ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143354 topics in this forum
-
நாடு தன்னுடையது என்ற திமிரே துரியோதனன் தோற்கக்காரணம் பாரதப் போர் நடப்பதை தருமர் ஒருபோதும் விரும்பவில்லை. போர் நடந்தால் அதன் முடிபு அழிவாகவே இருக்கும். அழிவை ஏற்படுத்திய எவரும் நிம்மதியாக இருக்க முடியாது. அதனால் எவ்வளவு தூரம் விட்டுக் கொடுக்க முடியுமோ அந்தளவிற்கு விட்டுக் கொடுத்து போரைத் தவிர்ப்பதே தருமரின் நோக்காக இருந்தது. எனினும் நாடு முழுவதும் தனது ஆட்சியின் கீழ் இருக்க வேண்டும் என்பது துரியோதனனின் நிலைப்பாடு. பாண்டவர்கள் வாழ்வதற்குக்கூட இடம் தர முடியாது என்பது துரியோதனனின் முடிபு. யுத்தத்தை விரும்பாத தருமர் ஐந்து வீடு தந்தால் போதும், நாங்கள் வேறெதுவும் கேட்க மாட்டோம் என்ற செய்தியை துரியோதனனுக்கு தெரியப்படுத்துகின்றார். துரியோதனனோ ஐந்து வீடும் தர முடியாது என்…
-
- 1 reply
- 1.2k views
-
-
இனம் சார்ந்து மக்களை கூருணர்ச்சிப்படுத்துவதன் மூலம் தம்மை பிரபல்யப்படுத்த முனையும் ஊடகங்களால் உயிரச்சம் கலந்த நம்பிக்கையற்ற வாழ்க்கை நிலைக்குள் எம்மக்களை தள்ளிவிட முடியுமே தவிர, எம் மக்கள் பாதுகாப்பான நம்பிக்கைதரும் ஒரு சூழலை நோக்கி நகர்வதற்கு இவை ஒருபோதும் உதவப் போவதில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு புதிய நம்பிக்கையுடன், புதியதொரு சூழலில் தம்மை மீளவும் நிலைப்படுத்திக் கொள்ள தேவையான நம்பிக்கையை நம் தமிழ்த் தலைமைகள் வழங்க வேண்டிய ஒரு சூழலில் பாதுகாப்பற்ற அச்ச உணர்வை தோற்றுவிப்பதன் மூலம் தம் வாழ்வையே வெறுமையாகவும், வெறுப்பாகவும் சிந்திக்கின்ற ஒரு நிலைமையை இந்த ஊடகங்கள் ஏற்படுத்த முனைகின்றன. குண்டு சத்தங்கள் ஒய்ந்து போயுள்ள …
-
- 20 replies
- 1.7k views
-
-
சென்னையில் நேற்றுக்காலை இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவம் ஒன்றில் கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் படுகாயம் அடைந்திருக்கின்றார். இது பற்றி மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சியைச் சேர்ந்த 35 வயதுடைய முந்தன் நந்தினி என்ற பெண் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள கல்லூரி ஒன்றிற்கு தனது பிள்ளைகளை விட்டுவிட்டு வீதியைக் கடக்க முற்பட்டபோது மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்துக்குள்ளானார். சம்பவத்தில் படுகாயம் அடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவரது கால் முறிவடைந்திருப்பதாகவும் சென்னையில் இருந்து சரிதம் செய்தியாளர் தெரிவிக்கின்றார். http://www.saritham.com/?p=47065
-
- 0 replies
- 862 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்களை தற்போது உதாசீனப்படுத்தி வருவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில், மக்களின் நலனுக்காகவே, தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.இருந்த பொழுதிலும், தாம் கூட்டமைப்பை விட்டு வெளியெறப் போவதில்லை என தெரிவித்த அவர் மக்களின் அபிலாசைகளைக் கருத்தில் கொண்டு கூட்டமைப்பு சிந்தித்து செயல்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். http://www.saritham.com/?p=47058
-
- 0 replies
- 618 views
-
-
யாழ். மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தோரில் 28,000 பேரை மீண்டும் அப்பட்டியலில் இணைத்துக்கொள்வதற்கு தேர்தல் அதிகாரிகள் தீர்மானித்தள்ளனர். யாழ் மாவட்ட வாக்காளர் பட்டியலில் இருந்து 41,000 பேரை நீக்குவதற்கு ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்ததாகவும் எனினும் மக்களின் முறைப்பாட்டையடுத்து 28,000 பேரை மீண்டும் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டதாகவும் யாழ் மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் பி.குகநாதன் தெரிவித்தார். http://www.tamilthai...newsite/?p=2954
-
- 5 replies
- 912 views
-
-
ஐ.நா மனித உரிமை பேரவையின் 19வது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 27ம் நாள் முதல், நான்குவார காலங்களுக்கு இடம்பெறவுள்ள நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நீதிக்காய் ஒன்றிணைவோம் எனும் மாபெரும் மக்கள் எழுச்சி நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்துள்ளது. தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசாங்கத்தின் போர்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை தொடர்பில், சுயாதீன சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றிணை உருவாக்குமாறு, உலகெங்கும் குரல்கள் மேலெழுந்து வரும் நிலையில், நீதிக்காய் ஒன்றிணைவோம் எனும் மாபெரும் மக்கள் எழுச்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடங்கவுள்ள ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடர், சிறிலங்கா அரசாங்கத்துக்கு கடும் நெருக்கடியை கொடுக்கு…
-
- 3 replies
- 706 views
-
-
சிறிலங்கா அரசினது மக்கள் தொடர்பு மற்றும் பொதுவிவகார அமைச்சராகவுள்ள சர்ச்சசைக்குரியவரான மேர்வின் சில்வா மீது களனி பிரதேச சபை தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒழுக்காற்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அதேவேளை எந்த ஒரு விசாரணையையும் எதிர்கொள்ள தயார் எனவும் தம்மீதான குற்றச்சாட்டுக்கு ஒழுக்காற்று விசாரணையை ஆரம்பிக்குமாறு தானே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை கேட்டுக்கொண்டதாகவும் மேர்வின் சில்வா கூறியுள்ளார். களனி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பௌத்த மத தலைவர்கள் மாத்திரமல்லாது களனி மக்களும் தன்னுடயே இருப்பதாகவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார். http:/…
-
- 4 replies
- 763 views
-
-
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, ராஜதந்திர ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவதற்காகவே, இலங்கை வருவதாகவும் அவரது வருகை இலங்கை அரசாங்கத்திற்கு எந்த விதத்திலும் அழுத்தங்களை கொடுக்கும்படி இருக்காது எனவும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். இந்திய அமைச்சர் தனது விஜயத்தின் போது, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து, இதுவரை இந்தியாவிடம் இருந்து பாதகமான கருத்துக்களை இந்தியா வெளியிடவில்லை எனவும் வீரதுங்க மேலும் கூறியுள்ளார். http://www.globaltam...IN/article.aspx
-
- 3 replies
- 518 views
-
-
ஜனநாயகம் என்பது வெறும் தேர்தல்களைக் குறிக்காது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசீயா புட்டீனாஸ் தெரிவித்துள்ளார். வெறுமனே தேர்தல்களை நடத்துவதன் மூலம் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியாது எனவும், ஜனநாயகம் என்பது அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துவதாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கருத்து சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். தனிப்பட்ட கட்சியொன்று வெற்றியீட்டுகின்றதா அல்லது தோல்வியடைகின்றதா என்பதனை விடவும், நாட்டில் அடிப்படை உரிமைகள் நிலைநாட்டப்பட்டுள்ளனவா என்பதே தமது பிரதான கவனமாக அமையும் என புட்டீனாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் ஜனநயாகம் வலுவாக காணப்படுகின்றதா அல்லது பலவீனமடை…
-
- 3 replies
- 659 views
-
-
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வளாகத்தினுள் இருந்த நினைவுச் சிலையொன்றை பெற்றோல் குண்டு வீசி சேதப்படுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர். நேற்று அதிகாலை ஒன்றரை மணியளவில் குறித்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து ஒன்று திரண்ட பல்கலைக்கழக மாணவர்கள் காலை 10 மணியளவில் ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கினர். இவ்வார்ப்பாட்டமானது ஹவ்லொக் வீதியினூடாக நகர்ந்து காலி வீதியை அடைந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்துக்கு எதிராக பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு பல்வேறு வாசகங்களை பொறிக்கப்பட்ட சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ஸ்ரீ ஜயவர்தன…
-
- 3 replies
- 680 views
-
-
மது தான் வாழ்க்கை என்று அலையும் அப்பாக்களே உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தி பற்ரி சற்ரேனும் சிந்தியுங்கள்...... உங்களின் இந்த சிறு தனத்தால் சின்னாபின்னமாகி போகும் உங்கள் சிறுவர்களின் வாழ்வை பற்ரி சிந்தியுங்கள்...
-
- 3 replies
- 1.7k views
-
-
மிகப் பிரமாண்டமாகப் புனரமைக்கப்பட்டு வரும் நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலயத்தின் நிழற்படத்தொகுப்பு எதிர்வரும் மகா கும்பாபிசேகத்தினை முன்னிட்டு நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் இன்று, நயினாதீவு பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள், நயினை வாழ் மக்கள் அனைவராலும் ஒன்றிணைந்து செய்யப்பட்ட சரியை தொண்டின் சில காட்சிகள். thx http://www.newjaffna.com
-
- 1 reply
- 1.5k views
-
-
இலங்கை தமிழர்கள் அனைத்து உரிமைகளையும் மீண்டும் பெற வேண்டும் என்று இந்திய மத்திய மந்திரி ஜி.கே.வாசன் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தமிழர்கள் அனைத்து உரிமைகளையும் மீண்டும் பெற வேண்டும் எனவும் இதற்கான முழு உதவியையும் இந்தியா மேற்கொள்ளும் எனவும், இந்திய மத்திய மந்திரி ஜி.கே.வாசன் குறிப்பிட்டுள்ளார். ´தமிழினத்தின் இதயம் இலங்கை´ என்ற நூல் வெளியீட்டு விழாவில் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். 1927ல் காந்தி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விடுதலை விதை விதைத்தது முதல் நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் இலங்கை தமிழர்களுக்காக ஆற்றிய பணிகள் பற்றி குறித்து ஜி.கே.வாசன் தனது உரையில் குறிப்பிட்டார். எனினும், ராஜீவ் காந்தி படு…
-
- 3 replies
- 1.1k views
-
-
பாதுகாப்பு விவகாரங்களில் இலங்கை தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையையும் இந்தியாவையும் பாதிக்கும் பல முக்கிய பாதுகாப்பு காரணிகள் காணப்படுகின்றன. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலத்திலும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்பட்டது. இடம்பெயர் மக்களை மீள்குடியேற்றுவதற்கும் முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கும் இந்தியா தொடர்ச்சியாக உதவிகளை வழங்கி வருகின்றது. உறவுகளை மேலும் மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் ந…
-
- 1 reply
- 477 views
-
-
கருணா ரகசிய கனடா பயணம் விநாயகமூர்த்தி முரளிதரன் என அழைக்கப்படும் கருணா கனடாவிற்கு இலங்கை அரசு தரப்பிலான பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்று இலங்கைத் தமிழ் இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் 27ம் தேதி இலங்கை அதிபர் ராஜபட்சவின் நெருங்கிய ஆலோசகர் ஒருவருடன் இணைந்து மேற்கொண்ட இப் பயணத்தின் போது விடுதலைப்புலிகளின் செயல்பாடுகள் தொடர்பான கருத்துப் பரிமாறல்கள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவருகிறது. அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கனடாவிற்கு அழைத்து அதனுடன் அதிகாரப்பூர்வ சந்திப்புக்களை கனடா மேற்கொண்டதையடுத்து இந்த விஷயத்தில் இலங்கை விழிப்பாகச் செயற்பட்டு வட-கிழக்குத் தமிழர்கள் இணைந்து வாழ்தல் சாத்தியமல்ல என்ற கருத்தை கருணா மூலம் கனடாவின் முடிவெடுக்கும் தரப்பு…
-
- 44 replies
- 3.7k views
-
-
இலங்கை தமிழர்கள் அனைத்து உரிமைகளையும் மீண்டும் பெற வேண்டும். அதற்கு இந்திய அரசு உதவி செய்யும். இவ்வாறு ´தமிழினத்தின் இதயம் இலங்கை´ என்ற நூல் வெளியீட்டு விழாவில் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் பேசுகையில், இலங்கை இந்தியா நட்பும், உறவும் நீண்டு நெடியது. 1927ல் காந்தி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விடுதலை விதை விதைத்தது முதல் நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் இலங்கை தமிழர்களுக்காக ஆற்றிய பணிகள் பற்றி இதில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்னர் இந்த உறவு அறுந்து போனது என்று வேதனையோடு அவர் குறிப்பிடுகிறார். மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இலங்கை தமிழர்களுக்கு செய்யக்கூடிய நன்மைகளை சிறப்பாக…
-
- 3 replies
- 878 views
-
-
கடந்த புதுவருடத் தினத்தன்று, GTV இல் சபா நாவலனின் கலந்துரையாடல் ஒன்று இடம்ப்பெற்றிருந்தது. அவர் தன் மொழித்திறனால் எமது ஈழப் பிரச்சினையை நன்றாக வர்ணனை செய்து கொண்டிருந்தார். ஒரு விளையாட்டுப் போட்டி வர்ணனை செய்யப்படுதல் என்பதில்; போட்டியாளன் திறன், வர்ணனையாளன் திறன் என்ற இரண்டிற்கும் மிகப் பெரிய வேறுபாடு கொண்டது. ஆனால் ஒரு போராட்டத்தின்- வர்ணனையாளன்- மேதாவித்தனம் போராளிகளின் தலையில் இலகுவாக குட்டு வைத்து விடுகின்றது! "சுகம் வரும், ஆனால் ஆள் தப்பாது!" என்ற நிலை கண்கூடான பிறகும், தொடரப்படும் அந்த வைத்தியம்; விண்ணுக்கும், மண்ணுக்குமாய் துள்ளியேதான் கொண்டாடும் தகுதிதான் கொண்டதா? ஆனால் இந்த சபா நாவலன், அப்படியே விண்ணுக்கும், மண்ணுக்குமாய் குதித்து, அன்றைய EPRLF இன் புயபல …
-
- 1 reply
- 1.1k views
-
-
வலுவான நிலையில் புலிகள்; கோத்தபாய அறிவிப்பு! [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-01-05 09:19:36| யாழ்ப்பாணம்] தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் வலுவான நிலையில் காணப்படுகின்றது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள், புலி ஆதரவாளர்கள், புலி அனுதாபிகள் உள்ளிட்ட தரப்பினர் தொடர்ச்சியாக பல்வேறு வழிகளில் பல்வேறு நாடுகளில் இயங்கி வருவதாகவும் பாதுகாப்புச் செயலர் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயகக் கட்டமைப்பில் இணைந்து கொண்டவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், ஆயுததாரிகள் எனப் பல்வேறு போர்வையில் புலி ஆதரவாளர்கள் செயற்பட்டு வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்த பாய ராஜபக்ஷ தெரிவித்தார். தொழில்சார் நிபுண…
-
- 22 replies
- 2.7k views
-
-
ஈழ இனப்படுகொலையை விசாரிக்கக் கோரி இதுவரை எத்தனையோ கையெழுத்து இயக்கங்கள் இணையத்தில் தொடங்கப்பட்டுள்ளன. நீங்களும் அப்படி எத்தனையோ விண்ணப்பங்களில் கையெழுத்திட்டிருப்பீர்கள். ஆனால் இப்பொழுது, ஈழ இனப்படுகொலைக்கு விசாரணை கோரி 'அமெரிக்க வெள்ளை மாளிகையின் இணையத்தளத்திலேயே' ஒரு விண்ணப்பம் தொடங்கப்பட்டிருக்கிறது! எனவே இது கண்டிப்பாக அமெரிக்க அதிபரின் நேரடிப் பார்வைக்குக் கொண்டு செல்லப்படும் என நாம் உறுதியாக நம்பலாம். ஆகவே கருணை கூர்ந்து இதில் கையெழுத்திடுங்கள் நண்பர்களே! வரும் அக்டோபர் 29க்குள் இதில் 5000 கையெழுத்துகள் சேகரிக்கப்பட்டாக வேண்டுமாம். எனவே நீங்கள் இதில் கையெழுத்திடுவதோடு மட்டுமின்றி, தங்கள் குடும்பத்தினரின் கையெழுத்துகளையும் தயவு செய்து சேர்க்கும்படியும்,…
-
- 83 replies
- 9.3k views
-
-
கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலைக்கு எரிபொருள்கொண்டு செல்லும் நிலக்கீழ் குழாயில் சேதம் ஏற்பட்டதால் விமானங்களுக்குப் பயன்படுத்தப்படும் பெருமளவு எரிபொருள் கசிந்துள்ளதாக பெற்றோலியத்துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்தனர். களனி பாலத்திற்கு அருகிலேயே இக்கசிவு ஏற்பட்டுள்ளது. சுமார் அரைமணித்தியாலம் இக்கசிவு இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தமிழ் மிரருக்குத் தெரிவித்தனர். நேற்று பிற்பகல் 3 மணியளவில் இக்கசிவு ஆரம்பித்தது. பெருமளவு எண்ணெய் கசிந்து நிலத்தில் வழிந்தோடியபோதிலும் இக்கசிவு ஏற்பட்ட சரியான இடத்தை நேற்றிரவு வரை கண்டறிய முடியவில்லை எனவும் அவ்வதிகாரிகள் தெரிவித்தனர். இக்கசிவினால் ஏற்பட்ட இழப்பின் அளவும் இன்னும் மதிப்பிடப்படவில்லை. துறைமுகத்திலுள்…
-
- 5 replies
- 759 views
-
-
சீனப் பிரஜைகள் இலங்கை தொழிற்சந்தையை இலக்கு வைத்து படையெடுத்து வருவதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. பல்லாயிரக் கணக்கான சீனர்கள் கடந்த ஆண்டில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். 2011ம் ஆண்டில் சுமார் 60000 சீனப் பிரஜைகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத சுற்றுலாத்துறை அமைச்சின் உயரதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். சீன அரசாங்கத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களில் பணியாற்றும் நோக்கிலேயே பல சீனர்கள் இலங்கைக்கு விஜயம் செய்கின்றனர். இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்த 60000 சீனப் பிரஜைகளில், 9000 பேர் இன்னமும் நாடு திரும்பவில்லை. எவ்வாறெனினும், இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சு சீனர்களின் வருகையை சுற்றுலாப் ப…
-
- 7 replies
- 1.1k views
-
-
-
- 2 replies
- 1.7k views
-
-
கே.பி. இலங்கையிலிருப்பதை இன்டர்போலுக்கு அறிவிப்பேன்: ஜயலத் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பிரதம ஆயுதக் கொள்வனவாளரான குமரன் பத்மநாதன் (கே.பி.) இலங்கை அதிகாரிகளின் தடுப்புக்காவலில் இருப்பதை இன்டர்போலுக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்போவதாக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன கூறியுள்ளார். இன்டர்போலினால் தேடப்படும் கிரிமினல்கள் பட்டியலில் கே.பியும் உள்ளதாகவும் எனவே அவருக்கு இலங்கை புகலிடம் அளிக்க முடியாது எனவும் ஜயலத் ஜயவர்தன நேற்று கூறினார். ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக இந்தியாவினால் கே.பி. தேடப்படுகிறார். அண்மையில் நான் சென்னை பொலிஸ் ஆணையாளரை சந்தித்து, இலங்கையில் கே.பி. இருப்பதை தெரிவித்தேன். இது தொடர்பான ஆவணங்களையும் நான் கையளித்தேன்'…
-
- 5 replies
- 1.4k views
-
-
தாம் விருப்பம் தெரிவிக்காத பட்சத்தில் தமது குடும்பத்தினர் விடுதலைக்கான மன்னிப்பை கோர மாட்டார்கள் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா வலியுறுத்தியுள்ளார். உடற்கூற்று சிகிச்சைகளுக்காக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிற்கு இன்று அழைத்துவரப்பட்ட போதே அவர் இந்தக் கருத்தினை வெளியிட்டார். தாம் விடுதலை செய்யப்பட வேண்டுமாயின் தமது மனைவி மன்னிப்புக் கோரவேண்டும் என்று அமைச்சர் விமல் வீரவங்ச கூறியுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி கூறினார். தாம் விரும்பும் வரை அது நடக்காது எனக் குறிப்பிட்ட அவர், அமைச்சரின் குடும்பத்தில் என்ன நேருகின்றது எனத் தெரியாது எனக் குறிப்பிட்டார். கொலைப் பட்டியலில் அமைச்சர் விமல் வீரவங்சவின் பெயர் இருந்ததாக கூறப்படுதாக சுட்டிக…
-
- 6 replies
- 1.6k views
-
-
சிலாபம் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ அறையின் அருகில் கைக்குண்டு ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு கலகம் விளைவித்த பௌத்த பிக்கு தொடர்பில் சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்த தவறிய குற்றச்சாட்டில் சிலாபம் மற்றும் கருவலகஸ்வெள பொலிஸ் நிலையங்களின் எட்டு பொலிஸார் உடனடியாக அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். வடமேல் மாகாண சிரேஷ்ட உதவி பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவினால் இந்த உத்தரவு நேற்று முன்தினம் இரவு வழங்கப்பட்டுள்ளது. சிலாபம் பொலிஸ் நிலையத்தின் இருவரின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், மேலும் நால்வருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. கருவலகஸ்வௌ பொலிஸ் நிலையத்தின் நான்கு பொலிஸாரும் இவ்வாறு இடமாற்றம் செய்…
-
- 0 replies
- 629 views
-