ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143424 topics in this forum
-
உலக வங்கியின் நிர்வாக இயக்குனர் இலங்கை விஜயம் 2012-11-14 12:07:42 உலக வங்கியின் நிர்வாக இயக்குனரான ஸ்ரீ முல்யானி இந்திராவதி நாளை இலங்கை வரவுள்ளார். அவர் எதிர்வரும் 19 திகதி வரை இங்கு தங்கியிருப்பார் என உலக வங்கியின் கொழும்பு அலுவலகம் அறிவித்து[size=4]ள்ளது.[/size] http://www.virakesari.lk/article/local.php?vid=1611
-
- 1 reply
- 479 views
-
-
அதிகாரம் பகிரப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு: திஸ்ஸ விதாரண கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்பதும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்பதுவே லங்கா சமசமாஜக் கட்சியின் நிலைப்படாகும் என்று அதன் தலைவரும் சிரேஷ்ட அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முன் வைத்துள்ளத். இந்த பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டும். அத்துடன் முன்வைக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தியுடன் தேசிய நல்லிணக…
-
- 0 replies
- 373 views
-
-
மொனராகல, செவனகல பிரதேசத்தில் இன்று முற்பகல் சிவப்பு மழை பெய்துள்ளது. செவனகல, இந்திகொலபெலஸ்ஸ கிராமத்திலேயே இந்தச் சிவப்பு மழை பெய்துள்ளது. மழை நீரை பாத்திரங்களில் சேகரித்துப் பார்த்தபோது இரத்தம் போன்று சிவப்பு நிறத்தில் மழை நீர் காணப்பட்டுள்ளது. மேலும் குறித்த பகுதியில் மழை பெய்த இடங்களில் சிவப்பு நிற படிமங்கள் காணப்படுவதாகப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். http://www.virakesari.lk/article/local.php?vid=1614
-
- 0 replies
- 385 views
-
-
இந்தியா தமிழர்களுக்கு வழங்கியிருக்கும் தெளிவான செய்தி - யதீந்திரா கடந்த பத்தி, 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் இந்தியாவின் அணுகுமுறை எவ்வாறு அமையக் கூடும் என்பதில் கவனம் செலுத்தியிருந்தது. அந்த அவதானம் தவறானதல்ல என்பது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது. நடந்து முடிந்த பூகோள கால மீளாய்வின்போது, (Universal Periodic Review) ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளினால் 210 பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தன. இதில் 100 பரிந்துரைகளை இலங்கை அரசு நிராகரித்திருக்கிறது. அதற்கான காரணங்களையும் இலங்கை தெளிவுபடுத்தியிருக்கிறது. உண்மையில் பலரும் எதிர்பார்த்தது போன்று, மேற்படி மீளாய்வின்போது இலங்கை பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ளவில்லை. இதற்கான காரணம், இந்தியா தனது முன்னைய நில…
-
- 5 replies
- 1.2k views
-
-
புலிகள் சுட்டு வீழ்த்திய விமானத்தின் பாகங்களை தேடும் பணிகள் ஒத்தி வைப்பு [Wednesday, 2012-11-14 08:18:09] தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் எயார் விமான இடிபாடுகளை மீட்கும் பணிகள் மீளவும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.1998ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளினால் பலாலியிருந்து ரத்மலானை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த லயன் எயார் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.இந்த விமானத்தின் பணியாளர்கள் மற்றும் பயணிகள் உள்ளிட்ட 48 பேர் கொல்லப்பட்டனர். மன்னார் கடற்பரப்பில் வைத்து இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.நிலவும் சீரற்ற காலநிலையினால் விமான இடிபாடுகளை மீட்பதில் சிக்கல் நிலைமை நீடித்து வருவதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹுலுகல்ல தெர…
-
- 0 replies
- 354 views
-
-
இலங்கை தொடர்பான அறிக்கை பான் கீ மூனிடம் ஒப்படைக்கப்படும் - ஐ.நா 14 நவம்பர் 2012 இலங்கை தொடர்பான உள்ள அறிக்கையொன்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணிகள் தொடர்பில் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் என பாகன் கீ மூனின் பேச்சாளர் மார்டீன் நெசர்கீ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் நாளாந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பொதுச் செயலாளர் பான் கீ மூன் இந்த அறிக்கையை வாசித்ததன் பின்னர் இந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை தொடர்பான நிபுணர் …
-
- 1 reply
- 814 views
-
-
குதறக் காத்திருக்கும் குற்றவியல் கோவைகள் மக்களோ, ஊடகங்களோ, அரசியல் வாதிகளோ இந்த வரவு செலவுத் திட்டம் தொடர்பாகப் பெரிதாக அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை. அரசு சில குற்றவியல் கோவைகளைத் தூசி தட்டி மேசையில் போட அனைவரும் அவை பற்றிய வாதப் பிரதிவாதங்களில் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றனர். ஒரு நாட்டின் வரவு செலவுத் திட்டமென்பது அந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜை மீதும் ஏதோ ஒரு விதமான தாக்கத்தைச் செலுத்தும் என்பதை நாமறிவோம். இப்படியான திட்டங்கள் தயாரிக்கப்படும்போது பெரும்பாலான நாடுகள் வரவையும் செலவையும் சமன் செய்ய முடியாமல் திண்டாடுவதும் அவற்றைச் சரி செய்ய உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களை நாடுவதும் அவற்றின் நிபந்…
-
- 0 replies
- 499 views
-
-
வெலிக்கடை கலவரத்தில் பலர் பலி; 13பேர் காயம்? வெள்ளிக்கிழமை, 09 நவம்பர் 2012 18:34 0 COMMENTS வெலிக்கடை கைதிகளுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கிச்சூடு இடம்பெறுவதாகவும் இதனால் பலர் பலியாகியுள்ளதாகவும் 13பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்களில் சிறைக்காவலர் ஒருவரும் கைதிகள் இருவரும் விசேட அதிரடிப்படையினர் 10பேரும் அடங்குவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. வெலிக்கடை சிறைச்சாலையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையுடன், அவ்வளாகத்தில் உள்ள ஆயுத களஞ்சியசாலையை உடைத்த கைதிகள், அங்கிருந்து துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/523…
-
- 60 replies
- 4.4k views
-
-
கொழும்பில் உகண்டா ஜனாதிபதி செவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2012 10:01 0 COMMENTS உகண்டா ஜனாதிபதி யோவேறி கபுடா முஷவேனி உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று திங்கட்கிழமை இரவு கொழும்பை வந்தடைந்துள்ளார். நான்கு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள உகண்டா ஜனாதிபதியை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தலைமையிலான குழுவினர் தெரிவித்தனர். உகண்டா ஜனாதிபதி இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். htt…
-
- 5 replies
- 544 views
-
-
கொமன்வெல்த் மாநாடு கொழும்பில் நடக்குமா? – சிறிலங்காவுக்கு பிரித்தானியா கொடுத்துள்ள அதிர்ச்சி சிறீலங்கா | ADMIN | NOVEMBER 14, 2012 AT 09:27 சிறிலங்கா தலைநகர் கொழும்பில் அடுத்த கொமன்வெல்த் தலைவர்களின் உச்சிமாநாட்டை நடத்துவதற்கு எடுக்கப்பட்ட முடிவு தவறானது என்று பிரித்தானிய நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொமன்வெல்த்தின் எதிர்காலம் மற்றும் பங்கு தொடர்பான பிரித்தானிய வெளிவிவகாரக்குழுவின் அறிக்கை நேற்று ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது. இந்த அறிக்கையில், 2013இல் கொமன்வெல்த் உச்சிமாநாடு நடைபெறவுள்ள சிறிலங்காவில் மோசமான மனிதஉரிமைமீறல்கள் தொடர்பான சாட்சியங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால், சிறிலங்காவில் அமைதி, உண்மையை ஆராயும் சுதந்தி…
-
- 0 replies
- 571 views
-
-
13வது திருத்தத்துக்கு எதிரான முனைப்புக்கள் தொடர்பில் இந்தியா மௌனம் காப்பது ஏன்? - சரவணபவன் கேள்வி! 'சிறிலங்காவின் கடும் போக்குக் கொண்ட கொள்கையாளர்களான அமைச்சர்கள் விமல் வீரவன்சவும், சம்பிக்க ரணவக்கவும் 13வது திருத்தச் சட்டமூலத்தை இல்லாது ஒழிக்க வேண்டும் எனத் தீவிரமாகச் செயற்படும் போது இந்திய அரசு மௌனம் சாதிப்பது ஏன்? இது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத் திட்ட உரையின் இரண்டாவது வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு…
-
- 1 reply
- 548 views
-
-
[size=5]தமிழர் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர் பருதியின் கொலை தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வில் நெவ் சென் ஜோர்ச் மற்றும் பாரிஸ் லா சப்பல் பகுதியல் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் இருவரும் இன்று செவ்வாய் கிழமை மாலை நீதிபதி முன் நிறுத்தப்பட்டனர்[/size] [size=5]1979 ம் ஆண்டு பிறந்த இவர்கள் இருவரில் ஒருவர் இந்தக் கொலைக்கு திட்டமிட்டதாகவும் மற்றவர் கொலையை செய்ததாகவும் குற்றப் புலனாய்வுத்துறையினரால் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.[/size] [size=5]இவர்கள் இருவரும் சட்டவிரோதமாக பிரான்சுக்குள் வந்து தங்கியிருந்து இந்தக் குற்றத்தை புரிந்தாதாகவும் இவர்களை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதிவழங்குமாறும் குற்ப்புலனாய்வுத்துறையினர் நீதிபதியிடம் கோரினர்.[/size] [size=5]பரிதிய…
-
- 1 reply
- 1.1k views
-
-
பரிதி மீதான படுகொலைத் தாக்குதல் புலத்துத் தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டம் மீதான தாக்குதல்! பிரதமர் வி.உருத்திரகுமாரன் By naatham On 11 Nov, 2012 At 07:25 PM | Categorized As முதன்மைச்செய்திகள் | With 0 Comments தமிழீழத் தாயகத்தில் அரசியல்வெளி மறுக்கப்பட்டதொரு சூழலில், மேற்குலகின் சனநாயகச்சூழல் ஈழத் தமிழர் தேசத்துக்கு வழங்கும் வாய்ப்புக்களைச் சாதகமாக்கி நமது தேசத்தின் விடுதலைக்காக புலம்பெயர் தமிழ் மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டச் செயற்பாடுகளை அச்சுறுத்தி அடக்கும் நோக்கமே இக்கொலைக்கான காரணமாக இருந்திருக்கும் என தாம் கருதுவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாள…
-
- 3 replies
- 522 views
-
-
இந்திய அரசின் ஆதரவுடனேயே இலங்கையின் 13-ம் அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் இலங்கையின் ஆட்சியாளர்கள் முயன்றுவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். [size=3][size=4]இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி 1987-ம் ஆண்டில் இலங்கையில் மாகாணசபை முறைமையை கொண்டுவந்த 13வது அரசியலமைப்புத் திருத்தத்தை இல்லாது செய்துவிட இலங்கை அரச மட்டத்தில் பல்வேறு முயற்சிகள் நடந்துவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.[/size][/size] [size=3][size=4]மாகாணசபை முறையை ஒழித்துவிடவேண்டும் என்ற தொனியில் ஜனாதிபதியின் சகோதரர்கள் உட்பட அரசின் உயர்மட்ட பிரமுகர்கள் பலரும் அண்மைக் கா…
-
- 0 replies
- 628 views
-
-
இலங்கையின் இறுதிப்போரின் போது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளை வைத்து தயாரிக்கப்பட்ட "இலங்கையின் கொலைக்களங்கள்" என்ற திரைப்படத்தை மையப்படுத்தி பிரித்தானியாவின் பட்டதாரி மாணவர்கள் நால்வர் குறுந்திரைப்படங்களை தயாரித்துள்ளனர்.இதில் ஒரு குறுந்திரைப்படத்தை தயாரித்த கிறிஸ்டினா பிச்சி என்பவர், தாம் குறுந்திரைப்படத்தை தயாரித்த போது எந்த கட்டத்தையும் தேவையற்றது என்று தவிர்க்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் தயாரிக்கப்பட்ட நான்கு குறுந்திரைப்படங்களும் லண்டனில் உள்ள சர்வதேச ஆவணப்பட கண்காட்சியின் போதும் ஐரோப்பிய பல்கலைக்கழகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டன.அதனை பெருமளவானோர் பார்த்ததாக குறுந்திரைப்பட தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ht…
-
- 2 replies
- 566 views
-
-
[size=4][/size] [size=4]By V.Priyatharshan 2012-11-13 20:01:50[/size] [size=4]கடந்த வெள்ளிக்கிழமை வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தையடுத்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக இந்திய அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டுள்ளனர். இச் சம்பவத்தில் 27 பேர் உயிரிழந்ததோடு 40க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.அத்துடன் இச் சிறைச்சாலையில் இந்தியாவைச் சேர்ந்த 33 கைதிகள் உள்ளனர். மேலும் 5 கைதிகளின் வழக்குகள் வெலிக்கடைச் சிறைச்சாலையில் நிலுவையில் உள்ளது. இந்நிலையிலேயே இந்திய அதிகாரிகள் அங்கு சென்று சம்பவம் தொடர்பிலும் இந்தியக் கைதிகளின் நலன் குறித்தும் விசாரித்து அறிந்து கொண்டதுடன் கைதிகளின் நிலை குறித்து விசாரணைனளை மேற்கொண்டுள்ளனர்.[/size] [size=4]http:/…
-
- 0 replies
- 768 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் 25ஆயிரம் சிங்கள குடும்பங்களை குடிமயர்த்த நடவடிக்கை Published on November 13, 2012-7:57 am · மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களை சிறுபான்மையினராக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு செயற்படுகிறது. இதற்கு சிறிலங்கா இராணுவத்தினரும், அவர்களுடன் இணைந்து செயற்படும் பிள்ளையான் குழுவும் இதனை செயற்படுத்தி வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது 75வீதம் தமிழர்களும், 24வீதம் முஸ்லீம்களும் ஒரு வீதம் சிங்களவர்களும் உள்ளனர். இதனை மாற்றியமைத்து முஸ்லீம்களும் சிங்களவர்களும் இணைந்தால் பெரும்பான்மையாக வரும் வகையில் 25ஆயிரம் சிங்கள குடும்பங்களை மட்டக்களப்பில் குடியமர்த்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் முதற்கட்டமாக 6ஆயிரம்…
-
- 1 reply
- 696 views
-
-
வாள் வெட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2012 17:32 0 COMMENTS யாழ்ப்பாணம், உரும்பிராய் தெற்கு பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவமொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் குடும்பத் தலைவரான விநாயகமூர்த்தி (வயது 57), அவருடய மனைவி சுதர்ஷனி (வயது 47) மற்றும் இவர்களின் மகன்களான சுதர்ஷன் (வயது 27), சுகிர்தன் (வயது 21) ஆகியோரே காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த குடும்பத்தாருக்கும் அயல் வீடொன்றைச் சேர்ந்த மற்றுமொரு குடும்பத்தாருக்கும் இடையில் …
-
- 0 replies
- 631 views
-
-
இந்த நொடியில், என் மனதில் (13/11/12) >>>>>> (தயவு செய்து இந்த பதிவை மீள்-பதிவு செய்யுங்கள். please share this post) இன்று தீபாவளி. (வாழ்த்துக்கள் !). இன்று சில கசப்பான உண்மைகளை பேச வேண்டியுள்ளது. அடுத்த தீபாவளின்போது இன்று பேசியவைகளை நினைவில் மீட்டு பார்ப்போம். புலம் பெயர்ந்த தமிழர் அமைப்புகளும், தமிழக கட்சிகளும் தமது போராட்ட வியூகங்களை மாற்றியமைக்க வேண்டும். புலத்திலும், தமிழகத்திலும், உள்நாட்டு தமிழ் தலைமைகளின் போக்கிலும் உரிய வியூக மாற்றங்கள் ஏற்படாவிட்டால் - சாட்சிக்காரனின், சொந்தக்காரனின் கால்களில் விழுவதைவிட சண்டைக்காரனின் கால்களிலேயே விழுவோம் என்ற கொடும் முடிவுக்கு காலம் இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களை தள்ளி விடலா…
-
- 2 replies
- 1.1k views
-
-
கனடாவில் உள்ள ஒட்டாவாவில் வாழும் சிங்களவர்களின் தூசண வார்த்தைகளையும் இலங்கை அரசின் ஏலாமையும் புட்டு புட்டு வைக்கிறார்கள் http://www.topix.com/forum/world/sri-lanka/TVV28O2U4CGL1Q06L
-
- 1 reply
- 1.1k views
-
-
[size=3][size=4]மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இராணுவ நீதிமன்றிற்கு 50 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மனித உரிமை விவகார அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=3][size=4]உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய நிறுவப்பட்ட தேசிய மனித உரிமை செயற்திட்டத்தின் அடிப்படையில் இராணுவ நீதிமன்றம் நிறுவப்பட்டுள்ளது.[/size][/size] [size=3][size=4]இந்த இராணுவ நீதிமன்றிற்கு 50 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு முறைப்பாடுகளும் தனித்தனியாக விசாரணை செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.[/size][/size] [size=3][size=4]குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வலுவான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் இராணுவ நீதிமன்றம் குற…
-
- 0 replies
- 285 views
-
-
[size=4]தமிழ் மக்களுக்கு அநீதி ஏற்படும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செயற்பட மாட்டார் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்திற்கு பதிலாக திவிநெகும சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பது தமது நிலைப்பாடு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதிகாரப் பகிர்வினை வழங்குவதற்காக 19ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த சட்டத் திருத்தத்தில் 13ம் திருத்தச் சட்டத்தின் உள்ளடக்கங்கள் மட்டுமன்றி ஜனாதிபதியினால் ஏற்கனவே இணங்கப்பட்ட அனைத்து விடயங்களும் உள்ளடக்கப்படும் என எதிர்பார்ப்பதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். யதார்த்தமான அதிகாரப் பகிர்வினையே தமிழ் சமூகம் வேண்டி நிற்பதா…
-
- 0 replies
- 508 views
-
-
தகுந்த காரணம் இல்லாது புகலிடம் கோருவோரை ஏற்றுக் கொள்ள முடியாது - அவுஸ்திரேலியா புகலிடம் கோரி சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா செல்லும் இலங்கையர் எவரும் அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அவர்கள் அனைவரும் அடுத்த விமானத்திலேயே உடனடியாக திருப்பி அனுப்பப்படுவார்கள் என அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் குடியுரிமை தொடர்பான திணைக்களம் நேற்று அறிவித்துள்ளது. ஆட்கடத்தலில் ஈடுபடுவோரின் தவறான வழி நடத்தலை நம்பி வள்ளங்களில் சட்ட விரோதமாக வந்து உயிராபத்தில் சிக்க வேண்டாம் என்று கோரியுள்ள அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களம், விஸா இன்றி சட்ட விரோதமாக வருபவர்கள் குறித்து விசேட கவனம் எதுவும் செலுத்தப்படாது எனவும் அறிவித்துள்ளது. சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம…
-
- 0 replies
- 341 views
-
-
இலங்கை தொடர்பான தமது நடவடிக்கைகள் பெருமிதம் அளிக்கின்றது – அமெரிக்கா 13 நவம்பர் 2012 இலங்கை தொடர்பான தமது நடவடிக்கைகள் பெருமிதம் அளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளில் இலங்கை விவகாரம் தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு சரியானதே என தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை n;தாடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறித்து அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் போன்ற விவகாரங்கள் தொடர்பில் இலங்கை இன்னமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனையே அமெரிக்கா வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. 2009ம் ஆண்டில…
-
- 1 reply
- 484 views
-
-
முள்ளிவாய்க்காலைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சீருடையினரால் தாக்கப்பட்டுள்ளார் : 13 நவம்பர் 2012 முள்ளிவாய்க்காலைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு காயங்களுடன் சிகிச்சைக்காக கைவேலி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றுமுன் தினம் மாலை 4 மணிக்கு இடம்பெற்றது. சீருடையினரால் தான் தாக்கப்பட்டார் என்று அந்த இளைஞர் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் வலைஞர்மடத்தைச் சேர்ந்த 29 வயதான சிவராசா பிரபாகரன் என்ற இளம் குடும்பஸ்தரே காயத் துடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். நேற்றுமுன்தினம் தனது வீட்டுக்கு வந்த அம்பலவன் பொக்கணையில் பணியாற்றும் சீருடையினர் மூவரே, தன்னைக் கடுமையாகத் தாக்கியதாகத் தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக அந்தப் பகுதிக்குப் பொ…
-
- 0 replies
- 253 views
-