Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 2012 லண்டன் ஒலிம்பிக் துவக்கவிழாவிற்கு இலங்கை ரூபாவாகினிக் கூட்டுத்தாபன குழுவினருக்கு அனுமதி இல்லை: 27 ஜூலை 2012 2012 லண்டன் ஒலிம்பிக் துவக்கவிழாவிற்கு இலங்கை ரூபாவாகினிக் கூட்டுத்தாபன குழுவினருக்கு அனுமதி இல்லை:- 2012 லண்டன் ஒலிம்பிக் துவக்கவிழாவான இன்று இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தொலைக்காட்சியான ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்தின் ஊடகவியலாளர்கள் ஒலிம்பிக் அரங்கிற்கு அனுமதிக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒலிம்பிக் தொடக்க விழாவை இலங்கை நேயர்களுக்கு ஒளிபரப்பவும் செய்திகளை அனுப்பவும் பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தொலைக்காட்சிக் குழுவினர் ஒலிம்பிக் ஆரம்பவிழாவிற்கு அனுமதிக்கவில்லை என தெரியவருகிறது. எனினும் இதற்கான உத்தியோகபூ…

    • 16 replies
    • 2.6k views
  2. [size=4]கனடாவின் மிகப்பெரிய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனமான ஜெனரல் மோட்டர்ஸ் தலைமை அலுவலகத்தில் பொறியியல் விஞ்ஞானியாக பணியாற்றும் கீதா ரவீந்திரன் அண்மையில் கனடாவின் ஒசாவா நகரில் உள்ள ஜெனரல் மோட்டர்ஸ் தொழிற்சாலைக்கு விஜயம் செய்த கனடியப் பிரதமர் ஸ்ரீபன் கார்ப்பர் மற்றும் ஒன்றாரியோ மாகாணத்தின் முதல்வர் டால்ரன் மெக்குயின்றி ஆகியோரின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டார்.[/size] [size=4]தமிழ் நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களும், சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் குடியேறியவர்களுமான தமிழ் பேசும் பெற்றோருக்கு பிறந்த கீதா அமெரிக்காவில் கல்வி கற்று பொறியியல் துறையில் உயர் கல்வி கற்று பொறியியல் கலாநிதிப் பட்டம் பெற்று ஆராய்ச்சியில் ஈடுப…

  3. [size=4]திமுகவின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள டெசோ மாநாட்டில் கலந்துகொள்ளும்படி ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஓகஸ்ட் மாதம் நடைபெற உள்ள இந்த மாநாட்டின் அதிகாரப்பூர்வ அழைப்பாளர் ராதா கிருஷ்ணன் திமுக தலைமையின் சார்பாக இந்த அழைப்பை விடுத்துள்ளார். இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி பொது செயலாளர் நல்லையா குமரகுருபரன் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், "டெசோ மாநாட்டில் கலந்துகொள்ள திமுகவின் அழைப்பு எமக்கு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் இலங்கையிலும், தமிழகத்திலும் எழுந்துள்ளன. இலங்கை பிரச்சினை தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள், தமது சொந்த அரசியல் நோக்கங்களுக்காக நடத்தப்படுகின்றனவா…

  4. [size=3] [/size] தனிஈழத்திற்காகவே டெசோவில் இணைந்தோம் - தொல்.திருமாவளவன் [size=3] தனி ஈழத்தை ஆதரித்தே டெசோ அமைப்பில் இணைந்திருக்கிறோம் என்று குடியாத்தத்தில் தொல்.திருமாவளவன் கூறினார். [/size][size=4] டெசோ அமைப்பில் ஏன் இணைந்திருக்கிறோம் என்றால் அதில் தனி ஈழம் வலியுறுத்தப்படுகிறது. அதற்காகவே டெசோ அமைப்பில் உள்ளோம். தமிழ் ஈழத்தை ஆதரித்து அ.தி.மு.க. குழு அமைத்து அதில் பங்கேற்க என்னை அழைத்து நான் மறுத்தால் என்னை விமர்சனம் செய்யலாம். தமிழ் ஈழம் எங்கு வலியுறுத்தப்படுகிறதோ அங்கு நாம் உள்ளோம். இவ்வாறு பேசினார். (நக்கீரன்)[/size]

  5. [size=3][/size] [size=3][size=4]இனத் துரோக நடவடிக்கைகளை கட்டுப்படுத்தாவிட்டால் நாடும் இனமும் அழிவுப்பாதையில் செல்வதனை யாராலும் தடுக்க முடியாது என தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=3][size=4]தமிழீழ விடுதலைப் புலிகலின் தலைவரான பிரபாகரனுடன் போர் நடத்திய காலத்தை விடவும் தற்போது ஆபத்தான தருணம் உதயமாகியுள்ளது என அவர் எச்சரித்துள்ளார்.[/size][/size] [size=3][size=4]மேற்குலக நாடுகளான இந்தியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கை பிளவடைவதனையே விரும்புகின்றன.[/size][/size] [size=3][size=4]2018ம் ஆண்டில் சீனா உலக வல்லரசாக மாற்றமடைந்துவிடும் இதனால் பீதியடைந்துள்ள அமெரிக்கா இலங்கையில் முகாம் ஒன்றை அமைக்க முயற்…

  6. [size=4]லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க நாளான நேற்று ஒலிம்பிக் விளையாட்டரங்குகள் அமைந்திருக்கும் கிழக்கு லண்டன் பகுதியில் மூன்று இடங்களில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வுகளில் பெருமளவிலான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்.[/size] [size=4]ஆரம்ப நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாட்டுத் தலைவர்கள், பிரமுகர்கள் சென்ற பாதையான Aspen Way என்ற பிரதான வீதியின் ஒருமருங்கில் மாலை 5 மணியளவில் கூடத் தொடங்கிய மக்கள் பதாகைகளையும், தமிழீழ தேசியக் கொடிகளையும் தாங்கியவாறு கொட்டொலிகளை எழுப்பியபடி இரவு 8.30 வரை தமது போராட்டத்தை தொடர்ந்தனர்.[/size] [size=4]பிறிதொரு தொகுதி மக்கள் நேற்றைய நிகழ்ச்சி நடைபெற்ற உள்ளரங்குக்கு வெளியே கூடியிருந்து இனப்படுகொலை புரியும் சிறிலங்கா நாட்டு…

  7. [size=4][/size] [size=4]இராணுவத்தினரால் தாக்குதல் நடத்தப்படலாமென பொலிஸாரே எச்சரிக்கும் அளவிற்கு யாழ்ப்பாணத்தில் இராணுவ அராஜகம் தலைவிரித்தாடுவதாக தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ அமைப்பின் அரசியல் தலைவருமான எம்.கே.சிவாஜிலிங்கம், இதை சர்வதேசம் சரியாக புரிந்துகொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]நேற்று முன்தினம் இரவு வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலை நினைவு தினம் குறித்த சுவரொட்டிகளை நெல்லியடி பகுதியில் ஒட்டிக்கொண்டிருந்த சமயம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்தும், அதன் பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்தும் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் தெரிவிக்கையில்,[/size] [size=4]கைதுசெ…

  8. புலிகள் விடயத்தில் இலங்கையை விட சுவிஸ் தீவிரம்! விசாரிக்க குழு வருகிறதாம்!? Saturday, July 28, 2012, 6:21 [size=3][size=1][size=4]தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்வதற்காக, சுவிட்சர்லாந்தில் இருந்து 15 பேர் கொண்ட குழு ஒன்று இலங்கை வரவுள்ளது.எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி இலங்கை வரும் இந்த குழு, செப்டம்பர் 12 ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கி இருப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.[/size][/size] [size=4]இந்த காலப்பகுதியில் அவர்கள் இலங்கையில் வைத்து 26 பேரை விசாரணை செய்யவிருப்பதாக கூறப்படுகிறது. இதுவரையில் அவர்கள் சுவிட்சர்லாந்தில், 120 சாட்சியாளர்கள் மற்றம் தகவல் வழங்;கியவர்களையும் விசாரணை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன…

  9. [size=4]புகலிடம் மறுக்கப்பட்டு அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 48 வயதான தயான் அந்தோனி எனப்படும் அன்பு என்ற நபர் இன்று 26 ஆம் திகதி அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.[/size] [size=4]இவரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணை நடத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்பி அஜித் ரோஹன தெரிவித்தார். 2010 ஆம் ஆண்டு போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இந்நபர் அவுஸ்திரேலியாவுக்குத் தப்பிச் சென்று புகலிடம் கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]2009 ஆம் ஆண்டு வன்னியில் இடம்பெற்ற போரின் இறுதியில் இலங்கை இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு, கடுமையான சித்திரவதைகளை அனுபவித்து உறவினர்களின் கடும் முயற்சியால் விடுதலை செய்யப்…

    • 4 replies
    • 517 views
  10. [size=5]சிறைச்சாலை திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ்[/size] [size=4]சிறைச்சாலைகள் திணைக்களத்தைப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது. சிறைச்சாலைகளை நிர்வகிப்பதற்கு மட்டும் தனியொரு அமைச்சு உருவாக்குவது தொடர்பாக முன்னர் யோசனை தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் மத்தியில் நன்னடத்தைகளை பேணுவதற்கும், பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டும் தற்போது இதனைப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிக்கப்படுவதாக, அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் போதைப் பொருள் கடத்தல், பாதாள உலகச் செயற்பாடுகள் மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபட்டவர்களாவர். அண்மைக் காலத…

    • 3 replies
    • 551 views
  11. [size=5]முஸ்லிம்கள் மீதான தமிழ் புத்திஜீவிகளின் பிழையான அரசியல் கண்ணோட்டம் களையப்பட வேண்டும்: மு.கா பிரதித் தலைவர்[/size] முஸ்லிம்களைப் பற்றிய ஒரேவிதமான வரலாற்றுப் பார்வை கொண்டிருக்கும் தமிழர்களின் எண்ணப்போக்குகளில் புதிய மாற்றங்கள் வேண்டும். அறிவார்ந்த ஒரு சமூகமாக உலகம் பூராவும் புலம் பெயர் ஈழத் தமிழர்களாக வாழ்ந்து வரும் தமிழர்களிடம், இலங்கைவாழ் முஸ்லிம்கள் பற்றி இதுகாறும் இருந்து வரும் பழமைவாத கருத்துப் பார்வைகளிலிருந்து, நவீனத்துவப் பார்வை கொண்ட அணுகுமுறை அவசியம்' என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவர் நசீர் அஹமட் தெரிவித்தார். இலங்கைவாழ் சிறுபான்மைச் சமூகங்கள் என்ற வகையில் சிறந்த இணக்கப்பாடான நல்லுறவைப் பேணுவதற்கும், பெரும்பான்மைச் சமூக ஆ…

    • 5 replies
    • 841 views
  12. வவுனியா சிறைச்சாலையில் அடித்து கொலை செய்யப்பட்ட நிமலரூபனின் படுகொலையைக் கண்டித்து வலி.வடக்குப் பிரதேச சபையில் கொண்டுவரப்பட்ட கண்டனத் தீர்மானத்தை ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் நிராகரித்தனர். எனினும் கூட்டமைப்பு உறுப்பினர்களின் 15 வாக்குகளால் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வலி.வடக்கு பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம் இன்று அதன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உப தலைவரால் நிமல ரூபனின் கொலைக்கான கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்தத் தீர்மானத்தை தாம் ஆதரிக்க போவிதில்லை என எதிர்க்கட்சியான ஈ.பி.டி.பியின் ஆறு உறுப்பினர்கள் தெரிவித்தனர். எனினும் ஆளும் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களின் வாக்குகளால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. http://www.g…

  13. [size=4][/size] [size=4]அன்பான ஐரோப்பியவாழ் தமிழீழ உறவுகளே! எதிர்வரும் 27.07.2012 அன்றைய நாள் இலண்டன் ஒலிம்பிக் தொடக்கவிழாக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதற்காக உலகெங்கிலுமுள்ள 120 இற்கும் மேற்பட்ட நாட்டுத் தலைவர்கள் வருகைதரவுள்ளார்கள்.[/size] [size=4]இதில் சிறீலங்கா இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சவும் வருகைதரவுள்ளார். உலகின் 120 இற்கும் மேற்பட்ட நாட்டுத் தலைவர்கள் இலண்டன் Aspen Way E14 என்னும் வீதிவழியாக ஊர்தியில் சென்று ஒலிம்பிக் தொடக்கவிழாவில் கலந்துகொள்ளவுள்ளனர்.[/size] [size=4]இந்நிலையில் சிறீலங்கா இனப் படுகொலையாளிகளை பிரித்தானியா மண்ணிலிருந்து விரட்டியடிக்கும் முகமாகவும் எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவழிப்பை சர்வதேச நாட்டுத் தலைவர்கள…

  14. 2000 மாம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது, தம்மைகொலை செய்ய முயற்சித்ததாக எரிக் சொல்செய்ம் தெரிவித்துள்ளார். சிங்கள கடும்போக்குச் சக்திகள் தமக்கு கொலை மிரட்டல்விடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 2000மாம் ஆண்டு மே மாம் 22ம் திகதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கபண்டாரநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் தாம் உள்ளிட்ட நோர்வே பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம் செய்ததாகத் தெரிவித்துள்ளார். இந்த விஜயத்தின் போது குண்டுத் தாக்குதல் நடத்தி தம்மை படுகொலை செய்ய சில தரப்பினர் முயற்சி செய்ததாக எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். அப்டீன்போஸ்டின் என்னும் நோர்வேயிலிருந்து வெளியாகும் பத்திரிகைக்குஅளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். படுகொல…

  15. ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கும் அரச தலைவர்கள், பிரமுகர்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் அவர்கள் செல்லும் வீதியின் ஒருமருங்கில் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடலை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாடு செய்துள்ளது. அஸ்பன் வே (Aspen Way) எனும் வீதியில் Billingsgate மீன் அங்காடிக்கு முன்பாக மாலை 5 மணிக்கு ஆரம்பித்த ஆர்பாட்டத்தில் பெருந்திரளான தமிழ் மக்கள் கலந்து கொண்டு உள்ளனர். ஒலிம்பிக் ஆரம்பநிகழ்ச்சியில் இனப்படுகொலையளி மகிந்த இராஜபக்ச கலந்து கொள்ளவிருப்பதனை அவரது பேச்சாளர் பந்துல ஜயசேகர உறுதிப்படுத்தியதாக லண்டனிலிருந்து வெளியாகும் The Independent நாளிதழ் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது. இதனை அடுத்து அங்கு பெரும் திரளாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பா…

    • 0 replies
    • 1.2k views
  16. யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராசாவின் ஊழல் மோசடிகள் தொடர்பில் வெளிக்கொணர்ந்த சில வைத்தியர்களை விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என போட்டுக் கொடுத்து பணிப்பாளர் எழுதிய இரகசியக் கடிதம் ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தாய் சங்கத்தினருக்கே இக்கடிதத்தை பணிப்பாளர் பவானி பசுபதிராசா எழுதி இரகசியமாக அனுப்பி வைத்துள்ளார். அவர் எழுதிய இக்கடிதமானது, யாழ். போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் வைத்திய நிபுணர் என். ஜெயக்குமாரனின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் இடம்பெற்று சில தினங்களில் எழுதப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் அபிவிருத்திகள் நடைபெற்றுவருவதாகவும் இதனை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் …

    • 0 replies
    • 938 views
  17. [size=4]வவுனியா சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற அமைதியின்மை சம்பவத்தின் பின்னர் மஹர சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட தமிழ் கைதிகளை இன்று சந்திக்கச் சென்ற மன்னார் ஆயர் பேரருட்திரு இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களுக்கு கைதிகளைச் சந்திக்க சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் அனுமதி மறுத்துள்ளார். குறித்த சிறைச்சாலையில் 4 கத்தோலிக்க கைதிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன எம்.பி மற்றும் மன்னார் ஆயர் பேரருட்திரு இராயப்பு ஜோசப் ஆண்டகை ஆகியோர் இன்று பகல் மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வவுனியா சிறைச்சாலையிலிருந்து இடமாற்றப்பட்ட தமிழ்க் கைதிகளை பார்வையிடச் சென்றனர். இதன்போது மன்னார் ஆயர் பேரருட்திரு…

  18. வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோருக்கான இடைத்தங்கல் முகாம்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் மூடப்பட்டு அங்குள்ள முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றப்படுவார்கள் என பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டபோதும் ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படாத நிலையே தொடர்வதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் மடுத்தியம்பற்று, புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் 9 கிராமசேவகர் பிரிவுகளில் ஆயிரத்து 595 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்படாத நிலையில் தொடர்ந்தும் வவுனியா செட்டிகுளம் முகாமில் தங்கவைக்க ப்பட்டிருக்கின்றனர். இதில் மடுத்தியம்பற்று பிரதேசத்தின் கீழ், கேப்பாபுலவு, முள்ளிவாய்கால் மேற்கு, முள்ளிவாயக்கா…

    • 0 replies
    • 506 views
  19. [size=4][/size] [size=4]பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஹினா ரப்பானி காஹர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொணடு எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி புதன்கிழமை இலங்கை வரவுள்ளார்.[/size] [size=4]வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸின் அழைப்பையேற்று இலங்கை வரவுள்ள பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட பல அமைச்சர்களை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.[/size] [size=4]இதேவேளை, ஆகஸ்ட் மூன்றாம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருக்கவுள்ள பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஹினா,[/size] [size=4]சர்வதேச உறவுகள் மற்றும் தந்திரேபாய கற்கைகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் கற்கை நிலையத்தில் தெற்காசியாவில் இலங்கை - பாகிஸ்தான் உறவு எனும் தலைப்ப…

  20. தமிழகக் கடற்றொழிலாளர்கள் விடுவிப்பு; இந்தியாவின் அழுத்தத்திற்கு பணிந்தது சிறிலங்கா சிறிலங்காக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழகக் கடற்றொழிலாளர்கள், இந்திய அரசு சிறிலங்காவுக்கு கோடுத்த அழுத்தத்தை அடுத்து விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 21ம் திகதி தமிழகம் இராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க 5 படகுகளில் கடற்றொழிலாளர்கள் 23 பேர் சென்றுள்ளனர். விடுதலையாகியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் சிறிலங்காக் கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடித்ததாகக் கூறி சிறிலங்காக் கடற்படையினர் அவர்களை மன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்தனர். அதன்பின்னர் காவற்றுறையினர் மூலம் மன்னார் நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து அனுராதபுர…

  21. [size=3][/size] [size=3][size=4]கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள சிபாரிசுகள் அனைத்தும் சுமார் மூன்றரை வருட கால பகுதிக்குள் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்தார்.ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 285 முன்மொழிவுகளும் இந்த காலப்பகுதிக்குள் அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.[/size][/size] [size=3][size=4]இந்த முன்மொழிவுகள் 235 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளதுடன் இதற்காக தேசிய வேலைத்திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் லலித் வீரதுங்க தெரிவித்தார்.[/size][/size] [size=3][size=4]இதிலுள்ள முன்மொழிவுகள் 3 மாதங்கள், 6 மாதங்கள் 12 மாதங்கள் மற்றும் 24 மாதங்கள் ஆகிய கால பகுதிக்…

    • 6 replies
    • 384 views
  22. தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் மீதான தடையை மேலும் நீட்டிப்பது என இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளமையானது இரு அடிப்படைக் கேள்விகளை எழுப்பியுள்ளது. இவ்வாறு செய்தி மற்றும் அரசியல் ஆய்வுகளுக்கான Eurasia Review என்னும் இணையத்தளத்தில் ஆய்வாளர் J Jeganaathan எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்திபாரதி. அக்கட்டுரையின் முழுவிபரமாவது: இந்திய அரசாங்கமானது தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் 1991ல் முதன் முதலாக இந்திய அரசாங்கமானது தமிழீழ விடுதலைப் புலிகளை …

  23. அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு ஆதரவு தெரிவித்து முஸ்லிம்கள் இன்று எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்த உள்ளனர். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்றைய தினம் நடைபெறவுள்ள ஜூம்மா தொழுகையின் பின்னர் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. வடக்கு முஸ்லிம் மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இந்தப் போராட்டத்தில் கோரப்பட உள்ளது. அமைச்சர் பதியூதின் முஸ்லிம் மக்கைள மீள் குடியேற்ற முயற்சி எடுத்து வருவதாகவும், அதற்கு முஸ்லிம் அமைப்புக்கள் என்ற ரீதியில் ஆதரவளிக்கப்படும் எனவும் சில முஸ்லிம் அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன. http://www.globaltam...IN/article.aspx துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள…

  24. ரெலோ அமைப்பின் அரசியல் பொறுப்பாளரும், த.தே. கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று இரவு பொலிஸாராலும், இராணுவத்தினராலும் கைது செய்யப் பட்டிருக்கின்றார். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களையும், படுகொலைச் சம்பவத்தையும் நினைவு கொள்ளும் வகையில், சுவரொட்டிகளை நெல்லியடி பகுதியில் ஒட்டிக்கொண்டிருந்துள்ளார். இதன்போது அங்கு வந்த பொலிஸாரும், படையினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்ற அங்கீகாரத்தையும் வழங்காமல் கடுமையான முறையில் நடந்து கொண்டுள்ளனர். இதனை நகரப் பகுதியில் நின்றிருந்த சிலர் பார்த்துள்ளனர். இதன் பின்னர் சிவாஜிலிங்கத்தையும், அவருடனிருந்த 8 பேரையும் பொலிஸார…

    • 10 replies
    • 2k views
  25. [size=3][size=4]சுவிஸ் நாட்டில் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட மூன்று இலங்கைத்தமிழர்கள், இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ள விடயம் சுவிஸ் தமிழர்களை அதிர்ச்சி கொள்ளவைத்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை (27-07-2012) இலங்கையின் கட்டுநாயக்கா விமானநிலையத்தினை, நாடுகடத்தப்பட்ட மூவரும் சென்றடைந்துள்ளதாக அறியமுடிகின்றது. பிரித்தானியா, அவுஸ்றேலியா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து சுவிஸ் அரசாங்கம் தமிழர்களை திருப்பி அனுப்ப தொடங்கியுள்ளது. சுவிஸ் நாட்டில் நிலையான அகதி அந்தஸ்து அற்ற நிலையில், 2 000 தமிழர்கள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்ற நிலையில், மூவர் நாடுகடத்தப்பட்ட விடயம் , சமீபத்திய காலங்களில் அகதி அந்தஸ்து கோரிய தமிழர்களை அச்சங்கொள்ள வைத்துள்ளது. திருப்பி அனுப்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.