ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143424 topics in this forum
-
நவநீதம்பிள்ளை போட்ட புதிய குண்டு – சிறிலங்காவுக்கு அதிர்ச்சி. சிறீலங்கா | ADMIN | NOVEMBER 10, 2012 AT 20:22 உள்நாட்டுப் போர் 2009இல் முடிவுக்கு வந்தாலும், சிறிலங்கா இன்னமும் கொதிநிலையிலேயே உள்ளது என்று ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். அத்துடன், சிறிலங்கா அகதிகளை உடனடியாகத் திருப்பி அனுப்பும் அவுஸ்ரேலியா புதிய கொள்கை தொடர்பாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். இந்தோனேசியாவின் பாலி ஜனநாயக மன்றத்தில் பங்கேற்றுள்ள அவர், இது தொடர்பாக கருத்து வெளியிடுகையில், “நௌரு போன்ற கடல் கடந்த தடுப்பு நிலையங்கள் அமைக்கப்படுவதால் நீண்டகாலம் அவர்கள் தடுத்து வைக்கப்படலாம் என்றும், இன்னொரு மனிதஉரிமை மீறலாக அது உருவெடுக்கலாம் என்றும் கவலை கொள்கிறேன். உள்…
-
- 2 replies
- 1.1k views
-
-
சட்டவிரோதமாக வடக்கின் கடல் வளத்தை சுறண்டும் சிங்கள மீனவர்கள்! [Monday, 2012-11-12 09:56:13] இலங்கையின் வடமாகாண கடற்பரப்பில் அத்துமீறி நுழைகின்ற இந்திய மீனவர்களின் பிரச்சினை ஒரு பக்கம் இருக்க, இப்போது தென்பகுதியில் இருந்து வடபகுதிக்கு வருகின்ற மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி தொழில் முறையினால் மேலும் பாதிப்பு அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. வடமாகாண மீனவர்கள் எதிர்கொண்டுள்ள இந்தப் பிரச்சினைகளுக்கு தென்பகுதி மீனவர்களுடன் நிறுவன ரீதியாக இணைந்து செயற்பட்டு தேசிய மட்டத்தில் தீர்வு காண்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் சின்னையா தவரட்ணம் தலைமையில் ஞாயிறன்று வவுனியாவில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்தத் தீர்மா…
-
- 0 replies
- 392 views
-
-
1000 ரூபா புதிய நாணய குற்றி திங்கட்கிழமை, 12 நவம்பர் 2012 11:32 0 COMMENTS இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இலங்கை மத்திய வங்கி 1000 ரூபா பெறுமதியான புதிய நாணயக்குற்றியை வெளியிடவுள்ளது. இராஜதந்திர உறவின் வெள்ளிவிழா நிறைவாக வெளியிடப்படவுள்ள இந்த நாணயக்குற்றியின் முகப்பு பக்கத்தில் மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் அணைக்கட்டின் படம் பொறிக்கப்பட்டுள்ளது. புதிய நாணயக்குற்றி 35.0 மில்லிமீற்றர் விட்டமும் 22.0 கிராம் நிறையையும் கொண்டது. இராஜதந்திர உறவினை நினைவு கூறும் வகையில் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் 57 ஆவது ஞாபகார்த்த நாணயமாகும். 1000 ரூபா பெறுமதியான புதிய நாணயக்குற்றியை மத்திய வங்கியின்…
-
- 0 replies
- 369 views
-
-
வன்னியில் நேற்றுத் திடீரென இராணுவ சோதனை அதிகரித்திருந்தது. அதிகாலையில் வீதிகளில் பயணிக்கும் மோட்டார் சைக்கிள்கள், வாகனங்கள் நிறுத்தப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டன. அவற்றைச் சரிபார்த்து, பயணிப்போரின் விவரங்களும் பதிவு செய்யப்பட்டன. அவற்றைச் சரிபார்த்து ஒப்பமிடுமாறும் பயணிகளைப் படையினர் பணித்தனர். ஏ35 முல்லைத்தீவு வீதியில் பரந்தன் சந்தி, முரசுமோட்டை, நெத்தலியாறு பாலம் ஆகிய இடங்களிலும், ஏ9 வீதியில் பனிக்கங்குளத்திலும் மாங்குளம் வெள்ளாங்குளம் வீதியில் வன்னிவிளாங்குளத்திலும் இவ்வாறு இராணுவச் சோதனைகள் அதிகரித்திருந்தன எனப் பயணிகள் “உதயனி’டம் தெரிவித்தனர். “காரணம் ஏதுமின்றி திடீரென இராணுவத்தினர் இவ்வாறு சோதனை நடவடிக்கை மற்றும் விவரங்களைப் பதிவதால் தாம் பயண நெருக்கடிகளை எதிர…
-
- 0 replies
- 537 views
-
-
போரை முன்னின்று நடத்தியவர்கள் மனிதர்கள், போரால் பாதிக்கப்பட்டவர்கள் மிருகங்களா? தமிழ் மக்களும் ஆறறிவு படைத்த மனிதர்கள்; அவர்களும் அபிவிருத்தியுடன் சுய உரிமையுடன் வாழவேண்டும் என்பதை மஹிந்த அரசு விளங்கிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது: இலங்கையின் 66ஆவதும் மஹிந்த அரசின் 8 ஆவதுமான 2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த…
-
- 0 replies
- 307 views
-
-
பரிஸ் மாநகரில் சிறிலங்கா அரச ஏவலாளிகளால் படுகொலை செய்யப்பட்ட பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்ச்சி மேற்கு லண்டன் வெம்பிளி கோப்லண்ட் உயர் பாடசாலை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (11.11.2012) நடைபெற்றது. பொதுச்சுடரினை திருமதி. சரா விவேக அவர்கள் ஏற்றிவைக்க, தமீழீழ தேசியக் கொடியினை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. தனம் ஏற்றி வைத்து நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார். தமிழ் நாட்டிலிருந்து லண்டனுக்கு வருகை தந்திருக்கும், இந்திய கொம்யூனிஸட்; கட்சியின் பொதுச் செயலாளர் தா. பாண்டியன், திராவிட விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த விடுதலை இராசேந்திரன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தளபதி பரிதிக்கு தமது …
-
- 0 replies
- 498 views
-
-
வடக்கின் கடல் வளத்தை சுறண்டும் தென்பகுதி மீனவர்கள்: 1600 குடும்பங்களின் நிலை என்ன ? இலங்கையின் வடமாகாண கடற்பரப்பில் அத்துமீறி நுழைகின்ற இந்திய மீனவர்களின் பிரச்சினை ஒரு பக்கம் இருக்க, இப்போது தென்பகுதியில் இருந்து வடபகுதிக்கு வருகின்ற மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி தொழில் முறையினால் மேலும் பாதிப்பு அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. வடமாகாண மீனவர்கள் எதிர்கொண்டுள்ள இந்தப் பிரச்சினைகளுக்கு தென்பகுதி மீனவர்களுடன் நிறுவன ரீதியாக இணைந்து செயற்பட்டு தேசிய மட்டத்தில் தீர்வு காண்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் சின்னையா தவரட்ணம் தலைமையில் ஞாயிறன்று வவுனியாவில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் மே…
-
- 0 replies
- 352 views
-
-
காணாமல் போதல் தொடர்பாக விசாரணைகள் நடைபெறுகின்றன - பாலித கொஹணே காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி டொக்டர் பாலித கொஹணே தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் சட்டவிரோத பலவந்த காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது. சட்டவிரோத பலவந்த காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பிலான விசேட அமர்வுகளில் இலங்கை தொடர்பிலும் கருத்துக்கள் வெளியடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இதற்கான விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கொஹணே தெரிவித்துள்ளார். காணாமல் போதல்கள் தொடர்பில் விசாரணை நடத்…
-
- 0 replies
- 205 views
-
-
13 ஆம் திருத்தத்திற்கு எதிராக விமல் வீரவன்ச நீதிமன்றத்தை நாடினால், அதற்கு உரிய சட்டரீதியான பதிலை நாம் வழங்குவோம்: மனோ கணேசன் [sunday, 2012-11-11 19:08:28] பதின்மூன்றாம் திருத்தத்திற்கு பதிலாக புதிய பத்தொன்பதாம் திருத்தம் கொண்டு வரும் அரசாங்கத்தின் திட்டம், அமைச்சர் விமல் வீரவன்சவின் சுதந்திர மக்கள் முன்னணியுடனான ஐதேக தலைவர் ரணில் தலைமையிலான குழுவினரின் பேச்சு ஆகியவை தொடர்பில் இன்று கூடிய, எதிரணி கூட்டமைப்பு கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக தெரிய வருகிறது. ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், இவைபற்றிய ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபோது கூறியதாவது, வரவு செலவு திட்டம், வெலிக்கடை சிறைச்சாலை ஆகிய …
-
- 0 replies
- 429 views
-
-
ஐ.நாவில் ஈழத்தமிழர்களின் கழுத்தறுத்த இந்தியா – இரா.துரைரத்தினம், [size=2]Published on November 11, 2012-9:25 am · No Comments[/size][size=3] எதிரியை நம்பலாம், ஆனால் நண்பனை போல நடிப்பவனை நம்ப கூடாது என சொல்வார்கள். அது உண்மை என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை மீளாய்வு கூட்டத்தில் ஈழத்தமிழர் விடயத்தில் இந்தியா நிரூபித்து விட்டது. ஜெனிவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை மீளாய்வு கூட்டத்தில் இலங்கை நெருக்கடிக்குள் சிக்கப்போகிறது, பொறிக்குள் அகப்பட போகிறது, விசாரணை நடைபெறுகிறது, தீர்ப்பு வழங்கப்பட போகிறது, வாக்கெடுப்பு நடத்தப்பட போகிறது என பலவாறு தமிழ் இணையத்தளங்களும் சில தமிழ் ஊடகங்களும் கற்பனைகளை அள்ளி வீசிக்கொண்டிருந்தன.[/size][size=3] ஐக்கிய நாடுகள் ம…
-
- 0 replies
- 725 views
-
-
ஷிராணி பண்டாரநாயக்கா விவகாரம்: பதில் நீதியரசர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் அரசதரப்பு ஆலோசனை! சிறிலங்காவின் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணை விவகாரம் உக்கிரமடைந்து வரும் நிலையில், உயர்நீதிமன்றத்தின் தற்போதைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பதில் நீதியரசர் ஒருவரை நியமிப்பது குறித்து, அரசாங்கத் தரப்பின் சட்ட வல்லுநர்கள் மற்றும் அரசியல் ஆலோசகர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பிரதம நீதியரசரின் மிதமிஞ்சிய சொத்துகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்குத் தாம் தயாராக உள்ளோம் என்றும், அதற்கான இரகசிய எழுத்துமூலமான ஆவணங்கள் பல தமக்குக் கிடைத்துள்ளன என்றும் சிறிலங்காவி…
-
- 0 replies
- 596 views
-
-
[size=2] [size=4]"நாடாளுமன்றத்தில் அரசுக்கு உள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை வைத்து, முடிந்தால் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை இல்லாது ஒழித்துக்காட்டுங்கள்'' என்று அமைச்சர் விமல் வீரவன்ஸவுக்கு சவால் விடுத்தது பொது எதிரணி. 13ஆவது திருத்தத்தை அரசமைப்பில் இருந்து நீக்க, அமைச்சர் விமல் வீரவன்ஸ உயர் நீதிமன்றத்தை நாடப் போகிறார் என்று செய்திகள் வெளியானதை அடுத்தே பொது எதிரணி இந்தச் சவாலை நேற்று விடுத்துள்ளது. "13ஆவது திருத்தத்தை இல்லாதொழிப்பது உள்நாட்டு விவகாரமல்ல. அது இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுடன் தொடர்புடைய விவகாரமாகும். இது பெரும் அரசியல் பிரச்சினை. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள் தமக்குள் பேசித்தீர்க்க வேண்டியதொரு விடயமே தவிர, …
-
- 0 replies
- 656 views
-
-
பரிதி படுகொலைக்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை –தயான் ஜயதிக்க 11 நவம்பர் 2012 தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர் பரிதி எனப்படும் நடராஜா மகேந்திரனின் படுகொலைக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என பிரான்ஸிற்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். இந்தக் கொலையின் பின்னணியில் இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் செயற்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அபத்தமானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சம்பவம் தொடர்பில் பிரான்ஸ் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரான்ஸ் அரசாங்கத்தினால் விசாரணை நடத்தப்பட்டு வரும் ஓர் விடயம் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவது பொருத்தமற்றது என அவர் சு…
-
- 8 replies
- 770 views
-
-
19ம் திருத்தச் சட்டத்தின் மூலம் அதிகாரம் பகிரப்பட உள்ளது? 11 நவம்பர் 2012 19ம் திருத்தச் சட்டத்தின் மூலம் அpகாரம் பகிரப்பட உள்ளதாக தெரிவிக்;கப்படுகிறது. மாகாணசபை முறைமையை ரத்து செய்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் 19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவிடம் உத்தேச சட்ட வரைவு சமர்ப்பிக்கப்பட உள்ளது. பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து கொண்ட இந்த வரைவுத் திட்டத்தின் குறைநிறைகள் பற்றி கருத்து வெளியிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு சந்தர்ப்பம் இருப்பதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட…
-
- 6 replies
- 898 views
-
-
யுத்தம் நிறைவடைந்து மூன்று வருடங்களாகியும் வடக்கில் இந்துக்கோவில்களை தரிசிக்க முடியாத நிலை: சஜித் By General 2012-11-10 09:33:41 யுத்தம் நிறைவடைந்து 3 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. எனினும் வடக்கின் அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் அமைந்துள்ள இந்து ஆலயங்களை தரிசிப்பதற்கு ஏற்ற சூழல் அங்கு இதுவரையில் தோற்றுவிக்கப்படவில்லை. அரசாங்கத்தால் இதனை ஏன் நிவர்த்திக்க முடியாதுள்ளது என ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ் நேற்று சபையில் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் வடக்கில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் அமைந்துள்ள இந்துக்கோவில்களை தரிசிப்பதற்கான சூழல் ஏற்படுத்தப்படாத நிலையே காணப்…
-
- 3 replies
- 538 views
-
-
[size=2] [size=4]"மாகாணசபை முறைமை முழுமையாக மாற்றி அமைக்கப்பட வேண்டும் எனக்கூறும் ஜனாதிபதி 13ஆவது திருத்தச் சட்டம் ஒழிக்கப்படுமா இல்லையா? என்பதை வெளிப்படையாகக் கூறவேண்டும்'' என்று நாடாளுமன்றத்தில் நேற்று வலியுறுத்தினார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.[/size][/size] [size=2] [size=4]"கடந்த மூன்று வருடங்களாக ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர், சர்வதேச மனித உரிமைகள் பேரவை என்பவற்றுக்கும் இந்திய அரசுக்கும் நாட்டு மக்களுக்கும் சுயமாகவே அளித்த அனைத்து வாக்குறுதிகளிலும் இருந்து இந்த அரசு விலகிச் செல்கின்றது'' என அவர் குற்றஞ்சுமத்தினார்.[/size][/size] [size=2] [size=4]வரவு செலவுத்திட்ட உரை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே சுமந்திரன்…
-
- 5 replies
- 744 views
-
-
குடாநாட்டில் பல குடும்பங்கள் காணி இல்லாமல் இருக்க இராணுவத்தினருக்கு காணிகள் கேட்கப்படும் அவலம் 11 நவம்பர் 2012 யாழ். குடாநாட்டில் இராணுவத்தினருக்கு அரச காணிகளை ஒதுக்குமாறு கேட்கப்பட்டு வரும் நிலையில், அங்கு ஒரு காணித்துண்டு கூட இல்லாமல் 11,500 குடும்பங்கள் நிரந்தரமாக வசிக்கின்றன என வடமாகாணப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பிரதேச செயலகங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பதிவுகளில் இருந்து பெறப்பட்ட புள்ளி விவரமே இது எனத் தெரிவிக்கும் அதிகாரிகள் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகம் இருக்கலாம் என்று கருதுகின்றனர். 'காணிகள் இல்லாத மக்களின் சரியான எண்ணிக்கை எம்மிடம் இல்லை' என யாழ். அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். எனினும் வடமாகாண காணி ஆணையாளர் திணைக்…
-
- 1 reply
- 426 views
-
-
[size=4]கொழும்பு நகரின் மத்தியில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ள வெலிக்கடைச் சிறைச்சாலையில் மற்றொரு மனித இனப்படுகொலை நடைபெற்றிருக்கின்றது. வெள்ளிக்கிழமை வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரங்களில் 27 சிறைக்கைதிகள் கொல்லப்பட்டதாக உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், கொல்லப்பட்டவர்களின் தொகை இதனைவிட அதிகமானது. [/size] [size=4]இதனைவிட விஷேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் உட்பட 100 பேர் வரையில் காயமடைந்திருக்கின்றார்கள். [/size] [size=4]சிறையில் வெடித்த கலவரம் சுமார் 10 மணித்தியாலத்தின் பின்னரே இராணுவக் கொமாண்டோக்களால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதிகூடிய பாதுகாப்பான சிறைச்சாலையிலேயே கைதிகளுக்குப் பாதுகாப்…
-
- 5 replies
- 1.2k views
-
-
லக்ஷ்மன் கதிர்காமருக்கும் - ஜீ.எல் பீரிஸிற்கு உருவச்சிலை அமைக்குமாறு மஹிந்த உத்தரவு! [sunday, 2012-11-11 18:18:14] முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமருக்கு உருவச் சிலை வைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். இந்நிலையில், உருவச்சிலையினை நிறுவுவதற்கு தேவையான ஏற்பாடுகளை விரைவில் செய்யுமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கடந்த 2005ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கொழும்பிலுள்ள அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.இவர் 1994ஆம் ஆண்டு 2001ஆம் ஆண்டு மற்றும் 2004ஆம் ஆண்டு வரை இலங்கையின் வெளிவிவகாரத்துறை அமைச்சராக கடமையாற்றிமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, தற்போதைய வெ…
-
- 2 replies
- 844 views
-
-
பரிதி கொல்லப்பட்டதால் பிரான்சில் உள்ள புலிகளது தளபதிகள் மூவர், பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை! [sunday, 2012-11-11 08:26:11] விடுதலைப்புலிகள் இயக்கத் தளபதி பரிதி பாரிஸில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டதை அடுத்து, பிரான்சில் உள்ள விடுதலைப் புலிகள் நெடியவன் அணியைச் சேர்ந்த தளபதிகள் மூவர் பொலிஸ் பாதுகாப்பு கோரியிருப்பதாக, பிரான்ஸ் பொலிஸ் தெரிவித்துள்ளது.கொல்லப்பட்ட தளபதி பரிதியும், விடுதலைப் புலிகள் நெடியவன் அணியைச் சேர்ந்தவர். பரிதி கொலை விசாரணை பிரான்ஸ் பொலிஸ் (police nationale) பிரிவிடமிருந்து DCRI பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. DCRI (Direction Centrale du Renseignement Int�rieur) பிரான்சின் உள்ளக புலனாய்வுப் பிரிவு.DCRI பிரிவு தகவல் தொடர்பாளர் A…
-
- 0 replies
- 862 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக! - வெலிக்கடை கலவரத்தை அடுத்து அரசிடம் அரியநேத்திரன் வலியுறுத்து!! வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தை அடுத்து புதிய மகஸின் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் அச்சத்தில் உள்ளதாகவும், அவர்களின் பாதுகாப்பை சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், 'தமிழ் அரசியல் கைதிகளின் இரத்தம் தோய்ந்த வெலிக்கடைச் சிறைச்சாலையில் இன்று சிங்கள கைதிகளின் இரத்தம் பெருக்கெடுத்துள்ளது. இந்நிலைக்கு சிறிலங்கா அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்' எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அதேவேளை, கொடூரமான முறையில் கைதிகள் சுட்…
-
- 0 replies
- 536 views
-
-
தடுப்பிலுள்ள முன்னாள் போராளிகள் குடும்பங்களுக்கு சிங்களத்தில் கடிதங்கள் - பெற்றோர் திண்டாட்டம் 11 நவம்பர் 2012 தடுப்பிலுள்ள முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு அனுப்பப்படுகின்ற கடிதங்கள் தனிச் சிங்களத்தில் உள்ளதால் பெற்றோர் செய்வதறியாது திணறுவதாக கூறப்படுகிறது. இறுதிக்கட்டப் போரின் பின்னர் இராணுவத்திடம் சரண்அடைந்த முன்னாள் போராளிகளில் பலர் இன்னமும் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்பான விவரங்களைக் கோரி சிறைச்சாலை அதிகாரிகளால் உறவினர்களுக்குக் கடிதங்கள் அனுப்பப்படுகின்றன. அனுப்பப்படும் கடிதங்கள் அனைத்தும் தனிச் சிங்கள மொழியில் காணப்படுவதால் அதை வாசித்து அதில் உள்ள விடயங…
-
- 0 replies
- 373 views
-
-
மகிந்த சிந்தனை : சில குறிப்புகள் - யமுனா ராஜேந்திரன் 11 நவம்பர் 2012 பிரித்தானியாவின் முன்னாள் பிரதமரும் இன்னாள் ‘மல்ட்டி மில்லியருமான’ டோனி பிளேரை கால்சராய் அணிந்த மார்கரட் தாட்சர் எனச் சொல்வது உண்டு. தொழிற்கட்சியை ‘அரைவாசி கன்ர்வேடிவ்’ கட்சியாக மாற்றியதால்தான் டோனி பிளேரை அவ்வாறு குறிப்பிடுகிறார்கள். அது எப்படி? தொழிற்கட்சியில் தொழற்சங்க இயக்கத்தின் செல்வாக்கை அவர் இல்லாது செய்தார். கன்சர்வேடிவ் கட்சியின் நிறவாத இனவாத குடியேற்றக் கொள்கையினை அவர் ஏற்றார். கன்சர்வேடிவ் கட்சியினை விடவும் மோசமான ஏகாதிபத்திய வெளிநாட்டுக் கொள்கையை அவர் ஏற்றார். தொழிற்கட்சியை அரைவாசி கன்சர்வேடிவ் கட்சி ஆக்கியதின் மூலம் கன்சர்வேடிவ் கட்சியினை அவர் கலகலக்க வைத்தார். பழமைவாதிகளின் ஆ…
-
- 0 replies
- 607 views
-
-
-
1] [size=5] [/size] [size=5]Dear friends, Thank you so much for your generous response to our fundraising campaign. Nearly a hundred of you gave over £5,000, that and a grant from the Network for Social change means that we met our £10,000 target. Many of you also signed up to give on a regular basis via direct debit. That means that we have enough money to keep on going until at least May. The wolf has retreated from the door but it is still circling. In order to remain independent and free from influence we would like to remain fully funded by individual donors - people l…
-
- 0 replies
- 661 views
-