Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தேடப்படும் குற்றவாளிகளான டக்ளஸ், கே.பி. ஆகியோரை தமிழர்களின் தலைவர்களாக்க அரசு முயற்சிப்பது ஏன்? - சுமந்திரன் எம்.பி. இந்தியாவினாலும் இன்ரப்போலினாலும் தேடப்படும் சர்வதேசக் குற்றவாளிகளான டக்ளஸ் தேவானந்தாவையும், கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனையும் தமிழர்களின் தலைவர்கள் ஆக்குவதற்கு அரசு முயற்சி செய்வது ஏன்? இவ்வாறு நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன். தேடப்படும் குற்றவாளிகளான இந்த இருவரையும் தலைவர்களாக்குவதால் அரசுக்கு என்ன லாபம் இருக்கிறது என்றும் அவர் கேட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், கே.பி. எனப்படும்…

  2. வடமாகாண ஆளுநர் கருத்து சபையின் அங்கீகாரம் ஆகாது - உயர் நீதிமன்றம் திவிநெகும' சட்டவரைவுக்கு ஏனைய எட்டு மாகாணங்களிலும் முறையாக அனுமதியைப் பெற்றுவிட்டு வடக்கு மாகாணத்தில் மட்டும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநர் ஒருவரின் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கின்ற அரசமைப்பின் கோட்பாட்டை மீறும் வகையில் உள்ளது. * "திவிநெகும' நடைமுறைக்கு 2/3 பெரும்பான்மை அவசியம் * வரைவில் பல பிரிவுகள் அரசமைப்புக்கு முரணானவை * அதில் ஒரு பிரிவுக்கு வாக்கெடுப்புத் தேவை * அனைத்து மாகாண சபைகளிலும் கருத்து முறையாகப் பெறப்படவேண்டும் எனவே ஆளுநரின் அனுமதியை அங்கீகாரமாக கருத முடியாது. மாகாண சபையின் கருத்து முறையாக பெறப்பட வேண்டும். இவ்வாறு திட்ட…

  3. சர்வதேசத்திற்கு பயப்பட ஆரம்பித்துள்ளது என்று சிறீலங்காவிற்கான கனடியப் பாராளுமன்றக் குழுவின் பிரதிநிதியான றிக் டிக்ஸ்ரா தமிழர்களினூடான சந்திப்பின் போது தெரிவித்தார். சர்வதேசத்தை தமது விருப்பத்திற்கேற்ப நடத்த முடியும் என நினைத்த சிறீலங்கா சர்வதேசத்தின் பலத்தை இப்போது தான் உணர்கிறது. கனடிய மனிதவுரிமை மையத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட இச் சந்திப்பில் கலந்து கொண்ட கனடாவின் சிறீலங்கா விவகாரத்திற்கான உத்தியோகபூர்வ குழுவில் அங்கம் வகிக்கும் மேற்படி பாராளுமன்ற உறுப்பினர் தாங்கள் இந்த ஆண்டு மார்ச் மாதம் மேற்கொண்ட விஜயம் தொடர்பான அறிக்கையை கனடிய அமைச்சரவையின் கவனத்திற்குச் சமர்ப்பித்து விட்டதாகத் தெரிவித்ததோடு. சிறீலங்கா 200…

  4. இலங்கையின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயக மீது அரசாங்கம் கொண்டுவந்துள்ள பதவிநீக்க கண்டன தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் விவரங்களை இலங்கை அரசாங்கம் தற்போது வெளியிட்டுள்ளது. [size=3][size=4]தனது வருமானத்துக்கும் சொத்துகளுக்கும் அவர் முறையாக கணக்கு காட்டவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.[/size][/size] தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதன் மூலம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு அவர் அவப்பெயரை ஏற்படுத்திவிட்டார் என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது. [size=3][size=4]ஷிரானிக்கு எதிராக மொத்தத்தில் 14 குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.[/size][/size] [size=3][size=4]சுமார் இரண்டு கோடி ரூபாயை ரொக்கப் பணமாக கொடுத்து ஒ…

  5. [size=3] [/size][size=3] [size=4]லண்டனில் நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் மாநாட்டில் பங்கேற்பதற்காக புறப்படவிருந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளரும் தீவிர தமிழீழ ஆதரவாளருமான வைகோ அவர்களை செல்லவிடாது தடுப்பதற்காக இந்திய அரசு சதியில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.[/size][/size][size=3] [size=4]உலகமெங்கும் உள்ள தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களை ஒரு குடைக்கீழ் அழைத்து ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்கும் முகமாக லண்டனில் நடைபெறவிருக்கும் மாநாட்டிற்கு உலகமெங்கும் இருந்து தலைவர்கள் ஆர்வலர்கள் பயணத்தை ஆரம்பித்துள்ளார்கள்.[/size][/size][size=3] [size=4]இந்நிலையில் தாய்த்தமிழகத்தில் இருந்தும் பல்வேறு கட்சிகள் அமைப்புகள் சார்பில் பலர் தமது பயணத்தை ஆரம்பித…

  6. இலங்கையின் வடக்கே வன்னிப் பிரதேசத்தில் யுத்த மோதல்களின் போது படுகாயமடைந்து, உடலில் உலோகத் துண்டுகளான குண்டுச் சிதறல்ளுடன் வாழ்கின்ற மாணவர்களுக்கு விசேட வைத்திய வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. யுத்த மோதல்களில் சிக்கி படுகாயமடைந்த பலர் குண்டுச் சிதறல்கள் உடலில் பாய்ந்ததனால், உலோகத் துண்டுகளுடன் கடந்த மூன்று வருடங்களாகப் பெரும் அவஸ்தைகளுடன் வாழ்ந்து வருகின்றார்கள். யுத்தத்தின் எச்சங்களான இவற்றை அகற்றுவதற்கு குறிப்பாக மாணவர்களுடைய உடலில் இருந்து அகற்றுவதற்கு கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் அடிப்படைத் தேவைகள், பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காகக் கூடிய மாவட்ட ஒருங்கிணைப்புக்…

  7. போர்க்குற்றம்சாட்டப்பட்ட சவீந்திர சில்வாவை பிரதி தூதுவராக ஏற்குமா தென்னாபிரிக்கா? சிறீலங்கா | ADMIN | NOVEMBER 6, 2012 AT 22:33 சிறிலங்காவில் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வரும் தென்னாபிரிக்கா, போர்க்குற்றம்சாட்டப்படும் ஒருவரைத் பிரதித் தூதுவராக ஏற்றுக் கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தென்னாபிரிக்காவுக்கான பிரதித் தூதுவராக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை நியமிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில் முக்கிய பங்கு வகித்தவர் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா. இந்தப் போரில் பொதுமக்களின் இலக்குகள் மீது நடத்தப்பட்ட தாக்குத…

    • 2 replies
    • 515 views
  8. எம்.வீ. சன் சீ கப்பலின் மாலுமியை பிணையில் விடுதலை செய்ய உள்ளதாக கனடிய நீதிமன்று அறிவித்துள்ளனர். வன்கூவரின் பிரிட்டிஷ் கொலம்பிய நீதிமன்றம் குறித்த கப்பல் மாலுமியை பிணையில் விடுதலை செய்வதாக அறிவித்துள்ளது. 2010ம் ஆண்டில் சன் சீ கப்பல் மூலம் குறித்த மாலுமி அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கப்பலில் 492 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்திருந்தனர். லெஸ்லி ஜனா இமானுவல் என்வரே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளார். சட்டவிரோத ஆட்கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் தடுத்து வைக்கப்பட்ட ஆறு பேரில், ஜனா இமானுவல் மூன்றாவதாக பிணையில் விடுதலை செய்யப்படவுள்ளார். ஜனா இமானுவெல் 45000 டொலர்கள் பிணையில் விடுதலை செய்யப்படவுள்ளார். ஏன…

  9. [size=3]இலங்கையின் தலைமை நீதிபதிக்கு எதிரான அரசியல் குற்றப் பிரேரணையை எதிர்க்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்தது.[/size] [11/6/2012 ] [cmr news bulletin ] [size=2]இலங்கையின் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிராக அரசாங்கம் சமர்ப்பித்த அரசியல் குற்ற பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள 14 குற்றச்சாட்டுக்களும் ஆதரமற்றவையென்பதால், அதனை நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் எதிர்ப்பதென எதிர்க்கட்சிகளான ஐக்கியதேசிய கட்சியும் ஜே.வி.பியும் தீர்மானித்துள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் செயலாள…

  10. [size=4]காணாமல் போதல் பற்றிய ஐ.நாவின் செயற்குழுவை இலங்கைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுமாறு ஐ.நா. செயலாளர் நாயகத்திடமும் அது தொடர்பில் ஆவனம் செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமும் காணாமல் போனமை தொடர்பான இலங்கை விசாரணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. கடத்தல்களில் இருந்து சகலரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாயத்தில் இலங்கை கையொப்பமிட வேண்டுமெனவும் இலங்கையில் இடம்பெற்ற காணாமல் போன சம்பவங்களை ஆராய ஒரு சுதந்திரமான ஆணைக்குழுவை அமைக்குமாறு கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செய்துள்ளன அதனை பூரணமாக செயற்படுத்த வேண்டுமெனவும் இந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. காணாமல் போனமை தொடர்பான விசாரணைக்குழுவின் செயலாளர் எஸ்.மகேந்திரன் மற்றும் காணாமல்…

    • 0 replies
    • 581 views
  11. ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பூகோள காலகிரம மீளாய்வுக் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று இலங்கைக்குப் பாதிப்பு எதுவும் ஏற்படாதவகையில் செயற்பட்ட இந்தியா, அபாயப் பொறியிலிருந்து கொழும்பைக் காப்பாற்றி இறுதிநொடியில் அந்தர்பல்டி அடித்தது. அதேசமயம் இலங்கை தொடர்பில் முன்னுக்குப் பின் முரணாக நடந்துகொள்ளும் நாடுகள் குறித்து அமெரிக்கா, பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகள் கடும் விசனத்தை வெளியிட்டுள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மீளாய்வுக்கூட்டம் கடந்த வியாழக்கிழமை நடந்தபோது அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டிருந்த இந்தியா இலங்கையில் 13 ஆவது அரசமைப்புத் திருத்த அமுலாக்கம், வடக்கு, கிழக்கின் இராணுவ முகாம்கள் அகற்றல் மற்றும் படைக்கு…

  12. புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் முன்னாள் போராளிகள் காணாமல் போகின்ற சம்பவங்கள் வடக்கில் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் வன்னியி;ல் சுமார் ஏழு இளைஞர்கள் ஓரே சந்தர்ப்பத்தில் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுக்குடியிருப்பை அண்டிய பகுதியொன்றில் அவர்கள் காணாமல் போயிருப்பதாக கூறப்படுகின்றது. புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் ஒன்று கூடியிருந்த இடமொன்றில் வைத்து படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு பிடித்து செல்லப்பட்டதாக அத்தகவல்கள் மேலும் கூறுகின்றன. அச்சங்காரணமாக அவர்கள் பிடித்து செல்லப்பட்டமை தொடர்பாக குடும்பத்தவர்கள் புகார் எதனையும் தெரிவித்திருக்கவில்லை. எனினும் அவ்வாறு பிடித்து செல்லப்பட்டவர்…

  13. அடைக்கலநாதனின் மைத்துனர் சடலமாக மீட்பு சனிக்கிழமை, 03 நவம்பர் 2012 10:27 0 COMMENTS தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் மைத்துனர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 30ஆம் திகதி காணாமல் போனதாக பொலிஸில் முறையிடப்பட்ட சின்னத்துரை இந்திரேஸ்வரன் (53) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு - தமிழ்மிரருக்கு தெரிவித்தது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நானுஓயா, பங்களாவத்தையில் 111ஆம் இலக்க மைல்கல்லுக்கு அருகில் சடலமொன்று மீட்கப்பட்டிருந்தது. அச்சடலம் அடையாளம் காணப்படாமல் இருந்த நிலையில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் மனைவியினால் அடையாளம் காட்டப்பட்டது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்க…

  14. ஐநாவின் மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வுக் கூட்டத்தில் இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ள வெற்று உறுதிமொழிகளை ஐநாவின் உறுப்பு நாடுகள் நம்புவதை நிறுத்த வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் அரசாங்கம் நாட்டில் முன்னெடுத்துள்ளதாக மனித உரிமைகள் பேரவையில் காட்டியுள்ள பல விடயங்களுக்கும் உண்மையில் இலங்கையில் நிலவும் களநிலைமைகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் இருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கை தொடர்பான நிபுணர் யொலாண்டா ஃபொஸ்டர் சுட்டிக்காட்டினார். திருகோணமலையில் நடந்த ஐந்து மாணவர்களின் படுகொலைகள், ஏசிஎஃப் நிறுவனத்தின் தன்னார்வத் தொண்டர்கள் மூதூரில் கொல்லப்பட்டமை உள்ளிட்ட பல சம்பவங்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இன்னும் நீதி கி…

  15. அனுமதியின்றி வெளிநாடு செல்லும் அமைச்சர்களது பதவி ரத்து செய்யப்படும்: மஹிந்த எச்சரிக்கை! [Tuesday, 2012-11-06 08:24:22] அனுமதியின்றி வெளிநாடு சென்றால் அமைச்சு மற்றும் பிரதி அமைச்சர் பதவிகள் ரத்து செய்யப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.அனுமதியின்றி வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ளும் அல்லது வரவு செலவுத் திட்ட விவாதங்களில் பங்கேற்காத ஆளும் கட்சி உறுப்பினர்கள் பணியிலிருந்து நீங்கியவர்களாக கருதப்படுவர். அரசாங்கத்தின் முக்கிய தீர்மானங்களின் போதும், நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போதும் சில அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்கின்றனர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் கலந்து …

  16. [size=4][/size] [size=4]By Priyarasa 2012-11-06 11:36:53[/size] [size=4]ஆனைக்கோட்டை புளியங்கிணற்றடி பிள்ளையார் ஆலயத்தில் இருந்த சுவாமி வாகனங்கள் இரண்டு திருடப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஆலய நிர்வாகத்தினரால் முறையிடப்பட்டுள்ளது. இந்த வாகனகள் ஆலய வாகன சாலையில் வைக்கப்பட்டு இருந்ததாகவும் இதனை ஆலயத்தினுள் நுழைந்த திருடர்கள் மிகவும் நூதனமான முறையில் திருடிச் சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது. ஆலய வாகன சாலையில் வைக்கப்பட்டு இருந்த குதிரை வாகனம் மற்றும் இடப வாகனம் என்பனவே இவ்வாறு திருடப்பட்டுள்ளன. இதுதொடர்பில் மானிப்பாய் பொலிசார் தீவிர புலன் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.[/size] [size=4]http://www.virakesar...al.php?vid=1484[/size]

  17. சிறிலங்காவில் பொறுப்புக்கூறும் விவகாரங்களில் இன்னும் கூடுதலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறிலங்காவுக்கான தூதுவர் பேர்னாட் சவேஜ் தெரிவித்துள்ளார். “காணாமற்போதல்கள் உள்ளிட்ட விவகாரங்கள், குறிப்பாக ஊடகவிலாளர்கள் கட்டாயமாக காணாமற்போதல்கள் கவலையளிக்கின்றன. பல பிரச்சினைகள் தீர்க்கப்படாதுள்ளன. லசந்த விக்கிரமதுங்க கொலை ,பிரெஞ்சுத் தொண்டர் நிறுவனப் பணியாளர்களின் கொலைகள், திருகோணமலையில் மாணவர்கள் கொலை உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை. இந்தப் பிரச்சினைகளுக்கு பொருத்தமான முறையில் தீர்வு காணப்படவில்லை. காணாமற்போனவர்கள் விவகாரங்களுக்கு திருப்தியான முறையில் பதிலளிக்கப்படவில்லை. இதற்கு விளக்கங்கள் தேவை. குற்றவாளி…

  18. [size=4]By V.Priyatharshan 2012-11-06 14:10:47[/size] [size=4]இலங்கைக்கும் தென் கொரியாவின் தலைநகர் சியோலுக்குமிடையிலான விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற தென் கொரியாவின் தேசிய தின நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கொழும்பிற்கும் தென் கொரியத் தலைநகர் சியோலுக்குமிடையிலான நேரடி விமான சேவையை அடுத்த மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்படும். கடந்த 28வருடங்களுக்கு முன் கொழும்பிற்கும் சியோலிற்கும் இடையிலான நேரடி விமான சேவை இடம்பெற்றது. எனினும் சில காரணங்களினால் 1984ஆம் ஆண்டுடன் இந்த விமான சேவை இடைநிறுத்தப்பட்டது. …

  19. தமிழ்நாடு, மதுரையிலுள்ள தமிழ் அகதிகள் நலன்புரி நிலையத்திலுள்ள இலங்கை அகதிகள் தமிழ்நாட்டு அரசாங்கத்தால் தரக்குறைவாக நடத்தப்படுவதாக 'த ஹிந்து' பத்திரிகை நேற்று குற்றஞ்சாட்டியது. [size=2][size=4]சாதாரண வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகள் இவர்களால் இன்னும் எட்டப்படாதுள்ளன. இலங்கையில் இடம்பெற்ற 1983ஆம் ஆண்டு கலவரத்தைத் தொடர்ந்து தமிழ் அகதிகளுக்கென தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட 103 நலன்புரி நிலையங்களில் அணையூர் மற்றும் கூடல்நகர் நலன்புரி நிலையங்களும் அடங்குகின்றன. அணையூர் நலன்புரி நிலையத்தில் 31 தொகுதி வீடுகளுள்ளன. ஒருதொகுதி வீட்டில் 24 குடும்பங்கள் வசிக்கின்றன. 1983இல் கட்டப்பட்ட இவ்வீடுகள் உடைந்த கூரைகள் மற்றும் சுவர்களுடன் காட்சியளிக்கின்றன. கண்காணிப்பு ந…

  20. [size=3][size=4]இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அவரது சகோதரர்களும் அதிகாரத்தை விஸ்தரிப்பதில் முனைப்புக் காட்டி வருவதாக லண்டனிலிருந்து வெளியாகும் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.சுயாதீனமான விசாரணைகள் நடத்துமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளத் தவறியுள்ளதாகவும்.[/size][/size] [size=3][size=4]குற்றச்செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் விசாரணை நடத்தல் ஆகியவற்றைவிடவும் அரசாங்கம் வேறும் விடயங்களில் கவனம் செலுத்தி வருகின்றது.[/size][/size] [size=3][size=4]அண்மையில் நீதிமன்றத்தின் மீதான அழுத்தங்கள் ஏற்புடையதல்ல மாற்றுக் கொள்ளைகையுடையோரை அரசாங்கம் அடக்குமுறைக்கு உட்படுத்தி வருவதாக மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிய…

  21. ஆனந்த விகடன் கொழுத்திப் போட்ட நெருப்பில் தமிழீழ இலட்சியம் கரைந்து போகாது! [Tuesday, 2012-11-06 11:39:07] தமிழக வார சஞ்சிகையான ஆனந்த விகடன் கொழுத்திப் போட்ட நெருப்பு ஒன்று, தமிழீழ மக்களின் இதயங்களை ரணகளமாக்கி, கொதிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. இதற்காகத்தானா இதுநாள் வரையும் ஆனந்தவிகடன் இரை போட்டுக் காத்திருந்ததா, என்ற சந்தேகத்தையும் உருவாக்கியுள்ளது. 'நேற்று... நான் விடுதலைப் போராளி! இன்று... பாலியல் தொழிலாளி' என்ற கட்டுரை ஈழத் தமிழ் மக்களைச் சுற்றி இன்னொரு வலை விரிக்கப்படுகின்றதா? என்ற கேள்வியையே எழுப்பியுள்ளது. வக்கிரங்களைத் தோண்டித் துருவுவதும், அதன்மூலம் வாசகர் மத்தியில் மனக்கிளர்ச்சியைத் தூண்டுவதும் தமிழகப் பத்திரிகை, சஞ்சிகைகளின் தாராளப் போக்காகவே உள்…

  22. [size=4]விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், முக்கிய பங்காற்றிய இலங்கை இராணுவத் தளபதிகள் மூவர், வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் இராஜதந்திரிகளாக இரண்டாம் நிலைப் பதவிகளில் அமர்த்தப்படவுள்ளனர்.[/size] [size=4]வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சமர்ப்பித்த இது தொடர்பான திட்டத்துக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நாவுக்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகப் பணியாற்றும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, தென்னாபிரிக்காவுக்கான பிரதித் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.[/size] [size=4]ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவின் முன்னாள் தளபதியும், தற்போது இராணுவத் தலைமையகத்தில் பொது அதிகாரிகளுக்கான பணிப்பாளர் நா…

  23. இலங்கை அகதி படுகொலை By General 2012-11-06 11:15:28 தமிழ்நாடு - கரூர் அருகேயுள்ள ராயனூர் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த இலங்கை அகதியான ஜெயபிரகாஷ் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. அவரின் கொலையை தடுக்க முனைந்த அவரது இளைய சகோதரர் கலைச்செல்வன் என்பவரும் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயங்களுடன் அரச மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நிதி கொடுக்கல் வாங்கல் முறுகல் நிலை காரணமாக ஜெயபிரகாஷ் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கொலை தொடர்பாக அகதி முகாமை சேர்ந்த நிலாகரன், சுதாகரன் ஆகியோரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://www.virakesari.lk/article/loc…

  24. 22ஆண்டுகளாக பின்னர் சிறீலங்கா கடற்படையினர் பொன்னாலை மக்களிடம் அவர்களது காணிகளை கையளித்துள்ளனர். படையினர் நிலைகொண்ட காலத்தில் மேற்கொண்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் யாவற்றையும் அழித்துவிட்டே வெளியேறிச்சென்றனர். போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்திருந்த கடந்த 1990ம் ஆண்டு பொன்னாலை தொடக்கம் மாதகல் கீரிமலை வலி. வடக்கு காங்கேசன்துறை வரையான கடற்கரைப் பகுதிகளை சிறிலங்காப் படையினர் கைப்பற்றியிருந்தனர். இதனையடுத்து இப் பகுதிகள் உயர்பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டு சிறிலங்காக் கடற்படையினரால் ஆண்டு அனுபவிக்கப்பட்டு வந்தது. யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் உயர் பாதுகாப்பு வலயங்கள் சிறிது சிறிதாக விடுவிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த வாரம் பொன்னாலைஇ மாதகல் மேற்கு ஆகிய பிரிவுகளில் உள்ள பாது…

  25. ​ தமிழர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் செயன்முறையானது மீண்டும் ஒருமுறை விடுதலை போராட்டத்திறகு வழிவகுக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை 12வது இந்து சமுத்திர பிராந்திய ஒத்துழைப்பு மாநாட்டில் சந்தித்த பொழுது தெரிவித்தார். இலங்கைக்கான இந்திய வதிவிட பிரதிநிதியின் மதிய போசன நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவர்கள் தமிழர்களால் கோரப்படுகின்ற வட கிழக்கு பிரதேசங்களிற்கான அதிகாரப் பகிர்வினை வழங்குவதில் தமது அரசாங்கம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விளக்கமளிப்பதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டார். 1983ம் ஆண்டு முதல் அதாவது கடந்த 26 ஆண்டுகளாக நாட்டின் மொத்த சனத்தொகையி…

    • 6 replies
    • 912 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.