ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143414 topics in this forum
-
வடக்கு கிழக்கு மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்: நவிபிள்ளை குழுவிடம் அரசு வாக்குறுதி இலங்கையில் மனித உரிமைகள் சூழல் பற்றி மதிப்பிடுவதற்காகவும், படிப்பினைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இலங்கையில் செயல்படுத்தப்படும் விதத்தில் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குவதற்காகவும் ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகத்தைச் சேர்ந்த இரண்டு பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர். ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகத்தில் ஆசிய பசிபிக், மத்திய கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்கா ஆகிய பிராந்தியங்களை கவனிக்கும் பிரிவுக்குத் தலைவரான ஹன்னி மெகல்லியும், அந்த உயர்ஸ்தானிகத்தில் சட்டத்தின் மாட்சிமை மற்றும் ஜனநாயகம் ஆகிய விஷயங்களை கவனிக்கும் பிரிவினைச் சேர்ந்த ஆஸ்கர் செல்டர்ஸும் இலங்கை வந்துள்ளன…
-
- 1 reply
- 731 views
-
-
சாட்சிகளின் பாதுகாப்பு மற்றும் காணாமற்போனோர் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விடம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அலுவல கத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு கலந்துரையாடியுள்ளது. இலங்கை வந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகக் குழுவின் தலைவரான ஹன்னி மெகாலி மற்றும் ஒஸ்கார் சொலேரா ஆகியோரே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளை நேற்று முன்தினம் காலை சந்தித்தனர். இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றை மதிப்பீடு செய்வதற்கு இந்த அதிகாரிகள் குழுவந்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹாநாம கூறினார். சாட்சிகள் பாதுகாப்புச் சட்டத்தை மூ…
-
- 0 replies
- 361 views
-
-
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சொறிக்கல்முனையின் பாலணாவெளி கண்டத்தின் வயல்க் காணியொன்றில் வைக்கோல் போட்டு எரிக்கப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் உடற்பாகங்கள் சில சம்மாந்துறைப் பொலிஸாரினால் நேற்று சனிக்கிழமை மீட்கப்பட்டன. சம்மாந்துறைப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இவை மீட்கப்பட்டதாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். சில உடற்பாகங்கள் ஆங்காங்கே சிதறிக் காணப்பட்டதாகக் கூறிய சம்மாந்துறைப் பொலிஸார், இவ் உடற்பாகங்கள் மீட்கப்பட்ட இடத்திலிருந்து கைபிடி எரிவடைந்த நிலையில் கூரிய கத்தியொன்று காணப்பட்டதாகவும் கூறினர். சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தின் பதில் நீதிவான் ஏ.எச்.எம். அறூஸ், அம்பாறை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி செனவிரெத்தின…
-
- 0 replies
- 347 views
-
-
ஐ.சி.ஆர்.சியைப் பழிவாங்கியது இலங்கை இராணுவம் - ஐ.நா குற்றச்சாட்டு! இலங்கை இராணுவப் படையினர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை பழிவாங்கியதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு குறிப்பிட்டது என விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் நிலவி வரும் உறவு தொடர்பில் அப்போதைய இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளக் வருத்தமடைந்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை இலங்கை இராணுவத்தினர் பழிவாங்கி வருவதாக ஐக்கிய நாடுகள் பொதுச் செ…
-
- 0 replies
- 653 views
-
-
[size=3] [size=4]தனக்கு நீதியமைச்சு தேவையில்லை என்றும் கப்பல் துறைமுகங்கள் அமைச்சு தரவேண்டும் என அலரி மாளிகையில் மகிந்த ராசபக்சவை சந்தித்த ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம் கோரியுள்ளார்.[/size] [size=4]மேலதிகமாக இன்னும் இரண்டு அமைச்சுக்கள் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சிக்கு தரவேண்டும் என்றும் அவற்றில் ஒன்று புனர்வாழ்வு புனரமைப்பு மீள்கட்டுமான அமைச்சு என்றும் மற்றுமொரு வருவாய் தரக் கூடிய அமைச்சையும் தருமாறு ஹக்கீம் கோரியுள்ளார் என அரசதரப்பினர் தெரிவித்துள்ளனர். நீதியமைச்சில் வருவாய் மிகக்குறைவு என்றும் இலங்கையில் ஒப்பந்தங்கள் வருவாய்கள் தரக் கூடிய அமைச்சாக இருக்கும் கப்பல் துறைமுகங்கள் அமைச்சு தனக்கு தரவேண்டும் என்றும் ஹக்கீம் கோரியிருப்ப…
-
- 4 replies
- 1.1k views
-
-
[size=3] [size=4]உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள சிறீலங்கா பிரதமர் டி.எம். ஜயரத்ன மேலதிக சிகிச்சைக்காக இன்று நள்ளிரவு விசேட விமானம் மூலம் அமெரிக்கா செல்ல உள்ளதாக அன் நாட்டு அரசாங்க தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]மூன்று மாதகாலத்திற்கும் மேல் இலங்கையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று பிரதமர், சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் விடுத்த கோரிக்கை அடுத்து அவர் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளார். இதனடிப்படையில் சிறீலங்கா பிரதமருடன் விசேட மருத்துவர்கள் சிலரும் அவரது அதிகாரிகள் சிலரும் அமெரிக்கா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.[/size][/size] [size=4]http://www.eeladhesa...chten&Itemid=50[/size]
-
- 2 replies
- 509 views
-
-
சிறிலங்காவின் அடாவடி அமைச்சர்களில் ஒருவரான மேர்வின் சில்வாவின் மகன் நாலக சில்வா, கடந்த ஒன்பதாம் திகதி இராணுவ மேஜர் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமை காரணமாக சிறிலங்கா இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவில் கோதபாயவுக்கு எதிரான அதிருப்தி நிலை தோன்றியுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. தமது இந்த அதிருப்தியை ஊடகங்கள் மூலம் அம்பலப்படுத்தவும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தயாராகவுள்ளனர் என்றும் அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேர்வினின் மகன் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், தாக்குதலுக்கு இலக்கான இராணுவ மேஜர் மீதே நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது எ…
-
- 1 reply
- 643 views
-
-
[size=4]'நிமலரூபன், நில்ருக்ஷன் பாணியில் சதீஸ்குமாரின் நிலையும் ஏற்பட அரசு பகீரத பிரேயத்தனம் செய்து கொண்டிருக்கிறது' என்று ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவரும் மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளருமான மனோ கணேசன் தெரிவித்தார். தமிழ் அரசியல் கைதி சுந்தரம் சதீஸின் தற்போதைய நிலைமையை விளக்கி கொழும்பிலுள்ள ஜனநாயக மக்கள் முன்னணி அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். மனோ கணேசன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும், மக்கள் கண்காணிப்புக்குழுவின் உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், முன்னணியின் ஊடகச் செயலாளரும், கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி.பாஸ்க்கரா, சுந்தரம் சதீஸின் மனைவி கவிதா, கைதியின்…
-
- 4 replies
- 737 views
-
-
[size=4]கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தெரிவான தமது கட்சி உறுப்பினர்கள் சிலர் மாகாணசபையில் ஆட்சி அமைக்க அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குமாறு அடையாளம் தெரியாத சிலரினால் வற்புறுத்தப்பட்டுவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டுகின்றது.[/size] [size=4]கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகளின்படி, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி ஆட்சி அமைப்பதற்கு அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.[/size] [size=4]ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிடமிருந்து சாதகமான பதில் இதுவரை கிடைக்கவில்லை .[/size] [size…
-
- 1 reply
- 461 views
-
-
கணவர் சைகையால் உணவு கேட்பது மிக வேதனையாக உள்ளதால் பிணையில் விடுவிக்குமாறு கோருகிறார் சதீஸின் மனைவி சரியாகக் கவனித்து முறையாக சிகிச்சையளித்தால் கணவரை காப்பாற்றலாம். ௭னது கணவரை பிணையில் விடுவியுங்கள். நாங்கள் காப்பாற்றுகின்றோம் ௭ன்று தமிழ் அரசியல் கைதியான சதீஸின் மனைவியான சதீஸ் கவிதா கண்ணீர் மல்க கோரிக்கை விடுக்கின்றார். கணவரால் பேச முடியவில்லை. சரியாக கண்ணைத் திறந்து பார்க்க முடியவில்லை. ௭ல்லாம் சைகையால் தான் தெரிவிக்கின்றார். அவரை முறையாகக் கவனித்துக் கொள்ள வேண்டும். அதற்கு மகசீன் சிறைச்சாலையின் வைத்தியசாலை உகந்த இடமில்லையெனவும் அவர் தெரிவித்தார். நாங்கள் கொண்டு செல்லும் சாப்பாட்டை கொடுப்பதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதிப்பதில்லை. பழங்களையும் சூப்பையும…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கையிலிருந்து இந்தியாவுக்குத் தங்கம் கடத்தும் சம்பவங்கள் அதிகரிப்பு: புலிகளது தங்கமா? By General 2012-09-15 10:18:06 யுத்தம் முடிவடைந்த பின் இலங்கையிலிருந்து தங்கம் கடத்தி வரப்படுவது திடீரென அதிகரித்துள்ளமையானது சட்ட விரோதமாக வைக்கப்பட்டிருந்த பெருமளவு தங்கம் கடத்தப்படுகிறது என இந்திய சுங்கப் புலனாய்வு அதிகாரிகளை நம்பச் செய்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் சேர்த்து வைத்திருந்த தங்கத்தை யாரோ கண்டுபிடித்திருந்து அது மெதுவாக கடத்தி வரப்படுவது சாத்தியமானது என இந்திய சுங்கத்துறை வட்டாரமொன்று தெரிவித்ததாக டெக்கான் குரோனிக்கிள் பத்திரிகை தெரிவித்துள்ளது. இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் சென்னை விமான நிலையத்தில் 29 தடவை தங்கம்…
-
- 0 replies
- 640 views
-
-
கடந்த எட்டு மாதங்களில் 25,000 வாகன விபத்துகள் By M.Nesamani 2012-09-15 13:51:54 இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 25,000 வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளதுடன் அவ்விபத்துகளால் 1500 பேர் பலியாகியுள்ளதுடன், 11,000 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன விபத்துகளைக் கட்டுப்படுத்த பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் அதற்கு சாரதிகளின் ஒத்துழைப்பும் பொதுமக்களின் ஒத்துழைப்பும் தேவையெனவும் தலைமையகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. மதுபோதையில் வாகனங்களைச் செலுத்துதல், கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் வாகனங்களை ஓட்ட…
-
- 0 replies
- 634 views
-
-
ரத்மலானை விமானநிலையம் 'கொழும்பு சிற்றி' By A.Kanakaraj 2012-09-15 16:16:38 ரத்மலானையில் அமைந்துள்ள விமானநிலையத்தின் பெயர் 'கொழும்பு சிற்றி' விமானநிலையம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. குறித்த விமானநிலையமானது இன்று முதல் கொழும்பு சிற்றி விமான நிலையம் என அழைக்கப்படும் என விமானநிலைய முகாமையாளர் சரத் டி சில்வா தெரிவித்தார் வீரகேசரி
-
- 0 replies
- 585 views
-
-
இலங்கைத் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தக் கூடாது என சர்வதேச மனிதவுரிமைக் கண்காணிப்பகம் பிரித்தானியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.பெருமளவிலான இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படவுள்ள நடவடிக்கையை பிரித்தானியா உடனடியாக நிறுத்த வேண்டுமென சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் 19ம் திகதி விசேட விமானங்களின் மூலம் இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட உள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. இந்நிலையில், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து நாடு கடத்தப்படும் இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும் சட்டவிரோத கைதுகள் மற்றும் சித்திரவதைகளை அவர்கள் எதிர்நோக்கி வருவ…
-
- 0 replies
- 579 views
-
-
முல்லைத்தீவு – மல்லாவி ஆதார வைத்தியசாலையில் தமிழ் வைத்தியர் இல்லாததால் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டுவருவதாக பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். சிங்கள மொழி பேசும் வைத்தியரே இங்கு சேவையில் உள்ளதால், இதனால் தமது நோய்களைச் சரியாகச் சொல்லி உரிய சிகிக்சையைப் பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் ஆபத்தான நோய்களுக்கு இங்கு சிகிச்சையளிக்கக்கூடிய வசதியின்மையால் தூர இடங்களுக்கு நோயாளர்கள் செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. தற்போது, வன்னிப் பகுதியில் நிலவிவரும் கடும் வறட்சி காரணமாக தடிமல், காய்ச்சல், சளி மற்றும் தோல்நோய்கள் போன்றவற்றால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். அவதிப்படும் நோயுடன் சிகிச்சைக்காக வ…
-
- 0 replies
- 403 views
-
-
[size=4]வடக்கில் இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டுமெனவும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்துவது துரிதப்படுத்தப்படவேண்டுமெனவும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக் கூறியுள்ளார். யுத்தம் முடிவுக்கு வந்து மூன்று வருடங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், முக்கியமான மனித உரிமை பிரச்சினைகள் தொடர்பான நேர்மையான தேடுதல்கள், விசாரணைகள், வழக்குகள் நடந்திருக்க முடியும். காணாமல் போனவர்கள் தொடர்பிலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்க வேண்டுமென கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கூறினார். வடமாகாணத்தில் தேர்தல் நடைபெற வேண்டுமெனவும் அவர் கூறினார். 2013 செப்டெம்பரில் இத்தே…
-
- 7 replies
- 621 views
-
-
சிறிலங்கா வந்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையக் குழு தொடர்பில் சிங்கள இனவாத கட்சிகள் பீதியைக் கிளப்பியுள்ளன. அதாவது யுத்தக் குற்றச்சாட்டு விசாரணையின் பயங்கரத் தன்மையை மூடி மறைப்பதற்கான முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளதாக கூறுகின்ரன. ஐ. நா. குழுவின் தலைவரான ஹெனீமெகாலி யுத்தக் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதிலும் தண்டனைகளை வழங்குவதிலும் 33 வருட கால அனுபவம் பெற்றவர். சூடான் ஜனாதிபதி அல்பஷீருக்கு சர்வதேச நீதிமன்றத்தின் ஊடாக தண்டனை வழங்குவதற்கு பின்னணியில் செயற்பட்டவரும் ஹெனீமெகாலியாவார். அகவேதான் சிங்கல இனவாத கட்சிகளுக்கு நடுக்கம் பிடித்துள்ளது. ஆனால் அமைச்சர் ஜீ. ௭ல். பீரிஸ் அவர்களோ ஐ. நா. குழுவின் வருகை நவநீதம் பிள்ளையின் வருகைக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவே எனக் கூறியு…
-
- 1 reply
- 654 views
-
-
எமது நிலம் எமக்கு வேண்டும் என ஈழத்தமிழ் மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் வகையில் இன்று மாலை சுவிஸ் நாட்டில் வசித்துவரும் ஈழத்தமிழரான செல்வராசா வைகுந்தன் அவர்கள் ஸ்ரார்ஸ்பூரக் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முன்றலில் இருந்து தனது நீதி வேண்டிய மிதிவண்டி பயணத்தை ஆரம்பித்தார் . அகவணக்கத்துடன் தொடங்கிய இவ் நிகழ்வு ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தமிழீழ உறுதியோடு ஆரம்பிக்கப்பட்டது . செல்வராசா வைகுந்தன் அவர்களின் நீதி வேண்டிய மிதிவண்டி பயணத்தை ஆரம்பித்து வைக்க எழுச்சி கொண்ட ஸ்ட்ராஸ்புர்க் மக்கள் தமது ஆதரவை செலுத்தியதோடு மற்றும் வைகுந்தன் அவர்களுடன் இணைந்து ஏனைய மூன்று இளையோர்களும் ஆரம்பித்தனர் . ஸ்ரார்ஸ்புர்க் நகரத்தில் ஆரம்பிக்கப்பட்ட மிதிவண்டிப்பயணம் ஆயசஉமழடளாநiஅ எனும் இட…
-
- 3 replies
- 452 views
-
-
கடந்த ஞாயிற்றுக் கிழமை இராணுவ அதிகாரிகள் இருவரை சரமாரியாகத் தாக்கிய சம்பவம் தொடர்பில், அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வாவை கைது செய்ய காவற்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அறியப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக் கிழமை அதிகாலை சுமார் 3.30 மணியளவில், மதுபோதையில் வாகனத்தை செலுத்திவந்த மாலக சில்வா, தனது வாகனத்தை நிறுத்திய இராணுவத்தினருடன் தகறாறில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனை அடுத்து அந்த இரண்டு இராணுவச் சிப்பாய்களையும் அவர் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இவரிடம் ஒரு கைத்துப்பாக்கியும் இருந்துள்ளது. இரவு நேரக் களியாட்ட விடுதிக்குச் சென்று குடித்துவிட்டு மதுபோதையில் திரிந்த மாலக சில்வா, தனது நண்பர்களுடன் சேர்ந்து நடத்திய இந்த அடாவடியை தட்டி…
-
- 4 replies
- 967 views
-
-
அப்பாவி இலங்கை தமிழர்கள் மீது கொடுமைகளைச் செய்தவர்களைப் போர் குற்றவாளிகள் என்று அறிவிக்க வேண்டும். தமிழ் நாட்டின் எந்த பகுதியிலும் இலங்கை ராணுவத்துக்கு மத்திய அரசு பயிற்சி அளிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். தவிர இலங்கை யாத்திரிகர்களுக்கோ சிங்கள மக்களுக்கோ அச்சுறுத்தல் விடுக்கவில்லை. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு தமிழகத்தில் வழங்கப்படும். இவ்வாறு தெரிவித்தார் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா. ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் அப்பாவித்தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு ஆட்சேபம் தெரிவித்து இலங்கைக்கு எதிராகப் பொருளாதார தடைகளைக் கோரி சட்டமன்றத்தில் தீர்மா…
-
- 1 reply
- 495 views
-
-
[size=3][size=4]பாகிஸ்தானின் ஒத்துழைப்பின்றி பயங்கரவாதத்தை இல்லாதொழித்திருக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=3][size=4]அலரி மாளிகையில் பாகிஸ்தான் பாராளுமன்றப் பிரதிநிதிகள் குழுவினருடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டு;ள்ளார்.[/size][/size] [size=3][size=4]பாகிஸ்தான் இலங்கையின் மெய்யான நட்பு நாடு என்பதனை நிரூபித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=3][size=4]பயங்கரவாத இல்லாதொழிப்பு முனைப்புக்களின் போது பாகிஸ்தான் வழங்கிய உதவிகளும், ஒத்துழைப்பும் பாராட்டுக்குரியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.[/size][/size] [size=3][size=4]மூன்று தசாப்தமாக நீடித்த யுத்தத்தின் போது நிபந்தனையின்றி பாகிஸ்…
-
- 2 replies
- 441 views
-
-
டீசல் விலையை உயர்த்தி, மக்கள் சுதாரிப்பதற்குள் கேஸ் விலையை உயர்த்தி, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த காங்கிரஸ் அரசு..! ஈழதேசம் செய்தி..! டீசல் விலையை ரூபாய் 5 உயர்த்தியவுடன் கொதித்து எழுந்த மக்களின் கோபத்தை காங்.ஐ, அல்லாத தேசிய கட்சிகள் அனைத்தும் அரசியல் செய்வதற்கு முயலும் முன், சமையல் வாயுவை விலை உயர்த்தி..என்ன செய்யப்போகிறார்கள் அரசியல் கட்சிகள்..? என்று கால அவகாசமே கொடுக்காமல் சில்லறை வணிகத்திற்கு டெஸ்கோ மற்றும் வால்மார்ட் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்ததின் மூலமாக அணைத்து கட்சிகளையும் முழி பிதுங்க வைத்து விட்டன அன்னை சோனியா காங்கிரஸ் கட்சி. டீசல் விலையை உயர்த்தியவுடன் மமதா பானர்ஜி அவர்கள் 72 மணி நேரம் காலக்கெடு வைத்தார்கள், இந்த டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்…
-
- 0 replies
- 400 views
-
-
முள்ளிவாய்க்காலில் இறுதிக் கட்டத்தை விடுதலைப் புலிகள் நெருங்கிக் கொண்டிருந்த தருணத்தில், அரசியல் பொறுப்பாளர் பா நடேசன் எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. அதில், அண்ணர் (பிரபாகரன்) சொன்னதை வெளியில் சென்று செயல்படுத்துமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், போரின் கடைசி மணித்துளிகளில் பிரபாகரன் இட்ட உத்தரவு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பா நடேசன் கைப்பட எழுதியுள்ள அந்த கடிதத்தில் உள்ள வரிகள்: சுடருக்கு, இங்கு எல்லாம் நிறைவடைந்துவிட்டது. உங்களுக்கு அண்ணர் குறிப்பிட்டதுபோல, எல்லாவற்றையும் வெளியில் சென்று செயற்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். கேஸ்ரோ எல்லாவற்றையும் உங்களிடம் தெரிவித்திருப்பார். எதிர்ப்பார்க்காதM திருப்பம் ஏற்பட்டது உங்களுக்குத…
-
- 1 reply
- 1.3k views
-
-
சிறீலங்கா அரசின், இனவழிப்பிலிருந்து தமது உயிர்களைக் காவி பல மாதங்களாக மிக கொடுமையான சூழ்நிலையில் தங்கியிருந்து யேர்மனியில் அகதிகளாக ஈழத்தமிழ் மக்கள் கடந்த காலங்களாக வந்தடைகின்றனர். தமது உறவுகள் உடைமைகள் அனைத்தையும் இழந்து, உயிரை மட்டும் சுமந்து வந்தடைந்த நிலையில் கூட அவர்களுக்குப் பாதுகாப்பான வதிவிடம் கிடைப்பதில்லை. பலத்த சிரமங்களின் மத்தியில் யேர்மனியில் தற்போது ஈழத்தமிழ் அகதிகள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பொருளாதார, சுகாதார, வதிவிடம் மற்றும் மொழி விடையமாக மிகவும் கஷ்டமான நிலையில் உள்ளனர். அத்தோடு, யேர்மன் அரசு ஈழத்தமிழ் மக்களை சிறீலங்கா அரசின் நலன் சார்ந்த செயற்பாட்டால் அவர்களது அகதி விண்ணப்பங்களை நிராகரித்து மீண்டும் சிறீலங்காவுக்கு திருப்பியனுப்ப முயற்சிக்…
-
- 1 reply
- 442 views
-
-
சிறிலங்காவில் போரின்போது இடம்பெற்ற, அனைத்துலக மனிதாபிமானச் சட்டமீறல்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணை நடத்தக் கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையைத் தோற்கடிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் ஆதரவு திரட்டி வருகிறது. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பேர் இணைந்து கடந்த 7ம் நாள் இந்த பிரேரணையைச் சமர்ப்பித்துள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போதும் அதற்குப் பின்னரும் இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள், மற்றும் ஏனைய மனிதஉரிமை மீறல்கள் குறித்தும் சுதந்திரமான அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஐ.நா உருவாக்க வேண்டும் என்று அந்தப் பிரேரணையில் கோரப்பட்டுள்ளது. சிறிலங்காவில் ஊடகசுதந்திரம் மற…
-
- 0 replies
- 809 views
-