ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
பஸ் சாரதியாக இருந்து தமிழீழ புலிகளால் எம்.பியாக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கனகரத்தினமும் இன்று அதிகாலை ஜெனிவாவுக்கு புறப்பட்டு சென்றார். இவருடன் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சர் ஹிஸ்புல்லாவும் ஜெனிவா சென்றுள்ளார். அமைச்சர்களான ஒட்டுக்குழு டக்ளஸ், றிசாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் ஏற்கனவே ஜெனிவாவில் முகாமிட்டிருக்கும் நிலையில் இன்று இவர்களும் செல்கின்றனர். ஜெனீவாவில் நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக தாம் செல்வதாக கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.இறுதிப்போர் வரைக்கும் விடுதலைப்புலிகளுடன் இருந்த கனகரத்தினம் இப்போது சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் சேர்ந்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராசபக்சவி…
-
- 1 reply
- 1.3k views
-
-
சிறிலங்கா - சீனா உறவு: ஓர் இரகசியக் கதை [ சனிக்கிழமை, 25 பெப்ரவரி 2012, 09:24 GMT ] [ நித்தியபாரதி ] ராஜபக்ச பொது நிர்வாகத்திற்குத் தெரியப்படுத்தாமல், சிறிலங்கா கடற்படையின் கண்காணிப்பில் சீன நாட்டின் நிதி ஆதரவுடன் மாதகலில் இரகசியமாக திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு TruthDive இணையத்தில் வெளிவந்துள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அக்கட்டுரையின் விபரமாவது, தென்னாசியா மீதான சீனாவின் மூலோபாயத் திட்டமிடலில் சிறிலங்கா நான்காவது இடத்தில் உள்ளது. சிறிலங்காவின் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததிலிருந்து சிறிலங்காவில் ம…
-
- 3 replies
- 1.3k views
-
-
ஜெனிவா சென்ற இலங்கைக் குழுவுக்குள் பிளவு சர்வதேசத்தின் அழுத்தங்களுக்குப் பதிலடி கொடுப்போம் என ஜெனிவா விரைந்த அமைச்சர்கள், அதிகாரிகள் தற்போது தமக்குள்ளே ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக இரு குழுக்களாகப் பிரிந்து முட்டி மோதிக் கொள்கின்றனர் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அமைச்சர்களின் தராதரமற்ற இந்தச் செயலானது சர்வதேச மட்டத்தில் நாட்டுக்குப் பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது எனவும் ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரில் வெளிக்கிளம்புகின்ற இலங்கைக்கு எதிரான பிரேரணைக்குப் பிளவுபட்டுள்ள அமைச்சர்கள் குழுவால் பதில் கூற முடியுமா என ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிர…
-
- 2 replies
- 1.1k views
-
-
மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-02-25 09:04:24| யாழ்ப்பாணம்] மனித வாழ்வில் பணமும் பதவியுமே ‘கோடி’ பெறுமதியயன்று நினைப்பவர்கள் ஏராளம். இத் தகைய நினைப்புடையவர்கள் பதவிக்காகவும் பணத்துக்காகவும் எதையும் இழக்கத் தயங்க மாட்டார்கள். இவர்கள் தொடர்பில் விழிப்பாக இருக்காத விடத்து நிலைமை மிகவும் மோசமாக மாறி விடும். பதவியையும். பணத்தையும் உயர்வாக மதிக்கின்றவர்களிடம் பண்பை எதிர்பார்ப்பது முடியாத காரியம். அவர்கள் இலக்கை அடைவதற்காக காலிலும் விழுவார்கள். சாதித்துவிட்டால் காலை வாரியும் விடுவார்கள். இத்தகையவர்களுக்காக தமிழ் மூதாட்டி ஔவைப்பிராட்டி அருமையாக அறிவுரை கூறியுள்ளார். அன்புக்குரிய மாந்தர்களே! பணமும் பதவியுமே கோடி பெறுமதியயன்று நினைத்து…
-
- 0 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவின் தீர்மானம் தொடர்பாக தகுதி அடிப்படையில் நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்: இலங்கை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையியில் அமெரிக்காவினால் இலங்கை எதிராக அடுத்தமாதம் முன்வைக்கப்படவுள்ள தீர்மானம் தொடர்பாக அங்கத்துவ நாடுகள் தகுதி அடிப்படையில் தமது நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டுமென இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக, அணி சேரா இயக்கம், இஸ்லாமிய நாடுகள் அமைப்பு ஆகியவற்றைச் சார்ந்த நாடுகள் உட்பட 25 நாடுகளின் தூதுக்குழுவினருடன் இரு தரப்பு கலந்துரையாடல்களில் தனது தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவினர் ஈடுபட்டதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கூறினார். இந்நாடுகள் இவ்விடயத்தில் தீர்மானம் மேற்கொள்ளும்போது அவை வெவ்வேறு உலகளாவிய குழுக்களை சார்ந்…
-
- 0 replies
- 604 views
-
-
மனித உரிமை மேம்பாட்டு வெளிப்பாட்டை தாம் எதிர்வரும் ஒக்டோபர் மாதமே வெளியிட முடியும் இதனால் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணையை எதிர்வரும் ஒக்டோபர் வரையில் பிற்போடுமாறு கோரிக்கை விடுத்துள்ளதோடு இப் பிரேரணைகளுக்கு ஆதரவளிக்கவேண்டாம் எனவும் உறுப்பு நாடுகளிடம் இலங்கை கோரிக்கையினையும் விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அனைத்து நாடுகளுக்கும் வழங்கிவருகிறது. இதன்போது நாடுகளின் மனித உரிமை தொடர்பான மேம்பாடுகளும் அதன் நடைமுறைகளும் பற்றி ஒவ்வொரு நாடுகளும் அறிக்கைகளை வெளியிடுகின்றன. எனவே, இவ்வாறான மனித உரிமை மேம்பாட்டு வெளிப்பாட்டை தாம் எதிர்வரும் ஒக்டோபர் மாதமே வெளியிட முடியும் என்று இலங்கையின…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தும்நடவடிக்கைகளை பிரித்தானியா கைவிட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரியுள்ளது. பிரித்தானியா, இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்துமதிப்பீடு செய்ய வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது. பிரித்தானியாவிருந்து நாடு கடத்தப்பட்ட தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் சிலர் சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டதாக தமது அமைப்பு நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. அண்மைக்காலமாக தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்களை பிரித்தானியா, இலங்கைக்கு திருப்பி அனுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் 28ம் திகதி நூறு புகலிடக் கோரிக்கையாளர்களை பிரித்தானியா தனி விம…
-
- 0 replies
- 407 views
-
-
பந்து இப்போது இந்தியாவிடம் "தி வீக்என்ட் லீடர்' என்ற ஆங்கில ஊடகத்தில் வெளியான கட்டுரையின் தமிழ் மொழியாக்கம் இது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 19ஆவது கூட்டத் தொடர் அடுத்த வாரம் ஆரம்பமாகிறது. இதில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற அமெரிக்கா தலைமையில் மேற்குலகு முயற்சிக்கிறது, இந்திய அரசு இந்த விடயத்தில் தீர்மானத்துக்குச் சாதகமான நிலைப்பாட்டையே எடுக்கும் என அவதானிகள் கருதுகின்றனர். மே 2009 இல் இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 11 ஆவது கூட்டத் தொடரிலும் இலங்கைக்கு எதிராக 17 நாடுகள் பிரேரணை ஒன்றை முன்வைத்தன. அதனை எதிர்ப்பதில் இந்தியா விடாப்பிடியாக நின்றது. அதனால் அந்தப் பிரேரணை பின்னர் இலங்கைக்கு ஆதரவு தெரிவி…
-
- 20 replies
- 1.6k views
-
-
மக்களை போராட அழைக்கும் இலங்கை அரசு இலங்கைக்கு எதிராக மேற்கத்தைய நாடுகள் சதி செய்வதாக குற்றஞ்சாட்டி அவற்றுக்கு எதிராக இலங்கை மக்கள் போராட்டங்களை நடத்த வேண்டும் என்று இலங்கை அரசாங்க அமைச்சர் ஒருவர் அழைப்புவிடுத்துள்ளார். இலங்கை அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கையின் வீடமைப்புத்துறை அமைச்சரான விமல் வீரவன்ஸ அவர்களே இந்த அழைப்பை விடுத்துள்ளார். விடுதலைப்புலிகளை இலங்கை இராணுவம் ஒழித்ததை விரும்பாத மேற்கத்தைய நாடுகள் அதற்காக இலங்கை ஜானாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், இராணுவத்தினரையும் தண்டிக்க விரும்புவதாக அவர் கூறியுள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்பில் இலங்கை அமைச்சரவை பேச்சாளரான லக்ஷ்மன் யாப்ப அபேவ…
-
- 5 replies
- 1.2k views
-
-
இலங்கை புத்தளம், தில்லையடி யில் ஆர்.பி.ஜி. ரக ஆயுதங்களின் பாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. புத்தளம், தில்லையடி பிரதேசத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினையடுத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்.பி.ஜி ரக ஆயுதங்களின் பாகங்கள் கைப்பற்றப் பட்டுள்ளன. இன்று பிற்பகல் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தை அடுத்து அங்கு பலத்த விசாரணைகளில் ஈடுபட்ட பொலிஸார், மேற்படி வெடிப்புச் சம்பவம் அருகிலுள்ள வீடொன்றிலிருந்து ஏவப்பட்ட வெடிகுண்டு வந்து விழுந்ததாலேயே ஏற்பட்டுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். ஆர்.பி.ஜி. ரக வெடி பொருளின் பாகமொன்றினை சூடாக்கும் போதே அவ்வெடிபொருள் அங்கிருந்து சுமார் 100 மீறறர் தூரம் வரையுள்ள வீட்டில் சென்று வீழ்ந்து வெடி…
-
- 5 replies
- 1.1k views
-
-
இலங்கைக்கு வலுக்கிறது எதிர்ப்பு பிரேரணையின் சாராம்சமும் வெளியானது ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஜெனிவா அமர்வில், இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு மேலும் ஆதரவு வலுத்து வருகிறது என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் இரு ஆபிரிக்க நாடுகள் நேற்றுப் பூரண ஆதரவை வெளிப்படுத்தி இருக்கின்றன. அந்த நாடுகளில் ஒன்றே இலங்கைக்கு எதிரான பிரேரணையை முன்மொழியும் என்று நம்பப்படுகிறது. இந்தப் பிரேரணையை அமெரிக்கா ஆதரிக்கப் போவதாக வெளிப்படையாகவே அறிவித்துள்ள நிலையில் மேலும் சில நாடுகள் ஆதரிக்க முன்வந்திருக்கின்றன என்று நேற்று மாலை வொஷிங்டனில் தகவல்கள் வெளியாகி இருந்தன. இதேவேளை, இந்தப் பிரேரணையின் சா…
-
- 8 replies
- 1.6k views
-
-
பெய்ஜிங்கில் நடைபெறும் அனைத்துலக கடற்படை பாதுகாப்பு கருத்தரங்கில் பங்கேற்க சீனா சென்றுள்ள சிறிலங்கா கடற்படையின் கிழக்குப் பிராந்தியத் தளபதி கொலின்பேர்க்கையை, சீன இராணுவத்தின் பிரதித் தலைமை அதிகாரி ஜெனரல் மா சியாவோ தியன் சந்தித்துப் பேசியுள்ளார். நேற்று முன்தினம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட சீன இராணுவத்தின் பிரதித் தலைமை அதிகாரி ஜெனரல் மா சியாவோ தியன், “சீனாவும் சிறிலங்காவும் ஆழமான மரபுவழி நட்புறவைக் கொண்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையில் 55 ஆண்டுகளுக்கு முன்னர் இராஜதந்திரத் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டன. இந்த இருதரப்பு உறவுகள் ஆரோக்கியமானதும் சுமுகமானதுமான நிலையில் உள்ளன. இருநாட்டு இராணுவங்களும…
-
- 7 replies
- 815 views
-
-
ஐக்கிய நாடுகள் அமைதி காப்பு படையின் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் தமது பங்களிப்பு தடைசெய்யப்பட்டதாக வெளியான தகவலை ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா மறுத்துள்ளார். அவ்வாறான நடவடிக்கைகள் எவையும் நேற்றையதினம் இடம்பெற்ற முதல் கூட்டத்தில் இடம்பெறவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்றையதினத்திலும் தான் கூட்டத்தில் பங்கேற்றதாகவும் இன்றும் நாளையும் அந்த கூட்டத்தில் தான் பங்கேற்கவுள்ளதாகவும் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இருந்து தனது பதவி நீக்கப்பட்டதாக விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான செய்தி நிறுவனங்களே செய்தி வெளியிட்டதாகவும் சவேந்திர சில்வா குற்றம் சுமத்தியுள்ளார். http://www.seithy.co...&…
-
- 11 replies
- 1.3k views
-
-
இலங்கையில் நல்லிணக்கம், ஜனநாயகம் உறுதிப்படுத்தப்படுமாயின், வெளித்தரப்பினரின் அழுத்தங்கள் குறையலாம்! - The Economist இலங்கையில் உண்மையான நல்லிணக்கத்தையும், ஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்துவதற்குமான நடவடிக்கைகளை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச துரிதப்படுத்தும் பட்சத்தில், போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் வெளித்தரப்பினர் தமது அழுத்தங்களைக் குறைக்கலாம் என பிரித்தானியாவை தளமாகக் கொண்டு வெளிவரும் The Economist எனும் சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுதல் மற்றும் நல்லிணக்கம் ஆகிய விவகாரங…
-
- 2 replies
- 848 views
-
-
யார் என்ன சொன்னாலும் பிரபாகரனின் மரணத்தில் இந்தியாவின் பங்கு அதிகம் இருக்கிறது. அரசாங்கம் தாங்கள் கொன்றதாகச் சொன்னாலும் 75 வீதம் வெளிநாடுகளின் பங்கு இந்த மரணத்திலும் அழிவிலும் இருந்தது என்பதே உண்மையான விடயமாகும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். துறைநீலாவணை சித்திவிநாயகர் வித்தியாலயத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். தமிழர்கள் விட்ட தவறுகளைப் பற்றிச் சிந்திக்காது நாம் அரசியல் செய்ய முடியாது. அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாரில்லை. பிரபாகரனும் அரசியல் அறிவில்லாதவராகவே இருந்தார். இல்லையானால் இந்தியா இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருப்பார் எனவும் கிழக்கு மாகாண…
-
- 5 replies
- 1.1k views
-
-
குடும்ப வறுமை காரணமாக இளம்பெண் ஒருவரும் அவரது பெண் குழந்தையும் கிணற்றில் வீழ்ந்து மரணித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று வரணிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வடவரணிப் பகுதியினைச் சேர்ந்த சர்மிலா சத்தியநாதன் (வயது 21) அவரது பெண் பிள்ளையான திலக்ஷிகா (வயது 6) என்பவர்களே மேற்படிச் சம்பவத்தின் போது சடலமாக மீட்கப்பட்டவர்கள் ஆவர். மேற்படிப் பெண்ணின் கணவர் கடந்த 2008 ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய நெருக்கடி நிலையின் போது காணாமற் போயுள்ளார். இதனையடுத்து அப் பெண்ணும் அவருடைய மகளும் உறவினர் ஒருவருடைய வீட்டில் வசித்து வந்துள்ளார். இன் நிலையிலேயே அவர்கள் நேற்று காலை கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இச் சம்பவமானது அப் பகுதிய மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள…
-
- 7 replies
- 949 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராகநிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்திற்கு நோர்வே ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற பொதுமக்கள் இழப்புக்கள்குறித்து சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென நோர்வே மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க தலைமையிலான சில நாடுகள் எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முனைப்பு காட்டிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. தமது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதனை அறிந்துகொள்வதற்காக பலர் காத்திருப்பதாக நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் யுத்தத்தை வென்றுள்ளது எனவும், …
-
- 3 replies
- 705 views
-
-
வடக்கிற்கு வந்த உருசிய, ஈரானிய, பங்களதேஸ் இராணுவ அதிகாரிகள் ஐ.நா. மனித உரிமை தொடர் தொடங்கவுள்ள இந்த வேளையில், இனவழிப்பை செய்யும் சிங்கள இராணுவத்திற்கு ஆதரவாக உருசிய, ஈரானிய, பங்களதேஸ் இராணுவ அதிகாரிகள் வடக்கிற்கு வருகை தந்தனர். - ஊர்காவற்துறை காண்பிக்கப்பட்டது (இந்தியா?) - இவர்களுக்கு மீள வாழ்வளிக்கப்படும் விடுதலைப்புலிகள் காண்பிக்கப்பட்டனர் - நல்லூர் முருகன் கோயில் காண்பிக்கப்பட்டது - நாக விகாரை காண்பிக்கப்பட்டது ஆனால் மக்களுடன் எந்த சந்திப்பும் அனுமதிக்கப்படவில்லை. http://tamilnet.com/...=79&artid=34914
-
- 8 replies
- 748 views
-
-
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை பரிந்துரைகளைமுழுமையாக அமுல்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம்வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராகதீர்மனாம் நிறைவேற்றப்பட உள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் இந்தக் கோரிக்கையைமுன்வைத்துள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கைப் பரிந்துரைகள் உரியமுறையில் அமுல்படுத்தப்பட்டால், தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களில்பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கான பிரதான ஏதுவாக உண்மையைக் கண்டறியும்ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தை ஏற்றுக் கொள்வதாக ஒன்றியம்தெரி…
-
- 1 reply
- 529 views
-
-
இறுதிப் போரில் 9000 பேர் பலி - இலங்கை அரச தகவல் இலங்கையின் அரசாங்க புள்ளி விபரங்களின் அடிப்படையில், அங்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் நடந்த சர்ச்சைக்குரிய போரின் இறுதிக்கட்டத்தில் வடக்கில் போர்ப் பகுதியில் 9000 மக்கள் இறந்ததாக பிபிசிக்கு அறியகிடைத்திருக்கிறது. இவற்றில் 7000 இற்கும் அதிகமான மரணங்கள் நேரடியாக இராணுவ மோதல்களுடன் தொடர்புபட்டவையாகும். இந்த அளவுக்கு அங்கு அழிவு ஏற்பட்டிருக்கிறது என்பதை அறியத்தரும் முதலாவது அரசாங்க புள்ளிவிபரம் இதுவாகும். இந்த விவகாரம் தொடர்பாக பல வெளிநாட்டு விமர்சகர்கள் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்த எண்ணிக்கை இதனை விட பல மடங்கு அதிகம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். கடந்த சில நாட்களில் அரசாங்கம் தனது மக்க…
-
- 1 reply
- 793 views
-
-
மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அரசாங்கம் முழுமையான ஆதரவு ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அமைதிகாக்கும் படை ஆலோசனைக் குழுக் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிட பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அரசாங்கம் முழுமையான ஆதரவளிப்பதாக நாடாளுமன்றத்தில் அரசாங்கம் இன்று அறிவித்தது. ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய வாய்மூல கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் வெளிவிவகார பிரதியமைச்சர் நியோமால் பெரேரா இதைத் தெரிவித்தார். யுத்தத்தில் வெற்றிபெறுவதற்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா பாரிய பங்காற்றியவர் என்பதை நாம் அறிவோம். அவருக்கு ஏற்பட்டுள்ள நிலை குறித்து நாம் கவலையடைகிறோம் எனக்கூறிய தயாசிறி ஜயசேகர எம்.பி,…
-
- 1 reply
- 867 views
-
-
இராணுவத்தினரால் வட பகுதியைக் கட்டியெழுப்ப முடியும்: கோட்டாபய வடபகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகளுக்கு இராணுவத்தினரின் மனிதவளம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது எனவும் இராணுவத்தினரால் வடபகுதியைக் கட்டியெழுப்ப முடியும் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் இன்று தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை யாழ். தெல்லிப்பளை, மகாஜனா கல்லூரிக்கான 3 மாடிகளைக் கொண்ட கட்டடத் தொகுதியை பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ திரைநீக்கம் செய்து வைத்து உரையாற்றும் போதே இவ்விதம் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், மில்லியன் ரூபாவிற்கு மேலதிகமாக செலவிடப்படவிருந்த தெல்லிப்பளை மகாஜனா கல்லூரிக்கான கட்டடத் தொகுதி இராணுவத்தினர…
-
- 2 replies
- 711 views
-
-
கைதடி வடக்கிலுள்ள காணியொன்றில் புதிதாக இராணுவ முகாம் அமைக்கப்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஏறக்குறைய 32 பரப்புக் காணியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்த இராணுவ முகாம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது முழு வேகத்துடன் இப் பணிகள் இடம்பெற்று வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த முகாம் அமைப்பதற்காக பிரதேசத்திலுள்ள தனியார் காணிகளில் படையினர் பல பனை மரங்களைத் தறித்துள்ளனர். நாம் ஒரு பனை மரம் தறிப்பதென்றாலும் அனுமதிகளைப் பெற வேண்டும். ஆனால், எவரின் அனுமதியின்றியும் படையினர் பெருந்தொகை பனை மரங்களைத் தறித்து வருகின்றனர் என மக்கள் கூறியுள்ளனர். சீமெந்துக் கற்களைப் பயன்படுத்தி நிலையானதாக அமைக்கப்படுகின்ற ம…
-
- 0 replies
- 536 views
-
-
பாணின் விலையை அதிகரிப்பது குறித்து இன்று (17) மாலை இறுதி முடிவு எடுக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையையும் அதிகரிக்க நேர்ந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயரத்ன தெரிவித்துள்ளார். பேக்கரி உற்பத்திகள் பலவற்றுக்கு எரிபொருள் அதிகம் செலவிடப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் இன்று (17) மாலை கூடவுள்ள பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் விலை உயர்வு குறித்து இறுதி முடிவு எடுப்பர் என என்.கே.ஜயரத்ன குறிப்பிட்டார். http://www.saritham.com/?p=50891
-
- 7 replies
- 1.1k views
-
-
சுதந்திரமாக கருத்துக்களை தெரிவிப்பதற்கு அனைத்து பிரஜைகளுக்கும் உள்ள உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறு வெள்ளை மாளிகை இலங்கை அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளது. இலங்கையில் இறைமை, நீதி, சிறந்த நிர்வாகம் மற்றும் ஜனநாயகம் என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கு மாறும் வெள்ளைமாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவை விடுவிக்குமாறு கோரி, முன்வைக்கப்பட்ட மனுவுக்கு பதிலளிக்குமாறு வெள்ளை மாளிகை இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்ட மனித உரிமைகள் அறிக்கையில், சரத் பொன்சேக்கா ஒரு அரசியல் சிறைக்கைதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் அறிக்கை…
-
- 0 replies
- 644 views
-