Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தென் இந்தியாவில் உள்ள ஈழத்தமிழர் முகாமான மண்டபம் முகாமிலும் அத்துடன் பூந்த மல்லை சிறையில் உள்ளவர்களில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவர்களை துரிதமாக இடம் மாற்றும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ராஜீவ் கொலை வழக்கில் பொய்க்குற்றம் சாட்டப்பட்டவர்களான மூவரையும் தூக்கிலிடும்போது மேற்குறிப்பிட்ட விடுதலைப்புலி ஆதரவாளர்களால் ஆபத்து வரலாம் என எண்ணியே இந்த ஏற்பாடு என தமிழ் நாடு திருச்சி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். மேற்குறிப்பிட்ட வர்களை விசேட முகாம் ஒன்றில் ராஜீவ் கந்தி கொலைவழக்கில் சிக்கப்பட்ட மூவருக்கும் மரண தண்டனை முடியும் வரை அடைக்கப்படுவார்களாம். http://www.eelanatha...%AE%AE%E0%AF%8D

    • 0 replies
    • 964 views
  2. வன்னிப்போரின் பின்னர் கைதுசெய்யப்பட்ட மருத்துவர்கள், கொழும்பில் செய்தியாளர்களுக்கு எதனை கூறவேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தினால், பயிற்றுவிக்கப்பட்டதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்கத் தூதரகம் மூலம் இந்த தகவல் அமெரிக்காவில் உள்ள இராஜாங்க திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது வன்னிப்போரின் போது பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இலங்கைப் படையினரால் கொல்லப்பட்டனர். அவற்றை குறித்த மருத்துவர்கள் வெளிநாட்டு ஊடகங்களுக்கு வெளிப்படுத்தினர். எனினும் போர் முடிந்த பின்னர் அந்த மருத்துவர்கள் இலங்கை படையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். வன்னியில் நடந்த உண்மை தகவல் http://youtu.be/zhb-QXSMVt8 தடுத்து …

  3. [sunday, 2011-08-28 10:34:40] நிரபராதித் தமிழர்களான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு செப்டம்பர் 9ம் தேதி தூக்கு தண்டனை என்று நாள் குறிக்கப்பட்ட நிலையில், ஸ்காட்லாண்டில் வசிக்கும் முருகனின் தாயார் சோமணி அம்மையார் மூவரையும் காப்பாற்றக் கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் முறையிட்டுள்ளார். அதன் காணொளி வடிவம்.. http://youtu.be/0T_nG33_6ag http://youtu.be/ot9ZStRQwig http://www.seithy.com/breifNews.php?newsID=49014&category=TamilNews&language=tamil

  4. ஞாயிற்றுகிழமை, ஆகஸ்ட் 28, 2011 உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை சிறிலங்காவுக்கு வருகை தரவிருந்த ஆசிய மற்றும் தெற்காசியவிவகாரங்களுக்கான அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேகின் விஜயம் காலவரையற்ற நிலையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தற்போது கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சூறாவளி அனர்த்தமே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. என்றாலும் இலங்கை அரசாங்கம் பிளேக்கின் வரவை இப்போதைக்கு விரும்பவில்லை எனவும் கூறப்படுகின்றது. ஈழநாதம்

    • 0 replies
    • 619 views
  5. Aug 27, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / அவசரவேண்டுகோள்... உடனடியாக..! முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குதண்டனை எந்த நேரத்திலும் நிறைவேற்றப்படகூடும். மூவரினதும் வாழ்வின் நாட்கள் நிமிடங்களாகவும், செக்கன்களாகவும் சுருங்கிக்கொண்டே போகின்றன. கலகம் அடக்கும் காவல்துறையும், மத்திய ரிசேவ் ஆயுதக்காவல் பிரிவும் குவித்து வைக்கப்பட்டுள்ளார்கள். சட்டம் - ஒழுங்கை காரணம்காட்டி நாளையோ மறுநாளோகூட தண்டனையை நிறைவேற்ற ஆளும்தரப்பு அவசரம் காட்டுகின்றது. தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் அவர்களை தூக்குகயிறு நெரிப்பதற்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது. பேரறிவாளனின் தாயின் கதறல் எமது எல்லோரினதும் தாயினதும் கதறலாகவே நாம் கேட்கவேண்டும். இந்த தள்ளாத வயதிலும் அந்த தாய்படும் வேதனை நம் த…

  6. பிரித்தானிய தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் குழுவொன்று, இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஸ்மா ஸ்வராஜ் (Sushma Swaraj) உட்பட இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்துள்ளது. சுஸ்மா ஸ்வராஜை சிறீலங்கா அரசாங்கம் தமது நாட்டுக்கு வருமாறு உத்தியோகபூர்வமாக அழைத்துள்ள பின்புலத்தில், புதுடெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அவரை நேரில் சந்தித்த பிரித்தானிய தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் குழு, ஈழத்தமிழ் மக்களின் நிலை பற்றி எடுத்துக் கூறியது. சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் தமிழர் தாயகத்தின் உண்மை நிலை பற்றி தெளிவாக எடுத்து விளக்கப்பட்டதுடன், அவரது கொழும்பிற்கான பயணத்தை சிறீலங்கா அரசாங்கம் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தும் சாத்தியம் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது…

  7. [saturday, 2011-08-27 11:48:44] இலங்கையில் உள்ள தமிழர்கள் தனியொரு இனமான தமது இருப்பையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு ஏதுவாக அவர்களை ஒரு தனித்துவமான தேசம் எனவும் அவர்கள் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்றும் அங்கீகரிப்பது இன்றியமையாததாகும். இதனடிப்படையிலேயே இனப்பிரச்சினைக்கான தீர்வு அமையவேண்டும் என்று இந்தியாவும் சர்வதேச சமூகமும் வலியுறுத்தவேண்டும் என அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. புதுடில்லியில் விடுத்துள்ள அறிக்கையிலேயே அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் எம்.பி. யுமான கஜேந்திர குமார் பொன்னம்பலம் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் புதுடில்லியில் துயரும் தீர்வும் எனும் தலைமைப…

  8. தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவத்தினரை முற்றாக அகற்ற இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்க் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. இந்திய நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறிலங்கா போரம் சார்பில் புதுடில்லியில் நடைபெற்ற இரண்டு நாள் கலந்துரையாடல்களின்போது இங் கிருந்து சென்று கலந்துகொண்ட தமிழ்க் கட்சிகள் இராணுவத்தை தமிழர் பகுதியில் இருந்து அவசரமாக அகற்றுவதன் அவசியத்தை வலியுறுத்தி உள்ளன. “தமிழர் தாயகப் பகுதிகளில் இராணுவத் தினரின் பிரசன்னத்தை தமிழ் மக்கள் அடியோடு விரும்பவில்லை. சிவில் நிர்வாகம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு அதன் கீழ் அமைதியான முறையில் வாழவே மக்கள் விரும்புகிறார் கள். இதனை இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெளிவாக எடுத்து விளக்கி…

  9. மேலும் படங்களுக்கு இதனைகிளிக்செய்யவும் முருகன் என்றால்'அழகன்' என்று பொருள். நல்லூரில் குடிகொண்டிருக்கும் முருகப்பெருமான் தமிழ்க் கடவுளாக தமிழர்கள் செறிந்து வாழும் வடபகுதியில் குடிகொண்டு மக்களுக்கு அருள் பாலித்து வருகின்றான். வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தில் இன்று 27 ஆம் திகதி தேர்த்திருவிழா. உலகெலாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம் வல்ல பரம்பொருளான முருகப்பெருமான் தம்மை வழிபடும் அடியார்களின் துன்பங்களையும் துயரங்களையும் இன்னல்களையும் இடுக்கண்களையும் நீக்கியருளும் பொருட்டு இந்த நல்லூரிலே கோயில்கொண்டு எழுந்தருளி வீற்றிருக்கின்றான். புனித நகராம் நல்லூரிலே அருள்பாலிக்கும் அழகன் முருகப்பெருமானுக்கு நடைபெறுகின்ற வருடாந்த மஹோற்ச…

  10. மேலும் படங்களுக்கு இதனைகிளிக்செய்யவும் மேலதிக புகைப்படங்களை எமது புகைப்படப் பிரிவில் பார்வையிடலாம்

  11. இறைவனால் படைக்கப்பட்ட அத்தனை உயிர்களும் இறைவனின் குழந்தைகள். ஆட்சிப்பீடத்தில் உள்ள அத்தனை பேரும் கொலை மாபாதகங்களை இரகசியமாகச் செய்து தான் ஆட்சியில் அமர்ந்திருக்கின்றார்கள். யாராவது மனச்சாட்சியைத்தொட்டு சொல்லட்டும் பார்க்கலாம் நாங்கள் எந்தவித கொலைகளுக்கும் உடந்தையாக இருக்கவில்லை என்று. எனவே இன்னொருவருக்கு மரணதண்டனை கொடுக்க இந்த உலகில் இன்னொருவருக்குத் தகுதி கிடையாது. இன்றைய தூக்குத்தண்டனை என்பது பழிக்குப்பழி தான். இதிலே எந்தவித நீதியும் கிடையாது. காந்தீயக்கொள்கையை மறந்த காந்தி பிறந்த இந்த மண் பேய்களும், பிணந்தின்னிகளும் நிறைந்து காணப்படுகின்றது. அகிம்சையைக்கடைப்பிடித்த காந்தியின் கொள்கையை பின்பற்றும் நாடாக இருந்தால் தியாகி தீலீபன் இறந்திருப்பானா? அல்லது முள்ளிவாய்ககாலில…

    • 3 replies
    • 1.4k views
  12. பிரசுரித்தவர்: admin August 27, 2011 முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குதண்டனை எந்த நேரத்திலும் நிறைவேற்றப்படகூடும். மூவரினதும் வாழ்வின் நாட்கள் நிமிடங்களாகவும், செக்கன்களாகவும் சுருங்கிக்கொண்டே போகின்றன. கலகம் அடக்கும் காவல்துறையும், மத்திய ரிசேவ் ஆயுதக்காவல் பிரிவும் குவித்து வைக்கப்பட்டுள்ளார்கள். சட்டம் – ஒழுங்கை காரணம்காட்டி நாளையோ மறுநாளோகூட தண்டனையை நிறைவேற்ற ஆளும்தரப்பு அவசரம் காட்டுகின்றது. தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் அவர்களை தூக்குகயிறு நெரிப்பதற்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது. பேரறிவாளனின் தாயின் கதறல் எமது எல்லோரினதும் தாயினதும் கதறலாகவே நாம் கேட்கவேண்டும். இந்த தள்ளாத வயதிலும் அந்த தாய்படும் வேதனை நம் தாய்படும் வேதனை என்றே நாம் த…

  13. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தூக்குத்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் கருணை மனு நிராகரிப்பட்டது. இதை எதிர்த்து தமிழ் உணர்வாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மூவரையும் செப்டம்பர் 7ம் தேதிக்குள் மூவரையும் தூக்கிலிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை அறிந்து தமிழ் உணர்வாளர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இன்று இரவு( 25.8.2011) 10 மணி அளவில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தலைமையில் உணர்வாளர்கள் ஒன்று கூடி இதை தடுப்பது எப்படி என்று சீமான் இல்லத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனையில் நாளை வெள்ளிக்கிழமை 26.8.2011 அன்று சென்னை உயர்நீதிமன்றத்த…

  14. இலங்கையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. அவசரகாலச் சட்டத்தை தொடரும் உத்தேசம் கிடையாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 25ம் திகதி விடுத்த அறிவிப்பு பாராட்டப்பட வேண்டியது என ஐரோப்பிய ஆணைக்குழுவின் துணைத் தலைவர் கெதரீன் அஸ்டான் தெரிவித்துள்ளார். நாட்டில் இயல்பு நிலைமையை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் முக்கியமான தீர்மானமாக அவசரகாலச் சட்ட நீக்கம் கருதப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். அவசரகாலச் சட்ட நீக்கத்தின் மூலம் முக்கியமான அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அவசரகாலச் சட்டத்தை நீக்குவதன்மூலம் ந…

  15. இந்தியாவிற்கு யாத்திரை மேற்கொண்ட மூன்று இலங்கையர்களைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. நான்கு நாட்களுக்கு முன்னர் குறித்த நபர்கள் காணாமல் போயுள்ளதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. மூன்று வெவ்வேறு யாத்திரை குழுகக்ளைச் சேர்ந்த மூவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். தெனியா, அல்பிட்டி மற்றும் எட்டியாந்தோட்டை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களைக் கண்டு பிடிப்பதற்காக இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது http://meenakam.com/2011/08/27/34364.html

  16. எனது தந்தையை தயவு செய்து காப்பாற்றுங்கள். அவரை விடுதலை செய்யாவிட்டாலும் பரவாயில்லை அவரது தூக்குத்தண்டனையினை குறைக்க உதவுங்கள் என தற்போது தாயகத்தில் இருக்கும் முருகனின் மகளான ஹரித்ரா முருகன் கேட்டுக்கொண்டுள்ளார். .ஹரித்ரா முருகன் சிறையிலேயே பிறந்து வளர்ந்தவர் பின்னர் அவரது அம்மம்மாவுடன் தமிழீழத்தில் வளர்ந்துவந்தார். இவர் இப்போது இலங்கை பிரஜை ஆவார். இவர் தனது 14 வது வயதில் தனது தாய் மற்றும் தந்தையினை சிறையில் பார்த்தார். அதன் பின்னர் தனது பெற்றோர்களைப்பார்க்க இந்திய அரசு வீசா வழங்கவில்லை. ஹரித்ரா தனது பெற்றோரின் ஆசைப்படி நன்றாக படித்து தற்போது மருத்துவத்துறையில் பிரித்தானியாவில் படிப்பை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இவரது தந்தை சிறிதரன் எனப்படும் முருகன் கல்வி…

  17. ஜயலலிதா - சுஷ்மா சுவராஜ் - மீரா குமார் ஆகியோரை இலங்கை வெளிவிவகார அமைச்சு அழைத்துள்ளது:- 27 ஆகஸ்ட் 2011 தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், இந்திய நாடாளுமன்ற சபாநயகர் மீரா குமார் ஆகியோரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு அழைத்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு விஜயம் செய்து, அடுத்த மாதம் 17 ஆம் திகமுதல் 27 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்க எண்ணியிருந்த போதிலும், அந்த திகதியிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/662…

  18. சனிக்கிழமை , ஆகஸ்ட் 27, 2011 இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட பேரரறிவாளன் முருகன், சாந்தன் ஆகியோரது கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் அவர்களை தூக்கிலிட வேலூர் சிறைச்சாலை செப்டம்பர் மாதம் ஒன்பதாம் திகதி நிர்ணயம் செய்தது. இது தொடர்பில் அவர்களுக்கு அனுப்பப்பட்ட சோனியாவின் மரண ஓலை யினை கீழே காண்க. . சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு இந்திய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இதனையடுத்து மூவரையும் தூக்கிலிடுவதற்கான நடவடிக்கைகளை சிறைச்சாலை நிர்வாகம் ஆரம்பித்துள்ளது. . வேலூர் சிறைசாலையினைச் சுற்றி விசேட கொமாண்டோப்படைக…

  19. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் 29.8.2011 அன்று தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கேட்டு மனு தாக்கல் செய்ய உள்ளனர். இந்த மனு, விசாரணைக்கு வரும் நாளன்று தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து 30 ஆயிரம் வழக்கறிஞர்களைநீதிமன்றத்திற்குள் வரவழைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்று , சாதி ஒழிப்பு விடுதலை அமைப்புக்கான ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த் கூறினார். முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரையும் வேலூர் சிறையில் சந்தித்துவிட்டு வெளியே வந்த ரஜினிகாந்த், இந்த தகவலை நம்மிடையே தெரிவித்தார். http://www.nakkheera...ws.aspx?N=60308

  20. சனிக்கிழமை, 27, ஆகஸ்ட் 2011 (23:52 IST) முருகன், சாந்தன்,பேரறிவாளன் மூவரும் தனித்தனி அறைகளில் அடைப்பு; வெளியே வர அனுமதி இல்லை முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு தூக்கு நிறைவேற்றுவதற்கான உத்தரவை வேலூர் ஜெயிலுக்கு சிறைதுறை டி.ஐ.ஜி. கோவிந்தராஜ் கொண்டு வந்தார். தூக்கு போடும் தேதி மற்றும் விவரங்களை ஜெயில் அதிகாரிகள் 3 பேரிடமும் தனிதனியாக கூறினர். இதனை கேட்டதும் அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதனையடுத்து 3 பேரும் தனி, தனி சிறைகளில் அடைக்கப்பட்டனர். அறையை விட்டு அவர்கள் வெளியே வர அனுமதி இல்லை. அவர்களை பார்ப்பவர்கள் வெளியில் இருந்து உணவு பண்டங்கள் கொடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 3 வேலையும் ஜெயில் உணவு மட்டுமே வழங்…

  21. [saturday, 2011-08-27 00:09:46] 1957ம் ஆண்டு தூக்குக் கயிற்றிலிருந்து பாலன் என்பவரை அப்போதைய முதல்வர் காமராஜர் காப்பாற்றியது போல ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தனை முதல்வர் ஜெயலலிதா காப்பாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இறுதியாக நளினி, அவரது கணவர் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. சோனியா காந்தியின் தலையீட்டின் பேரில் இது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்து தங்களுக்குக் கருணை காட்ட வேண்டும் …

  22. நெடுந்தீவில் ஒரே குழியில் 8 மனித மண்டை ஓடுகள்; அத்திபாரம் வெட்டியபோது வெளிவந்தன Saturday, August 27, 2011, 10:26 நெடுந்தீவு உதவி அரசஅதிபர் பணிமனைக்குப் பின்புறமாக எட்டு மனித மண்டை ஓடுகள் மீட்கப்பட்டுள்ளன. உதவி அரச அதிபர் பணிமனைக்குப் பின்புறத்தில் கட்டடம் ஒன்றை அமைப்பதற்காக அத்திபாரம் வெட்டும் பணி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் சில தென்பட்டன. எச்சங்கள் தென்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் அத்திபாரம் வெட்டும் பணிகள் உட னடியாக இடை நிறுத்தப்பட்டன. இது தொடர்பாகப் பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். இதனையடுத்து நேற்று ஊர்காவற்றுறை மாவட்ட நீதிபதி திருமதி ஜோய் மகிழ் மகாதேவா, சட்ட வைத்திய அதிகாரி எஸ். சிவரூபன் ஆகியோர் முன…

  23. தமிழரின் உரிமைகளை மீட்டெடுக்கவும் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்கு எதிராகப் பக்கசார்பற்ற அனைத்துலக விசாரணைகளின் அவசியத்தை அனைத்துலக மட்டத்தில் வலியுறுத்தவும் வேண்டி உலகத் தமிழர் பேரவை கனடாவில் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. http://www.tamilthai.com/?p=25132

  24. இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரின்போது நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐநா சிறப்புப் பிரதிநிதிகள் குழு அளித்த அறிக்கை பற்றி, ஐநா மன்றத்தில் விவாதத்துக்கு வரும்போது இந்தியா தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இந்திய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வியாழக்கிழமை விவாதம் நடைபெற்றது. மாநிலங்களவையில், விவாதத்தின் முடிவில் பதிலளித்த அமைச்சர் கிருஷ்ணா 'ஐநா அறிக்கை தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன, அந்த அறிக்கை ஐநா மன்றத்தின் எந்த அமைப்பிலும் இதுவரை விவாதத்துக்கு வரவில்லை. அது வரும் என்று காத்திரு…

  25. ஒரு ராஜீவ் காந்திக்காக எத்தனை தமிழர்களைக் கொல்லப்போகின்றார்கள்? ஈழப்பிரச்சனையை ஆயுதப்போராட்டமாக மாற்றி இலங்கையைச் சீர் குலைத்தவர்கள் இந்தியதேசம் பின்னர் தமிழர் ஆயுதக்ழுக்களை அடக்க திட்டமிட்டு இலங்கைக்கு இந்தியப்பிசாசு இராணுவத்தை அனுப்பி தமிழர்களை ஓரவஞ்சகமாக வதைத்து 10,000க்கு மேற்பட்ட தமிழர்களைக்கொன்று குலித்தது இந்திய இராணுவம். பின்னர் சிங்கள அரசின் அனுசரணையுடன் தமிழர்களுக்கு எதிரான போரை நடத்தி 75,000க்கு மேற்பட்ட தமிழர்களைக் ஈவிரக்கம் இன்றி கொத்தணிக் குண்டுகளாலும், இரசாயனக்குண்டுகளாலும் கொன்றதும், இறுதிப்போரை நடத்தியதும் இந்தியாவேதான். இத்துடன் இவர்களின் இரத்தவெறி இன்னும் அடங்கவில்லை. நாங்கள் வல்லரசு என்ற இறுமாப்பைத் தமிழர்களுடன் தான் காட்முடியும். அருணாச்ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.