ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
வவுனியா பொதுமருத்துவமனைப் பணியாளர் ஒருவர் ஈபிடிபியினரால் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று மகாறம்பைக்குளம் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா பொதுமருத்துவமனைப் பணியாளரான திருச்செல்வம் என்பவர் மகாறம்பைக்குளம் சிறீராமபுரம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது அந்தப் பகுதியில் மதுபோதையில் நின்றிருந்த பெரியவன் என்பவர் தலைமையிலான ஈபிடிபியினர் அவரை வலிந்து சண்டைக்கு இழுத்து அடித்துப் படுகொலை செய்திருக்கின்றனர். http://www.saritham.com/?p=44319
-
- 1 reply
- 798 views
-
-
இலங்கைக்கு எதிராக செயற்பட்ட 70 பேருக்கு சர்வதேச பொலிஸார் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளனர் என திவயினபத்தரிகை செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இவர்களில் 29 பேர் பாரிய பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடைய தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. பல கோடி ரூபா வெட் வரி மோசடியில் ஈடுபட்ட கயிப் குதுப்தீனின் பெயரும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு அரச சார்பற்ற நிறுவனமொன்றின் உப தலைவராக கடமையாற்றிய வேலுப்பிள்ளை ரேமன் என்பவருக்கு எதிராகவும் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. வர்த்தகத்தில் ஈடுபட்ட ஐந்து பெண்கள், இணைய தளமொன்றை நடத்திய நபர் ஒருவர் ஆகியோரது பெயர்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. மு…
-
- 0 replies
- 963 views
-
-
கருணாவுக்கு கோட் சூட் போட்டு வந்து அறிக்கை வாசிக்கத்தான் தெரியும். சனம் படும் கஷ்டம் தெரியாது என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா குற்றம் சாட்டினார். விஜயகலா அக்காவுக்கு என்ர கோட் சூட்டில தான் எப்பவும் ஒரு கண் என இதற்கு பதிலளித்த கருணா நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மீள்குடியேற்றம் செய்வதற்கு இன்னும் 6647பேர் மட்டும் தான் இருக்கிறார்கள். ஏனையவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு விட்டார்கள் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் கருணா தெரிவித்த போது நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா குறுக்கிட்டு இவருக்கு நாளுக்கொரு கோட்டை போட்டு வந்து அறிக்கை வாசிக்கத்தான் தெரியும். வன்னியில சனம் படும் கஷ்டம் இவருக்கு தெரியாது. பெயரளவிலதான் அங்க மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருக்கிறார்களே ஒழிய அ…
-
- 9 replies
- 2.5k views
-
-
ஜனாதிபதி பொது மன்னிப்பு யோசனையை எதிர்க்க மாட்டேன் - பொன்சேகா ஜனாதிபதி மன்னிப்புக்கென ஏதாவது தரப்பு முன்வைக்கும் யோசனையை தான் எதிர்க்கப் போவதில்லை என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஆனால் பொன்சேகாவோ அவரது குடும்ப அங்கத்தவர்களோ அது தொடர்பில் எவ்வித யோசனைகளையும் கோரிக்கைகளையும் முன்வைக்க மாட்டார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். பொன்சேகாவை பார்வையிட இன்று (17) சிறைச்சாலைக்குச் சென்ற திஸ்ஸ அத்தநாயக்க அவரை பார்த்துவிட்டு வெளியில் வந்து ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார். ஜனாதிபதி மன்னிப்பு குறித்த யோசனையை எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்படவுள்ள நிலையில் அதனை ஜனாதிபதியிடம் சம…
-
- 0 replies
- 699 views
-
-
தன்னை மன்னித்து விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் யாராவது வேண்டுகோள் விடுத்தால் அதனைத் தான் எதிர்க்கப் போவதில்லை என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார் எனவும் ஆனால், சரத் பொன்சேகாவின் குடும்பத்தினர் எவரும் அவரின் விடுதலை குறித்த கோரிக்கை எதனையும் முன்வைக்கமாட்டார்கள் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகாவை இன்று சந்தித்துப் பேசிய பின்னரே திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை, சரத் பொன்சேகாவுக்கு மன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்படவுள்ள கோரிக்கையைக் கொழும்பு, கொம்பனித் தெரு, கங்காராம…
-
- 1 reply
- 984 views
-
-
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை இன்னொரு சன்சோனிக் கமிஷன் ஏமாற்று வேலை சிறிலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை ஏறத்தாழ பழைய சன்சோனிக் கமிசன் அறிக்கை போல குற்றவாளி தப்புவதற்கு வசதியாக ஓட்டைகளை வைத்து தயாரிக்கப்பட்டுள்ளதை பள்ளிக்கூடம் போகாத பாமரனே விளங்கிக் கொள்ள முடியும். அதில் இணைக்கப்பட்டுள்ள சொற்பதங்கள் பாம்புக்கு வாலும் கீரிக்கு தலையும் காட்டுவதுபோல விலாங்கு தன்மையுடன் உள்ளது. இதை சர்வதேச மன்னிப்பு சபை பக்கச் சார்பானது என்று கண்டித்துள்ளது. சர்வதேச மன்னிப்பு சபைகூட உருப்படியில்லாத ஒரு சபையாக இருந்தாலும் ஏதோ கண்டித்திருக்கிறது. இது குறித்த அவர்களுடைய செய்தி இப்படி உள்ளது. தாங்கள் அஞ்சியதைப் போன்றே சிறிலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக…
-
- 1 reply
- 681 views
-
-
யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் குடியிருக்கும் மக்களை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்துவதற்கு சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். வட பகுதியை நோக்கி விரைவில் புகையிரதம் வரவுள்ளதாகவும அப்பகுதியில் இருக்கும் மக்களை அப்புறப்படுத்துவதற்கு புகையிரதத் திணைக்களம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பகுதியில் 30க்கு மேற்பட்ட மக்கள் குடியிருப்பதாகவும் பிரதேச ரீதியில் அவர்களை எழுப்புவதற்கு புகையிரதத் திணைக்களம் நேற்று வெள்ளிக்கிழமை அறிவிப்பு விடுத்துள்ளதாகவும் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். http://www.seithy.co...&language=tamil
-
- 2 replies
- 1.1k views
-
-
ஆணைக்குழுவின் அறிக்கையை கூட்டமைப்பு நிராகரித்துள்ளது நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழுவின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு “அடிப்படையில் ஏற்றுக்கொள்ளவில்லை” என்று கூறி நிராகரித்துள்ளது. அறிக்கை குறித்த தமது நிலைப்பாட்டை விளக்கி ஒரு விரிவான அறிக்கையை கூட்டமைப்பு விடும் என்றும் அதன் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். குற்றம் எதுவும் புரியவில்லை என்று கூறி இராணுவத்தைப் பாதுகாக்கும் வகையிலேயே அறிக்கை இருப்பதாக அவர் தெரிவித்தார். அந்த அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ள அரசியல் தீர்வுக்கான பரிந்துரைகள் அர்த்தமற்றவை, பொருளற்றவை, அது குறித்து விரிவாக ஆய்ந்தறியாமல் தெரிவிக்கப்பட்டமை என்று மேலும் அவர் கூறி உள்ளார். …
-
- 8 replies
- 872 views
-
-
வெளியாகியுள்ள கற்றுக்கொண்ட பாடத்திற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பொதுமக்களை குறிவைத்து இராணுவம் எத் தாக்குதலையும் நடத்தவில்லை என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக யுத்த சூனியப் பிரதேசத்தில் இலங்கை இராணுவம் எத் தாக்குதலையும் நடத்தவில்லை என அவ்வறிக்கையில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிறிய அளவு பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் அவ்வறிக்கை மேலும் தெரிவித்துள்ளமை வேடிக்கையான விடையம் என சனல் 4 தொலைக்காட்ச்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அது செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஐ.நாவின் அறிக்கையை அது இணைத்து சில ஆதாரங்களையும் சுட்டிக்காட்டியுள்ளது. கொலைக்களங்கள் என்னும் ஆவணப்படத்தை தயாரித்த "காலம் மக்ரே" அவர்கள் இதில் பல விளக்கங்களைக்…
-
- 2 replies
- 1.1k views
-
-
2012 ம் ஆண்டு சிறிலங்கா அரசுக்கும் ஈழத் தமிழர் தேசத்துக்கும் சவால் மிக்கதொரு ஆண்டாக அமையப் போகிறது. இந்த ஆண்டில் எவர் முன்னோக்கி ஒடுகிறார்களோ அவர்களே அடுத்த கட்ட வெற்றியைத் தமதாக்கிக் கொள்ளும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. இவ்வாறு தற்போது அமெரிக்காவில் இடம்பெற்று வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மூன்றாவது நாடாளுமன்ற முதல் நாள் அமர்வில் உரையாற்றும் போதே பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்தார். ஈழத் தமிழ் மக்கள் மீதான சிறிலங்காவின் இனப்படுகொலையினை யுத்தக்குற்றங்களாகவோ குறுக்கிவிடுவதற்கோ அல்லது சில யுத்த அத்துமீறலாகப் புறந்தள்ளி விடுவதற்கோ நாம் இடமளிக்க முடியாது என இடித்துரைத்த பிரதமர் அவர்கள் 2012ம் ஆண்டு ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித…
-
- 13 replies
- 1.5k views
-
-
உலக மனித உரிமைகள் தினத்தில் யாழில் வைத்து காணாமற்போன மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர்களான லலீத் மற்றும் குகனை விடுதலை செய்யுமாறு கோரி இன்று நண்பகல் யாழ்.பஸ் நிலையத்தில் மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றுள்ளது. ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு அரசுக்கு எதிரானகவும் அரசின் ஜனநாயக நடைமுறைக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியவாறு உணர்வு பூர்வமாக ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர் இவர்களின் ஆர்பாட்டத்தினை பொலிஸார் முதலில் தடுத்து நிறுத்தியதும் ஆர்பாட்டக்காரர்கள் ஆக்ரோஷமாக தங்கள் உணர்வுகளை வெளிப்டுத்தி ஆர்பாட்டம் செய்தனர். இந்த ஆர்பாட்டத்தில் ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் குமார, உதுல் பிரேமரத்ன மற்றும் மக்கள் போராட்ட இயக்கத்தினர் பெருமளவில் கலந்து கொண்டு லலீ…
-
- 0 replies
- 573 views
-
-
மரண தண்டனை ஒழிப்போம்! மனிதநேயம் காப்போம்!! இன்று 17/12/2011 சனிக்கிழமை காலை 12.00 மணிக்கு அகில இந்திய அளவில் ஒரு மிஸ்டு கால் (missed call) தருவதன் மூலம் மரண தண்டனைக்கு எதிரான மனநிலை உள்ளவர்களின் ஆதரவு திரட்டும் எண்ணத்தில் திரைப்படத்துறையினர் ஒரு நம்பரை வெளியிட்டனர் . எனவே, மரண தண்டனைக்கு எதிராக நமது எதிர்ப்பை அந்த எண்ணில் பதிவு செய்வது என்பது நமது வரலாற்றுக் கடமையாகும். மரண தண்டனை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பாக மூன்று தமிழர் உயிர் காக்கவும்,புத்தன்,காந்தி, வள்ளலார் பிறந்த இந்த மண்ணில் தூக்கு தண்டனையே இல்லது ஒழிக்கவும், அடுத்த கட்ட போராட்டமாக இந்த மூவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக பொதுமக்களின் கருத்துக்களை ஒருங்கிணைக்கும் வேலையை…
-
- 0 replies
- 716 views
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து பகிரங்கப்படுத்தியுள்ளதை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் வரவேற்றுள்ளார். நேற்றிரவு ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. “இந்த அறிக்கையை ஐ.நா உன்னிப்பாக ஆய்வு செய்யவுள்ளது. நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும், நல்லிணக்கத்தை நோக்கிய முக்கியமான அடியெடுத்து வைப்பதற்கும் அவசியமான பொறுப்புக் கூறுதல் பற்றிய கவலைகளுக்கு பதிலளிப்பதற்கான தனது கடப்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் முன்னோக்கி நகர்த்தும் என்று ஐ.நா பொதுச்செயலர் நம்புகிறார்“ என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. http://www.puthinapp..…
-
- 0 replies
- 1.3k views
-
-
இராணுவமும், யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைமையும்! :கெரபொத்தா வரலாற்றில் அதிகமாகத் தண்டனைகள் வழங்கப்பட்ட பூமியை அணைத்தபடி ஏ9 வீதி சாய்ந்திருக்கிறது. பாரிய கலவரமொன்றில் யுத்த டாங்கிகளாலும் கனரக வாகனங்களாலும் துளைக்கப்பட்ட காயங்கள் எக்கணத்திலும் மீண்டும் கிளரப்பட இடமிருக்கிறதெனத் துப்பாக்கிகளும் பங்கர்களும் இராணுவ முகாம்களும் எதிர்வு கூறுகின்றன. முட்புதர்களிடையே ஒளிந்திருக்கும் நிலக்கண்ணி வெடிகள் குறைந்தபட்சம் ஒரு பனங்காயாவது தனது உடலின் மீது விழும்வரை காத்திருக்கின்றன. நாற்புறத்திலும் கேட்கும் சிங்களக் குரல்கள் ‘இம்முறை வந்திருப்பது விருந்தாளிகளாகவல்ல, நிரந்தரமாகத் தங்குவதற்கே’ எனக் கத்திச் சொல்கின்றன. ‘மனிதாபிமான நடவடிக்கை’யின் பின்னணியில் வந்திருக்கும் …
-
- 0 replies
- 662 views
-
-
'ஐ.நா. நிபுணர்குழு பரிந்துரைக்கு அமைய சர்வதேச விசாரணை பொறிமுறை தேவை' இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் பற்றி விசாரணை நடத்துவது தொடர்பிலோ அல்லது குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது குறித்தோ கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதியின் ஆணைக்குழு எந்தவித வழிகாட்டுதல்களையும் முன்வைக்க தவறியுள்ளது. இதனால், ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு முன்வைத்த அறிக்கையின் பரிந்துரைக்கு அமைவாக சுதந்திரமான சர்வதேச விசாரணைப் பொறிமுறையின் தேவை உணரப்பட்டுள்ளது என்று நியூயோர்க்கை தளமாகக் கொண்ட சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/32803-q-q.h…
-
- 6 replies
- 5.4k views
-
-
தற்போதைய இலங்கையில்............ கோத்தபாயா என்ற பெயர் இருக்கும்வரை தமிழனுக்கு சாபக்கேடுதான்.தமிழர் தரப்புக்கு மட்டுமல்ல தனக்கெதிரானவர் யாராகவிருந்தாலும் அவர்மீது நடவடிக்கைதான்.இது மூன்று விதமாக அரங்கேறுகிறது.முதல் கட்டமாக மறைமுக நடவடிக்கை,பின்னர் சட்ட நடவடிக்கை,அதற்கும் ஈடு கொடுத்தால் வெள்ளைவான் கடத்தல்.இவருக்கு இலங்கையில் உள்ள ஜனாதிபதி முதல் அத்தனை அமைச்சர்களும் பயம்.இப்படியான ராட்சத கிஸ்டீரியா எனும் வியாதியால் பாதிக்கபட்டுள்ளார். நேற்று ஒரு அமர்வில் ஒருவரை சந்திக்க நேர்ந்தது.அவர் கூறிய தகவல் மிகவும் வேதனையானது.வெளி நாடுகளில் வாழும் புலம் பெயர் மக்களில் ஒரு பகுதியினர் மிகுந்த சிரமத்தின் மத்தியில் மூன்று கொள்கலன்களில் ஊனமடைந்தவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகளை அனுப்பியிருக…
-
- 0 replies
- 771 views
-
-
மக்கள் போராட்ட இயக்கத்தின் வாகனம் யாழில் இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல் மக்கள் போராட்ட இயக்கம்யாழ்ப்பாணத்தில் மக்கள் போராட்ட இயக்கத்தின் பிரதிநிதிகளின் வாகனம் இனம் தெரியாத மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களினால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அஜித்குமார தெரிவித்துள்ளார். தாங்கள் யாழ். பஸ் நிலையத்தில் போராட்டத்தை முடித்துக் கொண்டு தமது போராட்டம் தொடர்பாக உள்ளூர் ஊடகங்களுக்கு விளக்கி கூறச்சென்று வேளையிலேயே யாழ். கஸ்தூரியார் வீதியில் வைத்து தமது வாகனம் தாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இத் தாக்குதலின் காரணமாக வாகனத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது எவருக்கும் காயம் ஏற்படவி…
-
- 2 replies
- 653 views
-
-
இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரில் 11,812 புலிகள் மரணித்தனர் என தமது பூரன விசாரனையில் தெரியவந்துள்ளதாக நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2006 ஜுலையில் முதல் 2009 மே போர் முடிவுற்றது வரையிலான காலத்தில் இலங்கை அரசாங்கத்தின் படையினருக்கும்; புலிகளுக்கும் ஏற்பட்ட இழப்புகள் குறித்தும் ஆணைக்குழு அறிக்கையிட்டுள்ளது. இதன்படி 22,247 பேரை இந்தக் காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இழந்துள்ளதாகவும், இவர்களில் 11,812 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கைப் படைத்தரப்பில் தரப்பில் 5556 பேர் கொல்லப்பட்டனர் என்றும், போரின் போது 169 படையினர் காணாற்போனதாகவும், 28,414 படையினர் காயமடைந்ததாகவும்; தெரிவிக்கப்பட்டு…
-
- 0 replies
- 749 views
-
-
சிறிலங்கா அரசினால் வெளியிடப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக உடனடியாக கருத்து வெளியிட ஐ.நா மறுத்துள்ளது. இதுதொடர்பாக, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் பேச்சாளர் பர்ஹான் ஹக்கிடம், இன்னர் சிற்றிபிரஸ் கேள்வி எழுப்பியிருந்தது. அதற்குப் பதிலளித்த பர்ஹான் ஹக், “அறிக்கையை நன்றாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.“என்று கூறியுள்ளார். “மர்சுகி தருஸ்மன் தலைமையிலான நிபுணர்குழுவின் அறிக்கையின் உள்ளடக்கங்களை இந்த அறிக்கை கொண்டிருக்கிறதா என்பதை உறுப்பு நாடுகள் கவனிக்கும் என்று நாம் நம்புகிறோம். அதேவேளை பொறுப்புக் கூறுவதற்கான முயற்சிகளை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம்“ என்றும் அவர தெரிவித்துள்ளார். அதேவேளை, ஐ.நா பொத…
-
- 0 replies
- 564 views
-
-
போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தவோ அல்லது குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தகோ சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை எந்த வழிகாட்டுதலையும் வழங்கவில்லை. சுதந்திரமான அனைத்துலக விசாரணக்குழுவின் தேவையை இது உணர்த்துவதாக நியுயோர்க்கை தளமாக கொண்ட மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. “சிறிலங்காப் படைகளால் புரியப்பட்ட மோசமான மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொறுப்புக் கூறுவதற்கான முன்னேற்றமான நடவடிக்கைகளை மேற்கொள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தவறியுள்ளது. மோசமான மீறல்களில் தொடர்புடைய அரச மற்றும் இராணுவ அதிகாரிகளை பொறுப்புக் கூறவைப்பதற்கான யதார்த்தமான பாதையை நல்லிணக்க ஆணைக்குழு வழங்கத் தவறிவிட்டது. மீறல்கள் குறித்த விசாரணைகள் மற்றும் குற்றவாளிக…
-
- 0 replies
- 520 views
-
-
கனடாவில் உள்ள மிகப்பெரிய மார்க்கம் மாநகர சபை ஒவ்வொரு வருடத்திலும் வரும் தை 13ம், 14ம், 15ம் திகதிகளை தமிழர்களின் பாரம்பரிய நாட்களாகவும் தைப்பொங்கல் பண்டிகையை பாரம்பரிய விழாவாகவும் அங்கீகரித்துள்ளது. இதன் மூலம் கனடாவில் ஒரு தமிழர் பண்டிகையையும் அதனோடு சார்ந்த நாட்களையும் அதிகாரபூர்வமாக அங்கீகரித்த மாநகர சபை என்ற பெருமையை மேற்படி மார்க்கம் நகர சபை பெற்றுள்ளது. இவ்வாறு தைப்பொங்கல் திருநாள் மற்றும் அதனோடு சார்ந்த தை 13ம், 14ம், 15ம் திகதிகளை மேற்படி மாநகர சபை அதிகாரபூர்வமான அங்கீகரிப்பதற்கு காரணமாக இருந்தவர்கள் பலர். அவர்களுள் முதன்மையானவர் மார்க்கம் நகர சபையின் 7ம் வட்டார அங்கத்தவரும் மார்க்கம் நகர சபையின் மேயர் உட்பட அனைத்து அங்கத்தவர்களினதும் நன்மதிப்…
-
- 2 replies
- 812 views
-
-
இந்தியாவின் காதில் பூ சுற்றிய வடமாகாண சிங்கள ஆளுனரின் கூத்து இந்திய அரசினால் யாழ். மாவட்டத்துக்கு என்று ஒதுக்கப்பட்ட சைக்கிள்களில் ஐநூறை முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட வெலிஓயா பிரதேச செயலர் பிரிவுக்கு வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரஸ்ரீ வழங்கியுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: இந்திய அரசினால், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 10 ஆயிரம் சைக்கிள்களை இலவசமாக வழங்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக வட மாகாணத்தின் 5 மாவட்டங்களுக்கு தலா 2 ஆயிரம் சைக்கிள்கள் வீதம் ஒதுக்கப்பட்டன. ஆனால் யாழ். மாவட்டத்துக்கென வழங்கப்பட இருந்த 2 ஆயிரம் சைக்கிள்கள் 1,500 ஆகக் குறைக்கப்பட்டுள்ளன. இந்த 500 சைக்கிள்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள மக்களை …
-
- 1 reply
- 1.3k views
-
-
தமிழ்த் தேசிய நாடாளுமன்றத்திற்கு மக்களின் ஆதரவு இல்லாமல் தேர்வு செய்யப்பட்ட திரு.சுமந்திரன் தொடர்ந்தும் தமிழர்களுக்கு எதிரான செயற்பாட்டினை செய்து வருகின்றார். ஏற்கனவே இலண்டனில் நடந்த கூட்டத்தில் புலம்பெயர் மக்களின் செயற்பாடுகளை மோசமாக விமர்சித்து புலம்பெயர் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தவர், இப்போது பேரினவாதியோடு மட்டையாட்டம் ஆடி தமிழர்களின் இரத்தத்தை பேரினவாதி மகிந்தவுடன் பகிர்ந்துள்ளார். உலகம் முழுவதும் இளையோர்கள் சிங்கள அணியின் மட்டையாட்டத்தை புறக்கணிக்க இவர் அவர்களுடன் ஆடியது உலகத் தமிழர்களை பெரும் அவமானத்திற்குள் தள்ளியுள்ளது. திரு.சுமந்திரன் பொறுப்போடு தமிழர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும், இல்லாவிட்டால் த.தே.கூட்டமைப்பு அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். …
-
- 12 replies
- 3.4k views
-
-
போராயுதம் போகட்டும் அறிவாயுதத்தை தூக்குவோம் தீ பற்றி எரிகிறது. தீ ...தீ... இப்படி ஒருவர் கதறுகிறார். இன்னொருவரோ தீயைத் தணிப்பதற்கு வழி தேடுகிறார். தீ... தீ... என்று கதறி என்ன பயன்? தீயை எங்ஙனம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது எனச் சிந்தித்து சமயோசிதமாக செயற்படுவது அறிவின் பண்பட்டது. எனவே கத்திக் கதறுவதைவிட, காத்திரமான செயற்பாட்டை எடுப்பதுமேல்.தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் ஆயுதப் போராட்டத்தில் முப்பது ஆண்டுகளை தொலைத்துவிட்டனர்.இவ்வாறான நீண்ட ஆயுதப் போராட்டத்திற்கான காரணம் சேர் பொன்.இராமநாதன் போன்ற தமிழ்த் தலைவர்கள் அறிவாயுதத்தை பிரயோகிக்கத் தவறியமையாகும். அவர்கள் நினைத்திருந்தால், தமிழ் மக்கள் சகல உரிமைகளோடும் வாழும் வகை பெற்றிருப்பர். ஆனால், சேர் பொ…
-
- 0 replies
- 2.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் இடம்பெற்ற யுத்த மோதல்களின் போது அரச பாதுகாப்பு படையினர் செயற்பட்ட விதம் குறித்து மகிழ்ச்சி அடைவதாக ஜனாதிபதியால் நியாமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இன்று (16) பாராளுமன்றில் அவை முதல்வர் நிமல் சிறிபால டி சில்வாவினால் சமர்பிக்கப்பட்டது. இலங்கை அரசின் பாதுகாப்பு படையினர் சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறவில்லை என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் யுத்த சூனிய வலயத்தில் அரச பாதுகாப்பு படையினர் அநாவசியமாக பொது மக்களை இழக்கு வைத்து தாக்குதல்களை ம…
-
- 13 replies
- 2.6k views
-