Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [size=2][size=4]உனவட்டுன உல்லாசப்பயணிகள் ஹோட்டலொன்றின் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக வங்கியிலிருந்து எடுத்துச்செல்லப்பட்ட 15 லட்சம் ரூபா பணம், மோட்டார் சைக்கிள்களில் வந்த கொள்ளையர்கள் சிலரால் துப்பாக்கிமுனையில் கொள்கையிடப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளொன்றில் இந்த பணம் எடுத்துச்செல்லப்பட்ட போது, யக்தெஹிமுல்ல பகுதியில் வைத்து வழிமறித்துள்ள மோட்டார் சைக்கிள்கள் இரண்டில் வந்த கொள்ளையர்கள், அதனை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.[/size][/size] [size=2][size=4]http://www.tamilmirr...50540--15-.html[/size][/size]

  2. [size=4]சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர் ஒருவரால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை எதிர்க்குமாறு கோரி அமெரிக்காவில் உள்ள சிறிலங்காத் தூதரகத்தின் ஊடாக சிறிலங்கா அரசாங்கமானது பரப்புரை நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளது. இத்தீர்மானம் இவ்வாண்டு சமர்ப்பிப்பதை தடுக்கும் நடவடிக்கையில் ஏற்கனவே சிறிலங்காத் தூதரகம் செயற்பட்டுள்ளதாக வெளி விவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 177வது சபைத் தீர்மானமானது அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் மீளவும் அமெரிக்க காங்கிரஸ் சபையில் சமர்ப்பிக்கப்படலாம் என்கின்ற நிலையிலே தற்போது மீண்டும் இதனை எதிர்க்குமாறு கோரி சிறிலங்கா அரசாங்கம் பரப்புரை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம…

  3. முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் மீளக்குடியமர்ந்த மக்களிடம் குடும்ப விபரங்களை இராணுவத்தினர் திரட்டி வருகின்றனர். இத்தகைய நடவடிக்கையினால் பொதுமக்களிடையே அச்சநிலை தோன்றியுள்ளது. இறுதிப் போரின்போது இடம்பெயர்ந்து பின் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மந்துவில், கோம்பாவில், புதுக்குடியிருப்பு மேற்கு இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு கிழக்கு சிவநகர் உட்பட பல பகுதிகளிலும் இவ்வாறு குடும்ப விபரங்களைச் சேகரிக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இராணுவ சிவில் அலுவலகத்தில் இருந்து வீடு வீடாகச் சிவில் உடையில் வரும் இராணுவத்தினர் வீடுகளில் தங்கியிருப்போரின் பெயர் விபரங்களைப் பதிவு செய்து வருகின்றனர். …

  4. இறுதிப் போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் இரு மூடைகளில் கட்டப்பட்டிருந்த சுமார் 100 கிலோ தங்கநகைகள் இரும்பு சேகரிகக்ச் சென்ற பொதுமக்களால் மீட்கப்பட்டது. இதனையறிந்த இராணுவத்தினர் அந்த தங்கநகைகளை மக்களிடம் பறித்துச் சென்றுள்ளனர். முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறுசிறு பொதிகளாக்கப்பட்ட தங்க நகைகள் இரண்டு மூட்டைகளில் புதைக்கப்பட்டிருந்த போது அதனை இரும்பு சேகரிக்கச் சென்ற பொதுமக்கள் மீட்டதாகத் தெரியவருகின்றது.இவர்கள் தங்கம் மீட்டதை அறிந்த அப்பகுதிப் படையினர் அங்கு விரைந்து வந்து அவர்களிடம் இருந்த தங்கத்தை பறிக்க முயன்ற போது அங்கு பெரும் அமளி நிலவியது. இருந்தும் படையினர் பொதுமக்களை அச்சுறுத்திவிட்டு தங்க மூட்டைகளைக் கைப்பற்றிச் சென்றுள்ளனர்.தமிழீழ வ…

  5. ஒரே தடவையில் ஐந்து குழந்தைகள் பிரசவம் - கண்டி வைத்தியசாலையில் சம்பவம்: [Monday, 2012-10-15 11:31:04] கண்டி வைத்தியசாலையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான தாயொருவர் ஐந்து சிசுக்களை பிரசவித்த சம்பவமொன்று இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. 8 மாதங்களில் சத்திரசிகிச்சை மூலம் இந்த சிசுக்கள் பிரசவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் மூன்று ஆண் குழந்தைகளும் இரு பெண் குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி ஐந்து சிசுக்களினதும் உடல் நிலைகள் ஆரோக்கியமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் ஒரே தடவையில் ஐந்து குழந்தைகள் பிரசவிக்கப்பட்டமை இது இரண்டாவது சந்தர்ப்பமாகும். ஏற்கனவே, ஜனாதிபதியின் பாதுகாப்ப…

  6. [size=2] [size=4]ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருப்பதற்கு உதவிகளை வழங்கியதாக ஏற்றுக்கொண்டுள்ள முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, இருந்த போதிலும் ஜனாதிபதியைப் பதவி கவிழ்ப்பதற்கு தான் இப்போது பொதுமக்களின் உதவியைக் கோரி அறைகூவல் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=2] [size=4]ஜனாதிபதி ஆட்சியில் நீடிப்பதற்கு தாம் உதவிகளை வழங்கியதாக சிலர் குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்தக் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்வதாகவும் நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். ஹெல்பிங் ஹம்பாந்தோட்ட தொடர்பான வழக்கில் தாம் ஜனாதிபதிக்கு சார்பாக தீர்ப்பளித்தமையினால், ஜனாதிபதி பதவியில் நீடிக்க முடிந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாகவே ஜனாதிபதி…

  7. புதுக்குடியிருப்பைச் சேர்ந்த இளைஞர் கட்டாரில் அடித்துக் கொலை மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஹட்டாரில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு, கிண்ணையடி வீதியை சேர்ந்த கிருஸ்ணபிள்ளை திருச்செல்வம் (28வயது) என்ற இளைஞனே இவ்வாறு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த வியாழக்கிழமை இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் குடும்பத்தினருக்கு ஹட்டாரில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. வாய்த் தர்க்கம் ஒன்றினைத் தொடர்ந்து நான்கு பேரினால் இவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரை தாக்கியவர்களும் புதுக்…

  8. [size=5]கூட்டமைப்பின் புதுடில்லி விஜயம் - இந்தியா என்ன சொல்லக் கூடும் என்பதற்கு அப்பால் இந்தியாவால் என்ன செய்ய முடியும்?[/size] யதீந்திரா அடுத்த மாதம் 1ம் திகதி இலங்கை விவகாரம் மீண்டும் ஐக்கிய நாடுகள் சபையில் விவாதிக்கப்படவுள்ள சூழலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயம் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது. கடந்த மாதம் ஜனாதிபதி மகிந்த ராஐபக்ச பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து திரும்பியிருக்கின்ற சூழலிலேயே கூட்டமைப்பின் மேற்படி விஜயம் இடம்பெற்றுள்ளது. ஏழு பேர் கொண்ட குழுவினராக சென்றுள்ள த.தே.கூட்டமைப்பினர், இந்திய பிரதமர் மன்மோகன்சிங், வெளிவிவகாரச் அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோரை சந்திக்கக் கூடுமென்று எதிர்பார்க்கப்படு…

    • 4 replies
    • 850 views
  9. சட்டவிரோத புகலிடக் கோரிக்கையை தவிர்க்கவும் - அவுஸ்திரேலியா பகிரங்க அறிவிப்பு இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு சட்ட விரோத முறையில் புகலிடம் கோரி வருவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அவுஸ்திரேலிய அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்துள்ளது. இலங்கையிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியா செல்லும் சட்ட விரோத பயணிகளின் ௭ண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிவித்தலை அவுஸ்திரேலிய அரசாங்கம் விடுத்துள்ளது. இலங்கையிலிருந்து இந்த ஆண்டு சட்ட விரோதமான முறையில் புகலிடம் கோரி அவுஸ்திரேலியா செல்ல முயன்றார்கள் ௭ன்ற சந்தேகத்தின் பேரில் இலங்கை பொலிஸாரினாலும் கடற்படையினராலும் இதுவரை சுமார் 2850 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கடந்த மாதத்தில் மட்டும் பெண்கள் குழந்தைகள் உட்பட 1…

    • 1 reply
    • 553 views
  10. 13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் - கோதபாய ராஜபக்ஷ 14 அக்டோபர் 2012 13ம் திருத்தச் சட்டம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் அல்லது காலசூழ்நிலைகளுக்கு அமைவாக திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமேன அவர் வலியுறுத்தியுள்ளார். யுத்தத்தின் பின்னரான அபிவிருத்திப் பணிகளுக்கு 13ம் திருத்தச் சட்டம் பாரிய தடையாக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தித் திட்டங்களை சீர்குலைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகளுக்கு இடமளிக்க முடியாது என அவா குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற…

  11. இராணுவப் புலனாய்வாளர்களின் தாக்குதலுக்குள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நல்லூர் பிரதேசசபை தலைவர் பிரேமகுமார் வசந்தகுமாரை த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சென்று பார்வையிட்டுள்ளார். நல்லூர் பிரதேசசபைக்கு சொந்தமான காணியை இராணுவம் அத்துமீறி அடாவடித்தனமாக ஆக்கிரமிப்பதற்கு எதிராக நல்லூர் பிரதேசசபை சட்ட ரீதியான மற்றும் ஜனநாயக வழியிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில்,மேல் நீதிமன்றில் இக்காணி தொடர்பான வழக்கை தொடர்வதற்கான ஆவணங்களை நல்லூர் பிரதேசசபை தலைவர் கொண்டு சென்று கொண்டிருந்தபோது அவர் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது இந்த நாட்டில் நீதி அஸ்தமித்து இர…

  12. பங்களாதேஷில் பௌத்த விகாரைகள் சேதமாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கையில் உள்ள சகல முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளாவிட்டால் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என பௌத்த பிக்குகளால் கண்டியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷில் பௌத்த விகாரைகள் சேதமாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டியில் நேற்று மாலை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று பௌத்த பிக்குகள் தலைமையில் இடம்பெற்றது. பௌத்த மதத்தை பாதுகாக்கும் இயக்கம் மற்றும் பொதுபலசேனா இயக்கமும் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்த இவ் ஆர்ப்பாட்டத்தில் பெருமளவு பௌத்த பிக்குகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக ஆரம்பமான …

  13. இலங்கைக்கு எதிராக இன்னுமொரு பிரேரணை: தடுக்கும் முயற்சியில் மகிந்த அரசாங்கம். சிறீலங்கா | ADMIN | OCTOBER 14, 2012 AT 11:17 இலங்கைக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள மேலும் ஒரு பிரேரணையை தடுத்து நிறுத்தும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் தனிக்குழு அமைத்து, சுயமாகவும், சுதந்திரமாகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திய பிரேரணை ஒன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மிச்சேல் கிரிமினால் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஏற்கனவே இந்த பிரேரணை கடந்த 2011ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட போதும், அதன் மீதான வாக்கெடுப்பு இடம்பெறவில்லை. இந்த…

  14. ஜெனீவா கூட்டத்திற்கு சிங்களம் 15 கோடி ரூபா ஒதுக்கீடு. சிறீலங்கா | ADMIN | OCTOBER 14, 2012 AT 08:39 ஜெனீவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை அமர்வில் சிறிலங்கா அரசின் பிரதிநிதிகள் கலந்து கொள்வதற்காக ஏற்படும் செலவுகளுக்கு 15 கோடி ரூபாவை அரசு ஒதுக்கியுள்ளது. இந்தத் தொகையை வழங்குமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கடந்த வாரம் பாராளுமன்றத்தில் மதிப்பீட்டு அறிக்கை ஒன்றினைச் சமர்ப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது இவ்வாறிருக்க, மனித உரிமைப் பேரவை மகாநாட்டுக்கு சிறிலங்கா அரச தரப்பில் யாரைத் தலைமை தாங்கச் செய்வது என்பது தொடர்பில் இதுவரை எவ்வித முடிவும் எட்டப்படவில்லை எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. http://thaaitamil.com/?p=3521…

    • 2 replies
    • 507 views
  15. [size=4](சனத் கமஹே)[/size] [size=2][size=4]நாட்டில் செயற்கை மழையினை உருவாக்க சீனாவின் உதவியை இலங்கை அரசாங்கம் கோருகின்றது என அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அம்பலாங்கொட, கொகல்ல கிராமிய சுகாதார நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். எந்தவிதமான சவால்களையும் முறியடிப்பதற்கான தைரியம் அரசாங்கத்திடம் உள்ளது என அவர் தெரிவித்தார். வரட்சி என்பது எமது நாட்டு புதிய கலாசாரமல்ல. இந்த வரட்சியை கட்டுப்படுத்துவதற்கு பல தற்காலி நடவடிக்கைளை முன்னர் மேற்கொண்டிருந்தோம். எனினும் தற்போது வரட்சிக்கு முகங்கொடுக்க தயாரகுதல் மாத்திரமின்றி இதன் மூலம் நன்மையடையவும் உள்ளோம் என அமைச்சர் குறிப்பிட்டார். செயற்க…

  16. (காலச்சுவடு இதழ்153இல் வெளிவந்த எம்.ஏ.நுஃமானின் நேர்காணலுக்கான எதிர்வினை) எழுபதுகளில் “ஈமானைக் கொன்றவன் நான்” என்று இலங்கை வானொலியில் கவிதை பாடிய நுஹ்மான், அன்று முஸ்லிம்கள் பலரால் காரசாரமாக விமர்சிக்கப்பட்டார். அப்போது நுஹ்மான் ஒரு மாவோயிஸ்ட்; நா. சண்முகதாசன் தலைமையிலான சீனச் சார்பு காம்யூனிஸ்ட் கட்சியின் அனுதாபி. இன்றைய 2012இன் நுஹ்மான், முஸ்லிம் தேசியவாதியாக-ஒற்றைப்படையான அகவயக் கருத்துகளை முன்வைத்திருப்பது ஆச்சரியத்தையே தருகிறது! அவர் சொன்னதிலும் சொல்லாமல் விட்டதிலுமுள்ள நுண்ணரசியல் ஆராயத்தக்கது. 1. ‘இஸ்லாமிய உயர்குழாத்தினர்’ “. . .தாங்கள் அராபிய வழித்தோன்றல்கள் என்றும் தங்களுடையது தூய அரபு ரத்தம் என்றும் வாதிட்டனர். தங்கள் மூதாதையர் தமிழ்ப் …

  17. [size=3] [/size][size=3] [/size][size=3] [/size][size=3] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ராஜ மரியாதையுடன் அழைத்துப் பேசும் இந்தியாவுக்கு, தமிழகத்தை சீனா கைப்பற்றும்போது தான் எல்லாமே தெரியவரும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். இலங்கையில் ஈழ மொன்றை அமைப்பதற்கு இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டுச்சதியில் இறங்கியுள்ளன. இலங்கை விடயத்தில் தேர்ச்சிபெற்ற நிருபமாராவ் அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டதன் நோக்கமும் இதுதான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய அரசின் அழைப்பின் பேரில் அங்கு சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, நேற்றுமுன் தினம் அந்நாட்டின் பிரதமர்…

  18. [size=4]"ஒப்பரேஷன் சக்ஸஸ்! ஆள் அவுட்!!" என்ற நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இந்திய விஜயம் அமைந்திருக்கின்றது. இந்தியப் பயணம் வெற்றிகரமாக அமைந்திருந்தது என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரன் எம்.பி.யும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்திருக்கின்றார்கள். பயணம் வெற்றி சரி தமிழ் மக்களுக்கு இதன் மூலம் என்ன பலன் கிடைத்தது எனக் கேட்டடால் சம்பந்தனும் சரி மற்றவர்களும் சரி பதிலளிக்கக்கூடியவர்களாக இல்லை.[/size] [size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது 3 நாள் புதுடில்லி விஜயத்தை முடித்துக்கொண்டு ஞாயிற்றுக் கிழமை கொழும்பு திரும்பியுள்ள நிலையில், அவர்களுடைய விஜயத்தின் பலாபலன்களை ஆராயும் போது இந்தப் பதில்தான் கிடைக்கின்றது. வழமைபோலவே அரசியல் தீர…

  19. [size=3][size=4]எமது மக்களுக்கு துரோகம் இழைக்கத் தயாரில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தெளிவான வாக்குறுதிகள் இன்றி பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.[/size] [size=4]தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரத்தில் கொடுத்து வாங்கும் கொள்கையில் தமிழ் மக்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.[/size] [size=4]ஐக்கிய இலங்கைக்குள் நடைமுறைச் சாத்தியமுடைய, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நிரந்தர தீர்வுத் திட்டமொன்றை பெற்றுக் கொடுக்கவே தமது கட்சி விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.[/size] [size=4]ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி மற்ற…

  20. இந்தியா சென்றிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு ௭ம்.பி.க்கள் குழு தமிழகத்திற்கு விஜயம் செய்யாமல் புதுடில்லியில் இருந்து இன்று இலங்கை திரும்புகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், ௭ம்.ஏ.சுமந்திரன் அ.விநாயகமூர்த்தி, பொன். செல்வராஜா ஆகியோர் கடந்த 10ஆம் திகதி புதுடில்லி சென்றிருந்தது தெரிந்ததே. http://www.seithy.co...&language=tamil

  21. இலங்கைத் தமிழரின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் இந்திய அரசுடன் இணைந்து செயற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கியுள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது இந்த இணக்கம் எட்டப்பட்டதாக இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களைச் சந்தித்த இந்தியப் பிரதமர் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதில் இந்தியாவுடன் இணைந்து கூட்டமைப்பு செயற்பட வேண்டும் என்று கோரியதை அடுத்து இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் நேற்றுமாலை 5 மணியளவில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேச்சு நடத்தினர். சுமார் 45 நிமிட நேரம் இ…

  22. கூட்டமைப்பினரின் இந்திய விஜ(ய)த்தால் உடனடிப்பலன் பெற்றவர் யார்? [sunday, 2012-10-14 10:23:03] தேவர்களும் அசுரர்களும் பாற் கடலைக் கடைந்த போது முதலில் வெளி வந்தது ஆல கால விஜமே. அதன் பின்னரே அமுதம் கிடைத்தது. அதையும் மாறு வேஜதார அசுரன் ஒருவன் பெற்று உட்கொண்டதால் கிருஸ்ணாவின் அகப்பை வெட்டால் இருவர் தோன்றினரென கிழக்கின் அன்றைய அந்தப் புராணம் விரிந்து செல்கிறது. புராணம் என்பது புராதன காலத்தில் இது நடந்தது என்பதாகும். இவ்வாறே இதிகாசம் என்றால் இது தான் கதை என்ற பொருள்படும். இது ஒரு புறமிருக்க இந்த இந்தியாவின் இந்து சமுத்திரப் பிராந்தியத்தை கூட்டமைப்பினரும் மகிந்த அரசும் இந்தியப் பயணங்கள் என்ற மத்துக்களால் கடையும் இன்றைய 'பேச்சு வார்த்தைப் புராணம்' தொடர்கையில் இன்ற…

    • 1 reply
    • 665 views
  23. அதுரலியே ரத்தின தேரரிடம் தமிழ் பேசும் அரசியல்வாதிகள் பாடம் படிக்க வேண்டும்! ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தின தேரர், தான் எதிர்வரும் வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் இருந்து விலகி இருக்க போவதாக சொல்லியுள்ளார். தாம் அங்கம் வகிக்கும் அரசாங்கத்துக்கு அழுத்தம் தருவதற்காக அவர் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளார். தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் அரசியல் நலன்களுக்கு விரோதமான திவிநேகும என்ற வாழ்வின் எழுச்சி சட்டமூலத்திற்கும், உள்ளூராட்சி தேர்தல் திருத்த சட்டமூலத்திற்கும் சத்தமில்லாமல் ஆதரவாக வாக்களித்த அரசுக்கு ஆதரவு அளிக்கும் தமிழ் பேசும் அமைச்சர்களும், எம்பீக்களும் அத்துரலியே ரத்தின தேரரிடம் பாடம் படிக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவ…

  24. [size=5]அத்துரலியே ரத்தின தேரரின் சோக கீதம்: [/size] [size=5]தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?[/size] 2013ம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்திற்கான வாக்கெடுப்பை புறக்கணிக்க போவதாக அத்துரலியே ரத்னதேரர் தெரிவிப்பு. 2013ம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்திற்கான வாக்கெடுப்பில் இருந்து விலகி இருக்க போவதாக, ஜாதிக ஹெல உருமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்னதேரர் தெரிவித்துள்ளார்.உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். யுத்த காலத்தின் போது ஜாதிக ஹெல உறுமயவை, அரசாங்கம்பெரிதாக பயன்படுத்தி இர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.