ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143183 topics in this forum
-
குமாரபுரம் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவு தினம்..! 11 Feb, 2026 | 05:18 PM மூதூர், கிளிவெட்டி - குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற மனிதப் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவுதினம் புதன்கிழமை (11) குமாரபுரம் கிராமத்தில் நினைவுகூரப்பட்டது பாதிக்கப்பட்ட மக்கள் நீதி கோரி நினைவு தினத்தை அனுஷ்டித்தனர் . நினைவு நிகழ்வில் சிவில் சமூகப்பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், பொது மக்கள், பிரதேச அரசியல் வாதிகள் உட்பட பலர் கலந்து கொண்டு ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர். இக் கொடூர சம்பவத்தில் 26 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் பலர் காயமடைந்திருந்தார்கள். குறித்த படுகொலைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தமது உறவுகளுக்கு 30 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத நிலையில் அதற்கான நீதியை…
-
- 2 replies
- 199 views
- 1 follower
-
-
நாட்டில் புற்றுநோய் அபாயம் அதிகரிப்பு – தினமும் 100 புதிய நோயாளிகள் Published By: Vishnu 09 Feb, 2026 | 08:17 PM நாட்டில் நாளாந்தம் சுமார் 100 புதிய புற்றுநோய் நோயாளிகள் பதிவாகி வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். புதிய புற்றுநோய் ஆரம்பகால கண்டறிதல் மையம் திறப்பு நிகழ்வில் உரையாற்றிய அவர், தினமும் சுமார் 40 பேர் புற்றுநோயால் உயிரிழப்பதாகவும் குறிப்பிட்டார். அதேபோல், தினசரி 15 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்ற நிலையில், அவர்களில் மூன்று பேர் உயிரிழக்கின்றனர் எனவும் தெரிவித்தார். இதனைத் தடுக்கும் வகையில், 20 வயதிற்குப் பிறகு பெண்கள் மாதந்தோறும் சுய மார்பகப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், 20–40 வயதினருக்கு மூன்று வருடங்களுக்கு ஒ…
-
-
- 3 replies
- 213 views
- 1 follower
-
-
பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்தார் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான புதிய வதிவிடப் பணிப்பாளர் 11 Feb, 2026 | 02:46 PM ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) இலங்கைக்கான புதிய வதிவிடப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள Shannon Cowlin தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், திங்கட்கிழமை (10) பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர். பிரதிநிதிகள் குழுவினரை வரவேற்ற பிரதமர், புதிய பணிப்பாளருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் நீண்டகாலமாக நிலவிவரும் கூட்டுறவை நினைவுகூர்ந்தார். அத்துடன், இலங்கையின் தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகளுக்கு அமைய ஆசிய அபிவிருத்தி வங்கி காட்டிவரும் தொடர்ச்சியான ஈடுபாட்டிற்கும், வழங்கிவரும் ஒத்துழ…
-
- 0 replies
- 125 views
- 1 follower
-
-
பாதைகள் திறக்கப்படாமல் இருப்பதற்கு பாதுகாப்பு காரணங்களாக உள்ளன! Feb 11, 2026 - 09:36 AM மன்னார் மாவட்ட போக்குவரத்து நெடுஞ்சாலை மற்றும் உள்ளூராட்சி அபிவிருத்தி விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நேற்று (10) மாலை மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனின் ஒருங்கமைப்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சத்தியலிங்கம், ரவிகரன், ஜெகதீஸ்வரன், திலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் அமைச்சின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் …
-
- 1 reply
- 158 views
- 1 follower
-
-
கிவுல் ஓயா திட்டத்தின் கீழ் எந்தவொரு இனவாத நோக்கமும் இல்லை ; இதனை அரசியல் மயப்படுத்த வேண்டாம் - அரசாங்கம் 10 Feb, 2026 | 04:56 PM (எம்.மனோசித்ரா) கிவுல் ஓயா திட்டத்தின் கீழ் எந்தவொரு இனவாத நோக்கமும் அரசாங்கத்துக்கு இல்லை. முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட மக்களின் நீர் பிரச்சினையின் அத்தியாவசியத் தேவையை உணர்ந்து, 6 மடங்கு செலவு அதிகரிப்பில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. எனவே இதனை அரசியல் மயப்படுத்த வேண்டாம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (10) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையி…
-
- 2 replies
- 180 views
- 2 followers
-
-
முன்னாள் எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கின் தீர்ப்பு இன்று! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல, அவரது பாதுகாப்பு அதிகாரி மீதான தாக்குதல் மற்றும் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இன்று (11) கம்பஹா மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இந்த சம்பவம் 2022 மே 9 அன்று நிட்டம்புவ பகுதியில் நடந்தது. அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி இருவரும் ஒரு கும்பல் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுடன் தொடர்புடைய பல சந்தேக நபர்கள் பின்னர் கைது செய்யப்பட்டனர். விசாரணையைத் தொடர்ந்து, கொலைகள் தொடர்பாக 42 நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் கம்பஹா உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை தாக்கல் செ…
-
- 0 replies
- 104 views
-
-
SJP மற்றும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையா? பிமல் ரத்நாயக்க கேள்வி! இங்குள்ள ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையோ என தோன்றுகிறது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று கூமாங்குளம் அலகரை வீதியினை புனரமைப்பதற்கான ஆரம்ப வேலையினை ஆரம்பித்து வைத்த பின்னர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நாங்கள் தேர்தலிற்காக வீதியினை செய்து தரவில்லை, மாறாக மக்களின் போக்குவரத்திற்காகவே செய்துதரவுள்ளோம். நாம் கிராமிய வீதி அமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும் என அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளோம். இவ்வமைப்பானது குற…
-
-
- 3 replies
- 283 views
-
-
வடக்கு, கிழக்கில் 100 மில்லியன் டொலர் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் - அரசாங்கம் அறிவிப்பு 10 Feb, 2026 | 06:45 PM (எம்.மனோசித்ரா) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமுல்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2026 தொடக்கம் 2031 வரையான 6 ஆண்டு காலப்பகுதிக்கு உலக வங்கி குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி இணை நிறுவனத்தால் 1,000 மில்லியன் டொலர்கள் நிதி எமது நாட்டுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதில் 100 மில்லியன் டொலர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமுல்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பிராந்திய அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்குப் பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த…
-
- 0 replies
- 148 views
- 1 follower
-
-
வரலாற்றில் முதன் முறையாக பெண் பஸ் நடத்துனர்கள் நியமனம் Published By: Digital Desk 3 06 Feb, 2026 | 05:19 PM வரலாற்றில் முதன்முறையாக இலங்கைப் போக்குவரத்து சபைக்குப் பெண்கள் நடத்துனர்களாகச் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 20 பெண் நடத்துனர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (06) மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வெகுஜன ஊடகத் துறை துணை அமைச்சர் கலாநிதி கௌசல்யா அரியரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க மற்றும் இலங்கை போக்குவரத்து சபைத் தலைவர் சஜீவ கனகரட்ண ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்போது நியமனம் பெற்ற பெண் நடத்துனர்களுக்காகப் புதிய சீ…
-
-
- 2 replies
- 228 views
- 1 follower
-
-
விஞ்ச் இயந்திரத் தடைக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது Feb 10, 2026 - 10:53 AM உழவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட விஞ்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் கரைவலை மீன்பிடித் தொழிலுக்கு தற்போதைய அரசாங்கம் விதித்துள்ள தடையை நீக்கக் கோரி ஆரம்பிக்கப்பட்ட சத்யாகிரகப் போராட்டம் இன்று (10) ஆறாவது நாளாகவும் தொடர்கிறது. ஜனாதிபதியின் கீழ் குழுவொன்று நியமிக்கப்படும் என நேற்று (09) இடம்பெற்ற கலந்துரையாடலில் தமக்கு அறிவிக்கப்பட்டதாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் தெரிவித்தனர். எவ்வாறாயினும், ஜனாதிபதியுடன் நேரடியாகக் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளத் தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். இதேவேளை, குறித்த மீனவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு பெப்…
-
- 1 reply
- 142 views
- 1 follower
-
-
விசேட தேவையுடையவர்களுக்காக வருகிறது புதிய பேருந்துகள்! ‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, விசேட தேவையுடையவர்களுக்கான வசதிகளுடன் கூடிய, குளிரூட்டப்பட்ட தாழ்தள பேருந்து சேவையை ஒரு முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக 10 பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 15 ஆம் திகதி குறித்த பேருந்துகள் நாட்டை வந்தடையவுள்ளன. இந்தப் பேருந்துகளை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும்த் தேவையான பௌதீக மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்க இலங்கை போக்குவரத்து சபைக்கு இயலுமை இல்லை என்பது தெரியவந்துள்ளது. எனவே, பேருந்துப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் முதற்க…
-
-
- 3 replies
- 179 views
- 1 follower
-
-
கம்யூனிஸ்ட் தலைவர் என். சண்முகதாசன் நினைவுப் பேருரை 10 Feb, 2026 | 05:34 PM கம்யூனிஸ்ட் தலைவர் என். சண்முகதாசன் நினைவுப் பேருரை நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் வினோதன் மண்டபத்தில் வடபகுதி கம்யூனிஸ்ட் இயக்க முக்கியஸ்தர் எம்.ஏ.சி.இக்பால் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பெ. முத்துலிங்கம், எம். ஏ. சி. இக்பால், பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் ஆகியோர் உரையாற்றp நிகழ்வில் பிரதம பேச்சாளரான சமூக அரசியல் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான சுவஸ்திகா அருலிங்கம் "இலங்கை எதிர்நோக்கும் உள்நாட்டு மற்றும் புவிசார் அரசியல் சவால்கள்" என்ற தலைப்பில் நினைவுப் பேருரையை நிகழ்த்துவதையும் கலந்துகொண…
-
- 0 replies
- 113 views
- 1 follower
-
-
1750 பெற்றுக்கொண்டமைக்கு பெருந்தோட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி! ஜனாதிபதியின் வரவு–செலவு திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட 1750 ரூபா நாளாந்த சம்பளம் கிடைத்ததை தொடர்ந்து, தோட்டப்புறங்களில் தொழிலாளர்கள் பாற்சோறு சமைத்து, பட்டாசு கொளுத்தி, பூஜை வழிபாடுகள் செய்து மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நோர்வூட் எல்படை தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள பட்டியல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 1550 ரூபா அடிப்படை சம்பளமாகவும், வரவுக்கான கொடுப்பனவாக 200 ரூபாவும் வழங்கப்படுவதாக தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நோர்வூட் எல்படை தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி பூஜைகள் செய்ததுடன், பாற்சோறு சமைத்து நன்றியை தெரிவித்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த…
-
-
- 3 replies
- 227 views
-
-
சிங்கள அரசே பிக்குகளைச் சிறையில் அடைக்காதே; திருகோணமலை நீதிவான் நீதிமன்றிற்கு முன் கடும் பதற்றம் Published By: Vishnu 10 Feb, 2026 | 02:49 AM திருகோணமலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 11 பேரினது விளக்கமறியல் நீடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருகோணமலை நீதிவான் நீதிமன்ற வளாகத்தின் முன்பாக திங்கட்கிழமை பெரும் பதற்றம் நிலவியது. கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் கல்யாணவன்ச திஸ்ஸ தேரர் உள்ளிட்ட 4 பிக்குகளும் 7 சிவிலியன்களும் நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது இவர்களது விளக்கமறியலை நீடித்து நீதிவான் உத்தரவிட்டதையடுத்து, சிறைச்சாலை அதிகாரிகள் சந்தேகநபர்களைப் பேருந்தை நோக்கி அழைத்துச்…
-
- 1 reply
- 166 views
- 1 follower
-
-
வடக்கு மற்றும் கிழக்கின் துரித அபிவிருத்திகென தனியான நிதி ஒதுக்கீடு! ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் விசேட பணிப்புரைக்கு அமைவாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் துரித அபிவிருத்திக்கெனத் தனியான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவுள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், மாகாணத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான (Mega Projects) முன்மொழிவுகளை உடனடியாகத் தயாரிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், மாகாண உயர் அதிகாரிகளுடன் நேற்று (09.02.2026) மாலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே ஆளுநர் இந்த அறிவுறுத்தலை வழங்கினார். இக்கலந்துரையாடலில் மாகாண பிரதம ச…
-
- 0 replies
- 114 views
-
-
LGBTQ+ சுற்றுலாத் திட்ட கடிதத்தை மீளப்பெறத் தீர்மானம்! செய்திகள் இலங்கையில் ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தை இலக்காகக் கொண்ட சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்கி இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவரினால் வெளியிடப்பட்ட கடிதத்தை மீளப்பெற்றுக்கொள்வதாக சட்டமா அதிபர் இன்று (10) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். குறித்த தீர்மானத்தை வலுவற்றதாக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த ரீட் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது. இதனையடுத்து, குறித்த மனுவை மேலதிக பரிசீலனைக்காக மார்ச் மாதம் 04ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. குறிப்பு:…
-
- 0 replies
- 112 views
-
-
சுவிஸ் தூதரக ஏற்பாட்டில் தமிழ்த்தரப்புக்களுக்கு இடையில் நடைபெறவிருந்த சந்திப்பில் இழுபறி நிலை - பிறிதொரு தினத்துக்குப் பிற்போடப்படும் சாத்தியம் Published By: Vishnu 10 Feb, 2026 | 02:45 AM (நா.தனுஜா) இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் சகல தமிழ்த்தரப்புக்களையும் ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவிருந்த சந்திப்பில் தற்போது இழுபறி நிலை ஏற்பட்டிருப்பதாகவும், எனவே அச்சந்திப்பு பிற்போடப்படக்கூடும் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது. இலங்கை - சுவிட்ஸர்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்துடன் கூட்டிணைந்து சுவிட்…
-
- 0 replies
- 83 views
- 1 follower
-
-
முல்லைத்தீவில் யாழ். பல்கலைக்கழகப் பீடம் முல்லைத்தீவு மாவட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட காணியில் அபிவிருத்திப் பணிகளைப் படிப்படியாக ஆரம்பிப்பதற்கும், காணி ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வகையில் எல்லைகளை இட்டு வேலி அமைப்பதற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட விடயத்துக்கு அமைவாக, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று (09) மாலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது. கடந்த 27.01.2026 அன்று நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட காணி…
-
- 0 replies
- 67 views
-
-
ஆவா குழு உறுப்பினர்கள் இருவருக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல்! Feb 10, 2026 - 08:50 AM கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்த இரு உறுப்பினர்களை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்குப் பொலிஸ் மத்திய குற்றத்தடுப்புப் பணியகம் அனுமதி பெற்றுள்ளது. இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்த இந்த இரு சந்தேகநபர்களும் அண்மையில் இலங்கைக்கு வருகை தந்தபோது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்தின் பிரபல ஆவா குழுவைச் சேர்ந்த இந்த சந்தேகநபர்கள், 2016ஆம் ஆண்டு மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின் பின்னர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்…
-
- 1 reply
- 74 views
- 1 follower
-
-
செம்மணி மனித புதைகுழி: மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பான தீர்மானம் மார்ச் 16இல் அறிவிக்கப்படும்! Published By: Digital Desk 1 09 Feb, 2026 | 03:38 PM செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பான தீர்மானம் எதிர்வரும் மார்ச் 16 ஆம் திகதி அறிவிக்கப்படும் என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (09) உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று திங்கட்கிழமை (09) காலை 09.30 மணிக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் குறித்து மறுஆய்வு செய்யப்படும், மேலும் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.…
-
- 1 reply
- 138 views
- 1 follower
-
-
பனை மரத்தில் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து; இளைஞர் பலி! Published By: Digital Desk 1 09 Feb, 2026 | 03:03 PM வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொன்னாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொன்னாலை சந்தியில் இருந்து மாதகல் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் நின்ற பனைமீது மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் காயமடைந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் தற்போது காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொ…
-
- 0 replies
- 150 views
- 1 follower
-
-
தித்வா சூறாவளி பாதிப்புகள்: முன்கூட்டிய அபாய எச்சரிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட நிலைபேறான மீட்புத் திட்டம் அவசியம் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் 09 Feb, 2026 | 09:40 AM (நமது நிருபர்) தித்வா சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீர்செய்து, நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் ஜனாதிபதி பணிக்குழுவின் திட்டங்களுக்கு அமைவாக, நாட்டிற்கு அபாயம் குறித்த முன்கூட்டிய தகவல்களை அடிப்படையாகக் கொண்ட, நிலைபேறான மீட்புத் திட்டத்தை உருவாக்க அனைத்து நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தெரிவித்தார். அனர்த்தத்திற்கு பிந்தைய தேவைகள் மதிப்பீடு தொடர்பான விசேட கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (06) அன்று பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற…
-
- 0 replies
- 81 views
- 1 follower
-
-
இலங்கை மேல் நீதிமன்றங்களில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவு! 09 Feb, 2026 | 09:11 AM நாடளாவிய ரீதியில் உள்ள மேல் நீதிமன்றங்களில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. 1998 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள மேல் நீதிமன்றங்களில் 4,289 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த வழக்குகளில் 1,683 வழக்குகள் ஜனவரியில் விசாரணைக்காக மீண்டும் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அ…
-
- 0 replies
- 76 views
- 1 follower
-
-
இலங்கைத் தேயிலைக்கு சர்வதேச சந்தையில் நெருக்கடி. டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட அழிவுகள் காரணமாக, இலங்கை தனது தேயிலைக்கான சர்வதேச சந்தைகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேயிலை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் லுஷாந்த டி சில்வா எச்சரித்துள்ளார். சூறாவளி காரணமாக சுமார் ஒரு மில்லியன் கிலோகிராம் தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இது உலகளாவிய தேயிலைத் தேவையை ஈடுசெய்வதில் சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது. இலங்கையின் விநியோகம் குறையும் பட்சத்தில், சர்வதேச கொள்வனவாளர்கள் ஏனைய நாடுகளை (இந்தியா, கென்யா போன்றவை) நாடும் அபாயம் உள்ளது. கடந்த 15-20 ஆண்டுகளில் பாகிஸ்தான், எகிப்து மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கான பிரதான ஏற்றுமதியாளராக இலங்கை இருந்தபோதிலும், தற்போது அந்த சந்த…
-
- 0 replies
- 116 views
-
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம் 03 Feb, 2026 | 03:41 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சாணக்கியன் இராசமாணிக்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நியமனத்துக்கான கடிதத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பி வைத்துள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக இதுவரை காலமும் பதவி வகித்த யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் பதவி நீக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்காக சாணக்கியன் நியமிக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்பு பேரவைய…
-
-
- 34 replies
- 1.5k views
- 2 followers
-