Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நம்பகத்தன்மை கொண்டிருக்கவில்லை எனக் கண்டால் சுயாதீனமான சர்வதேச விசாரணை அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க செனற்றர்கள் மூவர் அமெரிக்க இராஜாங்கச் செயலர் கிளாரி கிளிங்டனை எழுத்துமூலம் கேட்டிருக்கின்றனர். இலங்கை அரசாங்கம், பாதுகாப்பு வலயம், மருத்துவமனைகள் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தியமை நீதிப்புறம்பான கொலைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் போன்ற குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்குவதாக அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். http://www.saritham.com/?p=41841

  2. 'அவுஸ்திரேலியாவில் படகு அகதிகளும் விமான அகதிகள் போன்று நடத்தப்படுவர்' அடுத்த வருடத்திலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி வருவோரை விமானம் மூலம் வருவோரைப்போன்று நடத்த அவுஸ்திரேலியா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய படகுகள் மூலம் வந்து அடைக்கலம் கோருவோர் அகதிகள் மீள்பார்வை மன்றத்துக்கு விண்ணப்பிக்கமுடியும். முன்பு விமானம் மூலம் வந்து அடைக்கலம் கோருவோருக்கு மட்டுமே இந்த வசதி வழங்கப்பட்டது. மேலும், ஏற்கெனவே படகு மூலம் வந்த 27 புகலிடம் கோருவோர் 'பிறிட்ஜிங் விஸா' வழங்கப்பட்டு அவுஸ்திரேலியாவில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளனரென குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவன் கூறினார். முன்னர் படகு மூலம் வருவோர் கப்பலிலேயே தடுத்துவைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டிருந்…

    • 0 replies
    • 669 views
  3. யாழ் பல்கலைக்கழகத்தில் எழுச்சிச் சுவரொட்டிகள் – படைப் புலனாய்வாளர்கள் அடாவடித்தனம் (Photo in) Friday, November 25, 2011, 10:23 2 ஆம் இணைப்பு – யாழ் பல்கழலக்கழக வளாகத்தினுள் இன்று (24-11-2011) பல இடங்களில் எழுச்சிச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு மாணவர்கள் புத்தெழுச்சியுடன் காணப்பட்டனர். யாழ் பல்கலைக்கழகை வளாகத்தின் முக்கியமான பகுதிகளில் இவ்வாறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. குறிப்பாக மாணவர் பொது மண்டபம் மற்றும் ஈருறுளி தரிப்பிடம் போன்ற பகுதிகளில் இவை காணப்பட்டன. தமிழீழத் தேசியத் தலைவரின் 57வது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து நேற்று மாலை சில இடங்களில் எழுச்சி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்த நிலையில், இன்று காலை மேலும் பல சுவரொட்டிகள் மாவீரர் நாளை முன்னிட்டு ஒட்டப்பட்…

  4. தென் கொரியாவில் தொழில் புரியும் சுமார் 20,000 இலங்கையர்களும் கொரியாவின் தேசிய ஓய்வூதிய திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ள னர். இலங்கையர்களுக்கென 36 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொரிய அரசு ஒதுக்கியுள்ளது. இதன் படி, சுமார் மூன்று இலட்சம் ரூபா வரையில் இலங்கையர் ஒருவர் ஓய்வூதிய கொடுப்பனவாக பெறுவார் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக் கிறது. கொரியாவில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தமொன்று கடந்த 22ஆம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கும் கொரிய தேசிய ஓய்வூதிய திணைக்களத் துக்குமிடையே ஒப்பந்தம் கைச்சாத்தானது. அமைச்சின் செயலாளர் கர்னல் நிஸ்ஸங்க என். விஜேரட்னவும், கொரிய தேசிய ஓய்வூதிய திணைக்களத்…

  5. வடக்கில் இராணுவ ஆட்சி நடைபெறுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவிக்கும் குற்றச் சாட்டில் எதுவித உண்மையுமில்லை. அங்கு இராணுவ ஆட்சி நடக்குமா னால், த. தே. கூட்டமைப்புக்கு தேர்தலில் போட்டியிடவோ வெற்றி பெறவோ முடிந்திருக்காது என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். வரவு செலவுத்திட்ட மூன்றாம் நாள் விவாதத்தின் போது த. தே. கூட்டமைப்பு எம். பி. தெரிவித்த சில குற்றச் சாட்டுகளுக்கு பதிலளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார். பிரதி அமைச்சர் மேலும் கூறியதாவது:- சுரேஷ் பிரேமச்சந்திரன் எம். பி. சபையில் பல கருத்துக்களை கூறினார். கொக்குசான்குளத்தில் சிங்களக் குடியேற்றம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் த. தே. கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் ஐ. தே. க. ஆட்சியிலே இங்கு க…

    • 2 replies
    • 706 views
  6. போரின் போது காணாமற் போன குழந்தைகளுக்கு என்ன நடந்தது? - பெற்றோர் அங்கலாய்ப்பு! - AFP செய்தி!! இலங்கைத் தீவின் கொடிய இனப்போர் முடிவுற்று இரண்டரை ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் போரினால் இடம்பெயர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தமது குழந்தைகளைத் தீவீரமாகத் தேடும் நிலை தொடர்கின்றது என AFP தெரிவித்துள்ளது. சிறிலங்கா படைத்தரப்பினரால் தமது பிள்ளைகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சில பெற்றோர்கள் நம்புகின்றனர். தப்பிச் சென்று பெற்றோரைத் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் தமது பிள்ளைகள் இருக்கலாம் என இன்னும் சிலரும் நம்புகின்றனர். இது தொடர்பாக AFP வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தாக்குதல்கள் தீவிரமடைந்ததை அடுத்து உஷாதேவி …

  7. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது சிறிலங்கா படையினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதை ஏற்றுக் கொண்டுள்ள சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, அத்தகைய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், குறித்த படையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். கொழும்பில் அனைத்துலக உறவுகள் மற்றும் மூலோபாய கற்கைகளுக்கான லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில், சிறிலங்கா அரசினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நல்லிணக்கம் தொடர்பான தேசிய கருத்தரங்கில் இன்று காலை உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “ போரின் இறுதிக்கட்டத்தில் 10 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சிலர் சொல்கின்றனர். வேறு சிலர் 40ஆயிரம் பேர் மரணமானதாக கூறுகின்றனர். இன்னும்…

    • 4 replies
    • 974 views
  8. நாம் முட்டாளாக்கப்பட்டும் ஏமாற்றப்பட்டுள்ளோம்: பல்கலை ஆசிரியர்கள் உயர் கல்விக்கான நிதியொதுக்கீட்டையும் பல்கலைக்கழக ஆசிரியர்களின் சம்பளத்தையும் 2012 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் அதிகரிப்பதாக கூறிய வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்ற தவறியமை குறித்து ஜனாதிபதிக்கும், உயல்கல்வி அமைச்சுக்கும் கடிதம் எழுதவுள்ளதாக பல்கலைக்கழக ஆசியர்களின் சங்கம் இன்று கூறியுள்ளது. 'நாம் ஏமாற்றப்பட்டும் முட்டாளாக்கப்பட்டும் உள்ளோம் கல்வி சமுதாயத்தை இவ்வாறு நடத்துவது ஒரு அரசாங்கத்தின் பொறுப்பில்லாத செயற்பாடாக உள்ளது 'என பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் நிமல் தேவசிறி கூறினார். தமது சங்கத்துடன் அரசாங்கம் மேற்கொண்ட பேச்சுவார்தையின்போது எமது அடிப்படை சம்பளத…

    • 0 replies
    • 938 views
  9. ஜப்பானின் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவர் யசூசி அகாசி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தெற்கு பெருந்தெரு திறப்பு விழாவில் அக்காசி கலந்து கொள்வார் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் முன்னெடுக்கப்பட்ட சமாதான முனைப்புக்களில் அக்காசி முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. யுத்தத்தின் பின்னரும் அக்காசி பல தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த வீதி ஆரம்ப நிகழ்வுகளின் பிரதம விருந்தினராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்வார் எனக் குறிப்பிடப்படுகிறது. http://www.seithy.com/breifNews.php?newsID=52340&categor…

  10. ஒலுவில் பிரதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய கடல் கொந்தளிப்பு காரணமாக ஒலுவில் துறைமுக வெளிச்ச வீடு பகுதி (Light House) கடலரிப் புக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து வெளிச்ச வீட்டினை பாதுகாப்பதற்காக ஒலுவில் துறைமுக ஊழியர்கள் மண் மூடைகளை அடுக்கி வருகின்றனர். அதனையும் கடலலைகள் அடித்துக்கொண்டு செல்கின்றன. ஒலுவில் துறைமுகத்தை அண்டியுள்ள ஒலுவில் கரையோரப் பிரதேசங்கள் சுமார் 100 மீற்றர் தூரம் கடல் குடியிருப்புப் பிரதேசங்களை (ஊரை) நோக்கி சில தினங்களுக்குள் நகர்ந்துள்ளன. அம்பாறை மாவட்டத்தில் சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாகவும் ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணிக்காக கட லினுள் போடப்பட்டுள்ள பாரிய பாராங் கற்கள் காரணமாகவும் தற்போது ஒலு வில் பிரதேசக் கடல் பெரும் கொந் தள…

  11. சிறிலங்காவின் முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சரும் தமிழின படுகொலையாளியுமான அநுருத்த ரத்வத்தை சற்றுமுன்னர் மரணமடைந்துள்ளார். . . அநுருத்த ரத்வத்த கடந்த செவ்வாய்க்கிழமை கண்டி பொதுவைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். வீட்டினுள் விழுந்து காயமடைந்துள்ளதனால் கண்டி பொது வைத்தியசாலையில் அனுருத்த ரத்வத்த அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மூலம்

  12. ஜோர்ஜ் புஷ், டொனி பிளேயர் ஆகியோரை யுத்தக் குற்றவாளிகளாக அறிவித்தது மலேசிய நீதிமன்றம்! அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு புஷ் மற்றும் பிரித்தானிய முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் ஆகியோர் சமாதானத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஈராக் யுத்த விடயத்திலேயே இவர்கள் குற்றவாளிகள் என மலேசியாவின் நீதிபதி‍கள் குழு தீர்ப்பளித்துள்ளது. கடந்த சனிக்கிழமை கோலாலம்பூர் யுத்தக் குற்ற விசாரணை நீதிமன்றில் ஆரம்பமான விசாரணைகளில் ஜோர்ஜ் புஷ் மற்றும் டொனி பிளேயர் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான விசாரணைகளை மலேசிய ஓய்வுபெற்ற பிராந்திய நீதிமன்ற நீதிபதி அப்துல் காதிர் சுலைமான் அடங்கிய 7 நீதிபதிகள் முன்னெடு…

    • 4 replies
    • 1.2k views
  13. சிங்கள மக்களே இல்லாத தமிழ் பிரதேசங்களில் பெளத்த சின்னங்கள் Thursday, November 24, 2011, 18:58 யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்று வியாழக்கிழமை 2011.11.24 பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை முழுமையாக இங்கு தரப்படுகிறது. கௌரவ சபாநாயகர் அவர்களே! யுத்தம் முடிவடைந்தவுடன் எல்லோருக்கும் நிவாரணம் கிடைக்கும் என பொது மக்களும், சம்பளம் உயரும் என அரச ஊழியர்களும், முதலீட்டு வாய்ப்புக்கள் அதிகரிக்கும் என முதலீட்டாளர்களும், வணிகம் விருத்தியடையும் என வணிகர்களும் எதிர்பார்த்தனர். ஆனால் எதுவுமே நடக்கவில்லை. ஏன்? காரணம் அரசாங்கம் இன்னும் யுத்தமாயையிலிருந்து விடுபடவில்லை. பாதுகாப்புக்கு 2011 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் …

  14. The UK based Alliance for Peace and Reconciliation in Sri Lanka (APRSL) facilitated a meeting in the British parliament on the theme of ‘Tamil friends of India and the way forward’. The meeting was held at the Portcullis House within the parliamentary complex on 14 (Monday), November 2011. (யாரவது தமிழில் மொழி மாற்றம் செய்யவும். நன்றி) Tamil meeting in British Parliament a turning point Federal solution with India demanded. The second keynote speaker was a practising solicitor R Manoharan. He was very assertive and eloquently spoke and served a writ on Sri Lanka stating that Sri Lankan Tamils survival depends on the traditional Tamil habitant north and east of th…

    • 7 replies
    • 2k views
  15. இலங்கை அரச பேரினவாதத்திற்கு எதிரான தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டத்தில் முற்றிலும் மாறுபட்ட புதிய சிக்கல்கள் நிறைந்த காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பேரினவாதத்தின் ஒடுக்குமுறை அதன் கட்டற்ற உச்சவடிவத்தை தொட்டிருக்கிறது. ஆக்கிரமிப்பு, இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு என்ற அத்தனை மனித விரோத செயற்பாடுகளதும் மொத்த உருவமாக சிங்கள பவுத்த பேரின வாதம் தனது பயங்கரவாதத்தை மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது. தமிழ் தேசிய விடுதலைப் போரில் பிரதான பங்கு வகித்த ஆயுதப் போராட்ட வடிவத்தை முற்று முழுதாகத் தோற்கடித்த பின் அவலங்களும் அழிவுகளுமே தாயகத்தில் தேங்கி நிற்க, இலங்கை பேரினவாத அரசின் இரத்தம் படிந்த கோரக் கரங்கள் புலம் பெயர் நாடுகள் வரை நீட்சியடைகின்றன. இலங்கை அரசினால…

  16. அரசியல் தீர்வை எட்ட தெரிவுக்குழு அமைப்பு இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் அரசமைப்பிலுள்ள விடயங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நியமிக்கக் கோரும் பிரேரணை நாடாளுமன்றில் நேற்று முன்மொழியப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. இந்தப் பிரேரணை நேற்று சபை முதல்வர் நிமால் சிறிபால டி சில்வாவினால் நாடாளுமன்றில் முன்மொழியப்பட்டது. பின்னர் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது. 6 மாதங்களுக்குள் தீர்வை முன்வைக்கும் வகையில் இந்தக் குழு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் எனவும், இக்குழுவில் ஆளும் கட்சிப் பிரதிநிதிகள் 19 பேரும் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் 12 பேரும் உள்ளடங்குகின்றனர் எனவும் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு வாழும் அனைத்து இனம…

  17. Nov 26, 2011 / பகுதி: செய்தி / காங்கேசன் துறைப்பகுதி மலேசியநிறுவனத்திற்கு 22 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது! யாழ்ப்பாணம் காங்கேசன் துறைப்பகுதியில் உள்ள பெருமளவு நிலம் மின்நிலையம் அமைப்பதற்காக 22 ஆண்டுகளுக்கு மலேசிய நிறுவனம் ஒன்றிற்கு விடப்பட்டுள்ளது. அபிவிருத்தி என்ற போர்வையில் யாழ் குடாநாட்டில் தொடரும் நல அபகரிப்புகளில் மின்நிலையம்அமைப்பதற்காக காங்கேசன்துறை நிலம் 22 வருட குத்தகைக்கு மலேசிய நிறுவனம் ஒன்றிற்கு குத்தகைக்குவழங்கப்பட்டுள்ளது. மலேசியாவைச் சேர்ந்த கே.எஸ் நிறுவனமே குறிப்பிட்ட பகுதியினை சிறீலங்காஅரசிடம் இருந்து வாங்கியுள்ளது.காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலமாக மின்சாரம் பெறும் திட்டத்திற்காகவே குறிப்பிட்ட பகுதி மலேசிய நிறுவனத்தினால் வாங்கப்பட்…

    • 2 replies
    • 658 views
  18. இலங்கையின் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவினரது அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிடப்படும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பகிரங்கப்படுத்தப்பட்டதன் பின்னர், அது தொடர்பில் அவுஸ்திரேலியாவின் நிலைப்பாடு வெளிப்படுத்தப்படும் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கெவின் ரொட் தெரிவித்துள்ளார். ஆணைக்குழு அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர் கருத்து வெளியிட உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமும், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடமும் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் கலந்து கொண்ட போது தாம் இதனைக் குறிப்பிட்டதாக கெவின் ரொட் குறிப்பிட்டுள்ளார…

  19. யாழ் பல்கலையில் மாவீரர் தின அறிவித்தல் ஒட்டப்பட்டிருந்த அறிவித்தல் பலகை இனந்தெரியாதந நபர்களினால் சேதம் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் மாவீரர் தினத்தையொட்டிய அறிவித்தல் ஒட்டப்பட்டிருந்த அறிவித்தல் பலகையை இனந்தெரியாத நபர்கள் இன்றுமாலை தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் மேற்படி அறிவித்தல் பலகையை தாக்கி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் எஸ். தவபாலன் தெரிவித்தார். http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/31421-2011-11-24-12-50-14.html

  20. ஈராக் கிராமமாக மாறும் சதாம் ஹுசைன் கிராமம் ஈராக் அதிபர் சதாம் ஹுசைனை நினைவு கூருமுகமாக இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் கிராமம் ஒன்றுக்கு வைக்கப்பட்டிருந்த அவரது பெயரை தற்போது மாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏறாவூர் பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் ''சதாம் ஹுசைன் கிராமம்'' என்ற அந்த கிராமத்தின் பெயரை ''ஈராக் கிராமம்'' என்று மாற்றுவது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டு அரசாங்க அதிபரின் நடவடிக்கைக்காக அது அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 1978ஆண்டு நவம்பர் மாதம் 23ம் திகதி மட்டக்களப்பு மாவட்டம் சூறாவளியின் தாக்குதலுக்கு இலக்கானது. சூறாவளித் தாக்குதலுக்கு இலக்கான ஏறாவூர்ப் பிரதேசத்தைச் சேர்ந்த 100 குடும்பங்களுக்கு மாதிரிக் கிராமமொன்றை அமைத…

  21. முழு நாட்டையும் இராணுவ மயப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது. யுத்தத்தால் முழுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த வரவு செலவு திட்டத்தால் எந்தவித நன்மையும் இல்லை எனக் கூறி, வரவு செலவுத் திட்டத்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நிராகரித்திருக்கின்றது. யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் தொடர்பாக உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்திருக்கின்றார். அந்த உரையின் முழு விபரம் வருமாறு: கௌரவ சபாநாயகர் அவர்களே! யுத்தம் முடிவடைந்தவுடன் எல்லோருக்கும் நிவாரணம் கிடைக்கும் என பொது மக்களும், சம்பளம் உய…

  22. மன்னார் கடற்படுக்கையில் துளையிடப்பட்ட இரண்டு கிணறுகளில் இயற்கைவாயு கண்டறியப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த போதும், அவற்றில் ஒன்றில் போதுமானளவு எரிவாயு வளம் இல்லை என்றும், அது பொருளாதார பெறுமானம் கொண்டதல்ல என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மன்னார் கடற்படுக்கையில் கெய்ன் இந்தியா நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட மூன்று துண்டங்களில், இரண்டு இடங்களில் கிணறுகள் துளையிடப்பட்டன. இவற்றில் எரிவாயு வளம் கண்டறியப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது. இவற்றில் ஒரு கிணற்றில், 4000 மீற்றர் ஆழத்தில் ஹைட்ரோகாபன் படிவுகள் காணப்படுவதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது கிடைக்கும் தகவல்களின்படி, இதில் 15 வீதம் மட்டும் பயன்…

  23. மூதூர் ஆசிரியை காட்டுப்பகுதியில் சடலமாக மீட்பு திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு பாட்டாளிபுரம் பகுதியில் காயங்களுடன் இளம் ஆசிரியையொருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை காலை சம்பூர் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. கட்டைபறிச்சானைச் சேர்ந்த குருகுலசிங்கம் சிறிவதனி (வயது 27) என்ற ஆசிரியையின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கல்வி வலயத்திலுள்ள சந்தோஷபுரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் இவ் ஆசிரியை வழமைபோன்று இன்று வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் பாடசாலைக்கு சென்றுள்ள நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சந்தோஷபுரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலைக்கு செல…

  24. அப்துல் கலாம் ஜனவரியில் இலங்கை வருகிறார் _ ரொபர்ட் அன்டனி /வீரகேசரி தேசிய நாளேடு 11/24/2011 11:01:39 AM இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் ஞாபகார்த்த நிலையத்தில் நடைபெற் றுவரும் நல்லிணக்கமும் போருக்குப் பின்னரான நிலைமையும் தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் சற்றுமுன் இத்தகவலை வெளியிட்டார். "இலங்கையர்கள் மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமாகும். அது தொடர்பான வேலைத்திட்டமொன்றை எதிர்வரும் 2012 ஆம் ஆண்டில் நாம் முன்னெடுக்கவுள்ளோம். அந்த செயற்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக இந்தியாவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.