Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழர்கள் மத்தியில் மட்டு​மே ஒலித்துக்​கொண்டு இருந்த ஈழ மக்கள் ஆதர​வுக் குரல், இப்போது மாநில எல்லை கடந்து நாடு முழுக்க ஒலிக்​கத் தொடங்கி இருக்கிறது! இந்தியாவிலேயே முதல் முறையாக கடந்த 8-ம் தேதி, போரால் பாதிக்கப்பட்ட 'இலங்கைத் தமிழருக்கு ஆதரவு தரும் தினம்’ என அறிவித்து, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பேரணி நடத்தியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. டெல்​லியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், துணைப் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசியச் செயலாளர் டி.ராஜா உட்படப் பலர் பங்கேற்றனர். ஆந்திரத்தில் ஹைதராபாத், விசாகப்பட்டினம், திருப்பதி, நெல்லூர் நகரங்களிலும், கேரளத்தில் 14 மாவட்டத் தலைநகரங்களிலும் ஈழத் தமிழர் ஆதரவுப் போராட…

  2. அலிசியா கப்பல் கனடாவை நோக்கியே வந்தது என்கிறார் கனேடிய குடிவரவு அமைச்சர் [Wednesday, 2011-07-13 09:00:04] இலங்கை அகதிகளுடன் இந்தனோசிய கடற்பரப்பில் இந்தனோசிய எல்லைப் பாதுகாப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கப்பல் கனடாவினையே நோக்கி வந்ததாக கனேடிய குடிவரவு அமைச்சர் ஜேசன் கெனி தெரிவித்துள்ளார் எம்வி அலிசியா என்ற அகதிகள் கப்பல் 87 இலங்கை அகதிகளுடன் கடந்த சனிக்கிழமை இந்தனோசிய கடற்பரப்பில் இந்தனோசிய எல்லைப் பாதுகாப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டது. அகதிகள் நியூசிலாந்தில் அகதி அந்தஸ்து வேண்டுமென கூறி கப்பலில் இருந்து இறங்க மறுத்துள்ளனர். ஆனால் கனேடியக் குடிவரவு அமைச்சர் ஜேசன் கெனி எம்வி அலிசியா கனடாவை நோக்கி வரதிட்டமிட்டிருந்ததாக அவர் தெரிவிக்கின்றார். மேலும்…

  3. வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படக் கூடாது – பிள்ளையான் : 13 ஜூலை 2011 வடக்கு கிழக்கு மாகாணங்கள் எந்தக் காரணத்திற்காகவும் மீள இணைக்கப்படக் கூடாது என கிழக்கு மகாணா முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாணசபைகளுக்கு பரிந்துரை செய்யப்ப்டுள்ள சகல அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் தென் மாகாணசபைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். தென் மாகாணசபையின் நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் கூட்டங்கள் தொடர்பில் முதலமைச்சர் பிள்ளையான் ஆய்வு செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. தென் மாகாணசபை முதலமைச்சர் சான் விஜயலால் டி சில்வா…

  4. வலுவிழந்தோர் வாக்களிக்க இந்த முறை விசேட ஏற்பாடு; உதவிக்கு ஒருவரை அழைத்துச் செல்லலாம் வலுவிழந்தவர்கள் தங்களால் வாக்களிக்க இயலாத சந்தர்ப்பத்தில் இன்னொரு நபர் மூலமாக அந்த வாக்கைச் செலுத்த முடியும். இதற்கான விண்ணப்பப் படிவங்களை அவர் கிராம சேவையாளர்களிடம் பெற்று விண்ணப்பிக்க முடியும். இவ்வாறு யாழ்.மாவட்ட தேர்தல் திணைக்கள உதவித்தேர்தல் ஆணையாளர் ஆ.சு.கருணாநிதி தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: அங்கவீனர்கள்,வாக்களிக்க முடியாதவர்கள் கடந்த காலங்களில் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர் மூலமாகத் தமது வாக்களிப்பினை மேற்கொண்டனர். ஆனால் இந்தமுறை அவ்வாறு வாக்களிக்க முடியாதவர்கள் தம்மோடு இன்னொருவரை அழைத்துச் சென்று தமது வாக்கைச் செலுத்த முடியும்…

  5. முள்ளிவாய்க்காலில் மகிழ்வுடன் வாழ்ந்தவர் இன்று கால் இழந்து கண்ணீருடன் சிறையில் news ஆயுதம் ஏந்தாமல், இயக்கத்தில் இணையாமல் தனது மனைவி, பிள்ளைகளுடன் முள்ளிவாய்க்காலில் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த சிவகுமார், குண்டுத் தாக்குதலால் கால் துண்டிக்கப்பட்டு புலிச்சந்தேக நபராக தடுப்புக்காவலில் கண்ணீருடன் காலத்தைக் கழிக்கின்றார். இவரது மனைவி, பிள்ளைகள் வறுமை காரணமாக இவரைப் பார்க்க வராதது இவரது மனதை வாட்டுகின்றது. நாம் இலங்கையர் அமைப்பு இத்தகையோரின் விவரங்களைத் திரட்டியுள்ளது. மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்று வந்த யுத்தம் முடிவடையும் தறுவாயில் இருந்த காலப்பகுதி அது. இரு தரப்பினரும் உக்கிர சமரில் ஈடுபட்டிருந்தனர். சரமாரியாகக் குண்டுகள் வீசப்பட்டன. இதனால் அந்தக் காலப்பக…

  6. நிரந்தரத் தீர்வைக் காணும் நிர்ப்பந்தத்துக்குள் இலங்கை; இந்தியப் பிரதித் தூதுவர் மிஸ்ரா யாழ்ப்பாணத்தில் நேற்றுத் தெரிவிப்பு news இனப்பிரச்சினைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு ஒன்றைக்காண வேண்டிய கட்டாய நிலைக்குள் இலங்கை அரசு தள்ளப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தின் பிரதித் தூதுவர் மிஸ்ரா யாழ். சமாதானத்துக்கும் நல்லெண்ணத்துக்குமான பிரஜைகள் குழுவை யாழ். ஆயர் இல்லத்தில் நேற்று மாலை சந்தித்துக் கலந்துரையாடினார். இலங்கை அரசு நிரந்தரத் தீர்வு ஒன்றை காண வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு நியாயமானதும் நீதியானதுமான அரசியல் தீர்வு கிடைக்க இந்தியா தனது முழுப் பங்கையும் வழங்கும் என்று அப்போது அவர் கூறினார். இனப்பிரச்சின…

  7. அவசரமாக இடம்பெயர்ந்தோரை மீளக்குடியேற்றிவிட முடியாது: ஜனாதிபதி _ வீரகேசரி இணையம் 7/13/2011 10:57:13 AM Share யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களை அவசர அவசரமாக மீள் குடியேற்ற முடியாது. அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த பின்னரே மீள் குடியேற்ற முடியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதனையும் திட்டமிட்ட ரீதியில் முன்னெடுத்தால் மாத்திரமே வெற்றிபெற முடியுமென்றும் ஜனாதிபதி கூறினார். மக்கள் வங்கியால் முகாமைத்துவ பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்ட 227 பேருக்கு நியமனக் கடிதங்கள் கையளிக்கும் நிகழ்ச்சி நேற்று செவ்வாய்க்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது நியமனக் கடிதங்களை வழங்கிய பின்னர் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவி…

  8. மட்டு,வாகரையில் ஏவுகணைகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்கள் படையினரால் மீட்பு [Wednesday, 2011-07-13 09:50:09] மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் நேற்றுத் தேடுதல் நடத்திய இராணுவத்தினர் அற்கு மறைத்துவைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர்.இந்த ஆயுதங்கள் பெரும்பாலும் சட்டவிரோத ஆயுதக் குழு ஒன்றினால் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகமும் வெளியிடப்பட்டுள்ளது. ரி-56 ரக துப்பாக்கிகள் 35, ஆர்.பி.ஜி. -15 மற்றும் ஏனைய வகையான ஆயுதங்கள் 17 என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக வாகரை 233 ஆவது படையணியின் தளபதி தெரிவித்தார். கிழக்குமாகாண பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தலைமையிலான படையினரே இந்த ஆயுதங்களை படையினர் கைப்பற்றியதாகவும…

  9. வட பகுதிக்கு இனிமேல் இராஜதந்திரிகள் மற்றும் தொண்டு நிறுவன பிரதி நிதிகள் தடையின்றி பயணம் செய்யலாம் என கோத்தாபாய அறிவித்துள்ளார். அனைத்து பிரதி நிதிகளும் இனிமேல் பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி கோரவேண்டியதில்லை. ஆனால் நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் இராணுவ நிலைகள், இராணுவ உத்தியோகத்தர்களை சந்திக்க விரும்பினால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமென பாதுகாப்பு அமைச்சின் இணையத்தள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. . வடபகுதியில் உள்ளூராட்சி தேர்தல் நடைபெறவுள்ளதால் இது ஒரு தேர்தல் கால சலுகை யுக்தியாக இருக்கலாம் என உள்ளூர் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். My link ---------

    • 0 replies
    • 409 views
  10. யாழ் மாணவனின் உலக சாதனை இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவராசா துஸ்யந்தன் என்ற மாணவன் கிறீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸில் இடம்பெற்ற வலுவிழந்தோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றி அஞ்சலோட்ட நிகழ்வில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இவர் பிறவியிலேயே வாய் பேச முடியாத, செவிப்புலனற்ற வலுவிழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் கோண்டாவிலில் அமைந்துள்ள சிறுவர் மனவிருத்திக்கான, சிவபூமி பாடசாலையைச் சேர்ந்த இவர் தனது சாதனையின் மூலம், இலங்கைக்கு சர்வதேச ரீதியில் பெருமை சேர்த்துள்ளார். இவரது பாடசாலையும், யாழ் கல்விச் சமூகத்தினரும் இவருக்கு செங்கம்பள வரவேற்பளித்து கௌரவித்துள்ளனர். விளையாட்டில் ஆர்வம் மிகுந்த துஸ்யந்தன் பாடசாலை…

  11. 'இலங்கையின் கொலைக்களம்' ஆவணப்படம்: யூலை 15ம் திகதி அமெரிக்க கொங்கிரஸ் மண்டபத்தில் வெளியிட ஏற்பாடு! பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் தயாரித்த 'இலங்கையின் கொலைக்களம்' ஆவணப்படம் எதிர்வரும் 15 ம் திகதி அமெரிக்க கொங்கிரஸ் மண்டபத்தில் வெளியிடப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 15 ம் திகதி பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ள இக்காட்சியைத் தொடர்ந்து இலங்கைப் போர்க்குற்றங்கள் தொடர்பான விவாதமொன்றும் இடம்பெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச மனிதவுரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச நெருக்கடிகளுக்கான அமைப்பு என்பன இணைந்து மேற்கொண்டுள்ளன. அமெரிக்க கொங்கிரஸ் உறுப்பினரும் Tom Lantos மனித உரிமைகள் அமைப்பின் இணைத் தலைவருமான ஜிம் மக்கோ…

    • 1 reply
    • 773 views
  12. வெளிநாட்டு தமிழ் அமைப்புகள் மீது போர்க்குற்ற விசாரணை! - லியாம் பொக்ஸூக்கு கொழும்பு ஆலோசனை!! இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கப்பட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் கொழும்புக்கு எதிராக சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தும் வெளிநாட்டு தமிழ் அமைப்புகளை நெருக்கடிகளுக்கு உள்ளாக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகள் அமைப்பில் சிறுவர்களை இணைத்துக் கொண்டமை தொடர்பாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வெளிநாட்டு தமிழ் அமைப்புகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளாக முன்வைத்து, இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் போர்க்குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்…

  13. [TamilNet, Tuesday, 12 July 2011, 16:12 GMT] Tamil Nadu Chief Minister Ms. Jayalalithaa should make it a mission to campaign for the independence of Eezham Tamils in the other states of India and elsewhere. For two years before the independence of Bangladesh Mrs Indira Gandhi quietly undertook a diplomatic campaign for it all over the world. Now there is no one except Ms. Jayalalithaa who is bestowed with the mantle to play such a role for the independence of Eezham Tamils. TamilNet Editorial Board Call for war crimes investigations and exposure of the crimes committed in the vicious war that was fought in Vanni, intentionally keeping away witnesses and …

  14. இந்தியாவே விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் நிலை வரும்: திருமாவளவன் இந்தியாவே விடுதலைப்புலிகளை ஆதரிக்கம் நிலை வரும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சே கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகளின் மாபெரும் கெயொப்ப இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சி 12.07.2011 அன்று சென்னையில் தொடங்கியது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், மத்திய அரசாங்கத்தை சர்வதேவ சமூகம் மட்டும்தான் பணிய வைக்கமுடியும். இந்…

  15. புகலிட கோரிக்கையாளர்களை நியூசிலாந்து வரவேற்க வேண்டுமா? பத்திரிகையில் கருத்துக் கணிப்பு! நியூசிலாந்துக்கு செல்ல முயன்றபோது இந்தோனேசிய கடல் படையினரால் கைது செய்யப்பட்ட 87 தமிழர்களையும் நியூசிலாந்து அரசு வரவேற்க வேண்டுமா? கூடாதா? என்கிற கருத்துக் கணிப்பை மேற்கொண்டு வருகின்றது நியூசிலாந்து நாட்டு ஆங்கிலப் பத்திரிகைகளில் ஒன்றான The Dominion Post. ஆனால் இக்கருத்துக் கணிப்பின் முடிவுகள் இது வரை இத்தமிழர்களுக்கு மிகவும் பாதகமாகவே உள்ளன. இது வரை 654 பேர் கருத்துக் கணிப்பில் வாக்களித்து உள்ளனர். வரவேற்க வேண்டும் என்று 113 பேரும், கூடாது என 541 பேரும் வாக்களித்து உள்ளார்கள். http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=8485

    • 4 replies
    • 833 views
  16. தெற்காசிய கடல்சார் பாதுகாப்பு மாநாடு கொழும்பில் ஆரம்பமாகியது! இந்தியாவும் பாகிஸ்தானும் பங்கேற்கவில்லை! [Tuesday, 2011-07-12 23:25:05] தெற்காசிய கடல்சார் பாதுகாப்பு மாநாடு சிறிலங்காவில் நேற்று ஆரம்பமாகியுள்ளது. கொழும்பு கலதாரி விடுதியில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்களாதேஸ், மாலைதீவுகள், சிறிலங்கா, அவுஸ்ரேலியா, அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகளின் கடற்படை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். நேற்று ஆரம்பமான இந்த மாநாடு எதிர்வரும் 15ம் நாள் வரை தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புற்றெனிஸ், சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்க ஆகியோர் இந்த மாநாட்டை நேற்றுக்காலை ஆரம்பித்து வைத்தனர். சிறிலங்கா கடற்படையுட…

  17. தமிழர்கள் சுயஉரிமையுடன் வாழ வேண்டி கனடாவில் இன்று மாநாடு நடைபெறவுள்ளது! குழப்புவதற்கு சிறீலங்கா முயற்சி! [Tuesday, 2011-07-12 20:35:00] சிறீலங்காவின் அப்பட்டமான மனித உரிமை மீறல்களை வெளிக்கொணருமுகமாகவும் கனடிய அரசாங்கத்தின் பங்களிப்பை தமிழர்கள் விவகாரத்தில் தீவிரப்படுத்துவதற்காகவும் கனடிய மனித உரிமை மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மனித உரிமை ஆய்வரங்கு இன்று மாலை 6 மணிக்கு ஸ்காபரோ சிவிக் சென்ரர் என அழைக்கப்படும் நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. கனடாவின் ஆளுங்கட்சியான கன்சவேட்டிவ் கட்சியின் ஆதரவுப் புலத்தைக் கொண்டுள்ள இந் மாநட்டைக் குழப்புமுகமாக சிறீலங்காவின் அடிவருடிகள் மேற்கொண்ட போலியான மின்னஞ்சல் தகவல்களையும் மீறி இம் மாநாடு அரசியற் சக்திகளின் ஆதரவைப் பெற்…

  18. சிங்களம் கலந்து கொள்ளும் உலக இராணுவ விளையாட்டுக்கள் 2011 பன்னிரண்டு ஆண்கள் ஒன்பது பெண்களை கொண்ட குழுவை சிங்களம் ஐந்தாவது உலக இராணுவ விளையாட்டு நிகழ்வுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. இது பிரேசில் நாட்டில் நடக்கின்றது. High hopes on Chaminda and Prasanna as team leave for World Military Games Sri Lanka’s tri forces are fielding a team of 12 men and nine women athletes for the nine-day multi sports event organized by the International Military Sports Council (IMSC- Conseil International du Sport Militaire). While coaching aspect of the team is taken care of by Jayasekara, General Daya Ratnayake is the Chef de Mission. http://www.island.lk/index.php?pa…

    • 1 reply
    • 806 views
  19. சுயாதீனமாக தேர்தலை நடத்தவிடாத அரசாங்கம் அரசியல் தீர்வை எப்படி தரப்போகிறது?: மனோ வடக்கிலே தமிழ் தேசிய கூட்டமைப்பு குறிவைத்து தாக்கப்படுகின்றது. கூட்டமைப்பின் வேட்பாளர்களும், ஆதரவாளர்களும் அச்சுறுத்தப்படுகிறார்கள். தமிழ் வாக்காளர்கள் கடும் அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். அனைத்து அரச வளங்களும் கூட்டமைப்பிற்கு எதிராகவும், அரசாங்கத்திற்கு ஆதரவாகும் பயன்படுக்கப்படுகின்றன. இத்தகைய தராதரங்களை கொண்டுள்ள இன்றைய அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வை வழங்குவதற்கு உடன்படுமா? யுத்தம் முடிந்துவிட்டது, இனப்பிரச்சினை தீர்விற்கு தடையாக இருந்த புலிகள் அழிந்துவிட்டார்கள். ஆகவே இனப்பிரச்சினைக்கு தீர்வை இந்த அரசாங்கம் வழங்கப்போகின்றது என தமிழ் மக்களுக்கு அறிவ…

    • 0 replies
    • 248 views
  20. புலிகளால் தகர்க்கப்பட்ட தொண்டமனாறு பாலம் மீண்டும் திறக்கப்பட்டமை யாழ் அபிவிருத்தியின் முக்கிய பங்கு 12 ஜூலை 2011 மகிந்தவுக்கும் பசிலுக்கும் நன்றி கூறுகிறார் தயாமாஸ்ரர் - செவ்வி காணொளியாக இணைப்பு:- http://youtu.be/5NW7Rl-4Uhk புலிகளால் தகர்க்கப்பட்ட தொண்டமனாறு பாலம் மீண்டும் திறக்கப்பட்டமை யாழ் அபிவிருத்தியின் முக்கிய பங்கு – மகிந்தவுக்கும் பசிலுக்கும் நன்றி கூறுகிறார் தயாமாஸ்ரர் - செவ்வி காணொளியாக இணைப்பு:- ஓப்பரேசன் லிபரேசன் காலப்பகுதியான 1987ல் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்ட தொண்டமனாறு பாலம் மீண்டும் திறக்கப்பட்டமை தமிழ் மக்களுக்கு பெரும் நன்மையாக அமைந்துள்ளதாக விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளரும் தற்போதய ஊடகவியலாளருமான தயா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.