ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143431 topics in this forum
-
இரு அரசுகள் தீர்வுமுறையே எமக்கும் சிங்கள மக்களின் நலன்களுக்கும் உகந்தது! பிரதமர் ருத்ரகுமாரன் [ செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 09:41.41 AM GMT ] இன்று மலரும் 2013 ஆம் புதிய ஆண்டினை உலகம் நம்பிக்கையுடன் வரவேற்றுக் கொண்டாடும் இத்தருணத்தில் தமிழீழ மக்களுக்கும் தமிழ்நாடு மற்றும் உலகம் முழுதும்வாழ் தமிழ் மக்களுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் எனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்வடைகிறேன். கடந்த வருடம் 2012 ஆண்டு மலர்ந்தபோது நான் விடுத்திருந்த செய்தியில் 2012 ஆம் ஆண்டு நமக்கு ஒரு முக்கியமான ஆண்டாக அமையும் எனத் தெரிவித்திருந்தேன். நடந்து முடிந்த 2012ம் ஆண்டு அனைத்துலக அரங்கில் சிறிலங்கா அரசாங்கம் சவால்களையும் நெருக்கடிகளையும் சந்தி…
-
- 0 replies
- 387 views
-
-
2013ம் ஆண்டாணது ஈழத்தில் வாழும் எமது இனத்தின் ஒரு நிரந்தர தீர்விற்கான ஆண்டாகவும், இதுவரை உயிரிழந்த உறவுகளின் ஆத்ம விருப்பிற்கு விடை தேடும் ஆண்டாகவும் அமைய அனைத்துத் தமிழ் அமைப்புக்களும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டுமெனக் கனடிய மனிதவுரிமை மையம் உளப்பூர்வமாகக் கேட்டுள்ளது. 2012ம் ஆண்டு எங்களிற்கு கற்றுத்தந்த பாடமாக அமைந்ததே, உலக ஓட்டத்தின் இன்றைய போக்கின் முக்கிய மாற்றமாகக் கருதப்படும் ஐக்கியநாடுகள் அவையின் உள்ளக அறிக்கை 2009ம் ஆண்டைய முள்ளிவாய்க்கால் அவலத்தில் அதன் அசமந்தப் போக்கினைச் சுட்டிக் காட்டிச் சென்றது என்பதைச் சுட்டிக் காட்டிய கனடிய மனிதவுரிமை மையம், இந்தக் குற்றச் செயலிலிருந்தும், குற்ற உணர்விலிருந்தும் ஐக்கிய நாடுகள் அவையோ அல்லது சர்வதே…
-
- 0 replies
- 292 views
-
-
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை புரிந்து கொள்ள முடியவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதிகாரப் பகிர்வு மற்றும் 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் அரசாங்கம் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத் தெரிவுக்குழு முறைமை தொடர்பில் உடன்பாடு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சுயாதீனமாக பேச்சுவார்த்தை நடாத்த முடியாத நிலையில் பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் எவ்வாறு நம்பிக்கைக் கொள்வது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு எவ்வாறு அதிகார…
-
- 1 reply
- 273 views
-
-
FOR IMMEDIATE RELEASE Joint New Year Message from Tamil Organizations and Entities World-wide, Supporting Tamils in Sri Lanka January 01, 2013 On this New Year’s Day, January 1, 2013, the Tamil organizations around the world pledge their renewed commitment to work together to bring justice, peace and dignity to our Tamil people living in the island of Sri Lanka. We also pledge to lend our support and assistance to any organizations or entities that work for the rights of the Eelam Tamils living in the island. With our diverse backgrounds, we are united in voicing for our people who have been oppressed by the Sri Lankan State for decades, and subjected to pogroms, wa…
-
- 0 replies
- 374 views
-
-
இலங்கை இராணுவத்திற்கு இந்த ஆண்டு உள்ளூர் மற்றும் சர்வதேச மட்டங்களில் வழங்கப்படும் பயிற்சிகளுக்கான வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். என்று இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இராணுவத்திற்கான உள்ளூர் மற்றும் சர்வதேச மட்டங்களில் அளிக்கபடும் பயிற்சி வாய்ப்புகளை அதிகரிக்கப்படும். 'தனிப்பயிற்சி , படையணி பயிற்சி, கூட்டு இராணுவ பயிற்சிகள், சர்வதேச பயிற்சி , மொழி பயிற்சி ஆகிய பயிற்சிகளே அதிகரிக்கப்படும் என்றார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/55996-2013-01-01-14-09-13.html
-
- 1 reply
- 350 views
-
-
தமிழ் மக்களால் அச்சத்துடன் வரவேற்கப்படும் 2013 01 ஜனவரி 2013 குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யாழ் இருந்து ஆனந்தர் எழுதுவது உலக பொருண்மிய இயக்கத்தினை மிகவும் ஆழமாக அவதானிப்பதால் சில எதிர்வு கூறல்களை துல்லியமாகக் கூறலாம். அந்த வகையில் ஈழத்தமிழர் அரசியல் பிரச்சினையினை நோக்கும் போது, அரசியல் தீர்வினை நோக்கி நகருவதற்கு முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. இதில் இலங்கை அரசிற்கு அழுத்தம் தரும் இந்திய அரசின் பலமும், புலம் பெயர் தமிழ்ச்சமூகத்தின் பலமும் ஒன்றுக்கொன்று சமனாகவும் எதிர்நேர் திசைகளாகவும் அமைந்து உள்ளன. இலங்கை அரசு சர்வதேச ரீதியில் இனப்டுகொலைக் குற்றச்சாட்டில் இருந்து மீளவும் இந்தியாவின் இராணுவக் கூட்டிற்குள் செல்லவும், சீனாவின் கடன் சுமைகளில் இருந்து வ…
-
- 1 reply
- 472 views
-
-
விடுதலை வேண்டி தொடர்ச்சியாக போராடும் எம் தாயக மக்களினதும் ஏற்றத்தாழ்வுகளுக்குட்படுத்தபட்டு நீதி மறுக்கப்பட்டு உலகெங்கும் வாழும் பல கோடி ஒடுக்கப்பட்ட மக்களினதும் நீதிக்கான போராட்டம் இப் புத்தாண்டில் வலுப் பெற வேண்டும். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் ஜனநாயக வழியில் வலுப்பெற்ற போது பிரிவினைவாதமாக பரப்புரை செய்து ஆயுதமுனையால் ஒடுக்கிய சிங்கள தேசம் தாங்கொணாத ஒடுக்குமுறையினால் ஆயுதப்போராட்டமாக அதன் இயல்பான தொடர்ச்சியை எட்டியபோது பயங்கரவாதப் போரட்டமாக சித்தரித்து உலக நாடுகலுடன் கூட்டணி அமைத்து மிருகபலத்தை பிரயோகித்து அதனையும் சிதைத்தது. ஒடுக்குமுறை தொடரும்வரை ஒடுக்கபட்டோரின் போராட்டமும் தொடரும் என்ற மனித வரலாற்றை சிங்கள தேசம் பார்க்க மறுக்கின்றது. அது முன்வைக்கும் போலியான த…
-
- 0 replies
- 353 views
-
-
யாழ். பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பாக நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் கலைப்பீடத்தை இம்மாத நடுப்பகுதியில் ஆரம்பிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. நேற்றுக் காலை கலைப் பீடத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலியே இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவினை பல்கலைக்கழகத்தின் மூதவையினருக்கு அவர்களது முடிவுக்கமைய இப் பீடத்தினை ஆரம்பிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட மாணவர்களில் நால்வர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இப்பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/a…
-
- 0 replies
- 363 views
-
-
வெளிநாட்டு நிறுவனங்கள் கடன்களை செலுத்தாமல் வெளியேறி விட்டன; தொழில் அமைச்சர் இலங்கையில் கடனைப் பெற்று முதலீடு செய்து வந்த வெளிநாட்டு நிறுவனங்கள் பல கடனைச் செலுத்தாது நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி இலங்கையில் உள்ள முதலீட்டு சபையின் அனுமதியுடன் வர்த்தக முயற்சிகளை மேற்கொண்ட சுமார் 10ற்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்கள், இலங்கையின் அரச வங்கிகளில் பெற்ற சுமார் 5000 மில்லியன் ரூபாய்களை திருப்பிச் செலுத்தாமல் நாட்டில் இருந்து வெளியேறிவிட்டதாக தொழில் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். எனினும் முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தன காலத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கையில் உள்ள அரச வங்கிகளில் கடன்களை பெறும் நடைமுறையில், கட்டுப்பாடுக…
-
- 1 reply
- 671 views
-
-
இன்று பிறக்கும் இப்புத்தாண்டில் எமது தாய் நாடு ஜனநாயகம், மக்கள் மத்தியிலான சமத்துவம் மற்றும் அபிவிருத்தி அம்சங்களில் மிக முக்கியமான முன்னேற்றங்களை காணும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது: சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் அபிவிருத்தி பணிகளில் பாரிய முன்னேற்றங்களை அடைந்த ஒரு நாடாகவும் பல்வேறு சவால்களுக்கு வெற்றிகரமாக முகம்கொடுத்த ஒரு நாடாகவும் நாம் இந்த புதிய ஆண்டில் காலடி எடுத்துவைக்கின்றோம். அதே போன்று உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மக்களின் நம்பிக்கையை வென்ற ஒரு தேசமாகவும் நாம் இந்த புத்தாண்டில் காலடி எடுத்துவைக்கின்றோம். எனவே, இன்று பிறக்கும் இப்புத்தா…
-
- 0 replies
- 784 views
-
-
கடந்த அன்று வடமராட்சி கிழக்கில் சுனாமி அனர்த்த நிகழ்வு கொண்டாடப்பட்டது. அப்போது பலர் தமது உறவுகளின் கல்லறைக்கு பூக்களை வைத்து அஞ்சலி செய்தனர். இது மார்கழி மாதம் என்பதாலும் இப்பகுதியில் பூக்கள் கிடைப்பது குறைவு என்பதாலும் மக்கள் பலர் கார்த்திகை பூவை வைத்து அஞ்சலி செய்தனர். இதன்போது சுனாமி துயிலுமில்லத்தினுள் நுழைந்த இராணுவ புலனாய்வாளர்கள் கார்த்திகை பூ வைத்த அனைத்து தமிழ் உறவுகளையும் அந்த இடத்தில் வைத்தே விசாரணை செய்துள்ளனர். இது மட்டுமல்லாமல் பலரை தொடர்ந்தும் விசாரணை செய்தும் அடிக்கடி தமது அலுவலகத்துக்கு வரும்படியும் கூறுகின்றனர். இதில் வேதனை என்னவென்றால் சுனாமியின் போது தனது தாய்,சகோதரிகள்,மற்றும் பல உறவுகளை இழந்த ஒரு இளைஞன் அந்த கல்லறையின் மீது அழுது புலம…
-
- 1 reply
- 223 views
-
-
பொதுபல சேனா எச்சரிக்கிறது.. ஹலால் இலச்சினையை பெற்றுக்கொள்வதற்காக பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, உலாமக்கள் அமைப்பு ஆகியவற்றுக்கு செலுத்தும் பணம், சர்வதேச பயங்கரவாதிகளின் நிதியத்தில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக பொதுபல சேனா நேற்று குற்றம் சுமத்தியுள்ளது. அல்-குவைதா, ஹமாஸ் போன்ற சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுக்கு இந்த பணம் கிடைப்பதாகவும் இது குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலைமை காரணமாக தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் ஹலால்; இலச்சினை மூலம் கிடைக்கும் பணம் கு…
-
- 1 reply
- 719 views
-
-
விடுதலை வேண்டி தொடர்ச்சியாக போராடும் எம் தாயக மக்களினதும் ஏற்றத்தாழ்வுகளுக்குட்படுத்தபட்டு நீதி மறுக்கப்பட்டு உலகெங்கும் வாழும் பல கோடி ஒடுக்கப்பட்ட மக்களினதும் நீதிக்கான போராட்டம் இப் புத்தாண்டில் வலுப் பெற வேண்டும். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் ஜனநாயக வழியில் வலுப்பெற்ற போது பிரிவினைவாதமாக பரப்புரை செய்து ஆயுதமுனையால் ஒடுக்கிய சிங்கள தேசம் தாங்கொணாத ஒடுக்குமுறையினால் ஆயுதப்போராட்டமாக அதன் இயல்பான தொடர்ச்சியை எட்டியபோது பயங்கரவாதப் போரட்டமாக சித்தரித்து உலக நாடுகலுடன் கூட்டணி அமைத்து மிருகபலத்தை பிரயோகித்து அதனையும் சிதைத்தது. ஒடுக்குமுறை தொடரும்வரை ஒடுக்கபட்டோரின் போராட்டமும் தொடரும் என்ற மனித வரலாற்றை சிங்கள தேசம் பார்க்க மறுக்கின்றது. அது முன்வைக்கும் போலியான தீ…
-
- 0 replies
- 222 views
-
-
இலங்கையில் பிரதம நீதியரசருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள குற்றவியல பிரேரணை நடைமுறைகள் மற்றும் சட்டத்தரணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுயாதீனம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி கெப்ரில்லா நோல் இந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளார். சுயாதீன தகவல்களின்படி இலங்கையில் கடந்த காலங்களில் சட்டத்துறையினர் மீது அச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. அத்துடன் அவர்களின் பணிகளில் அரசியல்வாதிகள் தலையிடும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. இலங்கையின் நீதித்துறை அரசியல் மயப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது களையப்பட்டு நீதித்துறை சுயாதீனப்படுத்தப்பட வேண்டும். …
-
- 0 replies
- 403 views
-
-
அமெரிக்க ஜனாதிபதிக்கு கருத்துக்கள் நேரடியாக சென்றடையும் வகையில் வெள்ளை மாளிகை நிர்வாகத்தால் ஆரம்பிக்கப்பட்ட "We the People" என்ற இணையத்தளத்துக்கு மனுக்கள் சென்றடைந்ததன் பின்னரே இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்காவின் கரிசனை அதிகரித்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இணையத்தளம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது. ஒரு வயதாகியுள்ள இந்த இணையத்தளத்துக்கு முதல் மாதத்திலேயே 25 ஆயிரம் கையொப்பங்களுடன் கூடிய மனுக்கள் அனுப்பப்பட்டன. அமரிக்க அஞ்சல் திணைக்களத்தினால் பதிவுசெய்யப்படும் இந்த மனுக்களில் பெரும்பாலானவற்றுக்கு ஜனாதிபதி ஒபாமாவின் நிர்வாகத்தில் இருந்து பதில்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த இணையத்தளத்துக்கு இலங்கையி…
-
- 0 replies
- 264 views
-
-
அரசாங்க நாட்காட்டியில் பௌர்ணமி தினங்கள் வர்த்தக விடுமுறையாக அறிவிக்கப்படவில்லை என உள்ளக நிறுவன ஊழியர் சங்கங்களின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்த சமரசிங்க தெரிவித்தார். இதேவேளை பொதுபல சேனா அமைப்பு இதே குற்றாச்சாட்டை முன்வைத்துள்ளது. பௌத்த மக்கள் செறிந்து வாழும் இலங்கையில், பௌத்தர்களுக்கு முக்கியமான பௌர்ணமி தினங்கள் இதுவரை காலமும் வர்த்தக விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், 2013ம் ஆண்டு அரச நாட்காட்டிகளில் பௌர்ணமி தினங்கள் பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்ட போதிலும், வர்த்தக விடுமுறைகளாக அறிவிக்கப்படவில்லை என பொதுபல சேனா அமைப்பு ஊடக அறிக்கை மூலம் குற்றம் சுமத்தியுள்ளது. எனினும், ஏனைய மதங்களுக்கு முக்கியமான தினங்கள் பொது விடுமுறையாக அற…
-
- 0 replies
- 596 views
-
-
2001ம் ஆண்டு முதல் வவுனியாவின் இராணுவத் தளபதியாகவும் இறுதி யுத்தத்தின் போது வன்னியில் பிரதான பங்கை வகித்தவருமான பிரிகேடியர் ரவி ரட்ணசிங்கம் கனடா, அமெரிக்காவிற்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருப்பதாகத் தெரியவருகிறது. இறுதி யுத்தத்தில் இறந்தவர்களின் தொகை 80,000 எட்டும் என்றும் ஐக்கிய நாடுகள் அவை இந்தப் படுகொலையைத் தடுக்கத் தவறிவிட்டதென்றும் குற்றஞ்சாட்டுக்கள் எழும் இந்தவேளையில், மேற்படி யுத்தத்தில் பணியாற்றிய ஒரு பிரதான தளபதி போர்க்குற்றச்சாட்டுகளைத் தவிர்த்து அமெரிக்கா, கனடாவிற்கு தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டது பலரதும் புருவத்தை உயர வைத்துள்ளது. போரின் பின்னர் கிளிநொச்சியில் புனர்நிர்மாணப் பணிகளையும் மேற்பார்வை செய்துவரும் பிரிகேடியர் ரவி ரட்ணசிங்கம், கனடாவில் உள்ள பல…
-
- 1 reply
- 597 views
-
-
கடந்த ஆண்டில் ஒரு பிரசையின் கடன் : 245,980 (USD1892) தற்பொழுது உள்ள கடன் : 308, 171 (USD 2371) அதிகரித்த வீதம் : 25 % நாட்டின் மொத்த கடன் , 2012 : Rs 5133 Billions நாட்டின் மொத்த கடன் , 2013 : Rs 6289 Billions மொத்த தேசிய உற்பத்தியில் கடன்:6.44 % http://www.dailymirror.lk/business/other/24487-every-lankan-shoulders-rs300-000-debt-cbsl-data-.html
-
- 8 replies
- 991 views
-
-
இதழ்களில் வரும்நேர்காணல்,திரைவிமர்சனம்,கட்டுரை,செய்திப்பதிவு,துணுக்கு போன்ற ஏதாவது ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதனை தனித்தனியாக, ஊர் பாஷையில் சொல்லப் போனால், அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராயும் போஸ்ட்மார்ட்டம் பகுதிக்கு நாம் இந்த வாரம் (07-11-2012) தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த நேற்று நான் விடுதலைப் போராளி இன்று நான் பாலியல் தொழிலாளி ஒரு பெண் போராளியின் வாக்குமூலம் என்ற தலைப்பில் மாணவ நிருபர் ம.அருளினியன் செய்ததாக வெளிவந்திருக்கும் ’நேர்காணலை’ எடுத்துக் கொள்வோம். அது இது தான். 30 ஆண்டுகாலம் ஈழத்தில் நடைபெற்ற இன விடுதலைப் போராட்டம் குறித்தும்,தற்பொழுது அது எதிர்நோக்கியுள்ள நிலை குறித்தும் அதில் பங்கு பெற்ற ஒரு 'போராளி' இப்பொழுது அனுபவிக்கும் துயர…
-
- 22 replies
- 4.9k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தத்துவாசிரியர் அமரர் அன்ரன் பாலசிங்கத்தின் பாரியார் அடல் பாலசிங்கம் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அடல் பாலசிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர் எனவும், பெண் புலிகளுக்கான தலைமைப் பொறுப்பாளராக கடமையாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 10 வயது சிறுமிகளுக்கு பயிற்சிகளை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிறுவர் போராளிகளின் கழுத்தில் அடல் பாலசிங்கம் சயனைட் வில்லைகளை மாட்டி விட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிக்கினால் சயனைட் வில்லைகளை அருந்தி உயிரை மாய்த்துக்கொள்ளுமாறு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேல் நாட்டு பெண் மற்றும் தாதி ஒருவர் இவ்வாறு கொடூரமான செயற்பாடுகளுக்கு …
-
- 3 replies
- 838 views
-
-
கிழக்கு மாகாணம் வெள்ளக்காடாக மாறியுள்ள நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு கட்சி மாநாடு தேவைதானா? என்று முஸ்லிம் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர் அஸாத் சாலி கேள்வியெழுப்பியுள்ளார். அதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: நடந்து முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல் பிரசார காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறியமை கிழக்கு மாகாண மக்களுக்கு இழைத்த துரோகமாகும். வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டு தனது கோட்டையிலிருந்து வெளியேறி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் வருடாந்த மாநாட்டை கொழும்பில் நடத்தியுள்ளமை கவலைக்குரியது. கிழக்கு மாகாணத்தில் பல இடங்கள் வெள்ளக் காடாக மாறியுள்ளன. பல கிராமங்களுக்கு இதுவரை செல்ல முடியாத நிலைம…
-
- 1 reply
- 552 views
-
-
இலங்கையில் காலி துறைமுகத்தில் 16 ஈரான் மற்றும் 8 இந்திய பணியாளர்களுடன் நிறுத்தப்பட்டிருந்த ஈரான் நாட்டு கப்பலை இலங்கை தடுத்து வைத்துள்ளது. எம்.வி. அமினா என்ற இந்த கப்பல் சீனாவிலிருந்து நவம்பர் 18ஆம் திகதி புறப்பட்டு இலங்கையின் காலி துறைமுகம் அருகே நங்கூரமிடப்பட்டிருக்கிறது. இந்தக் கப்பலை தடுத்து வைக்குமாறு ஜெர்மன் வங்கி ஒன்று கேட்டதைத் தொடர்ந்து இலங்கை அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. ஜெர்மன் வங்கியிடமிருந்து 250 மில்லியன் யூரோவை கடனாக ஈரான் கப்பல் நிறுவனம் வாங்கியிருக்கிறது. ஆனால் கடனை வாங்கிய பிறகு பணத்தைக் கட்டாத ஈரான் நிறுவனம், கப்பலின் பெயரையும் மாற்றியிருக்கிறது. இதனால் கப்பலை தடுத்து வைக்குமாறு இலங்கையை ஜெர்மன் நாடு கேட்டுக் கொண்டது.…
-
- 2 replies
- 735 views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த அறிக்கை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மூன்று தினங்கள் இடம்பெற்ற இந்த மாநாடு கடந்த வியாழக்கிழமை ஆரம்பமானது. தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை தமிழர்களின் பிரச்சினை தொடர்பான அறிக்கை ஒன்றை மாநாட்டில் சமர்ப்பித்துள்ளனர். யுத்த வலய மக்களின் நிலைமை, அதிகாரப் பகிர்வு, இனப்பிரச்சினைக்கான தீர்வு, யாழ்ப்பாண மாணவர்களின் கைது, காணிப்பிரச்சினை, தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.இந்தியா, அவுஸ்ரேலியா, மியன்மார் போன்ற நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. http…
-
- 3 replies
- 641 views
-
-
பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் இந்திய இராணுவ அதிகாரிகளுக்கு இலங்கையின் உதவியையும் பயிற்சியையும் வழங்க தயாராக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பில் இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்திய இராணுவ தளபதி ஜெனரல் பிக்ராம் அண்மையில் இலங்கைக்கு வருகைதந்திருந்த போது இதனை நான் தெரிவித்திருந்தேன். பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் இ;ந்திய படைகளுக்கு பயிற்சியளிக்கும் என்ற எங்களுடைய நிலைப்பாட்டை மீண்டும் நான் கூறினேன். நாம் இந்த துறையில் பயிற்சி மட்டுமன்றி நெறியாள்கை ஒன்றினையும் வரைந்துள்ளோம். இவற்றை பயங்கரவாதத்திற்கு முகம்கொடுக்கும் ஏனைய நாடுகளுக்கும் வழங்க நாம் முன்வந்த…
-
- 6 replies
- 772 views
-
-
யாழ். பல்கலைக்கழகச் சுற்றாடலில் கடமை புரிந்து வந்த பொலிஸார் திடீரென இன்று காலை முதல் அவ்விடத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பாக நிர்வாகத்தின் அழுத்தம் காரணமாக கலைப்பீட மாணவர்கள் கூடுவதனை அடுத்தே இந்த திடீர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இது குறித்து தெரியவருவதாவது: யாழ்.பல்கலைக்கழகத்தின் பிரதான வாயில், விஞ்ஞான பீட வாயில், மாணவர் விடுதிகளின் வாயில்களில் கடந்த நவம்பர் 28ம் திகதி முதல் யாழ்ப்பாண பொலிஸார் காவற்கூடுகளை அமைத்து காவல் கடமையில் ஈடுபட்டு வந்தனர். பொலிஸாரின் பிரசன்னம் மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் அமைவதாகக் குறிப்பிடப்பட்டு கடும் விமர்சனங்களுக்குள்ளாகிய நிலையிலும், ஒரு மாத காலமாக நிலைகொண்டி…
-
- 0 replies
- 480 views
-