Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழரசுக் கட்சியின் மத்திய குழு அடுத்த வாரம் கூடும் – மாவை அறிவிப்பு April 24, 2024 இலங்கை தமிழரசுக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பில் கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்படவிருந்த நிலையில் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு திருகோணமலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்று இடம்பெறவிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டதாக கட்சியின் தலைவர் மாவை சேனா…

  2. Published By: DIGITAL DESK 3 24 APR, 2024 | 11:37 AM நீண்ட காலமாக போதைப் பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான சந்தேக நபரான கணக்காளரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28 ஆம்திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. செவ்வாய்க்கிழமை (23) கைதான குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளை மேற்கண்டவாறு 05 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். சந்தேக நபரான கணக்காளர் நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் மருதமுனை பகுதியில் வைத்து பெரிய நீலாவணை…

  3. 24 APR, 2024 | 01:54 PM வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சமன் பத்திரன இன்று (24) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த காலத்தில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக பணியாற்றியவர் இடமாற்றம் பெற்றுச் சென்ற நிலையில், அப்பதவிக்கான பொறுப்புக்களை வைத்தியர் சமன் பத்திரன இன்றைய தினம் ஏற்றுள்ளார். தமது செயற்பாடுகள் தொடர்பாக வட மாகாணத்தின் புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் 4 வருடங்களுக்கு நான் இன மத மொழிக்கு அப்பால் சென்று அனைவரது சுகாதார மேம்பாட்டுக்கும் என்னால் இயன்ற சேவையை வழங்குவேன் என்றார். …

  4. Published By: DIGITAL DESK 3 24 APR, 2024 | 09:58 AM பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் தொழிற்சங்கங்களின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள 1,700 ரூபா சம்பள அதிகரிப்பு கோரிக்கை சாத்தியமற்றது என இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இன்று சம்பள நிர்ணய சபையின் தலைமையில் தொழில் அமைச்சில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையிலேயே முதலாளிமார் சம்மேளனம் இவ்வாறு அறிவித்துள்ளது. முதலாளிமார் சம்மேளனத்தித்தின் நிலைப்பாட்டை அதன் ஊடகப் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்தார். முதலாளிமார் சம்மேளனத்தின் நிலைப்பாடு குறித்த…

  5. Published By: DIGITAL DESK 3 23 APR, 2024 | 11:58 AM இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களை நடத்தும் மேலும் 8 நிறுவனங்களின் விபரங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தலொன்றை விடுத்து மத்திய வங்கி குறித்த நிறுவனங்கள் தொடர்பான விபரங்களை தெரிவித்துள்ளது. அதுமாத்திரமன்றி இத்தகைய திட்டங்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் செயற்படுமாறு பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடங்கும், வழங்குகின்ற, விளம்பரப்படுத்துகின்ற, நடத்துகின்ற, நிர்வகிக்கின்ற எந்தவொரு நபரும் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்கிறார் என்று மத்திய வங்…

  6. Published By: VISHNU 23 APR, 2024 | 06:13 PM (இராஜதுரை ஹஷான்) தேசிய மக்கள் சக்தி அரசியல் ரீதியில் துரிதமாக வளர்ச்சியடைந்து மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்துள்ளதாக சீன கம்யூனிசக் கட்சியின் சர்வதேச விவகார திணைக்களத்தின் பிரதி அமைச்சர் சன் ஹய்ன் தலைமையிலான தூதுக்குழுவினர் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிடம் குறிப்பிட்டுள்ளனர். இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன கம்யூனிச கட்சியின் சர்வதேச விவகார திணைக்களத்தின் பிரதி அமைச்சர் உட்பட தூதுக்குழுவினர் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவை மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (23) சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுப…

  7. Published By: DIGITAL DESK 3 23 APR, 2024 | 06:26 PM ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைய வடக்கிற்கு 50 ஆயிரம் சோலர் பவர் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்களின் பெயரை பயன்படுத்தி வீட்டுதிட்டம், காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். வவுனியா, கண்டி வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெறடற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், யுத்தம் முடிவடைந்த பின்பும் எமது மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு என்பன கனவு போன்றே இரு…

  8. தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்குப் பட்டதாரிகளை நியமிப்பதற்கான, நேர்முகப் பரீட்சைகளை எதிர்வரும் வாரங்களில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் தேசிய பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமிப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி போட்டிப் பரீட்சையொன்று நடத்தப்பட்டது. இந்தப் போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கமைய எதிர்வரும் 29ஆம் திகதி முதல் மே மாதம் 9ஆம் திகதி வரை கல்வி அமைச்சில் ஆட்சேர்ப்புக்கான நேர்முகப்பரீட்சைகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நேர்முகப்பரீட்சைக்கு தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியல் மற்றும் அழைப்புக் கடிதம் …

  9. Published By: DIGITAL DESK 3 23 APR, 2024 | 04:27 PM வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி பத்தரமுல்ல ஸ்ரீ சுபூதிபுர வீதியில் உள்ள “சுஹுருபாய” கட்டிடத்தின் 16வது மாடியில் உள்ள புதிய வளாகத்திற்கு மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளதாவது, இந்நிலையில், திங்கள் முதல் வெள்ளி வரையிலான வழமையான அலுவலக நேரங்களில், காலை 8.30 முதல் மாலை 4.15 வரை புதிய அலுவலக வளாகத்தில் அனைத்து தூதரக சேவைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்படும். சுஹுருபாயவில் உள்ள புதிய வளாகத்திற்கு சான்றளிப்பு மற்றும் சரிபார்ப்புப் பிரிவின் கணினிக் கட்டமைப்பை (e-DAS) மாற்றுவ…

  10. Published By: VISHNU 22 APR, 2024 | 11:27 PM யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் அமைந்துள்ள விடுதி ஒன்றினுள் மதுபான விற்பனை நிலையம் ஒன்றினை திறப்பதற்குப் பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். திங்கட்கிழமை (22) காலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள் மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பதாகைகளைத் தாங்கியவாறு கோஷமெழுப்பி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். நெடுந்தீவு பகுதியில் பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் முன்னெடுக்க வேண்டிய நிலையில் மதுபான விற்பனை நிலையத்தைக் கொண்டு வருவதால் இளம் சந்ததியினர் வழி தவறிப் போகக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு பிரத…

  11. இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு இன்று கூடுகின்றது April 23, 2024 இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயல் குழு இன்று கூடுகின்றது. எனினும், இன்றைய கூட்டத்தில் பல உறுப்பினர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரியவருகின்றது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழுக்கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை வவுனியாவில் நடைபெறுவதாக இருந்தது. தமிழ் அரசுக் கட்சி தொடர்பில் திருகோணமலை நீதிமன்றில் நடக்கும் வழக்கு தொடர்பான விடயங்கள், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான விவகாரம் குறித்து இந்தக் கூட்டத்தில் பேசுவதாக இருந்தது. ஆனால், அந்தக் கூட்டம் இறுதிநேரத்தில் இரத்தானது. இந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை இந்தக் கூட்டம் நடைபெறும் என்று அற…

  12. Published By: DIGITAL DESK 3 10 APR, 2024 | 02:06 PM தமிழ் மக்களுக்கு சொந்தமான தனியார் காணிகளை அபகரித்து வடக்கில் பௌத்த விகாரை இராணுவத்தினரால் கட்டப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி ஒரு வருட காலமாக போராட்டத்தை முன்னெடுத்து வரும் தமிழ் மக்களின் பிரதிநிதி ஒருவர் அந்த காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறு செய்யாவிடின் அந்த காணிகளை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்படும் போராட்டங்களை மேலும் விரிவுபடுத்த வேண்டியிருக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கடந்த காங்கேசன்துறை திஸ்ஸ விகாரைக்கு முன்பாக நின்று நேற்று முன்தினம் (ஏப்ரல் 7) வெளியிட்ட காணொளியில் எச்சரிக்கை விடுத்திருந்தார். …

  13. சஜித்துடன் விவாதத்திற்கு தயாரென அனுர அறிவிப்பு! ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் நடைபெறவுள்ள விவாதத்திற்கான திகதிகளை தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் மே மாதம் 7, 9, 13 மற்றும் 14ஆம் திகதிகளில் விவாதத்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவிற்கு தேசிய மக்கள் சக்தி கடிதமொன்றை அனுப்பியுள்ளது. திகதியை தெரிவு செய்ததன் பின்னர் நேரம், விவாதத்திற்கான காலப்பகுதி, இடம் மற்றும் …

  14. Published By: VISHNU 23 APR, 2024 | 02:34 AM மன்னார் பேசாலை பொலிஸ் நிலையப் பிரிவில் பட்டப்பகலில் வீட்டுக்குள் இருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் திங்கள் கிழமை (22) காலை பத்து மணிக்குப் பிற்பாடு பேசாலை பகுதியிலுள்ள அரச ஊழியர்களின் வீட்டிலேயே இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறையீடு செய்யப்பட்டத்திலிருந்து தெரிய வருவதாவது சம்பவம் அன்று மாவட்ட செயலகத்தில் கடமைபுரியும் இவ்வீட்டின் மனைவி வழமைபோன்று காலையில் தனது கடமைக்காக அலுவலகம் சென்ற பின் ஒரு பிரபல பாடசாலையில் பிரதி அதிபராக கடமைபுரியும் கணவன் பாடசாலை விடுமுறையாக இ…

  15. Published By: VISHNU 22 APR, 2024 | 09:43 PM (நா.தனுஜா) இலங்கை தற்போது காலநிலைசார் சவால்களுக்கும் முகங்கொடுத்து வருவதாகவும், அதிகரித்துவரும் வெப்பநிலையும், மிகையான உஷ்ணமும் மக்களின் உடல் ஆரோக்கியத்துக்கும், வாழ்க்கைத்தரத்துக்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாகவும் உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இலங்கையின் நிலைவரம் மற்றும் இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிகள் என்பவற்றை உள்ளடக்கி வெளியிட்டுள்ள மாதாந்த மதிப்பீட்டு அறிக்கையிலேயே உலக உணவுத்திட்டம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. 'இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் முகங்கொடுத்த மிகமோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து தற்போது படிப்படியாக மீ…

  16. இலங்கையின் அரச நிறுவனமான சிறிலங்கன் ஏர்லைன்ஸ் பங்குகளை வாங்க தனியாரிடம் விண்ணபங்கள் கோரப்பட்ட நிலையில், ஆறு நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளன என கொழும்பு செய்திகள் சொல்கிறன. 1. AirAsia Consulting Sdn. Bhd. 2. Dharshaan Elite Investment Holding (Pvt) Ltd 3. FITS Aviation (Private) Limited 4. Sherisha Technologies Private Limited 5. Treasure Republic Guardians Limited 6. Hayleys PLC என்பனவே அவையாகும். செய்தி மூலம்: https://www.newswire.lk/2024/04/22/6-companies-submit-rfqs-to-buy-srilankan-airlines/ டிஸ்கி இதில் ஏர் ஏசியா ஏலவே இந்தியா+தென்கிழக்காசியாவில் மலிவு விலை சேவையாக அறியப்பட்டது. ஹேலீஸ் இலங்கையின் முண்ணனி கார…

  17. Published By: VISHNU 22 APR, 2024 | 06:32 PM (இராஜதுரை ஹஷான்) வெளிநாட்டு அரசுமுறை கடன்களுக்காகச் சர்வதேச பிணைமுறியாளர்களுடன் அரசாங்கம் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் கடன் மறுசீரமைப்பு விவகாரம் இழுபறி நிலைக்கு உள்ளாக்கப்படும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது, கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் மூன்று தரப்பினருடன் பேச்சுவார்த்த…

  18. 22 APR, 2024 | 04:48 PM இந்திய - இலங்கை சமய மற்றும் கலாசார இணைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தை குறிக்கும் வகையிலும் நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டும், உலகின் மிக நவீன தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா முறையுடன் “ஸ்ரீ ராமாயண பாதை” (Ramayana trail) யாத்திரை திட்டத்தின் உத்தியோகபூர்வ தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை (21) பிற்பகல் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில், இடம்பெற்றது. அயோத்தியில் உள்ள மிகப் பெரிய ஸ்ரீ ராம பூஜை மாளிகையின் தலைமைப் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி மஹராஜ் சுவாமியின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இந்த சந்தர்ப்பத்தில், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோச…

  19. 22 APR, 2024 | 12:22 PM அயோத்தியின் ஸ்ரீ ராமர் கோவிலின் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி மகாராஜ் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், கோவிந்த் தேவ் கிரி மகராஜ் கண்டிக்கு சென்றபோது, அங்கு அவரை மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மற்றும் கண்டி தமிழ் வர்த்தக சங்க தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து வரவேற்றனர். https://www.virakesari.lk/article/181648

  20. 6 பேரின் உயிரை காவு கொண்ட தியத்தலாவை விபத்து – 21 பேர்காயம். பதுளை – தியத்தலாவை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் பந்தய போட்டியில் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 21 பேர் படுகாயமடைந்துள்ளதாக குறிப்பிடடுகின்றது. பந்தயத்தின்போது கார் ஒன்று பாதையை விட்டு விலகியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைககளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2024/1379117

  21. ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெறவுள்ளன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி அன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் உட்பட நாட்டின் 8 இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 407 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 5 வருடங்கள் பூர்த்தியாகின்ற போதிலும் தாக்குதலுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்கவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் ஏப்ரல் 21 தாக்குதலின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கொழும்பு கொச்சிக்கடை புனித அ…

  22. இராணுவ சேவையிலிருந்து 8000 வீரர்கள் தலைமறைவு! 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 2024 ஆம் ஆண்டு வரை ஆயுதப்படையின் 197 அதிகாரிகள் உட்பட எண்ணாயிரத்து நூற்று நாற்பத்தாறு பேர் இராணுவ சேவையிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என தெரியவந்துள்ளது. அதன்படி மார்ச் மாதத்தில் மட்டும், ஆயுதப்படைகளின் ஒன்பது அதிகாரிகளுடன் நானூற்று நாற்பத்திரண்டு பேர் ஆயுதப்படையை விட்டு வெளியேறியுள்ளனர் மேலும் கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் இராணுவ சேவையை விட்டு வெளியேறியவர்களில் 137 இராணுவ அதிகாரிகள், 18 கடற்படை அதிகாரிகள் மற்றும் 19 விமானப்படை அதிகாரிகள் இராணுவ சேவையை விட்டு வெளியேறியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பொருளாதார பிரச்சனைகள் மற்றும் நிர்வாக பிரச்…

  23. 15 ஆவது ஆண்டில் முள்ளிவாய்க்கால் பேரவல நினைவேந்தல் : புதிய வழிமுறைகள் ஊடாக மக்கள் மயப்படுத்துமாறு சிவில் சமூகம் வலியுறுத்தல் 22 APR, 2024 | 11:43 AM எதிர்வரும் மே மாதம் -18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் பேரவல நினைவேந்தல் 15 ஆவது ஆண்டாக அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் பல்வேறு புதிய வழிமுறைகள் ஊடாக மக்கள் மயப்படுத்த வேண்டுமெனச் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் புனித தெரேசா தேவாலய முன்றலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) மாலை - 04 மணியளவில் சிவில் - சமூக அமைப்புக்களின் கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் உள்ளி…

  24. 22 APR, 2024 | 11:37 AM வடக்கு மாகாணத்தில் கால்நடைகள் திருடப்படுவதைத் தடுக்கும் வகையில் அனைத்து கால்நடைகளையும் பதிவு செய்யும் நடவடிக்கையைக் கட்டாயமாக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். கால்நடைகள் களவாடப்பட்டு இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் பதிவாகின்றமையை கருத்திற்கொண்டு ஆளுநர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். கால்நடைகளை வளர்ப்போர் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் எனவும், வெளிவட்டங்களுக்குக் கால் நடைகளைக் கொண்டு செல்வதற்கான அனுமதியை வழங்கும் போது உரியச் சட்ட விதிகளை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் எனவும் ஆளுநர் சுட்டிக்…

  25. மட்டக்களப்பில் ஏன் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டது சாணக்கியன் வெளியிடும் தகவல் !! kugenApril 22, 2024 இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டபோது சர்வதேச விசாரணைக்கு தயார் எனக் கூறியவர் இன்று 300 கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு ஒரு சர்வதேச விசாரணையை செய்வதற்கு தயங்குகின்றார் என்றால் ஈஸ்டர் குண்டுவெடிப்பிற்குப் பின்புலத்தில் ராஜபக்ஷ குடும்பத்தினர் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை இன்னும் உறுதிப்படுத்துகின்றது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். இனிவரும் காலங்களிலும் தங்களுடைய அதிகாரத்தை தக்கவைப்பதற்கு, தங்களுடைய எஜமானர்களின் கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதற்கு உங்களுடைய பிள்ளைகளையும் இவர்கள் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.