ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143407 topics in this forum
-
ஈழத்தமிழர் என்றால், விடுதலைப் புலிகள், பயங்கரவாதிகள் என்றே, வட மாநிலங்களில் உள்ளவர்கள் கருதுகின்றனர். அவர்களுக்கு உண்மை நிலையை விளக்க வேண்டும் என்று லோக்ஜன சக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று நடந்த ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர்: "ஈழத் தமிழர்களின் பிரச்சினையை வட மாநிலத்தவர்கள் அறிந்து கொள்ளவே இல்லை. ஈழத் தமிழர்கள் என்றால் விடுதலைப் புலிகள், பயங்கரவாதிகள் என்றே கருதி வருகின்றனர். எனவே, ஈழத்தமிழர்களின் உண்மை நிலையை விளக்க, வட மாநிலங்கள் முழுவதும் டெசோ அமைப்பு கூட்டங்களை, நடத்த வேண்டும். சிறிலங்காவில் தமிழர்கள் சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பே வசித்து வருகின்றனர். அவர்கள் அந்த நாட்ட…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கைக் காவல்துறையினரின் தகவல்கள் சர்வதேச காவல்துறையான இன்டர்போலுடன் இணைக்கப்பட்டுள்ளது. இன்டர்போல் தகவல் வலையமைப்புடன் இணைந்துகொண்டதன் மூலம், இலங்கைக் காவல்துறையினருக்கு பல்வேறு நன்மைகள் கிட்டும் என காவல்துறைப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். குறிப்பாக உலகின் 180 நாடுகளைச் சேர்ந்த குற்றவாளிகள்பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள இந்த, தகவல் வலையமைப்பை பயன்படுத்த முடியும் எனக்குறிப்பிட்டுள்ளார். கடவுச்சீட்டு காணாமல் போனோர், சர்வதேசகுற்றவாளிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கறை அறிந்து கொள்ள இன்டர்போலின் உதவிகளைபெற்றுக்கொள்ள முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும்,சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டு குற்றவாளிகள…
-
- 0 replies
- 506 views
-
-
ஈரானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் உயிரிழந்த நூற்றுக்கணக்கான மக்களுக்கும் மற்றும் பாதிக்கப்பட்டோருக்குமாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது இரங்லை இன்று வெளியிட்டுள்ளார். ஈரானில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் 220க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், 1500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். நில நடுக்கம் தொடர்பான செய்தி தம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதாக ஜனாதிபதி மஹிந்தராஜபச இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஈரான் ஜனாதிபதி முஹட் அஹம்நிஜாடீனுக்கு, ஜனாதிபதி இந்த இரங்கல் செய்தியை அனுப்பி வைத்துள்ளார். நில நடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நாட்டு மக்களின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட…
-
- 0 replies
- 266 views
-
-
ஜூலை திங்கள் 22ஆம் நாள் ஒலிம்பிக் பூங்காவிற்கு அருகினில் அமைக்கப்பட்ட மேடையில் சரியாக மாலை 8:10 மணிக்கு கதிரையில் அமர்ந்து தனது ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மனிதநேயன் திரு. கோபி சிவன்தான் அவர்களால் தொடங்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டம் 22′நாளாக தளராத மனதோடு தொடர்ந்து இன்று (12.08.2012) ஒலிம்பிக் விளையாட்டு நிறைவு பெரும் பொது அவரின் உணவு தவிர்ப்பு போராட்டமும் நினைவு பெற்றது.!! இன்று மாலை 4:00 மணிக்கு தமிழர் ஒருங்கிணைப்பு குழு – பிரித்தானிய அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்ட நிறைவு நிகழ்வில் பல ஆயிரக்கணக்கான மக்காள் திரண்டு வந்தனர். தமிழீழ மண்ணின் விடிவிற்காய் வித்தான மாவீரர் செல்வங்களையும் சிங்கள இந்திய படைகளினால் கொல்லப்பட்ட அப்பாவி ஈழ மக்கள…
-
- 0 replies
- 683 views
-
-
லண்டனில் உள்ள HSBC வங்கிக் கிளையானது, இலங்கையின் கொடியைக் காட்டியதற்கு தமிழர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.இலங்கையில் தமிழர்களுக்கெதிராக நடத்தப்பட்ட போரை இலங்கையின் தேசியக் கொடி நினைவு படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில், HSBC வங்கிக் கிளையில் வேலை செய்யும் உறுப்பினர்களுக்கு ஒலிம்பிக்கில் 4 நாட்டின் தேசியக் கொடியைக் காண்பிப்பதற்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையின் தேசியக் கொடியைக் காண்பிக்கும் போது, தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், சித்திரவதைகள், பெண்களுக்கு ஏற்பட்ட வன்முறைகள் எல்லாம் கோபத்தை வரவழைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். தமிழ் கலாசார நிறுவனத்தினைச் சேர்ந்த கே. இளங்கோவன் தெரிவிக்கையில், இலங்கைத் தேசியக் கொடியை காண்பிப்பது அங்கு…
-
- 2 replies
- 1.4k views
-
-
டெசோ மாநாட்டில் ஈழத் தமிழர்கள் ஒரு தேசிய இனம், வடக்குகிழக்கு அவர்கள் தாயகம், ஈழத் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு, இறுதிப் போர் என்று சொல்லி நடத்தப்பட்டது ஒரு இனப்படுகொலை இதற்க்கு இந்திய நடுவண் அரசும் உடந்தை என்று உண்மையை துணிந்து உரைத்த திரு விக்கிரமபாகு கருணாரட்னவுக்கு எமது கோடானகோடி நன்றிகள்.. குறிப்பு :- இந்திய நடுவண் அரசுக்கு எதிராக அவர் பேசிக்கொண்டு போது இடை நடுவில் அவரது பேச்சு தடுத்து நிறுத்தப்பட்டது ? http://thaaitamil.com/?p=28678
-
- 14 replies
- 2.2k views
-
-
[size=4]இலங்கையில் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட வேண்டும் என்று டெசோ மாநாட்டையொட்டி சென்னையில் நடைபெற்று வரும் ஆய்வரங்கில் திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.[/size] [size=4]சென்னை, அக்கார்டு ஹோட்டலில் காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஆய்வரங்குக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை வகித்து வருகிறார். லோக்ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், சமாஜ்வாதி கட்சியின் ராம்கோபால் யாதவ், புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன, ஆம்னஷ்டி இண்டர்நேஷனல் உள்ளிட்ட மனித உரிமைகள் அமைப்பின் சர்வதேச பிரதிநிதிகள் என பலர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.[/size] [size=4]மேலும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிட இயக்கத் தமிழர்…
-
- 5 replies
- 864 views
-
-
இலங்கையில் தமிழருக்கு எதிராக போர்க்குற்றத்தில் ஈடுபட்ட போர்க் குற்றவாளிகள் மீது ஐக்கிய நாடுகள் சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐநா. மூலம் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்: - இலங்கை போர்க் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழர் பகுதிகளில் இருந்து இலங்கை ராணுவத்தை வெளியேற்ற வேண்டும் - இலங்கையில் நடைபெறும் அநீதிகளை இந்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? ஈழத் தமிழர் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை தாங்களே தீர்மானித்துக் கொள்ள வகை செய்யும் தீர்மானத்தை ஐ.நா. மன்றத்தில் …
-
- 5 replies
- 983 views
- 1 follower
-
-
[size=4]கவிஞர் வைரமுத்து எழுதிய 'மூன்றாம் உலகப் போர்' என்னும் நூல் திறனாய்வு விழா நிகழ்வு கடந்த 4-ம் தேதி தேனியில் நடைபெற்ற போது அதில் கலந்துகொண்ட கவிஞர் வைரமுத்து அவர்கள் எனது மகனின் வேண்டுகோளுக்கிணங்க நிச்சயமாக, ஈழத் தமிழர் அவலம் குறித்து காவியம் எழுதாமல் நான் போகமாட்டேன் என்று தெரிவித்தார்.[/size] [size=4]":மூன்றாம் உலகப் போர்" என்னும் நூலைத் திறனாய்வு செய்த வைரமுத்துவின் மகன் கபிலன், இதுவரை எத்தனையோ இலக்கியங்கள், கவிதைகள், நூல்கள் படைத்த என் தந்தைக்கு இந்த விழா மூலம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். அவர் ஈழத் தமிழர்களின் அவலம் குறித்து ஒரு காவியம் எழுத வேண்டும். அதுவே அவர்களின் பிரச்சினைகளை உலகுக்கு உணர்த்துவதாக அமைய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.[/size] …
-
- 4 replies
- 588 views
-
-
[size=5]"டெசோ' மாநாடு நடக்கும் இடம் மாற்றம்: தி.மு.க., ஆபீசில் நடத்த முடிவு[/size] [size=3][size=4]டெசோ மாநாடு நடக்கும் இடத்தை, தி.மு.க., தலைமை அலுவலகமானஅறிவாலயத்துக்கு மாற்றி நேற்றிரவு தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். மாநாட்டை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடத்த, சென்னை மாநகர போலீஸ் தடை விதித்ததால், இந்த திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மாநாட்டின் தீர்மானங்களை விளக்கி, இம்மாதம் 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை, மாநிலம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் எனவும் கருணாநிதி கூறியுள்ளார்.[/size][/size] [size=3][size=4]இலங்கையில் வசிக்கும் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க, டெசோ எனப்படும் தமிழ் ஈழ பாதுகாப்பு அமைப்பின் சார்பாக சென்னை ராயப்பேட்டை ஒ…
-
- 9 replies
- 858 views
-
-
கனகாலத்துக்குப்பிறகுப் பிறகு மனிசியின் திருப்திக்காக லூசியம் சிவன் கோயிலுக்கு குடும்பத்துடன் போனோம் . மனிசி பிள்ளைகளை கோயிலில் விட்டுவிட்டு நான் காருக்குத்திரும்பிவிட்டேன் . துண்டு வைப்பவனின் தொல்லை தாங்கமுடியாது .ஒரு நிமிடம் பிந்த்தினாலும்அறுபது பவுன்ஸ் தீட்டிப்போடுவான் . அத்துடன் கோயிலில் நிற்பதுவும் எனக்குச்சரிவாது . சரி மனிசி சொன்ன நேரம் வந்த்திட்டுது எண்டு திரும்பிப்போனா மூண்டு கார் லைனில கோயிலுக்குள்ள நிக்குது என்னடா எண்டு எட்டிப்பார்த்தா ஐயர் சுத்திச் சுத்திப் பூசை பண்ணுறார் . எல்லாச்சில்லுகளுக்குள்ளும் எலுமிச்சைபழம் வேற இந்தச்சனத்தை என்ன செய்யலாம் .
-
- 9 replies
- 1.1k views
-
-
தென்னிலங்கையில் ஆடுகளை அறுக்க வேண்டாம் என்றும், மாடுகளை வதைக்க வேண்டாம் என்றும், கட்டாக்காலி நாய்களை சுட்டு கொல்ல வேண்டாம் என்றும் மிருக வதை தடுப்பு இயக்கம் நடத்துகிறார்கள். ஆனால், தமிழர்களை அரசின் கட்டுப்பாட்டில் நடத்தப்படும் சிறைச்சாலை வளாகத்திற்கு உள்ளே வைத்தே அடித்து கொல்லுகிறார்கள். இலங்கை குடிமகன் என்று சொல்வதற்கு எனக்கு வெட்கமாக இருக்கிறது. இலங்கையில் நான் ஒரு தமிழன் என்று சொல்லி முடிப்பதற்குள் எனது நெஞ்சம் கொதிக்கிறது. இங்கே கொல்லப்பட்ட இந்த அரசியல் கைதி ஒரு தமிழன் என்பதால்தான் கொல்லப்பட்டார் என்ற உண்மை என் இதயத்தை தாக்குகிறது என கொல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதி மரியதாஸ்தில்ரொக்சனின் மரணசடங்கின் போது உரையாற்றிய ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், மக்கள் கண்காணி…
-
- 0 replies
- 586 views
-
-
[size=4]சென்னை: இலங்கையில் தமிழருக்கு எதிராக போர்க்குற்றத்தில் ஈடுபட்ட போர்க் குற்றவாளிகள் மீது ஐக்கிய நாடுகள் சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐநா. மூலம் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.[/size] [size=4]சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்:[/size] [size=4]- இலங்கை போர்க் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்[/size] [size=4]- தமிழர் பகுதிகளில் இருந்து இலங்கை ராணுவத்தை வெளியேற்ற வேண்டும்[/size] [size=4]- இலங்கையில் நடைபெறும் அநீதிகளை இந்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? ஈழத் தமிழர் தாங்கள் விரும்பும் அரசியல் தீ…
-
- 0 replies
- 491 views
-
-
[size=4](சி.குருநாதன்)[/size] [size=4]ஜனாதிபதியின் விருப்பத்திற்கு ஏற்றவாறு செயற்படும் முதலமைச்சர் கிழக்கு மாகாண சபைக்கு தேவையில்லை. மக்களின் விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய முதலமைச்சரே கிழக்கு மாகாண சபைக்கு தேவையாகும். அதன் காரணமாகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திருகோணமலை பிரதேசத்தில் உள்ள பொதுநல மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் உரையாற்றும்போதே சம்பந்தன் இதனைத் தெரிவித்தார். திருமலை நியூ சில்வர் ஸ்டார் ஹோட்டலில் கிழக்கு மாகாண சபைத் தேர…
-
- 0 replies
- 376 views
-
-
[size=3][size=4]முப்படையினரையும் நவீன ஆயுதங்களுடன் நிலை நிறுத்த வேண்டுமாம்[/size][/size] [size=3][size=4][/size] [size=4]பயங்கரவாதம் மீண்டும் அச்சமூட்டி வருவதால், காவற்துறையினரும், முப்படையினரும் நவீன ஆயுதங்களுடன் நிலை நிறுத்தப்பட வேண்டும் என முன்னாள் பிரதமரும், சிரேஷ்ட அமைச்சருமான ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.[/size] [size=4]ஹொரணையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார். இலங்கையின் சுதந்திரத்திற்கு தடையேற்படுத்துவர்கள், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் மிகவும் வேகமாக செயற்பட்டு வருகின்றனர். இலங்கையை இரண்டாக பிரிக்க வேண்டும் என இரு அரசியல்கட்சி அண்மையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. தமிழ் பேசுபவர்கள் தனி நாட்டை கோருகின்றனர். இது விளையாட்டு …
-
- 3 replies
- 656 views
-
-
பிரித்தானிய மண்ணில் ஒலிப்பிக் போட்டிநடக்கும் இடத்திற்கு அருகில் நடக்கும் சிவந்தனின் போராட்டம் ,பிரித்தானிய தேசியக்கொடியுடன் சமமாக பறந்துகொண்டிருக்கும் புலிக்கொடி என விடுதலைகொண்ட எழுச்சி சிங்கள அரசுஉள்ளிட்ட பன்னாட்டு அரசினை தாக்குகின்றது. இவ்வாறு சிவந்தனின் போராட்டத்துடன் எழுச்சிகொண்ட தமிழ்மக்களின் போராட்டமாக மாறி தொடர்ந்தும் எமது விடுதலைப்பயணத்திற்கான போராட்டத்தினை முன்னெடுக்க அனைவரும் அணிதிரள வேண்டும் என்று தமிழ்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார். http://thaaitamil.com/?p=28645
-
- 0 replies
- 594 views
-
-
இந்தியா- சிறீலங்கா வர்த்தக உடன்படிக்கைகளின் பின்புலம் மற்றும் செபா ஒப்பந்தம். இதற்கு அச்சாரமாக செய்யப்பட்ட டெசோ மாநாடு. தமிழர்களே சர்வதேச ஆற்றல்கள் தமிழீழ கோரிக்கையை முடக்கச் செய்யும் சதிகளை முறியடிக்க தயாராவீர். இந்த சமயத்தில் தோழர். சிவந்தனின் உண்ணா நிலை போராட்டத்தை ஆதரித்து பெரும் வெற்றியடையச்செய்வது அவசியமும் வரலாற்று கட்மையும் ஆகிறது. செய்து முடிக்க தயாராவோம். ஒன்றினைவோம் நாம் வெல்வோம்.மே பதினேழு இயக்கம்.(காணொளி) http://thaaitamil.com/?p=28648
-
- 0 replies
- 542 views
-
-
[size=4][/size] [size=4]தமிழ்க் கைதிகளின் மரணம் தொடர்பில் சுயாதீன விசாரணையை நடத்துமாறு இலங்கை அரசை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வலியுறுத்த வேண்டும் என்றும் மக்கள் கண்காணிப்புக்குழு கோரிக்கை விடுத்துள்ளது என மக்கள் கண்காணிப்புக் குழுவின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்.[/size] [size=4]சிறைச்சாலை அதிகாரிகளின் கோரத் தாக்குதலுக்கிலக்காகி உயிரிழந்த தமிழ் அரசியல் கைதிகளான நிமலரூபன், டெல்றொக்ஷன் ஆகியோரின் மரணம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையிடம் முறைப்பாடு செய்வதற்கு மக்கள் கண்காணிப்புக்குழு தீர்மானித்துள்ளது.[/size] [size=4]கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தின் ஊடாக மேற்படி முறைப்பாட்டைச் செய்வதற்கு அந்தக் குழு முடிவெட…
-
- 6 replies
- 632 views
-
-
[size=3][size=4]சென்னை: டெசோ மாநாட்டுக்கு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் பிறப்பித்த தடை உத்தரவை முறியடிக்க மிக நுணுக்கமான வாதங்களை உயர்நீதிமன்றத்தில் முன்வைத்து மிகத் திறமையாக வாதாடி தமிழக அரசின் வாதங்களை தவிடுபொடியாக்கியுள்ளனர் திமுக சார்பில் ஆஜரான வக்கீல்கள்.[/size][/size] [size=3][size=4]அதிமுக அரசுக்கு டெசோ மாநாட்டின் மூலம் மேலும் ஒரு மூக்குடைப்பு ஏற்பட்டுள்ளது. டெசோ மாநாட்டை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் நடத்த மாநகர காவல்துறை ஆணையர் தடை விதித்தார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது திமுக.[/size][/size] [size=3][size=4]இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் 11 காரணங்களை முன்வைத்து தடை செய்யப்பட்டது நியாயமே என்று வாதாடியது அரசுத் தரப்பு. ஆனால் அதை மிக திறமைய…
-
- 5 replies
- 653 views
-
-
கிழக்கு மாகாணத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கின்றது. நில அபகரிப்புக்களும், சிங்களக் குடியேற்றங்களும் என கிழக்கின் பெரும் பகுதியை சிங்களம் விழுங்கியுள்ள நிலையில், முழுமையான சிங்கள இராணுவத்தினதும், அவர்களது துணை ஆயுதக் குழுக்களினதும் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கின் தேர்தல் முடிவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை தேர்தல் முடிந்ததன் பின்னர்தான் அறிந்துகொள்ள முடியும் என்பதல்ல. எனினும், இம்முறை கிழக்கு மாகாணசபையின் ஆட்சியை தாங்கள்தான் கைப்பற்ற வேண்டும் என்ற வெறியுடன் தமிழ், சிங்கள, முஸ்லீம் கட்சிகள் அனைத்தும் மிகத் தீவிரமாக இறங்கியிருப்பதை அவதானிக்க முடிகின்றது. விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலங்களில் ஒருமுறை ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ‘கிழக்கு மாகாணத்தை கைவிட்டு, வடக்கில் மட்டும் பு…
-
- 0 replies
- 374 views
-
-
ஈழத் தமிழர்கள் அனைவரும் தனது பக்கம் என்பதைச் சர்வதேசத்திற்குக் காட்டுவதற்காக சிறீலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்ற இந்த வேளையில் மகிந்தருக்கு எதிராக வெளிநாடுகளில் மட்டுமன்றி உள்நாட்டிலும் எதிர்ப்பு அலைகள் தோற்றம் பெற்றுள்ளன. தமிழர்கள் மட்டுமன்றி சிங்கள மக்கள் மத்தியிலேயே மகிந்தவுக்கு எதிரான செயற்பாடுகள் தலைதூக்கியுள்ளன. நாம் எல்லோரும் ஒரே நாட்டு மக்கள், நாம் ஒரே தேசத்தில் ஒற்றுமையாக வாழ்வோம் என்றெல்லாம் மகிந்த ராஜபக்ச கூறிவருகின்றார். ஆனால், ஒரே நாட்டுக்குள்ளேயே மகிந்த பெரும் சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை மகிந்தவின் துரதிஷ்டமாகவே நோக்கப்படுகிறது. தமிழர் தாயகத்திலுள்ள மகிந்த ராஜபக்சவின் உருவப் பொம்மைகள…
-
- 0 replies
- 405 views
-
-
[size=4]டெசோ அமைப்பு சார்பில் ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு நடைபெறுவதை யொட்டி தியாகரா யநகர் அக்கார்டு ஓட்டலில் இன்று காலை 10 மணிக்கு ஆய்வரங்கம் தொடங்கியது.[/size] [size=4]தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில் ஆய்வரங்கம் தொடங்கியதும் தி.மு.க. பொது செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், விடுதலை சிறுத்தை தலைவர் திருமாவளவன், திராவிடக் கழக தலைவர் கி.வீரமணி, டெசோ உறுப்பினர் சுப.வீர பாண்டியன், சமாஜ்வாடி எம்.பி. ராம்கோபால் யாதவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆய்வரங்கத்தில் மத்திய மந்திரிகள் மு.க.அழகிரி, ஜெகத்ரட்சகன், காந்தி செல்வன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, திருச்சி சிவா, முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், சுப்புலட்சுமி ஜெகதீச…
-
- 0 replies
- 582 views
-
-
[size=4]சென்னையில் இன்று நடைபெறும் டெசோ மாநாட்டில் பங்கேற்க இலங்கை உள்ளிட்ட வெளி நாடுகளை சேர்ந்த தமிழ் ஈழ ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அழைப்பின்பேரில் இலங்கை நாட்டு பிரதிநிதிகளும், தமிழ் ஈழ ஆதரவாளர்களும் இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக விரும்பினார்கள்.[/size] [size=4]ஆனால் இவர்களுக்கு விசா மறுக்கப்பட்டுவிட்டது. இதுபற்றி, தி.மு.க. எம்.பி.யும், அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளருமான டி.கே.எஸ்.இளங்கோவன்,[/size] [size=4]’’சென்னையில் நடக்கும் டெசோ மாநாட்டில் பங்கேற்க இலங்கை, அமெரிக்கா, கனடா ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் அதிக ஆர்வம் காட்டினர். ஆனால், அவர்களுக்கு விசா வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது. [/size] [size=4]இந்த விவகாரத்தை பாராளுமன்ற தி.மு.…
-
- 0 replies
- 596 views
-
-
[size=4]''அயல் நாடுகளின் விவகாரங்கள் தொடர்பாக இந்தியா எடுக்கும் தீர்மானங்கள் நிதானத்துடன் எடுக்கப்பட வேண்டும்'' என்று இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.[/size] [size=4]இந்திய ஊடகமொன்றுக்கு ராஜபக்ச அளித்த பேட்டியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது வேறும் அரசியல் கட்சிகளுடன் தனித் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினாலும் இறுதித் தீர்மானம் நாடாளுமன்றின் ஊடாகவே எட்டப்படும். இதன் காரணமாகவே அனைத்து தரப்பினரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றோம்.[/size] [size=4]ஜனநாயக ரீதியில் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை அமுல்படுத்தப்பட…
-
- 1 reply
- 329 views
-
-
[size=4]மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள்குடியேற்ற பிரதேசமான உன்னிச்சை, பாலக்கொடிச்சேனை கிராமத்திலுள்ள முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.45 மணிக்கு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]உழவு இயந்திரமொன்றில் வந்த இனந்தெரியாத குழுவினராலேயே குறித்த பள்ளிவாசல் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். அத்துடன் குறித்த மீள்குடியேற்ற கிராமத்திலுள்ள நான்கு தற்காலிக குடிசைகள் மற்றும் ஒரு கடை ஆகியனவும் இதன்போது குறித்த இனந்தெரியாத குழுவினரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன எனவும் வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.[/size] [size=4]இதேவேளை, குறித்த கிராமத்தில் வசித்து வந்த 52 வயதான சபினோன என்ற பெண்மனி நேற்று சனிக்கி…
-
- 2 replies
- 434 views
-