Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Started by shoba,

    “பசுத்தோல் போர்த்திய புலியோ தெரியலயே எதற்கும் எட்டவே நிற்பம்…..!” (பொங்கல் விழாவில் சிங்கள ஜனாதிபதி மகிந்த) http://urumal.com/archives/கருத்துப்படம்

    • 0 replies
    • 420 views
  2. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் விடையம் தொடர்பில் இந்திய அரசு அமைதியான முறையில் இராஜதந்திர ரீதியில் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக யாழ். இந்திய துணைத் தூதுவர் எஸ்.மகாலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். இந்திய தூதரகத்தில் இன்று (16) புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இந்திய அரசாங்கத்தினால் யாழில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ரயில்வே பணிகளில் இந்திய அரசு அர்ப்பணிப்புடன் சேவை செய்து வருகின்றது. யாழ்ப்பாணத்துக்கான யாழ்தேவி இந்த வருடம் செப்டெம்பர் மாதமளவில் வரும். அதற்கான இறுதி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காங்கேசன் துறையிலிருந்து ஓமந்தை வரையான ரயில்பா…

  3. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உயிர்பெறக் கூடிய வகையில் எவ்வித ஆதரவினையும் வழங்கக் கூடாது என ஐ.நா பாதுகாப்புச் சபையிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த வேண்டுகோளை சிறிலங்காவுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் (நியுயோர்க்) நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான பாலித கொஹன விடுத்துள்ளார். ஐ.நா பாதுகாப்புச் சபையின் புதிய ஆண்டுக்கான முதலாவது கூட்டம் நடைபெற்ற போதே இந்த வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுத பலத்தினால் பெற முடியாது போனவற்றை மீண்டும் அவர்கள் பெற்றுக் கொள்வதற்கு மேற்கொள்ளும் எந்த முயற்சிக்கும் இடமளிக்கக் கூடாது. விடுதலைப் புலிகளின் அனுதாபிகளின் செயற்பாடுகள் தொடர்பில் தமது நாடு மிக அவதானத்துடன் உள்ளது. சமா…

  4. கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் அலுவலகத்தை மூடிவிடுமாறு கோரி இன்று கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் அலுவலகத்திலிருந்து கடந்த 13 ஆம் திகதி 350 கிறாம் நிறையுடைய சீ-4 ரக வெடிமருந்துகளும், பல்வேறு ஆவணங்கள் சேமித்து வைக்கப்பட்ட இரு மடி கணனிகளும், ஆபாச வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்ட சீ.டி.க்களும், ஆணுறைகளும் மற்றும் யுவதிகளின் புகைப்படங்களும் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த் ஜயகொடி தெரிவித்திருந்தார். எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொ…

  5. 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கான புகையிரதப்பாதை புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து விடும் என இந்திய துணைதூதுவர் மகாலிங்கம் தெரிவித்தார். யாழ். இந்திய துணைத்தூதரகத்தில் இன்று இடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்திற்கான புகையிரதப்பாதை புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த ஆண்டின் செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் பணிகள் முற்றுப்பெற்று விடும். அதற்கான பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. பாதை தண்டவாளங்களுக்கிடையில் உள்ள இடைவெளிகள் இல்லாமல் மிகவும் உயர்த்தொழில்நுட்பத்துடன் கூடிய முறையில்…

  6. புதிய நீதியரசர் மீது இலஞ்ச ஊழல் குற்றச் சாட்டு January 16, 2013, 6:13 am|views: 112 நேற்றையதினம் புதிய பிரதம நீதியரசராக பதிவியேற்ற மொஹான் பீரிஸிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மற்றும் மோசடி விரோத குரல் அமைப்பு ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்கவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டமா அதிபராக இருந்த காலத்தில் மொஹான் பீரிஸ் 75 லட்சம் ரூபாய் முறைகேடு சம்பவம் ஒன்றில் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், மொஹான் பீரிஸ் குறித்து உடனடி விசாரணை நடாத்துமாறு வசந்த சமரசிங்க தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். புதிய பிரத…

  7. மன்னாரில் வெள்ளத்தால் பாதிப்புற்ற 56 மாணவர்களுக்கான அவசர உதவி தேவை. மன்னாரில் தேனுடையான் பாப்பாமோட்ட கிராமங்களைச் சேர்ந்த 56 பள்ளி செல்லும் மாணவர்களுக்கான கற்கை உபகரணங்களுள் சப்பாத்துகள் உள்ளிட்ட அடிப்படை உதவிகள் கோரப்பட்டுள்ளது. மேற்படி மாணவர்களின் குடும்பங்கள் யாவும் யுத்தத்தால் பாதிப்புற்று மிகவும் வறிய நிலமையில் உள்ளனர். திறமையான மாணவர்களைக் கொண்டிருந்தும் பாடசாலை செல்ல வசதியற்று பாடசாலை செல்ல முடியாத நிலமையில் இருக்கின்றனர். இந்த 56 மாணவர்களின் கல்வித்தரத்தை முன்னேற்றும் முகமாக கையொன்றையும் இழந்து மறுகையின் விரல்களையும் , ஒரு கண்பார்வையையும் யுத்தத்தில் இழந்த ஒருவரும் அவரது மனைவியும் இலவச மாலைநேர வகுப்புக்களை நடத்தி வருகின்றனர். போரால் பாதிப்புற்ற இக்குட…

    • 2 replies
    • 418 views
  8. மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர் தேர்வில் 9 வயதே ஆன தமிழகத்தைச் சேர்ந்த பிரணவ் கல்யாண் என்ற மாணவர் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார். மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஏ.எஸ்.பி. டாட். நெட் பிரிவில் (ASP.NET), அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநருக்கான தேர்வை கடந்த 12ம் திகதி நடத்தியிருந்தது. கம்ப்யூட்டர் பட்டதாரிகள்தான் பொதுவாக இத்தேர்வை எழுதுவது வழக்கம். ஆனால் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 4ம் வகுப்புப் படிக்கக் கூடிய 9 வயதே ஆன பிரணவ் கல்யாணும் தேர்வு எழுத அனுமதி கிடைத்தது. இத்தேர்வு எழுதியதுடன் மட்டுமின்றி சிறுவன் பிரணவ் வெற்றியும் பெற்று சாதனை படைத்துள்ளார். சாதனை நாயகனான பிரணவ்-ன் தந்தை கல்யாண், தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் ஜல்…

  9. தனது வீட்டுத் தோட்ட பலாமரத்திலிருந்த இரண்டு பலாக்காய்களை திருடிச் சென்றதாக பொலிஸ் அத்தியட்சகரான சுனில் விஜேசேகர, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில், சந்தேகநபர்கள் இருவரைக் கைது செய்த பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததை அடுத்து அவ்விருவரையும் பிணையில் செல்ல ஹொரணை நீதவான் அனுமதி வழங்கினார். அத்துடன், திருடப்பட்டதாகக் கூறப்படும் இரு பலாக்காய்களையும் பெற்றுச் செல்வதற்காக நாளை மறுதினம் 18ஆம் திகதி நீதிமன்றத்துக்கு வருமாறு பொலிஸ் அத்தியட்சகருக்கும் நீதவான் அழைப்பு விடுத்துள்ளார். மில்லாவ, கிதெல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இறப்பர் பால் வெட்டும் இருவரே இவ்வாறு பலாக்காய்களைத் திருடியதாக மேற்படி பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸில் முறைப்பாடு செய்…

  10. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ தலைமையில், இன்று புதன்கிழமை அலரி மாளிகையில் வருடாந்த பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதன்போது இடம்பெற்ற இந்துமத கலாசார நிகழ்வுகளையும் விழாவில் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம். (படங்கள் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு) http://tamil.dailymirror.lk/--main/57050-2013-01-16-16-02-17.html

  11. இலங்கையில் தலைமை நீதிபதி மீது குற்றம் சாட்டி அவர் பதவி விலக்கப்பட்ட பின்னர், புதிய நீதிபதியாக மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டார். அவரது நியமனம் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ள சர்வதேச நீதித்துறை ஆணைக்குழு, இந்தச் சம்பவம் இலங்கையின் நீதித்துறையைக் கேள்விக் குறியாக்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. மொஹான் பீரிஸ் முன்னர் இலங்கையில் நீதித்துறையில் பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளார். இருந்தாலும், அவர் ஆளும் அரசைப் பாதுகாப்பதில் முக்கியக் கூட்டாளியாகச் செயல்பட்டவர். இலங்கையில் சட்டத்துறை அதிகாரியாகவும், இலங்கை அதிபரின் சட்ட ஆலோசகராகவும் இருந்துள்ளார். அந்தக் காலங்களில், இலங்கை அரசுக்கு எதிராகக் கூறப்பட்ட மனித உரிமை மீறல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் இருந்து அரசைக் காப்ப…

  12. பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் பதவியை பறித்ததன் மூலம் அரசாங்கம் உயர் நீதிமன்றத்தின் கன்னித் தன்மையை பறித்தள்ளது என்று ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டாளர் தம்பர அமில தேரர் தெரிவித்தார். நீதிமன்றத்தின் சுயாதீனம் பறிக்கப்பட்டமையானது இறுதிக்கட்ட யுத்த மரணங்கள் தொடர்பில் ஐ.நா. சர்வதேச விசாரணைக் குழுவை அமைக்கும் நிலைமையை தோற்றுவித்துள்ளதாகவும் தேரர் தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=73973&category=TamilNews&language=tamil

  13. மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா சென்ற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்தவாரம் கொழும்பு திரும்பியதும், அமெரிக்கப் பயணம் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த இரண்டு மாதங்களாக தமிழ்நாட்டில் தங்கியுள்ளார். இதன்போது அவருக்கு இரண்டு கண்களிலும் புரைநீக்க சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது குணமடைந்துள்ள அவர் நாளை சிறிலங்காவுக்குத் திரும்பவுள்ளதாகவும், வெள்ளியன்று திருகோணமலை ஆலடி வினாயகர் ஆலய புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கவுள்ளதாகவும் திருகோணமலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, வொசிங்டனுக்கு வருமாறு தமிழ்த் தேசியக் க…

  14. சிறிலங்கா அரசாங்கம் தனது மூலோபாயத்தின் படியே தொடர்ந்து நடக்குமேயானால், இன்னும் சில ஆண்டுகளில் இன்னொரு போராளிக்குழு உருவாகும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எச்சரித்துள்ளார். அடிப்படைவாத போகோ ஹராம் குழுவின் தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நைஜீரியாவின் தலைநகர் லாகோசில் இருந்து வெளியாகும், AYO OKULAJA இதழுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவரது செவ்வியின் முக்கிய பகுதிகள் வருமாறு “தமிழ்ப் புலிகளுக்கு எதிரான மகிந்த ராஜபக்சவின் தாக்குதல் இப்போது அனைத்துலக சமூகத்தில் மிகப் பெரிய விவகாரமாக உள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை அதை இன்னமும் விசாரித்துக் கொண்டிருக்கிறது. நாம் போரை முடிவுக்கு கொண்டு வந்த போதிலும், வே…

  15. நேசக்கரம் 2012 க.பொ.த.சாதாரண மாணவர்களுக்கான பயிற்சிநெறி தயார்படுத்தல் கணக்கறிக்கை. நேசக்கரம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு பிரதேசங்களில் வாழும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் மாணவர்களுக்கான கற்பித்தல் கையேடுகள் , வினாத்தாழ்கள் வழங்கி பாடங்களில் உயர்ந்த பெறுபேறுகளைப் பெறுவதற்கான வேலைத்திட்டங்களை கடந்தவருடம் முன்னெடுத்திருந்தோம். இம்முயற்சியில் 2012 க.பொ.த.சாதாரணதர மாணவர்களுக்கான கையேடுகள் மாதிரி வினாத்தாழ்களைத் தயாரித்து 78பாடசாலைகளிலிருந்து 7500மாணவர்களுக்கான முன்னோடி தயார்படுத்தல்களை நேசக்கரம் கல்விக்குழுவினர் மேற்கொண்டிருந்தனர். அத்தோடு 4பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மாணவர்களை இணைத்து இலவச கருத்தங்குகளையும் நடாத்தியிருந்தோம். எமது இம்முயற்சிக்…

  16. தலைமைநீதியரசரை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பதவிநீக்கம் செய்த விவகாரத்தினால், கொமன்வெல்த் மாநாட்டை கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் புறக்கணிக்கும் விவகாரம் சூடுபிடித்துள்ளது. சிறிலங்காவில் மனிதஉரிமைகள் நிலை முன்னேற்றமடையாது போனால், இந்த ஆண்டு இறுதியில் சிறிலங்காவில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாக, கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்தநிலையில், சிறிலங்காவின் தலைமைநீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பதவி நீக்கம் செய்துள்ளது அனைத்துலக அளவில் கடும் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், நாட்டின் அரசியல…

  17. அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் மேய்ச்சல் தரைக்கு என்று ஒதுக்கப்பட்ட 4000 ஏக்கர் நிலத்தில் சிங்களவர்களின் அத்துமீறிய குடியேற்றங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக கால்நடைப் பண்ணையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். ரூபஸ்குளம் மற்றும் வம்மியடிக்குளம் ஆகியவற்றுக்கிடைப்பட்ட இந்த 4 ஆயிரம் ஏக்கர் காணி, 17.06.1976 நாள் வெளியிடப்பட்ட சிறிலங்காவின் அரச வர்த்தமானியில் மேய்ச்சல் தரைக்கென ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரசுரிக்கப்பட்டது. 1974 ஆம் ஆண்டில் அப்போதைய அரசாங்க அதிபர் இந்தக் காணி மேய்ச்சல் தரைக்கும் நல்ல புல்லின வளர்ப்புக்கு மாத்திரமே பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதனை மீறி, மேய்ச்சலுக்கு ஒதுக்கப்பட்ட இந்தக் காணிகளை ஆரம்பத்தில் மு…

  18. "உலகிலுள்ள மொழிகளில் மிகத் தொன்மையானதும் இன்று வரை தொடர்ந்து நிலைத்து நிற்பதும் எமது தாய் மொழியான தமிழ் மொழியாகும். திராவிட மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி தமிழ். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே முதற் சங்கம் இடைச் சங்கம் கடைச் சங்கமென முச்சங்கங்கள் அமைக்கப்பட்டு பேணி வளர்க்கப்பட்டது தமிழ் மொழி. தமிழ் மறையெனப் போற்றப்படும் திருக்குறள் உலகப் பொது நூலாகக் கருதப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இத்தகைய பெருமைக்குரிய தமிழ் மக்களுக்கு தனியான நாடு ஒன்று இல்லாதிருப்பது வேதனைக்குரிய தாகும். தமிழருக்கென தனி நாடொன்றினை அமைப்பதே நாடு கடந்த தமிழீழ அரசின் குறிக்கோளாகும். தாயகத்தில் எமது அடையாளங்களை அழித்து விட சிங்கள அரசு முயன்று வருகின்றது. இவ்வேளை யில்…

  19. By L.Thev வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தவே பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியும் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஒழுங்கிலேயே திவிநெகும கடந்த இரண்டு வருடங்களின் முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. தற்போது திவிநெகும திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார். மண்முனைப் பற்று பிரதேச செயலகத்தின் வறுமையற்றதோர் இலங்கை தேசம் தொனிப்பொருளிலான விசேட அறிவூட்டல் செயலமர்வில் தலைமையுரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். மண்முனைப் பற்று பிரதேச செயலகத்தின் வறுமையற்றதோர் இலங்கை தேசம் விசேட கூட்டம், இன்று புதன்கி…

  20. தொப்புள் கொடி உறவான இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்களும் கடற்றொழில் சங்கங்களும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி இந்த இரு நாட்டு மீனவர் பிரச்சனைகளும் விரைவில் தீர்க்கப்படவேண்டும் என யாழ். இந்திய துணைத்தூதுவர் மகாலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். இந்திய துணைத்தூதரகத்தில் இன்று இடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்., தற்போது இலங்கை - இந்திய மீனவர்களது பிரச்சனை பெரிய பிரச்சினையாக உள்ளது. மீனவர்களது பிரச்சினைகளுக்கு நாங்கள் காரணமானவர்கள் அல்ல. இலங்கையின் எல்லைக்குள் வந்து தொழில் செய்யுங்கள், அங்கே தான் மீன்வளம் நிறைய இருக்கின்றது என்று அவர்களுக்க…

  21. மன்னார் ஊடகவியலாளர்களுக்கு மிரட்டல் இலங்கையின் வடமேற்கே மன்னாரில் உள்ள உள்ளுர் செய்தியாளர்கள் மூவருக்கு கடிதம் மூலமாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. சியாத் இயக்கம் என்ற பெயரில் இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருக்கின்றது. பலமுறை எச்சரிக்கை விடுத்தும், அதை பொருட்படுத்தாமலும், இறைவனை மதியாமலும் செயற்படுவதினால் இறுதி எச்சரிக்கை என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் கெட்ட பெயர் ஏற்படுத்த, நீதிமன்றத்திற்கு சார்பாகவும், அரசாங்கத்திற்கு விரோதமாகவும் செய்திகளை எழுதியது, அமைச்சர் ரிசாத் பதியுதீனை நீதிமன்றத் தாக்குதலுடன் தொடர்புபடு…

  22. இலங்கை தமிழ் அகதிகள் முகாமில் வசிக்கும் பெண்களை கியூ பிரிவு பொலிஸார் பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து சி.பி.சி.ஐ.டி பொலிஸார் விசாரணை நடத்தவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: செங்கல்பட்டு சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்து, சாதாரண முகாம்களில் உள்ள தங்கள் சொந்தங்களுடன் வாழ அனுமதிக்கக் கோரி ஈழத்தமிழ் சொந்தங்கள் 9 பேர் 24 நாட்களாக பட்டினிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். முகாம்களில் வாழும் பெண்களை புணர்ச்சிக்கு அழைப்பது, அவர்கள் எதிர்க்க…

  23. கொலைகாரர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர் தலைவனாக மகிந்த- சந்திரிக்கா குற்றச்சாட்டு Published on January 16, 2013-8:23 am · No Comments சிறிலங்கா அரசியல் மிகவும் கீழ்மட்டத்தில் இருப்பதாக முன்னாள் அரசுத்தலைவர் சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார். முன்னாள் தலைமையமைச்சர் சிறிமாவோ பண்டாரநாயக்க நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் தற்போதைய உயர் தலைவர்கள், போதைப் பொருள் கடத்துபவர்களுக்கும், குற்றவாளிகளுக்கும் பின்புலமாகச் செயற்படுவதுடன், அவர்களைத் தட்டிக் கொடுத்து வருவதாக சந்திரிகா குறிப்பிட்டுள்ளார். சிறிலங்காவின் அரசியல், மிகவும் கீழ்மட்டத்தில் இடம்பெறுகின்றது என்று தெரிவித்துள்ள அவர், சகல உரிமைகள், ஜனநாயகம் என்பன மிருகத்தனம…

  24. உருத்திரகுமாரனின் சகாவிற்கு மகிந்தவின் அரசாங்கத்தில் ஆலோசகர் பதவி! ஜன 16, 2013 கே.பியால் உருவாக்கப்பட்ட நாடுகடந்த அரசாங்கத்திற்கு தலைமை தாங்கும் விசுவநாதன் உருத்திரகுமாரனின் சகாவான நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்திற்கு மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 1952ஆம், 1956ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளிலும் 1959ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இலங்கை அணியின் தடகள வீரராகக் கலந்து கொண்ட எதிர்வீரசிங்கம் பின்னர் அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து அங்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக தமிழ் மக்களிடையே வெளிப்பாட்டார். கே.பியின் தலைமையில் அனைத்துலக செயலகம் இயங்கிய 1990களில் இவரையும், உருத்திரகுமாரனையும் தமிழீழ விடுதலைப் ப…

  25. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அடுத்தவாரம் புதுடில்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தில் இந்திய அரசினால் சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக புதுடில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை இந்திய - சிறிலங்கா கூட்டுக் குழுக் கூட்டத்திலும் பீரிஸ் பங்கேற்கவுள்ளார். இந்தக் கூட்டத்தில், சிறிலங்கா குழுவுக்கு ஜி.எல்.பீரிசும், இந்தியக் குழுவுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித்தும் தலைமை வகிக்கவுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=73977&category=TamilNews&language=tamil

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.