Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [size=4] பிரித்தானியாவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமான வெள்ளிக்கிழமை தொடக்கம் தமிழர்கள் பல கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்திவருகின்றனர். பல்லின மக்கள் லட்சக்கணக்கில் வந்துசெல்லும் ஒலிம்பிக் கிராமத்தை அண்டிய பகுதியிலும், தமிழர்கள் தமது கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்திவருகின்றனர். துண்டுப்பிரசுரங்களை வழங்கியும், வேற்றின மக்களுக்கு [/size][size=4]எமது[/size] போராட்டம் குறித்தும் இலங்கை அரசு புரிந்த போர்குற்றங்கள் தொடர்பாகவும் இவர்கள் விளக்கம்கொடுத்துவருனின்றனர். [size=4] http://www.eeladhesa...chten&Itemid=50[/size]

    • 4 replies
    • 991 views
  2. திருகோணமலை கருமலையூற்று கிராமத்தினை மீளவும் முஸ்லிம்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற் கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் ௭திர் கொண்டு வரும் இது போன்ற பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தின் உயர் மட்டத்தினர் மனது வைத்தால் மாத்திரமே தீர்வினைக் காண முடியும். அத்துடன் யுத்தம் உக்கிரமாக நடைபெற்றபோதுகூட அமைதி நிலவிய பகுதிகளில் இன்று இராணுவம் முகாம்களை அமைக்க மக்களின் வாழ்விடங்களை ஆக்கிரமிப்பதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான ௭ம்.ரி.ஹஸன்அலி திருமலை கருமலையூற்று கிராமம் இராணுவத்தினதும், விமானப் படையினதும் பிடியில் இருப்பது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போது கூறினார். அவர் மேலும் கருத்த…

  3. இளவயது இளைஞர்கள் நான்குபேர் கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமைச்சோந்த இளைஞர்கள் நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர். குறிப்பி;ட்ட முகாமில் உள்ள பொது மண்டபத்தில் மாலை வேளையில் இவர்கள் குறிப்பி;ட்ட ஆபாசப்படங்களைக் கையடக்கத் தொலைபேசியில் பார்த்துக்கொண்டு இருந்துள்ளார்கள். ரோந்துக் கடமையில் சென்ற பொலிஸாரைக் கண்டு ஆபாசப்படம் பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் தப்பி ஓடியுள்ளார்கள். சந்தேகம் கொண்ட பொலிஸார் பொது மண்டபத்தில் சென்று பார்த்த வேளையில் கையடக்கத் தொலைபேசி ஒன்று கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டது. அதனைக் கைப்பற்றிய பொலிஸார் தொடர்ந்து மேற்கொ…

  4. ஒலிம்பிக்கில் இருந்து இலங்கையை வெளியேற்ற கோரியும் மனித நேயன் சிவந்தனுக்கு ஆதரவாகவும் இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்பாட்டத்தில் திரு மல்லை சத்தியா, பேராசிரியர் தீரன், இயக்குனர் புகழேந்தி , இயக்குனர் கௌதமன், தோழர் அதியமான், ஓவியர் சந்தானம் மற்றும் பல இயக்கத் தலைவர்களும் ,இயக்கத் தோழர்களும் கலந்து கொண்டு இலங்கைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் இலங்கை சேர்க்க கூடாது .. ஒலிம்பிக்கில் இருந்து இலங்கையை வெளியேற்று என்று கோசம் எழுப்பினர். [show as slideshow] http://thaaitamil.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%…

    • 0 replies
    • 682 views
  5. [size=4]எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளின் இறந்துவிட்ட ஈழக்கனவுக்கு புத்துயிரளிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் தமிழ்நாட்டின் தலைவர்களும் முயற்சிக்கின்றனர் என மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறினார். மஹரகமயில் இன்று நடைபெற்ற ஜாதிக ஹெல உருமயவின் தேசிய மாநாட்டில் உiயாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். "இரண்டாவது ஈழ யுத்தத்தை ஆரம்பிப்பதற்கு த.தே.கூ. தலைவர் இரா. சம்பந்தன் முயற்சிக்கிறார். நியூயோர்க், லண்டன், அவுஸ்திரேலியா, பிரான்ஸ், இந்தியா போன்ற நாடுகளிலும் நகரங்களிலும் தமிழ் இனவாதிகள் ஈழ இனவாதத்தை உயிர்ப்பிக்க முயற்சிக்கின்றனர். இதற்கு ஐ.நா. பொதுச்செயலாளரும் உதவுகிறார். உலக தமிழர் இயக்கத்தின் பேச்சாளர் சுரேஷ் சுரேந்திரன், முத்துவ…

  6. தொல்.திருமா அவர்கள் மிக அபாயகரமான அரசியல் தலீவர்..? அல்லது பெரிய காமடி பீசா..?! ஈழதேசம் பார்வையில்..! நான் எனக்காக குவாட்டர் கேட்கவில்லை..? நான் எனக்காக தங்கம் கேட்கவில்லை..?! என்று சொல்வது சரியாகத் தானே இருக்கும்..? தலித் தலைவர் தொல்,திருமா..?! அவர்களின் 'தங்கம்' வேட்டை என்னவாக இருக்கும். ? நான் எப்பொழுதும் டாஸ்மாக் கடைக்கு போவது என்னை வளப்படுத்திக் கொள்ளவும்,எனது சிந்தனைகளை செழுமைப்படுத்திக் கொள்ளவுமே தவிர, கொலை செய்யவோ, பல்வேறு குற்றங்கள் செய்யவோ அல்ல என்று சொன்னால் எவ்வளவு அளவிற்கு நம்புவீர்களோ..? அதுபோல இந்த தங்க வேட்டை ஆடும் தொல்.திருமா அவர்களின் சப்பை காரணத்தையும் நம்புவீர்களா..? என்பதெல்லாம் ஒரு விசயம் அல்ல. நான் எனக்காக தங்கத்தை கேட்கவில்லை. தங்…

  7. [size=4]எந்தவொரு இராணுவமும் இந்தளவிற்கு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றியதில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷதெரிவித்துள்ளார். மிக நீண்ட காலமாக இடம்பெற்ற யுத்தத்தின் பின்னர் இலங்கை இராணுவத்தினர் மக்களுக்காக பாரியளவில் சேவைகளை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.[/size] [size=4]12000 முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைந்த போது அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனிப்பட்ட ரீதியில் உத்தரவிட்டதாக கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மன்னார் கந்தன்குளம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.[/size] [size=4]உலகின் எந்தவொரு இராணுவமும் மக்களுக்காக இந்தளவு தைரியத்துடன் செயற…

    • 1 reply
    • 524 views
  8. கிழக்குத் தேர்தலை கூட்டமைப்பு சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். - சிவில் சமூகம் வேண்டுகோள். [sunday, 2012-07-29 17:16:49] நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை நடை முறைப்படுத்துவதற்கான திட்டம் சர்வதேசத்தை ஏமாற்றும், நேரத்தை வாங்கும் முயற்சியே. தமிழர்களின் இருப்பை இல்லாது ஒழிக்கும் அரசின் திட்டத்தை சர்வதேசத்துக்கு உணர்த்த கிழக்குத் தேர்தலை கூட்டமைப்பு பயன்படுத்த வேண்டும். நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் அடிப்படையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்பதனை சர்வதேசத்துக்கு உணர்த்தும் வகையில், கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு வடக்கு கிழ…

    • 0 replies
    • 449 views
  9. இயக்கச்சியில் சிறிலங்கா இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட புதிய பௌத்த வழிபாட்டுச் சின்னம் கடந்த வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.சிறிலங்கா இராணுவத்தின் முதலாவது இயந்திர காலாற்படைப் பிரிவினால் இந்த பௌத்த வழிபாட்டுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவில் முதலாவது இயந்திர காலாப்படைப் பிரிவின் அதிகாரிகளும் படையினரும் பங்கேற்றதுடன், ஏழு பௌத்த பிக்குகளுக்கும் தானம் வழங்கப்பட்டுள்ளது. 1992இல் இயக்கச்சிப் பகுதியை சிறிலங்கா படையினர் கைப்பற்றும் வரை அங்கு எந்த பௌத்த வழிபாட்டுச் சின்னமும் அமைந்திருக்கவில்லை. இயக்கச்சிப் பகுதி ஆனையிறவுப் பெருந்தளத்துடன் இணைக்கப்பட்டதை அடுத்தே, அங்கு பௌத்த சின்னம் ஒன்று சிறிலங்காப் படையினரால் அமைக்கப்பட்டிருந்தது. 2000ம் ஆண்டு ஏப்ர…

    • 0 replies
    • 546 views
  10. புனர் வாழ்வளிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்து குடும்பங்களுடன் இணைய விடுவிக்கப்படுள்ள முன்னாள் போராளிகள் மீது தொடர்ச்சியாக பிரயோகிக்கப்பட்டு வரும் நெருக்குதல்கள் காரணமாக அவர்கள் மிகவும் மோசமான விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வெறுமனே அரசின் ஆசை வார்த்தைகளுடன் அநாதரவாக விடுவிக்கப்பட்டுள்ள இம் முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைந்து இயல்பு வாழ்க்கையினை வாழ முடியாத நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். இந் நிலையில் அவர்கள் மீது படைத் தரப்பு மீண்டும் மீண்டும் கட்டவிழ்த்து விடும் கெடுபிடிகள் அவர்களை மோசமான விரக்தி நிலைக்கு தள்ளி வருகின்றது. பலரிடையே தற்கொலை மனப் பாங்கு தலைதூக்கி இருப்பதுடன் மூன்று முன்னாள் பெண் பேராளிகள் தற்கொலை செய்து கொண்டுமுள்ளனர். முன்னர் மாதத்திற்க…

  11. [size=4]யாழ்ப்பாணத்தில் கறுப்பு ஜுலையை நினைவுகூரும் சுவரொட்டிகளுக்கு சிறிலங்கா காவல்துறையினர் தடைவிதித்துள்ளனர். சில அரசியல் சக்திகள் கறுப்பு ஜுலையை நினைவுகூரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு கொடுத்த எச்சரிக்கையை அடுத்து, சிறிலங்கா காவல்துறை அதனை முறியடிப்பதற்காக விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஆங்கில கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்தநிலையில் வெலிக்கடைச் சிறையில் 1983 ஜுலை 25, 27ம் நாள்களில் 52 தமிழர் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நெல்லியடியில் சுவரொட்டிகளை ஒட்டிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் சிறிலங்கா காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு அவர்களிடம்…

  12. இலங்கையில் இனங்களுக்கு இடையிலான நம்பிக்கையின்மை வலப்பெற்றுவருவதாக ஜீ.ரீ.எப் எனப்படும் க்ளோபல் தமிழ் போரம் என்ற புலம்பெயர் தமிழ் அமைப்புகுற்றம் சுமத்தியுள்ளது. [size=3][size=4]அண்மைக்காலமாக நாட்டில் இடம்பெற்று வரும் சம்பவங்களின் மூலம் இந்தவிடயம் அம்பலமாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.[/size] [size=4]நீண்ட காலமாக நிலவி வரும் தமிழர் பிரச்சினைக்கு தற்போதையஅரசாங்கம் காத்திரமானதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான தீர்வுத் திட்டமொன்றை வழங்காவிட்டால், தனிநாட்டுக் கோரிக்கை வலுப்பெறும் என அந்த அமைப்பு எச்சரிக்கைவிடுத்துள்ளது.[/size] [size=4]இலங்கை சுதந்திரமாக வாழ்வதாக தமிழர்கள் உணரக் கூடிய ஓர் பின்னணிஉருவாக்கப்பட வேண்டுமென அமைப்பின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்…

  13. தங்களுடன் நல்லுறவைப் பேணும் அரசியல் கைதிகளை மட்டும் விடுதலை செய்து விட்டு ஏனைய கைதிகளைத் தொடர்ந்தும் இலங்கை அரசு தடுத்து வைத்துள்ளது என்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குழுவொன்று குற்றம் சாட்டியுள்ளது. சிங்கள இன அரசியல் கைதிகளுக்குக் கிடைக்கும் விடுதலை தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் கிடைப்பதில்லை என்றும் கேள்வியெழுப்பியுள்ள அந்தக் குழு குறிப்பாக, சிறைச்சாலையில் தாக்குதலுக்குள்ளான தமிழ் அரசியல் கைதிகளுக்கு மருத்துவமனையிலும் சரியான சிகிச்சை அளிக்கப்படுவதில்லையென குற்றம் சாட்டியுள்ளது தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு அரசிடம் கோரி கையெழுத்து வேட்டையை ஆரம்பித்த போது இடம்பெற்ற நிகழ்விலேயே மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குழு மேற்கண்டவாறு தெரிவித்தது…

    • 0 replies
    • 364 views
  14. [size=2][/size] [size=2][size=4]திருகோணமலை சம்பூரில் அணுமின் நிலையமொன்றை அமைப்பதற்கு பாகிஸ்தானின் உதவியை இலங்கை பெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் பொய்யான செய்திகளை வெளியிடுவதாக மின்சக்தி வலுசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார். சீனாவின் செல்வாக்கிற்குள் இலங்கையை வைத்திருப்பதற்காக இத்திட்டத்தை பாகிஸ்தான் வடிவமைத்துள்ளதாக இந்தியா டுடே இணையத்தளத்தில் ஜூலை 24 ஆம் திகதி குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறுகையில், "இத்தீவில் எங்குமே அணுமின் நிலையமொன்றை அமைப்பதற்கு நாம் தீர்மானிக்கவில்லை. அவ்வாறான திட்டத்திற்காக எந்த வெளிநாட்டுடனும் நாம் கலந்துரையாடவில்லை. இந்தியா டுடே யில் வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது" …

  15. போர் குற்றங்களை புரிந்ததாக கூறப்படும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் 20 பேருக்கு எதிராக 6 மாதங்களுக்குள் பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அவசரகால விதிகளின் கீழ் வழக்குத் தொடுக்கப்படும் எனவும் இதன்மூலம் கைதிகளின் நிச்சயமில்லாத் தன்மைக்கு முடிவு வரும் எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹத கம்லத் தெரிவித்துள்ளார். கைதிகள் விவகாரத்தை ஆராய்வதற்காக சுஹத கம்லத் தலைமையில் நால்வர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்படத்தக்கது. மேற்படி கைதிகளில் 20 பேர் பொதுமக்கள் மற்றும் பொருளாதார இலக்குகள் மீது பாரிய குண்டுத்தாக்குதல்களை நடத்தியமை, அரசியல் தலைவர்களை படுகொலை செய்தமை, தற்கொலை குண்டுதாரிகளுக்கு பயிற்சியளித்தமை மற்றும் தாக்குதல்களில் ஈட…

  16. மன்னார் புனித செபஸ்டியன் தேவாலயம் அருகிலுள்ள மாவட்ட நீதிவான் வீட்டின்மீது இனந்தெரியாத சிலர் கற்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக மன்னார் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.இன்று (28-07-2012) அதிகாலை இந்த கற்பிரயோகத்தினால் வீட்டில் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கு சேதம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக காவல்துறை தெரிவித்தனர். மன்னார் நீதவானின் மனைவியின் பெற்றோருக்கு சொந்தமான வீட்டின்மீதே கற்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் தற்போது குறித்த வீட்டில் மன்னார் நீதவானின் உறவினர்கள் எவரும் வசிப்பதில்லை எனவும் வேறொரு தரப்பினருக்கு வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://thaaitamil.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE…

  17. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் தொடர்பிலான அதிருப்தி வலுத்துவரும் தற்போதைய சூழ்நிலையில், சீனப் பாதுகாப்பு அமைச்சர் லியாங் க்வாங்லீ அடுத்தவாரம் கொழும்பு வரவிருப்பது இந்தியாவிற்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருப்பதாக இந்தியாவின் உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அடுத்தவாரம் இலங்கைக்கு வரும் சீனப் பாதுகாப்பு அமைச்சர் கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உட்பட்ட பல முக்கியஸ்தர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். அத்துடன், நாட்டின் முக்கியமான பல இடங்களுக்கும் அவர் விஜயம் செல்லவுள்ளார். இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்புத் தொடர்பாடல்களை மேம்படுத்துதல், பரஸ்பர படைப்பயிற்சி ஒத…

  18. யாழ் மாவட்டத்தில் ஐந்து பொதுமக்களுக்கு ஒரு பாதுகாப்புப் படையினர் என்ற எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்கiளில் ஈடுபடும் குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ள பாதுகாப்புப் படையினர் ஒத்துழைப்பு வழங்குகின்றனர். யாழ் மாவட்ட காங்கேசன்துறை காவல்துறை அத்தியட்சகப் பிரிவில் கொலை முயற்சி ஒன்று இடம் பெற்றுள்ளதுடன் யாழ்ப்பாணம் காவல்துறை அத்தியட்சகர் பிரிவில் ஒன்பது பல்வேறு திருட்டுச் சம்பவங்ளும் இடம் பெற்றுள்ளன. குறிப்பிட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய அனைத்து சந்தேக நபர்களும் இனம் காணப்பட்டள்ளபோதிலும், அனைவரும் யாழ் மாவட்டத்தை விட்டு வெளியெறி வெளி மாவட்டங்களில் தலைமறைவாகி இருப்பதினால் சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்ய முடியாத நிலமை காணப்படுவ…

    • 1 reply
    • 492 views
  19. சிங்களம் தமிழ் நிலத்தை ஆக்கிரமித்திருப்பதுமடடுமல்ல அங்கு தமிழ் மொழியை திட்டமிட்டு கொலையும் செய்கிறார்கள்..இது இனச்சுத்திகரிப்பின் நுண்வடிவம் .. நந்திக்கடலை எப்படி எழுதி இருக்கிறார்கள். தாயகத்தில் இருந்து சிங்களத்தை நம்பி பிழைக்கும் மேதாவிகள் சிலருக்கு ஒரு வேண்டுகோள் ..புலிதான் உங்களுக்கு பிரச்சினை தமிழ் மொழி கூடவா உங்களுக்கு ஆகாமல் போய்விட்டது.. சிங்களவனுடன் கதைத்து இந்த பலகைகளையாவது மாத்துங்கோவன்.. நன்றி: பரணி கிருஷ்ணரஜனி http://thaaitamil.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/

    • 0 replies
    • 729 views
  20. [size=3][size=4]மன்னாரில் மீனவர் பிரச்சினை குறித்து வவாதித்தார் ஹக்கீம்[/size] [size=4]இலங்கையில் நீதிபதிக்கும், நீதிமன்றத்திற்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளை, நீதி அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் சனிக்கிழமை மன்னாருக்கு விஜயம் செய்துள்ளார்.[/size] [size=4]மன்னார் உப்புக்குளம் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் அந்தப்பகுதி மீனவ மக்களையும், ஏனையோரையும் அவர் சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்தார்.[/size] [size=4]இந்தச் சந்திப்பின்போது கலகத்தில் ஈடுபடடவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 13 பேரையும் விடுதலை செய்வதற்க…

  21. யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தியில் உள்ள குளத்தில் தென்னிலங்கையில் இருந்து வரும் சுற்றுலாப் பணயிகள், வியாபாரிகள் போடும் கழிவுப் பொருட்களினால் குளம் அசுத்தமடைவதுடன், தொற்று நோய்களும் ஏற்படுக் கூடிய வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிகிக்னறனர். நாளாந்தம் பல ஆயிரக்கணக்கான மாணவாகள் பொது மக்கள் எனப் பலரும் கூடும் முக்கிய சந்தியாக இருப்பதினால் குளத்தில் சல்பினியாப் பூண்டுகள் அதிகம் பரவிக் காணப்படுவதுடன், தென்னிலங்கையில் இருந்து வரும் சுற்றுலாப் பணயிகள் நாக விகாரையை தரிசிப்பதற்காக தங்குபவர்களும், தென்னிலங்கை வியாபாரிகளின் ஆகியோரினால் வீசப்படும் கழிவுப் பொருட்களும் மேலும் அசுத்தப்படுத்தப்படுள்ளது. குளத்தின் ஒரு பகுதி அண்மைக்காலத்தில் துப்பரவு செய்யப்பட்ட ப…

    • 0 replies
    • 587 views
  22. [size=3][size=4]மன்னார் நீதவான் அந்தனிபிள்ளை ஜூட்சனின் இல்லத்தின் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.[/size][/size] [size=3][size=4]மன்னார் செபஸ்தியார் வீதியில் இந்த இல்லம் அமைந்து உள்ளதாகவும், இந்த இல்லத்தை நீதவான் வாடகைக்கு விட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.[/size][/size] [size=3][size=4]வீட்டின் மீது கற்கள் வீசி எறியப்பட்டுள்ளதாகவும் இதனால் வீட்டுக்கும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.[/size][/size] [size=3][size=4]இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.[/size][/size] [size=3][size=4]இதேவேளை, மன்னார் நீதவான் தற்போது வசித்து வரும் வீட்டுக்கு விசேட …

    • 1 reply
    • 620 views
  23. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறையைக் கொண்ட அரசாங்கத்தின் தேசிய செயற்றிட்டம் ஒரு கண்துடைப்பு நாடகமாகும். இதனால் ௭ந்தவித பயனும் ஏற்படப்போவதில்லை ௭ன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதாகக் கூறும் அரசாங்கம் மறுபுறம் சிங்கள குடியேற்றங்களையும் காணி அபகரிப்பு நடவடிக்கைகளையும் இராணுவ மயமாக்கும் செயற்றிட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகின்றது. இந்தநிலையில் அரசாங்கத்தின் தேசிய செயற்றிட்டம் ௭ன்பது நகைப்புக்கிடமானது ௭ன்றும் அவர் சுட்டிக்காட்டினார். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற…

  24. http://m.youtube.com/watch?v=YN8jmfghyGk

    • 2 replies
    • 671 views
  25. [size=4]எம்மை மீளக்குடியமர்த்துமாறு பலரிடம் மனுக்கள் கையளித்தும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் இல்லை. எனவே எங்களை மீளக்குடியமர்த்துமாறு கோரி நீதிமன்றத்தை நாடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இதற்கு வலி.வடக்கு பிரதேச சபையும் எமக்கு உதவி வழங்க வேண்டும் என மயிலிட்டியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.[/size] [size=2][size=4]பிரதேசத்திலிருந்து இடம் பெயர்ந்து உறவினர் வீடுகளிலும் நலன்புரி முகாம்களிலும் வாழும் மக்களின் மீளக்குடியமர்வினை துரிதப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் வலி.வடக்கு பிரதேச சபையின் தலைமையலுவலக மாநாட்டு மண்டபத்தில் தலைவர் சோ.சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது.[/size][/size] [size=2][size=4]இதன்போதே மேற்படி உறுதிமொழி மக்களால…

    • 3 replies
    • 320 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.