ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143407 topics in this forum
-
[size=3] [size=4]ஊடக அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமைய ஒன்பது இணைய தளங்களை இலங்கை தொலைதொடர்பு[/size] [size=4]கட்டுப்பாட்டு ஆணையகம் முடக்கியுள்ளது. தனிப்பட்ட நபர்களுக்கு அவதூறு ஏற்படும் வகையில் தகவல்களையும் செய்திகளையும் வெளியிட்டு வந்த இணைய தளங்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக ஊடக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. தற்காலிக அடிப்படையில் இணைய தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.[/size] [size=4]இணைய தளங்கள் முடக்கப்படவில்லை எனவும், தற்காலிக அடிப்படையில் குறித்த இணைய தளங்களை முடக்குமாறு இணைய சேவை வழங்குனர்களிடம் கோரியதாகவும் தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம் யூ.எச்.சீ. பிரியந்த தெரிவித்துள்ளார். ஊடக அமைச்சின் பணிப்புரைக்கு அம…
-
- 0 replies
- 787 views
-
-
[size=4]சிறைச்சாலையில் அடித்துக் படுகொலைசெய்யப்பட்ட வவுனியா தமிழ் அரசியல் கைதியான நிமலரூபனின் உடலை, அரசாங்கம் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க மறுக்கும் விவகாரத்தை அனைத்துலக கவனத்துக்கு கொண்டு செல்லப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.[/size] [size=4]இதுதொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த வவுனியாவைச் சேர்ந்த கணேசன் நிர்மலரூபனின் உடலை, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நாடாளுமன்றன்றத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்த அறிக்கைக்கு, அரசாங்கம் சாதகமாகப் பதிலளிக்கவில்லை.[/size] [size=4]எ…
-
- 0 replies
- 454 views
-
-
[size=4]கிறீக் அரசாங்கப் பிணைகளில் சிறிலங்கா மத்திய வங்கி கடந்த ஆண்டில் முதலீடு செய்த 347 கோடி ரூபாவையும் சிறிலங்கா அரசாங்கம் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கிறீக்கில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினாலேயே இந்தநிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிறிலங்கா மத்திய வங்கி 22,163,500 யூரோவை (3,472,576,045 ரூபா) கிறீக் அரசாங்கப் பிணைகளில் முதலீடு செய்திருந்தது. இதன் தற்போதைய பெறுமதி சுமார் 30 மில்லியன் ரூபாவாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. கிறீக்கில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அந்த நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. இதனால் சிறிலங்கா அரச…
-
- 3 replies
- 857 views
-
-
[size=4]இலங்கை விமானப்படையினர் இந்தியாவில் பயிற்சி பெறுவதற்கு தமிழ்நாட்டு அரசியல்வாதிகளிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பினாலும், படையினர் தொடர்ந்தும் இந்தியாவுக்குப் பயிற்சிக்கு அனுப்பப்படுவர் என்று அரசாங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.[/size] [size=4]இது தொடர்பாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை விமான படையினரின் வெளிநாட்டில் உள்ள மிகப்பெரிய பயிற்சித் தளமாக இந்தியா உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் தாம்பரம் விமானப் படைத்தளத்தில் ஒன்பது விமானப்படையினருக்குப் பயிற்சி அளிக்கப்படுவதற்கு எதிர்ப்புக் கிளம்பிய விவகாரம் ஒரு தீவிரமான விடயமே அல்ல.[/size] [size=4]ஏனெனில், தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் 1500 தொடக்கம் 2000 வர…
-
- 1 reply
- 365 views
-
-
[size=4]மதுபோதையில் இருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.[/size] [size=4]இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வெல்லவ பொலிஸ் பிரிவில் ஒரு பொலிஸ் சார்ஜனும் கான்ஸ்டபிளும் குடிபோதையில் கடமையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இது குறித்து குருநாகல் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பொது மகன் ஒருவர் தொலைபேசி மூலம் தகவல் வழங்கியுள்ளார்.[/size] [size=4]இதனையடுத்து பொலிஸ் பொறுப்பதிகாரி வைத்தியர் ஒருவரை அனுப்பி சோதனை நடத்தியுள்ளார். சோதனையில் அவர்கள் குடிபோதையில் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர் நேற்றைய தினம் குறித்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த…
-
- 1 reply
- 502 views
-
-
[size=4]கிழக்கு மாகாண சபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிட வேண்டும் இல்லையேல் தனித்துப் போட்டியிட வேண்டுமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிடம்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதுடன் இணைந்து போட்டியிடுமாறு அழைக்க வேண்டியது தங்களின் கடமையெனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.[/size] [size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையில் கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பில் பேச்சுக்கள் இடம்பெற்றுவந்த நிலையில் நேற்று முன்தினமும் பாராளுமன்றத்தில் மற்றொரு சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவைசேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், பொன்.செல்வராசா, செ…
-
- 2 replies
- 899 views
-
-
[size=3][/size] [size=3][size=4]கிழக்கில் அரசாங்கமும் வெல்லக் கூடாது. அரசைப் பிரதிபலிக்கும் தமிழ்க் கட்சியும் வெல்லக் கூடாது. அதற்காக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் திருகோணமலையில் தெரிவித்துள்ளார்.கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கம் வெற்றி பெறக் கூடாதென்ற நோக்குடனேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.[/size][/size] [size=3][size=4]கிழக்கு மாகாண சபைத்தேர்தல் தொடர்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சி உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் ஒன்று திருகோணமலையில் தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா. சம்பந்தனின் இல்லத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெ…
-
- 0 replies
- 450 views
-
-
[size=3][/size] [size=3][size=4]ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக, அந்த மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுறை சந்திரகாந்தனை நிறுத்த முன்னணியின் இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=3][size=4]ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் இணைந்து போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 13 இடங்களை வழங்க முன்னணி இணக்கம் தெரிவித்துள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் உள்ளிட்ட 7 பேர் போட்டியிட உள்ளதுடன் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தலா மூன்று பேர் போட்டியிட உள்…
-
- 0 replies
- 575 views
-
-
[size=3] [size=4]கடந்த 6 மாதங்களில் மாத்திரம் 650 பேர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிக்கையொன்று சுட்டிக்காட்டுவதாக சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி நாளொன்றுக்கு சராசரியாக 4 பேர் கடத்தப்பட்டுள்ளனர். எனினும், இதுகுறித்து எதுவும் தெரியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.[/size] [size=4]கடந்த வருடத்தில் மாத்திரம் இலங்கையில் 15,000 பேர் காணாமல் போயுள்ளதாக அண்மையில் வெளியிடப்பட்ட சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆசிய பசுபிக் வலயம் தொடர்பான 2011ஆம் ஆண்டு வருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.[/size] [size=4]இம்மாதம் 5ஆம் திகதி சிங்கள ஊடகவியலாளர் சாந்த விஜேசூரியவை கடத்துவதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட முயற்சி த…
-
- 0 replies
- 676 views
-
-
இலங்கை விமானப்படையின் ஒன்பது அதிகாரிகளுக்கு தாம்பரம் விமானப்படைத் தளத்தில் பயிற்சி அளிக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் மீண்டும் இலங்கைக்கு எதிரான உணர்வலைகளைக் கிளறி விட்டுள்ளது. வவுனியா சிறைச்சாலையில், சிறைக்காவலர்களை மீட்கின்ற நடவடிக்கையின் போதும் அதன் பின்னரும் தாக்குதலுக்குள்ளாகிய, அரசியல் கைதி ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்த தகவல் பரவிய நிலையில் தான், தாம்பரத்தில் இலங்கை விமானப்படையினர் பயிற்சி பெறும் தகவல் பரவியது. சிறை நிரப்பும் போராட்டத்தை பெரியளவில் நடத்தி, திமுக தனது பலத்தைக் காட்டிய நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த விவகாரத்தை வெளியே கொண்டு வந்து தனது புத்திசாலித்தனத்தை நிரூபித்தார். தாம்பரம் விமானப்படைத் தளத்தில் பயிற்சி பெறுவதற்கு இலங்கை விம…
-
- 2 replies
- 4.5k views
-
-
சுன்னாகம் வங்கி முகாமையாளர் ஒருவர் மதகு ஒன்றில் தவறி வீழ்ந்து பலி! வங்கி முகாமையாளர் ஒருவர் உடுவில் பகுதியில் புனரமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மதகு ஒன்றில் தவறி விழுந்து மரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்டுகிறது சுன்னாகம் மக்கள் வங்கியின் உதவி முகாரமயாளரான 56 வயதுடைய தர்மலிங்கம் கனகலிங்கம் என்பவே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. வங்கி வேலைகள் நிறைவு செய்து விட்டு வீடு திரும்பும் உடுவில் ஆலடிப்பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் நடைப்பெற்றதாக தெரிவிக்கப்டுகிறது. நேற்று இரவு எட்டு மணியளவில் குறித்தப் பாலப்பகுதியில் ஒருவரின் அவலக்குரல் கேட்டதனைத் தொடர்ந்து வீதியில் சென்றவர்கள் விபத்துக்குள்ளான தர்மலிங்கம் கனகலிங்கத்தினை சங்கானை வைத்தியசாலையில் அனுமதித்…
-
- 0 replies
- 622 views
-
-
“ஏனைய தமிழ் அரசியல் கைதிகளை இனியாவது விடுதலை செய்யுங்கள்’ [size=2][size=2][size=4]தமிழ் அரசியல் கைதியொருவர் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட பின்னராவது அனைத்து அரசியல் கைதிகளையும் பொது மன்னிப்பின் கீழ் அரசு விடுதலை செய்ய வேண்டுமென புதிய ஜனநாயக மாக்சிசலெனினிசக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாகக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்தில்வேல் விடுத்துள்ள அறிக்கையில்; கடந்த மாதம் 29 ஆம் திகதி வவுனியாச் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மீது படையினர் மோசமான தாக்குதலை மேற்கொண்டனர். படுகாயமடைந்த அவர்களை மகர சிறைச்சாலைக்கு மாற்றிய பின்பு அங்கும் வைத்துத் தாக்கப்பட்டனர். இத் தாக்குதல்களில் படுகாயங்களுக்குள்ளானவர்களில் ஒருவரான கணேசன் நிமலரூபன…
-
- 0 replies
- 518 views
-
-
[size=3] [size=4]இன்று காலை சரியாக 10மணியளவில் மன்னார் நகரசபையை ஒட்டிய சிறுவர் பூங்காவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடாத்திய அரசாங்கத்தின் நிலஅபகரிப்பிற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், எம்.ஏ.சுமந்திரன், வினோ நோகராதலிங்கம், சரவணபவன், அப்பாபிள்ளை விநாயகமூர்த்தி ஆகியோருடன் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியும், ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகத்துறைச் செயலாளரும் கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான பாஸ்கராவும் விக்கிரமபாகு கருணாரட்னவின் தலைமையிலான நவசமசமாஜக்கட்சியின் முக்கியஸ்தர…
-
- 1 reply
- 694 views
-
-
[size=4]ஆளும் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக பிரசாரம் செய்து வருவோருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆளும் கட்சியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் இவ்வாறு பிரசாரம் செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறான பிரசாரங்களை மேற்கொள்வது கண்டிக்கப்பட வேண்டியது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தின் போது ஜனாதிபதி, பகிரங்கமாக குறித்த நபர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.[/size] [size=4]குழப்பங்களை விளைவிக்கும் நபர்கள் எந்த நேரத்திலும் ஆளும் கட்சியை விட்டு விலகிச் செல்ல முடியும் என அ…
-
- 0 replies
- 442 views
-
-
[size=3] [size=4]தமிழ்நாடு விமானப்படை பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வந்த இலங்கை விமானப்படையினரை அங்கிருந்து வெளியேற்றினால், அவர்களுக்கு பயிற்சி வழங்க பாகிஸ்தான் தயாராக இருப்பதாக ராஜதந்திர தரப்பு தகவல்கள் தெரிவிப்பதாக ஞாயிறு திவயின பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.[/size] [size=4]தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தமிழக தலைவர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை முகாமில் இலங்கை படையினருக்கு வழங்கப்பட்டு வந்த பயிற்சிகள் நிறுத்தப்பட்டன. அவர்கள் இலங்கைக்கு அனுப்படவில்லை என பின்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன. இலங்கை விமானப்படையினரை திருப்பி அனுப்புவது குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு, இந்திய இதுவரை அறிவிக்கவில்லை.[/size] [size=4]இந்த ந…
-
- 2 replies
- 710 views
-
-
[size=4]சீன இராணுவ அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. இருதரப்பு இராணுவ முக்கியத்துவம் கொண்ட விவகாரங்கள், வன்னியில் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட போர் நடவடிக்கை மற்றும் இரு நாட்டு இராணுவங்களினதும் பயிற்சித் திட்டங்கள் குறித்து நேரில் ஆராய்வே சீன இராணுவ அதிகாரிகள் குழு சிறிலங்காவுக்குப் பயணம் செய்துள்ளது. சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் மூத்த கேணல் சியாவோயி தலைமையிலான இந்தக் குழுவில் கேணல் ஹி சோயுஜின், கேணல் குவோ ஹொங்டாவோ, லெப்.கேணல் குய்சி பெங், லெப்.கேணல் பாங் ஹெங் ஆகிய ஐந்து அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய உள்ளிட்ட முக்கிய இராணுவத் தளபதிகளைச் சந…
-
- 2 replies
- 765 views
-
-
[size=3][/size] [size=3][size=4]இலங்கை விமானப் படையினருக்கு நாட்டின் எந்த ஒரு இடத்திலும் பயிற்சி அளிக்கக் கூடாது என்றும் அவர்களை உடனே இலங்கைக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக மக்களை அவமானப்படுத்தும் வகையில், இலங்கையின் 9 விமானப்படையினர் தமிழகத்திலுள்ள தாம்பரம் விமானப் படை நிலையத்தில் ஒன்பது மாதம் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தேன்.[/size][/size] [size=3][size=4]தமிழர்களின் உணர்வுகளை சற்றும் மதிக்காமல், தமிழர்களுக்கு எதிரான இந்த செயலை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தேன். தமிழகத்திலுள்ள அனைத்த…
-
- 1 reply
- 833 views
-
-
[size=3][/size] [size=3][size=4]இலங்கை இந்திய கடற்படை உறவை வலுப்படுத்தும் நோக்கில் இவ் வருடத்திற்கான ஆண்டுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இதன் போது மீனவர் பிரச்சினை தொடர்பிலும் கவனத் செலுத்தப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் நேற்றைய தினம் காங்கேசன்துறையில் இடம்பெற்றுள்ளதாக இலங்கை கடற்படை இன்று தெரிவித்துள்ளது.[/size][/size] [size=3][size=4]இது இரண்டு அண்டை நாடுகளுக்கும் இடையே கடற்படை உறவை வலுப்படுத்தும் நோக்கில் வருடாந்தம் இடம்பெறும் ஒரு கலந்துரையாடல் கூட்டம் ஆகும்.[/size][/size] [size=3][size=4]இரு கூட்டத்தில் இரு நாடுகளையும் சேர்ந்த கடற்படை அதிகாரிகள் மற்றும் கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.[/size][/size] [size=3…
-
- 4 replies
- 918 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்காகத்தான் 1991-ல் திமுக ஆட்சியை இழந்தது என்பதை இப்போதாவது புரிந்து கொண்டால் சரி, என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: கேள்வி: டெசோ மாநாட்டிற்கு மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களையும், இலங்கையிலே உள்ள தமிழ் எம்.பி.க்களையும் அழைப்பீர்களா? பதில்: அழைப்போம். கேள்வி:- இலங்கை விமானப்படை வீரர்களுக்கு தமிழகத்திலே பயிற்சி அளிப்பதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்ததற்கு தமிழக முதல்வர் கண்டனம் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளாரே? பதில்: தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோது, 3-2-2009 அன்று தமிழக அரசின் சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பை நினைவுபடுத்துகிறேன். இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த வான்படை வீரர…
-
- 2 replies
- 1.8k views
-
-
[size=3][/size] [size=3][size=4]அனுராதபுரம் வைத்தியசாலையில் கோமா மயக்க நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞன் சுமார் ஜந்து வருடங்களுக்கு முன்னதாக காணாமல் போயிருந்தவரென கண்டறியப்பட்டுள்ளது. மன்னார் இலுப்பக்கடவையினை சேர்ந்த முத்துராசா தில்ருக்ஸன் (வயது 28) என அவர் அடையாளங்காணப்பட்டுள்ளார்.[/size][/size] [size=3][size=4]இன்று அனுராதபுரம் வைத்தியசாலைக்கு நேரில் விஜயம் செய்திருந்த தில்ருக்ஸனின் பெற்றோர் அவரை அடையாளம் கண்டுள்ளனர்.[/size][/size] [size=3][size=4]2006ம் ஆண்டில் வெளிநாடு செல்லுவதற்கென கொழும்பு நோக்கி புறப்பட்டு சென்றிருந்தவேளை இவர் காணாமல் போயிருந்தார்.இந்நிலையில் காணாமல் போன தமது பிள்ளையினை பெற்றோர் பல இடங்களிலும் தேடி திரிந்த நிலையில் பின்னர் நம்…
-
- 0 replies
- 807 views
-
-
[size=4]இறுதிக்கட்டப் போரின் போது இராணுவத்தினரிடம் சரணடையாத தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் இன்னமும் மக்கள் மத்தியில் வாழ்ந்து வருவதாகவும் அவர்களால் நாட்டுக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவும் சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.[/size] [size=4]இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:[/size] [size=4]நாள் தோறும் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. சரணடையாதவர்கள் யார் யார் என்பது இன்னமும் புலனாகவில்லை. இவ்வாறு சரணடையாது மக்களுடன் மக்களாக புலி உறுப்பினர்கள் வாழ்ந்து வருவது நாட்டுக்குப் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் இயங்கி வரும் சில அமைப்புக்கள் நாட்டின் ஸ்திரத்தன்…
-
- 2 replies
- 1k views
-
-
[size=5]தாம்பரத்தில் பயிற்சிபெறும் இலங்கை விமானப்படையினரை அங்கிருந்து அனுப்ப இந்தியா தீர்மானம்[/size] [size=4] இந்தியாவில் பயிற்சியளிக்கப்படும் இலங்கை விமானப்படையினரை தாம்பரம் விமானப்படைத்தளத்திலிருந்து அனுப்புவதற்கு இந்திய பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. தமிழகத்தின் தாம்பரத்திலுள்ள இந்திய விமானப் படை நிலையத்தில் இலங்கை விமானப்படை வீரர்கள் 9 பேருக்கு பயிற்சியளிக்கப்படுவதற்கு திமுக உட்பட தமிழகத்தின் பல அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. "பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கிணங்க, அனைத்து இலங்கைப் பயிலுநர்களும் இந்த நிலையத்திலிருந்து இன்று அனுப்பப்படுகின்றனர்" என இந்திய பாதுகாப்பு அ…
-
- 11 replies
- 1.1k views
-
-
[size="2"]மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள்குடியேறிய பிரதேசத்திலுள்ள உன்னிச்சை இருநூறுவில் கிராமத்தின் முகைதீன் ஜும் ஆ பள்ளிவாயலில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கி சாதனங்கள் நேற்று வெள்ளிக்கிழமை இனம் தெரியாதோரால் பள்ளிவாசல் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விடயம் தொடர்பாக வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் உன்னிச்சை இருநூறுவில் முஸ்லிம் நலன்புரிச் சங்க ஆலோசகர் இல்மி அஹமட் அலப்பை தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாழைச்சேனையில் உள்ள ஒரு கோயில் உண்டியல் உடைத்து திருடப்பட்டதாகவும் திருடர்கள் தற்போது ம…
-
- 0 replies
- 364 views
-
-
வடக்கில் தொடர்ந்து கொண்டிருக்கும் இராணுவத்தினரின் நில ஆக்கிரமிப்பு மற்றும் சிங்கள குடியேற்றம் ஆகியவற்றை எதிர்த்து தமிழ்தேசிய கூட்டமைப்பினர் மேற்கொண்டு வரும் தொடர் போராட்டங்களில் இன்று மன்னார் நகரிலும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமும் இடம்பெற்றுள்ளது. கூட்டமைப்பின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் மாவட்டச் செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் மன்னார் நகரிலுள்ள சிறுவர் பூங்கா வளாகத்தில் இன்று காலை 10மணிக்கு ஆரம்பமான மேற்படி கவனயீர்ப்பு போராட்டம் பிற்பகல் 1மணிவரையில் இடம்பெற்றது. இதன்போது சன்னார் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த சுமார் 500 வரையான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். மேலும் அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் எதிரான கோசங்களையும் அவர்கள் பதாகை க…
-
- 0 replies
- 433 views
-
-
[size=4]வடக்கில் இராணுவ ஆட்சி நிலவுவதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை அக்கற்றச்சாட்டக்கள் பொய்யானவை என சிறிலங்கா வீடமைப்புத் துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். வடக்கு மக்களை துன்புறுத்த வேண்டிய தேவை படையினருக்கு கிடையாது. படையினருக்கும் வடக்கு மக்களுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்படுத்த சிலர் முயற்சி செய்து வருகின்றனர் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.[/size] [size=4]வடக்கில் இராணுவ ஆட்சி நிலவுவதாக முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே குற்றம் சுமத்தி வந்தது. தற்போது கூட்டமைப்புடன் வேறு சில தரப்பினரும் இணைந்து கொண்டு குற்றம் சுமத்துகின்றனர்.[/size] [size=4]சர்வதேச சமூகத்தின் தேவைக்கு அமைய இவ்வாறான சதித் திட்…
-
- 0 replies
- 458 views
-