ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143359 topics in this forum
-
அடுத்தமாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில், சிறிலங்கா மீது அனைத்துலக போர்க்குற்ற விசாரணைகளை நடத்த அழுத்தம் கொடுக்கும் வகையிலான இராஜதந்திர நகர்வுகள் ஜெனிவாவில் தீவிரமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் ஒரு கட்டமாக, கடந்தவாரம் ஜெனிவாவில் உள்ள இராஜதந்திரிகள் வட்டமேசைக் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர். இதில் பங்கேற்ற, சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஆராய ஐ.நா பொதுச்செயலர் நியமித்த நிபுணர் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ஸ்டீபன் ரட்னர் அனைத்துலக விசாரணையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஜெனிவாவில் உள்ள இராஜதந்திரிகள் மற்று்ம் அனைத்துலக மன்னிப்புச்சபை, மனிதஉரிமைகள் கண்காணிப்ப…
-
- 1 reply
- 468 views
-
-
விஜே தொலைக்காட்சி நடத்திவரும் சுப்பர் சிங்கர் சிறந்த பாடகர் தேர்வு நிகழ்ச்சியில் கடந்த வருடம் வெற்றிவாகை சூடிய பூஜா சந்தோ; மற்றும் சத்தியபிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்ட மாபெரும் இசை நிகழ்ச்சி கடந்த 14ம் 15ம் திகதிகளில் கனடாவின் ரொரென்ரோ மாநகரில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்ட மேற்படி இரண்டு நாள் நிகழ்ச்சியில் கனடிய அரசாங்கம் சார்பான பாராட்டுப் பத்திரங்களும் மார்க்கம் நகரசபையின் சார்பான பாராட்டுப்பத்திரங்களும் மேற்படி வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டன. மார்க்கம் மாநகரசபை சார்பில் திரு லோகன் கணபதியும் பாராளுமன்ற உறுப்பினர் வழங்கிய பாராட்டுப்பத்திரங்களை உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் ஆகியோர் பூஜா சந்தோஷ் மற்றும…
-
- 11 replies
- 1.8k views
-
-
எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை அமர்வுகளில் எந்தவகையான அனைத்துலக அழுத்தங்களையும் எதிர்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் தயாராகவே உள்ளது என்று சிறிலங்காவின் அமைச்சரும் மனிஉரிமைகளுக்காக சிறிலங்கா அதிபரின் சிறப்பு தூதுவருமான மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். “ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவின் மனிதஉரிமை நிலைமை தொடர்பாக மேற்கொள்ளப்படக் கூடிய எந்த நடவடிககையையும் எம்மால் தடுக்க முடியும். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இந்த அமர்வுகளில் விவாதிக்கப்படும் என்று நாம் கவலைப்படவில்லை. என்ன நடந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு எம்மைத் தயார்படுத்தியுள்ளோம். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் எந்தத் தகவல்களையும் பகிர்ந்து கொள்ள…
-
- 1 reply
- 457 views
-
-
அரசாங்கம் தமிழ் மக்களையும் உலகத்தையும் மாறி மாறஜ ஏமாற்றிக்கொண்டே வருகின்றது. அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியாவுடன் செய்துகொண்ட இணக்கப்பாட்டை அரசு வெளிப்படுத்த வேண்டும். பல்வேறு காரணங்களை சுட்டிக் காட்டி தமிழர்களின் பிரச்சினையில் தற்போதைய அரசு மழுப்புகின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். செனட் சபை யோசனையும் காலம் கடத்தும் செயலே தவிர நேர்மையான அரசியல் தீர்வொன்றுக்கான முன்னெடுப்பாக அமையப் போவதில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வில் அரசாங்கம் இனியேனும் நேர்மையாக செயற்பட வேண்டும் என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக ஐ.தே.க. வின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநா…
-
- 0 replies
- 612 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இன்று சந்தித்துப் பேசவுள்ளார். இந்தச் சந்திப்பு இன்று காலை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னர் அப்துல் கலாம் யாழ்.பல்கலைக்கழத்துக்கும், யாழ். இந்துக் கல்லூரிக்கும் சென்று மாணவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரையும் சந்திக்கவுள்ளார். இதனிடையே, சிறிலங்காவில் உயிரிழந்த இந்திய அமைதிப் படையினர் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில், நேற்று அப்துல் கலாம் அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்திய ஆயுதப்படைகளின் முன்னாள் பிரதம தளபதி ஒருவர் இங்கு அஞ்சலி செலுத்தியுள்ளது இதுவே முதல் முறையாகும். “எனது தேசத்தின் க…
-
- 0 replies
- 990 views
-
-
கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இறால் இருப்பு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் வட மாகாணசபையின் நிதி பங்களிப்பில் இன்றைய தினம் பத்து இலட்சம் இறால் குஞ்சுகள் சுண்டிக்குளம் கல்லாறு கடல் நீரேரியில் விடப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து வரும் கிழமைகளில் தட்டுவன்கொட்டி ஆனையிறவு நாகேந்திரபுரம் கடல் நீரேரிகளிலும் இறால் குஞ்சுகள் விடப்படவுள்ளன. ஒட்டுமொத்தமாக 250 இலட்சம் இறால் குஞசுகள் மேற்படி கடல் நீரேரிகளில் விடப்படவுள்ளன. இதற்காக வட மாகாண சபை 13.65 மில்லியன் ரூபாவை செலவு செய்கின்றது. இன்று இறால் குஞ்சுகள் விடும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், தேசிய நீரியல் வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் நிமல் சந்திரரட்ண, அந்நிறுவனத்தின…
-
- 3 replies
- 3.6k views
-
-
72 முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்டனர்- குற்றவாளி அமைச்சராக.. அப்பாவிகள் கைதிகளாக! http://www.thinakkathir.com/?p=28460 Published on January 22, 2012-9:31 am · வெலிக்கந்தை தடுப்பு முகாம் உட்பட புனர்வாழ்வு முகாம்களில் கடந்த இரண்டரை வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகள் 72 பேர் இன்று ஞாயிறு காலை மட்டக்களப்பில் வைத்து தமது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறீ கஜதீர முன்னிலையில் மட்டக்களப்பு மாநகரசபை மாநாட்டு மண்டபத்தில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சரும், விடுதலைப்புலிகளின் முன்னாள் கிழக…
-
- 0 replies
- 749 views
-
-
40 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் செனட் சபை அமைக்கும் யோசனை தமிழ்க் கட்சிகள் நிராகரிப்பு உத்தேச தீர்வு பொதியில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு மேலாக செல்லும் 13 + யோசனையானது மேல் சபையான செனட் சபையை அமைத்தல் என்று அர்த்தப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் அதனை வட கிழக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரிய கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் கட்சிகள் நிராகரித்துள்ளன. மத்தியிலிருந்து ஆட்சி நிர்வாகத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பங்களிப்பு செலுத்துவதற்காக பாராளுமன்றத்தில் செனட் என்று அழைக்கப்படும் செனட் சபையை ஸ்தாபிக்க அரசு திட்டமிடுவதாக அமைச்சரவை தரவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின் தகவல் ஊடகத் துறை அமைச்சர் ஹெகலிய றம்புக்…
-
- 0 replies
- 381 views
-
-
ஜனநாயக நாட்டில் ஓர் அரசியல் கட்சிக்கு நாட்டின் எப்பகுதிக்கும் சென்று அரசியல் நடத்தும் உரிமை உள்ளது. ஆனால் அதனை அக்கட்சியினர் மக்களது அரசியல் தேவையறிந்து மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கொழும்பில் தமிழரசுக்கட்சி தனது கிளையொன்றைத் திறந்து வைத்துள்ளமை தொடர்பாக தலைநகர் தமிழ் மக்கள் விசனம் தெரிவித்துள்ளமை தொடர்பாக அவரிடம் கருத்தறிய முற்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வீறாப்பு காட்டுகிறோம் என நினைத்து வினையைத் தேடி இருப்பதையும் இழந்துவிடக்கூடாது. அத்துடன் தேவையில்லாத இடத்தில் தேவையற்ற செயலை செய்ய முற்படுவதால் அவ்விடத்தில் தேவையற்ற பிரச்சினைகளைத் தோற்றுவிக்க முனையக் கூடாது. இவர்களது தலைநகர் வருகை சமாதானத்தை வலுப்படுத்த உதவுமானால் அதனை வர…
-
- 2 replies
- 786 views
-
-
இந்தியா ஈழத்தமிழர் பிரச்சினையை உதாசீனம் செய்யும் இலங்கை அரசாங்கம் தனது பிராந்திய நலன்களுக்கு ஏற்புடையதாகவும், குந்தகம் விளைவிக்காத வகையிலும் நடந்து கொள்ளும்போது, இந்திய அரசாங்கம் தமிழர் பிரச்சினையை உதாசீனம் செய்துவிடும், என்பதையே இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவின் வருகை தமிழர் தரப்பிற்குச் சொல்லியிருக்கும் வரலாற்றுப்பாடம். இந்த யதார்த்தத்தை புரிந்து கொண்டு இனிமேலாவது 13, 13+ என்ற வார்த்தை ஜாலங்களை விடுத்து சுயநிர்ணய உரிமைப்பாதையை கூட்டமைப்பு தெரிவு செய்யவேண்டும், யார் வரினும் இப்போதுள்ள ஒற்றையாட்சி அரசியலமைப்பின் பிரகாரமே தீர்வினை முன்வைக்க முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளருமான செ. கஜேந…
-
- 2 replies
- 942 views
-
-
பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனநாயகத்துக்காக நீண்ட நாட்களாகப் போராடிவரும் இடதுசாரியான பேராசிரியர் ஜோசே மரியா சிசன் அவர்கள் ஈழத் தமிழர்கள் தொடர்பாக வரலாறு முக்கியத்துவம்வாய்ந்த தமது கருத்துக்களை பதிவுசெய்துள்ளனர். பிலிப்பைன்ஸ் கம்மியூனிஸ்ட் கட்சியின் முக்கியஸ்தரும், அந் நாட்டின் புதிய மக்கள் இராணுவத்தை உருவாக்கியவர்களில் ஒருவருமான பேராசிரியர் சிசன் அவர்கள் தமிழ் நெட் இணையத்துக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். அதில் அவர் ஈழத் தமிழர்களின் இறையாண்மை தொடர்பாகவும் மற்றும் இலங்கை அரசின் காட்டுமிராண்டித் தனத்தையும் பற்றி தனது கருத்துக்களை தெள்ளத்தெளிவாகக் கூறியுள்ளார். http://youtu.be/PkxOLTvZKNw இவர் வெளியிடும் கருத்துக்கள் பல உல…
-
- 1 reply
- 631 views
-
-
நயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப் பட்ட 108 அடி உயரமான இராஜ கோபுரத்தின் உச்சியில் இருந்து ஆலய சுற்றுப் புற சூழலினது காட்சியும்,நயினாதீவின் தோற்றமும். thx http://www.newjaffna.com
-
- 0 replies
- 829 views
-
-
மாவீரா நாளைக் குறிவைத்து ஒரு தாக்குதல் களத்தை உருவாக்கிய சிங்கள தேசத்தின் புலனாய்வாளர்கள், எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் 19 வது கூட்டத் தொடரை நோக்கிய பலமானதொரு நகர்வை மேற்கொண்டுள்ளது. இறுதி யுத்த காலத்தில் சிங்களப் படைகளால் நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொறுப்புக் கூறத் தவறியுள்ளதுடன், பலத்த இழப்புக்களையும், அவலங்களையும் எதிர்கொண்டு அதிலிருந்து மீளும் வகையற்றுத் திறந்த சிறைச்சாலை வாழ்விற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள தமிழினத்திற்கு நிலையானதும், நீதியானதுமான தீர்வை வழங்கும் கடப்பாட்டிலிருந்து நழுவிச் செல்லும் சிங்கள அரசை சர்வதேச அழுத்தங்களிலிருந்து காப்பாற்றும் பொ…
-
- 0 replies
- 654 views
-
-
‘வடக்கு கிழக்கு இணைப்பு தவிர்ந்த காணி, காவல்துறை அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் நானும் எனது தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் தங்களுடன் ஒருமித்த கருத்துடனேயே உள்ளோம் ‘ என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனுக்கு என கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி.சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு இணைப்பு தவிர்ந்த காணி, காவல்துறை அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் நானும் எனது தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் தங்களுடன் ஒருமித்த கருத்துடனேயே உள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அக் கடிதத்தில் முதலமைச்சர் சந்திரகாந்தன் மேலும…
-
- 0 replies
- 740 views
-
-
ஆதரவற்றுப்போன பெற்றோரைக் காப்பாற்றுமாறு இறைஞ்சுகிற சிவா. சிவா பிறந்தது வாழ்ந்தது மலையகம். இவனுக்கு 28வயது. இப்போது 4வருடங்களாக சிறையில் வாழ்கிறான். தமிழர்களுக்கு உதவினான் என்ற குற்றச்சாட்டின் கீழ் தண்டனை அனுபவிக்கிறான். இவனை நம்பிய இவனது வயதான பெற்றோர்கள் ஆதரவில்லாது தவிக்கிறார்கள். மலையகத்தாரை நாங்கள் கைவிட்டுவிட்டோம் என்ற குறை பல மலையக நண்பர்களிடம் உண்டு. அதேபோன்ற மனநிலமையில் தான் சிவாவும் இருக்கிறான். இவனது பெற்றோர்கள் ஒருசுயதொழில் செய்ய எம்மிடம் உதவிகேட்டுள்ள சிவா லட்சங்கள் கேட்கவில்லை. தேயிலை வியாபாரம் செய்ய ஒரு 35ஆயிரம் ரூபா தான் கேட்கிறான். (250€) சிவா எம்முடன் பகிர்ந்து கொண்ட கதைகளை இந்த ஒலிப்பதிவில் கேளுங்கள். ஒலிப்பதிவைக் கேட்க இணைப்பில் அழுத்துங்கள். இ…
-
- 0 replies
- 619 views
-
-
பேச்சுவார்த்தைப் பொறிக்குள் சிக்கியுள்ளது தமிழ் கூட்டமைப்பு ! அரசியல் தீர்வுக்கான அதிகாரப் பரவலாக்கல் குறித்து தொடர்ச்சியாக இப்பத்தியில் வலியுறுத்தி வருகிறோம். தமிழ் மக்களைப் பொறுத்து அவர்களுடைய இருப்பு, பாதுகாப்பு, சுய கௌரவம் உரிமை குறித்த அதிகாரப்பரவலாக்கலுடன் கூடிய அரசியல் தீர்வே முக்கியமானதாக கருதுகின்றனர். தமிழ் மக்களின் இந்த உள்ளக்கிடக்கை மீண்டும் ஒருமுறை தகர்ந்து விடக்கூடாது என்ற எதிர்பார்ப்பிலேயே தொடர்ச்சியாக இப்பத்தியில் அரசியல் தீர்வு குறித்து பேசப்படுகின்றது. அதேவேளையில் கடந்த அறுபது வருட கால அரசியல் பயணத்தில் தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாஷை குறித்த எண்ணப்பாட்டிலிருந்து இம்மியளவும் விலகியதாகவோ அல்லது விட்டுக் கொடுக்கும…
-
- 2 replies
- 873 views
-
-
தமிழ் சமூகத்திற்கும் அதனுடைய சிவில் அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்” என்கிற தலைப்பில் 71 பேர்கள் வெளிட்டுள்ள அறிக்கை, இன்று பல அரசியல் பிரதி வாதங்களை தோற்றுவித்துள்ளது. 21 வருடங்களுக்கு முன் யாழ்பாணத்தில் இருந்து புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லீம் மக்கள் மீள் குடியேற்ற படவேண்டும் என்பதும், இதுவரை இவர்கள் குடியேற்ற படாமைக்கும் எதிர்காலத்தில் குடியேற்ற படுவதற்கும் தமிழ் மக்களே பொறுப்பு என்பதை இவ்வறிக்கை மையப்பொருளாக வைத்துள்ளது. இலங்கை சிங்கள பேரினவாத அரசின் ஒடுக்குமுறைக்கும் இனவழிப்பிற்கும் உள்ளாகும் இனங்கள் தமது உள் முரண்பாடுகளை தீர்த்து கொள்வது ஐக்கியத்திற்கான ஒரு முன் நிபந்தனையாகும். வடகிழக்கு தமிழ் மக்கள், முஸ்லீம் மக்கள் தமக்கிடையில் தேசிய சிறுபான்…
-
- 0 replies
- 705 views
-
-
தப்லீக் ஜமாஅத்தை சேர்ந்த 161 வெளிநாட்டு பிரஜைகளை நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு இலங்கையில் முஸ்லிம்களுக்கு இஸ்லாம் குறித்த போதனைகளை நடத்துவதற்கு வந்த குழுவொன்றைச் சேர்ந்த 161 வெளிநாட்டுப் பிரஜைகளை நாட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. விஸா விதிகளை மீறியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்படடுள்ளது. இவர்கள் வௌ;வேறு குழுக்களாக வந்த இக்குழுவினர் விஸா விதிகளை மீறியுள்ளனர் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்தா பெரேரா , தமிழ் மிரரின் சகோதர ஆங்கில வார இதழான சண்டே டைம்ஸுக்கு கூறினார். இவர்கள் சுற்றுலா பயணிகளாக இலங்கைக்கு வருவதற்கு விஸா வழங்கப்பட்டதாகவும் வந்ததாகவும் அவர்கூறினார். 'அவர்களின் தொடர்பு விபரங்கள் எம்மிடமுள்ளன. அரசாங்கத்தின் நிலைப்பாடு க…
-
- 0 replies
- 817 views
-
-
மாற்றத்தை சிந்திக்காத தமிழர்களால் எதனையும் சாதிக்க முடியாது [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-01-22 10:14:39| யாழ்ப்பாணம்] இந்தியா உள்ளிட்ட சில நாடுகளின் ஒத்துழைப்புடன் வன்னிப் போரில் வெற்றி அடைந்த இலங்கை அரசு போருக்குப் பின் தனக்கு உதவிய நாடுகளின் ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவதற்காக சமயோசிதமான சில நடவடிக்கைகளை மேற் கொண்டிருந்தது. வன்னிப் போரில் ஏற்பட்ட வெற்றிக்கு இந்தியாவின் ஆதரவு காத்திரமானதாக இருந்த தாயினும், போருக்குப் பின் இந்திய தேசம் தான் கூறுவதைக் கேட்கும் அளவுக்கு தன்னை கட்டுப்படுத்தும் என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசு உணர்ந்து கொண்டது. இதற்காக இலங்கை அரசு அவசர அவசரமாக இந்தியாவின் பகை நாடுகளான சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் உறவை ஏற்படுத்தி…
-
- 0 replies
- 529 views
-
-
இலங்கை செல்கின்றார் ஒபாமாவின் விஷேட தூதுவர்! - நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து ஆராய்வார்!! அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான விஷேட தூதுவர் Stephen Rapp உயர்மட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்குச் செல்விருப்பதாக வொஷிங்டன் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. ஜெனிவாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் இறுதிப்பகுதியில் ஆரம்பமாகவுள'ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடருக்கான ஒரு முன்னோடியாகவே இவரது விஜயம் இடம்பெறவிருப்பதாகவும் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட முக்கிய அரசாங்கத் தலைவர்களையும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் குடியியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களையு…
-
- 1 reply
- 626 views
-
-
நண்பர் ஒருவர் மூலம் இந்த இணைப்பு எனக்கு கிடைத்தது.இதில் இருக்கும் அல கருத்துக்களுடன் உடன்பட்டாலும் வார்த்தை பிரயோங்களுடன் உடன்பட முடியவில்லை.அதன் காரணமாக இதன் இணைப்பை மட்டும் பதிவதோடு நேரடியாக யாழ் களத்தில் பதிவதை தவிர்கின்றேன். http://www.thamilnattu.com/2012/01/blog-post_21.html
-
- 2 replies
- 1.6k views
-
-
புலம்பெயர் என்ற பதம் தமக்கு பிடிக்காது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதெரிவித்துள்ளார். மிஹிந்தலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர்இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் வலுவான வலையமைப்பு ஒன்று உலகின் பலநாடுகளில் பரவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு வழிகளில் நாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்தும் முயற்சியில் இந்தபுலி ஆதரவாளர்கள் செயற்பட்டு வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளர். வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டு நாட்டுக்கு எதிராக சதித் திட்டம்தீட்டும் தரப்பினர் தங்களை புலம்பெயர் இலங்கையர் என அடையாளப்படுத்திக் கொள்வதாகஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, புலம்பெயர் என்ற சொல்லே தமக்கு பிடிப்பதில்லை என அவர்தெரிவித்துள்ளார். http://www.…
-
- 20 replies
- 1.8k views
-
-
அடிமைத் தளையொடித்து தென்னாபிக்காவுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த வீரர் சிறையில் வாடி கல்லுடைப்பதையும் பார்த்தேன். அவர் விடுதலை பெற்று மரிதையான பிரஜையான பின் அவரோடு கைலாகு கொடுத்த போது மனித குலத்தின் மேல் பொறுமையும், மதிப்பும், அன்பும் நிரம்பப் பெற்ற ஒரு வீர ஆத்மாவாக அவர் தெரிந்தார். நாங்கள் நடக்கத் தொடங்கிய போது அவர் தன் ஊன்று கோலை வீசியெறிந்து விட்டு என்னுடைய தோள்களைத் துணையாகப் பற்றிக் கொண்டார். 2200 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட 'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்' என்னும் குறளில் கூறப்பட்ட பாடத்தை நான் அவடமிருந்து கற்றுக்கொண்டேன். எனினும் அவடமிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் ஏராளம் உள்ளன. இவ்வாறு தெவித்தார் இந்தியாவின் முன்னாள் ஜனாதி…
-
- 1 reply
- 828 views
-
-
யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம், எந்த ஒரு நாட்டின் தூதரகங்களுடன் நேரடி பரிமாற்றங்களை மேற்கொள்ளக்கூடாது என்று இலங்கையின் திறைசேரி உத்தரவிட்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தர் வி.அரசரட்ணம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் புலமைப்பரிசில்கள் யாவும் தமது திறைசேரியின் வெளியுறவு பகுதி திணைக்களத்தின் ஊடாகவே பயனாளிகளுக்கு வழங்கப்படவேண்டும் என்று இலங்கை இந்தியாவிடம் கோரியுள்ளது. இந்த விடயம் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக திறைசேரியின் வெளியுறவு பகுதி பணிப்பாளர் மாப்பா பத்திரன தெரிவித்துள்ளார். இந்தியாவின் புலமைப்பரிசில்கள் குறித்து தமக்கு சில முறைப்பாடுகளை கிடைத்துள்ளமை காரணமாகவே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக மாப்பா தெரிவித்துள்ளார…
-
- 0 replies
- 593 views
-
-
இலங்கை சென்றுள்ள இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இலங்கை அரசின் மும்மொழி செயற்திட்டத்தை சனிக்கிழமை ஆரம்பித்துவைத்தார். இலங்கையில் தமிழ் சிங்கள மொழிகளையும் ஆங்கிலத்தையும் பள்ளிக்கூட மட்டத்திலிருந்தே அனைவருக்கும் கற்பிப்பதன் மூலம் இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்தமுடியும் என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆனால், இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதில் அரசு இந்த மொழிக்கொள்கையை ஒரு வழிமுறையாக பயன்படுத்தமுடியும் என்கின்ற போதிலும் அதன்மூலம் சிறுபான்மை மக்களின் அரசியல் பிரச்சனைகளைத் தீர்த்துவிடமுடியாது என்று தமிழோசையிடம் கருத்து தெரிவித்த இலங்கை அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பேராசியர் எஸ்.தில்லைநாதன் சுட்டிக்காட்டினார…
-
- 0 replies
- 594 views
-