ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143407 topics in this forum
-
தென்மராட்சி எழுதுமட்டுவாள் பகுதியில் நேற்று குடும்பத் தகரறில் அழையா விருந்தாளியாக நுழைந்து கொண்ட படையினர் நடத்திய தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். க.ஜெயராசா(வயது45) என்ற 4பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவராவார். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது. குடும்பத்தில் சகோதரர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட தகராறில் சகோதரர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருந்துள்ளனர். இதன்போது அப்பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த படைச்சிப்பாய்கள் அழையா விருந்தாளிகளாக புகுந்து கொண்டுள்ளனர். முதலில் தகராறை நிறுத்துமாறு கேட்டுள்ளனர். எனினும் அதற்கு ஒத்துவராத சகோதரர்கள் தொடர்ந்தும் சண்டையிட்ட நிலையில் மூத்த சகோதரர் மீது படைச்சிப்பாய்கள் பொல்லால் தாக்கியுள்…
-
- 3 replies
- 636 views
-
-
அனுராதபுரம் SPயின் சப்பாத்தை நக்கி காலில் விழுந்து கும்பிடும்வரை அரசியல் கைதிகள் தாக்கப்பட்டார்கள் வவுனியா சிறைக்குள் புகுந்த 15 முதல் 23 வரையிலான அரசாங்க பாதுகாப்புத் தரப்பின் குண்டர்கள் கண்ணீர் புகைக் குண்டுகளால் மயங்கிய நிலையில் இருந்த சிறைக் கiதிகளை கடுமையாக தாக்கியுள்ளனர். அங்கிருந்து வாகனங்களில் தூக்கி போடப்பட்ட கைதிகள் பிற்பகல் 1 மணியளவில் அனுராதபுரத்திற்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டு இரவு 11 மணிவரை இடைவிடாது தாக்கப்பட்டனர். அங்கு குடிபோதையில் இருந்த சிறைக்காவலர்களும் காவற்துறையினரும் சிறைச்சாலை சுப்ரின்டனின் கால் சப்பாத்தை நக்குமாறு தொடர்ச்சியாக தாக்கியுள்ளனர். ஒவ்வொருவராக காலில் விழுந்து கும்பிட்டு சப்பாத்தை நக்கிய பின்னும் தாக்கப்பட்டுள்ளார்கள். இதன்…
-
- 16 replies
- 2.9k views
-
-
[size=3][size=4][/size][/size] [size=3][size=4]இலங்கை அரசாங்கம் 15 ஆபிரிக்க நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.[/size][/size] [size=3][size=4]வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் ஆலோசனைக்கு அமைய, 15 ஆபிரிக்க நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.[/size] [size=4]மரியுடானியா, மலாவி, புர்கினா பாசோ, சாட், டிஜிபவுட்டி, மத்திய ஆபிரிக்க குடியரசு, கபானோஸ் குடியரசு, கமருன், இக்வடோரியல் கயானா, காம்பியா, கேப் வெர்டா, சியரே லியோன், டோகோ, நைஜர் மற்றும் கொடே டி ஐவரி ஆகிய நாடுகளுடன் இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.[/size] [size=4]62 ஆபிரிக்க நாடுகளில் 54 நாடுகள் சுயாதீனம…
-
- 1 reply
- 487 views
-
-
இந்திய இலங்கை விமானப் படைகள் கூட்டுப் பயிற்சி சென்னை தாம்பரம் விமான தளத்தில் நடக்க இருப்பதால், இலங்கையை சேர்ந்த விமானப் படையினர் சென்னை வந்தனர். தகவல் அறிந்ததும், தமிழக முதல்வர் உடனடியாக தன்னுடைய கண்டன அறிக்கையை வெளியிட்டார். பின்பு வைகோ, ராமதாஸ், கருணாநிதி போன்ற தலைவர்களும் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டனர். இந்நிலையில் சென்னை தாம்பரம் விமான தளத்தை முற்றுகை இட முயன்ற மதிமுகவினரை போலீசார் கைது செய்துள்ளனர். இலங்கை விமானப் படை வீரர்களுக்கு தாம்பரத்தில் பயிற்சி தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலைமையில் மதிமுகவினர் பேரணியாக சென்றனர். தடையை மீறி ஊர்வலம் சென்றதாக மதிமுகவினர் 100 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். விமான தளத்தை முற்றுகை இட முயன்ற …
-
- 5 replies
- 1.3k views
-
-
[size=4]சிறிலங்காவில் மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தலில் புலி, நாய் ஆகிய சின்னங்களைப் பயன்படுத்த எந்தவொரு அரசியல்கட்சிக்கும் அனுமதி வழங்கப்படாது என்று சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். சிறிலங்கா தேர்தல் திணைக்களத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தவிர்ந்த சுயேட்சைக் குழுக்கள் புறா மற்றும் எருது சின்னங்களை பயன்படுத்த முடியும். முன்னர் இந்தச் சின்னங்களை அரசியல் கட்சிகள் கொண்டிருந்ததால் சுயேட்சைக் குழுக்கள் அவற்றைப் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. தற்போது அந்த அரசியல் கட்சிகளின் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதால்…
-
- 4 replies
- 1.1k views
-
-
சுவிஸ் வங்கிகளில் இலங்கையரின் வைப்புக்கள் அதிகரித்துள்ளதாக சுவிஸ் பெடரல் வங்கி வெளியிட்ட 2002 – 2010ஆம் ஆண்டுகளுக்கான வங்கி அறிக்கையில் இருந்து தெரியவந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். சுனாமி பேரலை இலங்கையைத் தாக்கிய போது வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப் பெற்ற உதவிகளின் போதும், இலங்கை பெருமளவிலான ஆயுதங்களை கொள்வனவு செய்த சந்தர்ப்பங்களிலும் இலங்கையர்களினால் இந்த வைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி சுனாமி பேரலை இலங்கையைத் தாக்கியதை அடுத்து 2005ஆம் ஆண்டு இலங்கைக்கு பாரியளவிலான வெளிநாட்டு உதவிகள் கிடைத்தன. இவற்றில் பெரும்பாலானவை எவ்வித நிபந்தனையோ, ஒப்பந்தமோ இன்றியே வழங்கப்பட்டிருந்தன. இவற்ற…
-
- 4 replies
- 1.1k views
-
-
இலண்டனில் குடியேறியுள்ள இந்த ஆட்கடத்தல் காரர்களால் பாதிக்கப்பட்ட ஏனையோர் உடன் தொடர்பு கொள்ளவும். இலங்கையில் தமிழர்கள் மத்தியில் நிலவும் அசாதாரண நெருக்கடிகள் மற்றும் இடர் துன்பங்களை சாதகமாக பயன்படுத்தி தமிழ் இழைஞர் யுவதிகளிடம் வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்தும் முகவர்கள் சிலரால் கடந்த சில வருடங்களில் பெரும் ஏமாற்று மோசடிகள் நடாத்தப்பட்டுள்ளமை வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. உள்நாட்டு போரின் பாதிப்பால் துவண்டுபோயுள்ள வன்னிப்பகுதியிலிருந்தும் யாழ்பாணம் மற்றும் மட்டக்களப்பிலிருந்தும் இலண்டன் கனடா அவுஸ்திரேலியா சுவிஸ் போன்ற நாடுகளுக்கு ஆட்கடத்தல் செய்து வந்த தமிழர் குடும்பமொன்று மிகப்பெரும் ஏமாற்று மோசடி ஒன்றை செய்துவிட்டு கடந்த வருடம் எப்ரல் மாதம் இலண்டனில் குடியேறி…
-
- 3 replies
- 878 views
-
-
[size=4]சிறிலங்கா விமானப்படையினருக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா, அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடித்த்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. இனக்கலவரத்தில் இடம்பெயர்ந்து இன்னலுற்று கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்கவும், அங்குள்ள சிங்களர்களுக்கு இணையாக அவர்கள் வாழவும் தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய அரசு சிறிலங்கா அரசை வலியுறுத்த வேண்டும் என்ற குரல் உலக அளவில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்ற இந்தத் தருணத்தில், சிறிலங்காவின் ஒன்பது விமானப்படை வீரர்கள் தமிழ்நாட்டில் உள்ள தாம்பரம் விமானப்பட…
-
- 1 reply
- 808 views
-
-
[size=4]கிளிநொச்சியிலிருந்து வவுனியா செல்லும் பயணிகள் பேரூந்தில் விடுமுறையில் வீடு செல்லும் இராணுவத்தினரின் சில்மிசங்கள் தொல்லைகளால் பெண்கள் மிகவும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். 05.07.2012ம் திகதி அன்று காலை 8.30 மணிக்கு கிளிநொச்சியிலிருந்து புறப்பட்ட தனியார் பேரூந்தில் 50 திற்கும் மேற்பட்ட பயணிகள் வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர். இடைநடுவில் சிவில் உடையுடன் விடுமுறையில் வீட்டிற்குச் செல்லும் இராணுவத்தினர் 5 பேர் பேரூந்தில் ஏறி மிதிபலகையில் தொங்கிக்கொண்டு பயணித்தனர். அதற்கு பேரூந்து நடத்துனர் மிதிபலகையிலிருந்து பேரூந்திற்குள் ஏறுமாறு கூறியதைத் தொடர்ந்து 5 படையினரும் பேரூந்திற்குள் ஏறி ஆசனத்தில் அமர்ந்திருந்தனர். அதன்பின் கனகராயன்குளத்திலிருந்து உயர்தர…
-
- 0 replies
- 593 views
-
-
வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த புலிகளைக் கொன்றோம் - இலங்கை ராணுவ மந்திரி கோத்தபயாவின் ஒப்புதல் வாக்குமூலம்..! ஈழதேசம் செய்தி ..! [size=3] யுத்தத்தில் சரணடைந்த மற்றும் பிடிபட்ட விடுதலைப்புலிகளை கொல்லுமாறு ராணுவ தளபதிகளுக்கு உத்திரவிட்டேன். இந்த உத்தரவை மீறிய ஒரு சில தளபதிகளால் தான் தற்பொழுது பிரச்சனையே எழுந்துள்ளது என்கிறார் இலங்கையின் ராணுவ ஆலோசகரும் மகிந்தா ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சே அவர்கள். லங்கா நியூஸ் வெப் என்ற இணைய தளத்தில், இலங்கையின் பாதுகாப்பு செயலர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேஜர் ஜெனரல் பிரசன்னா சில்வா எனது உத்தரவை ஏற்க மறுத்ததால் தான் கடந்த வார வவுனியா சிறை நாடகம் நடந்துள்ளது என்றார். அதாவது வன்னி யுத்த முனையிலும் முள்ளிவாய்க்கால…
-
- 2 replies
- 2.3k views
-
-
[size=4]அதி உன்னத அர்ப்பணிப்பின் 25 ஆம் ஆண்டின் நினைவிலும் குட்டிமணி அண்ணா அவர்களின் நினைவையும் தாங்கி பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு, பிரித்தானிய தேசிய சுகாதார அமைப்புடன் சேர்ந்து உடல் உறுப்பு தான செயல் திட்டமொன்றினை முன்னெடுக்கவுள்ளது.[/size] [size=4]இத் திட்டமானது இன்று திகதி தொடக்கம் எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும். இன்று அதி உன்னத அர்ப்பணிப்பின் உச்ச கட்ட நாள், எமது வீரர்கள் தங்களது உடலையே தாய் நாட்டிற்காக கொடுத்த நாள், எமது இருப்பை உறுதி செய்ய தங்களது இருப்பை இல்லாதொழித்தவர்களின் அற்புத நாள்.[/size] [size=4]இந்நாளில் தொடங்கும் இந்த செயல் திட்டம் குட்டி மணி அண்ணா இறந்த தினமான ஜூலை 25 நிறைவு பெறும். குட்டி மணி அண்ணா ஏப்ரல் …
-
- 2 replies
- 482 views
-
-
-
- 0 replies
- 713 views
-
-
[size=4]முக்கிய கனடிய பாராளுமன்ற பிரதிநிதிகள் கனடிய அரசின் உத்தியோக பிரிதிநிதிகளாக கடந்த மார்ச் மாதத்தில் சிறீலங்கா சென்று அங்குள்ள நிலைமைகளை நேரடியாகக் கண்டு அங்குள்ள பல்வேறு சமூகங்களுடனும் குறிப்பாக தமிழர் சமூகத்துடனும் அவர்களின் பிரிதிநிதிகளுடனும் ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டு திரும்பினர்.[/size] [size=4]கனடிய பாதுகாப்பமைச்சரின் பாராளுமன்ற செயலாளாரான ஏஐhக்ஸ் - பிக்கரிங் பாராளுமன்ற உறுப்பினர் கிறிஸ் அலெஸ்டாண்டர் கனடிய குடிவரவு அமைச்சரின் பாராளுமன்ற செயலாளரான சென்கதரின்ஸ் பாராளுமன்ற உறுப்பினர் ரிக் டயஸ்ரா கனடிய செனட்டரான வேன் வைட் ஆகியோரே இப்பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.[/size] [size=4]முன்னர் தமக்கு ஆதரவானவர்களைக் கொண்டு இருவரைக் கொ…
-
- 0 replies
- 575 views
-
-
[size=4]இராணுவத்திடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்களை அன்றே கொலை செய்திருந்தால் இன்று இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது என கோத்தபாய கடித்துக் கொண்டதாக ஒரு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.[/size] [size=4]அண்மையில் வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற சிறைக்காவலர்களை பணயமாக கைதிகளினால் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கோத்தபாய, மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவைக் கண்டித்துள்ளதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.[/size] [size=4]இச்செயற்பாடு புலம்பெயர் விடுதலைப் புலிகளின் பிரிவுக்கு, அந்த அமைப்பு இன்னும் செயற்பாட்டு நிலையில் உள்ளது என்ற உணர்வை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா வன்னிப் போர் நடவடிக…
-
- 0 replies
- 1.3k views
-
-
[size=6]இலங்கையில் தமிழினத்தவர் ஜனாதிபதியாக முடியுமா?- கனடாவில் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் கேள்வி![/size] [size=5]இந்தியாவிலும், அமெரிக்காவிலும் சிறுபான்மை இனத்தவர் ஜனாதிபதியாக முடியும். ஆனால் இலங்கையில் தமிழினத்தவர் ஜனாதிபதியாக முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.[/size] அத்துடன், தமிழினத்தின் தனித்துவமான அடையாளங்களை அழிப்பதற்கான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கனடாவுக்கு விஜயம் செய்துள்ள இவர் அங்கு இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். அவர் தனதுரையில் மேலும் தெ…
-
- 5 replies
- 1.3k views
-
-
[size=4]சுயர்நிர்ணய உரிமைக்கான தனியான நிகழ்ச்சி நிரலொன்றினை ஐ.நா மனித உரிமைச் சபை ஏற்படுத்த வேண்டுமென, சர்வதேச சட்டவாளரும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைஞர் குழுவின் பிரதிநிதியுமாகிய கரன் பார்கர் அம்மையார் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.[/size] [size=4]நில அபகரிப்புக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டங்கள் தமிழீழத் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் சமவேளையில் முன்னெடுக்கப்பட்ட யூன் 26ம் செவ்வாய்கிழமை, ஐ.நா மனித உரிமைச் சபையின் 20வது கூட்டத் தொடரிலேயே இவ்விடயத்தினை அவர் வலியுறுத்தி உரையாற்றியுள்ளார்.[/size] http://youtu.be/geyJY8RT2Ug [size=4]ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்கள், காஷ்மிரில் மக்கள் கருத்து மேற்கொள்ளப்பட வ…
-
- 1 reply
- 487 views
-
-
ஏழு வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி கொலை செய்து கழிவு நீர் கால்வாய் ஒன்றில் சடலத்தை வீசிய சந்தேகத்தின் பேரில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகாலை 1.30 மணியளவில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சிறுமியின் சடலம் கால்வாயிலிருந்து கடற்படையினரின் ஒத்துழைப்புடன் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இந்தச் சம்பம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; கிருலப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இல 44/204, கிருல வியாபார சந்தைத் தொகுதிக்கு அண்மையில் வசிக்கும் 7 வயதான கிருஸ்ணகுமார் துஷாந்தினி என்ற சிறுமி நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு கொழும்பு 5 இலுள்ள சித்தார்த்த வீதியிலுள்ள தேவாலய வைபவத்திற்கு தாயாருடன் சென்று விட்டு வீடு திரும்பிய வேளை…
-
- 1 reply
- 683 views
-
-
[size=4][/size] [size=4]பௌத்த மக்கள் சனத்தொகையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் இந்துராகாரே தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார். எனது சிறு பிராயத்தில் இலங்கையில் மொத்த சனத்தொகையில் 79 வீதம் பௌத்தர்கள், தற்போது அந்த எண்ணிக்கை 61 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அடுத்த சனத்தொகை மதிப்பீட்டில் இந்த எண்ணிக்கை 51 வீதமாக வீழ்ச்சியடையும்.[/size] [size=4]மதமாற்ற நடவடிக்கைகள் மிகவும் நுட்மான முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. பல திட்டமிட்டக் குழுக்கள் மதமாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என இந்துராகாரே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார். சட்டவிரோத மதமாற்றம் தொடர்பில் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கும் வைபத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்…
-
- 4 replies
- 418 views
-
-
மு.கருணாநிதியின் சிறை நிரப்பிய போராட்டமும் - அதன் பின்னே உள்ள உள்குத்து அரசியலும் - ஈழதேசம் பார்வையில்..! [size=3] ஜூலை 4 -ல் சிறை நிரப்பும் அறப் போராட்டம் நடைபெறும் என்று ஒரு வாரத்திற்கு முன்னர் அறிவித்தார் தி.மு.க.வின் தலைவர் மு.கருணாநிதி, இந்த சிறை நிரப்பும் போராட்டத்திற்கு எந்த பங்கமும் வந்து விடக் கூடாது என்று வழக்குகள் போட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் ஜூலை 4 க்கு முன்னரே கைது செய்யப் படக் கூடாது என்றும், காவல் துறை உச்ச நீதி மன்ற வழிகாட்டுதலின் படியே கைது செய்ய வேண்டும் என்றும் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் வழக்கு போட்டு, அந்த வழக்கிற்கு ஆஜரான தமிழக அரசின் வழக்குரைஞர் தி.மு.க.வுக்கு ஆதரவாக சாட்சிகளை ஆதாரங்களை சேர்க்காமல் செயல்பட்டும், மெட…
-
- 1 reply
- 1k views
-
-
[size=3][/size] [size=3][size=4]அரசியல் கருத்து வேறுபாடுகள் காணப்பட்டாலும் இலங்கையுடன் அமெரிக்கா தொடர்ந்தும் இணைந்து செயற்படும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தூதுவர் பெட்ரிசியா புட்னிக்ஸ் இவ்வாறு கூறியுள்ளார்.[/size][/size] [size=3][size=4]இலங்கை அரசாங்கம் மீள்குடியேற்றப் பிரச்சினை மற்றும் போருக்கு பின்னரான அபிவிருத்தி நடவடிக்கைகளில் முன்னேற்றம் கண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.[/size][/size] [size=3][size=4]“2009 யுத்த நிறைவு காலத்தில் நான் இலங்கைக்கு வந்தபோது ஆயிரக்கணக்கான மக்கள் மீள்குடியேற்றத்திற்காக காத்திருந்தனர். ஆனால் அத்…
-
- 1 reply
- 946 views
-
-
[size=4][/size] [size=4]இந்திராகாந்தி அம்மையார் அன்று ஆயுதங்களை வழங்கிப் புலிகளை வளர்த்துவிட்டதுபோல் இன்று அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொடுத்து விடுதலைப் புலிகளைப் பலப்படுத்துவதற்கு இந்தியா முயற்சிக்கின்றது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.[/size] [size=4]விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு இன்று பலமாக உள்ளது. உள்நாட்டிலும் புலிகளின் பலம் முழுதாகக் குன்றவில்லை. வவுனியா சிறைச்சாலை சம்பவம் இதனையே எடுத்துக்காட்டுகின்றது என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.[/size] [size=4]மேனனின் உபதேசமோ அல்லது ஜெயலலிதா அம்மையாரின் உபதேசமோ தமக்குத் தேவையில்லை என்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர …
-
- 3 replies
- 821 views
-
-
வவுனியா சிறையில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த நிமல ரூபன் என்ற கைதி உயிரிழந்துள்ளார் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வவுனியா நெலுங்குளம் பகுதியைச் சேர்ந்த நிமல ரூபன் கடந்த வாரம் வவுனியா சிறையில் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்து பின்னர் மஹர சிறைக்கு மாற்றப்பட்டு ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (04) காலை உயிரிழந்ததாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ள மனோ கணேசன், உயிரிழப்புக்கான முழு பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இணைப்பு: 29ம் திகதி நடைபெற்ற சம்பவத்தை அடுத்து ஏற்பட்ட நெருக்கடி நிலைமைய…
-
- 5 replies
- 1.1k views
-
-
எமது அன்பான உறவுகளே! தமிழீழ தேசிய வானொலியான புலிகளின்குரல், தமிழீழ மண் எதிரியால் வல்வளைக்கப்பட்டதை அடுத்து 2009 மே 15ம் நாளன்று பண்பலையூடான ஒலிபரப்புக்களை இடைநிறுத்தியிருந்தது. அதன் பின்னர் இரண்டு மாத காலத்தில்இ தனது சேவையை கரும்புலிகள் நாளான யூலை 5ம் நாள் 2009ஆம் ஆண்டு மீண்டும் இணையத்தளத்தில் தொடங்கியது. இதுவரை காலமும்இ எமது ஒலிபரப்புகளை இணைய வசதி இருப்பவர்களும், செய்கோள் வசதி உள்ளோர்களும் மட்டுமே தொடர்ந்து கேட்க முடிந்தது என்பதை நாம் அறிவோம். சிறப்பு நாட்களில் எமது ஒலிபரப்புகளை சிற்றலையூடாக உலகம் முழுவதும்; குறிப்பாக தாயகம் நோக்கி ஒலிபரப்பிய போதும், தொடர்ந்தும் வானொலியை கேட்க முடியாமல் உள்ளது என்பதை பல்லாயிரம் உறவுகள் எமக்கு தெரியப்படுத்திய வண்ணம் உள்ளா…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழகத்தின் செங்கல்பட்டு சித்திரவதை முகாமிலிருந்து ஈழத்தமிழர்களை உடணடியாக விடுவிக்ககோரி லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தின் முன்பாக இன்று 03.07.2012 மாலை 3.30 மணியளவில் லண்டன்வாழ் தமிழ் மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மக்கள் பலரும் கலந்துகொண்டதுடன் இந்திய ஆரசின் இந்த மனிதனேயமற்ற செயலைக் இவ்வுலகிற்கு எடுத்துக்கூறும் முகமாக பாதாதைகளையும் தாங்கி நின்றனர். http://thaaitamil.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5/
-
- 0 replies
- 325 views
-
-
[size=2][size=4]29ஆம் திகதி நடைபெற்ற சம்பவத்தை அடுத்து ஏற்பட்ட நெருக்கடி நிலைமையினால் மஹர சிறைசாலைக்கும் ராகம மருத்துவமனைக்கும் காயமடைந்த நிலையில் கொண்டுவரப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை பார்வை இடுவதற்கு சட்டத்தரணிகள் முயற்சி செய்ததனர். ஆனால், இந்த காயமடைந்த கைதிகளை பார்வையிடுவதற்கு சட்டத்தரணிகளுக்கு உள்ள உரிமை மறுக்கப்பட்டுள்ளது என தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் மக்கள் கண்காணிப்பு தெரிவித்தது. இது தொடர்பில் குறித்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது, "மக்கள் கண்காணிப்பு குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டு கொழும்பில் இன்று கூடிய அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், சட்டத்தரணிகள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் அடங்கிய கூட்டத்தில் இது தொடர்பில் தீவிரமாக ஆராயப்…
-
- 3 replies
- 572 views
-