ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143424 topics in this forum
-
சட்டவிரோத காணாமல் போதல்கள் குறித்து ஐ.நா இலங்கையுடன் பேச்சுவார்த்தை 10 நவம்பர் 2012 சட்டவிரோத காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்புஇ இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. சட்டவிரோத காணாமல்போதல்கள் தொடர்பில் பதிவான முறைப்பாடுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்புஇ இலங்கை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளது. சட்டவிரோத காணாமல் போதல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் செயற்குழுவின் 98ம் அமர்வுகளில் இந்த விடயங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 17 சம்பவங்கள் தொடர்பில் அவசரமாக கவனம் செலுத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் 400 சம்பவங்கள் தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. சட்டவிரோதஇ பலவந்…
-
- 1 reply
- 397 views
-
-
இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களில் அதிகளவு தொழில் வாய்ப்புக்கள் சீனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தல விமான நிலையம், கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கியமான அபிவிருத்தித் திட்டங்களிலும் சீனத் தொழிலாளர்களே அதிகளவில் கடமையாற்றி வருகின்றனர். இலங்கை இளைஞர், யுவதிகள் வேலையில்லாப் பிரச்சினையினால் திண்டாடி வரும் நிலையில், ஏன் சீனர்களுக்கு தொழில் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்? எனினும், அரசாங்கம் எந்த நேரத்திலும் தேசப்பற்றைப் பற்றியே பேசுகின்றது. இந்த வரவு செலவுத் திட்டத்தில் நிவாரணங்கள் கிடைக்கும் என மக்கள் பெரிதும்…
-
- 2 replies
- 707 views
-
-
அரசியல் அமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்ய கோரி, தேசிய சுதந்திர முன்னணி எதிர்வரும் திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளது. நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரணான சென்று, இலங்கையில் மாகாண சபை முறைமை ஏற்பட்டுள்ளதால், அதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். 13வது அரசியல் அமைப்புத் திருத்தச்சட்டத்தை அடிப்படையாக கொண்டு நாடு பிளவுப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதால், அதனை இரத்துச் செய்யக் கோரி, தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகியன இணைந்து கூட்டு ஊடகவியலாளர்கள் சந்திப்பை நடத்தின. எவ்வாறாயினும் ஆளும…
-
- 1 reply
- 536 views
-
-
[size=2][size=4]வெலிக்கடை சிறைச்சாலைக் கலவரம் தொடர்பில் ஐரோப்பிய ஊடகங்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. அந்தவகையில், இலங்கையில் பாதுகாப்பு கவனயீனம் காரணமாகவே வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள ஆயுத களஞ்சியசாலை, கைதிகளால் உடைக்கப்பட்டு ஆயுதங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன என்று இத்தாலி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், சம்பவத்தின் போது உயிரிழந்த மற்றும் காயமடைந்த கைதிகள் தொடர்பிலும் மந்தமானதொரு தகவலே வழங்கப்பட்டு வருவதாகவும் அவ்வூடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.[/size][/size] [size=2][size=4]http://tamil.dailymi...0-13-57-46.html[/size][/size]
-
- 0 replies
- 582 views
-
-
வேலூர் மத்திய சிறையில், ராஜிவ் கொலைவழக்கின் குற்றவாயாளி என சிறைவைக்கப்பட்டுள்ள முருகனிடமிருந்து, கையடக்கத்தொலைபேசி, சிம் கார்ட், இறுவட்டு ஆகியவற்றை விஜிலன்ஸ் பொலிஸார் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் நடக்கும் முறைகேடுகளை விசாரிக்க சிறைத்துறை டி.ஜ.ஜி.,கோவிந்தராஜ் தலைமையில் சிறைத்துறையினர், நேற்று, 9 மணி நேரம் சோதனை நடத்தினர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனிடமிருந்து கையடக்கத்தொலைபேசி, சிம் கார்ட், இருவெட்டு ஆகியவற்றை விஜிலன்ஸ் பொலிஸார் கைப்பற்றினர். கைப்பற்றிய இருவெட்டை போட்டுப் பார்த்த போது, அதில் உலக வரைப்படம், இலங்கை வரைப்படம், முதல், இரண்டாம் உலகப் போர், இலங்கையில் நடந்த படுகொலைகள், விடுதலைப் புலிகள் பிரபாகரன் குறி…
-
- 0 replies
- 900 views
-
-
ஆஸியிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட 30 பேருக்கு விளக்கமறியல் சனிக்கிழமை, 10 நவம்பர் 2012 10:13 0 COMMENTS (கே.என்.முனாஷா) அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்ட 30 பேரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவிற்கு தஞ்சம் கோரிச் சென்ற நிலையில் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் 30பேர் அடங்கிய இளைஞர் குழுவொன்றை அந்நாட்டு அரசாங்கம் இலங்கைக்கு திருப்பியனுப்பியது. இக்குழுவினர் நேற்று வெள்ளிக்கிழமை கட்டுநாயக்காவை வந்தடைந்தனர். நீர்கொழும்பு, ஜா-ஹெல, சிலாபம், வென்னப்புவ உ…
-
- 1 reply
- 374 views
-
-
இலங்கையிலிருந்து புகலிடம் கோரிச் செல்வோரை உடனடியாக திருப்பி அனுப்புவதில் அவுஸ்திரேலியா காட்டும் புதிய தீவிரத்தையிட்டு அதிர்ச்சி தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, 2009ஆம் ஆண்டு இலங்கையில் யுத்தம் முடிவடைந்த போதும் அங்கு திடீரென பிரச்சினைகள் வெடிக்கலாம் என கூறியுள்ளார். பாலி ஜனநாயக உச்சிமாநாட்டில் பிரான்ஸ் முதலமைச்சர் ஜூலியா ஜிலாட்டும் ஐ.நா மனித உரிமை ஆணையாளரும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது, புகலிடம் கோருவோர் நவுறு மற்றும் மனுஸ் தீவுகளில் காலவரையறையின்றி வாடலாம் என பலர் அச்சம் தெரிவித்ததாக கூறிய அவர், முக்கியமாக சிறுவர்களின் நிலைமையையிட்டு கவலை வெளியிட்டுள்ளார். …
-
- 0 replies
- 464 views
-
-
இலங்கை நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கணனிப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக சபாநாயகர் சமால் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாடாளுமன்ற செயற்பாடுகளை செயற்திறனாக மேற்கொள்ள முடியும். எனவே சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கணனி பயிற்சி வழங்கப்பட வேண்டியது அவசியமானது. இவ் பயிற்சி தேவைப்படுவோருக்கு நாடாளுமன்ற செயலகத்தின் ஊடாக தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.onlineuth...791599910760819
-
- 0 replies
- 533 views
-
-
கால தாமதமின்றி நல்லிணக்க முனைப்புக்களை மேற்கொள்ள வேண்டும் - பான் கீ மூன் இலங்கை அரசாங்கம் கால தாமதமின்றி நல்லிணக்க முனைப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இதனையே சர்வதேச சமூகம் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். நல்லிணக்கத்தை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் முனைப்புக்கள் ஆர்வம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாகவும் மக்கள் ஆணையை வழங்கியுள்ளதாகவும்இ இதனைப் பயன்படுத்தி சிறந்த அரசியல் தலைமைத்துவத்தை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மனித உரிமைகளை மேம்படுத்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மே…
-
- 1 reply
- 397 views
-
-
பிழையைத் தட்டிக் கேட்டதால் எமக்கு அச்சுறுத்தல்;கடற்றொழிலாளர் சங்கத்தினர் குற்றச்சாட்டு தென்னிலங்கை கடற்றொழிலார்களுடைய அத்துமீறல் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அறிவித்து விட்டோம் ஆனால் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை இதனால் மீன்பிடியினையே நம்பியிருப்பவர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என சென்மேரிஸ் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். தென்னிலங்கை கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் குறித்து ஒன்லைன் செய்திப் பிரிவு அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்ட போது சங்கத்தினர் இவ்வாறு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தெரிவிக்கையில், எமது மீன்படி முறையில் கரையோர மீன்பிடியும் ஒன்று. கடல் அட்டை கரையோரப் பகுதியிலேயே பிடிக்கலாம…
-
- 0 replies
- 291 views
-
-
பெட்ரிக்கா ஜேன்ஸ், வெளிநாடொன்றில் புகலிடம் பெற்றுக் கொண்டுள்ளார்? 05 நவம்பர் 2012 இலங்கையின் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றான சண்டே டைம்ஸ் பத்திரிகையின் முன்னாள் அசிரியை பெட்ரிக்கா ஜேன்ஸ் வெளிநாடொன்றில் புகலிடம் பெற்றுக் கொண்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. தமது இரண்டு மகன்மாருடன் ஜேன்ஸ் அண்மையில் புகலிடம் பெற்றுக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. அதிகளவான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட காரணத்தினால் ஜேன்ஸ் நாட்டைவிட்டு வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெட்ரிக்காவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கடவுச் சீட்டை நீதிமன்றம் பெற்றுக்கொள்வதுடன் சிறைத்தண்டனை விதிக்கப்படக…
-
- 2 replies
- 560 views
-
-
[size=2][size=4]இளம் கண்டு பிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் கண்டுபிடிப்பாளர் தேடல் -2012 எனும் கருப்பொருளைக் கொண்ட கண்காட்சியொன்று யாழ்.துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகின்றது.[/size][/size] [size=2][size=4]யாழ். மாவட்டத்தில் இளம் கண்டு பிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் கண்டு பிடிப்பாளர் தேடல் - 2012 எனும் கருப்பொருளிலான கண்காட்சி யாழ்.துரையப்பா விளையாட்டு அரங்கில் எலைற்றின் நிறுவனத்தின் ஏற்பாட்டில், நிறுவன இயக்குனர் பி.ஜோன்சன் தலைமையில் நேற்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.[/size][/size] [size=2][size=4]இக் கண்காட்சியில், யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 15 பாடசாலைகளின் மாணவர்களினால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட உபகரணங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்ப…
-
- 4 replies
- 930 views
-
-
[size=4]இலங்கையிலிருந்து புகலிடம் கோரிச் செல்வோரை உடனடியாக திருப்பி அனுப்புவதில் அவுஸ்திரேலியா காட்டும் புதிய தீவிரத்தையிட்டு அதிர்ச்சி தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, 2009ஆம் ஆண்டு இலங்கையில் யுத்தம் முடிவடைந்த போதும் [/size][size=5]அங்கு திடீரென பிரச்சினைகள் வெடிக்கலாம் என கூறியுள்ளார்[/size][size=4]. பாலி ஜனநாயக உச்சிமாநாட்டில் பிரான்ஸ் முதலமைச்சர் ஜூலியா ஜிலாட்டும் ஐ.நா மனித உரிமை ஆணையாளரும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது, புகலிடம் கோருவோர் நவுறு மற்றும் மனுஸ் தீவுகளில் காலவரையறையின்றி வாடலாம் என பலர் அச்சம் தெரிவித்ததாக கூறிய அவர், முக்கியமாக சிறுவர்களின் நிலைமையை…
-
- 2 replies
- 640 views
-
-
[size=2][size=4]வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற கலவரத்தின் போதும், சம்பவத்தின்போது காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும் எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். [/size][/size][size=2][size=4](படப்பிடிப்பு - குஷான் பதிராஜ, வருண வன்னியாரச்சி) [/size][/size] [size=2][size=4] [/size][/size] [size=2][size=4]http://tamil.dailymi...9-16-18-38.html[/size][/size]
-
- 2 replies
- 1.5k views
-
-
(கெலும் பண்டார, யொஹான் பெரேரா) தற்போதைய மாகாணசபை முறைமையில் மாற்றம் தேவையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் கூறியமை அரசாங்கம் இதுவரை சர்வதேச சமுதாயத்தின் முன்னிலையில் ஏற்றுக்கொண்ட பல விடயங்களை மறுப்பதாக உள்ளது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்தது. [size=2][size=4]தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்கு 13ஆவது திருத்தம் அர்த்தமுள்ள விதமாக செயற்படுத்தப்படுமென ஐக்கிய நாடுகளிடமும் இந்தியாவிடமும் ஜனாதிபதி உறுதியளித்திருந்தார் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வரவு – செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது …
-
- 0 replies
- 512 views
-
-
பௌத்த சின்னங்கள் வடக்கு கிழக்கில் காணப்படுவதற்கு காரணம் - பழைய காலத்தில் தமிழ் மக்கள் பௌத்தர்களாக இருந்தமையே! :நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் [Thursday, 2012-11-08 08:30:51] வடக்கு கிழக்கில் பவுத்த சின்னங்கள் காணப்படுவதின் காரணம் ஒரு கால கட்டத்தில் தமிழ் மக்கள் பவுத்தர்களாக இருந்தமையே என ஈழத்தமிழரின் வரலாறும் வாழ்வியலும் நூல் வெளியீட்டு விழாவில் தலைமையுரை ஆற்றிய நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் திரு தம்பு கந்தையா எழுதிய ஈழத்தமிழரின் வரலாறும் வாழ்வியலும் நூல் வெளியீட்டு விழா கடந்த ஒக்தோபர் 09, 2012 அன்று மாலை கொழும்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. விழாவுக்கு முன்ணனி எழுத்தாளர்கள், அறிஞர்கள்,…
-
- 16 replies
- 3.2k views
-
-
[size=1][/size] [size=4]நவம்பர் மாதத்தை மாவீரர் மாதம் என கடைப்பிடிப்பது அவரவர் விருப்பமே என கனடா தமிழ்ப் பேரவை அறிவித்துள்ளது. கனடாவில் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் முக்கிய அமைப்பான கனடியத் தமிழர் பேரவை, இதுவரையிலும் மாவீரர் மாதம் என்று ஒன்று கடைப்பிடிக்கவில்லை. இருபது வருடமாக இல்லாத ஒன்றை புதிதாக சிலர் ஆரம்பித்துள்ளனர். இப்படி ஒரு மாதத்தை கடைப்பிடிப்பது அவரவர் சொந்த விருப்பத்தற்குரியது. யார் மீதும் வலுக்கட்டாயமாக திணிக்க முயல்வது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று அறிவித்துள்ளனர். இது தொடர்பான அப்பேரவையின் அறிக்கை: கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நவம்பர் 27ம் தேதி மாவீரர் தினமாக அனுசரிக்கப்பட்டுவருகிறது. அதையொட்டிய வாரம் முழுவதும் உணர்வு பூர்வமான நிக…
-
- 55 replies
- 5k views
-
-
மாகாணசபை முறைமை இரத்துச் செய்யப்பட வேண்டும் என சிறிலங்காவின் கடும் போக்குடைய அமைச்சர்களும், பேரினவாத அமைப்புகளும் கோசம் எழுப்பி வரும் நிலையில், மாகாணசபை முறைமை மாற்றப்பட வேண்டியது அவசியம் என்று சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 2013ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்ட சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தேசிய தராதரங்களைப் பயன்படுத்தி மாகாணசபை முரண்பாடுகளை இல்லாதொழிப்பதே தேசிய நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கான பிரதான ஆயுதம் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: 'எமது மக்களுக்கு அதிகாரப்பகிர்வை அர்த்தமுள்ளதாக மாற்றுவதற்கு தற்போது நாம் மாகா…
-
- 2 replies
- 732 views
-
-
தலைமை நீதியரசரை விமல் வீரவங்ச குழுவினர் விசாரிப்பதா? இலங்கையில் தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப் பிரேரணை தொடர்பில் அமைக்கப்படுகின்ற நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் அரசாங்க கட்சியின் உறுப்பினர்களுக்கு குற்றச்சாட்டுக்களை விசாரிக்கின்ற தகுதி இல்லை என்று சட்டத்தரணிகளின் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. கொழும்பு உச்ச நீதிமன்ற வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை சட்டத்தரணிகள் நடத்திய எதிர்ப்புக் கூட்டமொன்றில் இந்தக் கருத்து முன்வைக்கப்பட்டது. அரசாங்க கட்சியினால் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு தலைமை நீதியரசர் மீதான விசாரணைகளை மேற்கொள்ளத் தகுதி இல்லையென்று ஜனநாயக சட்டத்தரணிகள் சங்கத்தின் உபதலைவர் ச…
-
- 1 reply
- 1.1k views
-
-
யுத்தம் முடிவடைந்த போதிலும், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன: நவனீதம்பிள்ளை [Friday, 2012-11-09 20:39:29] இலங்கையில் தொடர்ந்தும் உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுறுத்தப்பட்ட போதிலும் தொடர்ச்சியாக உரிமை மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தோனேஷியாவின் பாலியில் நடைபெற்ற ஜனநாயகம் தொடர்பான மாநாடு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கில்லார்ட்டும் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படும் விவகாரம் குறித்தும…
-
- 1 reply
- 690 views
-
-
[size=4][/size] [size=4]இலங்கையின் 66ஆவதும் மஹிந்த அரசின் 8ஆவதுமான வரவு செலவுத் திட்டம் (நிதி நிலை அறிக்கை) நேற்று நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் தாக்கல் செய்யப்பட்டது. [/size] [size=4]கடந்த இரண்டு வருடங்களைப் போன்றே இந்த நிதி நிலை அறிக்கையிலும், போரில் வெற்றி ஈட்டிய படையினருக்கு அதிக சலுகைகள் அறிவிக்கப்பட்டபோதும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித சலுகைகளோ, நிவாரணங்களோ வழங்கப்படவில்லை.[/size] [size=4]விண்ணுக்கு எகிறி வரும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் இந்த நிதி நிலை அறிக்கை தரவில்லை. அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான சிறிய சம்பள அதிகரிப்புத் தவிர…
-
- 1 reply
- 431 views
-
-
அடுத்த ஆண்டில் 8500 அகதிகளுக்கே கதவைத் திறக்கிறது கனடா! [Friday, 2012-11-09 18:43:23] அடுத்த ஆண்டு கனடாவிற்குள் அனுமதிக்கப்படவுள்ள 260,000 பேரில் தொழில்சார்ந்த பயிற்சியுடைய, கல்வித்தகுதி மற்றும் வியாபார முதலீட்டாளர்கள் 158,000 பேர் அனுமதிக்கப்படவுள்ளனர். இது முழுத்தொகையின் 62 விழுக்காடாகும். இவ்வாறு வருகை தருபவர்கள் உடணடியாகவே தொழில் வாய்ப்பைப் பெறும் தன்மை இருப்பதோடு, கனடாவின் தேசிய மொழிகளான ஆங்கிலம் அல்லது பிரெஞ்சுத் திறமை உள்ளவர்களாகவே இருக்கப் போகிற படியால் மொழிக் கற்கை, மற்றும் குடியமர்வுச் சேவைகள் போன்றவற்றிக்குச் செலவளிக்கப்படும் பணம் மீதப்படுத்தப்படும். இதற்கு அடுத்த கட்டமாக குடும்ப வகுப்பில் தெரிவு செய்யப்படும், வாழ்க்கைத் துணைகள், பெற்றோர்கள…
-
- 0 replies
- 490 views
-
-
450 ஆபாச படங்களுடன் சிக்கிய பிக்கு. ஆபாச படங்களை தனது மடிக்கணனியில் வைத்திருந்த பிக்கு ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு கெப்பதிகொல்லாவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெலிஓய பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் வைத்து கடந்த 6 ஆம் திகதி குறித்த பிக்கு வெலிஓய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது இவருடைய மடிக்கணனியில் பல ஆபாச படங்கள் இருந்துள்ளன. மேலும் இவருடன் இருந்த இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பிக்கு தன்னை ரத்மலான பாலித தேரர் என அடையாளம் காண்பித்த போதிலும் அவருடைய அடையாள அட்டையில் மித்தெனிய உதித்த என பெயர் குறிப்பிட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர் சில வருடங்களுக்கு முன்னர் இப்பகுதிக்கு வந்துள்ளதுடன் அப்பிரதேச மக்களிடம் தன்னை வௌ;வே…
-
- 5 replies
- 968 views
-
-
இங்கிலாந்து அனைத்துக் கட்சி தமிழ் நாடாளுமன்ற குழுவும், பிரிட்டிஷ் தமிழ் அமைப்பும் இணைந்து, லண்டனில் உள்ள இங்கிலாந்து நாடாளுமன்ற அரங்கில் சர்வதேச தமிழர் மாநாட்டை நடத்தி வருகின்றன. நவம்பர் 7ம் தேதி தொடங்கி 9ம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் ஜி.கே. மணி கலந்து கொண்டார். இம்மாநாட்டில் 07.11.2012 அன்று அவர் ஆற்றிய உரையின் விவரம்: இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டில் நடத்தி முடிக்கப்பட்ட இனப் படுகொலையால் உலககெங்கும் வாழும் தமிழர்களுக்கு ஏற்பட்ட மனவலியும், அதிர்ச்சியும் இன்னும் விலகவில்லை. இந்தச் சூழலில் இம்மாநாடு நடைபெறுகிறது. இலங்கையில் உரிமை கேட்டு போராடிய தமிழர்களுக்கு உரிமை தர வேண்டிய இலங்கை அரசு, இல்லாத காரணங்களைக் கூறி…
-
- 3 replies
- 705 views
-
-
[size=4]இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த தமிழர்களுக்காக, மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களால், "மலேசிய நாடாளுமன்றக் கூட்டமைப்பு" ஒன்று நிறுவப்பட்டுள்ளது. நேற்றையதினம் உருவாக்கப்பட்ட இக் கூட்டமைப்பின் தலைவராக டத்தோ ஜொஷாரி அப்துல், செயலாளராக மனோகரன் மாரிமுத்து ஆகியோருடன் ஏனைய உறுப்பினர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களான டத்தோ மாபூஸ் ஒமார், கோத்தா மலாக்கா, சிம் தோங் இம், சிவராசா ராசையா, யுஸ்மாடி, செனட்டர் இராமகிருஷ்ணன் போன்றோரும் இடம்பெற்றுள்ளனர். தங்களது வீடு, நிலம், உடைமைகள் அனைத்தையும் பறி கொடுத்த நிலையிலும், குடும்பங்கள் சின்னாபின்னமாக்கப்பட்ட நிலையிலும் தமது வாழ்வாதாரத்திற்குப் போராடும் தமிழர்களுக்காக இந்த மலேசிய நாடாளுமன்றக் கூட்டமை…
-
- 0 replies
- 918 views
-