ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143382 topics in this forum
-
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் துமிந்த சில்வாவுக்கு சாதமாக நடந்து கொள்வதாக கொல்லப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மகளான ஹிருணிக்கா பிரேமச்சந்திர குற்றச்சாட்டியுள்ளார்.உயிரிழந்த எனது தந்தைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்ப்பார்ப்பு எமக்கு துமிந்த சில்வாவின் உடல் நிலை குறித்து கவலையில்லை. துமிந்த சில்வாவை கைதுசெய்யவேண்டும் என்பதே எமது கோரிக்கை, எத்தனையே குற்றவாளிகள் வைத்தியசாலையில் பதுங்கியிருந்த வேளையில் கைதுசெய்த காவற்துறையினர் ஏன் துமிந்த சில்வாவை கைது செய்யப்படவில்லை என்று கேள்வி எழுப்பிய ஹருணிக்கா, குற்றப் புலனாய்வு பிரிவினர் அவரை கைதுசெய்யவோ பிடிவிராந்து பிறப்பிக்கவே இதுவரை எந்தவிதமான நடவடிக்கையினையும் முன்னெடு…
-
- 1 reply
- 601 views
-
-
தமிழக மீனவர்களின் உள்நுழைவினை தடுக்க 5 ஆயிரம் மீனவர்களை இராமேஸ்வரத்திற்கு அழைத்துச் செல்ல தான் தீர்மானித்திருப்பதாகவும், அதில் நீங்களும் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்த ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ், முல்லைத்தீவு மக்களின் காட்டமான பதிலால் மூக்குடைபட்டுத் திரும்பியிருக்கின்றார். இதுபற்றித் தெரியவருவதாவது: கடந்த சில தினங்களுக்கு முன்பதாக இருநாள் விஜயமாக அமைச்சர் முல்லைத்தீவு மாவட்டத்திற்குச் சென்றிருந்தார். இதன்போது மாவட்ட கடற் தொழிலாளர்களை சந்தித்திருக்கின்றார். இதன்போது, இந்திய மீனவர்களின் உள்நுழைவினை தடுக்க 5 ஆயிரம் மீனவர்களை இராமேஸ்வரத்திற்கு அழைத்துச் செல்ல தான் தீர்மானித்திருப்பதாகவும், இதில் முல்லைத்தீவு மீனவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என அமைச…
-
- 3 replies
- 705 views
-
-
'அடுத்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிச்சயமாகப் போட்டியிடும். கடந்த தேர்தலில் த.தே.கூட்டமைப்பு போட்டியிடாததன் காரணத்தினால்தான் பிள்ளையானால் முதலமைச்சராக வர முடிந்தது. ஆனால், அந்த நன்றியினை பிள்ளையான் மறந்து விட்டார். கிழக்கு மாகாண முதலமைச்சர் எனும் பதவி இனி பிள்ளையானுக்கு ஒரு போதும் கிடைக்காது' என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தெரிவித்தார். அமரர் தந்தை செல்வாவின் 35 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு நேற்று வியாழக்கிழமை ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் ஆலையடிவேம்பு பிரதேசசபைத் தவிசாளர் க. ரத்தினவேல் தலைமையில இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, நாடாளுமன்…
-
- 0 replies
- 443 views
-
-
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்றக் குழுவுக்கு 13வது அரசிலயமைப்புத் திருத்தம் தொடர்பாக எந்த வாக்குறுதியையும் கொடுக்கவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது குறித்து, இந்தியக் குழுவுக்குத் தலைமையேற்றிருந்த, இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இநிதியக்குழுவிடம் 13வது திருத்தம் மற்றும் அதற்கு அப்பாலான அதிகாரங்களைப் பகிரும் பொறுப்பு தனக்கு இருப்பதாக சிறிலங்கா அதிபர் கூறியிருந்தார். இதனை சுஸ்மா சுவராஜ் கொழும்பிலும் பின்னர் புதுடெல்லயிலும் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், அப்படியான எந்த வாக்குறுதியும் ச…
-
- 7 replies
- 1k views
-
-
களனி பிரதேசத்தை மற்றுமொரு லிபியாவாக மாற்ற வேண்டாம் என மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். களனி பிரதேச சபையின் துணைத் தலைவரின் வீட்டின் மீது தாம் தாக்குதல் நடத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவினை எற்படுத்தும் நோக்கில் ஒருசிலர் அமைச்சருக்கு எதிராக சதித் திட்டங்களை தீட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். களனி பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் பணிகளை எவராலும் தடுக்க முடியாது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். களனி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் களனி பிரதேசத்தை லிபியாவாக மாற்ற அமைச்சர் மேர்வின் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியிருந்தார். களனி பிரதேச சபையின் துணைத் தலைவரது வீ…
-
- 0 replies
- 510 views
-
-
ஈழப்போராட்டம் தனக்கே உரியது என்ற எண்ணம் கொண்ட கருணாநிதி மீண்டும் டெசோவை உருவாக்க வேண்டும் என்று மீண்டும் குரல் எழுப்பி வருகிறார். ஏற்கனவே ஒரு திங்களுக்கு முன்னதாக வீரமணியைக் கொண்டு டெசோவை ஏற்படுத்த வேண்டும் என்று அறிக்கை விடச் செய்தார். அப்போதே சுட்டிக்காட்டியிருந்தேன். கருணாநிதியின் திட்டம்தான் இதுவென. அது இன்று சரியாகி இப்போது கருணாநிதி தன் வாயாலேயே டேசோவை உருவாக்க வேண்டுமென்று சொல்லி விட்டார். எனவே அடுத்து வரும் நாள்களில் டெசோ உருவாக்கப்படும். டெசோ என்ன செய்யும்? கருணாநிதி இங்கே டெசோவை உருவாக்க வேண்டும், தமிழ் ஈழம் ஏற்பட வேண்டும் என்று கூறுவது, நாடாளுமன்றில் அவர் கட்சி எம்.பி.க்கள் தமிழ் ஈழத்திற்காக குரல் கொடுப்பது எல்லாம் இந்திய அரசின் திருவிளையாடல் என்பதை…
-
- 0 replies
- 548 views
-
-
தமிழகத்தில் இருந்து இலங்கை திரும்பும் தமிழ் அகதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தமிழகத்தில் இருந்து இலங்கை திரும்பும் தமிழ் அகதிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளதென அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்தது. இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில், தமிழகத்தில் இருந்த 408 ஈழத் தமிழ் அகதிகள் சுய விருப்பத்தின் பேரில் இலங்கை திரும்பினார்கள். அவர்களுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு உதவி வழங்கியது. ஆனால், கடந்த ஆண்டு இதே காலப் பகுதியில், நாடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 597 ஆக இருந்தது. இலங்கையர்களை சுய விருப்பத்தின் பேரில் நாடு திருப்பி அனுப்பும் திட்டத்தை ஐக்கிய நாடுகள் அமைப்புக் கடந்த ஆண்டு விரைவுபடுத்தியபோதிலும், கடந்த ஆ…
-
- 0 replies
- 312 views
-
-
முல்லைத்தீவு பிரதான நகரில் மாவட்டச் செயலகத்திற்கு எதிரே பௌத்த மத அனுஷ்டனங்களின் படி புதிய புத்தர் சிலை அமைப்புக்கான அடிக்கல் நடாட்டப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.நேற்று (26-04-2012) முல்லைத்தீவு நகர்ப் பகுதியில் தனியார் பேரூந்து நிலையத்திற்கு அருகில் சிறீலங்காப் படைகளின் பாதுகாப்படன் பௌத்த விகாரை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். முல்லைத்தவு மாவட்டத்தில் என்றுமே இல்லாதளவுக்கு சிறீலங்காப் படைகளின் பாதுகாப்புடன் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுவரும் நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால் முல்லைத்தீவு மாவட்டம் புதின பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படலாம் என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். http://thaaitamil.com/?p…
-
- 0 replies
- 410 views
-
-
வவுனியா நகரசபைக்குட்பட்ட தச்சங்குளம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் அத்துமீறி மயானம் (சுடலை) ஒன்றை சிங்கள சமூகத்தைச் சாந்தவர்கள் அமைத்துள்ளார்கள் என நகரசபையின் உபதலைவர் எம்.எம்.ரதன் குற்றஞ்சாட்டியுள்ளார். நகரசபையின் எல்லைக்குள் சுடுகாடு, இடுகாடு அமைப்பதாயின் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் நகரசபையின் அனுமதி பெறுதல் வேண்டும். ஆயினும் இதற்கு எவ்விதமான அனுமதி பெறாமல் இப்பகுதியைச் சார்ந்த பெரும்பான்மை இனத்தவர் அமைத்து வருதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேற்படி விடயம் தொடர்பாக காணி உரிமையாளர் வவுனியா நகரசபையின் கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து இன்றைய தினம் அவ்விடத்திற்கு நேரடியாக சென்று உப-தலைவர் உட்பட நகரசபையின் குழுவினர் பார்வையிட்டனர். இதன் பிரகாரம் மேற்பட…
-
- 0 replies
- 370 views
-
-
அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து புத்தர் சிலைகளும் உடைத்து அகற்றப்பட வேண்டும் எனவும் தம்புள்ளை பள்ளிவாசல் தொடர்பில் எந்த அடிப்படைவாத கருத்துக்களையும் தாம் வெளியிடவில்லை எனவும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும் தற்போதைய உறுப்பினருமான ஆசாத் சாலி தெரிவித்துள்ளார். நான் எந்த சந்தர்ப்பத்திலும் அடிப்படைவாத கருத்துக்களை வெளியிட்டதில்லை. எனினும் சட்டவிரோதமான அனுமதியற்ற சமய வழிப்பாட்டு தளங்களை அகற்ற வேண்டுமாயின் அனைத்து சட்டவிரோத மத வழிப்பாட்டு தளங்களையும் அகற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் இருக்கின்றேன். நான் இவ்வாறு தெரிவித்த கருத்துக்களை பௌத்த அடிப்படைவாதிகளும் இனவாதிகளும் திரிபுபடுத்தி பிரசாரம் செய்து வருகின்றனர். இவற்றை தடுக்க என்னால் முடியாது. எ…
-
- 4 replies
- 843 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டாக இணைந்து மே தினக் கூட்டங்களில் பங்கேற்பது கவலைக்குரியது என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து மே தினக் கூட்டம் நடத்துவதனையிட்டு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வெட்கப்பட வேண்டுமென அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கடந்த 1993ம் ஆண்டு மே மாதம் 1ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளினால், ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவருமான ரணசிங்க பிரேமதாச படுகொலை செய்யப்பட்டார். இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் கண்டனம் வெளியிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://nilavaram.com/index.…
-
- 0 replies
- 459 views
-
-
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவது தொடர்பில் அமெரிக்காவுக்கு வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கு ஆலோசனை வழங்கும்படி அரசாங்கம் தனது பங்காளிக் கட்சிகளைக் கேட்டுள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கான ஒரு வேலைத்திட்டத்துடன், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அடுத்த மாதம் வொஷிங்டன் செல்லவுள்ளார். அவர் அங்கு இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனை சந்தித்துப் பேசுவார். இது தொடர்பில் தத்தம் அபிப்பிராயங்களை முன்வைக்கும்படி கூட்டமைப்பின் பங்காளிகளை அரசாங்கம் கேட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அமைச்சர் டியூ.குணசேகர கற்றுக்கொண்ட மற்றும் ந…
-
- 2 replies
- 357 views
-
-
கிழக்கு மாகாணசபையை முன்கூட்டியே கலைத்து விட்டு திடீர் தேர்தலை நடத்துவது தொடர்பாக, கிழக்கு முதல்வர் சந்திரகாந்தனுடன் சிறிலங்கா அதிபர் விரைவில் பேச்சு நடத்தவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கிழக்கு மாகாணசபையின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டு வரை உள்ள நிலையில் முன்கூட்டியே தேர்தலை நடத்த சிறிலங்கா அதிபர் திட்டமிட்டுள்ளார். சிறிலங்காவின் தேர்தல் சட்டப்படி மாகாணசபையின் ஆயுட்காலம் முடிவடைய முன்னர் அதனைக் கலைப்பதற்கு, மாகாண முதல்வரின் ஒப்புதல் தேவை என்பதால், அதுபற்றி சந்திரகாந்தனுடன் சிறிலங்கா அதிபர் கலந்துரையாடவுள்ளதாகவும் கூறப்படுகிறது http://www.puthinappalakai.com/view.php?20120427106083
-
- 0 replies
- 429 views
-
-
அரசாங்கத்தின் உயர்மட்டக்குழு அடுத்த மாதம் 14 ஆம் திகதி நாட்டைக் காட்டிக் கொடுக்க அமெரிக்கா செல்கின்றது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் செயற்றிட்ட வரைபை எடுத்துக்கொண்டு ஜெனீவா செல்லாது ஹிலாரி கிளின்டனிடம் அரச குழு செல்லும் மர்மம் என்ன? என்று ஜே.வி.பி. யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்கேள்வியெழுப்பினார். இலங்கைக்குள் அமெரிக்க விரோதம் மேற்குலக நாடுகளின் சூழ்ச்சி என்று பேசும் அரசாங்கம் அந்நாடுகளுடன் கள்ளத் தொடர்பை வைத்துக் கொண்டுள்ளது. இதனை நாட்டு மக்கள் உணர வேண்டும். ஜாதிக ஹெல உறுமய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி உட்பட அனைத்து பங்காளிக் கட்சிகளுக்கும் அமெரிக்கா விஜயம் குறித்து தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக விஜித ஹேரத் தொடர்ந்தும் க…
-
- 0 replies
- 393 views
-
-
தம்புள்ளை மஸ்ஜிதுல் கைரியா ஜும்மாப் பள்ளிவாயல் உடைப்புச் சம்பவத்தைக் கண்டித்து அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக இன்று புனித ஜும்மாத் தொழுகையின் பின்னர் நாடளாவிய ரீதியில் துஆப் பிரார்த்தனைகளும் கண்டனப்பேரணிகளும் நடைபெற்றன. நாடளாவிய ரீதியில் சகல ஜும்மாப் பள்ளிவாயல்களிலும் விசேட துஆப்பிரார்த்தனை இடம்பெற வேண்டுமென்ற அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் வேண்டுகோளுக்கிணங்க மட்டக்களப்பு காத்தான்குடிப் பிரதேசத்தில் ஜாமியுழ்ழாபிரீன் பெரிய ஜும்மாப் பள்ளிவாயலில் ஜும்மாத் தொழுகையின் பின்னர் குறித்த விடயத்தில் சிறப்பான தீர்வு கிடைக்க வேண்டுமென்பதற்காகவும் எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறக்கூடாது என்பதற்காகவும் விசேட துஆப்பிரார்த்தனை காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபைத் தலைவரும் ஜாம…
-
- 0 replies
- 366 views
-
-
ஹக்மன பகுதியில் நேற்று மாலை 3 மணியளவில் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். மஞ்சள் நிற வேன் ஒன்றில் வந்த இனந்தெரியாத நபர்களே நிக்ஷன் தஹநாயக என்ற வர்த்தகரைக் கடத்திச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் வளஸ்முல்ல பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். _ http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37790
-
- 2 replies
- 492 views
-
-
இந்தத் தீவில் காலாதி காலமாக வாழ்ந்து வரும் தமிழ் மக்களுக்கு அவர்களது உரிமைகளை சிறிலங்கா அரசாங்கமோ அல்லது சிங்கள மக்களோ 'வழங்க' வேண்டிய தேவையில்லை. சிங்கள மக்களைப் போலவே தமிழ் மக்களும் சிறிலங்காத் தீவின் குடிமக்கள். ஆகவே சிங்களவர்கள் தமது உரிமைகளை அனுபவிப்பது போன்று சிறிலங்காத் தமிழ் மக்களும் தமது உரிமைகளை அனுபவிப்பதற்கு சட்டம் இடங்கொடுக்க வேண்டும். இவ்வாறு கொழும்பில் இருந்து வெளியாகும் The Sunday Leader ஆங்கில வார ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்டுரையின் முக்கியத்துவம் கருதி புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அண்மையில் இந்திய எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஸ் தலைமையில் 12 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, சிறிலங்காவுக்கு வருகை தந்த…
-
- 0 replies
- 437 views
-
-
http://www.london2012.com/videos/2012/welcoming-the-world.php
-
- 20 replies
- 2.7k views
-
-
மத்திய லண்டனில் நடைபெறும் மே 1 ம் திகதி சர்வதேச தொழிலாளர் தின ஊர்வலத்தில் அனைத்து தமிழ் மக்கள் கலந்து கொண்டு ஈழத்தமிழினத்திற்கு எதிராக சிறிலங்காஅரசினால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பை பிரித்தானிய வாழ் அனைத்து இன சமூக மக்களுக்கும் எடுத்துச் சொல்வோம். தமிழினம் ஓர் தனித்துவமான இறையாண்மை உள்ள இனம் என்பதை சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டுவதற்கும், பிரித்தானிய பாராளுமன்றத்தினால் உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச சுயாதீன விசாரணை தொடர்பான இணையத்தள மனுவில் கையொப்பங்கள் பெறுவதற்கான ஏற்பாடுகளும் பிரத்தானிய தமிழர் பேரவையினால் மேற்கொண்டுள்ளது. இப் பேரணியில் அனைத்து தமிழ் மக்களையும் அணிதிரண்டு வருமாறு கேட்டுக் கொள்வதோடு இணைய தள மனுவில் கையெழுத்துப் பெறுவதற்கு உதவ விரும்புவோர் முற்கூட்டியே …
-
- 0 replies
- 357 views
-
-
பொது மக்களின் கௌரவத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் காவல்துறையினர் உரிய முறையில் கடமையாற்ற வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். போர் இடம்பெற்ற காலத்தில் முப்படையினர் மக்களுடன் நேரடியாக தொடர்புகளைப் பேணி வந்தனர். எனினும், நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பூரண பொறுப்பு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினருக்கும், மக்களுக்கும் இடையில் தெளிவான புரிந்துணர்வு ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும். கடமைகளை உரிய முறையில் மேற்கொண்டால் மக்களின் நன்மதிப்பை இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும் என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆனந்தா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவா இதனைக் க…
-
- 0 replies
- 344 views
-
-
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புக்களில் சர்வதேச உதவிகளை நாட வேண்டிய நிலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உந்தப்பட்டுள்ளதாக அக கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கையை ஆட்சி செய்த அரசாங்கங்கள் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் முனைப்பு காட்டவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவினதோ அல்லது அமெரிக்காவினதோ ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டாம் என கோரப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த ஜனவரி மாதம் வரையில் தீர்வுத் திட்டத்தை எட்டுவது தொடர்பில் எவ்வித சாதக முனைப்புக்களும் முன்னெடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். தீர்வுத் திட்டத்தை முன்வைப்பது தொடர்பில் அரசாங்கம் காத்திரமான முனைபுக்கள…
-
- 0 replies
- 299 views
-
-
நாங்கள் வாஷிங்டன், டில்லிக்கு போகிறோம். இப்பிரச்சினையை சர்வதேச மயப்படுத்துகிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால் நாம் இந்த பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தவில்லை. உங்கள் தரப்பினரால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமையினாலேயே இப்பிரச்சினை சர்வதேச மயமாகியது. இலங்கையில்தான் நாம் பேச்சு நடத்துகிறோம். ஆனால் அதன் மூலம் தீர்வு காண முடியாவிட்டால், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக நாம் சகல நடவடிக்கைகளையும் செய்யநேரிடும்' தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் நேற்று தெரிவித்தார். பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற தந்தை செல்வாவின் நினைவுப் பேருரை நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். பே…
-
- 1 reply
- 462 views
-
-
காரைநகர் பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் க.பாலச்சந்திரன் இன்று வியாழக்கிழமை மாலை 6.45 மணியளவில் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இவருக்கு சிறீலங்கா காவல்துறையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் இடம்பெற்ற பிரதேச சபைத் தேர்தலில் காரைநகர் பிரதேச சபைக்காகப் போட்டியிட்ட அணியில் இடம்பெற்ற இவர் வெற்றி பெற்றிருந்தார். காரைநகர் பிரதேச சபையின் உறுப்பினராக இவர் கடமையாற்றுகின்ற அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் யாழ் மாவட்ட இணைப்பாளராகவும் கடமையாற்றுகின்றார். இந்நிலையில் காரைநகர் பிரதேச சபையில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற…
-
- 0 replies
- 446 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச விவகாரங்களைக் கையாளும் விசேட இராஜதந்திரிகளை உள்ளடக்கிய உயர்மட்டக் குழுவொன்று அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டு அடுத்த மாத நடுப்பகுதியில் இலங்கை வருகின்றது என இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து மிகவும் நம்பகரமாகத் தெரியவருகின்றது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கமைய இலங்கை அரசு செயற்படவேண்டும் என சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் நிலையிலேயே, ஐ.நா.மனித உரிமைகள் குழு அவசர விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையாரின் பணிப்புரைக்கமைய இலங்கை வரும் இந்த இராஜதந்திரிகள் குழு, இங்கு முக்கிய பல சந்திப்புகளை நடத்தவுள்ளது என்றும் இலங்கையின் அரசியல் க…
-
- 1 reply
- 612 views
-
-
யாழ் மாநகர முதல்வர் தன்னிச்சயாக செயற்படுகிறார்;எதிர்க் கட்சியினர் குற்றச்சாட்டு யாழ்,மாநகர சபை முதல்வர் தன்னிச்சயாக செயற்படுவதாக எதிர்க் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். யாழ்.மாநகர சபை மாதாந்தக் கூட்டமானது எந்தவிதமான காரணங்களும் கூறாது ஒத்திவைகப்பட்டுள்ளமையானது பல அரசியல் நோக்கங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் மேதினக் கூட்டத்தினை ஈ.பி.டி.பியினர் யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ள நிலையில் அது தொடர்பாக கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ளவே மாநகர முதல்வர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு மாநகர சபையின் கூட்டமானது ஒத்திவைக்கப்படுகின்றது என்றால் என்ன காரணங்களுக்காக ஒத்திவைக்கப் படுகின்றது என்று உறுப்பினர்களுக்கு அவையில் தெரிவிக்க வேண…
-
- 1 reply
- 554 views
-