ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143354 topics in this forum
-
யாழ்ப்பாணத்திற்கு கிருஷ்ணன் வருகை தந்த மகிழ்வில் அவரின் முன்னால் மகிழ்ந்து ஆடும் கோபியர்களின் அழகிய நடனக் காட்சிகள்.... பாரதப் போரில் துரியோதனனிடம் எதுவும் தராவிட்டாலும் 5 வீடுகள் வாங்கித் தாருங்கள் எனக் கேட்ட பாண்டவர்களின் கோரிக்கையை ஏற்று தூது வந்த கிருஷ்ணர் நிகழ்வில் தன்னுடைய கோரிக்கையான வீடுகள் கிடைக்கப் பெற்ற சந்தோசத்தில் திளைத்திருக்கும் காட்சி thx http://newjaffna.com
-
- 0 replies
- 1.4k views
-
-
நெதர்லாந்தில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் தண்டனை பெற்றுள்ள ஐந்து இலங்கைத் தமிழர்களும் தாக்கல் செய்த மேன்முறையீட்டின் விசாரணைகள் நேற்று முன்தினம் ஹேக்கில் ஆரம்பமாகின. குறித்த ஐந்து பேரினதும் வழக்கு தீர்ப்பின்போது, கடந்த 2011 ஒக்டோபர் 21ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு அல்ல என்று நீதிபதி அறிவித்திருந்தார். இந்தநிலையில், பயங்கரவாத பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகள் நீக்கப்படவேண்டும். அத்துடன், பயங்கரவாத அமைப்பாக கருதப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதியளித்தனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டுள்ள ஐவரினதும் தீர்ப்புகள் ரத்துச் செய்யப்பட வேண்டும் என்று குறித்த ஐந்து பேர…
-
- 0 replies
- 622 views
-
-
நாடாளுமன்ற தெரிவுக்குழு தலைவரும் ஈபிடிபி நாடாளுமன்ற உறுப்பினருமான சந்திரகுமாரால் திறந்து விடப்பட்ட கிளாலி கடற்கரை கடற்படையினரால் மீண்டும் இழுத்து மூடப்பட்டுள்ளது.மிக அண்மையிலேயே மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட இப்பகுதிகளில் மீன்பிடிப்பதற்கான அனுமதி தொடர்பில் உயர்மட்ட மாநாடொன்று நாடாளுமன்ற தெரிவுக்குழு தலைவரும் ஈபிடிபி நாடாளுமன்ற உறுப்பினருமான சந்திரகுமார் தலைமையில் அண்மையில் நடந்திருந்தது.அக்கூட்டத்திற்கு கடற்படை உயரதிகாரிகளும் அழைக்கப்பட்டிருந்தனர். கூட்டத்தின் முடிவில் மூடப்பட்ட நிலையிலிருந்த கிளாலி கடற்கரையினை சுமார் பதினாறு வருடங்களின் பின்னர் திறந்துவிட கடற்படையினர் சம்மதம் தெரிவித்திருந்தனர்.ஊடகங்களுக்கு இவ்வனுமதி பெரிதாக பிரச்சாரப்படுத்தப்பட்டிருந்தது. …
-
- 0 replies
- 570 views
-
-
யாழ்ப்பாணத்தில் வாழைப்பழம் என்றவுடன் வலிகாமம் கிழக்கில் உள்ள கோப்பாய் தொடங்கி அச்சுவேலி வரையிலான செம்பாட்டு மண் நிறைந்த இடமே மனதில் வந்து மறையும். வாழைக் காடு என்று சொல்லுமளவிற்கு வாழைகளின் அணி வகுப்பில் இந்த ஊர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்காகவே குடாநாட்டில் எங்கும் இல்லாத ஒரு சங்கம் இங்கு உள்ளது அதுதான் வாழைக்குலைச் சங்கமாகும். மிகுதி காணொளியில் thx http://newjaffna.com
-
- 0 replies
- 685 views
-
-
'இனங்களுக்கிடையில் நீடித்ததும், கண்ணியமானதுமான இணக்கப்பட்டை ஏற்படுத்துவதற்கு அர்த்தமுள்ள அதிகாரப் பங்கீடு மிக அவசியம்' என யாழ். மண்ணில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா தெரிவித்தார். யாழில் நிர்மாணிக்கப்பட்ட இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் 47 வீடுகள் இன்று புதன்கிழமை மாலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரினால் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, யாழ்.நூலக முன்றலில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது இந்திய அரசினால் பொதுமக்களுக்கு 10 ஆயிரம் சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து உரையாற்றும் போதே எஸ்.எம்.கிருஷ்ணா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், 'அதிகாரப் பங்கீடானது மீள் இணக்க அரசியலில் 13ஆவது அரசியல் திட்டத…
-
- 1 reply
- 758 views
-
-
யாழ்ப்பாணத்தில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் அநாதரவாக வீதியோரங்களில் முதியோர்கள் விடப்படுவது தொடர்பில் அதிகமாக நாம் செய்திகளில் படிப்பதுண்டு. ஆனால் இங்கு என்னவென்றால் பெற்ற தாயைக் கட்டி அணைத்து நானாக நான் இல்லைத் தாயே என்ற பாடலைப் பாடும் மகனைப் பார்க்கும் போது கண்ணீரில் மிதக்கின்றது கண்கள். யாழ்ப்பாணத்தில் இப்படியும் ஒரு பிள்ளையா என்று ஏங்கும் அளவுக்கு அந்த மகனின் செயற்பாடுகள் இருக்கின்றது. thx http://newjaffna.com
-
- 0 replies
- 616 views
-
-
போர்க்குற்ற விசாரணையில் அமெரிக்கா தலையிடுமா? நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியான பின்னர் அது போதுமானதாக இல்லை என்று கருத்து வெளியிட்ட அமெரிக்கா, அந்த அறிக்கை பற்றிய முழுமையான விமர்சனங்கள் எதையும் இன்னமும் முன்வைக்கவில்லை. அமெரிக்காவோ இந்தியாவோ அல்லது வேறு எந்த நாடோ இந்த அறிக்கையில் உடன்பட்ட, உடன்படாத விடயங்கள் எவை எனச் சுட்டிக்காட்டவில்லை. போர்க்குற்றங்கள் குறித்த சுதந்திரமான சர்வதேச விசாரணைகளை வலியுறுத்திய நாடுகளும் சரி, உள்நாட்டு விசாரணையே போதும் என்று அடித்துக் கூறிய நாடுகளும் சரி இந்த விடயத்தில் மௌனமாகவே இருக்கின்றன. இந்த நிலையில் சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்குமா என்ற கேள்வி நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. …
-
- 3 replies
- 799 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உதவி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு அமெரிக்காவில் சிறை வைக்கப்பட்டுள்ள இலங்கை வைத்தியர் தன்னை மீண்டும் பணிக்குச் செல்ல அனுமதிக்குமாறு கோரியுள்ளார். இலங்கை வைத்தியரான முருகேசு விநாயகமூர்த்தி கடந்த 2006ம் ஆண்டு தொடக்கம் அமெரிக்காவில் சிறை வைக்கப்பட்டுள்ளளார். இந்த சிலையில் வடக்கு லண்டனில் உள்ள வைத்தியசாலைக்கு பணிக்குச் செல்ல தனக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என அவர் வேண்டியுள்ளார். தனது மனைவியான புஸ்பத்துடன் இணைத்து வைத்தியர் முருகேசு விநாயகமூர்த்தி அறுவை சிகிச்சை செய்து வந்துள்ள நிலையில் கைது செய்யப்பட்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கம் என்ற பட்டியலில் இருந்து நீக்க அதிகாரி ஒருவருக்கு லஞ்…
-
- 1 reply
- 1k views
-
-
தெரிவுக்குழுவுக்கு வரும் வரை கூட்டமைப்புடன் பேச்சுக்கள் இல்லை !-ஜி.எல்.பீரிஸ். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை நியமிக்கும் வரை, அரசியல்தீர்வு காண்பதற்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தப்படும் பேச்சுக்கள் நடைபெறாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. நேற்று, இன்று, நாளை என இந்த மாதத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் பேச்சுக்களை நடத்த சிறிலங்கா அரசாங்கம் நாள் குறித்திருந்தது. எனினும் நேற்று பேச்சுக்களுக்காகச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு, சிறிலங்கா அரசுப் பிரதிநிதிகள் வராததால், ஏமாற்றத்துடன் திரும்பியதாகத் தகவ…
-
- 1 reply
- 608 views
-
-
இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றை காண்பதற்கு 13ம் திருத்தத்திற்கும் கூடுதலாகவும் ஆராய்ந்து தீர்க்கமான நல்ல முடிவை எடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தன்னிடம் நேற்று காலையில் உறுதியளித்ததாகவும் இந்த உறுதிமொழி குறித்து தாம் பெருமகிழ்ச்சியடைவதாகவும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சில் நேற்று நண்பகல் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க குழுவின் அறிக்கையை இந்தியா வரவேற்கிற தென்றும் அவற்றை இலங்கை அரசாங்கம் காலதாமதப்படுத்தாமல் நடைமுறைப் படுத்த வேண்டுமென்பதே இந்தியாவின் விருப்பம் என்ற…
-
- 4 replies
- 758 views
-
-
ரிஎன்ஏயுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை - அரசாங்கம் வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண்பதற்காக அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நேற்று நடைபெறவிரு;நத பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை. இந்த பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண்பதற்காக அரசாங்கம் நியமித்துள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்படும் வரை கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனினும் இது குறித்து அரசாங்கம், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அறிவிக்கவில்லை. இந்த நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்துடன் பேச்சுவார்;த்தையில் கலந்துக்கொள்வதற்காக, அரசாங்…
-
- 0 replies
- 321 views
-
-
அதிகாரப்பகிர்வு மற்றும் சுயாட்சி தொடர்பில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுமென இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்ததைத் தொடர்ந்து, அரசாங்கத்துடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளது. ’13ஆவது திருத்தச் சட்டத்திற்கும் அப்பால் செல்வது குறித்து ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இது புதியதொரு ஆரம்பம். இங்கிருந்து நாம் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்போம்’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறினார். செவ்வாய்க்கிழமை முக்கியமான பேச்சுவார்த்தையை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தபோதிலும், அரசாங்கத் தரப்பினர் பேச்சுவார்த்தைக்கு சமூகமளிக்கவில்லை. http://www.sarit…
-
- 0 replies
- 496 views
-
-
இராமேஸ்வரம் வரை வந்தும் பாவத்தைத் தீர்க்க முடியாமல் திரும்பிப் போயிருக்கிறார், இலங்கை அதிபர் இராஜபக்சவின் மைத்துனர் திருக்குமரன் நடேசன்! ஆறாத ரணமாக ஈழப் பிரச்சினை இன்னும் இருப்பதன் அடையாளம்தான் இந்த சம்பவம் என்று தமிழகத்தின் பிரபல சஞ்சிகையான ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளது. இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரியான நிருபமா ராஜபக்சவின் கணவர் இவர். இலங்கைத் தமிழரான இவர், அதிக தெய்வ நம்பிக்கை கொண்டவர். கடந்த ஆண்டு நடேசன் தனது மனைவி நிருபமாவுடன் இராமேஸ்வரம் வந்தார். அப்போது, இங்குள்ள தமிழ் இன ஆதரவாளர்கள் அவர்களுக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டிப் போராட்டம் நடத்தி எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். ஆனால், பொலிஸார் பாதுகாப்பு கொடுத்து …
-
- 8 replies
- 2.1k views
-
-
காஷ்மீரில் கொல்லப்பட்ட 9,000 சிவிலியன்கள் புதைக்கப் பட்ட இடம் தொடர்பில் சுயாதீன விசாரணைக்கு இணங்காத இந்தியாவுக்கு எமது நாட்டில் பொமக்கள் கொல்லப்பட்டதாக கூறி சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனக் கூறுவதற்கு எந்த அருகதையில்லையென அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழு வரம்புமீறி செயற்பட்டு, பரிந்துரைகளை முன்வைத்திருக்கின்றது என்றும் அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார். தேசிய நிபுணர்களின் சபையின் ஏற்பாட்டாளர் ரொஷான் குணதிலகவினால் ஏற்பாடு செயப்பட்ட 'கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் கற்றுக்கொள்ளாத பாடங்கள்' என்ற தலையங்கத்தினாலான கருத்தரங்கு நேற்று திங்கட்கிழமை கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு…
-
- 7 replies
- 727 views
-
-
இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்யாமல் இந்தியாவும், சீனாவும் இலங்கையை பாதுகாத்து வருகின்ற போதிலும் இதனை தொடர்ந்தும் எதிர்பார்க்க முடியாது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக் கிளைக்கான முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார். போரில் கொல்லப்பட்ட பொதுமக்கள் குறித்து சர்வதேச விசாரணைகள் நடத்தப்படலாம் என்றும் ஆறு மாதம், ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்களில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்படலாம் என முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட போரின் போது இடம்பெற்ற பொதுமக்கள் இழப்புக்கள் குறித்து கேஜ் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள புள்ளி விபரத் தரவுகள் சரியானவையே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 1 reply
- 613 views
-
-
இந்தியா எந்த நேரத்திலும் இலங்கை சார்பாகவே செயற்படும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடனான சந்திப்பையடுத்து வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காண நியமிக்கப்படவுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயர்கள் முன்மொழியப்பட வேண்டும். இலங்கை – இந்தியா ஆகிய இரு நாடுகளுக்குமிடையில் பொருளாதார, புவியியல் மற்றும் கலாசார ரீதியில் நீண்ட கால உறவு காணப்படுகின்றது. இந்த உறவு எதிர்காலத்தில் அதிகரிக்கும். அரசியல் விவகாரம் உள்ளிட்ட அனைத்து…
-
- 1 reply
- 533 views
-
-
இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இன்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையில் அரசதரப்பினர் கலந்துகொள்ளாது கூட்டமைப்பை ஏமாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்திற்கும் கூட்டமைப்புக்கும் பாராளுமன்றக் கட்டிடத்தில் இன்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையானது அரசாங்கத்தரப்பினர் கலந்துகொள்ளாததன் காரணமாக நடைபெறவில்லை என கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பிட்ட நேரத்திற்கு கூட்டமைப்பு குழுவினர் பேச்சுவார்த்தை நடைபெறவிருக்கும் இடத்திற்கு சென்றபோதும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அரசதரப்பு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளாது தங்களை ஏமாற்றியமை ஒட்டுமொத்த தமிழர்களையும் ஏமாற்றியதற்கு சமனானது என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் …
-
- 3 replies
- 683 views
-
-
13வது திருத்தத்துக்கும் மேலாகச் செல்வதற்கு ஜனாதிபதி இணக்கம்! - ஊடகவியலாளர் மாநாட்டில் கிருஷ்ணா இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்காக அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்துக்கும் மேலாகச் செல்வதற்கும் தான் தயாராக இருப்பதாக சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தம்மிடம் உறுதியளித்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இன்று நண்பகல் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். 'ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் தமிழ்ர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பது தொடர்பாக நான் இன்று காலை உரையாடினேன். 13வது திருத்தத்துக்கு மேலாகச் செல்வது என்ற தன்னுடைய முன்னைய வாக்குறுதியில் தான் உறுதியாக இருப்பதாக அப்போது அவர் எனக்கு உறுதியளித்தார்' என சிறில…
-
- 7 replies
- 1.1k views
-
-
ரத்தினபுரி தோட்டத்தில் தமிழ் - சிங்கள மோதல்: வியாபார நிறுவனங்கள் மீதும் தாக்குதல் சிறிலங்காவின் இரத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்தை நகரத்திற்கு அண்மித்த வெள்ளந்துறை தோட்டத்தில் தோட்ட இளைஞர்களுக்கும், பெரும்பான்மை இனத்தை சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் தமிழ் இளைஞர்களின் வியாபார ஸ்தலங்கள் இரண்டும், முன்பள்ளி கட்டிடமும், பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவரின் பஸ் வண்டியும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. நான்கு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். மாட்டுப்பொங்கல் தினமான நேற்றைய தினமே இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. தோட்ட இளைஞர் ஒருவரின் தனிப்பட்ட விரோதம் காரணமாக பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த இளைஞர்கள் திட்டமிட்டு அவரை தாக்கியதாக சம்பவ இடத…
-
- 2 replies
- 725 views
-
-
முல்லைத்தீவு முகத்துவாரப் பகுதியைச் சேர்ந்த சுமார் 105 குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர அனுமதி மறுக்கப்பட்டுப் புளியமுனைக் கிராமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், முகத்துவாரப் பகுதியில் 247 பெரும்பான்மை இன மக்கள் குடியேற்றப்பட் டுள்ளனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முல்லைத்தீவு முகத்துவாரப்பகுதியில் பூர்வீகமாக வாழ்ந்த சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் இருந்து கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டனர். 29 ஆண்டுகளுக்குப் பின்னர் மக்களை இப் பகுதியில் குடி யேற்றுவதாகக் கூறி அழைத்து வந்த அரசு அவர்களைக் கருநாட்டுக் கேணிப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக இடைத்தாங்கல் முகாமில் தங்க வைத்தது. அதன் பின்னர் கடந்த ஆண்டு முற்பகுதியில் ம…
-
- 0 replies
- 392 views
-
-
மிக மோசமான ஆயுதப்போராட்டம் நடைபெற்ற காலத்தில் கூட வடகிழக்கு மாணவர் சமூகம் மிகவும் ஒழுக்கமுள்ள தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றுகின்ற சமூகமாக வளர்ச்சிபெற்றனர். ஆனால் இன்று ஒழுக்க சீர்கேடான கலாச்சார சீரழிவுகளுக்கு மாணவர் சமூகம் உள்ளாகியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றது. இது எமது சமூகத்திற்கு கல்வியில் மிகப்பெரிய பின்னடைவையே உருவாக்கும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். நேற்றையதினம் அம்பலாந்துரை கலைமகள் வித்தியாலத்தில் இடம்பெற்ற 1000 பாடசாலைகளை உள்வாங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் தைபொங்கல் திருநாளை …
-
- 0 replies
- 541 views
-
-
காணாமல் போனவர்கள் தொடர்பில் யாழில் இடம்பெறவிருந்த ஆர்ப்பாட்டம் படையினரால் நிறுத்தப்பட்டது கடத்தல் - காணமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலையை முன்னிறுத்தி யாழ்பாணத்தில் இடம்பெறவிருந்த ஆர்ப்பாட்டம் சிறிலங்கா படையினரின் அழுத்தங்களால் நிறுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இன்று (17-01-2012) காலை 10 மணியளவில் யாழ் பேருந்து நிலையம் முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு கொழும்பில் இருந்து சென்ற நாம் இலங்கையர் அமைப்பாளர்களை சிறிலங்கா படையினர் வவுனியாவிலும் ஓமந்தையிலும் தடுத்தி நிறுத்தியுள்ளமையாலேயே இந்த ஆர்பாட்டம் நடைபெறவில்லை என அறியமுடிகின்றது. இது குறித்து Naatham-Tamil News Circle செய்திச் சேவையின் வவுனியா செய்தியாளர் தெ…
-
- 0 replies
- 461 views
-
-
சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் கட்டார் மன்னர் ஷய்க் ஹமாத் பின் கலிபா அல் தானி அவர்கள், இலங்கையில் இடம்பெற்ற பாரிய படுகொலைகள் பற்றி கவனம் செலுத்த வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. லிபியாவில் இடம்பெற்ற பாரிய கொலைகள் தொடர்பில் கட்டார் மன்னர் ஷய்க் ஹமாத் பின் கலிபா அல் தானி அவர்கள், நடவடிக்கை எடுத்தது போன்று, இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற பாரிய படுகொலைகள் பற்றியும் கவனம் எடுக்க வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ள வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லிபியாவின் முன்னைய தலைவர் கேணல் கடாபி யின் மிக நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தவர் சிறி லங்கா அரசுத் தலைவர். அவரையே நீங்கள் தற்பொழுது சந்திக்…
-
- 2 replies
- 748 views
-
-
ஞானதேசிகனுடன் இலங்கைத்தமிழ் எம்.பி., பேசியது என்ன? தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனை சமீபத்தில் இலங்கை மட்டக்களப்பு எம்.பி., சீனித்தம்பி யோகேஸ்வரன் சந்தித்துப் பேசியுள்ளார்.ஆயுதப் போராட்டங்களை விரும்பாதவர்கள், அகிம்சை வழியில் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என செல்வநாயகம், அமிர்தலிங்கம் ஆகியோர் தலைமையில் செயல்படும் தொடர்ச்சியைக் கொண்டவர் சீனித்தம்பி யோகேஸ்வரன். அவர் சமீபத்தில் ஞானதேசிகனை அவரது சொந்த வழக்கறிஞர் அலுவலகத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறார்."ராஜிவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை அமல்படுத்தி தர, இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களுக்கென ஒரு சுயாட்சி கொண்ட …
-
- 4 replies
- 1.1k views
-
-
'மனிக்பாம் முகாம் உள்ளேயே மக்கள் இடமாற்றப்படுகின்றனர்'' இலங்கையின் வடக்கே வவுனியா மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள, மீள்குடியேற்றத்துக்காக காத்திருக்கின்ற குடும்பங்களில் ஒரு பகுதியினரை அவர்கள் இருக்குமிடத்தில் இருந்து வேறிடத்திற்கு மாறி குடியிருக்குமாறு அங்குள்ள அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக அந்த மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மனிக்பாம் முகாம்- (படம் 8 ஜூன் 2009) மனிக்பாம் இடைத்தங்கல் முகாமுக்குள்ளேயே இடத்திற்கு இடம் தம்மை மாற்றிக் கொண்டிருக்கும் இந்த நடவடிக்கைகளைக் கைவிட்டு, தங்களை விரைவில் தமது சொந்த இடமாகிய முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்ற வேண்டும் என்று அந்த மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள். மனிக்பாம…
-
- 2 replies
- 545 views
-