ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143327 topics in this forum
-
நொச்சியாகம பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மீது நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலின் போது கணவனும் மனைவியும் காயமடைந்துள்ளனர். இவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என பொலிஸ் தரப்புத் தெரிவித்துள்ளது. இந்தக் கண்டுத் தாக்குதல் காரணமாக வீட்டுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தொரிவித்துள்ள நொச்சியாகம பொலிஸார், தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனக் கூறியுள்ளனர். http://www.eeladhesam.com/index.php?option
-
- 1 reply
- 601 views
-
-
பிரசுரித்தவர்: Sukkran August 23, 2011 கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேசசபைத் தலைவர், உபதலைவர் மற்றும் உறுப் பினர்கள் நேற்றுத் தமது பணிகளை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்தனர். கிளிநொச்சி, விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசையின் பின், பிரதேச சபை உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மங்கள வாத்திய இசையுடன் எமது மக்கள் புடைசூழ கரைச்சி பிரதேசசபை அலுவலகத்துக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். சபை முன்றலில் தேசியக் கொடியை கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.நீல்தளுவத்தையும் பிரதேசசபைக் கொடியை பிரதேசசபைத் தலைவர் குகராஜாவும் ஏற்றி வைத்தனர். நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், எஸ்.சிறீதரன், …
-
- 0 replies
- 573 views
-
-
மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு அருகாமையில். வீதியோரமாக அமைந்திருக்கும் பெண்கள் விடுதியொன்றில் கிறிஸ் மனிதன் புகமுயற்சி செய்துள்ளான். இச்சம்பவம் இன்று பிற்பகல் 2மணியளவில் இடம்பெற்றுள்ளது. எனினும் விடுதியிலிருந்த பெண்கள் கூக்குரலிட்டதைத் தொடர்ந்து அவன் அருகிலுள்ள ஒழுங்கை ஒன்றுக்குள் ஓடித்தப்பியுள்ளான். சற்று நேரத்தில் சம்பவ இடத்துக்கு பவள் கவச வாகனமொன்றில் விரைந்து சென்ற இராணுவத்தினரும் மோட்டார் சைக்கிள் குறூப்பைச் சேர்ந்தவர்களும் குழுமிநின்ற மக்களைத் துரத்தியதுடன். மர்ம நபர் ஓடிச்சென்ற ஒழுங்கை வாசலில் காவலுக்கு நின்றதையும் காணமுடிந்தது. பொலிஸாரும் சம்பவ இடத்துக்கு வந்ததுடன் அவ்வழியால் சென்ற சில இளைஞர்களை மறித்து விசாரணை செய்துள்ளனர். மேலதிக இராணுவத்தினர் வரவழைக்…
-
- 0 replies
- 837 views
-
-
யாழ்.நாவாந்துறைப் பகுதியில் இராணுவத்தினரால் கடந்த இரவு பிடித்துச் செல்லப்பட்ட இளைஞர்களை எதிர்வரம் 26ஆம் திகதி வரையில் தடுப்புக் காவலில் வைக்குமாறுயாழ்.மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று இரவு பிடித்துச் செல்லப்பட்ட நூற்று இருபத்தைந்திற்கும் அதிகமானோர் இன்று யாழ்.நீதிமன்றில் பொலிஸாரினால் முற்படுத்தப்பட்டனர். இவர்களில் 25 ற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் பிடிக்கப்பட்ட அனைவரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் தடுப்புக் காவலில் வைப்பதுடன் முழுமையான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி மருத்து அறிக்கையினையும் சமர்ப்பிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்று எமது செய்தியாள…
-
- 0 replies
- 418 views
-
-
[Tuesday, 2011-08-23 12:02:07] அவசரகாலச் சட்டத்தை நீக்கும்படி சர்வதேசம் அழுத்தம் கொடுத்து வருவதால் அதனை நீடிப்பதற்காகவே அரசு கிறீஸ் பூதங்களை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன், கிறீஸ் பூதங்கள் விவகாரத்தில் மக்களைத் திசைதிருப்பி அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரிக்க அரசு முயற்சிக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கிறீஸ் மனிதன் விவகாரம், காஸ் விலை உயர்வு என்பன தொடர்பாகக் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டில் சட்டமும், ஒழுங்கும் இல்லை. இங்கு காட்டுச்சட்டமே நிலவுகின்றது. சர்வாதிகாரத்தின் தோற்றமே இது.அண்மைக்…
-
- 0 replies
- 410 views
-
-
[Tuesday, 2011-08-23 13:05:13] யாழ். நாவாந்துறையில் நேற்றையதினம் இரவு இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்குமிடையில் இடம்பெற்ற தகராறில் கைதுசெய்யப்பட்ட 120 பொதுமக்களும் இன்று யாழ். நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களின் உறவினர்கள் யாழ். நீதிமன்ற வளாகத்தினை சூழ்ந்து, அங்கு கடமையிலுள்ள பாதுகாப்பு தரப்பினரிடம் நியாயம் கேட்டு அழுதவண்ணமுள்ளனர். வழமைக்கு மாறாக யாழ். நகரில் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.seithy.co...&language=tamil
-
- 1 reply
- 562 views
-
-
வடமேற்கு கடற்பிராந்தியத்தின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக சிறிலங்கா கடற்படை நாச்சிக்குடாவில் புதியதொரு தளத்தை நிறுவி வருகிறது.இந்தக் கடற்படைத் தளத்தை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச விரைவில் திறந்து வைக்கவுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கடற்புலிகளால் முக்கிய தளமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த நாச்சிக்குடாவில் சிறிலங்கா கடற்படை புதிய தளத்தை அமைத்து வருகிறது. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் மன்னாரில் அதிகளவிலான கடற்படைத் தளங்களை சிறிலங்கா கடற்படை நிறுவி வரும் நிலையிலேயே, நாச்சிக்குடாவிலும் புதிய தளம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு ஏற்கனவே சிறிலங்கா கடற்படையின் சிறிய பிரிவு ஒன்று நிலைகொண்டுள்ள போதும்,…
-
- 0 replies
- 520 views
-
-
Tuesday, August 23, 2011, 3:40 வருகின்ற மாதம் 30 திகதி தமிழ் நாட்டில் உள்ள தஞ்சாவூரில் இந்திய உளவுத்துறையின் கைபொம்மைகளான நகைமுகன் குழு ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளனர். இதில் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதி ஒருவர் தொடக்கி வைக்கிறார் என்று இந்திய உளவுத்துறையின் கைபொம்மைகள் நகைமுகன் குழு அறிவித்துள்ளனர் . ஆனால் இந்த மாநாட்டுக்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நாடுகடந்த தமிழீழ அரசின் உள்துறை அமைசர் பாலசந்தர் அவர்கள் திட்டவட்டமாகா தெரிவித்துள்ளார் . இது தொடர்பான செய்தி இந்த உளவாளிகளின் திட்டம் என்ன ? http://youtu.be/qhwjuvUxfn8 http://www.tamilthai.com/?p=24829
-
- 2 replies
- 2.1k views
-
-
செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 23, 2011 யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் நேற்று இரவு படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே திடீரென ஏற்பட்ட முறுகல் நிலை அடிதடியாக மாறியதில் இருவர் காயமடைந்தனர். இராணுவ வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டன. அங்கு கூட்டம் கூடிய மக்களை பொலிஸாரும் இராணுவத்தினரும் விரட்டி விரட்டிக் கொட்டன்களால் தாக்கினர். பதிலுக்கு பொதுமக்கள் கற்களாலும் கையில் கிடைத்த பொருள்களாலும் படையினரைத் தாக்கினர். இதனை அடுத்து கூட்டத்தைக் கலைக்க படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இரவு 9 மணியளவில் சென். நீக்கலஸ் சனசமூக நிலைய மைதானத்தில் மக்கள் திரள ஆரம்பித்தனர். ஓட்டோ ஒன்றில் வந்த நபர்கள் சிலர் திருட முயற்சித்தார்கள் என்றும் வீட்டவர்கள் சுதாகரித்துக் …
-
- 3 replies
- 1.3k views
-
-
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரின் கருணை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்... மூவரும் எப்போது வேண்டுமானாலும் தூக்கு மேடையில் நிறுத்தப்படலாம்! 'மரண தண்டனையை பல்வேறு நாடுகள் ஒழித்துவிட்ட பிறகு, இந்தியா அதனைப் பின்பற்ற வேண்டுமா?’ என்று மனித உரிமையாளர்கள் ஒரு பக்கம் கேட்கிறார்கள். 'மூன்று தமிழர்கள் உயிரைப் பறிக்கலாமா?’ என்று தமிழின உணர்வாளர்கள் இன்னொரு பக்கம் கேட்கிறார்கள். இதற்கு மத்தியில் ஒரு குரல் வித்தியாசமாக ஒலிக்கிறது. ''ராஜீவ் கொலையின் உண்மைக் குற்றவாளிகள் வெளியில் இருக்கிறார்கள். அவர்களை விட்டுவிட்டு, கொலைச் சதியில் சம்பந்தம் இல்லாதவர்களை தூக்கு மேடைக்கு அனுப்புவது நியாயமா?’ என்பதுதான் …
-
- 3 replies
- 2.1k views
-
-
திங்கட்கிழமை, 22 ஆகஸ்ட் 2011 09:11 இலங்கைக்கு 9மாதப் பயிற்சிக்காக நைஜீரியாவில் இருந்து அனுப்பப்பட்ட போர் வீரர்கள் தமக்குள் சண்டை பிடித்து பயற்சி உபகரணங்களை அழித்ததில் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கையில் கப்பற்கட்டுமானம் மற்றும் நீரடி ஒட்டுவேலைகளைப் பற்றிப் பயிற்சிபெறுவதற்காக நைஜீரிய அரசினால் அனுப்பப்பட்டிருந்தனர். நைகர் டெல்ரா இராணுவத்தின் 50 முன்னாள் படைவீரர்களுடன் அந்நாட்டு அரசின் மன்னிப்புச் சபைத் திட்டத்தினால் தொழிற்பயிற்சிக்காக அனுப்பப்பட்டவர்களில் ஒரு பகுதியினரே இவர்கள். 2009 இல் சமஷ்டி அரசிடம் 20,000 இற்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய புரட்சியாளர்கள் சரணடைந்திருந்தனர். இவர்களில் 6000 பேர் இதுவரையில் தென்கிழக்குப் பகுதியில் இவர்கள…
-
- 2 replies
- 722 views
-
-
இந்தியாவிற்கு விஜயம் செய்வதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்தியாவின் தமிழக மற்றும் மத்திய அரசாங்கங்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தினால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சென்னை உயர் நீதிமனறத்தில் ஆஜராகத் தயார் எனவும் அவர் தெரிவித்தார். 1987ம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஜனநயாக வழிமுறைகளுக்கு திரும்பிய அனைத்து போராளிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். டக்ளஸ் தேவானந்தா படுகொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ் விவகாரத்தில் மத்திய அரசாங்கம் உரிய சட்ட விதிகளைப் பின்பற்றவில்லை என இந்திய காவல்துறையினர் குற்றம் சுமத…
-
- 3 replies
- 540 views
-
-
இந்தியா தனது பொறுமையை இழக்கும் ஒரு நேரம் வரும் ஜயந்த தனபால இருபது மைல்களுக்கு அப்பால் உள்ள இந்தியாவுடன் உறவுகளை சிறிலங்கா பலப்படுத்த வேண்டும். விரும்பியோ, விரும்பாமலோ இந்தியாவின் புவியியல் கட்டுப்பாட்டுக்குள் சிறிலங்கா உள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என ஐநா சபையின் ஆயுத பரிகரண விவாகாரங்களுக்கான துணைப் பொதுச்செயலாளராக பதவி வகித்தவரும் சிறிலங்காவின் மூத்த ராஜதந்திரியுமான ஜயந்த தனபாலா தெரிவித்திருக்கின்றார். 20 மைல்களுக்கு அப்பால் உள்ள இந்தியாவை நாம் தூக்கி எறிந்து விட முடியாது. புத்திசாலித்தனமாக இந்தியாவுடனான உறவை இறுக்கமாக வைத்து வந்த ஜனாதிபதியிடமிருந்து 2009க்கு பின்னர் அந்தப்புத்திசாலித்தனத்தை காணமுடியவில்லையே’, என்றும் அவர் தெரிவித்துள்ளார். …
-
- 4 replies
- 1.8k views
-
-
Tuesday, August 23, 2011, 1:16 காணொளி, சிறீலங்கா, தமிழீழம 2 ஆம் இணைப்பு .வல்வெட்டித்துறையிலுள்ள தமிழீழ தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை கனராக வாகனகங்களை கொண்டு இடிக்கும் பணிகள் தற்போது (இரவு நேரத்தில்) இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக டெலோ இயக்கத்தின் அரசியல் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இந்த வீட்டை முற்றாக இடித்துவிடும் வகையில் பாரிய இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வீட்டை மட்டும்தான் இவர்களால்அகற்ற முடிமே தவிர மண்ணை அகற்ற இவர்களால் இடிக்கமுடியது எம். கே. சிவாஜிலிங்கம் செவ்வி கிழே. இது தொடர்பான முன்னைய செய்தி http://youtu.be…
-
- 2 replies
- 822 views
-
-
திருகோணமலை நகரப்பகுதியில் அதிகரித்துள்ள கிறிஸ் மனிதர்களின் அத்துமீறல்களாள் பீதியடைந்த மக்கள் இடம்பெயர்ந்து உறவினர்களது வீடுகளிற்கு செல்லத் தொடங்கியுள்ளதாக அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். நாடு முழுமைக்கும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள கிறிஸ் மனிதர்களது நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக திருகோணமலை நகரப் பகுதிகளிலிலும் மர்ம நபர்களின் அத்துமீறல்கள் இடம்பெற்றுள்ளது. வீடுகளிற்குள்ளும் கடைகளுக்குள்ளும் அத்துமீறி பிரவேசித்த கிறிஸ் மனிதர்களினால் பீதியடைந்த தமிழர்கள் வேறு பகுதிகளில் வசித்துவரும் உறவினர்களது வீடுகளிற்கு இடம்பெயர்ந்து வருகின்றதாகவும் இதனால் திருகோணமலை நகரப் பகுதியெங்கும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் …
-
- 1 reply
- 890 views
-
-
பதிந்தவர்: ADMIN திங்கள், 22 ஆகஸ்ட், 2011 பிரித்தானிய தமிழர் விளையாட்டுத்துறை 16வது தடவையாக நடத்திய மாபெரும் தமிழர் விளையாட்டு விழா, மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டு நிகழ்வாக நேற்று (21-08-2011) மிக சிறப்பாக இடம்பெற்றது. தென்மேற்கு லண்டனிலுள்ள றொஹாம்ரன் வேல் (Roehampton Vale) றிச்சர்ட்சன் ஈவான்ஸ் மெமோறியல் பிளேயிங் ஃபீல்ட்டில் (Richardson Evans Memorial Playing Fields) நடைபெற்ற இந்தப் போட்டிகள் அக வணக்கம் மற்றும் தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பித்திருந்தது. தமிழீழத் தேசியக் கொடியை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தியும், பிரித்தானிய தேசியக் கொடியை பாவலர் இராஜ…
-
- 7 replies
- 1.5k views
-
-
கட்சிகளின் பட்டியலிலிருந்து விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி நீக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் 1989 ஆம் ஆண்டு உருவாக்கிய அரசியல் கட்சியான விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியானது அரசியல் கட்சிகளுக்கான புதிய விதிமுறைகளின் கீழ் தேர்தல்கள் திணைக்களத்தின் அரசியல் கட்சிகள் பட்டியலிலிருந்து நீக்கப்படவுள்ளது. பிரேமதாஸ அரசாங்கத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை நடத்திய காலத்தில் சியான விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி எனும்கட்சியை புலிகள் பதிவு செய்தனர். அதன் தலைவராக மாத்தையா எனும் மஹேந்திரராஜாவும் செயலாளராக யோகரட்ணம் யோகியும் குறிப்பிடப்பட்டிருந்தனர்.அக்கட்சி தொடர்ந்து பதிவுசெய்யப்பட்ட கட்சியின் பட்டிலில் இருந்தாலும் அக்கட்சியின் பெயரில் தமிழீழ விடுதலைப…
-
- 0 replies
- 863 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வல்வெட்டித்துறை வீட்டை நிர்மூலமாக்கும் பணிகள் சற்று நேரத்துக்கு முன்னர் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக டெலோ இயக்கத்தின் அரசியல் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். கே. சிவாஜிலிங்கம் எமது இணையத்துக்குத் தெரிவித்தார். தேசியத் தலைவரின் வீட்டை முழுமையாக நிர்மூலமாக்குவதற்காகப் பாரிய இயந்திரங்களும் கொண்டு வரப்பட்டு இடிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார் http://www.eelanatham.net/story/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9…
-
- 6 replies
- 1.5k views
-
-
மர்ம மனிதர்கள் விவகாரத்தில் ஜனாதிபதி மிகவும் கவலையுற்றுள்ளாராம்! மக்களது பீதியைவிட ஜனாதிபயின் கவலையில் கவலையடைந்துள்ளார் ஹக்கீம். [Monday, 2011-08-22 17:42:32] மர்ம மனிதர்கள் விவகாரத்தின் பின்னணி மற்றும் உண்மைகள் விரைவில் வெளிச்சத்திற்கு வரும். மர்ம மனிதர்கள் விவகாரம் பொதுமக்கள் மத்தியில் விரைவில் பூதாகரமாக பரவுவதில் ஊடகங்களின் பங்களிப்பு கணிசமானதாகும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார். மர்ம மனிதர்கள் விவகாரத்தில் நாட்டு மக்கள் சிந்திக்காதவர்களாக நிதானமற்று நடந்து கொள்கின்றனர். மக்கள் வதந்திகளை விரைவில் நம்பி விடுகின்றனர். இதனால் ஜனாதிபதி மிகவும் கவலையு…
-
- 5 replies
- 808 views
-
-
இலங்கை இனப்பிரச்சினைக்கு இந்தியாவின் தீர்வுத் திட்டம்! தமிழ் அரசியல் கட்சிகளுடன் இந்திய தலைவர்கள் சந்தித்து பேசவுள்ளனர். [Monday, 2011-08-22 15:59:12] இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு இந்திய அரசாங்கம் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க உள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் சிறுபான்மை அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்ததை நடத்தியதன் பின்னர் இந்த தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு எவ்வாறான ஓர் தீர்வுத் திட்டத்தை முன்வைக்க முடியும் என்பது தொடர்பான யோசனைத் திட்டமாக இந்த தீர்வுத் திட்ட பரிந்துரை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறத…
-
- 3 replies
- 750 views
-
-
கொழும்பு மேயர் வேட்பாளராக மிலிந்த முன்னாள் நீதியமைச்சர் மிலிந்த மொறகொட, கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மேயர் வேட்பாளராக போட்டியிடவுள்ளார். மிலிந்த மொறகொடவை மேயர் வேட்பாளராக களமிறக்குவதற்கு தமது கட்சி தீர்மானித்துள்ளதாக ஐ.ம.சு.கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த இன்று உறுதிப்படுத்தினார். கொழும்பு மாவட்ட ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினராக முன்னர் தெரிவுசெய்யப்பட்டிருந்த 2007 ஆம் ஆண்டு அரசாங்கத் தரப்புக்கு மாறினர். கடந்த பொதுத்தேர்தலில் அவர் ஐ.ம.சு.கூட்டமைப்பின் சார்பில் கொழும்பில் போட்டியிட்டு தோல்வியுற்றார். தற்போது அவர் ஜனாதிபதியின் ஆலோசகர்களில் ஒருவராக விளங்குகிறார். http://tamilmirror.lk/2010-07-14-09-13-…
-
- 2 replies
- 574 views
-
-
22 ஆகஸ்ட் 2011 புலிகள் கடற்படைக்கான படகுகளை கொள்வனவு செய்தனர்;-சரத் பொன்சேக்கா 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஒரு வேட்பாளர் விடுதலைப் புலிகளுக்கு வழங்கிய 200 மில்லியன் பணத்தில் புலிகள் கடற்படைக்கான படகுகளை கொள்வனவு செய்ததாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா நேற்று தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார். வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது சிறைச்சாலை அதிகாரிகள் அவருக்கு தடைகளை ஏற்படுத்திய போதிலும் ஊடகவியலாளர்களிடம் அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில்…
-
- 0 replies
- 991 views
-
-
கொழும்பில் மீண்டும் தமிழர்களைப்பதிவு செய்தல் ஆரம்பமாகியுள்ளது. வெள்லவத்தை மயூராபதியில் இன்று சிங்கள இராணுவத்தினர் புகைப்படப்பிடிப்பாளர்கள் சகிதம் வீடுவீடாக சென்று பதிவுகளை ஆரம்பித்தனர். இந்தப்பதிவிற்கு சிங்கள பட்டதாரி மாணவர்களும் பயன்படுத்தபப்டுவதாக கூறப்படுகின்றது. . வீடுவீடாகவும், கடைகள் மற்றும் வாணிப நிறுவனங்களில் பணியாற்றும் தமிழர்களிடமும் இந்தப்பதிவு நடைபெறுகின்றது. இதே போல கொள்ளுப்பிட்டி பகுதிகளிலும் பதிவுகள் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது. இந்த குடும்ப பதிவு சட்ட ரீதியானது என இராணுவத்தரப்பில் கூறபப்ட்டுள்ளது. http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B…
-
- 1 reply
- 392 views
-
-
[Monday, 2011-08-22 16:18:55] சர்வதேசரீதியில் இலங்கையின் நன்மதிப்பை மேம்படுத்துவதற்கு புலம்பெயர் இலங்கையர்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது என இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வலுவான தொடர்பாடல் வலையமைப்பு ஒன்றை கட்டியெழுப்புவதன் மூலம் சர்வதேச சமூகத்தில் இலங்கை தொடர்பான சாதக நிலையை ஏற்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரங்களை முறியடிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். அண்மையில் அலரி மாளிகையில் அவுஸ்திரேலிய மற்றும் ஐரோப்பிய புலம்பெயர் இலங்கையர்களை சந்தித்த போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். போலியான பிரச்சாரங்களுக்கு எதிரா…
-
- 2 replies
- 709 views
-
-
அபிவிருத்திக்கு முன் மக்களின் உளக்காயங்களை ஆற்றுவதே முக்கியம்! - அல் ஜசீரா தொலைக்காட்சி செய்தி!! இலங்கையில் இடம்பெற்ற நீண்டகாலப் போர் முடிவுக்கு வந்து இரு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள உளக்காயங்களை ஆற்றுவதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என அல் ஜசீரா தொலைக்காட்சி சுட்டிக்காட்டியுள்ளது. போரினால் ஏற்பட்ட இத்தகைய உளக்காயற்களை ஆற்றுவது தொடர்பில் சிறிலஙடகா அரசாங்கம் சிந்திக்கவில்லை எனவும் இத்தொலைக்காட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இது குறித்து அல் ஜசீரா தொலைக்காட்சி மேலும் தெரிவித்துள்ளதாவது: 'வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மக்கள் மனங்களில் ஊற்பட்ட உளக்காயங்கள் ஆற்றுப்படுத்தப்படாமல் அப்படியே இருக்கின்…
-
- 0 replies
- 367 views
-