ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
வெள்ளிக்கிழமை, 24, ஜூன் 2011 (11:7 IST) என்னை மின்சார நாற்காலியில் உட்கார வைக்க முயற்சி: ராஜபக்சே என்னை மின்சார நாற்காலியில் உட்கார வைத்து தண்டனை வாங்கிக் கொடுக்க சிலர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். உர மானியம் தொடர்பாக விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கும் நோக்கத்தில் அதிபர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு அறிக்கைகள் மற்றும் தொலைக்காட்சி அலைவரிசை ஒளிபரப்புக்களின் மூலம் இலங்கை அரசுக்கு எதிராக குற்றம் சுமத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். அரசுக்கு எதிராக தூக்கப்படும் கரங்கள் இறுதியில் பொதுமக்களின் தலைகளின் மேல் விழுகின்றன. இன்று இலங்கை மக்கள் அனுபவித்து வ…
-
- 7 replies
- 1.2k views
- 1 follower
-
-
Friday, 24 June 2011 03:46 பாதுகாப்பமைச்சின் நேரடிக் கண்காணிப்பில் யாழ்ப்பாணத்தில் தனியான சனத்தொகை விபரம் திரட்டும் நடவடிக்கை இராணுவ பதிவு நடைமுறைக்குப் பதிலாக யாழ்ப்பாணத்தில் தனது நேரடிக் கண்காணிப்பில் தனியான சனத்தொகை விபரம் திரட்டல் நடவடிக்கையொன்றை மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. யாழ். குடாநாட்டிலும் வன்னியிலும் இராணுவம் பதிவுகளை மேற்கொள்வதற்கு அரசியல் கட்சிகளிடம் இருந்தும் மக்களிடம் இருந்தும் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்தே பாதுகாப்பு அமைச்சின் மூலம் தனியான குடிசன மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சனத்தொகை மதிப்பீட்டுப் புள்ளிவிவரத் திணைக்களம் மேற்கொள்ள உள்ள சனத்தொகைக் கணக்கெடுப்புப் பணிகளுக்கு மேல…
-
- 0 replies
- 332 views
-
-
மீளக் குடியேற்றம் என்றால் என்ன? எஞ்சிய மக்கள் எங்கே? Friday, June 24, 2011, 20:33 சிறீலங்கா, தமிழீழம் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து அவலப்பட்ட மக்களை மீளக்குடியேற்றி வருகிறோம் எனவும், இவ்வருட இறுதிக்குள் மீளக் குடியேற்றி விடுவோம் என்றும், சிறீலங்கா அரசாங்கம் பரப்புரை மேற்கொண்டு வருகின்றது. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களில் இரண்டு இலட்சத்து 43 ஆயிரத்து, 787 பேர் மீளக் குடியேற்றப்பட்டு விட்டதாகவும், இன்னும் 16 ஆயிரத்து 288 பேர் மட்டுமே மீளக் குடியேற்றப்பட இருப்பதாகவும் சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. வன்னியில் இருந்து 4 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து சிறீலங்கா படையினரிடம் சரணடைந்திருந்த நிலையில், இரண்டு இலட்சத்து 82 ஆயிர…
-
- 0 replies
- 595 views
-
-
கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் 10 ஆசிய நாடுகளில் இலங்கை 6 ஆவது இடத்தில் [Friday, 2011-06-24 18:49:36] மில்லியனர்களின் (கோடீஸ்வரர்களின்) எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் 10 ஆசிய நாடுகளில் இலங்கை 6 ஆவது இடத்தில் உள்ளது.ஹொங்கொங், வியட்நாம் ஆகியன இதில் முதலிடத்தில் உள்ளன. அந்நாடுகளில் 33 சதவீத வருடாந்த அதிகரிப்பு காணப்படுவதாக அமெரிக்க வங்கியின் செல்வ வள முகாமைத்துவப் பிரிவான மெரில் லின்ச் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. ஹொங்கொங், வியட்நாமுக்கு அடுத்ததாக இந்தோனேஷியா, சிங்கப்பூர், இந்தியா ஆகியன உள்ளன. இவற்றுக்கு அடுத்த இடத்தில் இலங்கை உள்ளது. கடந்த வருடம் முதல் தடவையாக ஐரோப்பாவைவிட ஆசியாவில் அதிக எண்ணிக்கையான மில்லியனர்கள் இருந்ததாக மேற்படி…
-
- 0 replies
- 465 views
-
-
பொதுமக்கள் ஒருவராவது கொல்லப்படவில்லை என்று இன்று வரை சாதிக்கும் அரசு இலங்கை பூராகவும் கொல்லப்பட்ட அனைத்துத் தமிழர்களுக்கும் அரச செலவில் விசேட பூசைகளையும் அர்ச்சனைகளையும் செய்ய முன்வந்தள்ளது. முன்னுக்குப் பின் முரணாக நடப்பதில் வல்லமை பெற்ற அரசு கொலையையும் செய்யும் கொல்லப்பட்டவருக்கு இரங்கலையும் தெரிவிக்கும். வன்னியில் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் உட்பட சிங்களப்படைகளின் எறிகணை வீச்சு, விமானக் குண்டு வீச்சு, சித்திரவதைகள் தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் போன்றவற்றால் படுகொலை செய்யப்பட்ட அனைவருக்கும் ஆத்மசாந்திக் கிரிகைகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 30ம் நாள் வரும் ஆடி அமாவாசைத் தினத்தன்று சகல சிவாலயங்களிலும் விசேட வழிபாடுகள் மற்றும் மோட்ச அர்ச்சன…
-
- 3 replies
- 781 views
-
-
கிளிநொச்சிப் பகுதியில் இரவு வேளைகளில் இளைஞர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி, கரடிப் போக்குச் சந்திக்கும் பரந்தன் சந்திக்கும் இடைப்பட்ட ஏ9 வீதிப் பகுதி யில் இரவில் கூடும் இளைஞர் குழுவின் அட்டகாசத்தால் அந்த வீதியால் இரவு நேரத்தில் பயணிப்போர் அச்சத்துடனேயே செல்வதாகக் கூறப்படுகின்றது. இந்த ஏ9 வீதிப் பகுதி தற்போது மக்கள் வசிக்கும் வீடுகள் அற்ற உடைந்த கட்டடங் களும் பற்றைகளும் வயல் வெளிகளும் நிறைந்து காணப்படுகின்றன. வீதியும் இடை யிடையே குன்றும் குழிகளைக் கொண்டதுமாக உள்ளதுடன் இரவில் வீதி விளக்குகள் இன்றி இருள் மண்டிக் காணப்படுகின்றது. இந்த நிலையில் இந்த வீதியில் இரவில் கூடும் இளைஞர் குழு வீதியால் துவிச்சக்கர வண்டி, உந…
-
- 7 replies
- 809 views
-
-
போரினால் பதிக்கப்பட்ட 16 வயதுச் சிறுமியின் கர்பப்பையை பாலியல் தொழிலுக்காக அகற்ற முயற்சி ! Friday, June 24, 2011, 12:44 சிறீலங்கா இச் செய்தியை வாசித்தால் நரம்புகள் நடுங்கும் ! நாளங்கள் ஆடி விடும் ! யாழ்ப்பாணம் மற்றும் வன்னிப் பகுதியில் போரினால் பதிக்கப்பட்ட பல பெண்களையும் சிறுமிகளையும் வேலை தருவதாகக் கூறி, தென்னிலங்கை அழைத்து வரும் ஒரு கும்பல், அவர்களை பாலியல் தொழிலில் பலாத்காரமாக ஈடுபடவைக்கிறது. பொய் சொல்லி இவ்வாறு தென்னிலங்கை அழைத்து வரும் தமிழ் பெண்களை அடைத்து வைத்து அவர்களை சிங்கள காமவெறியர்களுக்கும் பணக்கார முதலைகளுக்கும் தாரைவார்ப்பதையே இவர்கள் செய்துவருகின்றனர். இதனைக் கூட ஒருவகையில் மன்னிக்கலாம் ஆனால் இலங்கை தனியார் வைத்தியசாலைகளில் நட…
-
- 3 replies
- 697 views
- 1 follower
-
-
இந்தியாவுக்குச் செல்வதற்கான விஸாவை விணப்பித்த மறுநாளிலேயே பெற்றுக் கொள்ள வசதி [Friday, 2011-06-24 08:52:34] இந்தியாவுக்கு செல்வதற்கான வீசா கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தினால் விண்ணப்பம் கையளிக்கப்பட்ட அடுத்த வேலை நாளில் பெற்றுக் கொள்ள முடியுமென்று தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது பற்றி மேலும் விளக்கமளித்த அவர், யுத்தம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் இலங்கையர் ஒருவர் குறிப்பாக ஒரு தமிழர் இந்தியாவிற்கு செல்வதற்கான வீசா விண்ணப்ப படிவமொன்றை தூதரகத்தில் ஒப்படைத்தால், அது இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து சம்பந்தப்பட்டவருக்கு வீசா வழங்கலாம் என்ற அங்கீகாரம் கிடைத்த பின்னரே வீசா வழங்கப்பட்டது என்றும், இதனால், ஒருவர் இந்திய வீசாவைப…
-
- 3 replies
- 563 views
- 1 follower
-
-
24 ஜூன் 2011 செல்ல முடியாத நிலை:- மக்கள் உயர் பாதுகாப்பு வலயத்தில் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்டும் அரச அதிகாரிகள் செல்ல முடியாத நிலை:- மக்கள் உயர் பாதுகாப்பு வலயத்தில் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்டும் அபிவிருத்திப் பணிகள் செய்வதற்கும் துரிதமான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்கம் கூறிவருகின்ற போதும் அங்கு அரச அதிகாரிகள் செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளது. வலிகாமம் வடக்கு மற்றும் வடமராட்சி கிழக்குப் பகுதிகளிலேயே இவ்வாறான நிலைமை தோன்றியுள்ளது. வடமராட்சி வடக்கு வெற்றிலைக்கேணிப் பகுதியில் மீளக் குடியமர ஏதுவாக அப்பகுதியில் கட்டடங்கள், பாடசாலைகளைத் திருத்தம் செய்து மீளத் திறக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இதனையடுத்து கட்டட நிர்மாணப் பணிகளை பார்வ…
-
- 0 replies
- 547 views
-
-
24 ஜூன் 2011 பகிர்ந்து கொள்ளப்படும் - நெதர்லாந்து : தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகள் குறித்த அறிக்கை இலங்கை அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட உள்ளதாக நெதர்லாந்து அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் உள்ளிட்ட சிலரிடம் நெதர்லாந்து அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டதாக நெதர்லாந்து தூதரக பேச்சாளர் ஜாகோ பீரின்ட்ஸ் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரம் வரையில் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதிக் கொடுக்கல் வாங்…
-
- 0 replies
- 879 views
-
-
செப்டம்பர் மாதம் இலங்கைத் தமிழர்கள் நிலையை நேரில் பார்வையிடுவேன்: சுஷ்மா சுவராஜ் [Friday, 2011-06-24 11:26:44] பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை மைலாப்பூரில் கடந்த 2 நாட்கள் நடந்தது.நேற்றைய கூட்டத்தில் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் ஆளுங் கட்சியை வீழ்த்த எதிர்க் கட்சிக்கு மக்கள் வாக்களித்துள்ளார்கள். எனவே இந்த தேர்தல் தி.மு.க.-அ.தி.மு.க. இடையே என்றாகி விட்டது. இதை மாற்ற பாரதீய ஜனதா மக்கள் பிரச்சினையை கையில் எடுத்து தொடர்ந்து போராடும். உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது தொடர்பான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக மீனவர்கள…
-
- 2 replies
- 692 views
- 1 follower
-
-
[ வெள்ளிக்கிழமை, 24 யூன் 2011, 00:59 GMT ] [ கார்வண்ணன் ] அனைத்துலக ரீதியாக எழுந்துள்ள போர்க்குற்றச்சாட்டுகளைத் தோற்கடிப்பது குறித்து, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நியுயோர்க்கிலுள்ள ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுடன் தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளார். சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த ஆவணப்படத்தை முன்னிறுத்தி சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த பரப்புரைகள் நியுயோர்க்கில் தீவிரமடைந்துள்ள நிலையிலேயே மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுடன் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கலந்துரையாடியுள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த தொலைபேசி மூலமான உரையாடலின் போது, சனல்-4 ஆவணப்படத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட…
-
- 0 replies
- 532 views
-
-
[ வியாழக்கிழமை, 23 யூன் 2011, 12:44 GMT ] [ தி.வண்ணமதி ] தற்போதைய நிலையில் அதிபர் ராஜபக்சவே இக்கட்டானதொரு நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இந்தியாவின் அழுத்தத்திற்கு அடிபணிவதா அல்லது செல்வாக்குமிக்க உள்ளூர் வர்த்தகர்களது நிலைப்பாட்டுக்குத் துணைபோவதா என்ற குழப்பமான நிலையில் அவர் இருக்கிறார். மகிந்த அரசாங்கத்திற்கு நிதி ரீதியாகவும் இதர வழிவகைகளும் துணையாக இருப்பது இந்த வர்த்தக சமூகத்தினர்தான். இவ்வாறு மத்திய கிழக்கை தளமாகக் கொண்ட The Saudi Gazette என்னும் ஊடகத்தில் Feizal Samath எழுதியுள்ள செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி. இந்தியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான பரந்துபட்ட …
-
- 0 replies
- 560 views
-
-
(லங்கா ஈ நியூஸ் 24-06.2011) இம்மாத ஆரம்பத்தில் ஐரோப்பிய பாராளுமன்றக் கட்டடத்தில் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக மகாநாடு ஒன்று இடம்பெற்றது. ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இம்மகாநாட்டில் இலங்கையின் இனப்பிரச்சினை> இறுதி யுத்த காலப்பகுதியில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இம் மகாநாட்டில் தாயகத்திலிருந்து தமிழர் பிரதிநிதிகளை பங்குபற்ற வைக்கும் நோக்குடன் மகாநாட்டின் ஏற்பாட்டாளர்கள்> தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தருமான மாவை சேனாதிராஜா அவர்களுடன் தொடர்புகளை மேற்கொண்டு இக்குறிப்பிட்ட மாநாட்டில் பங்குபற்றமாறு கோரியிருந்தனர். தமிழ் மக்க…
-
- 0 replies
- 801 views
-
-
இலங்கை இனப்பிரச்சினை, இனப்படுகொலை மாகாநாட்டிற்கான அழைப்பை நிராகரித்த மாவை! Friday, June 24, 2011, 10:03 சிறீலங்கா இம் மகாநாட்டில் தாயகத்திலிருந்து தமிழர் பிரதிநிதிகளை பங்குபற்ற வைக்கும் நோக்குடன் மகாநாட்டின் ஏற்பாட்டாளர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தருமான மாவை சேனாதிராஜா அவர்களுடன் தொடர்புகளை மேற்கொண்டு இக்குறிப்பிட்ட மாநாட்டில் பங்குபற்றமாறு கோரியிருந்தனர். தமிழ் மக்களால் ஜனநாயக முறையில் தமது அரசியல் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்கள் பங்குபற்றி கருத்தக்களை தெரிவித்தால் சிறப்பாக இருக்கும் எனும் நோக்குடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பை அழைப்பதற்காக மாவை சேனாதிராஜா அவர்களுடன் தொடர்பை மேற்கொண்…
-
- 2 replies
- 975 views
-
-
இத்தாலியில் புலிகள் என கைது செய்ய பட்ட 30பேரும் குற்றமற்றவர்கள் என விடுதலை – தமிழர்க்கு கிடைத்த முதல் வெற்றி .! Thursday, June 23, 2011, 20:57 உலகம், சிறீலங்கா இத்தாலியில் புலிகள் என கைது செய்யப்பட்டிருந்த 30 தமிழர்களும் குற்றமற்றவர்கள் என இன்று நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளிற்கு முன்னர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தனர் என குற்றம் சுமத்தப்பட்டு புலிகளின் உறுப்பினர்கள் என குறித்த 30 பேரும் கைது செய்யபட்டிருந்தனர். முப்பது தமிழர்களும் சற்றும் முன்னர் நீதிமன்றினால் குற்றமற்றவர்கள் என தீர்ப்பளித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இத்தாலிய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானத…
-
- 2 replies
- 668 views
- 1 follower
-
-
இளம் தாயும் அவரது குழந்தையும் மாயம்! கிளிநொச்சியில் சம்பவம். Friday, June 24, 2011, 9:52 சிறீலங்கா கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் கடந்த 8ஆம் திகதி தொடக்கம் இளம் தாயும் மகனும் காணாமல் போயுள்ளதாக கிளிநொச்சி காவல்துறையினருக்கு முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கராயன் பாடசாலை வீதியைச் சேர்ந்த மதன் அனுசியா (வயது 18) அவரது மகன் பவிராஜ் (வயது 02) ஆகியோரே காணாமல் போனவர்கள் ஆவார். கிளிநொச்சி நகரிலுள்ள உணவகம் ஒன்றிக்கு செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர்கள் வீடு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. குறித்த பிரஸ்தாப பெண்ணும் அவரது மகனும் தனது அம்மம்மாவான கணபதி மணி (வயது 65) என்பவரின் பராமரிப்பிலேயே வாழ்ந்து வந்தனர். சொந்த தேவையின் நிமிர்த்தம்…
-
- 0 replies
- 817 views
-
-
பிரித்தானியா தமிழ் இளையோரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் சிறிலங்கா புறக்கணிப்புப்போராட்டம் தற்போது பிரித்தானியாவில் நடைபெறும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பங்குபற்றும் சிறிலங்கா கிரிக்கட் அணிக்கு எதிராக பாரியளவில் தொடர் போராட்டமாக முன்னெடுக்கபட்டுவருகிறது. இளையோர் அமைப்பினால் தொடக்கப்பட்ட இப்போராட்டம் தமிழ் மக்கள் மத்தியிலும் தமிழர் அல்லாதவர்களிடமும் மிக வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் பிரித்தானிய ஆங்கில ஊடகங்கள் அனைத்தும் எமது போராட்டங்களை முன்னுரிமை கொடுத்து பிரசுரித்து வருகின்றன. எதிர்வரும் சனிக்கிழமை போராட்டம் நடைபெறும் இடம் (25.06.11) 12:00PM at GLOUCESTERSHIRE COUNTY CRICKET CLUB, NEVIL ROAD, BRISTOL, BS7 9EJ. தொடர்பு கொள்…
-
- 2 replies
- 906 views
- 1 follower
-
-
மக்கள் உயர் பாதுகாப்பு வலயத்தில் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்டும் அரச அதிகாரிகள் செல்ல முடியாத நிலை:- மக்கள் உயர் பாதுகாப்பு வலயத்தில் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்டும் அரச அதிகாரிகள் செல்ல முடியாத நிலை:- மக்கள் உயர் பாதுகாப்பு வலயத்தில் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்டும் அபிவிருத்திப் பணிகள் செய்வதற்கும் துரிதமான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்கம் கூறிவருகின்ற போதும் அங்கு அரச அதிகாரிகள் செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளது. வலிகாமம் வடக்கு மற்றும் வடமராட்சி கிழக்குப் பகுதிகளிலேயே இவ்வாறான நிலைமை தோன்றியுள்ளது. வடமராட்சி வடக்கு வெற்றிலைக்கேணிப் பகுதியில் மீளக் குடியமர ஏதுவாக அப்பகுதியில் கட்டடங்கள், பாடசாலைகளைத் திருத்தம் செய்து மீளத் திறக்க உத…
-
- 0 replies
- 474 views
-
-
இலங்கையின் இன ஒற்றுமைக்காக அமைச்சர் ராஜித உரைத்த மகா தத்துவம் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கு இன்னொரு பிரபாகரன் வரும் வரை காத்திருக்கக் கூடாது என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். அமைச்சர் ராஜித சேனாரத்னவின் இந்தக் கருத்து மிகவும் மரியாதைக்குரியதும், சரியான நேரத்தில் சொல்லப்பட்டதுமாகும். அதிலும் அமைச்சராக இருந்துகொண்டு அவர் இவ்வாறு கூறியமை அவரின் நேர்மையையும் யதார்த்தமான சிந்தனையையும் எடுத்துக்காட்டும். ஒரு தடவை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, தென்மராட்சிப் பகுதியில் ஏற்பட்ட யுத்த அழிவுகளை வியட்நாம் அழிவுக்கு ஒப்பானதெனக் கூறியிருந்தார். அழிவுகளை, அதன் தாக்கங்களை தமிழ், சிங்கள இனத்துவ அடிப்படையில் நோக்காமல் இ…
-
- 3 replies
- 1.1k views
- 1 follower
-
-
[Wednesday, 2011-06-22 17:19:01] பார்க்கக்கூடாத திரைப்படமொன்றைப் பார்த்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பிரதேசவாசிகளால் சுற்றிவளைக்கப்பட்ட இரு மாணவிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட பொலிஸார் மீது பொதுமக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவமொன்று காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது பொதுமக்களுடனான பெரும் போராட்டத்தின் பின்னர் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ள மேற்படி இரு மாணவிகளும் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பிராந்தியத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் எல்.எச்.ஜீ.குரே தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 'நேற்று முன்தினம் பிற்பகல் காத்தான்குடியில…
-
- 19 replies
- 1.9k views
-
-
23 ஜூன் 2011 யுத்தத்தின் பின்னர் இலங்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு இந்தியா முனைப்பு காட்டவில்லை என சர்வதேச அனர்த்த குழு குற்றம் சுமத்தியுள்ளது. மிக நீண்ட காலமாக இலங்கை மீது தாக்கம் செலுத்தி வரும் இந்தியா, யுத்தத்தின் பின்னர் காத்திரமான பங்களிப்பினை வழங்கத் தவறியுள்ளதாக ஜெனீவாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் அனர்த்த குழு சுட்டிக்காட்டியுள்ளது. நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான முனைப்புக்களை மேற்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் தலையீடு குறித்து இலங்கையின் சகல இன மக்களுக்கு மத்தியிலும் சந்தேகம் நிலவி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகித்த போதிலும், அநேகமான சி…
-
- 3 replies
- 568 views
- 1 follower
-
-
23 ஜூன் 2011 அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஒரு வார காலத்திற்குள் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் அரசாங்கம் கூடுதலான தகவல்களை வெளியிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இரு தரப்பினருக்கும் இடையில் எதிர்வரும் 29ம் திகதி மீண்டும் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்றைய பேச்சுவார்த்தைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கமும் கூட்டாக இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். TNA யு…
-
- 1 reply
- 711 views
-
-
[ வியாழக்கிழமை, 23 யூன் 2011, 00:39 GMT ] [ கார்வண்ணன் ] நியுயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகம் அருகேயுள்ள ஐ.நா தேவாலய நிலையத்தில் 'சிறிலங்காவின் கொலைக்களங்கள்' ஆவணப்படம் நேற்று திரையிட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது. அனைத்துலக மன்னிப்புச் சபை, மனிதஉரிமைகள் கண்காணிப்பகம், முரண்பாடுகளுக்கான அனைத்துலக குழு ஆகியன இணைந்து இந்த ஆவணப்படத்தை திரையிட்டுள்ளன. சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்களுக்கு இந்த ஆவணப்படம் சாட்சியாக உள்ளது என்று, இதனை திரையிட முன்னர் அனைத்துலக மன்னிப்புச்சபை வெளியிட்ட முன்னுரையில் கூறப்பட்டிருந்தது. இந்த ஆவணப்படத்தை பல்வேறு நாடுகளினதும் இராஜதந்திரிகளும் அதிகாரிகளும் பார்வையிட்டுள்ளனர். இந்த நிகழ்வில் அழைக்கப்பட…
-
- 5 replies
- 1.4k views
-
-
Posted by சோபிதா on 23/06/2011 in செய்தி சார்க் நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டுமென சார்க் அமைப்பின் செயலாளர் நாயகம் பாத்திமத் தியானா சயீட் வலியுறுத்தியுள்ளார். நேற்று பின்னேரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் வைத்துச் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இலங்கை தற்போது ஒரு நெருக்கடியான காலகட்டத்தை எதிர்கொண்டுள்ளது. அதிலிருந்து வெளிவர சார்க் அமைப்பின் ஏனைய நாடுகள் ஆதரவளிக்க வேண்டும்.ஏனெனில் சார்க் அமைப்பின் வளர்ச்சிக்கு கடந்த காலங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏராளம் பங்களிப்பை வழங்கியுள்ளார். http://www.eelampress.com/2011/06/27659/
-
- 2 replies
- 928 views
-