ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143380 topics in this forum
-
இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், அதுதொடர்பாக அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இணக்கப்பாடு ஏற்பட வேண்டும் என்றும் இலங்கை எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். டெல்லியில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை நேற்று செவ்வாய் கிழமையன்று ரணில் விக்ரமசிங்க சந்தித்து இலங்கைப் பிரச்சினை தொடர்பாக ஆலோசனை நடத்தினார். குறிப்பாக, இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்த பிறகு, இந்தச் சந்திப்பு நடந்திருக்கிறது. அந்தச் சந்திப்புக்கு பிறகு செய்தியா…
-
- 1 reply
- 437 views
-
-
ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் இலங்கை தொடர்பான அமெரிக்க பிரேரணைக்கு இந்தியா ஆதரவாக வாக்களித்தமை இலங்கைக்கு பாதகமானது என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார். ஏதேனும் முக்கியமான காரணம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டே இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்திருக்கக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 2009ம் ஆண்டில் ஐநா மனித உரிமைப் பேரவை அமர்வில் இலங்கை நெருக்கடியை சந்தித்தபோது இந்தியா நேசக்கரம் நீட்டி இலங்கைக்கு முழு ஆதரவினை வழங்கியிருந்தரத சந்திரிக்கா சுட்டிக்காட்டியுள்ளார். தென் ஆபிரிக்காவில் போன்று இலங்கையிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அதன் முழு பொறுப்பும் அரசாங்கத்திடம் உள்ளதென அவ…
-
- 0 replies
- 657 views
-
-
இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித கொஹணவிற்கு எதிராக போர் குற்ற விசாரணை நடத்தும்படி அவுஸ்திரேலிய கூட்டாட்சி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.அவுஸ்திரேலியாவில் இரட்டை குடியுரிமை பெற்றுள்ள கலாநிதி பாலித கொஹண, போர் குற்றம் புரிந்தமைக்கான ஆதாரங்களை அவுஸ்திரேலிய தமிழ் அமைப்பு ஒன்று கூட்டாட்சி பொலிஸாரிடம் சமர்பித்துள்ளதாக, அண்மையில் விடுதலைப் புலி சார்பு இணையம் ஒன்றை மேற்கோள்காட்டி ஏஎப்பி செய்தி வெளியிட்டிருந்தது. இது தொடர்பில் அத தெரண அவுஸ்திரேலிய கூட்டாட்சி பொலிஸிடம் மின்னஞ்சல் மூலம் கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தது. அத தெரணவின் கேள்விக்கு இன்று (11) மின்னஞ்சல் மூலம் பதிலளித்துள்ள அவுஸ்திரேலிய கூட்டாட்சி பொலிஸ் பேச்சாளர், பாலித கொஹண…
-
- 0 replies
- 526 views
-
-
யாழ். பெண்கள் மீதான துஸ்பிரயோகங்களுக்கு கல்வி நிலையங்கள், இன்ரநெற் கபேக்கள் பங்களிப்பு! சுகாதார பணிப்பாளர் யாழ்.மாவட்டத்திலுள்ள தனியார் கல்வி நிலையங்களும் இன்ரநெற் கபேக்களுமே அதிகளவில் பாலியல் ரீதியான துஸ்பிரயோகத்திற்கு வழி வகுப்பதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தனியார் கல்வி நிலையங்கள். மாலையில் 6 மணிக்கு பின்னர் வகுப்புக்கள் நடாத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. தனியார் வகுப்பு நிலையங்களில் மலசல கூடம், குடிநீர் மற்றும் போதிய இடவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தப்படவேண்டும். விடுமுறைக் காலங்களில் தனியார் வகுப்புகள் தொடர்ச்சியாக நடாத்தப்படுவதும் மாணவர்களுக்கு உளத்தாக்கங்கள் ஏற்படுகின்றன. …
-
- 1 reply
- 581 views
-
-
ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடு கள் சபை மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தமைக்கு அமெரிக்காவே பிரதான காரணமாகும் எனவும் அதாவது இலங்கைக்கு எதிராக வாக்களிப்பது என்ற அசௌகரியமான தீர்மானத்தை இந்தியாவை எடுக்கவைத்தது அமெரிக்காவே எனவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்ர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். இந்தியாவின் தீர்மானம் காரணமாக நாங்கள் கோபப்படவில்லை. அத்துடன் இந்தியாவின் நிலைமையை புரிந்துக்கொண்ட நாங்கள் வேதனையடைந்தோம். இந்தியாவும் வேதனை அடைந்திருக்கும் என்று எண்ணுகின்றோம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இந்தியா இலங்கைக்கு எதிர…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டில் கடுமையான வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2011ல் 8.3 சதவீதமாகக் காணப்பட்ட சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டில் 7.2 வீதமாகச் சரிவடையும் என மத்திய வங்கி ஏற்கனவே எதிர்வு கூறியிருந்தது. வட்டி வீதம் அதிகரிப்பு, சிறிலங்கா ரூபாவின் நாணயப் பெறுமதியில் சரிவு ஏற்பட்டமை, வர்த்தக மீதி பாதகமாக உள்ளதால் அதனை சீர்செய்வதற்காக இறக்குமதிப் பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டமை போன்றவற்றால் சிறிலங்காவின் பொருளாதாரம் 2012 இல் கடும் சரிவை எட்டும் என, நேற்று வெளியிடப்பட்டுள்ள சிறிலங்கா மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. …
-
- 7 replies
- 917 views
-
-
ஆட்கடத்தல்களின் பின்னணியில் அரசாங்கம்:ஐ.தே.க ஆட்கடத்தல்களின் பின்னணியில் அரசாங்கமே செயற்படுகின்றது. எனவே இதற்கெதிராக மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார். கடத்தப்பட்ட குமார் குணரட்ணம் தொடர்பில் இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய தூதுவரிடம் அச்சுறுத்தும் விதத்தில் பாதுகாப்புச் செயலாளர் விபரங்களைக் கோரியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ஹரீன் பெர்ணான்டோ எம்.பி. இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் சோஷலிச முற்போக்கு முன்னணியின் தல…
-
- 3 replies
- 1.2k views
-
-
naathamnews.com ஐ. நா. மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் மையப்படுத்தி , நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தொடர்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியல் கருத்தரங்க நிகழ்வுகளின் வரிசையில் கனடா- மொன்றியலிலும் இடம்பெற்றுள்ளது. இக் கருத்தரங்கில் ஐ.நா மனித உரிமைச் சபையில் பங்காற்றிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வளஅறிஞர் பங்கெடுத்திருந்த பேராசிரியர் போல் நியுமன், ஐ.நா மனித உரிமைச் கூட்டத் தொடரில் ஜெனிவாவில் பரப்புரையில் ஈடுபட்ட அவைத்தலைவர் பொன் பாலராஜன் ஆகியோர் நேரடியாக பங்கெடுத்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். பேராசிரியர் பொல் நியுமன் அவர்கள் , தமிழர் தரப்பினால் ஐ.நா மனித உரிமைச் சபையில் மேற்கொள்ளபட்ட நடவடிக்கைகள் குறித்தும் ,…
-
- 0 replies
- 990 views
-
-
பிரான்சின் றெயூனியின் தீவில் சித்திரை திருநாள் பொது விடுமுறையாக அறிவிக்கப்படும் நம்பிக்கையில் தமிழர்கள் ! பிரான்சின் ஆளுகைக்கு உட்பட்ட றெயூனியின் தீவில், சித்திரைத் திருநாள் பொதுவிடுமுறையாக அறிவிக்கப்படும் எதிர்பார்பில் அங்குள்ள தமிழர்கள் உள்ளனர். பிரான்சு தேசத்தின் அரசுத் தலைவருக்கான தேர்தல் பரப்புரைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரான்சின் அரசுத் தலைவர் நிக்கோலா சார்கொசி அவர்கள், கடந்த வாரம் தேர்தல் பரப்புரைக்காக றெயூனியன் தீவுக்கு பயணத்தினை மேற்கொண்டிருந்தார். அங்குள்ள சர்வமத தலைவர்களைச் சந்தித்து, தன்னுடைய தேர்தல் கொள்கை விளக்கத்தினை, அதிபர் நிக்கோலா சார்கொசி அவர்கள் தெரிவித்திருந்த நிலையில், இந்துமதத் தலைவர், இந்து மக்களின் பண்டிகை நாளொன்றினை பொது…
-
- 0 replies
- 830 views
-
-
எமது அன்பான உறவுகளே!! அனைவருக்கும் வணக்கம்! இங்கு நாம் கூடிநிற்கின்றோம். எதற்காக? நீதி? நியாயம் எமக்கு வேண்டும். இழந்த உரிமைகள் அனைத்தும் மீண்டும் எமக்கு வேண்டும். இந்த இடத்தில் நாம் மட்டும் அல்ல உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி நோய்க்கு மருந்து இன்றி எம்மை விட்டு உடலால் பிரிந்து போன உயிர்களின் ஆதமாக்களும் எங்களோடு நின்று இங்கே நீதி? நியாயம் கேட்பதற்கு காத்திருக்கின்றன. “ஊக்கமது கைவிடேல்” ஏன்பது ஒவையார் வாக்கு. நீதி கிடைக்கும் மட்டும் நாம் தொடர்ந்தும் உழைப்போம். விட்டு போவதற்கு எமக்கு உணர்வுகள் ஒன்றும் எதுவும் மரணித்து போகவில்லை. அன்பான சொந்தங்களே!!! மிகவும் சவால் நிறைந்த காலப்பகுதிக்குள் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். நாம் தொடர்கின்ற …
-
- 0 replies
- 1.3k views
-
-
கடத்திச் செல்லப்பட்ட மக்கள் போராட்ட அமைப்பின் பெண்கள் பிரிவின் தலைவி திமுத்து ஆட்டிகல சற்று முன்னர் முச்சக்கர வண்டியில் கொண்டு வந்து இறக்கி விடப்பட்டுள்ளதாக எமது விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார். கடந்த 7ம் திகதி திமுத்து ஆட்டிகல இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டிருந்தார். இந்த நிலையில் சற்று முன்னர் அவர் முச்சக்கர வண்டியில் கொண்டு வந்து இறக்கி விடப்பட்டுள்ளார். காணொளியை காண... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=4314:2012-04-10-09-11-59&catid=1:latest-news&Itemid=18
-
- 7 replies
- 1.1k views
-
-
விஸா இன்றி வட-கிழக்கில் தங்கியுள்ள 500 இந்தியர் குறித்து பொலிஸ் விசாரணை விஸா இன்றி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சென்று பல்வேறு துறைசார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் 500இற்கும் மேற்பட்ட இந்தியப் பிரஜைகள் தொடர்பில் அம்மாகாணங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எரிக் பெரேரா தெரிவித்தார். இவ்வாறான இந்திய பிரஜைகள் மூவர் வவுனியா மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களிலிருந்து கைது செய்யப்பட்டதை அடுத்தே மேற்படி தகவல் வெளியாகியுள்ளதாக அவர் கூறினார். இவ்வாறு விஸா அனுமதிப்பத்திரமின்றி இலங்கையில் தங்கியோரில் சிலர் வடக்கு கிழக்கில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற அதேவேளை, மேலும் சிலர் ஆட…
-
- 2 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா தீவில் கொல்லப்பட்ட பொதுமக்கள் விவகாரம் தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றுவதில், உலக நாடுகள் தமது குறுகிய தேசிய நலனைப் பயன்படுத்துவது வேதனைக்குரிய விடயம். இந்த மக்களின் இழப்புக்கள் தொடர்பில் உண்மையை உரைத்து, நீதியை நிலைநாட்ட வேண்டியது பிரதானம். இந்த விவகாரத்தில் அமைதியை கடைப்பிடிப்பது தமிழ் மக்களின் வாழ்வில் ஆபத்தை ஏற்படுத்தும். இவ்வாறு foreign policy journal ஊடகத்தில் டுபாயை தளமாக கொண்ட, மத்திய கிழக்கு மற்றும் முஸ்லிம் உலக விவகார ஆய்வாளர் Aijaz Zaka Syed எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கட்டுரையை ‘புதினப்பலகை‘க்காக மொழியாக்கம் செய்தவர் ‘நித்தியபாரதி‘. புலியில் சவாரி செய்வது, அதன் முதலாளிக்கு மிகச் சிறப்பான சந்தர்ப்பங்களில் இலகுவான கலை…
-
- 7 replies
- 1.2k views
-
-
மலசல கூடம் கட்டப்போகிறாராம் ஆளுனர் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.பொதுசன நூலகத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனி;ன் நாடுகளது நிதி உதவியின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கணனி மையத்தை உடனடியாக இடித்தகற்றிவிட்டு அங்கு நவீன மலசலகூடமொன்றை அமைக்க வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி உத்தரவிட்டுள்ளார். நிர்மாண வேலைக்கான அனைத்து பணிகளும் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டதாக தொடர்புடைய தரப்புகள் தெரிவிக்கின்றன. எனினும் மூடப்பட்ட கணனி மையம் எங்கு அமைக்கப்படவுள்ளது என்பது பற்றியோ மீளத்திறக்கப்படுவது பற்றியோ தகவல்கள் தமக்கு தரப்பட்டிருக்கவில்லையென நூலக நிர்வாகம் கூறுகின்றது. வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறியினது அடாவடிகள் தமிழ் மக்களுக்கு பரிச்சயமானவையே. நினைத்த மாத்திரத்தில் உட…
-
- 9 replies
- 1.5k views
-
-
விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்ததற்கான ஆதாரங்களை தேசநலன் கருதி வெளியிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் விடுதலை புலிகள் இயக்கம் கடந்த 1992 ம் ஆண்டு தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசு பிறப்பிக்கும் அறிவிப்பாணை மூலம் இந்தத் தடை நீடிக்கப்பட்டு வருகிறது. விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கான தடையை நீட்டித்து மத்திய அரசு கடந்த 14.5.10 2010 அன்று அறிவிப்பாணை வெளியிட்டது. சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்தின்படி விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்கலாமா? என்பது பற்றி விசாரணை நடத்துவதற்காக டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. இந…
-
- 2 replies
- 1.8k views
-
-
யுத்தம் நடைபெற்றபோது இந்தியாவிற்கு நாம் எல்லாவற்றையும் கூறித்தான் செயற்பட்டோம், செயற்பட்டு வந்துள்ளோம் ஆனால் இந்தியாவின் தற்பொதைய போக்கு அண்மைக்காலமாக அவ்வளவு ஆரோக்கியமானதாக இல்லை. இவ்வாறு இந்திய தூதர் அசோக் காந்தா மீது பாய்ந்துள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தபாய இராஜபக்ஷ. புதுடில்லி மீதான கொழும்பின் அதிருப்தி இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா ,கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின்போது வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. இந்தச் சந்திப்பில் இந்தியாவின் போக்குக்குறித்து இந்தியத் தூதுவருடன் கடும் தொனியில் பேசியிருக்கிறார் கோத்தபாய ராஜபக்ஷ. ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடை யிலான உறவில் வ…
-
- 2 replies
- 936 views
-
-
லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா, போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரித்தானியாவில் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்ற அச்சத்தில், விரைவில் கொழும்பு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவின் “தி கார்டியன்“ நாளேடு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் 55ஆவது டிவிசனுக்கும், 59ஆவது டிவிசனுக்கும் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா, பெருமளவு பொதுமக்கள் கொல்லப்படக் காரணமாக இருந்தவர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார். மருத்துவமனைகள்,. மற்றும் பாதுகாப்பு வலயங்கள் மீதான பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டு தமிழ்மக்களைப் படுகொலை செய்து போர்க்க…
-
- 8 replies
- 2.3k views
-
-
ஜெனிவா பிரேரணையும் அதன் அரசியலும் - யதீந்திரா சமீப நாட்களாக இலங்கையின் அரசியல் சூழலில் ஒரு வகையான திகில் அனுபவத்தை வழங்கிக் கொண்டிருந்த ஜெனிவா அரசியல் ஒருவாறு முடிவுக்கு வந்துவிட்டது. தெற்கின் சிங்கள தேசிவாத தரப்பினரை கவலைக்குள்ளும், தமிழ்த் தேசியவாத சக்திகளை மகிழ்சிக்குள்ளும் தள்ளும் வகையில் ஜெனிவாவின் முடிவு அமைந்திருந்தது. 47 நாடுகளை உறுப்பினராக கொண்டிருக்கும் ஜ.நாவின் மனித உரிமைகள் பேரவையில், 24 நாடுகளின் ஆதரவைப் பெற்றதன் மூலம் இலங்கையின் மீதான அமெரிக்க பிரேரணை வெற்றிபெற்றுவிட்டது. இப்போது எங்கள் முன் உள்ள கேள்வி - இந்த பிரேரணையின் அரசியலை நாம் எவ்வாறு விளங்கிக் கொள்ளப் போகின்றோம்? ஆனால் நம் மத்தியில் நடந்து கொண்டிருக்கும் சூடான விவாதங்களை பார்த்தால் - இந…
-
- 1 reply
- 655 views
-
-
கூடங்குளம் உள்ளிட்ட தென்னிந்திய அணு மின் நிலையங்கள் குறித்து புகார் அளிக்கப்போவதாக கூறியுள்ள இலங்கைக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்," அணுமின் திட்டம் நேற்று ஆரம்பிக்கவில்லை. அந்த திட்டம் நீண்ட காலமாக நடந்து வருகிறது. தற்போது கூடங்குளம் பற்றி இலங்கை பிரச்னை எழுப்பியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் கூற மாட்டேன். ஆனால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்" என்றார். முன்னதாக தென்னிந்தியாவில் அமைந்துள்ள அணுமின் நிலையங்கள் குறித்து கவலை தெரிவித்த இலங்கை மின்சாரம் மற்றும் ஆற்றல் துறை அமைச்சர…
-
- 0 replies
- 606 views
-
-
கடத்திச் செல்லப்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சியின் செயற்பாட்டாளரான பிரேம்குமார் குணரத்னம் என்ற குமார் மாத்தயா இன்று (10) முற்பகல் 7.40 இற்கு சிறிலங்கன் விமானச் சேவைக்குச் சொந்தமான UL 314 என்ற விமானத்தில் மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரேம்குமார் குணரத்னம் கடந்த செப்டம்பர் மாதம் "நொயேல் முதலிகே" என்ற பெயரில் அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு வந்திருந்தார். N1016123 என்ற அவுஸ்திரேலிய கடவுச் சீட்டிலேயே பிரேம்குமார் குணரத்னம் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளார். குமார் குணரத்னத்தை விமானத்தில் அனுப்புவதற்காக அவுஸ்திரேலிய தூதரகத்தின் அதிகாரியொருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு…
-
- 0 replies
- 972 views
-
-
புலிக்கதை கூறிக் கொண்டிருக்காமல் தீர்வை முன்வையுங்கள் : சம்பந்தன் புலிகளைப் பற்றி மட்டும் தொடர்ந்தும் பேசிக் கொண்டிருக்காமல் உயிருடனிருக்கும் தமிழ் மக்களுக்கான தீர்வை அரசாங்கம் முன்வைக்க வேண்டுமென வலியுறுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எம்.பி.யுமான இரா.சம்பந்தன், தமிழ் மக்களின் பகுதிகளில் ஜனநாயக ஆட்சி நடக்கக்கூடாதென்பதில் அரசாங்கம் உறுதியுடனிருப்பதாகவும் குற்றம்சாட்டினார். அத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் 6 தசாப்தகாலமாகத் தொடர்ந்து கடைப்பிடிக்கும் அணுகுமுறையையே தொடர்ந்தும் முன்னெடுக்கும் போக்கினையே அரசிடம் காண முடிவதாகவும் குறிப்பிட்ட சம்பந்தன், இவ்வாறான போக்கு சர்வதேச ரீதியில் இலங்கைக்கு பாரிய தாக்கத்தினை ஏற்படுத்துமெனவும் எச்சரித்தா…
-
- 9 replies
- 1k views
-
-
அரசியல் தீர்வு குறித்த இரு தரப்பு பேச்சுக்கான சாதகமான சூழலை அரசாங்கம் இன்னமும் உருவாக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பினால் 2011 ஆம் ஆண்டு பங்குனி மாதம் கையளிக்கப்பட்ட தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பான தீர்வு யோசனைக்குய பதிலை அரசாங்கம் இன்னும் வழங்கவில்லை. இந்த நிலையில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் எவ்வாறு அங்கம் வகிக்கமுடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இணக்கம் தெரிவிக்காததனால் பாராளுமன்ற தெரிவுக் குழுவை கூட்ட முடியாமல் இருப்பதாக அரசாங்கம் கூறுவதை சம்பந்தன் நிராகரித்தார். ஏற்பட்ட இணக்கப்பாடுகள் அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக்கூட்ட மைப்புக்கும் இடையே கட…
-
- 0 replies
- 497 views
-
-
வெளியுறவு அமைச்சராக மீண்டும் ரோகித போகொல்லாம? ரோகித போகொல்லாம ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணை வெற்றியடைந்ததன் காரணமாக சிறிலங்கா அமைச்சரவையில் பலவீனமடைந்துள்ள ஜீ. எல். பீரிஸை வெளிவிவகார அமைச்சுப் பொறுப்பிலிருந்து அகற்றிவிட்டு முன்னாள் வெளிவிவகார அமைச்சரான ரோஹித போகல்லாகமவை வெளிவிவகார அமைச்சராக நியமிக்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதி மஹிந்தவின் சகோதரருமான கோதபாய ராஜபக்ஷ வியூகம் வகுத்துள்ளார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் முதற்கட்டமாக, தற்போது சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வரும் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்…
-
- 3 replies
- 802 views
-
-
அதிகாரப் பகிர்வு யோசனைத் திட்டத்தை அரசாங்கம் உடனடியாக அமுல்படுத்த வேண்டுமென பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் நெசர்பே பிரபு தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னரான நல்லிணக்கத்தை உறுதி செய்ய வேண்டுமாயின் அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கைப் பரிந்துரைகளின் அடிப்படையில் நாட்டில் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையும் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறுவதனால் ஈழக் கோட்பாட்டாளர்களின் கரங்கள் வலுப்பெரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரித்தானியா வாக்களித…
-
- 4 replies
- 487 views
-
-
பொலிஸில் குணரட்ணம் சரணடைந்துள்ளார்: கோட்டாபய கடத்தப்பட்டதாக பிரசாரப்படுத்திவரும் ஜே.வி.பி. மாற்றுக்குழுவின் குணரட்ணம் எனப்படுபவர் பொலிஸில் சரணடைந்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று இரவு அரச தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டபோதே மேற்படி கூறினார். அந்நிகழ்ச்சியில் குணரட்ணம் தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்து கூறுகையில்... நாட்டில் நிலவுகின்ற சுமுகநிலையைக் குழப்புவதற்கு பலர் முயன்று வருகிறார்கள். அதில் ஓர் அங்கம் தான் கடத்தல் நாடகங்கள். அண்மையிலும் குணரட்ணம் என்பர் கடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிகழ்ச்சியில் பங்குபற்றுவதற்கு சற்று முன்பாக பொலிஸில் குணரட்ணம் சரணடைந்துள்ளதாக தகவல் கிடைத்தது. எனினும் …
-
- 4 replies
- 809 views
-