ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
14 ஜூன் 2011 என்னுடைய படமான இலங்கையின் படுகொலைக்களங்கள் அப்பாவித் தமிழ் மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட அக்கிரமத்தை வெளிப்படுத்துகிறது. ஐநா இதனைப் புறக்கணித்துவிட முடியாது. (இன்று சனல் 4இல் இது காண்பிக்கப்படுகிறது) - ஹலும் மக்ரே இது தான் இவை பற்றி உரக்கப் பேசுவதற்கான சந்தர்ப்பம். தலைக்கு மேலால் கிபீர் குண்டு வீச்சு விமானங்கள் அச்சமூட்டும் வகையில் ஒலியெழுப்பிக் கொண்டு வருகையில், எந்தக் கருணையுமேயின்றி கடுமையான ஆட்லறி ஷெல் தாக்குதல்களை இலங்கை இராணுவம் மேற்கொண்டு கொண்டிருக்கையில், அச்சம் கொண்ட தமி;ழ் குடும்பங்கள் ஆழமற்ற பதுங்கு குழிகளில் நெருக்கியடித்துக் கொண்டு உயிரைக் கையில் பிடித்தபடி இருக்கிறார்கள். ஜனவரி 2009 தமிழீழ சுதந்திர அரசுக்கான போராட…
-
- 0 replies
- 946 views
-
-
June 14th, 2011 யாழ் செய்தியாளர் சிறீலங்கா அரசு மீது பொருளாதாரத் தடையை கொண்டுவரவேண்டும் என்று தமிழக அரசு கொண்டுவந்துள்ள தீர்மானம் குறித்து இந்திய காங்கிரஸ் கட்சி கருத்து எதனையும் தெரிவிக்க மறுத்துவிட்டது. ஆனால் சிறீலங்கா அரசு இந்திய மத்திய அரசுடனே உறவுகளை கொண்டுள்ளதாகவும், அது மாநில அரசுகளை மதிப்பதில்லை எனவும் சிறீலங்காவின் அமைச்சர் கேகலியா ரம்புக்வெல தெரிவித்திருந்தார். எனினும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக சிறீலங்கா வெளிவவிகார அமைச்சர் ஜி எல் பீரீஸ் தமிழக முதல்வருக்கு அனுப்பிய வாழ்த்து செய்தி பலன் கொடுக்கவில்லை. தமிழகத்தின் தீர்மானத்தை தொடர்ந்து தனியாக சிறப்பு விமானம் ஒன்றை அமர்த்திய இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேன…
-
- 0 replies
- 955 views
-
-
June 14th, 2011 ஐரோப்பிய செய்தியாளர் கடந்த வியாழக்கிழமை, யூன் 9ம் திகதி ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் 17வது கூட்டத்தொடரின் பொழுது, ஐ. நா மண்டபத்தில் பிரித்தானியவை தளமாக கொண்டு செயற்படும் ‘லீபரேசன்’ என்ற அரச சார்பற்ற நிறுவனத்தினரினால் ‘தென் ஆசியாவில் சிறுபான்மையினரின் உரிமைகள’; என்ற தலைப்பில் நடாத்தப்பட்ட கூட்டத்தில், உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வணபிதா எஸ் ஜே இம்மானுவேல் அடிகாளர் தமிழீழ மக்கள் சார்பாக உரையாற்றினார். வணபிதா எஸ் ஜே இம்மானுவேல் அடிகாளர் தமது உரையில் தமிழீழ மக்களின் சரித்திரத்தை ஆதாரமாக எடுத்துரைத்து தமிழீழ மக்கள் தமது சுயநிர்ணய உரிமையை நிலைநாட்ட உரிமை உடையவர்களென கூறினார். அத்துடன் அங்கு சபையினாரினால் எழுப்பட்ட பல கேள்விகளுக்கும் பதில் கூறினார…
-
- 0 replies
- 699 views
-
-
தமிழ்நாட்டின் தூத்துக்குடிக்கும் இலங்கையின் கொழும்புவிற்கும் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்க விழாவை புறக்கணித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் அதன் தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை: இலங்கைக்குக் கப்பல் போக்குவரத்து தொடக்க விழாவைப் புறக்கணித்த தமிழக அரசுக்கு பாராட்டு : சீமான் தமிழ்நாட்டின் தூத்துக்குடிக்கும், இலங்கையின் கொழும்புவிற்கும் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்துத் தொடக்க விழாவை தமிழக அரசு புறக்கணித்துள்ளதை நாம் தமிழர் கட்சி பாராட்டி வரவேற்கிறது. இலங்கைத் தமிழர்களை கொத்துக்கொத்தாகக் கொன்றுக் குவித்துவிட்டு, இன்றைக்கும் அவர்களின் வாழ்வை சின்னபின்னமாக்கி சிதறடித்துவிட்டு, அரசியல் தீர்வு எதையும் …
-
- 0 replies
- 676 views
-
-
கொடு என்கிறது இந்தியா முடியாது என்கிறார் மகிந்த இராஜதந்திர மோதல் உருவாகும் ஆபத்து 13-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைவாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு இந்தியா கொடுத்துவரும் அழுத்தத்திற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பணிய மறுத்துவருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. 13-வது திருத்தச் சட்டமூலத்திற்கு அமைவாக இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணுமாறு இந்திய மத்திய அரசு விடுத்த வலியுறுத்தலை, கொழும்பிற்கு வந்திருந்த இந்திய உயர்மட்டக் குழு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் தெளிவாக எடுத்துக் கூறியிருந்தது. எனினும் இந்தியாவின் வலியுறுத்தலுக்கு இணங்க மறுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது எனக் கூறியுள்ளார். ஜ…
-
- 10 replies
- 1.3k views
- 1 follower
-
-
Posted by இரும்பொறை on 14/06/2011 in செய்தி நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியவரை மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் வழிமறித்து அவரது கழுத்தில் இருந்த 4 பவுண் பெறுமதியான தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு சென்ற சம்பவம் உடுப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது. இதுபற்றி தெரியவருவதாவது: கடந்த புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் உடுப்பிட்டி வீரபத்திரர் கோயில் வடக்கு வீதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த கே.ஜெயரட்ணம் என்பவரின் தங்கச்சங்கிலியே இவ்வாறு அறுக்கப்பட்டதாகும். கோயில் வடக்கு வீதி வழியாக தமது வீட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவரை மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் மறித…
-
- 0 replies
- 518 views
-
-
Tuesday, June 14, 2011, 10:18உலகம், தமிழீழம் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் உலகத் தமிழர் பேரவை(GTF) இந்தக் காணொளிகளை இலங்கைக்கு வெளியே கொண்டுவந்து அதனை சனல் 4 தொலைக்காட்சிக்கு கொடுத்துள்ளனர். அவர்களின் தன்னலமற்ற சேவையினை பாராட்டாமல் இருக்கமுடியாது ! ஒரு போரில் கைதாகும் போராளிகளையும் சரி, காயப்பட்ட எந்தவொரு இராணுவ வீரராக இருந்தாலும் சரி அவர்களை மரியாதையுடன் நடத்துவதோடு அவர்களுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளையும் காலந்தாழ்த்தாது வழங்க வேண்டும் என்பதையே சர்வதேசச் சட்டமும் ஜெனீவா பிரகடனமும் வலியுறுத்துகிறது. ஆனால் இலங்கை இராணுவத்தினர் இவ்விதிகளை மீறியுள்ளதோடு, இறந்த மற்றும் காயப்பட்ட போராளிகளின் உடல்களை அவதூறு செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் நிபு…
-
- 0 replies
- 1.9k views
-
-
Tuesday, June 14, 2011, 12:00சிறீலங்கா திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச பள்ளிக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள கலைமகள் இந்துகல்லூரி மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் இருந்து ஆசிரியர்கள் 8 பேர் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இப்போரட்டம் மூதூர் வலயக் கல்வி பணிமனைக்கு முன்பாக காலை 10 மணி முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை நேற்றைய தினம் சம்மாந்துறை பகுதியிலும் ஆசிரியர் இடமாற்றங்களுக்கு எதிராக சிறிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். http://www.tamilthai.com/?p=19245
-
- 0 replies
- 436 views
-
-
Tuesday, June 14, 2011, 11:52இந்தியா, தமிழீழம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக்கோரும் வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ நேரில் ஆஜராகி வலியுறுத்தினார் .தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக்கோரிய வழக்கை விசாரிப்பதற்காக டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பாயம் ஒன்றை நியமித்திருந்தது. அதில் நடைபெற்ற விசாரணையில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேரில் ஆஜராகி வாதாடினார். ஆனால், அந்த தீர்ப்பாயம், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிக்கவேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தலைமையிலான தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றில் வைகோ மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்றைய விசாரணை…
-
- 0 replies
- 426 views
-
-
Tuesday, June 14, 2011, 8:33 இலங்கைக்கான பிரிட்டனின் துணைத்தூதர் மார்க்கூடிங் யாழ்ப்பாணத்துக்கு நேற்று உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.இந்த விஜயத்தின் போது தெல் லிப்பழை புனர்வாழ்வு நிலையம் மற்றும் தெல்லிப்பழை, கொல்லன் கலட்டி ஆகிய பகுதிகளில் மீள்குடி யேற்றப்பட்ட மக்களை இவர் சந்தித்து அவர்களின் நிலைமை தொடர்பாக நேரில் பார்த்து அறிந்துகொண்டார். அத்துடன் புனர்வாழ்வளிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளி களின் தற்போதைய நிலை மற்றும் சமூகத்துடனான அவரிகளின் ஒருங்கிணைவு என்பன குறித்து இந்த விஜயத்தின் போது மார்க்கூடிங் அவதானித்தார்.இதன் போது பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளையும் அவர் சந்தித்தார்.…
-
- 0 replies
- 366 views
-
-
முல்லை மாவட்டம், வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவில் வைகாசி பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. வன்னியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை அம்மன் கோவில் விழா 2009ஆம் ஆண்டு நடைபெறவில்லை. . சிங்கள அரசின் படையெடுப்பு மற்றும் பாரிய படுகொலை ஆகியவற்றால் 2009 இல் இடம்பெற்றது இதன் காரணமாக மக்கள் பலாத்காரமாக இடம்பெயர்க்கப்பட்டனர். இதனால் 2009 இல் பொங்கல் விழா நடைபெறவில்லை. எனினும் கடந்த 2010ஆம் ஆண்டு ஆலயம் ஓரளவிற்கு புனரமைக்கப்பட்டு பொங்கல் விழா நடைபெற்ற போதிலும் அங்கு மக்கள் செல்வதற்கு அரச படைகள் அனுமதி கொடுத்திருக்கவில்லை. . தற்போது இவ்வாலயம் புனரமைக்கப்பட்டு இராஜகோபுரமும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு சகல பிரதேசங்களிலிருந்தும் மக்கள் செல்வதற்கு மட்டுப்படுத்தப்பட்டுஅனுமத…
-
- 0 replies
- 728 views
-
-
யாழ். குடாநாட்டில் பொதுமக்களையும் அவர்கள் தங்கியுள்ள வீடுகளையும் படம் பிடித்து பதிவு செய்யும் நடவடிக்கைகள் நேற்று பல்வேறு இடங்களிலும் இடம்பெற்றன .இந்த நடவடிக்கைகளில் சில இடங்களில் இராணுவத்தினர் ஈடுபட்டனர். வேறு சில இடங்களில் இராணுவத்தினர் என்று தெரிவித்து சிவில் உடையில் வந்தவர்களும் ஈடுபட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மத்தியில் மனக்கிலேசம் ஏற்பட்டுள்ளது. . வீடுகளுக்கு வந்தவர்கள் குடும்ப பதிவு அட்டையிலுள்ள விவரங்களை தாம் கொண்டு வந்த படிவங்களில் நிரப்பி யுள்ளனர். அத்துடன் வீட்டில் இருந்தவர்களைத் தனித் தனியாக படமும் எடுத்துள்ளனர்.வீட்டில் எத்தனைபேர் இருக்கின்றீர்கள்? எல்லோரும் என்ன செய்கின்றனர். எத்தனைபேர் வேலை செய்கின்றனர். வீட் டில் எத்தனை அறைகள் உள…
-
- 0 replies
- 539 views
-
-
பங்கங்களை ஏற்படுத்தும் வகையிலும் சர்வதேச மட்டத்திலிருந்து வருகின்ற அழுத்தங்களை அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. அரசாங்கம் தமிழ் மக்களை அரசியல் அதிகாரத்துக்குள் ஈடுபடுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அத்துடன் அரசியல் தீர்வு தொடர்பான விடயத்திலும் அர்ப்பணிப்புடன் நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப் பெரும தெவித்தார். அயல் நாடான இந்தியாவுடனான உறவு சிறப்பாக வலுவடைந்துவருகின்றது. இந்தியாவை நாங்கள் எமது மூத்த சகோதரியாகவே பார்க்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார். சர்வதேச விவகாரங்கள் மற்றும் இந்திய உயர்மட்டக் குழுவின் இலங்கை விஜயம் போன்றவை குறித்து விபரிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப…
-
- 8 replies
- 1.6k views
- 1 follower
-
-
இலங்கை பொருட்களை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரில் ஒன்றரை லட்சம் தமிழர்களை இனப்படுகொலை செய்ததது மட்டுமின்றி, இன்றுவரை ஈழத் தமிழின அழிப்பில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதாரத் தடையை கடைபிடிக்க வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப் பேரவை நிறைவேற்றியத் தீர்மானத்தை தமிழக மக்கள் அனைவரும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது. ஈழத் தமிழினத்தின் நீண்ட நெடிய விடுதலைப் போராட்டத்தில் இத்தீர்மானம் ஒரு பெரும் திர…
-
- 7 replies
- 943 views
-
-
Srilankan’s Killing Fields – சனல்-4 தயாரித்துள்ள ஒரு மணி நேர விவரணப் படம் இன்று! Published on June 14, 2011 இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக சனல்-4 தயாரித்துள்ள ஒரு மணி நேர விவரணப் படம் இன்று 14ஆம் திகதி லண்டனில்(லண்டன் நேரப்படி இரவு 11.05)ஒளிபரப்பப்படுகின்றது. இந்த விவரணப் படத்தைப் பார்க்குமாறு சகல எம்.பிக்களுக்கும் ஆளும் கன்சர்வேர்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்கொட் லீ வேண்டுகோள் விடுத்துள்ளார். சனல் – 4 வீடியோவிலுள்ள காட்சிகள் உண்மையானவை எனவும், போர்க் குற்றத்திற்கான சாட்சியங்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன எனவும் சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள் தொடர்பான ஐ.நாவின் விசேட பிரதிநிதி தெரிவித்தார். இதேவேளை, இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. சு…
-
- 2 replies
- 769 views
- 1 follower
-
-
புலிகளின் செயற்பாடுகள் குறித்து விசாரணை நடத்தும் நோக்கில் நெதர்லாந்து அதிகாரிகள் இலங்கை விஜயம் : 14 ஜூன் 2011 புலிகளின் செயற்பாடுகுள் குறித்து விசாரணை நடத்தும் நோக்கில் நெதர்லாந்து அதிகாரிகள் குழுவொன்று இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். நெதர்லாந்தில் தமிழீழ விடுதலைப் புலிச் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்தும் இந்த நடவடிக்கைக்கு 'ஒபரேசன் கொனிக்' என பெயரிடப்பட்டுள்ளது. நெதர்லாந்து நீதி அமைச்சு மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றினால் இந்த விஜயம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. நெதர்லாந்து நீதி அமைச்சைச் சேர்ந்த அதிகாரிகளே இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தப்படுமா அல்ல…
-
- 0 replies
- 533 views
-
-
அழிக்க உதவுங்கள் பரிந்து பேச வராதீர்கள்உலகுக்கான இலங்கையின் செய்தி இது தான் எண்பதுகளின் நடுப்பகுதியில் தமிழ்ப் போராளிக் குழுக்களின் ஆயுதப் போராட்டம் கூர்மையடைந்திருந்தது. அந்த வேளையில் தமிழர்களின் உரிமைப் போரை அடக்குவதற்கு இஸ்ரேலின் உதவியை நாடினார் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன. பத்துத் தமிழ் இளைஞர்களைக் கொன்றால் அவர்களில் ஒருவர் நிச்சயம் போராளியாக இருப்பார் என இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் இலங்கை இராணுவத்துக்கு அப்போது ஆலோசனை வழங்கியது. இதே காலப்பகுதியில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்குமாறு ஜே.ஆரை வலியுறுத்தினார் இந்திப் பிரதமர் இந்திரா காந்தி. தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்குவது தொடர்பாகப் பேச்சு நடத்துவதற்காக இந்தியப் பிரதிநிதியாக ஜி.பார்த்…
-
- 2 replies
- 1.4k views
-
-
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீதான சிறிலங்கா பொலிஸாரின் மூர்க்கத்தனமான தாக்குதல் மற்றும் படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்று சில நாட்களுக்குள்ளேயே சிறிலங்கா பொலிஸார் மேலுமொரு காமவெறியாட்டத்தில் ஈடுபட்டமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. . சிலாபம் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் இரு மாணவிகள் கொழும்பு. காலிமுகத் திடலில் அவர்களது காதலர்களுடன் சென்றிருந்தபோது விசாரணைக்கு என அவர்களை அழைத்துச் சென்று விடுதி ஒன்றில் வைத்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவமே இன்று சிறிலங்கா பொலிஸ்துறையில் நாற்றமடிக்கத் தொடங்கியுள்ளது. . இந்த இரு யுவதிகளின் காதலர்களையும் இடைவழியில் இறக்கிவிட்டு குறிப்பிட்ட இரு யுவதிகளையும் லொட்ஜ் ஒன்றில் அடைத்து வைத்து அவர்களுடன் இரு பொலிஸாரும் பாலி…
-
- 1 reply
- 2.4k views
- 1 follower
-
-
இங்கிலாந்தில் உள்ளவர்கள் உடனடியாக உங்கள் MP க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். Please urge your MP to sign the Motion below. You can contact them by clicking here My linkto find out who your MP is and send them an email. Dear Mr.---------------------, I am your constituent living in ------------------ and I would like you to support the following motion sponsored by Mr.Lee Scott a conservative party MP from London. The concerned documentary would be telecast tommarow on CH4 at 11.00 O clock PM. Thank you. Mr.---------------------, XX,----------------- Road, ---------------, XXXX XX. http://www.parliament.uk/edm/2010-11/1882 …
-
- 6 replies
- 1.1k views
-
-
கிளிநொச்சியிலும் மன்னம் பிட்டியிலும் இனம் புரியாத இரு கொலைகள்:- 13 ஜூன் 2011 கிளிநொச்சிப் பகுதியில் காவற்துறையினா ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அப்பகுதியிலுள்ள தேனீரகம் ஒன்றில் பணியாற்றி வந்த 5 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சிப் பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு எதிர்வரும் 27ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த உணவு விடுதிக்குச் சென்ற காவற்துறையினர் அப்பகுதியில் அடாவடியில் ஈடுபட்டதாகவும் இதையடுத்து ஏற்பட்ட கைகலப்பிலேயே 5 பேரும் தாக்கியதில் காவற்துறை கான்ஸ்ரபிள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து காவற்துறையினரின் சீருடைகள் என்பவற்…
-
- 0 replies
- 876 views
-
-
இலங்கை அரசியல்வாதிகளில் அநேகர் நாட்டை நாசம் செய்யவே பிறந்தவர்கள்; பிரபல சட்டத்தரணி எஸ்.எல்.குணசேகர இலங்கையில் இருக்கும் அரசியல்வாதிகள் நாட்டை நாசம் செய்யவே பிறந்தவர்கள். நாட்டுக்கு என்னதான் கெடுதி நடந்தாலும் பரவாயில்லை தாம் மட்டும் நன்றாக இருந்தால் போதுமென்று நினைக்கும் பண்பைக் கொண்டவர்கள். இவ்வாறு தெரிவித்தார் பிரபல சட்டத் தரணி எஸ்.எல். குணசேகர. கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தகவலய அசம்பாவிதங்கள் மற்றும் ஐ.நா.நிபுணர்குழு அறிக்கையின் தாக்கம் என்பன குறித்து நேற்றைய சிங்கள வாரஇதழ் ஒன்றுக்கு அளித்துள்ள விசேட நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையின் மூலம் தமக்குச் சாதகமான சூழ்நிலையொன்றை ஏற்படுத்திக்கொள்ள முடியுமா என்று கூட சில…
-
- 0 replies
- 674 views
-
-
தமிழக சட்டசபை தீர்மானத்திற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கண்டனம்! இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கடந்த வாரம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் தமிழினப் படுகொலையை மேற்கொண்ட சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போர்க்குற்றவாளி என்றும், சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக சட்டப்பேரவை கடந்த வாரம் தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. இந்நிலையில், சிறிலங்கா அரசாங்கம் சிறுபான்மை கட்சிகளுடன் அதிகாரப் பரவலாக்கம் குறித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் அதை குழப்பும் வகையிலேயே இத்த…
-
- 23 replies
- 1.8k views
- 1 follower
-
-
Sri Lanka's Killing Fields will be broadcast on Channel 4 on 14 June. யூகேயில் நாம் வாழுகிற தெருவில், தமிழ்ப்பெண் கைகள் பின்னால் கட்டப்பட்டு சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள் அடங்கிய போர்க்குற்ற ஆவணப் படம் சணல் 4இல் இம்மாதம் 14ம் திகதி காண்பிக்கப்படும் செய்தியை கொண்டுசெல்லவேண்டியது எமது கடமையல்லவா? லண்டன் தெருக்களில் ஆர்ப்பாட்ட ஊர்வலம், கண்காட்சி என்று நாங்கள் கஷ்டப்படாமால் நாம் வாழும் தெருவில் எங்கள் அயலவர்களிடையே இந்தச் செய்தியை இலகுவாகக் கொண்டு செல்வோம். இதனை அனைவரும் பார்க்கச் செய்யவேண்டும். 1. ஈமெயிலில் இது சம்பந்தமாக செய்திகள் அனுப்பலாம். 2. எமது பிள்ளைகள் படிக்கும் பாடசாலையில் அவர்களுடைய நண்பர்களையும் குடும்பத்தினரையும் பார்க்கச் செய்யலாம். 3. வாசிகசாலை…
-
- 44 replies
- 5.1k views
-
-
Monday, June 13, 2011, 21:58உலகம், தமிழீழம் நாடு கடந்த அரசாங்கத்தின் ஏப்ரல் 02, 2011 அறிக்கையின்படி சத்தியப்பிரமாணம் செய்யாத காரணத்தால் தாமாகவே பதவி துறந்தார்கள் என அறிவிக்கப்பட்டவர்களின் வெற்றிடங்கள், தேர்தலில் போட்டியிட்டும் தெரிவு செய்யப்படாமல் அடுத்த நிலையிலுள்ளவர்களாலும், போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டவர்களின் தொகுதிகளில் போட்டியிருப்பின் தோ்தல் மூலமும் நிரப்பப்படும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையாளர் திருமதி ஸ்ரீதாஸ், 11-06-2011 அன்று ஒப்பமிட்டு 13-06-2001 அன்று வெளியீட்டிற்காக உள்துறை அமைச்சின் ஒன்ராறியோ செயலருக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் ஊடக அறிக்கை இணைக்கப்பட்டுளளது. ந…
-
- 0 replies
- 571 views
-
-
[ திங்கட்கிழமை, 13 யூன் 2011, 12:59 GMT ] [ தா.அருணாசலம் ] சிறிலங்காவின் தென் முனையிலுள்ள அம்பாந்தோட்டைப் பகுதியில், 2714 ஏக்கர் பரப்பளவினைக் கொண்ட முதலீட்டு வலயத்தில், பாரிய 11 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டுத் திட்டங்களை முன்னெடுப்பதற்கான அங்கீகாரத்தினை அமைச்சரவை யூலையில் வழங்கவிருக்கிறது. இந்த நிலையில், அம்பாந்தோட்டை நகரத்தினை மையப்படுத்திய அரசாங்கத்தினால் துரிதப்படுத்தப்பட்டிருக்கும் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் இந்த அமைச்சரவை அங்கீகாரத்துடன் முழுவேகம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கமைய உலகின் முன்னணி கார் உற்பத்தியாளர்களில் ஒன்றான ஜேர்மனியைச் சேர்ந்த அவுடி [Audi] நிறுவனம் அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கு அண்மையில் பல மில்லியன் …
-
- 0 replies
- 717 views
-