Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச அழுத்தத்துடன் நல்லிணக்கம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கும் அதிக ஆதரவு வழங்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஐரோப்பிய நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்றையதினம் ஐரோப்பிய நாடாளுமன்றில் இடம்பெற்றது. இதன்போதே அவர்கள் இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர். சிறிலங்காவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவலாக உள்ளதாக ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் வன் ஓடன் இதன்போது தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள ந…

  2. வடஇலங்கையில் கடத்தப்படும் சிறுவர்களின் உடல் பாகங்கள் இந்தியாவுக்கு விற்பனை! Published on January 28, 2012-8:25 am · இலங்கையின் வடபகுதியில் கடத்தப்படும் சிறுவர், சிறுமிகளின் உடல்பாகங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், உடல்பாகங்களை வாங்கும் நாடுகளில் இந்தியாவே முன்னணியில் இருப்பதாகவும் கொழும்பிலிருந்து வெளியாகும் சிங்களப்பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. உலகிலேயே சிறுவர்களின் உடல் பாகங்களை விற்பனை செய்யும் முக்கிய நாடுகளில் இலங்கை முன்னணி வகிப்பதாகவும், சில ஆண்டுகளில் ஆயிரக் கணக்கான சிறுவர் சிறுமியர் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள், உயர் தொழில்களில் ஈட…

    • 0 replies
    • 1.1k views
  3. கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கான அவசர உதவிகள் வழங்கப்பட்டது. 24.01.2012 கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை காரணமாக புதிய மகசீன் சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் கழுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கான எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலமையில்அவதிப்படுகிற கைதிகளுக்கான முதற்கட்ட அவசர உதவியாக சாரம், பற்பசை, பற்தூரிகை சவர்க்காரம் , வசவரக்கத்தி , பிஸ்கட் பக்கற் போன்றவை வழங்கப்பட்டுள்ளது. இப்பொருட்களை த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன் , விநாயகமூர்த்தி ஆகியோர் நேரில் சென்று வழங்கியுள்ளனர். கைதிகளை நேரில் சென்று பார்வையிட்ட செல்வம் அடைக்கலநாதன் அவர்கள…

    • 3 replies
    • 1k views
  4. பஸ் நடத்துனருக்கும் சிவில் உடையில் பயணித்த படையினருக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் பயணிகளும் படையினரால் தாக்கப்பட்டனர். இதையடுத்து பஸ் சாரதி, நடத்துனர், படையினர் நால்வர் என 6 பேரைக் கிளிநொச்சிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். பஸ்ஸில் பயணித்த பயணிகள் வீதியில் இறக்கப்பட்டு பஸ்ஸூம் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப் பட்டது.இந்தச் சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் கிளி நொச்சி பரந்தன் சந்தியில் நடைபெற்றது.வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி தனியார் பஸ் வந்துகொண்டிருந்தது. கிளிநொச்சி பரந்தன் பகுதியில் நகரப் போக்கு வரத்துப் பொலிஸாரால் பஸ் மறிக்கப்பட்டது. மிதி பலகையில் பயணிகளை ஏற்றியமைக்காக பஸ் நடத்துனரிடம் குற்றப் பணம் அறவிடப்பட்டது…

  5. இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் சர்வதேச அனுசரணையை தான் வரவேற்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தேற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க பிரதி உதவி ராஜாங்கச் செயலாளரான கலாநிதி அலிஸா அய்ரெஸை சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.ஸ்ரீதரன் ஆகியோர், இவ்விடயத்தில் அமெரிக்கா அனுசரணையாளர் பாத்திரமொன்றை வகிக்க வேண்டுமென கோரினர். இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோது - இத்தகைய சர்வதேச அனுசரணை சாத்தியமானால் அதை தமது கட்சி வரவேற்கும் என்றார். இத்தக…

  6. ஆண்டுதோறும் சிறப்படைந்து வரும் கனடியத் தமிழர் பேரவையின் பொங்கல் இரா விருந்து இவ்வாண்டும் சிறப்பாக நடைபெற்றது. இசுகாபரோவில் அமைந்துள்ள கிரான்ட் பாக்கசு விருந்து மண்டபம் சனவரி 21, 2011 சனிக்கிழமை மாலை 3 மணியளவிலேயே களை கட்டத் தொடங்கிவிட்டது. கனடியத் தமிழர் பேரவையின் தொண்டர் பலர் விழா ஏற்பாடுகளைக் கவனித்திட அப்போதே கூடியிருந்தனர். 5:30 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தும் மாலை 5:00 மணியளவிலேயே மண்டபம் நிறைந்து காணப்பட்டது. இன்முகத்தோடு ஒருவரையொருவர் வாழ்த்தி விழாவுக்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான பிற கனடியக் குமுகத்தவர்களோடு முதன்மை விருந்தினரும் மதிப்பிற்குரிய விருந்தினரும் காணப்பட்டனர். மதிப்புக்குரிய விருந்தினராக ஒன்ராறியோ மாகாண முதல்வ…

  7. இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரச பயங்கரவாத்தின் போருக்கு சர்வதேசத்தின் உதவியை நாடிய சிங்கள தேசத்துக்கு இலங்கை இனநெருக்கடி விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் தலையீடுகள் என்பது கசப்பானதொன்றாகவே இருந்து வருகின்றது. எதிர்வரும் பெப்பரவரி 27ம் திகதி ஜெனீவா � ஐ.நா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடரில் சிறிலங்கா தொடர்பில் கடும் நிலை தோன்றலாம்என்ற அச்சம் சிங்கள தேசத்தை ஆட்டிப்படைத்து வரும் நிலையில் . சர்வதேசத்தின் சமாதானத்திற்கும் � பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் தராதபோது, அங்கத்துவ நாடுகளின் உள்நாட்டு விடயங்களில் தலையிடாத கொள்கையினை மற்றைய அங்கத்துவ நாடுகள் பேண வேண்டும். குறிப்பிட்ட சந்தர்பங்களில் எல்லா நாடுகளின் இணக்கத்துடன் தலையீடு நிகழலாம். சர்…

  8. இலங்கை யாத்திரிகர்கள் சென்னையிலிருந்து இந்தியாவிலுள்ள சகல பௌத்த தலங்களுக்கும் பயணம் செய்ய வசதியாகவுள்ள ‘தம்ப திவ வந்தன’ என்னும் விசேட ரயில் சேவையை இந்திய ரயில்வே ஆரம்பிக்கவுள்ளதாகவும் இந்த ரயில் சேவை அடுத்த மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக்.கே.காந்தா தெரிவித்துள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான இந்தியா ஹவுஸில் நடைபெற்ற இந்தியாவின் 63ஆவது குடியரசுதின நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். அரசியல் பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் ஊடகத்துறையைச் சார்ந்தவர்களுக்கு இந்திய உயர்ஸ்தானிகரின் வாசஸ்தலத்தில் குடியரசு தினத்தையொட்டி விசேட விருந்துபசாரம் வைபவம் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இந்ந…

  9. பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அன்றையதினம் காலை சாவகச்சேரி செல்லும் அவர் சாவகச்சேரி வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள விடுதிக் கட்டிடத்தொகுதியைத் திறந்துவைக்கவுள்ளார். அதன்பின்னர் அவர் குடாநாட்டில் பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாசி 4 ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறும் சுகந்திரதின நிகழ்வில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி மாசி 6 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சுகந்திரதினத்தை ஒட்டிய சிறப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்வதோடு அன்றையதினம் யாழ்ப்பாணத்தில் அரசியல் தீர்வுத்திட்டம் குறித்து யாழ்ப்பாணத்தில் முக்கியத்துவம்வாய்ந்த உரைஒன்றினை நிகழ்த்தக்கூடும் எனவும…

  10. கொழும்பு சிறைச்சாலை கைதிகளுக்கு 'உலக நண்பர்களுக்கான தேவை' எனும் அமைப்பு உதவி கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளுக்கு தேவையான அடிப்படை உதவிகளை வழங்க 'உலக நண்பர்களுக்கான தேவை' எனும் அமைப்பு முன் வந்துள்ளதாக அதன் உப செயலாளர் க.பவமொழிபவன் தெரிவித்தார். இந்த நிலையில் கொழும்பு சிறைச்சாலைகளில் உள்ள 200 கைதிகளுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோரிடம் நேற்று புதன்கிழமை மாலை உலக நண்பர்களுக்கான தேவை எனும் அமைப்பின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் ஜெ.கிலேற்றன் மற்றும் உப செயலாளர் க.பவமொழிபவன் ஆகியோர் கையளித்தனர். குறித்த பொரு…

  11. லண்டனுக்கு வருகை தந்திருந்த கனேடிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜோன் பெயிர்ட் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர். முடிக்குரிய பொதுநலவாய சங்கத்தின் ஏற்பாட்டில் 23-01-2012 அன்று இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பிலான கருத்தரங்கொன்றியே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. குறித்த இந்த மாநாட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர், முதியோர் விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. ஈழத்தமிழ் மக்களின் நியாயமான உரிமைப் போராட்டத்தை முன்னிறுத்தி இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரசாங்கங்களது அடக்குமுறைகள் குறித்து க…

  12. இலங்கை ரூபாயின் பெறுமதியை குறைக்குமாறு உலக நாணய நிதியம் வற்புறுத்தலை சிறிலங்கா அரசாங்கம் ஏற்க மறுத்துள்ள நிலையில் இரு தரப்புக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிறிலங்காவுக்கு செல்லவுள்ள உலக நாயண நிதியப் பிரதிநிதிகள் குழு இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளை நேரில் ஆராய்ந்த பின்னரே மீண்டும் கடன் வழங்குவது பற்றி தீர்மானிக்கப்படும் என தெரிவித்துள்ளது. http://naathamnews.com/2012/01/27/imf-sri-lank/

  13. கண்டி உதவி இந்தியத் தூதுவராயலயத்தின் ஏற்பாட்டில் 63 ஆவது இந்தியாவின் குடியரசு தினத்தை முன்னிட்டு விருந்துபசார வைபவம் கண்டி உதவி இந்தியத் தூதுவராயலயத்தின் தூதுவர் ஏ. நடராசன் தலைமையில் இன்று மாலை கண்டி நட்சத்திர ஹோட்டல் ஏல்ஸ் ரி.ஏஜன்சியில் நடைபெற்றது. அந்நிகழ்வில் மத்திய மாகாண ஆளநர் டிகிரி கொப்பேகெடுவ மற்றும் மத்திய மாகாண முதல் அமைச்சர் சரத் ஏக்கநாயக, கண்டி மாநகர முதல்வர் பௌத்த சமயத் தலைவர்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கலாசார நடன நிகழ்வூகள் என்பன நடைபெற்றன. http://kath…

  14. சிறைச்சாலையில் பற்றி எரிந்துகொண்டிருக்கும் தீயிணை அணைப்பதற்கு தீயனைப்பு படையினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள பதட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலீஸ் குழுவொன்றும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் பொலீஸ் ஊடகப்பேச்சாளர் அஜித்ரோகன தெரிவித்தார். இதனிடையே சிறைச்சாலையில் உள்ள தமிழ் கைதிகளை தம்முடன் ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு சிங்கள கைதிகள் அச்சுறுத்துவதாகவும் இதனால் இவர்களின் பாதுகாப்பு குறித்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் தொடர்பு கொண்டு பேசி தமிழ் கைதிகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். …

    • 7 replies
    • 1.9k views
  15. லண்டனுக்கு வருகை தந்திருந்த கனேடிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜோன் பெயிர்ட் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர். முடிக்குரிய பொதுநலவாய சங்கத்தின் ஏற்பாட்டில் 23-01-2012 அன்று இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பிலான கருத்தரங்கொன்றியே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. குறித்த இந்த மாநாட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர், முதியோர் விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. http://naathamnews.com/2012/01/27/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%…

  16. தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா படைகளினது போரின் போது பல்வேறு போர்குற்றங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய நிலையில் உள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை ஐ.நாவின் அமைப்படையினரின் செயற்பாடுகளுக்கான ஆலோசனைக்குவுக்கு ஐ.நா பொதுச்செயலாளர் பான கீ முன் அவர்கள் தேர்வு செய்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் டெய்லி மிறர் செய்தி வெளியிட்டுள்ளது. http://naathamnews.com/2012/01/27/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/

  17. நியுயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தின் கடிதங்கள் மற்றும் ஆவணங்கள் பிரிவிலிருந்து கொக்கைன் எனப்படும் ஒரு தொகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ இலட்சினை பொறிக்கப்பட்ட பை ஒன்றிலிருந்து 16 கிலோகிராம் கொக்கைன் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தப் பையில் பெயர் விபரங்கள் பொறிக்கப்படாதபோதிலும் மெக்சிக்கோவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இருப்பினும் இந்தப் பை தவறுதாலாக ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. http://www.eeladhesa...ndex.php?option

  18. இலங்கை விவகாரத்தில் மற்றயை நாடுகள் அனைத்திற்கும் முன்மாதிரியாக நடந்த கனடியப் பிரதமருக்கும், வெளிவிவகார அமைச்சருக்கும் கனடியத் தமிழர்கள் சார்பிலான நன்றியறிதலை இந்த வார ஆரம்பத்தில் இடம்பெற்ற பொங்கல்விழாவில் வைத்துத் கனடியத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் உமாசுதன் தெரிவித்தார். மேற்படி விழாவில் கலந்து கொண்ட கண்சவேட்டிவ் பாராளுமன்ற உறுப்பினர்களின் மூலமாகவும் இச் செய்தி நேரடியாகவே கனடியத் தமிழ்க் காங்கிரஸால் தெரிவிக்கப்பட்டதோடு இவ் உறவைப் பலப்படுத்துமுகமான அமைச்சரவை சகாக்களுடனான சந்திப்புக்கான அழைப்பை தமிழ்க்காங்கிரஸ் கடித மூலம் விடுத்துள்ளதாகத் தெரியவருகிறது. கனடியப் பிரதமரின் தலைமைத்துவப் பண்பை வெளிப்படுத்திய சிறீலங்கா மீதான கண்டன நடவடிக்கையைச் சுட்டிக் காட…

    • 2 replies
    • 583 views
  19. 'சிங்கக் குட்டிகள்', 'அம்பாந்தோட்டைப் பூனைகள்': கோத்தபாய பயன்படுத்திய கொலைகாரக் குழுக்கள்! - விக்கிலீக்ஸ் தகவல்!! இலங்கையில் நீதிக்கும், சட்டத்திற்கும் புறம்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சிறிலங்கா அரசாங்கம் 'சிங்கக் குட்டிகள்' என அழைக்கப்படும் குழுவொன்றைப் பயன்படுத்தியமை தொடர்பில் விக்கிலீக்ஸ் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதரகம் அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பிய இரகசிய தகவல் குறிப்பை மேற்கோள் காட்டியே விக்கிலீக்ஸ் இத்தகவலை வெளியிட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவராக அப்போது பணியாற்றிய ரொபேர்ட் ஓ பிளேக் சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், அப்போது ஆள…

    • 0 replies
    • 701 views
  20. இலங்கையில் அதிகரிக்கும் வர்த்தகப் பற்றாக்குறை வளர்ச்சியும் உறுதிப்பாடும்- இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வாசகம் இலங்கையில் இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் உள்ள இடைவெளியான வர்த்தகப் பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமாகவுள்ளது என்று அந்நாட்டின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது 2011 ஆம் ஆண்டு இலங்கையின் வர்த்தகப் பற்றாக்குறை 238 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மத்திய வங்கியின் அறிக்கை கூறுகிறது. இலங்கையின் பொருளாதாரத்தை பொறுத்தவரையில் இது ஒரு அபாயகரமான நிலையையே காட்டுகிறது என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்தப் பற்றாக்குறை குறுகிய காலத்தில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிப்பது ஆரோக்கியமான பொருளாதார ந…

    • 1 reply
    • 1.1k views
  21. தமிழுக்குத் துரோகம் இழைத்துவிட்டோம்!- அமைச்சர் டலஸ்! சிங்கள மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தமிழ்மொழிக்குத் துரோகம் இழைத்து விட்டோம். இவ்வரலாற்று தவறை நிகழ்காலத்திலும் செய்யக்கூடாது என்று அமைச்சர் டலஸ் அழகபெரும கூறினார். இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் இலங்கையில் ஏனைய சிறுபான்மை இன மொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதுமட்டுமன்றி சர்வதேச மொழிகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப உலகத்துடன் ஒன்றித்துப் பய…

  22. 13ஆவது அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்படாத செனட் சபை தேவையில்லை !!-சுரேஸ் பிரேமசந்திரன் . ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் 13ஆம் அரசியல் அமைப்புக்கு அப்பால் என்பது செனட் சபையையே குறிப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, ஐக்கியதேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லச்மன் கிரியெல்ல இந்த 13க்கு அப்பால் என்றால் என்ன? அரசாங்கம், 13வது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்த தயாராக உள்ளதா என்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், மாகாணங்களுக்கு காணி அதிகாரங்களை பகிர்வதில் பிரச்சினை இல்லை. எனினு…

  23. இவ்வாறு திறமைவாய்ந்த மாணவியை நான் முன்னர் ஒருபோதும் சந்தித்தது கிடையாது என்று ஆச்சரியப்படுத்திய யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவியின் முழுமையான காணொளி நான் யாழ்ப்பாணத்துக்கு சென்று இந்துக் கல்லூரி மாணவர்களை சந்தித்து உரையாடிய போது மாணவி ஒருவர் பொறுப்புள்ள பிரஜையாக திகழ நான் என்ன செய்யவேண்டும் என என்னிடம் கேள்வியெழுப்பினார். அவ்வாறு திறமைவாய்ந்த மாணவியை நான் முன்னர் ஒருபோதும் சந்தித்தது கிடையாது என்று இந்திய முன்னாள் ஜனாதிபதி டாக்டர். அப்துல் கலாம் தெரிவித்தார். அம்மாணவி தொடுத்த வினாவிற்கு பதிலளித்த நான் அந்த பதிலைத் திருப்பிக் கூறுமாறு தெரிவித்தேன். உடனடியாக அவர் அதனை திருப்பிக்கூறினார். அவ்வாறு மிகத் திறமையான மாணவியை நான் சந்தித்தது யாழ்ப்பாணத…

  24. எமது மக்களுக்குத் தேவையான அதிகாரங்களையும், உரிமைகளையும் பெற்றுக்கொடுக்க வேண்டிய கடப்பாடு மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் தமக்கு உள்ளதாகவும் மக்களின் கோரிக்கைகளைப் பிரதிபலிக்கும் வகையிலேயே எமது செயற்பாடுகள் உள்ளன என்பதை இலங்கை அரசு புரிந்துகொள்ள வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் கூற்றுக்குப் பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிடும்போதே செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மக்கள் காவற்துறை, காணி அதிகாரங்களைக் கோரவில்லை என்றும், அவர்கள் காணி மற்றும் சுமுகமாக வாழக்கூடிய வகையிலான பாதுகாப்பு ஆகியவற்றையே கேட்கின்றனர் என்ற…

  25. சில ஊடகவியலாளர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் நிலவி வருவதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சில ஊடகவியலாளர்கள் இரகசிய நோக்கங்களின் அடிப்படையில் செயற்பட்டுவருவதாகக் குறிப்பிட்டுள்ளார். துரதிஸ்டவசமாக நாட்டுக்கு எதிராக செயற்படும் ஊடகவியலாளர்களுக்குஎதிராக நடவடிக்கை எடுக்கக் கூடிய சட்டப் பின்னணி நாட்டில் கிடையாது என அவர்சுட்டிக்காட்டியுள்ளார். கறுப்பு ஜனவரி போராட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பியகேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் போராட்டத்தை ஒழுங்கு செய்திருந்த பிரதான ஊடக அமைப்பின் நடவடிக்கைகள் சந்தேகத்தை உண்டு பண்ணும் வகையில் அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த ஊடக அமைப்பில் தேர்தல்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.