ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143362 topics in this forum
-
இலங்கை தோல்வி: கிளிநொச்சியில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இந்தியா ஆதரவுடன் நிறைவேறியது. நேற்று பிற்பகல் இந்த தகவல் பரவியதும் உலகம் முழுவதும் வாழும் தலைவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஈழத்திலும் தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டோடியது. குறிப்பாக கிளிநொச்சி, அக்கராயன் பகுதிகளில் ஈழத்தமிழ் இளைஞர்கள் பட்டாசுகள் வெடித்து இந்த வெற்றியை குதூகலமாக கொண்டாடினார்கள். கிளிநொச்சி நகரில் ஒரு கட்டத்தில் பட்டாசுகள் வெடி சத்தம் 10 நிமிடங்களுக்கும் மேல் தொடர்ச்சியாக நீடித்தது. ராணுவ நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் வாழும் தமிழர்கள் அனைவரும் இந்த வெற்றியைக் கொண்டாடினார்கள். ஈழத்…
-
- 3 replies
- 1.3k views
-
-
இலங்கைக்கு எதிரான விசாரணைக்கு மத்திய அரசு தடையாக உள்ளது : சீமான் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலையை ஆதாரத்துடன் மெய்பிக்க வாய்ப்பளிக்கும் ஒரு நியாயமான விசாரணைக்கு வழிவகுக்கும் அமெரிக்காவின் தீர்மானத்தில் இலங்கை அரசுக்கு சாதகமான இரண்டு திருத்தங்களைச் செய்துள்ள இந்திய அரசு, அதன் மூலம் நேர்மையான விசாரணைக்கு முட்டுக்கட்டையை உருவாக்கி உள்ளது. தீர்மானத்தின் 3-வது பிரிவில், பன்னாட்டு மனிதாபிமானச் சட்டங்களின் கீழ் நடத்தப்பட வேண்டிய விசாரணையில் ஐ.நா.மனித உரிமை மன்றத்தின் ஆலோசனையையும், விசாரணையை மேற்கொள்வது தொடர்பான சட்ட ரீதியான தொழில் நுட்ப உதவிகளையும் இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளவே…
-
- 0 replies
- 604 views
-
-
அமெரிக்கா முன்வைத்த பிரேரணையால் ஈழத் தமிழர்களுக்கு விடுதலையை பெற்று கொடுக்காது!-பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை! அமெரிக்காவும் சிறிலங்காவும் கற்றுக்கொண்ட பாடங்கள்- நல்லிணக்க ஆணைக்குழு, ஜெனீவா மனிதவுரிமை பேரவையின் அமர்வில் கொண்டுவரப்பட்ட பிரேரணையும்சிறிலங்கா அரசு இந்திய ஆகிய நாடுகள் அமெரிக்க மனிதவுரிமை ஆணைக்குழுவில் முன்வைத்த பிரேரணையை பார்த்து அஞ்சுவது போன்ற பார்வையை எமக்கு அளித்து கொண்டு இருக்கிறார்கள். இந்த பிரேரணை தமிழர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை சபையில் ஒரு சிறு கதவு திறக்கப்பட்டுள்ளது என்ற பார்வையில் எமக்குள் நாம் ஒரு திருப்தியை ஏற்படுத்தி கொண்டாலும், இதற்காக அமெரிக்காவின் இந்த முயற்சிக்கு நாம் ஆதரவு குரல் கொடுத்தாலும் …
-
- 4 replies
- 670 views
-
-
திருகோணமலையில் தமிழர்களின் முச்சக்கரவண்டியை அடித்து நொறுக்கிய சிங்கள இனவெறியர்கள் இன்று காலை திருகோணமலையில் தமிழர்களின் முச்சக்கரவண்டியை சிங்கள இனவெறியர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் யாழ் நகரின் தீவக பகுதிகளில் சிறீலங்கா அரசானது சிங்கள பயங்கரவாத இராணுவத்தினரை கூடுதலாக நிலைநிறுத்தி மக்களை அச்சுறுத்திய வண்ணம் உள்ளனர். http://www.tamilveli.com/showurl.php?url=http://feedproxy.google.com/~r/meenakam/PJVH/~3/Zh_9NVSd8cc/41786&type=P&itemid=211853
-
- 1 reply
- 771 views
-
-
மற்றுமொரு முள்ளிவாய்க்காலா இடிந்தகரை...?: கொளத்தூர் மணி [Photos] எல்லா மாநிலங்களிலும் விரட்டியடிக்கப்பட்டதால் அணுமின்நிலையத்தை தென்தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளத்தில் நிறுவ மத்திய அரசு முடிவெடுத்தது. அன்றிலிருந்து இந்த அணுஉலைக்கு எதிராகப் போராடி வரும் மக்கள் 2011இல் புகுசிமாவில் நடந்த அணுஉலை பேரழிவிற்குப்பின் மேலும் உறுதியாகப் போராடிக்கொண்டிருக்கின்றனர். மக்களின் உணர்வைப் புரிந்து செயல்படுவதாக “மக்களின் அச்சத்தைப் போக்காமல் மத்திய அரசு கூடங்குளம் அணுஉலையை திறக்கக்கூடாது” என்று முதல்வர் முன்மொழிந்து தமிழகசட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு நேரெதிராக இன்று மக்களை அச்சுறுத்தி அணுஉலையை திறக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. கூடங்குளத…
-
- 4 replies
- 1.6k views
-
-
திருகோணமலையில் தமிழர்களின் முச்சக்கரவண்டியை அடித்து நொறுக்கிய சிங்கள இனவெறியர்கள் இன்று காலை திருகோணமலையில் தமிழர்களின் முச்சக்கரவண்டியை சிங்கள இனவெறியர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் யாழ் நகரின் தீவக பகுதிகளில் சிறீலங்கா அரசானது சிங்கள பயங்கரவாத இராணுவத்தினரை கூடுதலாக நிலைநிறுத்தி மக்களை அச்சுறுத்திய வண்ணம் உள்ளனர். http://www.tamilveli.com/showurl.php?url=http://feedproxy.google.com/~r/meenakam/PJVH/~3/Zh_9NVSd8cc/41786&type=P&itemid=211853
-
- 0 replies
- 856 views
-
-
ஐ.நாவில் அமெரிக்கா வெற்றி கண்டது! இலங்கைக்கு கிடைத்த இராஜதந்திர அடி! ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை, தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது. இலங்கை அரசாங்கம் மாபெரும் இராஜதந்திரச் தோல்வியைச் சந்தித்துள்ளது. கடந்த 4 வாரங்களாக, உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்புக்கு மட்டுமல்ல, இலங்கைத் தீவை மையப்படுத்திய உலக அரசியல் வெளியிலும், இப்பிரேரணை விவகாரம் முக்கிய விடயமாக மாறியிருந்தது. இந்நிலையில் இன்று ஐ.நா கூட்டத் தொடர் அமர்வில் கடும் வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் இந்தப் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அமெரிக்காவின் பிரேரணையினை 24 நாடுகள் ஆதரித்தும், 15 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்துள்ளன. 8 நாடுகள் வாக்கெடுப்ப்ப…
-
- 0 replies
- 511 views
-
-
இந்தியாவின் வழியில் பல நாடுகள் நிலைப்பாட்டை மாற்றின: ஜெனீவாவில் இலங்கை அதிகாரிகள் திணறல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் பிரேரணை விவகாரத்தில் லத்தின் அமெரிக்க மற்றும் ஆபிரிக்க நாடுகள் பல, இந்தியாவின் வழியில் தமது முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளன. இதனால் இப்பிரேரணையை தோற்கடிப்பதற்கு போதிய வாக்குகளைப் பெற்றுக்கொள்வதில் இலங்கை தூதுக்குழுவினர் தடுமாறுவதாக தெரியவருகிறது. இலங்கைத் தமிழர்களுக்கு சமத்துவம், கௌரம், நீதி, சுயமரியாதை ஆகியவற்றின் அடிப்படையிலான எதிர்காலம் கிடைக்கவேண்டுமென்ற இந்தியாவின் நோக்கத்தை இப்பிரேரணை கொண்டிருந்தால் இப்பிரேணைக்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்கும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங்க கடந்த திங்கட்கிழமை அறிவித்…
-
- 8 replies
- 2.1k views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பதினைந்து நாடுகள் இலங்கைக்கு சார்பாக வாக்களித்தமை பெரும் திருப்தியளிக்கிறது என சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்வைத்த இலங்கை தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக இன்று 24 நாடுகளுக்கும் எதிராக 15 நாடுகளும் வாக்களித்தன. 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் 15 நாடுகள் இலங்கைக்கு சார்பாக பிரேரணையை எதிர்த்து வாக்களித்தமை பெரும் திருப்பதியளிக்கிறது என சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “அந்நாடுகள் மீது பல்வேறு வகையில் செலுத்தப்பட்ட கடும் அழுத்தங்களுக்கு மத்தியிலும் 15 …
-
- 10 replies
- 2.4k views
-
-
கண்ணாடி வீடுகளில் வசிப்போர் மற்றவர் மீது கல்லெறியும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என இலங்கை சார்பில் ஜெனிவா மனித உரிமை பேரவையில் கலந்துக் கொண்டுள்ள அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். மனித உரிமை பேரவையில், இலங்கை சம்பந்தமாக அமெரிக்கா கொண்டு வந்த யோசனைக்கு பதிலளித்து உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கை இந்த யோசனையை ஏற்றுக்கொள்ளாது எனவும் இது மனித உரிமை பேரவையின் கொள்கைகளுக்கு முரணானது எனவும் அமைச்சர் கூறியுள்ளார். மருத்துவர்கள் முதலில் தம்மை குணப்படுத்தி கொள்ள வேண்டும் என கூறி, அமைச்சர் தனது உரையை நிறைவு செய்தார். இதன் பின்னர் இலங்கைக்கு எதிரான யோசனை தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதுடன், 9 மேலதிக வாக்குகளினால் யோசனை நிறைவேற்றப்ப…
-
- 3 replies
- 1.7k views
-
-
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணையை இந்தியா ஆதரித்தது ஏன் என்பது தொடர்பாக இந்தியாவிலிருந்து வெளிவரும் ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளிவந்த செய்தியை ஈழதேசம் இணையத்திற்காக மொழி ஆக்கம் செய்தவர் மூர்த்திநாத். 1 ) மனித உரிமைகள் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பு தொடர்பில் ஸ்ரீலங்கா அரசு தொடர்ந்து பொய்களையே கூறி வருகிறது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்,இது தொடர்பில் சர்வதேச நாடுகளின் இறையான்மையினை மதித்து ஸ்ரீலங்கா அரசு செயல்பட்டு தனது சொந்த முயற்ச்சிகளை செயல்படுத்த வேண்டும். 2 )இந்தியா சிறிலங்காவின் LLRC அறிக்கையின் பரிந்துரைகளை வரவேற்றது,நாட்டில் இருக்கும் அனைத்து இன மற்றும் சமயங்களிடையே சமரசத்தையும் இணக்கப்பாட்டையும் உருவாக்கும் என்று நம்பினோம் உண்மையில் ஸ்ரீ லங்கா அரசு …
-
- 7 replies
- 1.5k views
-
-
அரசியல் தீர்வை இலங்கை அரசாங்கம் ஆர்வத்துடன் தலைமையேற்று முன்னெடுக்க வேண்டும் : இந்தியா இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்துள்ளது. இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களிப்பதற்கான காரணங்களை ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இந்தியப் பிரதிநிதி விளக்கியிருந்தார்:- இலங்கையின் படிப்பினைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு வழங்கிய பரிந்துரைகளை இந்தியா வரவேற்றிருந்தது. இலங்கையில் வாழும் அனைத்து இன மற்றும் மதக்குழுக்களுக்கும் மதிப்பளிக்கும் வகையிலான அரசியல் தீர்வு மூலமான நல்லிணக்கத்தை அந்நாட்டில் கொண்டுவருவதற்கு இந்த பரிந்துரைகள் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திதருவதாய் இந்தியா நம்புவதாகத் தெ…
-
- 11 replies
- 1.4k views
-
-
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம்: வாக்களித்த நாடுகளின் முழுப்பட்டியல் ஐக்கிய நாடுகள் மனித உரிமை குழுவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்த தீர்மானத்துக்கு 24 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளது. 15 நாடுகள் எதிராகவும், 8 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தும் இருந்தன. தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்: 01.இந்தியா 02.பெல்ஜியம் 03.பெனின் 04.கேமரூன் 05.சிலி 06.கோஸ்டாரிக்கா 07.செக் குடியரசு 08.கௌதமாலா 09.ஹங்கேரி 10.ஆஸ்திரேலியா 11.இத்தாலி 12.லிபியா 13.மொரிசியஸ் 14.மெக்சிகோ 15.நைஜீரியா 16.நார்வே 17.பெரு 18.போலந்து 19.மால்டோவா குடியரசு 20.ரோமானியா 21.ஸ்பெயின் 22.சுவிட்சர்லாந்து 23. அமெர…
-
- 7 replies
- 1.9k views
-
-
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டும் யாழ்ப்பாணத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகள் தொடர்பில் நீதி வழங்குமாறு வலியுறுத்தியும் அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. மனித உரிமைகள் இல்லம் மற்றும் தேவை நாடும் மகளிர் அமைப்பு ஆகிய இணைந்து இவ்வார்ப்பாட்டத்தினை ஒழுங்கு செய்திருந்தன. இவ்வார்ப்பாட்டம் இன்று காலை 8.30 மணியளவில் நல்லூரில் இருந்து ஆரம்பமாகி யாழ்.மாவட்ட செயலகத்தில் நிறைவு பெற்றது. யாழ்ப்பாணத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளைக் கண்டித்து, யாழ்.அரச அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் தலைமையில், கூட்டம் ஒன்றும் நடைபெற்றது. இதன்போது, பெண்கள் மீது வன்முறைகளிலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியு…
-
- 1 reply
- 824 views
-
-
விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாணத் தளபதி கேணல் ரமேஸ் படுகொலையின் புதிய ஆதாரத்தை The global mail வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்குப் பிராந்தியத் தளபதி விசாரணையின் பின் சிங்கள இனவெறி இராணுவத்தினரால் காட்டுமிராண்டித்தனமாகப் படுகொலைசெய்யப்பட்டதை Gordon weiss எழுதிய கட்டுரை புகைப்பட ஆதாரத்துடன் வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது. அக்கட்டுரையை வாசிக்க இங்கே சொடுக்கவும் http://www.pooraayam...1-12-26-05.html
-
- 11 replies
- 2.2k views
-
-
யாழ்.கோப்பாய் பகுதியில் கிணறொன்றிலிருந்து சிறீலங்கா இராணுவ சிப்பாய் ஒருவரின் சடலத்தை கோப்பாய் பொலிஸார் இன்று வியாழக்கிழமை மீட்டுள்ளனர். கண்டியைச் சேர்ந்த சமந்திர கெஷ்டா பிரதீப் ஜெயசேகர என்ற 21 வயது சிப்பாயின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. தற்போது, சடலம் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கடமையின் போது கிணற்றில் மீது ஏறி நின்ற இவர் தவறி வீழ்ந்துள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு படைகளின் யாழ்.கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். http://www.eeladhesa...lle-nachrichten
-
- 2 replies
- 877 views
-
-
ஜெனீவா தீர்மானம் இலங்கை அரசின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு புத்துயிரளிக்கும்: ஹிலாரி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இன்று மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் 27 வருட யுத்தத்திற்கு பின்னர் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு புத்துயிரளிக்கும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி ஹிலின்டன் தெரிவித்தார். இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை ஒன்பது மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி ஹிலின்டன் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையொன்றை கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையிலேயே மேற்கண்…
-
- 5 replies
- 957 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இன்று மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் 27 வருட யுத்தத்திற்கு பின்னர் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு புத்துயிரளிக்கும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி ஹிலின்டன் தெரிவித்தார். இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை ஒன்பது மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி ஹிலின்டன் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையொன்றை கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது, அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "நிரந்த …
-
- 0 replies
- 976 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவிபிள்ளை (நவநீதம்பிள்ளை) இலங்கைக்கு மேற்கொள்ள இருந்த பயணத்தை இரத்துச் செய்துவிட்டார் என்று அறிய வந்தது. அவரது இந்த முடிவு கொழும்பு ஆட்சியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழுவின் அறிக்கை, இறுதிப் போரின் போது நிகழ்ந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறத் தவறிவிட்டதன் காரணமாகவே நவநீதம்பிள்ளை தனது இலங்கைக்கான பயணத்தை ரத்துச் செய்துள்ளார் என்று ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்தன.ஜெனிவா மாநாடு நெருங்கிவரும் தறுவாயில், மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் எடுத்துள்ள இந்த அதிரடியான தீர்மானத்தால் கொழும்பு அதிர்ச்சியடைந்துள்ளது…
-
- 0 replies
- 1.8k views
-
-
-
- 0 replies
- 894 views
-
-
பழைய காயங்கள் மீது உப்பிடுதல் அல்லது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுதல்: ஓர் அறிக்கை [ வியாழக்கிழமை, 22 மார்ச் 2012, 08:10 GMT ] [ நித்தியபாரதி ] யுத்தத்தின் பின்னான சிறிலங்காவின் வடக்கு, கிழக்கு மற்றும் மலை நாட்டுப் பகுதிகளில் தமிழர்களுக்குச் சொந்தமான பிரதேசங்களில் திட்டமிட்ட ரீதியில் சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டு வருவதுடன், இந்நடவடிக்கையானது தற்போது அதிகரிக்கப்பட்டு, பரந்தளவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக 'சமூக வடிவமைப்பாளர்கள்' அமைப்பால் [The Social Architects - TSA]* சிறிலங்காவின் வடக்கு, கிழக்கு, மலைநாட்டுப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது ஆய்வின் பின் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'சமூக வடிவமைப்பாளர்கள்' அமைப்பால் [The Social…
-
- 0 replies
- 1.1k views
-
-
அமெரிக்கா முன்வைத்துள்ள இலங்கை தொடர்பான பிரேரணைக்கு ஐரோப்பிய ஒன்றியம் முழு ஆதரவை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை இலங்கை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் உரையாற்றிய பிரதிநிதி குறிப்பிட்டார். பான் கீ மூன் நியமித்த ஐநா நிபுணர் குழு இலங்கை குறித்து முழுமையான அறிக்கை வெளியிட்டதாகவும் இலங்கையில் நியமித்த கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முழுமையாக அறிக்கை வெளியிடவில்லை எனவும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் இருந்து வெளிநாடு சென்று ஐநாவுடன் இணைந்து செயற்படுபவர்கள் அச்சுறுத்தப்படுவதற்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம், அவ…
-
- 0 replies
- 1.8k views
-
-
ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை, தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் மாபெரும் இராஜதந்திரச் தோல்வியைச் சந்தித்துள்ளது. கடந்த 4 வாரங்களாக, உலகத் தமிழர்களின் எதிர்பார்புக்கு மட்டுமல்ல, இலங்கைத் தீவை மையப்படுத்திய உலக அரசியல் வெளியிலும், இப்பிரேரணை விவகாரம் முக்கியவிடயமாக மாறியிருந்தது. இந்நிலையில் இன்று ஐ.நா கூட்டத் தொடர் அமர்வில் கடும் வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் இந்தப் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அமெரிக்காவின் பிரேரணையினை 24 நாடுகள் ஆதரித்தும், 15 எதிர்த்தும் வாக்களித்துள்ளன.8 நாடுகள் வாக்கெடுப்ப்பில் பங்கெடுக்கவில்லை. அமெரிக்காவின் இந்தப் பிரேரணையினை தோற்கடிக்க சிறிலங்கா…
-
- 4 replies
- 1.9k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் அப்பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும், எவராவது பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுகின்ற பட்சத்தில் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று மிரட்டுகின்ற துண்டுப் பிரசுரங்கள் யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள் பலவற்றிலும் நேற்று ஒட்டப்பட்டு இருக்கின்றன. சேரன் படை என்கிற குழுவே இத்துண்டுப் பிரசுர அறிக்கையை வெளியிட்டு உள்ளது. யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்கள் கலாசார விழுமியங்களை பின்பற்றி நடக்க வேண்டும், பெண்கள் பாரம்பரிய உடைகளையே அணிய வேண்டும் என்பதோடு உடலை வெளியில் காட்டுகின்றபடியான உடுப்புக்களை அணிகின்றமை கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. http://www.eeladhesa...lle-nachrichten
-
- 12 replies
- 3.7k views
-
-
தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக தமிழீழ விடுதலைப் புலிகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்து உள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன். இவர் இது குறித்து முக்கியமாக தெரிவித்து இருப்பவை வருமாறு: புலிகளை தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகளாக ஏற்க முடியாது. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி இந்நிலைப்பாட்டில் இருக்கவில்லை. புலிகள் பயங்கரவாத அமைப்பு ஒன்றை போல செயல்பட்டனர். இலங்கைக்குள் தனி நாடு ஒன்றை நிறுவ முயன்றனர். 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்முறைகளை தொடர்ந்து இலங்கையில் இருந்து தப்பிச் சென்றவர்கள் புலிகளுக்கு நிதி வழங்கினர். இது சரியான செயல் ஆகாது. வன்முறைகளை கைவிடச் சொல்லி எழுத்துமூலம்கூட புலிகளிடம் கேட்டு இருந்தேன். பு…
-
- 44 replies
- 5.6k views
-