத்து காணொளி! பிப் 19, 2013 முகவரியில்லாமல் வெளியிடப்பட்டிருக்கும் இக்குறும்படம் பிறந்த மண்ணில் முகவரி துறந்து அகதிகளாய் துன்பக்காற்றையே சுவாசித்துக் கொண்டு பாதுகாப்பான இடம் தேடி அலையுயும் இனம்... (காணொளி) http://www.sankathi24.com/news/27152/64//d,fullart.aspx

  23. நிட்டம்புவ பகுதியில் வெள்ளை வேனில் கடத்தப்பட்ட இரண்டு குழந்தைகளின் தந்தை ருவான்வெல்ல புலத்வெல்தெனிய பிரதேசத்தில் சூட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் குறித்த விசாரணைகளை நிட்டம்புவ மற்றும் ருவான்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. இது குறித்து பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவிக்கையில், நிட்டம்புவ அத்தனகலயில் வசிக்கும் 37 வயதான மலித் நிரோஷன என்பவரை நேற்று திங்கட்கிழமை அதிகாலை பாதுகாப்புத் தரப்பினர் என அடையாளப்படுத்திக் கொண்ட சிலர் வெள்ளை வேனில் கடத்திச் சென்றுள்ளனர். கடத்தியவர்கள் மனைவியை காலையில் நிட்டம்புவ பொலிஸ் நிலையத்திற்கு வரும்படியும் கூறிவிட்டுச் சென்றுள்ளனர். காலையில் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கணவ…

    • 0 replies
    • 440 views
  24. சர்வதேச பாடசாலைகளில் தாய்மொழி, சமயம் மற்றும் வரலாறு போன்ற பாடங்களை கற்பிக்கும் வகையில் சட்டங்களை இயற்றுமாறு கல்வியமைச்சருக்கும் கல்வியதிகாரிகளுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார். நாட்டிற்கு பொருத்தமான மற்றும் எதிர்கால் வேலைவாய்ப்புக்கு பொருத்தமான கல்விமுறையை ஏற்படுத்தும் வகையிலேயே சட்டங்களை இயற்றுமாறு ஜனாதிபதி நேற்று ஆலோசனை வழங்கியுள்ளார். கல்வியமைச்சின் செயற்றிடங்களை ஆராயும் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பிள்ளைகள் இருப்பதனால் தான் ஆசிரியர்கள் இருக்கின்றனர்.அதேபோல பிள்ளைகளும் ஆசிரியர்களுக்காகவே இருக்கின்றனர். ஆகையால், நல்ல கல்வியை இந்நாட்டு பிள்ளைகளுக்கு பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் பிரதான இலக்காகும். அதற்காக கல்வித்துறையில் இரு…

    • 5 replies
    • 567 views
  25. LLRC அறிக்கையின் குறைபாடுகள் அம்பலம்! திகைக்கிறது மகிந்த கம்பனி LLRC அறிக்கையின் குறைபாடுகள் அம்பலம்! திகைக்கிறது மகிந்த கம்பனி உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் தேசிய செயற்திட்டத்தில் சில குறைபாடுகள் காணப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ள தீர்மானத்தில் இந்தக் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உத்தேச தீர்மானத்தில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் சகல ஆக்க பூர்வமான பரிந்துரைகளையும் உள்ளடக்கும் வகையில் தேசிய செயற்திட்டம் அமையவில்லை என குறிப்பிட்டுள்ளது. நாட்டின் ஒட்டு மொத்த சனத்தொகைக்கும் மனித உரிமைகள் மற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.