ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143327 topics in this forum
-
செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 30, 2011 சென்னையில் உள்ள அமெரிக்க துணைத்தூதரகத்தின் பதில் தூதுவர் இடமாற்றம் செய்யப்பட்டார். மட்டுமன்றி மன்னிப்பும் கேட்டுள்ளார்.தமிழர்கள் அழுக்கானவர்கள், கறுப்பானவர்கள் எனக்குறியவர் இந்த பதில் தூதுவரான மெளரீன் ஷா. இவர் தனது கருத்துரை ஒன்றின் போது தான் இந்தியாவில் நீண்ட தூரம் பயணம் செய்ததால் தமிழர்களைப்போன்று கறுப்பாகவும் அழுக்காகவும் தனது தோல் மாறியது என கூறினார். இதற்கு தமிழ் நாட்டில் எதிர்பலை கிளம்பியது மட்டுமன்றி முதல்வர் ஜெயலலிதாவும் தனது எதிர்ப்பினை தெரிவித்து உடனடியாக பதில் தூதரை மாற்றுமாறும் கேட்டுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து தூதுவர் மெளரீன் மாற்றப்படுகின்றார். http://www.eelanatha...%AE%AE%E0%AF%8D
-
- 1 reply
- 665 views
-
-
Aug 30, 2011 / பகுதி: செய்தி / இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் மின்சக்தி பரிமாற்றம்! இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் மின்சக்தியை பரிமாற்றிக் கொள்வதற்கு கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிடுகின்றது. இது தொடர்பான நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்படும் என உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் இலங்கைக்குத் தேவயான மின்சக்தியை இந்தியாவில் இருந்து பெற்றுக் கொள்ள முடியுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுப்படுமென இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். http://www.pa…
-
- 0 replies
- 348 views
-
-
Aug 30, 2011 / பகுதி: செய்தி / கச்சதீவில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களை அனுமதிக்க மாட்டோம் ; கச்சதீவில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களை அனுமதிக்க மாட்டோம் என்று இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் காரியவசம் தெரிவித்தார். இது குறித்து சனிக்கிழமை அவர் பெங்களூரில் செய்தியாளர்களிடம் கூறியவை வருமாறு இந்தியா இலங்கை ஒப்பந்தப்படி இலங்கைக்கு அளிக்கப்பட்ட கச்சதீவில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்க மாட்டோம். ஒப்பந்தத்தில் கூறியுள்ளபடி அங்குள்ள புனித அந்தோனியார் ஆலயத்திற்கு பொதுமக்கள் ஆண்டுக்கு ஒரு முறை சென்று வழிபாடு நடத்த மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். கடந்த ஆண்டு வரை தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தினரால் சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டது உண்மைதான். ஆனால் கடந்…
-
- 0 replies
- 393 views
-
-
சென்னையில் மேலும் ஒருவர் தீக்குளிப்பு, உயிருக்குப் போராடுகிறார் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் 29 ஆகஸ்ட் 2011 சென்னை சென்றார் ராம்ஜெட்மலானி. சாந்தன், முருகன், பேரறிவாளனை விடுதலைச் செய்யக் கோரும் போராட்டங்கள் தீவீரம் பெறும் நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே வன்முறை நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. மத்திய அரசு அலுவகங்கள் மீது தாக்குதல் நடந்திருக்கிறது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் செங்கொடி என்கிற இளம் பெண் தனக்குத் தானே தீயிட்டு மாண்டு போனார். அது தமிழகம் முழுக்க அதிச்சியலைகளை ஏற்படுத்திய நிலையில், இன்று சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் இனி இம்மாதிரி யாரும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் இன்று இரவு சென்னை சைதாப்பேட்டையில் செல்வம் என்ற நாற்பது வயது நபர் …
-
- 2 replies
- 1.4k views
-
-
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார். இந்தக் கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய பேருக்கும் செப்டம்பர் 9ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதாக இருந்தது. எனினும் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்றம் 8 வாரம் தடை விதித்துள்ளது. இந் நிலையில் அவர்களுக்கு பொது மன்னிப்பு கோரி சட்டமன்றத்திலும் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து குர்ஷித் கூறுகையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம் யாரையும…
-
- 4 replies
- 986 views
-
-
காஞ்சிபுரம் இதுவரை கண்டிராத அளவில் மக்கள் திரள் - செங்கொடி தகனம் நாளைவரை ஒத்திவைப்பு:- 30 ஆகஸ்ட் 2011 தூக்கு மேடையில் நிற்க வைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரைக் காப்பாற்றக் கோரி தீக்குளித்து உயிர் நீத்த இளம் பெண் செங்கொடிக்கு காஞ்சிபுரம் மக்கள் மொத்தமாக திரண்டு சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தியது அனைவரையும் நெகிழவைப்பதாக இருந்தது. காஞ்சிபுரம் இதுவரை கண்டிராத அளவில் செங்கொடி அஞ்சலி நிகழ்ச்சி அமைந்துள்ளதாக அங்கிருக்கும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவிக்கிறார். அஞ்சலி செலுத்த பல ஆயிரம் மக்கள் திரண்டுள்ளதால் உடல் தகன நிகழ்ச்சியை நாளை வரை ஏற்பாட்டாளர்கள் பிற்போட்டுள்ளனர். பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் ஒப்படைக்கப்பட்ட செங்கொடிய…
-
- 2 replies
- 1.6k views
-
-
தமிழக மக்களின் பாதம் தொட்டு நன்றி தெரிவிப்பதாக, முருகன் – நளினியின் மகள் ஆரித்ரா கூறியுள்ளார். பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரது தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும் என ஜனாதிபதியை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் இன்று சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதேவேளையில், மூவரின் மேல்முறையீட்டு மனுக்களை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை 8 வாரங்களுக்கு நிறுத்தி வைக்க இன்று உத்தரவிட்டது. இவ்விரண்டு அடுத்தடுத்த நிகழ்வுகளும் அண்மைக்காலமாக போராடி வந்த தமிழ் உணர்வாளர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், லண்டனில் வசித்து வரும் முருகன் – நளினியின் மகள் ஆரித்ரா அளித்த பேட்டி ஒன்றில், …
-
- 0 replies
- 1.3k views
-
-
தூக்குத் தண்டனையை ஆயுளாக குறைக்க ஜெ. தீர்மானம்-சட்டசபையில் நிறைவேற்றம். சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக ஆமோதித்து நிறைவேற்றினர். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா இன்று காலை சட்டசபை கூடியதும் இந்தத் தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். பின்னர் அவர் பேசுகையில், மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படவுள்ளது தமிழக மக்களை பெரும் வேதனையில் ஆழ…
-
- 11 replies
- 1.6k views
-
-
தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!! செங்கொடி தீக்குளிப்பினால் நடந்தது தற்கொலை மட்டுமல்ல. சரியான திசைவழியில் போராடத் துணியாத தமிழகத்தின் மீது தொடுக்கப்பட்ட ஒரு விமரிசனம். ஆனால் விலை மதிப்பற்ற விமரிசனம். அந்த விமரிசனத்தின் மதிப்பறிந்தவர்கள் தங்கள் மீது சுயவிமரிசனம் செய்து கொள்ளட்டும். ”எல்லா போராட்டத்தையும் ஜனநாயக முறைப்படி செய்யறோம். அரசும் போலீசும் நம்ம போராட்டங்களுக்கு பாதுகாப்பு தர்றோங்கிற பேர்ல வேடிக்கை பார்க்குதே தவிர, நம்ம கோரிக்கைகளை புரிஞ்சுக்கறதில்ல, ஏத்துக்கறதில்ல, நிறைவேத்தறதில்ல. இது தெரிஞ்சும் நாம ஒவ்வொரு முறையும் திரும்பத் திரும்ப வெவ்வேறு கோரிக்கைகளுக்காக ஒரே மாதிரி அடையாளப் போராட்டமா நடத்தி, முடிச்சுட்டு போயிடற…
-
- 10 replies
- 3.2k views
-
-
Aug 30, 2011 / பகுதி: செய்தி / மூவரையும் விடுவிக்க 10 லட்சம் பேருடன் செப்டம்பர் 8-ல் வேலூர் சிறை முற்றுகை: ராமதாஸ்! முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரையும் விடுவிக்க வலியுறுத்தி செப்டம்பர் 8-ம் தேதி 10 லட்சம் பேருடன் வேலூர் சிறையை முற்றுகையிடப்போவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் "மரண தண்டனை ஒழிப்பு மாநாடு' சென்னை அருகே மறைமலைநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய மூவருக்கு தூக்கு தண்டனை விதிக்க செப்டம்பர் 9-ம் தேதி நாள் குறிக்கப்பட்டுள்ளது. அவர்களை விடுவிக்க தமிழக முதல்வரிடம் மட்டுமே கோரிக்கை வைக்கவேண்டிய சூழல் இருக்கிறது. முதல்வர் துரிதமாகச…
-
- 3 replies
- 674 views
-
-
தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் போராட்டத்திற்கும் மதிப்பளித்து முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்கக்கோரி, தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேறியது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இது குறித்த பரிந்துரையை ஆளுனருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார். ஈழநாதம்
-
- 0 replies
- 1k views
-
-
முருகன், சாந்தன், பேரறிவாளன் - தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை 30 ஆகஸ்ட் 2011 இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் - பிரபல சட்டத்தரணி ராஜ்ஜெத்மலானி மற்றும் வைக்கோ உள்ளிட்ட நூற்றுக்கணக்காண சட்டத்தரணிகள் பிரசன்னமாகி யிருப்பதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. இதையொட்டி நீதிமன்றில்; பெருமளவில் சட்டத்தரணிகள் பிரசன்னமாகியுள்ளனர். புதுடெல்லியிலிருந்து பிரபல சட்டத்தரணிகள் ராம்ஜ…
-
- 1 reply
- 551 views
-
-
இந்திய நிறுவனத்தால் வடக்கில் மீன்பிடி உபகரண தொழிற்சாலை! Published on August 30, 2011-4:37 am இந்திய நிறுவனமொன்று வடக்கில் தமது மீன்பிடி உபகரணத் தொழிற்சாலையொன்றை ஆரம்பிக்கவுள்ளதுடன், விதவைகள் மற்றும் அங்கவீனர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கவும் முன்வந்துள்ளது. வடக்கில் ஓமந்தை பெரிய விளாத்திக்குளம் பகுதியில் 2 மில்லியன் ரூபா முதலீட்டில் தமது முதலாவது மீன்பிடித் தொழிற்சாலையை நிர்மாணித்து வருவ தாகவும் எதிர்காலத்தில் மேலும் பல தொழிற் சாலைகளை உருவாக்கி அதன் மூலம் பெரு மளவு தொழில் வாய்ப்புகளை வடக்கு மக்களுக்கு வழங்கத் தீர்மானித்துள்ள தாகவும் அதன் திட்டப் பணிப்பாளர் பி. ஸ்ரீனிவாசன் தெரிவித்தார். முதற்கட்டமாக ஓமந்தை பெரிய விளாத்திக்குளத்தில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள…
-
- 0 replies
- 458 views
-
-
நாடு முழுவதும் கரையோர பிரதேசங்களில் தலா ஒரு கடற்படை முகாம்:- 30 ஆகஸ்ட் 2011 கரையோரங்கள் மற்றும் கடல் பகுதிகளின் பாதுகாப்புக்காக இந்த முகாம்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், நாடு முழுவதும் கரையோர பிரதேசங்களில் தலா ஒரு கடற்படை முகாம் அமைக்கப்பட உள்ளதாக கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கரையோரங்கள் மற்றும் கடல் பகுதிகளின் பாதுகாப்புக்காக இந்த முகாம்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், கரையோர பிரதேசங்களில் பாதுகாப்பு முற்றாக கடற்படையினரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இலங்கைக்குள் சட்டவிரோதமாக ஆயுதங்கள், போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத ஆட்கடத்தல்களை தடுத்தல், கடலுக்கு சென்று ஆபத்தில் சிக்கிக்கொள்பவர்களை காப்பற்…
-
- 0 replies
- 443 views
-
-
பிரசுரித்தவர்: NILAA August 29, 2011 மர்ம மனிதன் பீதியை பெரிதுபடுத்தி மக்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களேயென மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி, கொக்கட்டிச்சோலை, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுகளின் சிவில் பாதுகாப்புக்குழுக்கள், அரசியல்வாதிகள் கலந்துகொண்ட விசேட கூட்டம் களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் மர்ம மனிதன் பீதி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டமை அனைவரு…
-
- 2 replies
- 471 views
-
-
[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஓகஸ்ட் 2011, 04:53 GMT ] [ தா.அருணாசலம் ] மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளால் சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சிறிலங்காவினால் ஏற்றுமதி செய்யப்படும் 300 மில்லியன் கிலோ தேயிலையில், 78 வீதமானவற்றை ஈரான், ஈராக், சிரியா, லிபியா ஆகிய நாடுகளே வாங்கி வந்தன. ஆனால் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சிறிலங்காவில் இருந்து 55 மில்லியின் கிலோ தேயிலை மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது மொத்த தேயிலை ஏற்றுமதியில் 30 வீதம் மட்டுமேயாகும். அரசியல் நெருக்கடிகளால் லிபியா, சிரியா போன்ற நாடுகளின் பிரதான துறைமுகங்களுக்கு தேயிலையை அனுப்ப முடியாத நிலை உள்ளதாக கொ…
-
- 7 replies
- 1.1k views
-
-
மரண தண்டனை விவகாரம்; மௌனம் கலைத்தார் ஜெயலலிதா! Published on August 29, 2011-10:56 am 03 பேரின் கருணை மனுவை பரிசீலிக்கும் அதிகாரம் முதல் அமைச்சருக்கு இல்லை. குடியரசுத் தலைவர் கருணை மனுக்களை நிராகரித்த பின்னர் முதல் அமைச்சர் தலையிட முடியாது. தண்டனையை எதிர்கொண்டுள்ள 3 பேரும் மீண்டும் குடியரசுத் தலைவரை அணுக வேண்டும் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார். மேலும், காஞ்சிபுரத்தில் செங்கொடி தீக்குளித்து மாண்டது வருத்தமளிக்கிறது. இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது என்றும் கூறியுள்ளார். http://www.saritham.com/?p=32395
-
- 29 replies
- 2.5k views
-
-
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதில் தமது கடிதத்தை கருணை மனுவாக கருத வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார். திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனித உரிமைக்கும், மனிதாபிமானத்துக்கும் எதிரான தூக்கு தண்டனை தேவையில்லை. அதனை ரத்து செய்துவிடலாம் என சொல்லாத நாடுகளே இல்லை என கூறிவிடலாம். கொலைக் குற்றம் சாட்டப்பட்ட கைதி தமது வாழ்நாள் முழுவதும் அந்த குற்றத்தை எண்ணி வருந்துவதைவிட தூக்கு தண்டனையால் பெரிய பயன் விளைந்துவிடப் போவதில்லை. நம் உள்ளத்தை உருக்கும் பிரச்சனையாக உருவெடுத்துள்ள, மூன்று தமிழ் வாலிபர்களின் உயிர் ஊசலாடுவதை தடுத்து நிறுத்தி உதவிடும் பணி நம் கண் முன் பேருரு எடுத்திருக்கிறது. ராஜீவ…
-
- 6 replies
- 911 views
-
-
சங்கரி – சுமந்திரன் கைகலப்பை இடைமறித்த பரந்தன் ராஜன், மாவை சேனாதிராஜா! Published on August 29, 2011-7:52 pm தமிழ்க்கட்சிகளின் ஒன்று கூடல் இந்தியத்தலைநகரில் நடைபெற்ற போதிலும் அங்கு சென்றிருந்து கூட்டமைப்புப் பிரதிநிதிகள் அங்கு ஒருவருடன் ஒருவர் கைகலப்பிற்குச் செல்லும் வரையில் முரண்பட்டிருக்கின்றனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இரண்டு நாட்களாக நடைபெற்ற அமர்வில் இரண்டாம் நாள் அமர்வும் நிறைவு பெற்றதன் பின்னர் பரந்தன் ராஜனின் ஏற்பாட்டில் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்களுக்கான விருந்துபசாரம் இடம்பெற்றிருந்தது. விருந்துபசாரத்தின் பின்னர் கூட்டத்தில் முடிவுகள் எதுவும் எட்டப்படாத போதிலும் கூட்டத்தில் கதைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் எழுத்து மூலமான அறிக்கை ஒன…
-
- 2 replies
- 1.7k views
-
-
ராஜிவ் கொலையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி, திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, அவர்களின் பாலு, புவனா மற்றும் கோபி ஆகியோர் திடீரென பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதையடுத்து அவர்கள் மூன்று பேர் உள்ளிட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர். கலெக்டர் அலுவலகத்தில் மூன்று பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=60421 3 பேரை தூக்கில் போட எதிர்ப்பு: கட்டிடத்தின் மேல் ஏறி மாணவர்கள் தற்கொலை செய்துக்கொள்வதாக கோஷம் ராஜீவ் கொலை வழ…
-
- 3 replies
- 621 views
-
-
கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது - இந்தியா : 29 ஆகஸ்ட் 2011 கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமான என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா அறிவித்துள்ளார். கச்சதீவு இலங்கையின் எல்லைப் பகுதிக்குள் இருப்பதாக இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில் கடல் எல்லை குறித்து இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கச்சத்தீவை இலங்கையிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டுமென காலத்திற்கு காலம் தமிழக அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, கச்சத்தீவில் வலைகளை உலர வைப்பதற்கும், புனித அந்தோனியார் திருவிழாவில் கலந்து கொள்வதற்கும் இந்திய மீனவர்களுக்கு உரிமை இருப்பதாக அமைச…
-
- 7 replies
- 1.6k views
-
-
பதிந்தவர்: ADMIN திங்கள், 29 ஆகஸ்ட், 2011 கோவையில் இன்று மூவரின் தூக்கு தண்டனைக்கு எதிராய் சட்டக்கல்லூரி மாணவர்கள் அணி அணியாக பிரிந்து ஒவ்வொரு நடுவன் அரசு அலுவலகங்களாக சென்று முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இன்று கோவையில் அனைத்து கட்சிகளின் சார்பில் தொடர்வண்டி மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்ததற்கு இணங்க, அனைத்துக்கட்சியினரும் தொடர்வண்டி நிலையம் அருகில் குவிந்திருக்க, அங்கு காவல் துறையும் பெரும்படையை குவித்திருந்தது. இந்த நிலையை மாணவர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக எடுத்துக்கொண்டு கோவை மாநகரில் அமைந்துள்ள நடுவன் அரசு அலுவலகங்களை நோக்கி அணி அணியாக படையெடுத்தனர். முதலில் ஒரு அணி அவினாசி சால…
-
- 1 reply
- 904 views
-
-
பேச்சுக்களை மீண்டும் தொடர்வதில் பயனில்லை - கூட்டமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களைத் தொடர இலங்கை அரசு தயாரென வெளியுறவு அமைச்சர் ஜீ எல் பீரிஸ் கூறியது உண்மையென்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த மூன்று கோரிக்கைகளுக்கும் அது எழுத்து மூலம் பதிலளிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்தது. அப்படியாக எழுத்து மூலமாகப் பதிலளிக்காவிட்டால், பேச்சுக்களை மீண்டும் தொடர்வதில் பயனில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஆட்சிக் கட்டமைப்பு, மத்திய மற்றும் அதிகாரப்பகிர்வுக்குரிய அலகுக்கு இடையே பங்கிடப்படும் அதிகார விடயங்கள் செயற்படும் விதம், நிதி, வரி அறவீட்டு அதிகாரங்கள் ஆகிய மூன்று விடயங்கள் குறித்து விளக்கும்…
-
- 0 replies
- 718 views
-
-
உயிர்த்தியாகம்: செங்கொடி உடல் நாளை அடக்கம்: தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி Monday, August 29, 2011, 11:12 காஞ்சீபுரம் ஓரிக்கையைச் சேர்ந்த பரசுராமன் என்பவரின் மகள் செங்கோடி (21). இவர் அப்பகுதியில் உள்ள மக்கள் மன்றம் என்ற அமைப்பில் சேர்ந்து பணியாற்றி வந்தார். தமிழ் இன உணர்வு பற்று அதிகம் கொண்ட செங்கொடி, தமிழர் நலனுக்கு ஆதரவான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்து வந்தார். ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரை தூக்கிலிடக்கூடாது என்று தமிழ் நாடு முழுதும் நடந்து வரும் போராட்டத்தில் இவரும் கலந்து கொண்டார். நேற்று காலை காஞ்சீபுரத்தில் நடந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டார். நேற்று மாலை 6 மணிக்கு காஞ்சீபுரம் தாலுகா அலு வலகம் வந்த அவர் திடீ ரென…
-
- 3 replies
- 616 views
-
-
என் அப்பாவுடன் வாழ அனுமதியுங்கள்- சோனியாவுக்கு முருகன் மகள் கண்ணீர்க் கடிதம் என் தந்தையை மன்னித்து விடுங்கள். எனது தாய்க்கு காட்டிய கருணையை எனது தந்தைக்கும் காட்டி, என்னை எனது தந்தையுடன் வாழ அனுமதியுங்கள் என்று முருகன், நளினியின் மகள் அரித்ரா காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். தூக்குக் கயிற்றின் முன்பு முருகன் உள்ளிட்ட மூவர் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களது மரணத்திற்கு நாள் குறிக்கப்பட்டு விட்டது. இதையடுத்து அவர்களைக் காப்பாற்ற பல்வேறு வகையான போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடந்து வருகின்றன. இந்த நிலையில் முருகன்-நளினி தம்பதியின் மகள் அரித்ராவும் தனது தந்தையைக் காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்து வருகிறார். தற்போது 20 …
-
- 0 replies
- 640 views
-