ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143318 topics in this forum
-
இராசபக்சே கும்பலைக் கூண்டிலேற்றக் கூட்டாகச் செயல்படுவோம்! பல்துறைச் சார்பாளர்கள் கூட்டறிக்கை ஜூலை 9, 2011 பல்துறைசார் தமிழக அறிஞர்கள், திரைத்துறையினர் மற்றும் தமிழக் குடிமைச் சமூகத்தின் பேராளர்களான, பாலுமகேந்திரா, திரைப்பட இயக்குனர், பழ. நெடுமாறன், தலைவர் உலகத் தமிழர் பேரமைப்பு, எஸ்.என். நாகராசன், மார்க்சிய அறிஞர், பாரதிராஜா, திரைப்பட இயக்குனர், நா. மார்க்கண்டேயன், முன்னாள் துணை வேந்தர், காந்திகிராம் பல்கலைக் கழகம், எம்.ஜி. தேவசகாயம், ஐ.ஏ.எஸ்., ஆங்கில எழுத்தாளர், சீமான், முதன்மை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி, வனிதாமோகன், நிறுவனர், முதன்மை அறங்காவலர்-சிறுதுளி, கோவை. பெ. மணியரசன், பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தியாகு, பொதுச் செயலாளர், …
-
- 0 replies
- 514 views
-
-
புலிகள் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பொருளாதாரம் மீது தாக்குதல்: பீரிஸ் _ வீரகேசரி நாளேடு 7/9/2011 11:35:19 AM நாடு கடந்த தமிழீழம் உலகில் எங்கும் கிடையாது. அதனை எமது அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. இந்நிலையில் விடுதலைப் புலி உறுப்பினர்கள் தமக்கேயுரிய பொருளாதார மற்றும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எமது நாட்டை அதலபாதாளத்தில் தள்ளிவிடுவதற்கான நோக்கத்தில் சர்வதேசத்தை தொடர்புபடுத்தி இந்நாட்டின் பொருளாதாரத்தின் மீது தாக்குதலை முன்னெடுத்துவருவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நேற்று சபையில் தெரிவித்தார். பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை அரசாங்கம் முன்னெடுத்த சந்தர்ப்பத்தில் அது வெற்றி கொள்ளப்படுவதற்காக இந்தியா இராணுவ ரீதியில…
-
- 1 reply
- 475 views
-
-
இலங்கைச் செங்சிலுவைச் சங்கத்தின் முல்லைத்தீவு கிளையின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம் [saturday, 2011-07-09 10:12:44] இலங்கை செங்சிலுவை சங்கத்தின் முல்லைத்தீவு கிளையின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இதன் ஒரு கட்டமாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பணிமனை பிரிவிற்கு உட்பட்டவர்களுக்கான இதய சுவாச மீள உயிர்ப்பித்தல் பயிற்சி தொடர்பான கருத்தரங்கு நேற்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பணிமனையில் இந்த கருத்தரங்கு நடைபெற்றது.இதற்கான ஏற்பாடுகளை முல்லைத்தீவு கிளையின் நிறைவேற்று அதிகாரி எஸ்.சதீஸ்வரன் மற்றும் மாவட்ட சுகாதார தினைக்களத்தினர் இனைந்து மேற்கொண்டிருந்தனர். இந்த நிகழ்வில் சுகாதார வைத்த…
-
- 0 replies
- 344 views
-
-
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பான் கீ மூன் இன்னும் யோசனை _ வீரகேசரி நாளேடு 7/9/2011 12:02:08 PM இலங்கை தொடர்பான ஐ.நா. நிபுணர் குழு சமர்ப்பித்த அறிக்கை குறித்து அடுத்து என்ன நடவடிக்கை மேற்கொள்வது என ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்னும் யோசித்து வருவதாக ஐ.நா. வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையை ஐ.நா. செயலாளர் நாயகம் எப்போது உத்தியோகபூர்வமாக மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்புவார் என கேட்டபோது, நாம் இந்த அறிக்கையை ஏற்கெனவே பகிரங்கமாக்கியுள்ளோம். ஏனைய ஸ்தாபனங்களுக்கு அனுப்புவது மற்றும் அடுத்த நடவடிக்கை குறித்து செயலாளர் நாயகம் யோசித்து வருகிறார். அவ்வாறு மேலதிக நடவடிக்கை குறித்து அறிவிப்பதற்கு ஏதும் இருந்தால்…
-
- 0 replies
- 288 views
-
-
நவாலிப் படுகொலைகள் நினைவு நாள் இன்று Saturday, July 9, 2011, 6:00 தமிழீழம் இரண்டே நாள்களில் இருநூறுக்கும் அதிக அப்பாவிப் பொதுமக்களை பலி கொண்ட அரச படைகளின் முன்னேறிப் பாய்ச்சல் நடவடிக்கைஇன்றைக்குப் 16 ஆண்டுகளுக்கு முன் னர், 1995 யூலை எட்டாம் நாள் அதிகாலை. “முன்னேறிப் பாய்தல்” என்ற பெயரிட்டு யாழ்ப்பாணத்தின் வலிகாமத்தைக் கைப்பற்றவெனத் திட்டம்போட்டு சிங்கள இராணுவம் புதிய படை நடவடிக்கையொன்றைத் தொடங்கியது. முதல் நாள் அது குறிப்பிட்ட சில பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டது. ஏற்கெனவே பலாலித் தளத்திலிருந்து ஆரம்பித்து கரையோரம் உட்பட சில பிரதேரங்களை இராணுவம் கைப்பற்றியபோது இடம்பெயர்ந்திருந்த மக்களைச் செறிவாகக் கொண்டிருந்த பகுதிகளே இப்படை நடவடிக்கை மூலம் கைப்பற்…
-
- 0 replies
- 592 views
-
-
ஐரோப்பா, சர்வதேசம் ஆகியவற்றின் அழுத்தங்களுக்கு அஞ்சி அரசாங்கம் அரசியல் தீர்வை முன் வைக்காது. சர்வதேசத்தில் முன்னெடுக்கப்படும் சூழ்ச்சிகள் தற்போது தெளிவாகின்றன என்று அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், வடக்கு கிழக்கில் இருக்கும் அடிப்படைவாதிகள், கூடுதலான அதிகாரங்களை கேட்கின்றனர். தெற்கிலும் அடிப்படைவாதிகள் இருக்கின்றனர். அவர்களே வடக்கு கிழக்கிற்கு கூடுதலான அதிகாரங்களை வழங்கவேண்டாம் என்று கூக்குரல் இடுகின்றனர். இவ்வாறான நிலையில் அரசாங்கம் இரு தரப்பினரையும் பற்றி சிந்…
-
- 1 reply
- 706 views
-
-
08 ஜூலை 2011 குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை – ஜீ.எல்.: இந்தியா, இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துவதனைப் போன்று இந்திய அரசாங்கம், இலங்கையின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புகளை இலங்கைப் பேணி வருவதாகவும், இந்த நிலைமை தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்படும் சில உடன்படிக்கைகள் ஆபத்தானவை என பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுடனான சில ஒப்பந்தங்கள் நாட்ட…
-
- 2 replies
- 715 views
-
-
எதிர்வரும் யூலை 09 ஆம் நாள் தென் சூடான் குடியரசு என்ற ஒரு புதிய நாடு பிறக்கவுள்ளது. இலடச்சக்கணக்கான தென் சூடானிய மக்கள் அதன் பிறப்பைக் கொண்டாட இருக்கிறார்கள். தென் சூடானின் தலைநகரம் யுபா (Juba) விழாக் கோலம் பூண்டுள்ளது.eelamwebsite.com
-
- 6 replies
- 1.6k views
-
-
பிரசுரித்தவர்: admin July 8, 2011 தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை, சனநாயகபூர்வமாக வெளிப்படுத்தி நிற்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் அரங்கம் நிகழ்வு பிரித்தானியாவில் முன்னெடுக்கப்படுகின்றன. நா.த.அரசாங்கத்தின் சனநாயக செயற்பாடுகள், அதன் வேலைத் திட்டங்கள் குறித்து, மக்களுக்கு விபரிப்பதோடு, மக்களுடைய கேள்விகளுக்கு விளக்கமளிக்கின்ற வகையில், நாடுகள் தோறும் மக்கள் அரங்கம் கலந்தாய்வு நிகழ்வுகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நா.த.அரசாங்கத்துக்கு வலுச்சேர்க்கும் நோக்கில், லண்டனில் உருவாக்கம் பெற்றுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான உறுதுணைக் குழுவின் ஏற்பாட்டில், கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டன் HARROW பகுதியில் மக்கள் அரங்…
-
- 0 replies
- 487 views
-
-
08 ஜூலை 2011 ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கைக்கு பதிலளிக்கப்பட்டதாக அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவினால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையின் ஒரு சில பகுதிகளுக்கு பதிலளிக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். நிபுணர் குழு அறிக்கைக்கு பதிலளிக்காமல் இருந்திருந்தால் அதிலும் எதிர்க்கட்சிகள் குறை கண்டிருக்கும் என தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் அளித்த பதில் தொடர்பான ஆவணமொன்று இன்று பாராளுமுன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்லவினால் இந்த ஆவணம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப…
-
- 0 replies
- 494 views
-
-
[Friday, 2011-07-08 22:49:29] ஆபிரிக்க நாடுகளில் மிகப்பெரிய நாடான சூடான் நாளையுடன் இரண்டாகப் பிரிந்து சூடான், தெற்கு சூடான் என அழைக்கப்படவுள்ளது.இந்நாட்டின் முதலாவது சுதந்திர தின விழா தெற்கு தலைநகரான ஜூபாவில் கொண்டாடப்படவுள்ளது. எண்ணெய் வளம் மிக்க இந்த நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வலுத்து வந்தது.இதனால் ஏற்பட்ட உள்நாட்டு போரில் 1.5 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர். கடந்த 2005ம் ஆண்டு ஏற்பட்ட அமைதி பேச்சுவார்த்தையை அடுத்து ஒப்பந்தப்படி சூடானை இரண்டாக பிரிக்க மக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. http://youtu.be/xOzW5tIKmCQ கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த மக்கள் வாக்கெடுப்பில் சூடான் இரண்டாக பிரிய ஆதரவு பெ…
-
- 0 replies
- 489 views
-
-
வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் நிகழ்த்திய ‘மனிதப் படுகொலைகள்’ காணொளியை பிரித்தானிய செனல்-4 தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வழங்கியவர்கள் தாமே என சிறிலங்காவிலிருந்து வெளியேறிய ஊடகவியலாளர்களின் ‘இலங்கையின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்’ என்ற அமைப்பு (சிங்கள ஊடகவியலாளர்களைக் பெருமளவில் கொண்ட அமைப்பு) பகிரங்கமாக உரிமை கோரி பி.பி.ஸி மூலம் அறிக்கை விட்டிருந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் பிரித்தானியாவிலிருந்து சிறிலங்கா திரும்பிய தமிழர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். . லண்டனை வசிப்பிடமாகக் கொண்டவரும் கண்டியைச் சேர்ந்தவருமான கந்தவனம் ஜெகீஸ்வரன் என்பவரே கடந்த மாதம் 30 ஆம் திகதி சிறிலங்கா பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இலங்கை இராணுவத்தினர் யுத்தக…
-
- 3 replies
- 1.3k views
-
-
வெள்ளிக்கிழமை, 8, ஜூலை 2011 (8:59 IST) தமிழர்களுடன் எந்தவித அதிகார பகிர்வும் செய்து கொள்ள முடியாது: இலங்கை ராஜபக்சே அரசு இலங்கையில் தமிழர்களுடன் எந்தவித அதிகார பகிர்வும் செய்து கொள்ள முடியாது என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் 07.07.2011 அன்று பேசிய மூத்த அமைச்சர் நிமல்ஸ்ரீபால டி சில்வா இதனை தெரிவித்தார். அமைச்சர் நிமல்ஸ்ரீபால டி சில்வாவின் அறிவிப்பு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இலங்கையில் உள்ள பிரச்சனைக்கு தீர்வுகாண தமிழர்களக்கு அரசியல் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் அந்நாட்டு அரசை வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் 07.07.2…
-
- 4 replies
- 824 views
-
-
பேராசிரியர் அவர்கட்கு….. உங்களுக்கு எங்கள் அஞ்சலி !!! அந்த மாபெரும் கல்வி தந்தை தந்த தரமான கல்வி எங்கள் வாழ்வில் அவரை நினைவு கூறும். நீங்கள் மறைந்தாலும் எம் தமிழ் வாழும்வரை எம்மோடு வாழ்வீர்!!! அஞ்சலியுடன் …ஈழ இணையம்elamwebsite.com
-
- 0 replies
- 887 views
-
-
மன்னார் மதவாச்சி வீதியிலுள்ள முருங்கன் விவசாயப் பண்ணைக்கு அருகில் நரிக்காடு பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.முன்னர் காங்கேசன்துறை சீமெந்துக் கூட்டுத் தாபனத்திற்கு தேவையான களிமண் அகழப்பட்ட பகுதியிலேயே இருபத்தைந்திற்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் ஓலைகளால் குடிசைகளை அமைத்து நிரந்தரமாகத் தங்கும் சூழலை ஏற்படுத்தி வருகின்றனர். . யுத்தத்திற்கு முன்னர் தாம் வாழ்ந்ததாக அம்மக்கள் கூறுகினற போதிலும் அங்கு முன்னர் சிங்கள மக்கள் இருக்கவில்லை என பிரதேச மக்கள் கூறுகின்றனர். இப் பகுதியில் இராணுவத்தினர் முகாம் அமைத்திருநததுடன் அவர்களே சிங்களக் குடும்பங்கள் குடியேற உதவுவதாகவும் கூறினர். . இதேபோனறு மடுச் சந்தியில் யுத்தத்திற்கு முன்னர் பத்து தொடக்கம் …
-
- 0 replies
- 373 views
-
-
மேனன், முகர்ஜியைப் பாவித்து; மெரிக்கோ றவுண்ட் காட்டும் மஹிந்தர் இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமாராவ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்பு செயலர் பிரதீப்குமார் ஆகியோர் அடங்கிய குழுவின் அண்மைக்கால இலங்கை விஜயம் தொடர்பான தகவல்கள் இரகசியமாக, எவரும் புரிந்து கொள்ள முடியாதவாறு முடிவடைந்தது. இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமாராவ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்பு செயலர் பிரதீப்குமார் ஆகியோர் அடங்கிய குழுவின் அண்மைக்கால இலங்கை விஜயம் தொடர்பான தகவல்கள் இரகசியமாக, எவரும் புரிந்து கொள்ள முடியாதவாறு முடிவடைந்தது. பேச்சு வெற்றியளித்தனவோ, இல்லையோ, ஆனால் இவர்கள் வெளியேறியது தான் தாமதம், காணிகள் மற்றும் பொலிஸுக்கான அதிகாரங்கள் மாகாண …
-
- 0 replies
- 708 views
-
-
தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை, சனநாயகபூர்வமாக வெளிப்படுத்தி நிற்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் அரங்கம் நிகழ்வு பிரித்தானியாவில் முன்னெடுக்கப்படுகின்றன. நா.த.அரசாங்கத்தின் சனநாயக செயற்பாடுகள், அதன் வேலைத் திட்டங்கள் குறித்து, மக்களுக்கு விபரிப்பதோடு, மக்களுடைய கேள்விகளுக்கு விளக்கமளிக்கின்ற வகையில், நாடுகள் தோறும் மக்கள் அரங்கம் கலந்தாய்வு நிகழ்வுகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நா.த.அரசாங்கத்துக்கு வலுச்சேர்க்கும் நோக்கில், லண்டனில் உருவாக்கம் பெற்றுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான உறுதுணைக் குழுவின் ஏற்பாட்டில், கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டன் HARROW பகுதியில் மக்கள் அரங்கம் நிகழவொன்று இடம்பெற்றுள்ளது. …
-
- 3 replies
- 661 views
-
-
இன்று காலையில் மலேசியா விமானநிலையத்தின் ஊடாக சிறிலங்கா எயர்லைன்ஸ்ஸில் ஒருவர் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறார் இவரது பெயர் திருஞானசம்பந்தன் மணிவண்ணன். விலகிடப்பட்ட நிலையில் இலங்கைப்படைப்புலனாய்வாளர்கள் மற்றும் இந்நாட்டு பொலீஸ் அதிகாரிகள் கூட்டாக செயற்பட்டு விமானத்தில் ஏற்றி கொண்டு சென்றிருக்கிறார்கள். இவர் யார் இவரது பின்னணி என்ன என்பது தொடர்பில் இதுவரை தெரிய வரவில்லை. My link
-
- 3 replies
- 1.6k views
-
-
இன்று இரவு 10 மணிக்கு ஹெட்லைன்ஸ் டுடே டிவியில் இலங்கையின் கொலைக்களம் டாக்குமென்டரிப்படம் ஒளிபரப்பாகவுள்ளது. ஈழத்தில் நடந்த உலகம் இதுவரை கண்டிராத மிகப் பெரிய, கொடூரமான இனவெறிப் படுகொலை கோர வெறியாட்டத்தின் காட்சிகளை லண்டனைச் சேர்ந்த சேனல் 4 டிவி டாக்குமென்டரிப் படமாக தயாரித்து வெளியிட்டு உலகையே அதிரச் செய்தது. இதுகுறித்து உலகம் முழுவதும் உள்ள முக்கிய செய்தி நிறுவனங்கள், டிவி நிலையங்கள், நாளிதழ்கள் செய்திவெளியிட்டன. இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ் ஊடகங்கள் மட்டுமே இதைப் பற்றி செய்தியை வெளியிட்டன. ஆனால் டெல்லியிலிருந்து செயல்படும் ஆங்கில டிவி நிறுவனங்கள் இதை கண்டு கொள்ளவே இல்லை. இந்த நிலையில், ஹெட்லைன்ஸ் டுடே இந்த பதை பதைக்க வைக்கும் டாக்குமென்டரிப் படத்தை ஒளிபரப்பவு…
-
- 10 replies
- 1.3k views
-
-
இறுதி யுத்தத்தின் போது அப்பாவி மக்கள் கொல்லப்பட்டமை உறுதி – ஐ.தே.க : இறுதி யுத்தத்தின் போது அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால் அரசு அதை மறுத்து வருகின்றது. அப்பாவி மக்கள் கொல்லப்பட்டமை உறுதி. ஆனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை எம்மிடம் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் தற்போது நிலவுகின்ற நிலவரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று நாடாளுமன்றில் ஒத்திவைப்புவேளை பிரேரணை ஒன்றைக் கொண்டுவந்தார்.இந்தப் பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றியபோதே லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தமி…
-
- 0 replies
- 850 views
-
-
Friday, July 8, 2011, 13:44சிறீலங்கா கடந்த 2008ம் ஆண்டு ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாகக் கூறப்பட்டு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வதனி மற்றும் கேகாலையைச் சேர்ந்த சம்பத் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் இக்குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார். அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை கொலை செய்யும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்திருந்த வதனி என்றப் பெண் கேகாலையில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். அத்தோடு, குறித்தப் பெண்ணின் கொலை சதித் தகவலை தெரிந்து வைத்திருந்தும் அதனை பாதுகாப்புத் தரப்பினருக்கு அறிவிக்காமல் இ…
-
- 0 replies
- 943 views
-
-
இலங்கையில் தமிழர்களுடன் எந்தவிதமான அரசியல் அதிகாரப் பகிர்வும் செய்து கொள்ளமாட்டோம் என்று இலங்கை அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.இதனால் இலங்கையில் தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே இருக்கும் அவலநிலை தொடரும் என்றே தெரிகிறது.இலங்கை நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை, மூத்த அமைச்சர் நிமல்ஸ்ரீபால டி சில்வா இது குறித்துப் பேசியது: இலங்கையில் பல ஆண்டுகளாக நிலவி வரும் தமிழர் பிரச்னையைத் தீர்க்க, அரசியல் அதிகாரப் பகிர்வு செய்து கொள்ளப்படமாட்டாது. அந்த வாய்ப்பை இலங்கை அரசு என்றுமே அளிக்காது. எனினும் தமிழர் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து பல்வேறு கட்சியினருடன் பேசி அவர்களின் கருத்துகளைக் கேட்டு வருகிறோம். பிரச்னைக்கு நல்ல தீர்வு காணப்படும். அரசியல் அதிகாரப் பகிர்வு திட்டத்…
-
- 1 reply
- 447 views
-
-
கலாநிதி மாறன்மீது நித்யானந்தா பீடம் கமிஷனரிடம் புகார் சன் டிவியின் நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறன் மற்றும் தலைமை செயல்அதிகாரி (COO) ஹன்ஸ்ராஜ் சக்சேனா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நித்யானந்தா பீடத்தின் சென்னை நிர்வாகி ஸ்ரீநித்ய சர்வானந்தா போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். 2G வழக்கில் தயாநிதி மாறனும் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். சன் டிவி குழுமத்துக்கு எதிராக சக்சேனா கைது, தயாநிதி மாறன் ராஜினாமா என்று அடுத்தடுத்து பரபரப்புகள் அரங்கேறும் சூழலில் நித்யானந்தா பீடத்தின் புகார் காரணமாக கலாநிதி மாறனுக்கும் எதிராக வலை பின்னப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நடிகை ரஞ்சிதாவுடன் படுக்க…
-
- 3 replies
- 2.3k views
-
-
நான் நினைக்கின்றேன் இந்திய ஊடகம் ஒன்றில் இனவழிப்பு Genocide என்ர சொல்லை பாவித்து, தலைப்பிட்டு இந்திய (டெல்லி) ஊடகம் ஒன்று சனல்4 காணொளியை ஒளிபரப்புகின்றது. அவர்களுக்கு நன்றியை தெரிவிப்பதுடன் பின்னூட்டல்களையும் எழுதவேண்டும். My link
-
- 0 replies
- 940 views
-
-
Sport cannot turn a blind eye Should the Australian cricket team tour Sri Lanka? Yes/No
-
- 0 replies
- 677 views
-