ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143323 topics in this forum
-
Jul 27, 2011 / பகுதி: செய்தி / புலம்பெயர் நாடுகளில் அகதி அந்தஸ்து வழங்கப்படுவதை தடுக்கும் முயற்சியில் பீரிஸ் சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளுடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தோனேசியாவின் பாலிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜீ.எல்.பீரிஸ் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் முரே மக்குல்லியுடன் ஜீ.எல்.பீரிஸ் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இச்சந்திப்பின் போது சட்டவிரோத குடியேற்றப் பிரச்சினை, பிராந்தியப் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது. நியூசிலாந்து நோக்கிச் சென்றதாகக் கூறப்ப…
-
- 0 replies
- 531 views
-
-
இலங்கை மீனவர்கள் 13 பேர் இந்திய எல்லைப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது! Published on July 26, 2011-6:19 pm இலங்கை மீனவர்கள் 13 பேர் இந்திய எல்லை பாதுகாப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஒரிஸா கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததினாலேயே இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எல்லைப் பாதுகாப்பு பிரிவினர் இவர்களையும் இவர்கள் பயணித்த படகுகளையும் எல்லைப் பாதுகாப்பு பொலிஸாரிடம் கையளித்துள்ளனர். இவர்கள் பயணித்த ரோலர் படகுகள் குறித்து இந்திய சுங்கத் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். http://www.saritham.com/?p=27743
-
- 0 replies
- 269 views
-
-
திருகோணமலை மாவட்ட கட்டளைத் தளபதி பதுமனை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு! Tuesday, July 26, 2011, 19:09 சிறீலங்கா, தமிழீழம் தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் கட்டளைத் தளபதிக்கு எதிரான வழக்கு இன்று திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டநிலையில் அவரை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதுமன் என அழைக்கப்படும் சிவசுப்பிரமணியம் வரநாதனுக்கு எதிராக இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், படையினரை கொன்றதாகவும், குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இவருக்கு எதிராக 1979ம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் 48வது இலக்கத்தின் விதிமுறையின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்த…
-
- 0 replies
- 456 views
-
-
வெலிக்கடை சிறைச்சாலையில் 75 பெண் கைதிகளுக்கும் இரு மலசலகூடங்கள்! அல் ஜெசீரா Tuesday, July 26, 2011, 19:38 சிறீலங்கா பெண் சிறைக்கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலிக்கடை சிறைச்சாலை ஒரு நரகம் என்று சிறைக்கைதிகளால் வர்ணிக்கப்படுவதாக அல் ஜெசீரா சர்வதேச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. தெற்காசிய வலய நாடுகளில் அதிக சன நெரிசலை உடைய சிறைச்சாலைகளைக் கொண்ட நாடுகளில் இரண்டாவதாக இலங்கை திகழ்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிராந்திய நாடுகளுக்குள் பங்களாதேஷிற்கு அடுத்தபடியாக அதிக சன நெரிசலை உடைய சிறைச்சாலைகள் இலங்கையில் காணப்படுகின்றது என்று ஐக்கிய நாடுகளின் போதைப் பொருள் மற்றும் குற்றச் செயல் தொடர்பான தெற்காசிய பிரதிநிதி கிறிஸ்டினா அல்ப…
-
- 0 replies
- 258 views
-
-
முல்லைத்தீவில் கடமையாற்றிக்கொண்டிருந்த சிங்கள சிப்பாய் ஒருவர் கடந்த வருடம் யூன் மாதம் தற்கொலை செய்துள்ளார். ஆனால் இந்த கொலையில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் இப்போ வழக்கு தாக்கல் செய்துள்ளனர். புத்தளம் மாவட்டத்தைச்சேர்ந்த மஞ்சுகம என்ற தனது மகன் 2010 இல் உயிரிழந்தார், அவரது உயிரிழப்பிற்கு சரியான காரணத்தினை எவரும் சொல்லவில்லை. இதனால் தான் ஜனாதிபதி முதற்கொண்டு அனைவருக்கும் அறிவித்தும் பலன் கிடைக்கவில்லை என்று அழுதவாறு கூறினார் சிப்பாயின் தாய். இது இவ்வாறு இருக்க தனது மகனின் ப…
-
- 0 replies
- 546 views
-
-
http://www.yarl.com/files/110726_colombo_reporter.mp3
-
- 0 replies
- 443 views
-
-
http://www.yarl.com/files/110726_ariyaneththiran.mp3
-
- 0 replies
- 495 views
-
-
http://www.yarl.com/files/110726_sivasakthi_anandan.mp3
-
- 1 reply
- 480 views
-
-
http://www.yarl.com/files/110726_sivajilingam.mp3
-
- 0 replies
- 485 views
-
-
பலாலி - சென்னை நேரடி பயணிகள் விமான சேவையை விரைவில் ஆரம்பிக்க இரு நாட்டு அரசுகளும் கொள்கையளவில் இணக்கம் [Tuesday, 2011-07-26 10:18:03] பலாலிக்கும் சென்னைக்கும் இடையே பயணிகள் விமான சேவையை விரைவில் ஆரம்பிக்க இரு நாட்டு அரசுகளும் கொள்கையளவில் இணக்கம் கண்டுள்ளன. பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையைப் புனரமைத்து நீளமாக்கும் பணிகள் தற்போது முடிவடையும் நிலைக்கு வந்துவிட்டன. பலாலிக்கும் சென்னைக்கும் இடையே பயணிகள் விமான சேவையை விரைவில் ஆரம்பிக்க இரு நாட்டு அரசுகளும் கொள்கையளவில் இணக்கம் கண்டுள்ளன. பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையைப் புனரமைத்து நீளமாக்கும் பணிகள் தற்போது முடிவடையும் நிலைக்கு வந்துவிட்டன. இதனை அடுத்து சென்னைக்கும் பலாலிக்கும் இடையிலான விமான சேவைகளை ஆரம்…
-
- 2 replies
- 725 views
-
-
இலங்கைத் தமிழர்களுக்காக நாடாளுமன்றத்தில் தீர்மானம்: இந்திய கம்யூனிஸ்டு இலங்கைத் தமிழர்களுக்காக நாடாளுமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு கூட்டம் சென்னை சூளைமேட்டில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. கூட்டத்தில், தலைமை குழு உறுப்பினர்களாக டி.எம்.மூர்த்தி, எஸ்.ஏழுமலை, மீனா சம்பத் ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர். இதில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் ஏ.பி.பரதன், துணைப் பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர்ரெட்டி, தேசிய செயலாளர்கள் டி.ராஜா எம்.பி., குருதாஸ் தாஸ்குப்தா எம்.பி., மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், மத்தியக் கட்…
-
- 0 replies
- 611 views
-
-
அரசியல் தீர்வுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் அவசியம்! - சுரேஸ் பிரேமச்சந்திரன் உறுதி!! காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைப் பகிராமல் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை காண்பது சாத்தியமற்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றியின் தாக்கத்தை சிறிலங்கா அரசாங்கம் புரிந்து கொண்டதோ, இல்லையோ - தமிழ் மக்களின் அபிலாசைகளையும், அவர்களின் பிரச்சினைகளையும் சிறிலங்கா அரசாங்கம் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது துரதிஷ்டமே எனவும் அவர் கூறியுள்ளார். காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் என்பனவற்றை பகிர்ந்து கொள்ள முடியா…
-
- 0 replies
- 521 views
-
-
ஜெயலலிதாவுடன் சீமான் சந்திப்பு முதல் அமைச்சர் ஜெயலலிதாவை, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதேபோல் முதல் அமைச்சர் ஜெயலலிதாவை அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத் தலைவர் டாக்டர் சேதுராமனும் சந்தித்துப் பேசினார். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=58374
-
- 2 replies
- 1.6k views
-
-
வழமையாக உள்ளூராட்சி தேர்தல் என்றால் அது நாய் பிடிப்பவர்கள், சாக்கடைகளை சுத்தம் செய்பவர்கள், மிதி வண்டிக்கு இலக்கத்தகடு வழங்குபவர்கள்,கிரவல் ரோடு போடுபவர்களை மேய்க்கும் ஆட்களை தெரிவு செய்யும் தேர்தல் என ஊரில் சொல்வார்கள். இந்த மாதிரியான உள்ளூராட்சி தேர்தலினை மக்கள் அலட்டிக்கொள்வதில்லை. . ஆனால் இந்த முறை கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக வடக்கு கிழக்கில் உள்ளூராட்சி தேர்தல் நடைபெறவில்லை. இரு தசாப்தங்களும் வடக்கு கிழக்கில் விசேட ஆணையாளர் எனும் அரச அதிகாரிகளே உள்ளூராட்சி சபைகளை நிர்வகித்து வருகின்றனர். ஆகவே வடக்கு கிழக்கில் 18-40 வயது வரையான வாக்காளர்களுக்கு உள்ளூராட்சி சபைகள் என்றால் அது அரசாங்கத்தின் ஒரு நிறுவனம் ( ஒரு திணைக்களம் ) என்றே நினைத்ததும் உண்டு. . ஆனால் இந…
-
- 0 replies
- 794 views
-
-
யாழ்ப்பாண பொருளாதாரம் போருக்கு பிந்திய காலத்தில் நன்கு வளர்கின்ரது என கூறுகின்றார்கள். ஆனால் பெரும்பாலானோர் அது வெறும் வாணிப நோக்கே தவிர சமூக அபிவிருத்டியுடன் ஒத்துப்போகவில்லை என கூறுகின்றனர். எடுத்துக்காட்டாக போர் முடிந்த பின்னர் அங்கு சென்றுள்ள மீழ்குடியேற்ற மக்களுக்கு வீடு மற்றும் நாளாந்த உணவு தேவை என்பன பெறுவதில் போராட்டம்தான். . மீழ்குடியேற்ற மக்கள் மட்டுமல்ல அங்கு அரச உத்தியோகம் பார்க்கும் சாதாரண மக்கள் கூட வாழ்க்கையினை கொண்டு செல்ல கஸ்டப்படுகின்றனர். அங்கு அரச உத்தியோகம் பார்க்கும் ஊழியர்கள் 15- 20 ஆயிரங்கள் அவரை சம்பளம் பெறுபபவர்கள் கூட வீட்டு வாடகை கடுகதி வேகத்தில் உயர்ந்துள்ளதால் வேறு மலிவான இடங்களுக்கு செல்கின்றனர். . முன்பு என்றால் சாதாரணமாக் 15 - 20 ட…
-
- 0 replies
- 1.1k views
-
-
இனப்பிரச்சினை.. தமிழ் மக்கள் தம்மை தாமே ஆழக்கூடிய தீர்வு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மாத்திரமே பேசப்பட வேண்டும்! சிவாஜிலிங்கம் [Monday, 2011-07-25 11:12:02] தேர்தலின் மூலம் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்தின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். 2004ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவினால் தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தலில் வெற்றியீட்டியதாக பலர் தெரிவித்தனர். ஆனால் இன்று விடுதலைப் புலிகள் இல்லை இப்போதுகூட தமிழ் மக்கள் எம்மை வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள். இந்நிலையில் தமிழ் மக்கள் எமக்கு வழங்கியுள்ள ஆணையினை அரசும் சர்வதேச சமூகமும்…
-
- 5 replies
- 683 views
-
-
'உண்மையில் இந்தச் சம்பவத்தில் நான் கொல்லப்பட்டிருக்க வேண்டும்' - நோர்வே தாக்குதலில் தப்பிய ஈழத்தமிழ் பெண் [ திங்கட்கிழமை, 25 யூலை 2011, 09:51 GMT ] [ நித்தியபாரதி ] நோர்வேயில் இடம்பெற்ற கோடைகால முகாம் மீது துப்பாக்கிதாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது சிறிலங்காவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட கம்சாயினி குணரட்ணம் [Khamshajiny Gunaratnam] என்ற இந்தப் பெண் 2004-2007 வரையான காலப்பகுதியில் ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியைப் பெற்றுக் கொண்டதுடன், இவர் 2007ல் இருந்து தொழிலாளர் கட்சி இளைஞர் அணியின் ஒஸ்லோ பொதுச் சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். அவ்வகையில், வெள்ளியன்று இடம்பெற்…
-
- 3 replies
- 1.6k views
-
-
ஜனாதிபதி மஹிந்தவின் சூழ்ச்சித் திட்டத்தை தமிழ்மக்கள் தகர்த்து விட்டனர் - மாவை எம்.பி தெரிவிப்பு [Tuesday, 2011-07-26 10:22:56] நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களும் மிகப்பெரிய வெற்றியை ஈட்டியுள்ளார்கள். ஊர் மட்டத்தில் சாதாரணமாக நடைபெற்றிருக்க வேண்டிய இந்த உள்ளூராட்சித் தேர்தல் வடக்கிற்கு ஜனாதிபதியும், அவர் அமைச்சரவைப் பட்டாளமும் யாழ்ப்பாணத்தில் பல நாட்கள் தங்கியிருந்து தேர்தல் வெற்றிக்காக அனைத்து வளங்களையும் பாவித்ததிலிருந்து இத்தேர்தல் மிகப்பிரபலமாகவும் பரபரப்பாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் மாறியிருந்தது. இவ்வாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராசா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் த…
-
- 0 replies
- 450 views
-
-
உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற TNAயின் 193 பிரதிநிதிகளும் அடுத்த வாரம் 26 ஜூலை 2011 Bookmark and Share கிளிநொச்சியில் பதவிப்பிரமாணம் : உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற TNAயின் 193 பிரதிநிதிகளும் அடுத்த வாரம் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 193 பிரதிநிதிகள் அடுத்த வாரம் கிளிநொச்சியில் பதவிப்பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளதாக அந்த கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கட்சியின் உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து, தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளின் பதவிப்பிரமாண நிகழ்வை வடபகுதியில் நடத்த தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். முதலில் நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில்…
-
- 0 replies
- 510 views
-
-
இலங்கைக்கு ஏமாற்றி அழைத்துப் போனதாக நீலிக் கண்ணீர் வடிக்கும் சினிமா பாடகி! திங்கள்கிழமை, ஜூலை 25, 2011, 16:23 திரைக்குப் பின்னால் படு ஜோராகவே நடிப்பவர்கள் சினிமாக்காரர்கள் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது. சிங்கள ராணுவத்தால் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதை சற்றுத் தாமதமாக உணர்ந்து உலகமே அதிர்ச்சியடைந்துள்ளது. இலங்கையை போர்க்குற்றவாளிப் பட்டியலில் சேர்த்துள்ளனர் உலக மக்கள். குறிப்பாக ராஜபக்சே எந்த நேரமும் சர்வதேச நீதிமன்ற குற்றவாளிக் கூண்டில் நிற்கும் நேரம் நெருங்கி வருகிறது. ஈழத்தமிழர்களை படுகொலை செய்த இலங்கைக்கு நடிகர்-நடிகைகள் செல்லக்கூடாது என திரைப்பட கூட்டுக்குழு ஏற்கனவே தடை விதித்துள்ளது. நடிகர் சங்கமும் இந்தத் தடையை வ…
-
- 7 replies
- 1.4k views
-
-
ரணில் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளரை சந்திக்கின்றார் : 26 ஜூலை 2011 எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் லியாம் பொக்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுநலவாய நாடுகளின் அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தற்போது லண்டனுக்கு விஜயம் செய்துள்ளார். பொதுநலவாய நாடுகள் பாராளுமன்றின் செயலாளர் நாயகம் சர்மாவுடனும் ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. பொதுநலவாய நாடுகள் பாராளுமன்றின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் மட்டுமன்றி அரசா…
-
- 0 replies
- 354 views
-
-
ஆறு மாதங்களுக்குள் 27 சிறுவர் துஷ்பிரயோகம் வவுனியாவில் பதிவு: வவுனியா நகரில் புதிய குடியேற்றத் திட்டங்கள் உருவாக்கப்பட்ட இடங்களிலேயே அதிகம் [Tuesday, 2011-07-26 08:53:07] வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் கடந்த ஆறு மாத காலப்பகுதிக்குள் 27 சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக சிறுவர் நன்னடத்தைப் பிரிவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த சிறுவர் துஷ்பிரயோகங்களால் 18 பெண் பிள்ளைகளும் 09 ஆண் பிள்ளைகளும் பாதிப்படைந்துள்ளதாகவும், இதில் 5 வகையான துஷ்பிரயோகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா நகரில் புதிய குடியேற்றத் திட்டங்கள் உருவாக்கப்பட்ட இடங்களிலேயே சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகளவா…
-
- 0 replies
- 694 views
-
-
2010ம் ஆண்டில் அரசாங்கம் 1639 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெற்றுக் கொண்டுள்ளது : 26 ஜூலை 2011 கடன் தொகை 21 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.. 2010ம் ஆண்டில் அரசாங்கம் 1639 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெற்றுக் கொண்டுள்ளது : 2010ம் ஆண்டில் அரசாங்கம் 1639 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெற்றுக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கக் கடன் தொடர்பான பாராளுமன்ற அறிக்கையில் இந்த புள்ளி விபரத் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 2009ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன் தொகை 21 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் தொகையில் 840 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன்களுக்கான வட்டியாக மீளச் செலுத்தப்பட்டுள்…
-
- 1 reply
- 316 views
-
-
கடத்தப்பட்ட மாணவன் 50 லட்சம் ரூபா செலுத்தப்பட்டு விடுவிப்பு! கொழும்பில் சம்பவம்! Published on July 26, 2011-10:20 am 50 லட்சம் ரூபா கப்பம் கோரி நேற்று கடத்திச் செல்லப்பட்ட கொழும்பு பிரபல பாடசாலையொன்றின் மாணவர் ஒருவர் தந்தையால் கப்பம் செலுத்தப்பட்டு மீட்கப்பட்டுள்ளார். கல்கிசை – டெம்லர்ஸ் பிரதேசத்தில் நேற்று மாலை இந்த மாணவர் கடத்திச் செல்லப்பட்டதாக 119 என்ற அவசர இலக்கத்திற்கு தொலைபேசி அழைப்பு கிடைத்தாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன்படி காவல்துறை குழுவொன்று டெம்லர்ஸ் வீதியில் இருந்த மாணவரின் வீட்டிற்கு விசாரணை நடத்த சென்றிருந்தனர். ஆயுதம் தாங்கிய குழுவொன்று, மாணவரின் தாயாரின் வாய்க்கு பிளாஸ்டர் ஒட்டி, கை கால்களை கட்டிய நிலையிலேயே அவரை கடத்திச் சென்றதா…
-
- 0 replies
- 598 views
-
-
கொழும்பு கிராண்ட்பாசில் வர்த்தகரைக் கடத்தி; பணத்தை கொள்ளையிட்ட 26 ஜூலை 2011 காவற்துறை பரிசோதகர் கைது : கொழும்பு கிராண்ட்பாசில் வர்த்தகரைக் கடத்தி; பணத்தை கொள்ளையிட்ட கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்று 35 லட்சம் ரூபாவை கொள்ளையிட்டமை உள்ளிட்ட பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய காவற்துறையின் போக்குவரத்து பிரிவின் பிரதான காவற்துறை பரிசோதகர் ஒருவரை கொழும்பு கோட்டை காவற்துறையினர் நேற்று (25) கைதுசெய்துள்ளனர். கொழும்பு நகரில் இடம்பெற்ற பல பாரிய கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு தடுத்து, வைக்கப்பட்டுள்ள 4 இராணுவத்தினர் மற்றும் ஒரு காவற்துறை சிப்பாயிடம் நடத்திய விசாரணைகளின் போது, கிடைத்த தகவலை அடுத்து, இந்த காவற்துற…
-
- 0 replies
- 319 views
-