Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [size=4]ஆயுதக்குழுக்கள் நாடு முழுவதும் சுதந்திரமாக நடமாடுகின்றனர், குற்றவாளிகள் விரும்பிய நேரம் சிறைக்குச் சென்று விரும்பிய நேரம் வெளியே வருகின்றனர். மிகவும் பயங்கரமானதொரு யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற பாரத லக்ஷ்மனுக்கான அனுதாபப் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் கூறினார்.[/size] [size=4]அவர் மேலும் கூறியவை வருமாறு:[/size] [size=4]கூட்டங்கள் நடத்த முடியாத இறந்தவர்களுக்குத் தானம் கொடுக்க முடியாத வெள்ளைக் கொடிகளை ஏற்றமுடியாத யுகத்தில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பாரத லக்ஷ்மன் மரணிப்பதற்கு சில நாட்களுக்கு முன் அவரை நான் திருமண வீடொன்றில் சந்தித்தேன். …

  2. முல்லைத்தீவில் இருந்து வன்னி வாழ் தமிழ் மக்களின் பிள்ளைகளை ஆபத்தான கடல் வழிப் பயணங்களூடாக அகதிகள் என்ற போர்வையில் அவுஸ்திரேலியா நோக்கி அனுப்பி பெருமளவு பணம் சம்பாதிக்கும் தொழிலை ஆரம்பித்துள்ளார் சிறீலங்கா சனாதிபதியின் புத்திரர் நாமல் ராகபக்ச..! இவரின் "பாதுகாப்பான" வன்னி விட்டான அவுஸ்திரேலியா நோக்கிய வெளியேற்றத்திற்கும் அவுஸ்திரேலியாவை சென்றடைவதை உறுதிப்படுதிக் கொள்வதற்கும் ஒருவரிடம் இருந்து ஒரு மில்லியன் இலங்கை ரூபாக்கள் அறிவிடப்படுகின்றன. இந்த ஆட்கடத்தலின் முதல் கட்டமாக.. நாமலின் இந்த ரகசிய வலை அமைப்பிற்கு 200,000 ரூபா வழங்கப்பட்டதும் அந்த நபர் அவுஸ்திரேலியா நோக்கி முல்லையில் இருந்து பயணிப்பார். பின்னர் அவர் அவுஸ்திரேலியாவை சென்றடைந்ததும்.. மிகுதிப் பணத்தை இரா…

    • 3 replies
    • 1.1k views
  3. வலி வடக்கு மக்களை மீளக் குடியேற்றக்கோரி தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்டு திரும்பிய பருத்தித்துறை சுப்பர் மடம் முகாமில் வாழும் மக்கள் சென்ற மினி பஸ் மீது மோட்டார் சைக்கிளில் வந்த ஒட்டுக்குழு ஈபிடிபியினர் கல்லெறிந்து தாக்குதல் மேற்கொண்டதுடன் பஸ்சில் சென்ற மக்கள் மீதும் ஒயில் ஊற்றியுள்ளனர். சுன்னாகம் புகையிரதக் கடவைக்கு அண்மையாக இன்று முற்பகல் 11.30 மணியளவில் மூன்று மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடி வந்த ஆறு பேரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். சுன்னாகத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் பஸ்ஸைத் தொடர்ந்து விரட்டி வந்த இவர்கள் புன்னாலைக்கட்டுவன் சந்திக்கு அண்மையாக வைத்து பாரிய கல்லினால் மினிபஸ் மீது தாக்கியதில் பஸ்ஸின் பி…

  4. யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சிசுக்கொலைகள் மற்றும் கருக்கலைப்பு போன்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் யாழ்ப்பாணத்தை விட வெளிமாவட்டங்களில் இருந்து வருகின்றவர்களாலேயே மேற்கொள்ளப்படுவதாக யாழ்.போதனா வைத்தியசாலை மகப்பேற்று நிலைய வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். இதற்கு காரணம் சட்டத்தற்கு முரணான அல்லது தவறான பாலியல் தொடர்புகளே எனவும் அவர் குறிப்பிட்டார். அது தவிர சிறுவயது கர்ப்பம் அடைதல் போன்ற சம்பவங்களினால் கருக்கலைப்பு அதிகமாக நடைபெறுகின்றன. வெளிமாவட்டங்களில் இருந்து யாழ் மாவட்டத்திற்கு வருகின்ற இவ்வாறானவர்கள் சட்டவிரோத கருக்கலைப்பு சம்பவங்களில் ஈடுபடுவதால் உயிராபத்தையும் எதிர்நோக்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணத்தின் கலாச்சார பிறழ்வு நிலைக்கு வெளிமாவட்டங்களை…

    • 5 replies
    • 1k views
  5. தமிழக மீனவர்கள் வேண்டுமென்றே இலங்கையின் கடல்பரப்புக்கு வருவதாகவும் சிறிய மீன் குஞ்சுகளையும் பிடிக்க உதவும் இழுவை மடி வலைகளைப் பயன்படுத்தி மீனளத்தையும் அரிய கடல் செல்வங்களையும் கொள்ளையிடுவதாகவும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச அபாண்டமாகக் குற்றம்சாட்டியுள்ளார். பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனிரோ நகரில் நடைபெறும் தொடர் வளர்ச்சிக்கான இயற்கை ஆதாரங்களைப் பாதுகாப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் நேற்று முன்நாள் புதன்கிழமை பேசுகையில் இந்தக் குற்றச்சாட்டை அவர் கூறியிருக்கிறார். இந்தியாவின் பெயரையோ தமிழ்நாட்டின் பெயரையோ அவர் நேரடியாகக் கூறவில்லை என்றாலும் “இலங்கைக்கு அருகில், வடக்கில் உள்ள பக்கத்து நாட்டைச் சேர்ந்த மீனவர்கள்” என்று அடையாளப்படுத்தியிருக்கிறார். பிரச்சினைக்கு…

  6. வளர்மதி வெள்ளி, 22 ஜூன் 2012 20:11 பயனாளர் தரப்படுத்தல்: / 3 குறைந்தஅதி சிறந்த “நாம் தமிழர்” ஆவணம் - தேசிய அறிக்கையன்று; பாசிச அறிக்கை! – பகுதி 3 சென்ற பகுதியில் விவரித்திருந்த வரையறுப்பினடியாக நோக்கும்போது ஆவணத்தின் அடிநாதமாக இருப்பது பாசிசக் கருத்தியலே என்பது உறுதியாகிறது. பாசிசத்தின் வரையறுப்பில் முதல் அம்சமான தேசப்புத்துயிர்ப்பு (palingenesis): ‘நாம் தமிழர்’ ஆவணம் முழுவதும் ‘தேச உரிமை மீட்சி’ என்ற தொடர் பரவியிருப்பதை வாசிப்பவர்கள் கவனிக்கலாம். ‘திராவிடக்’ கருத்தியலின் ஆதிக்கத்தாலும், பிற மொழியாளர்களின் சுரண்டலாலும் தமிழ்ச் சமூகம் சிதைவுபட்டிருக்கிறது என்பதைத் தொடர்ந்து குறிப்பிடும் ஆவணம், அதிலிருந்து ‘மீட்சி’ பெறுவதற்கான வழியாகத் தமிழ் நாட்டை தமி…

  7. [size=4]அவுஸ்றேலியாவினைப் பெரும் பரப்புக்கு உள்ளாக்கியுள்ள படகு விபத்தில் 109 பேர் தற்போது உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் 80 பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் ஜேசன் க்ளயார் குறிப்பிட்டுள்ளார். விபத்துக்குள்ளான படகில் இலங்கையர்கள் இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அநேகமானோர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]காப்பாற்றபட்டவர்களில் 4 பேர் பின்னர் உயரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை காப்பாற்றபட்டவர்களில் இலங்கையர்கள் எவரும் இல்லை என இந்தோனேசியாவிற்கான சிறிலங்காத் தூதுவர் மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி தெரிவித்துள்ளார்.[/size] [size=4]சிறிலங்காவில் இருந்து இந்த…

  8. [size=4]இலங்கையர்கள் என நம்பப்படும் சுமார் 200 புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியாவுக்கு ஏற்றிச் சென்ற படகு கிறிஸ்மஸ் தீவு பகுதியில் விபத்துக்குள்ளானதில் 75 பேர் உயிரிழந்திருப்பதாக அவுஸ்திரேலிய பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.[/size] [size=4]200 பேரை ஏற்றிவந்த படகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதென கிழக்கு அவுஸ்திரேலிய பொலிஸ் கமிஸ்னர் கார்ல் ஓ´கல்லஹான் (Karl O’Callaghan) தெரிவித்துள்ளார். இதுவரை 40 பேர் காப்பாற்றப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதிக நபர்களை ஏற்றிவந்ததால் படகு கவிழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.[/size] [size=4]http://www.eeladhesa...chten&Itemid=50[/size]

    • 16 replies
    • 1.3k views
  9. [TamilNet, Friday, 22 June 2012, 16:14 GMT] Namal Rajapaksa, the son of SL president Mahinda Rajapaksa, has been behind a human trafficking ring, which operates from Mullaiththeevu in Vanni, sending Eezham Tamils to Australia from the seas off Mullaiththeevu at a price tag of 1 million SL rupees per person, reveal families that have already sent their sons and daughters through the ring. Snatching away the entire coastal stretch of Vanni from Eezham Tamils, the Rajapaksa regime is also evicting them exploiting all possible avenues, concerned civil sources in Vanni said adding that the operation also discredits the asylum seekers who really need protection from the South…

    • 2 replies
    • 1.2k views
  10. தனது விருப்பத்திற்கு அழுத்தம் கொடுக்கும் கட்சி, அமைப்புக்கள், வர்த்தகர்கள் மட்டுமன்றி நீதிமன்றக் கட்டமைப்பையும் குடும்ப ஆட்சிக்காக மகிந்த ராஜபக்‌ஷ பிளவுபடுத்தியுள்ளார். தற்போதைய பிரதம நீதியரசர் கலாநிதி ஷிரானி பண்டாரநாயக்க இன்னும் 09 வருடங்களுக்கு அந்தப் பதவியில் நீடிப்பதற்கு அரசியலமைப்பில் இடமளிக்கப்பட்டுள்ளது. எனினும், அவரது அதிகாரத்தைப் பலவீனப்படுத்துவதற்காக மகிந்தர் தற்போது சதித் திட்டமொன்றை முன்னெடுத்து வருவதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் 11 வருடங்களுக்கு மேல் பிரதம நீதியரசர் பதவி வகித்த சரத் என்ற சில்வா, ஓய்வுபெறும் இறுதித் தருவாய் வரை அவரது சுயகௌரவத்தையும், அதிகாரத்தையும் முழுமையாகக் கொண்டிருந்…

    • 1 reply
    • 648 views
  11. நிலப்பறிப்பிற்கு எதிரான முறிகண்டிப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவுதெரிவித்துள்ளது.தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாது செய்ய வேண்டும் என்கின்ற நோக்கோடு சிறீலங்கா அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் நிலப்பறிப்புக்கள், சிங்களக் குடியேற்றங்கள், பௌத்த மயமாக்கல், படை மயமாக்கல் என்பவற்றிற்கு எதிராக எதிர்வரும் 26-06-2012 அன்று கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள முறிகண்டிப் பிள்ளையார் கோவில் முன்றலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றோம். மேற்படி நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராக எம்மால் கடந்த 18-06-2012 அன்று ஆரம்பித்து…

    • 0 replies
    • 612 views
  12. [size=5]பிணங்களை தூக்கி செல்வதையும் வெள்ளைக் கொடிகளை தொங்கவிடுவதையும் பார்த்து கொண்டிருக் முடியாது[/size] [size=4]இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் சர்வதிகார பயணம் தொடர்பில், தேவைக்கு அதிகமான உதாரணங்கள் இருப்பதாக பல்லைக்கழக விரிவுரையாளர்களின் சங்க சம்மேளனத்தின் உப தலைவர் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார். ஹிட்லரை விட சிறந்த முறையில் தற்போதைய ஹிட்லர்கள் செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.[/size] [size=5][size=4]கொழும்பு தேசிய நூலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமில தேரர் இதனை கூறியுள்ளார்.[/size][/size] [size=5][size=4]பல்லைக்கழக விரிவுரையாளர்களின் சங்க சம்மேளனத்தின் தலைவர் நிர்மால் ரஞ்சித் தேவசிறிக்கு விடுக்கப்…

    • 0 replies
    • 1.1k views
  13. [size=3] [size=4]தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாது செய்ய வேண்டும் என்கின்ற நோக்கோடு சிறீலங்கா அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் நிலப்பறிப்புக்கள், சிங்களக் குடியேற்றங்கள், பௌத்த மயமாக்கல், இராணுவ மயமாக்கல் என்பவற்றிற்கு எதிராக எதிர்வரும் 26-06-2012 அன்று கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள முறிகண்டிப் பிள்ளையார் கோவில் முன்றலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.[/size] [size=4]மேற்படி நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராக எம்மால் கடந்த 18-06-2012 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட ஐனநாயக ரீதியான கவனயீர்ப்புப் போராட்டம் இன்று விரிவடைந்…

  14. இறுதிப் போர் நடைபெற்ற காலப் பகுதியில் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட மக்கள் படையணியான எல்லைப் படையில் இருந்தவர்களை குறி வைத்து அவர்களின் விவரங்களை படைப் புலனாய்வாளர்கள் திரட்டத் தொடங்கி உள்ளனர். குறிப்பாக வவுனியா வடக்கிலுள்ள பல கிராமங்களில் படைப் புலனாய்வாளர்கள் இத்தகைய முன்னாள் எல்லைப் படையினரின் தகவல்களைத் திரட்டி வருவதால் மக்களிடையே அச்ச நிலை உருவாகியுள்ளது. இறுதிப் போர் நடைபெற்ற காலப் பகுதியில் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் விடுதலைப் புலிகள் எல்லைப் படை என்ற மக்கள் படையணியை உருவாக்கி இருந்தனர். ஆழ ஊடுருவும் படையணியின் தாக்குதல்களில் இருந்து மக்களை காத்தல் , காயப்பட்ட மக்களை மருத்துவ மனைகளுக்கு கொண்டு செல்லல், குண்டு வீச்சுகளில் இருந்து மக்களை காக்கும் பொ…

  15. இணைப்பில் புகைப்படம். பிணோட்டங்கள் எழுதலாம் http://www.facebook.com/photo.php?fbid=10150921896357655&set=a.56718552654.67942.17780227654&type=3&theater

  16. தமிழீழ விடுதலைப்புலிகளனால் தயாரிக்கப்பெற்ற பல்குழல் எறிகணை செலுத்தி ஒன்றை முள்ளிவாய்க்காலுக்கு அருகாமையில் இராணுவம் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஒரே நேரத்தில் ஆறு எறிகணைகளைச் செலுத்தக்கூடிய பல்குழல் எறிகணைகளை புலிகள் உள்ளூரில் தயாரித்துள்ளனர். இதனைக் கண்டு இராணுவத்தினர் வியப்படைந்துள்ளதாக மேலும் அறியப்படுகிறது. இறுதி யுத்தத்தில் அவை பாவிக்கப்படவில்லை என்றும், இதனைப் புலிகள் ஏன் பாவிக்கவில்லை என்று தமக்குத் தெரியவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். உள்ளூரில் கிடைக்கும், மட்டுப்படுத்தப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி, இவ்வகையான கனரக ஆயுதங்களை புலிகள் மிக நுணுக்கமாக தயாரித்துள்ளனர் என்று தெரிவித்துள்ள இராணுவத்தினர், புலிகளின் ஆயுத உற்பத்தி தொழிற்சால…

  17. [size=4]வடக்கையும் கிழக்கையும் இணைத்து வளமான ஒரு தனியரசை நிறுவி அதனை தொடக்கமாகக் கொண்ட தமிழர் தாயகத்தை அடைந்தவர்களாக ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புக்கள் அங்கீகாரம் பெற்ற ஒரு தேசத்தில் வாழ்வதற்கு நாம் கனவுகள் கண்டோம். அகிம்சை வழிப் போராட்டங்களை நடத்தி அடிகள் வாங்கியும் சிறைக்குள் சென்று சின்னாப் பின்னப்படுத்தப்பட்டோம்.[/size] [size=4]கைகளில் ஆயுதங்களை ஏந்திய போராளிகளுக்குப் பின்னால் உணர்வுபூர்வமான அணிவகுத்து நின்று வெற்றியின் உச்சத்திற்கு சென்று பின்னர் வீழ்ந்தவர்கள் ஆனோம்.[/size] [size=4]நாம் வீழ்ந்து கிடக்கும் ஒரு இனமாக உள்ளபடியால் உலகம் எம்மை அனுதாபத்தோடு பார்க்கின்றது. நமக்காக ஜனநாயக ரீதியில் இன்றும் குரல் கொடுக்கும் தமிழ்த் தேசிய கூட்டம…

  18. [size=2][size=4]கதிர்காமம், ஏழுமலை கோயிலில் உள்ள வேல் உட்பட பித்தளை உபகரணங்கள் பல கொள்ளையிடப்பட்டுள்ளன என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த கோயிலின் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டுள்ள வேல், பித்தளை விளக்குகள் உள்ளிட்ட பெறுமதிமிக்க பழமைவாய்ந்த பூஜை உபகரணங்களே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளன என்று மேற்படி முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவம் கடந்த மார்ச் 15ஆம் திகதிக்கும் ஜூன் 6ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியிலேயே நடந்திருக்கலாம் என்றும் இருப்பினும் இது தொடர்பில் தனக்கு நேற்றைய தினமே தெரியவந்ததாகவும் குறித்த கோயிலின் பொறுப்பதிகாரி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். (கிருஷான் ஜீவக ஜயருக்) இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொல…

  19. விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு பன்னாட்டு தொண்டுநிறுவனத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை சிறீலங்காப்படையினர் பறித்து செல்வதாக போராளிகளின் குடும்பங்கள் குற்றம் சாட்டியுள்ளன. புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு ஐ.ஓ.எம். சர்வதேச தொண்டு நிறுவனத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை இராணுவத்தினர் கட்டாயப்படுத்தி பறித்துச் செல்வதாக முன்னாள் போராளிகளின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். படையினரின் இந்தச் செயற்பாட்டினால் முன்னாள் போராளிகள் மற்றும் அவர்களது பெற்றோர் அச்சமடைந்துள்ளர். கடந்த 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தகாலத்தில் கைதுசெய்யப்பட்ட மற்றும் சரணடைந்த முன்னாள் போராளிகள்புனர்வாழ்வு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு புனர்வாழ்வ…

    • 0 replies
    • 466 views
  20. குப்பிளான்வடக்கில் வெடிபொருட்கள் அகற்றப்பட்டு கடந்த 22 வருடங்களின் பின் பொதுமக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட 250 ஏக்கர் பகுதியை மீண்டும் முள்வேலிகளை அமைத்து படையினர் கையகப்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.22 வருடங்களின் பின்னராவது சொந்த இடங்களில் மீள்குடியேறலாம் என்ற தமது ஆசை இதன்மூலம் மீண்டும் நிராசையாகி விட்டதாகவும் அந்த மக்கள் கண்ணீருடன் தெரிவித்தனர். 2011ஆம் ஆண்டு அக்டோர் மாதம் இப்பகுதியில் முழுமையாக கண்ணிவெடியகற்றப்பட்டு அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. தொடர்ந்து மீள்குடியேற்றத்திற்கான அனுமதியும் வழங்கப்பட்டது. மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி, காசுக்கான வேலைத்திட்டத்தின் கீழ் தமது வாழ்விடங்களை துப்புரவு செய்து வந்தனர். …

    • 0 replies
    • 563 views
  21. நாகொட – யட்டலமன்ன சுரம்யாராம விகாரையில் உள்ள 10 வயது சிறுவர் பிக்கு கடுமையான பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.2012-06-01ம் திகதியன்று இரவு வேளையில் இடம்பெற்ற இந்த அபச்சாரம் குறித்து 2012-06-21ம் திகதி நேற்று (21) நாகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 வயது சிறுவர் பிக்கு சுரம்யாராம விகாரையில் உள்ள 68 வயது மூத்த பிக்குவால் இவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து குறித்த பிக்கு கைது செய்யப்பட்டு நாகொட பொலிஸாரால் மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதேவேளை, ரஸ்நாயக்கபுர – நாகன்சோலே பகுயில் 14 வயது சிறுமி 29 வயது இளைஞரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சந்தேகநபரை கைது …

    • 0 replies
    • 838 views
  22. கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னாள் போராளிகளை இலக்கு வைத்துக் கொண்டு இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு என்ற போர்வையில் ஏமாற்று நாடகத்தினை சுதந்திரக் கட்சியினர் ஆரம்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சிவில் உத்தியோகஸ்தர் என்ற பதவிக்கே ஆட்சேர்க்கப்படவுள்ளனர். இதற்கான நேர்முகத் தேர்வு இவ்வாரம் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் இந்த நேர்முகத்தேர்வுக்கான அழைப்பிதழ் பெரும்பாலும் முன்னாள் போராளிகளுக்கே கிடைத்துள்ளது. ஆனால் குறித்த பதவிக்கு முன்னாள் போராளிகள் எவரும் விண்ணப்பித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அழைப்பிதழ்கள் கிடைத்துள்ளதுடன், இந்தப் பதவியின் பின்னர் அரச உத்தியோகம் கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த…

    • 0 replies
    • 690 views
  23. [size=5]அனுமதி மறுக்கப்பட்டால் இலங்கை மீது நடவடிக்கை[/size] [size=5]- நவநீதம்பிள்ளை திட்டம்[/size] [size=4]இலங்கைக்கு விஜயம் செய்ய ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக் குழுவின் உண்மைகளைக் கண்டறியும் குழுவுக்கு அனுமதி வழ ங்க அரசாங்கம் மறுப்புத் தெரிவித் தால், ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கடும் நடவடிக்கைகளை மேற்கொள் ளக் கூடும் என கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு ள்ளது. ஐ.நா. மனிதவுரிமைகள் ஆணைக் குழுவின் 19வது கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட இல ங்கை மீதான தீர்மானத்தின்படி இலங் கைக்கு ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் உண்மைகளைக் கண்டறியும் குழு ஒன்றை அனுப்பி வைத்தல் தொடர்பில் நவநீதம்பி ள்ளை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.[/size]…

    • 0 replies
    • 1.1k views
  24. [size=3][size=4](செய்தி தொகுப்பு - இளந்தி 21.06.2012)இலங்கையில் செயற்பட்ட ஜநா அதிகாரிகள் குழுமத்தின் பேச்சாளர் கோர்டன் வைஸ் (UN country team spokesperson Gordon Weiss) எழுதிய கேஜ் (ஊயபந) என்ற போர்க்கால ஆய்வு நூல் ஈழப் போர் பற்றிய பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது.[/size] [size=4]இந்த ஆங்கில நூலைத் தமிழகத்தின் காலச்சுவடு பதிப்பகம் கூண்டு என்ற தலைப்பிட்டுத் தமிழில் வெளியிட்டுள்ளது. போர் ஆரம்பமான நாள் தொட்டு அது முடியும் வரை இந்திய அரசின் நேரடியான மற்றும் மறைமுகமான உதவி இலங்கை அரசிற்குக் கிடைத்தது. இந்திய உதவி இல்லாமல் அரச படைகள் வெற்றி அடையச் சாத்தியமில்லை.[/size] [size=4]அதிபர் மகிந்த ராஜபக்ச பாதுகாப்புச் செயலர் கொத்தபாய ராஜபக்ச ஆகியோர் இதை உறுதி செய்துள்ளனர். ஜநா போர்க் …

  25. [size=5]ஆர்ப்பாட்டம் நடத்தியவர்ள் மீது படைப் புலனாய்வாளர்கள்தான் தாக்குதல் நடத்தினார்கள் - சுமந்திரன்[/size] [size=4]நிலங்கள் சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்ள் மீது இலங்கைப் படைப் புலனாய்வாளர்கள்தான் தாக்குதல் நடத்தினார்களென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நாடாளுமன்றில் குற்றம் சாட்டினார். நேற்று இடம்பெற்ற விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், நேற்று முன்தினம், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவம் குறித்து அரசின் மீது குற்றம் சாட்டினார். வடக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் சுவீகரிக்கப்படுவதற்கும் இடம்பெயர்க்கப்பட்ட மக்கள் 25 வருடங்களாக மீள்குடியேற முடியாமல் இருப்பதற்கும் எதிர்ப்புத் தெரிவி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.