ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143409 topics in this forum
-
கனகராயன்குளம் பகுதி மக்களுக்குச் சொந்தமான மயான பூமியில் சிறீலங்காப் படையினர் புதிய படைமுகாம் அமைந்துள்ளதால் அப்பகுதி மக்கள் சடலங்களை புதைப்பதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். போர் முடிவடைந்த பின்னர் வடக்குப் பகுதியில் சிறீலங்காப் படையினர் புதிய புதிய படைமுகாங்களை அமைத்துவருவது மக்கள் மத்தியில் பாரிய சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இவ்வாறு அமைக்கப்படும் படைமுகாங்கள் பொதுமக்களின் குடியிருப்புக் காணிகள் மற்றும் பொதுத் தேவைக்காகப் பயன்படுத்தப்படும் நிலங்கள் படைகளினால் அபகரிக்கப்பட்டு படை முகாங்கள் அமைக்கப்படுகின்றன. தற்போது கனகராயன்குளம் பகுதி மக்களுக்குச் சொந்தமான சுடலையை சிறீலங்கா படையினர் ஆக்கிர…
-
- 1 reply
- 597 views
-
-
கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாத காரணத்தினால் தான் தமிழ் பிரதேசங்களில் தேர்தல் மோசடிகளைச் செய்ய முடிந்தது. அதனால் தான், கடந்த தேர்தலில் அமைச்சர் அதா உல்லாவினால் மூன்று வேட்பாளர்களைக் களமிறக்கி வெற்றிபெற முடிந்தது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நேற்றையதினம் இடம்பெற்ற தேர்தர் பிரச்சார கூட்டத்தி்ல் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ஹக்கீம் மேற்படி கருத்துக்களை தெரிவித்து்ள்ளார். "சர்வதேசத்துக்குக் காட்ட வேண்டும் என்ற நோக்கத்திலே ஆணவத்தோடும், இறுமாப்போடும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு அரசு தீர்மானித்தது. ஆனால் அரசாங்கம் ஆரம்பித்த இந்த நாடகம் இன்ற…
-
- 0 replies
- 728 views
-
-
அற்பசொற்ப எலும்புத்துண்டுக்காக பிள்ளையானுக்கு பின்னால் சில முனைக்காட்டு பச்சோந்திகள் திரிவது குறித்து வித்தாகி போன மாவீரர்கள் சார்பில் துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதனை அங்கு பிரசுரம் செய்கிறோம். அன்பார்ந்த முனைக்காடு வாழ் எம் இனிய உறவுகளே! நாம் உங்கள் மண்ணில் ஊரில் பிறந்து இளம் வயதில் விடுதலைப் போரில் உயிர் நீத்து வித்தாகிப் போன மாவீரர்களாகிய வீமன், பயில்வான், தளபதி சாந்தன், கரும்புலிகள் உட்பட 309 மாவீரர்களும் எம் மூச்சுக் காற்றோடு கண்ணீரையும் சேர்த்து உங்களோடு உரிமையோடு பேசுகின்றோம். வீர மீசை முறுக்கி வீமன், பயில்வான் படை நகர்த்தி பெருமை சேர்த்த முனைக்காடு பூமி இது. ஈனர்களின் கோர வெறியாட்டத்தால் எங்கள் கல்லறைகளில் கூட நிம்மதியாகத் தூங்…
-
- 0 replies
- 899 views
-
-
இந்தியக் கடற்றொழிலாளர்கள் மீதான சிறிலங்காக் கடற்படையினரின் தாக்குதல்களை அவதானிக்கும் வகையில் இந்தியக் கடலோரக் காவற்படை புதிதாக கண்காணிப்புக் கப்பல் ஒன்றை பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ராஜ்கிரன் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கண்காணிப்பு கப்பல் நேற்றுமுதல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அதன் அறிமுக விழா ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலை கொல்கத்தாவை சேர்ந்த கார்டன் ரீச் என்ற கப்பல் கட்டும் நிறுவனம் உலக தரத்துக்கு வடிவமைத்துள்ளது. 50 மீட்டர் நீளமும், 300 தொன் எடையும் கொண்ட இந்தக் கப்பல் மூலம் கடலில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலையிலும் பணி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்தியாவின் …
-
- 2 replies
- 695 views
-
-
[size=4]இந்தோனேசியாவின் அருகில் சுமார் 150 பேருடன் நேற்று கடலில் மூழ்கிய அகதிகள் படகில் இருந்த 45 பேரை ஒஸ்ரேலிய அதிகாரிகள் மீட்டார்கள். கிறிஸ்மஸ் தீவை நோக்கிச் செல்லும் வழியில் அந்தப் படகில் இருந்து அபாய அறிவிப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஒஸ்ரேலிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள். இன்று அதிகாலை, வணிகக் கப்பல் ஒன்று, ஆறு பேரைக் கடலில் இருந்து மீட்டது. இன்று பிற்பகல் ஏனையோர் மீட்கப்பட்டார்கள். அவர்கள் இந்தோனேசியாவின் மெறாக் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள். இன்று அதிகாலை மீட்கப்பட்ட அனைவரும் ஆண்களெனவும், படகில் பெண்களும் குழந்தைகளும் இருந்தார்களெனவும் மீட்கப்பட்டவர்களில் ஒருவர் கூறினார். தாம் ஆப்கானிஸ்தானில் இருந்த…
-
- 1 reply
- 715 views
-
-
[size=5]வடமராட்சியில் கைதானவர்கள் விளக்கமறியலில்[/size] [size=4]வடமராட்சி கிழக்கினூடாக அவுஸ்திரேலியாவிற்கு தப்பி செல்ல முற்பட்டவர்களுள் சிங்களவர்களும், முஸ்லீம்களும் உள்ளடங்கியிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]அத்துடன் புலம்பெயர் தேசத்திலுள்ளவர்களே ஆட்கடத்தலில் தொடர்பு பட்டிருப்பதாக போலியான தகவல்களும் வெளியாகியிருந்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.[/size] [size=4]வடமராட்சி கிழக்கின் சுண்டிக்குளம் பகுதியில் மீட்கப்பட்டவர்களுள் கற்பிட்டியை சேர்ந்த முஸ்லீம ஓருவரும் ஜந்து சிங்களவர்களும் இருந்துள்ளனர்.[/size] [size=4]நேற்றுமுன்தினம் படகொன்றின் மூலம் வடமராட்சி கிழக்கிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டவர்களே கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்…
-
- 1 reply
- 878 views
-
-
த.தே.கூ. ஒருபோதும் கிழக்கு மாகாணசபையினைக் கைப்பற்றி ஆட்சியமைக்கமுடியாது- முரளிதரன் By Farhan 2012-08-31 15:35:32 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் ஒருபோதும் கிழக்கு மாகாணசபையினைக் கைப்பற்றி ஆட்சியமைக்கமுடியாது என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். மட்டக்களப்பு,பிள்ளையாரடி பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்திலேயே மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இவ்வாறு தெரிவித்தார். பிள்ளையாரடி பிரதேச மக்களினால் ஏற்பாடுசெய்திருந்த இந்தக் கூட்டத்தில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநா…
-
- 2 replies
- 637 views
-
-
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குறித்து பல திடுக்கிடும் தகவல்களுடன் ஒரு புத்தகத்தை எழுதி வருகின்றார் திருச்சி வேலுச்சாமி.பதவியில் உள்ளவர்களும், அரசியலில் உள்ளவர்களும் ஓய்வு பெற்ற பின்பு யாருக்கும் தெரியாத, தாங்கள் அறிந்து வைத்த இரகசியங்களை புத்தகம் மூலம் வெளியிட்டு வருகின்றனர். தற்போது அந்த வரிசையில் ஒரு பிரபல தலைவரின் கொலை வழக்கு குறித்து அதிர்ச்சி, ஆச்சர்யம் கலந்த உண்மைகளை உலகிற்கு வெளிக்கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் திருச்சியைச் சேர்ந்த வேலுச்சாமி. காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவராகவும், ஜனதா கட்சி தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சாமிக்கு உதவியாளராகவும் இருந்து வந்தவர் திருச்சி வேலுச்சாமி. மனதில் பட்டதை பட்டென்று சொல்லிவிடும் …
-
- 0 replies
- 1k views
-
-
[size=3]தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கை அகதிகள் கடந்த சில நாள்களாக படகுகளில் தப்பி வெளிநாடுகளுக்குச் செல்கிறார்களே ஏன் ? என்ற வினாவிற்காக விடையாக புதிய தலைமுறை தொகுத்துள்ள கடல் பேசும் கண்ணீர் கதைகள் என்ற காணொளிச் செய்தித் தொகுப்பு இது. (29-8-12 இரவு செய்தித் தொகுப்பில் புதிய தலைமுறை வெளியிட்ட காணொளி இது)[/size] http://www.youtube.com/watch?v=AAOuokTcxb4
-
- 2 replies
- 686 views
-
-
பிரணாப் சொன்னதை நம்பித்தான் உண்ணாவிரதத்தை கைவிட்டேன் - மு.க...?! பொங்கி எழுந்த பதிவர்கள்..! ஈழதேசம் பார்வையில்..! இலங்கையில் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சொன்னதை நம்பித்தான் எனது உண்ணாவிரதத்தை கைவிட்டேன் என்று தி.மு.க.தலைவர் கருணாநிதி. மேலும் கருத்து கூறுகையில், பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்தியா அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று 2006 - ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். " இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. போர் நடக்கும் போது அப்பாவி மக்கள் கொள்ளப்படுவர் ' என்று இறுதி யுத்தம் நடைபெற்ற 2009 - ம் ஆண்டு ஜெயலலிதா அறிக்கை வெ…
-
- 0 replies
- 726 views
-
-
ஜும்ஆ மஸ்ஜித் மீது தாக்குதல்: இருவர் கைது By Farhan 2012-08-31 16:50:21 கொழும்பு வெல்லம்பிட்டி கோஹிலவத்தையில் 63-17 இல் மஸ்ஜிதில் பொலிஸ் பாதுகாப்புடன் இன்று ஜும்ஆ தொழுகை இடம்பெற்றது. அதேவேளை முஅத்தின் மீது தாக்குதல் நடத்தி, காயப்படுத்தி ,மஸ்ஜிதுக்கு சேதம் ஏற்படுத்தியவர்கள் இன்று கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக குறித்த மஸ்ஜிதின் பொருளாளர் ஸாகபார் ஹாஜியார் தெரிவித்த தகவலில் நேற்று மாலை மஹ்ரிப் தொழுகைக்கான அதான் சொல்லப்படும் போது மஸ்ஜிதுக்குள் அத்துமீறி நுழைந்த இருவர் அத்தின் மீது தாக்குதல் நடத்தி அவரைக் காயப்படுத்தினர். இது தொடர்பாக நாம் பொலிஸாரிடம் முறையிட்டோம். தற்போது தாக்குதல் நடத்தியவர்கள் கை…
-
- 0 replies
- 389 views
-
-
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளருமான நசீர் அகமட்டின் ஆதரவு முஸ்லிம் பெண்கள் மீது ஏறாவூர் ஐயங்கேணி பிரதேசத்தல் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று (30) வியாழக்கிழமை பகல் 12.30 மணியளவில் பத்துப் பேர் கொண்ட பர்தா அணிந்த முஸ்லிம் பெண்கள் அணியொன்று ஐயங்கேணி பிரதேசத்தில் துண்டுப்பிரசுர வினியோகத்தில் ஈடுபட்டிருந்தவேளை அங்கு வந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் அலிசாகிர் மௌலானாவின் ஆதரவாளர்கள் இத்தாக்குதலை மேற்கொண்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் தாக்குதலில், 7 பெண்கள் வரை காயம…
-
- 6 replies
- 957 views
-
-
அணு மின் நிலையத்திற்கு எதிரான அணைத்து வழக்குகளும் தள்ளுபடி..! நீதிமன்ற நீதிபதிகளுக்கு அந்த வே.நாராயணசாமி எவ்வளவோ மேல்..?! ஈழதேசம் செய்தி..! கொஞ்ச நாட்களுக்கு முன் அமைச்சர் வே.நாராயணசாமி விமான நிலையத்தில் கொடுத்த பேட்டிக்கு மெட்ராஸ் உயர்நீதி மன்றம் வருத்தப்பட்டு, மனம் கலங்கி, தங்களது வேதனையை வெளியிட்டது. அதாவது எப்படியும் நாங்கள் உங்கள் அரசுக்கு துணையாகவே தீர்ப்பை வழங்குவோம், அதற்குள் ஏன் இந்த அவசரம்..? என்று நீதிபதிகள் பொய் கோபத்தை வெளியிட்டார்கள். உடனேயே சில கல்விமான்களும் அறிஞர் பெருமக்களும் ஆகா..? பார்த்தீர்களா..நீதிமன்றத்தை..! அவ்வளவு சீக்கிரமாக எல்லாம் மக்களுக்கு எதிராக செய்து விட முடியாது என்றார்கள். ஆனால் நமக்கு முன்பே தெரியும். மெட்ராஸ் நீதிபதிகள் என்ன ..? …
-
- 0 replies
- 346 views
-
-
[size=4]விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர் 12.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாக சிறிலங்கா இராணுவம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளது. 2009 ஜுலை மாதத்துக்குப் பின்னரே, 12.5 மில்லியன் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணம் சென்றுள்ளனர். இந்த மாதத்தில் [ஓகஸ்ட்] மட்டும் சுமார் 1இலட்சம் சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணம் சென்றுள்ளனர்.[/size] [size=4]கடந்த வாரம் வரையில் யாழ்.நகருக்குள் 10 ஆயிரம் வாகனங்கள் நுழைந்துள்ளன.[/size] [size=4]இந்த மாதம் யாழ்ப்பாணத்துக்கு அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வந்ததற்கு பாடசாலை விடுமுறை, நல்லூர் கந்தசாமி கோவில் திருவிழ…
-
- 0 replies
- 333 views
-
-
யுத்த சூன்ய வலயங்களில் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றார் பசில் - விக்கிலீக்ஸ் 31 ஆகஸ்ட் 2012 தமிழில் : குளோபல் தமிழ்ச்செய்திகள் யுத்த சூன்ய வலயத்தில் எறிகணைத் தாக்குதல்நடத்தப்பட்டிருக்கலாம் என தற்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், அப்போதைய ஜனாதிபதி ஆலோசகருமான பெசில் ராஜபக்ஷ தெரிவித்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது என விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம்குறிப்பிடப்பட்டுள்ளது. தென் மற்றும் மத்திய ஆசிய பிராந்தியவலயத்திற்கான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சருக்கும், பெசில்ராஜபக்ஷவிற்கும் இடை…
-
- 0 replies
- 255 views
-
-
முல்லைத்தீவு கொக்குளாயில் தனியார் ஒருவரின் விவசாயநிலம் இல்மனைட் தொழிற்சாலைக்கென அரசினால் 31 ஆகஸ்ட் 2012 ஆக்கிரமிக்கப்படும் ஆபத்து : முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கொக்குளாய் எனும் கிராமத்தில் தனியார் ஒருவருக்கு சொந்தமான 37 ஏக்கர் விவசாய நிலத்தை இல்மனைட் தொழிற்சாலைக்கென அரசினால் ஆக்கிரமிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர் இதனால் எதிர்காலத்தில் இப்பகுதியினை சுற்றியுள்ள மக்கள் இப்பகுதியை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என அப்பகுதி மக்கள் கவலை வெளியிடுள்ளனர். மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இரசாயன தொழிற்சாலை ஒன்று அமைப்பது என்பது மக்களின் எதிர்கால வாழ்க்கையோடு விளையாடும் செயலாகும். தமிழர்கள் செறிந்…
-
- 1 reply
- 461 views
-
-
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வெளியில் இருந்து வரும் மாணவர்கள் விசா பெறத் தேவையான பரிந்துரை வழங்கும் உரிமத்தை லண்டன் மெட்ரோபொலிடன் பல்கலைக்கழகத்திடம் இருந்து ஐக்கிய ராஜ்ஜியத்தின் எல்லைக் காட்டுப்பாட்டு ஆணையம்(யூகேபிஏ) பறித்துள்ளது. இதன் காரணமாக இரண்டாயிரத்துக்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற்றப்படும் நிலை உருவாகியுள்ளது. பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளில் ஆறு மாதங்கள் முன்பு கண்டறியப்பட்ட பாரதூரமான குறைபாடுகளை களைய பல்கலைக்கழக நிர்வாகம் தவறிவிட்டதாக எல்லைக் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவ ஒரு சிறப்பு செயலணிக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. வேறு பல்கலைக்கழகங்களில் சேர அவர்களுக்கு 60 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். சில தனியார் கல…
-
- 0 replies
- 509 views
-
-
இலங்கை இராணுவத்துக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிப்பதை கண்டித்து தமிழக சட்டக்கல்லூரி மாணவர்கள் ரயில் மறியல் போரட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.தமிழ்நாட்டில் ஊட்டியை அடுத்த குன்னூர் வெலிங்டனில் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை வலியுறுத்தி காட்பாடியில் உள்ள அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வாசலில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.அதைத்தொடர்ந்து 15 மாணவிகள் உள்பட 50 மாணவர்கள் காட்பாடி ரயில் நிலையத்துக்கு சென்று மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அவர்கள் மத்திய அரசையும், இலங்…
-
- 0 replies
- 325 views
-
-
இந்தியாவுடனான உறவுகளை பலப்படுத்த அரசு தீவிரவியூகம்;தூதரகங்களுக்கு தமிழ் அதிகாரிகள் நியமனம் இலங்கை, சீனாவின் பக்கம் சாய்வதால் இலங்கை மீது இந்தியா அதிருப்தி கொண்டுள்ளது என்ற கருத்து மேலோங்கி வரும் இவ்வேளையில், இந்தியாவுடனான தனது இராஜதந்திர உறவுகளை மேலும் பலப்படுத்திக் கொள்வதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் முன்மொழிந்த யோசனைக்கு அமைச்சரவை, அங்கீகாரத்தையும் வழங்கியுள்ளது.இந்தியாவில் இயங்கும் இலங்கைத் தூதரகங்களின் சேவைகள் தற்போதைய தேவைக்கேற்ப மாற்றியமைக்கப்படவுள்ளன. இதன் அடிப்படையில், இந்தியாவிலுள்ள இலங்கைத் தூதரக, பிரதித் தூதரகப் பிரதிநிதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படவுள்ளன. இதன்பொருட்டு சென்னைய…
-
- 1 reply
- 458 views
-
-
இலங்கை படையினருக்கு பயிற்சி! மத்திய அரசுக்கு எதிராக சகல கட்சிகளும் போராட வேண்டும்!- நெடுமாறன் [size=2] தமிழகத்தை அலட்சியப்படுத்தும் மத்திய அரசுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் வலியுறுத்தினார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு நேற்று வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி: இலங்கை இராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் தொடர்ந்து இராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. ஆனால், மத்திய அரசு, தமிழகத்தின் எதிர்ப்பை கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது. தமிழகத்தில், …
-
- 0 replies
- 287 views
-
-
http://www.sbs.com.au/dateline/story/related/aid/621/id/601527/n/Sri-Lanka-s-New-Wave
-
- 2 replies
- 813 views
-
-
”காணாமல் போனோரின் விவரங்களை அரசு உடன் வெளியிட வேண்டும்’ என்று கோரி இன்று காலை வவுனியாவில் நடைபெற்றது . ஆர்ப்பாட்டத்தில் தமிழ்க் கட்சிகள் எவையும் கலந்து கொள்வதில்லை என்று முடி வெடுத்துள்ளன. நேற்றுமுன்தினம் மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் முக்கியஸ்தர்களுக் கிடையிலான கலந்துரையாடலின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. காணாமல் போனோரைத் தேடியறியும் குழு இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஆயினும், போரின்போது படைவீரர்களும் காணாமல் போயினர் என்பதை நிலை நிறுத்தவே அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலம் இறுதிப் போரில் தமிழ் மக்களுக்கு…
-
- 4 replies
- 722 views
-
-
[size=4]தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் அனைத்துலக நாடுகள் இலங்கையை தனிமைப்படுத்தும் நிலை ஏற்படலாமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். அபிவிருத்தியை காண்பித்து அரசியல் உரிமைகளை அரசாங்கம் மறுத்து வருவதாக காணாமல்போனோருக்கான அனைத்துலக தினத்தை முன்னிட்டு திருகோணமலை நகரில் இன்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றியபோது சம்பந்தன் குறிப்பிட்டார். அனைத்துலக நாடுகள் கடும் அழுத்தங்களை பிரயோகித்து வந்தாலும், அரசு அனைத்தையும் புறக்கணித்து வருவதாகவும், யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு கிழக்கு மாகாணத்தில் பலர் காணாமல்போயுள்ளதாகவும் அவர் கூறினார். காணாமல்போன தமிழ் இளைஞர்கள் குறித்து அரசாங்கம் இதுவரை உரிய பதில் வழங்கவில்…
-
- 2 replies
- 664 views
-
-
[size=4]தமிழீழம் என்ற தனிநாட்டை இலங்கைக்குள் உருவாக்குவதற்கும், நாட்டைப் பிரிப்பதற்கும் தாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என ஐக்கிய தேசியக் கட்சி நேற்று திட்டவட்டமாகத் தெரிவித்தது.[/size] [size=4]அத்துடன், நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கில் செயற்படுபவர்களையும் தாம் கடுமையாக எதிர்க்கின்றோம் எனவும் அது தெரிவித்தது. எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ஐ.தே.க. பொதுச் செயலாளரும், எம்.பியுமான திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.[/size] [size=4]தமிழகத்தில் நடைபெற்ற “டெசோ’ மாநாட்டில் இலங்கையிலிருந்து கலந்துகொண்ட நவசமசமாஜக் கட்சித் தலைவர் கலாநிதி விக்கிர…
-
- 2 replies
- 870 views
-
-
காலி சிறைச்சாலையிலும் தமிழ் அரசியல் கைதிகள் மீது வன்முறைகள் - கோமா நிலையில் இளைஞர் வைத்தியசாலையில் : 27 ஆகஸ்ட் 2012 வவுனியா சிறைச்சாலையினை தொடர்ந்து காலி சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மீது கடந்த வாரம் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளன. தமிழ் அரசியல் கைதிகள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைத்தாக்குதலில் கோமா நிலையில் மயக்கமுற்ற இளைஞரொருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்தே உண்மைகள் வெளிவந்துள்ளது. யாழ்ப்பாணம் கண்டி வீதி கொடிகாமம் பகுதியை சேர்ந்தவரான சுந்தரம் சதீஸ்குமார் (வயது34) என்பவரே இவ்வாறு கோமா மயக்க நிலையில் காலி களுவாப்பிட்டிய அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.திரும…
-
- 14 replies
- 2.1k views
-