ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143347 topics in this forum
-
கடத்தப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவன் வேதாரணியம் லத்தீஸ் (வயது 27) நேற்றிரவு விடுவிக்கப்பட்டுள்ளார் யாழ்.பல்கலைக்கழகத்தையண்டிய சிவன்-அம்மன் கோவிலடியினிலேயே வெள்ளை வான் கும்பலால் இவர் கடத்தப்பட்டதாக தெரியவருகின்றது. பல்கலைக்கழக பாலசிங்கம் விடுதியிலிருந்து மோட்டார் சைக்கிளினில் பயணித்துக்கொண்டிருந்த இவனை குறித்த வெள்ளை வான் கும்பல் வழிமறித்து கடத்தியுள்ளது. கொழும்பு செல்வதாக கூறி அருகாக உள்ள வீடொன்றினுள் மோட்டார் சைக்கிளை நிறுத்த உத்தரவிட்ட இக்கும்பல் பின்னர் கண்களை கட்டி கடத்தி சென்றுள்ளது.எனினும் தன்னை தடுத்து வைத்த இடம் பற்றி எதனையும் கூற முடியாதவராகவே வேதாரணியம் லத்தீஸ் உள்ளார். இவர் மோசமாக அச்சுறுத்தப்பட்டுள்ளதால் பயந்த நிலையில் காணப்படுவதாக குடும்பத்தவர்கள் கூறு…
-
- 3 replies
- 1.3k views
-
-
வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்குச் சொந்தமான வீடுகளில் இருந்து இரும்புகள், கதவுகள் மற்றும் யன்னல்கள் களவாடிச் செல்லப்படுகின்றன. இவற்றை களவாடிச் செல்வோருக்கு அங்கு கண்ணி வெடி அச்சுறுத்தல் இல்லையா எனக் கேள்வியெழுப்பிய கூட்டமைப்பு எம்.பி.யான வினோநோகராதலிங்கம், சர்வதேசத்துக்குக் காட்டுவதற்காகவே தயாரிக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையானது தமிழர் பிரச்சினைக்கு விமோசனத்தைத் தரப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் திட்டமிடப்பட்ட வகையில் கலாச்சாரச் சீரழிவுகள் அரங்கேறி வருகின்றன. விபச்சார விடுதிகள், போதைப்பொருள் பாவனை ஆகியவற்றின் பின்னணியில் இருப்பது யார்? என்று அவர் கேள்வியும் எழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று திங்கட் கிழமை நடைபெற்ற வரவு ச…
-
- 1 reply
- 762 views
-
-
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்வதற்கு தமிழக அரசு ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று தமிழக அரசு சார்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும், தங்களை விடுவிக்க வேண்டும் என்று மூன்று பேரும்கோரிக்கை விடுத்து மனு செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மூவரையும் தூக்கில் போடுவதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. கடந்த ஓகஸ்ட் 30ம் திகதி இந்த வழக்கை விசாரித்தபோது 8 வார கால இடைக்காலத் தடையை உயர்நீதிமன்றம் விதித்தது. இதனால் மூன்று பேரும் தூக்குக் கயிற்றிலிருந்து தற்காலிகமாக தப்பியுள்ள…
-
- 2 replies
- 1.4k views
-
-
சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் விடுதலையை வலியுறுத்தி ஐக்கிய தேசியக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்றது. மருதானை, ராஜகிரிய, விஹாரமாதேவி பூங்கா ஆகிய பகுதிகளிலிருந்து ஒழுங்கு செய்யப்பட்ட பேரணிகள் கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் ஒன்றுகூடின. இந்த தேசிய எதிர்ப்பு தினத்தில் கலந்துகொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன் தெரிவிக்கையில், ‘இந்த அரசாங்கம் செய்யும் பல அநியாயங்களை தட்டிக்கேட்பதற்காகவே மக்கள் இன்று இங்கு கூடியுள்ளனர். சாதாரண மக்களின் பிரச்சினைகளை உணராது, எந்தவித வாய்ப்புக்களையும் சாதாரண மக்…
-
- 2 replies
- 995 views
-
-
விழாமல் இருப்பதற்காக வர்த்தகக் கடனை எதிர்பார்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பெரும் பணத்தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வெளிவாரி மூலகங்களிலிருந்து 175 மில்லியன் அமெரிக்க டொலரை வர்த்தகக் கடனாகப் பெறவுள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் 2.6 பில்லியன் ரூபா நட்டமடைந்த இந்த விமானப் போக்குவரத்து நிறுவனத்திற்காக சிவில் விமான போக்குவரத்து அமைச்சு மூன்று வருட காலத்தில் வரவு, செலவுத்திட்டங்களூடாக 500 மில்லியன் அமெரிக்க டொலரை ஒதுக்குமாறு அரசாங்கத்தை கேட்டிருந்தது. இதேவேளை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து 7 பில்லியன் ரூபா நட்டத்தையடைந்துள்ள மிஹின் லங்கா விமான நிறுவனத்துக்கு வருடத்திற்கு 20 மில்லியன் டொலர் வீதம் மூன்று வருடங்களுக்கு…
-
- 3 replies
- 1.4k views
-
-
தெற்கு அதிவேக வீதி திறக்கப்பட்டு 24 மணித்தியாலங்களில் 4500 வாகனங்கள் அந்த வீதியின் ஊடாக பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் மூலம் ஒரு நாளில் மட்டும் 10 இலட்சம் வருமானமாக பெற்று கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதே வேளை இந்த வீதியில் முதலாவது விபத்து இன்றைய தினம் காலை பதிவாகியது. எட்டு மார்க்கங்களை இணைக்கும் வகையில் இந்த அதிவேக வீதி உருவாக்கப்பட்டுள்ளது. கொட்டாவ களனிகம, தொடங்கொட கஹதுட்டுவ, வெலிபென்ன குருந்துகஹதெப்பம, பத்தேகம பின்னதுவ ஆகிய வீதி மார்க்கங்களை இந்த அதிவேக வீதி இணைக்கின்றது. http://www.vanakkamn...ankan-fast-roa/
-
- 4 replies
- 1.4k views
-
-
தமிழ்த் தேசிய மாவீரர்நாள் நிகழ்வு உலகம் முழுமையிலும் உள்ள தமிழ் மக்களால் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டிருக்கின்றது. தாயகத்தில் மக்கள் வெளிப்படையாக வணக்கம் செலுத்த முடியாவிட்டாலும் தனித்தனியாக மக்கள் வணக்கம் செலுத்தியிருக்கின்றனர். பிரித்தானியாவில் இன்று பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில் பல்லாயிரக் கணக்கான மக்கள் பங்கு கொண்டு மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியதாக அங்கிருந்து எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். பிற்பகல் 12.30மணியளவில் தொடங்கிய நிகழ்விற்கு பிரித்தானியாவின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக் கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். மேலதிக விபரங்களும் ஒளிப்படங்களும் சில மணி நேரத்தில் சரிதத்தில் வெளிவரும். [show as slidesh…
-
- 4 replies
- 2.2k views
-
-
யாழ்.பல்கலைக்கழக மாணவன் லத்தீஸ் கடத்தப்பட்டுள்ளார் 28 நவம்பர் 2011 குளோபல் தமிழ்ச்செய்திகள் : யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவபீட மாணவனான வேதாரணியம் லத்தீஸ் (27 வயது) கடத்தப்பட்ட சம்பவம் மாணவ சூழலிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.நேற்றிரவு யாழ்.திருநெல்வேலியிலுள்ள பாலசிங்கம் விடுதியிலுள்ள தனது சக நணபர்ளை சந்தித்து விட்டு கைதடியிலுள்ள தனது விடுதிக்கு திரும்பிக்கொண்டிருக்கையிலேயே இவர் கடத்தப்பட்டிருக்கலாமென குடும்பத்தவர்கள் சந்தேகிக்கின்றனர். வடமராட்சி கிழக்கு மருதங்கேணியை சொந்த இடமாக கொண்ட இவர் வன்னியில் படையினரால் பிடிக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையிலேயே பூஸா தடுப்பு முகாமிலிருந்து இழுபறிகளின் பின்னர் விடுவிக்கப்பட்டிருந…
-
- 9 replies
- 1.8k views
-
-
35 சிங்கள கைதிகள் நேற்று முன்தினம் அனுராதபுர சிறைக்குள் அடைக்கப்பட்டிருந்த தமிழ் போராளிகள் மற்றும் பொதுமக்களின் பகுதிக்குள் வந்தனர். 27 ஆம் திகதி மதியம் 2.30 இற்கு வந்த இவர்கள். சிறைக்குள் இருந்த 65 குறித்த போராளி, பொதுமக்களை வெளியே இழுத்துச்சென்றனர். அங்கு ஒரு மைதானத்தில் விட்டு அவர்களை நிர்வாணமாக்கினர். கொட்டும் மழையில் அவர்களை நிர்வாணமாக்கி பின்னர் முட்டுக்காலில் இருத்திவிட்டு இன்று உங்கள் லொக்காவின் நினைவு நாள் என தூஷணத்தால் தூற்றினர். பின்னர் தம்மை மண்டியிட்டு வணங்குமாறு கால்களால் உதைத்தும் உள்ளனர் சிங்கள இனவெறி காடையர்கள். ஆனால் இனவெறியன் மஹிந்தவின் அரசவையில் இருக்கும் சிறைச்சாலை அமைச்சர் அப்படி ஒன்றுமே நடக்கவில்லை என அப்பட்டமாக பொய்யுரைத்துள்ளான். . கடந்த 50 வர…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஒரு சிலரின் பொறுப்பற்ற நடத்தையால் குற்றவாளிக் கூண்டில் நிற்கும் யாழ். சமூகம்; இதனைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைவோம் சீ.வி.கே. சிவஞானம் அறைகூவல் அண்மைக்காலமாக குடாநாட்டில் அதிகரித்துவரும் கொள்ளைச் சம்பவங்கள் சட்டவிரோத மதுபான, விற்பனை மற்றும் கலாசாரச் சீரழிவை உண்டு பண்ணும் செயற்பாடுகள் தொடர்பாக காவற்றுறையினரும் உரிய அதிகாரிகளும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் நிர்வாக உறுப்பினர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்: …
-
- 1 reply
- 1.3k views
-
-
ஆயிரம் கைகளை விரித்துப் பறந்துக் கொண்டிருந்த பாலைவனக் காற்றின் குளிரின் நடுக்கத்திற்கிடையே அந்த இதயங்கள் விடுதலையின் வெப்பத்தையே முழுக்கச் சுமந்துக்கொண்டு மாவீரர்களைப் பற்றிய நினைவுகளையெல்லாம் அலசி' மீண்டும் கேட்போர் மனங்களில் விதைத்துக் கொண்டிருக்க, உணர்வுகளில் தகித்துத் தகித்து ஈழக் கனவினை எல்லோர் எண்ணத்திலும் சமைத்துக் கொண்டிருந்தது அந்த நிகழ்வு.., அந்த அரங்கம். குவைத் தமிழர் கூட்டமைப்பின் சார்பில், நேற்று மாலை ஐந்து மணியளவில் துவங்கப்பட்டு இரவு ஒன்பதரை மணிவரை சகோதரி செங்கொடி நினைவரங்கத்தில், மாவீரர்களின் நினைவெழுச்சி நாள் நிகழ்த்தப்பட்டது. நிகழ்ச்சியின் முதலாக கவிஞர் திரு.விருதைப் பாரி அவர்கள் வரவேற்புரையாற்றித் துவங்கிவைக்க, அய்யா திரு. தமிழ்நாடன் அவர்கள் ஈகைச்சுடர…
-
- 1 reply
- 855 views
-
-
தமிழருக்கான அனைத்துக் கட்சிகளின் நாடாளமன்றக் குழு பிரித்தானிய நாடாளமன்றம் வெஸ்ற்மி னிஸ்ரர் லண்டன் தலைவர் : லீ ஸ்கொட் MP தமது அன்புக்குரியவர்களின் இறப்பை நினைவு கூரும் ஆயிரக்கணக்கான பிரித்தானிய தமிழர்களோடு இன்று நானும் இணைந்து கொள்கின்றேன். பிரித்தானிய தமிழர்களின் வரலாற்றில் நொவம்பர் 27 ஒரு முக்கிய நாளாகும். இன்று லண்டனில் பல்வேறு இடங்களில் இந் நினைவு நிகழ்வு நடைபெறுகின்றது. தமிழ் மக்களின் நீதியை எதிர்பார்த்து நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருக்கின்றார்கள் என்பதை நான் நன்கறிவேன். இனியும் அந் நீதிக்காக அவர்கள் காத்திருக்க முடியாது. ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிட்டவாறு அனைத்துலக ரீதியில் தரத்துக்கும் ஏற்றுக்கொள்ள க…
-
- 0 replies
- 910 views
-
-
மக்களை ஒரு முகாமிலிருந்து மற்றொரு முகாமுக்கு மாற்றுவது மீளக்குடியமர்த்தலாகாது: வினோ எம்.பி. இடம்பெயர்ந்த மக்களை ஒரு முகாமிலிருந்து மற்றொரு முகாமுக்கு மாற்றுவது மீளக்குடியமர்த்தலாகாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார். வன்னியில் இடம்பெயர்ந்து முகாம்களிலிருந்த மக்கள் பலர் மீளக்குடியமர்த்தல் என்ற பெயரில் காட்டுப் பகுதிகளில் கொண்டுசெல்லப்பட்டு விடப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எவ்வித அடிப்படை செய்துகொடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். இவ்வாறு அடிப்படை வசதிகளற்று காட்டுப்பகுதியில் வசிக்கும் குடும்பமொன்றைச் சேர்ந்த பாம்பு தீண்டி இறந்ததாகவும் வினோ எம்.பி. தெரிவித்தார். ht…
-
- 0 replies
- 460 views
-
-
2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்நாட்டு வரலாற்றை சித்தரிக்கும் “பாலை” திரைப்படம் நவம்பர் 25 அன்று தமிழகம் முழுவதும் வெளியாகின்றது. இதுவரை மன்னர்களின் வரலாறே தமிழ்நாட்டின் வரலாறு என்றிருந்த தமிழ்த் திரையுலகின் மரபுகளை உடைத்தெறிந்து, முதன் முறையாக 2000ஆண்டுகளுக்கு முந்தைய எளிய தமிழ் மக்களின் வாழ்வியலைப் பற்றி சித்தரிப்பதாக இத்திரைப்படம் அமைந்துள்ளது. இத்திரைப்படத்தை தமிழ் உணர்வாளரும், ஆய்வாளருமான திரு. ம.செந்தமிழன் இயக்கியுள்ளார். அதோடு படத்தின் பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். சங்க இலக்கியங்களில் உள்ள குறிப்புகளை சுமார் 6 ஆண்டுகள் ஆய்வு செய்து இத்திரைப்படத்தின் கருவை உருவாக்கியுள்ளதாக அவர் கூறுகிறார். ஏ.ஆர்.ரகுமானிடம் இசைப் பயின்ற திரு. வேத் ஷங்கர், இசையமத்துள்ள படத்தின் …
-
- 14 replies
- 7.7k views
-
-
இன்று சென்னையில் தமிழர் பண்பாட்டு நடுவம், தமிழர் முன்னேற்ற கழகம் மற்றும் முகநூல் நண்பர்கள் ஏற்பாடு செய்த மாவீரர் நாள் நிகழ்வு எளிமையான முறையில் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி நடைபெற்றது . சென்னையில் பல இடங்களில் தமிழக அரசு தீவிர கண்காணிப்பில் பல மாவீரர் நகழ்ச்சியை ரத்து செய்தது இருந்தும் சில இடங்ககளில் உள் அரங்கங்களில் மாவீரர் நாள் தமிழ் உணர்வாளர் களினால் உணர்வோடு அனுசரிக்கப்பட்டது . மாவீரர் கையேட்டில் கொடுத்துள்ளபடி அகவணக்கம் மலர் வணக்கம் உறுதி மொழி மற்றும் வீரவணக்க உரைகள் நடத்தப்பட்டது. கலந்து கொண்ட தோழர்களுக்கு நம் வாழ்த்துக்கள். - முகநூல் ஊடாக கடலூரில் ......
-
- 5 replies
- 1.5k views
-
-
காணாமல் போதல் சம்பவங்கள் அதிகளவில் தீர்க்கப்படாத நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாம் நிலை வகிப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. ஆயிரக் கணக்கான காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் இன்னமும் பூர்த்தியாகவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக் கணக்கான குடும்பங்கள் தொடர்ந்தும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கைக்கான நிபுணர் யோலண்டா பொஸ்டர் தெரிவித்துள்ளார். சித்திரவதை சம்பவங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் தொடர்பில் அண்மையில் லண்டனில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேககிக்கப்படும் தமிழர்கள் தொடர்ந்தும் அச்சுறு…
-
- 0 replies
- 654 views
-
-
சேலம் மாவட்டம், கொளத்தூர் அருகில் உள்ள புலியூர் என்ற இடத்தில் 1984 வருடம் முதல், 1986 வரையில் விடுதலைபுலிகளின் பயிற்சி முகாம் இருந்துள்ளது. இங்கு நான்கு பருவங்களில் 2,800 விடுதலைபுலிகள் இங்கு பயிற்சி எடுத்து விட்டு சென்றுள்ளார்கள். இங்கு பயிற்சியாளராக இருந்த பொன்னம்மான் வீரமரணமடைந்த பின்னர் அவரது நினைவாக இங்குள்ள பொதுமக்கள் தங்களின் ஊர் பிரிவில் பொன்னம்மான் நினைவு நிழற்கூடம் ஒன்றை அமைத்துள்ளார்கள். இந்த நிழற்கூடத்தில் 1989 வருடம் முதல் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ல் மாவீரர் நாளை கொண்டாடிவரும் கொளத்தூர் பகுதியில் உள்ள ஈழவிடுதலை ஆதரவாளர்கள், நேற்று பெய்த கடும் மலையிலும் மாலை 5.00 மணி முதலே, புலியூர் பிரிவில் கூடத்துவங்கிவிட்டனர். விடாமல் பெய்து கொண்டிருந்த மழை மாலை சரியா…
-
- 0 replies
- 1.2k views
-
-
'நாசிவாத' அரசியலை முன்னெடுக்கிறதாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு! - சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு! விடுதலைப் புலிகளால் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்களை மீளக் குடியேற்றுவதைத் தடுக்கும் 'நாசிவாத' அரசியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்து வருவதாக ஜாதிக ஹெல உறுமய குற்றம் சுமத்தியுள்ளது. அத்துடன், புலம்பெயர்ந்த புலிகளின் பிரிவினை வாதத்திற்கு துணை போகும் அமெரிக்காவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விலை போயுள்ளதாகவும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க விஜயத்தின் போது அந்நாட்டு இராஜாங்க திணைக்களத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பித்திருந்த அறிக்கை குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும், சி…
-
- 1 reply
- 909 views
-
-
கைதின் பின் மரணமடைந்த யாழ். இளைஞனின் சடலம் அனுராதபுர வைத்தியசாலையில் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின் மரணம் அடைந்ததாகக கூறப்பட்ட இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுராதபுர வைத்தியசாலைக்கு பொலிஸாரினால் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். புன்னாலைக் கட்டுவன் தெற்கில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் புன்னாலைக் கட்டுவன் தெற்கைச் சேர்ந்த மன நோயாளி என கூறப்படும் சுமனன் (வயது 28) என்பவர் கடந்த திங்கட்கிழமை 21ஆம் திகதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். இவர் கடந்த சனிக்கிழமை கிளிநொச்சியிலுள்ள குளத்தில் சடலமாக காணப்பட்டதாகக் கூறி கிளிநொச்சி வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டது. குறித்த …
-
- 0 replies
- 1k views
-
-
கடலூர் சுப்புராய ரெட்டியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவீரர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் சீமான், பேராசிரியர் தீரன் உள்ளிட்ட 600 பேர் கலந்துகொண்டனர். முதலில் இந்த நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. பின்னர் பல நிபந்தனைகளுடன் அனுமதி கொடுத்தது. பேராசிரியர் தீரன் பேசுகையில், பால் விலை, பேருந்து கட்டணம் உயர்ந்துவிட்டது. நாட்டில் எவ்வளவு பெரிய பிரச்சனைகள் இருக்கிறது. முதல் அமைச்சர் அவர்கள் நிர்வாகத்தை பாருங்கள். நிர்வாகத்தை பார்க்காமல் நாங்கள் என்ன செய்கிறோம். எங்களுக்கு தடை விதிப்பது, போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். உங்களுடைய பணிகளை மக்களுக்காக பிரச்சனை பாருங்கள் என்றார். சீமான் பேசுகையில், சீமான் ஒரு நாள் சட்டமன்றத்துக்குள் போவான். பி…
-
- 2 replies
- 1.2k views
-
-
இலங்கைக்குப் பழக்கமில்லாத அதிவேக நெடுஞ்சாலையில் இன்று காலை கவிழ்ந்தது கார்! இலங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலை நேற்றைய தினம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இவ்வாறு திறந்து வைக்கப்பட்ட அடுத்த நாளே அவ் வீதியில் வாகன விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. இந்த வாகன விபத்து இன்று காலை 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு – காலியை ஒரு மணித்தியாலத்தில் இணைக்கும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ என்ற இடத்தில் கார் ஒன்று தலைகீழாகக் கவிழ்ந்து இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. மிக வேகமாகச் சென்ற கார் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித…
-
- 0 replies
- 2.9k views
-
-
இலங்கை அரசின் தேசிய நல்லிணக்க செயற்பாடுகளில் அவரால் திருப்தி காண முடியாது உள்ளது என்று தெரிவித்து உள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க. கொழும்பில் கடந்த வாரம் இடம்பெற்ற மாநாடு செயலமர்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இச்செயலமர்வில் விசேட பேச்சாளராக பயங்கரவாத துறை சார்ந்த சர்வதேச நிபுணர் பேராசிரியர் ரொஹான் குணரட்ண கலந்து கொண்டார். இவர் அரசின் தேசிய நல்லிணக்க நடவடிக்கைகளை ஆஹா, ஓஹோ என்று மிகவும் விதந்து பாராட்டிப் பேசினார். இவரைத் தொடர்ந்து உரை ஆற்றினார் சந்திரிகா. அரசின் நடவடிக்கைகள் ரொஹான் பெரிதும் நிறைவடைந்து இருக்கின்றார் போலும், ஆனால் எனக்கு அரசின் நடவடிக்கைகள் திருப்தி தரவில்லை. 250000 சிவ…
-
- 0 replies
- 1.1k views
-
-
தாயக மீட்புப்போரில் தம்முயிரை ஈந்து உயிர்க்கொடை புரிந்த உத்தமர்களை நினைவுகூரும் மாவீர்நாள் நிகழ்வு ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை(27ம்) உணர்வுபூர்வமாக நடைபெற்றது. ஸ்பிறிங்வேல் (Springvale) நகரமண்டபத்தில் 27 - 11 - 2011 அன்று நடைபெற்ற இந்த உணர்வெழுச்சிநாள் நிகழ்வில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டு மாவீரச் செல்வங்களுக்கு மரியாதை செலுத்தினர். தமது மக்களின் நியாயபூர்வமான உரிமைகளுக்காகவும் அவர்களின் பாதுகாப்பான வாழ்வுக்காகவும் தமது உயிரையே விலையாக கொடுத்த ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் உன்னதமான அர்ப்பணிப்பை உலகெங்கும் வாழும் தமிழ்மக்கள் உணர்வுபூர்வமாக நினைவுகூர்ந்தார்கள். மாலை 4 மணிக்கு தமிழர் ஒருங்கிணைப்…
-
- 1 reply
- 745 views
-
-
உலகில் தற்போது புழக்கத்திலிருக்கும் தொன்மையான மொழிகளுள் ஒன்றான தமிழ்மொழியைத் தாய்மொழியாகப் பேசும் தமிழினத்திற்கென்று மிக நீண்ட வரலாறு உள்ளது. தமக்கான இறைமையைப் பேணி தம்மைத் தாமே ஆண்டும் நிர்வகித்தும் தனித்துவமான பண்பாட்டைப் பேணியும் வந்த தமிழினம் ஆதிமுதல் வாழ்ந்துவந்த நிலப்பகுதிகளில் இலங்கைத்தீவும் ஒன்று. காலச்சூழலில் அன்னியப் படையெடுப்புக்களால் தமிழரின் இறைமை பறிபோகத் தொடங்கியது. பேரரசுகள், சிற்றரசுகள் என அனைத்தும் படிப்படியாக வீழத் தொடங்கின. இறுதியில் தமிழினம் முழுமையாகவே ஆட்சிப்பரப்பற்ற நிலையில் வீழ்ந்துபோனது. இலங்கைத்தீவிலும் தமிழரின் இராசதானிகள் முழுமையாக வீழ்ச்சியடைந்தன. பெருமையும் புகழும் கொண்ட தமிழினம் ஒடுங்கிப்போயிருந்தது. கேட்பாரற்ற நிலையில் தமிழினத்தி…
-
- 0 replies
- 1.4k views
-
-
அரசபாளையத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் டாக்டர்.அம்பேத்கர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பொதுச்சுடரை ஈகியர் அப்துல் ரவுப் தந்தையார் திரு.அசன் முகமது அவர்கள் ஏற்றிவைத்தார். பொது மக்களும் பல்வேறு அரசியல் கட்சியினரும் பெருந்திரளாக நின்று மாவீரர்களுக்கு சுடரொளி ஏற்றி வணக்கம் செய்தனர். நிகழ்வில் மாவீரர் பாடல்களுக்கும்,தமிழீழ எழுச்சி பாடல்களுக்கும் தோழியர்கள், தோழர்கள், குழந்தைகள் நடனம் ஆடிய கலை நிகழ்ச்சியில் அனைத்து தரப்பினரும் உணர்ச்சிப் பெருக்குடன் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கலந்து கொள்ள விழா நிறைவு பெற்றது. நிகழ்வுகளை தமிழ் தமிழர் இயக்கம் ஒருங்கினைதிருந்தது. http://www.eeladhesa...=5360&Itemid=53 http://www.eeladhesa...=5361&Itemid=53 http://ww…
-
- 1 reply
- 663 views
-