Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ்நாடு நிறைவேற்றிய தீர்மானம் பற்றி நாடாளுமன்றில் வாய் திறக்க முடியாமல் திணறிய பீரிஸ் தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறிலங்கா அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பதிலளிக்க முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டது. நேற்றுப் பிற்பகல் சிறிலங்கா நாடாளுமன்றம் கூடிய போது, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்த தகவல் உறுப்பினர்களிடம் பரவியதால் பரப்பரப்பாக இருந்தது. இந்தநிலையில் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுந்து, தமிழ்நாடு சட்டசபையில் சிறிலங்கா மீது பொருளாதாரத் தடை விதிக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது தொடர்பாக அரசாங்க…

    • 0 replies
    • 457 views
  2. பதிந்தவர்: ஈழப்பிரியா வியாழன், 9 ஜூன், 2011 தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து ராமநாதபுரம் நாம் தமிழர்கள் வைத்துள்ள பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள். மிகப்பெரிய மனித உரிமை மீறல் செய்த இலங்கை அரசின் மீது பொருளாதார தடை விதிக்கவும், கொலைகாரன் ராஜபக்சேவை போர் குற்றவாளி என்று அறிவிக்கவும் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து ராமநாதபுரம் நாம் தமிழர் கட்சியினர் வைத்துள்ள பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள். source:vannionline.

  3. 2006ம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அரசு மாவிலாறில் இருந்து சிங்கள மேலாதிக்கத்தை இலங்கைத் தீவில் நிறுவும் இறுதிப் போரை ஆரம்பித்த போது அவரும் உலக நாடுகளும் இந்தியாவும் உச்சரித்த வார்த்தைகள் இவை... "பயங்கரவாதத்தை இராணுவ ரீதியில் தோற்கடிப்பதன் மூலம் இனப்பிரச்சனைக்கு சுமூகமான தீர்வை எட்டுதல்". "போர் முடிவடைந்ததும் அது சாத்தியப்படும்" என்பது தான். மே 2009 இல் சிறீலங்காவும் சர்வதேசமும் இந்தியாவும் விரும்பிய படி போர் தமிழர் தரப்பில் பேரழிவுகளுடன் ஒரு இனப்படுகொலையுடன் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால் இனப்பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் எந்த காத்திரமான நடவடிக்கைகளையும் சிறீலங்காவோ... சர்வதேசமோ.. இந்தியாவோ மேற்கொள்ளவில்லை. மாறாக ஐக்கிய இலங்கை.. இன நல்லிணக்கம் பற்றிய…

  4. இலங்கை இந்திய மத்திய அரசுடனே ஒன்றிணைந்து பணிபுரிவதாகவும் எந்தவொரு தனிப்பட்ட மாநிலங்களோடும் இணைந்து பணிபுரிவதில்லை எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில் - இலங்கை என்பது இறையாண்மை நாடு. இறையாண்மை நாடொன்றின் செயற்பாடுகள் என்பன பிரிதொரு அங்கீகரிக்கப்பட்ட நாடொன்றின் அரசுடன் சார்ந்தே இருக்குமே தவிர எந்தவொரு தனிப்பட்ட மாநிலங்களோடும் சார்ந்து இருக்காது. ஒரு நாட்டின் பிரச்சினையில் ஏனைய நாடுகளின் மத்திய அரசே தீர்மானம் மேற்கொள்ள முடியுமே தவிர மாநிலங்கள் தீர்மானங்களை நிறைவேற்றி பயனில்லை என்பதால்…

    • 6 replies
    • 1.3k views
  5. 09 ஜூன் 2011 யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய்ப் பகுதியில் பாடசாலைச் சிறுவன் ஒருவன் நேற்றுக் காலைமுதல் காணாமல்ப் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 12 வயதுடைய பரமநாதன் ரஜிராம் என்ற சிறுவனே காணாமல் போயுள்ளான். மாகியம்பிட்டியிலுள்ள வீட்டிலிருந்து சண்டிலிப்பாய்ப் பகுதியிலுள்ள பாடசாலைக்கென நேற்றுக்காலை 7.30 மணியளவில் புறப்பட்டுச் சென்றுள்ளான். குறித்த சிறுவன் தொடர்பாக எந்தவித தகவலும் இல்லாதிருப்பதாகக் குடும்பத்தினர் கூறுகின்றனர். சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக இவ்வாறு சிறார்கள் காணாமல் போவது தொடர்பான தகவல்கள் தொடர்ச்சியாக வெளிவந்தவண்ணமே இருக்கின்றது. இதனிடையே அண்மையில் கிழக்கு மாகாணத்தில் 2007ம் ஆண்டு காலப்பகுத…

  6. Friday, June 10, 2011, 0:46சிறீலங்கா கிளிநொச்சி மாவட்டம் உருத்திரபுரம், தர்மபுரம் பிரதேசங்களில் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் நேற்றிரவு பாரிய தேடுதல் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்று அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீளக் குடியமர்த்தப்பட்ட இந்தப் பிரதேசங்களில் வெளி மாட்டங்களை சேர்ந்த இளைஞர் யுவதிகள் குடியேறியுள்ளனரா என்பது குறித்து அறிந்து கொள்வதற்காகவே படையினர் தேடுதல் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. குடும்ப விபரங்களை அறிந்து கொண்ட படையினர் புதியவர்கள் எவரையும் வீட்டில் வைத்திருக்க வேண்டாம் என்றும் வீடு வாடகைக்கு கொடுப்பதாயின் அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்…

  7. புதிய பாணியில் இராணுவ குடும்பப்பதிவு நடைமுறை யாழ் மாவட்டத்தில் சிவில் உடையில் வரும் இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று புதிய முறையில் இராணுவபப் பதிவுகளை மேற்கொள்வதனாலும், வீட்லுள்ளவர்களை வித்தியாசமான கோணங்களில் விசாரணை செய்து வருவதனாலும் மக்கள் மத்தியில் பீதியும் பதற்றமுமானதொரு நிலை காணப்படுகின்றது. இராணுவத்தினர் வீட்டில் உள்ளவர்களை குடும்பமாக புகைப்படம் எடுப்பதுடன் தனித்தனியாகவும் குடும்ப உறுப்பினர்களைப் புகைப்படம் எடுத்து வருகின்றார்கள். இன்று உடுவில், தெல்லிப்பளை, கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள சில பகுதிகளில் இத்தகைய நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளன. இது சம்பந்தமாக யாழ் மாவட்டத்தின் நிர்வாகத்திற்குப் பொறுப்பாக இருக்கும் யாழ் மாவட்ட அரச அதிபரோ அன்றி ய…

    • 0 replies
    • 671 views
  8. . [Thursday, 2011-06-09 05:56:38] நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்வுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான மூன்றாவது அமர்வு கடந்த சில நாட்களில் இடம்பெற்றுள்ளதாக 'குறித்த' சில ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி உண்மைக்கு புறம்பானவை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவித்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில், தாங்களாகவே உறுப்பினர் உரிமையை இழந்தவர்களது வெற்றிடங்கள் நிரப்பப்பட்ட பின்னர், மூன்றாவது அமர்வு தொடர்பான உத்தியோகபூர்வக் அறிவித்தல் உரியவழிமுறையில் அனைத்து தமிழ் மக்களுக்கும் அறியத்தரப்படும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரனால் வெளியிடப்…

  9. Thursday, June 9, 2011, 17:56சிறீலங்கா யுத்த வெற்றியாளரான சரத் பொன்சேகாவை வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைத்து வைத்துள்ள அரசாங்கம் சர்வதேச பொலிஸாரினால் தேடப்படும் நபரான கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனை எந்தச் சட்டத்தின் கீழ் பாதுகாத்து வருகிறதென ஐ.தே.கட்சி எம்.பி.யான ஜோசப் மைக்கல் பெரேரா நேற்று புதன்கிழமை சபையில் கேள்வி எழுப்பினார். நாட்டில் அவசரகாலச்சட்டம் அமுலில் உள்ள நிலையில் கே.பி.யை எவ்வாறு பாதுகாக்க முடியுமென்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜோசப் மைக்கல் பெரேரா எம்.பி. இதனைத் தெரிவித்தார். சபையில் அவர் தொடர்நது உரையாற்றுகையில், அரசாங்…

  10. கச்சத்தீவு தொடர்பான ஜெ. தொடர்ந்த வழக்கில் வருவாய்த்துறையை சேர்க்க சட்டசபையில் தீர்மானம். சென்னை: கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று கோரி அதிமுக பொதுச் செயலாளராக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்துள்ள வழக்கில் தமிழக அரசின் வருவாய்த்துறையையும் சேர்க்க வேண்டும் என்று கோரி தமிழக சட்டசபையில் இன்று முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்து உரை நிகழ்த்தினார். அவர் ஆற்றிய உரையின் முழு விவரம்: தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கச்சத்தீவினை, 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தங்களின் மூலம் இலங்கைக்கு தாரை வார்த்ததை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி உச்ச நீ…

  11. [ வியாழக்கிழமை, 09 யூன் 2011, 13:00 GMT ] [ நித்தியபாரதி ] இந்தியாவின் ஆதரவைப் பெறும் முயற்சியில் மகிந்த ராஜபக்ச ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில், மே 30 அன்று, ஆர்ப்பாட்டப் பேரணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீது சிறிலங்கா காவற்துறையினர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு அதில் ஒருவர் கொல்லப்பட்டும், பலர் காயமடைந்த சம்பவமானது மகிந்தவின் அரசாங்கம் அது நாள் வரையில் ஓரளவு பேணிப் பாதுகாத்திருந்த ஒட்டு மொத்த கௌரவத்திற்கும் பாரிய இழுக்கு ஏற்பட வழிவகுத்தது. இவ்வாறு மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவை தளமாகக்கொண்ட The Saudi Gazette என்னும் ஊடகத்தில் Feizal Samath சிறிலங்கா பற்றி எழுதியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத…

    • 1 reply
    • 1k views
  12. Thursday, June 9, 2011, 18:48சிறீலங்கா கிளிநொச்சி, வட்டக்கச்சி மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மேசை, கதிரை போன்ற தளபாடங்கள் இல்லாததால் நிலத்தில் இருந்து கற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் இந்தப் பாடசாலையில் மாணவர்கள் கற்பதற்குத் தேவையான வகுப்பறைக் கட் டடங்களும் போதியளவு இல் லாத நிலை காணப்படுகின்றது. இதனால் மாணவர்கள் மரநிழலின் கீழ் இருந்து கற்க வேண்டிய அவலநிலையும் காணப்படுகின்றது. இந்தப் பாடசாலையில் தரம் 01 தொடக்கம் தரம் 13 வரையான வகுப்புக்கள் நடைபெறுகின்றன. உயர்தரத்தில் கணிதம், விஞ்ஞானம், கலை, வர்த்தகப் பிரிவுகளைக் கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னணிப் பாடசாலைகளில் இதுவும் ஒன்றாகும். இந்தப் பாடசாலையில் 700 இற்கும் மேற்பட்ட மாணவர்கள…

  13. Thursday, June 9, 2011, 18:05சிறீலங்கா வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது இருதரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை உறுதிப்படுத்துவதற்கான காத்திரமான நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணைக்குழு மேற்கொள்ளவேண்டும் என மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 17-வது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற நிலையில் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளது. இது குறித்து மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு, இலங…

  14. [Thursday, 2011-06-09 12:48:14] போலியான தேசப்பற்றையும், ஏகாதிபத்திய எதிர்ப்பையும் அரசாங்கம் வெளிக்காட்டுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் ரில்வின் சில்வா தெரிவிக்கின்றார். காலியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார். எனினும், உண்மையிலேயே ஏகாதிபத்தியவாதிகளிடம் மண்டியிட்டு, இந்தியாவிடம் மண்டியிட்டு அந்த நாடுகளுக்கு தேவையான வகையில் நாட்டின் அரசியல் பொருளாதார கொள்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ரில்வில் சில்வா குற்றஞ்சாட்டினார். இந்த அரசாங்கம் ஜனநாயகத்தை பாதுகாக்காது, ஏகாதிபத்திய கொள்கைகள் காரணமாக தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யாமல், அவசரகால சட்டத்தை நீக்காமல், மனித உரிமைகளை பாது…

  15. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’ஈழத் தமிழினத்தை திட்டமிட்டு இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை போர்க் குற்றவாளி என்றும், தமிழின அழிப்பில் ஈடுபட்டு வரும் அந்நாட்டிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருப்பதை நாம் தமிழர் கட்சி மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. சம உரிமையுடைய வாழ்வைப் பெறுவதற்காக கடந்த அரை நூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாக போராடி வரும் ஈழத் தமிழினத்தின் விடுதலை வரலாற்றில் தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் ஒரு திருப்புமுனையாகும். 3-வது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள…

  16. தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் சந்தித்து பேசினார். இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குறித்து முதல்வருடன் சிவசங்கர் மேனன் ஆலோசித்ததாக தகவல் வருகிறது. இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் மேற்கொண்ட போரில் அப்பாவித் தமிழர்கள் பலர் கொல்லப்பட்டனர். இலங்கை ராணுவத்தினரால் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கானோர் பல்வேறு விதங்களில் மனித உரிமை மீறலுக்கு உட்படுத்தப்பட்டு போர் குற்றம் புரிந்ததாக ஐ.நா. சபை அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன், வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ், பாதுகாப்பு செயலாளர் பிரதீப் குமார் ஆகியோ…

  17. கொக்கச்சான்குளம் தமிழ் கிராமம் கலாபோவசேவ என பெயர் மாற்றம்- 165 சிங்கள குடும்பங்கள் குடியேற்றம்! Thursday, June 9, 2011, 18:26 தமிழீழம், முதன்மைச்செய்திகள் நெடுங்கேணி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட வெடிவைத்தகல்லு கிராமசேவை அலுவலர் பிரிவைச்சேர்ந்த கொக்கச்சான்குளம் என்ற தமிழ் கிராமம் இன்று கலாபோவசேவ என்ற சிங்களகிராமமாக மாறியுள்ளது என வன்னிமாவட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேற்று நாடாளுமன்றத்தில் பேசும் போது தெரிவித்தார். செழிப்பு மிக்க வயல் நிலங்களை உள்ளடக்கிய கொக்கச்சான்குளம் கிராமத்தில் இன்று சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்.வவுனியா சேமமடு வழியாக ஊத்துக்குளம் சென்று அரியகுண்டான் கிராமம் அருகே அமைந்துள்ள …

  18. அரசுடன் சேரும் நோக்கம் இல்லை - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதராகலிங்கம் மலையக, மற்றும் முஸ்லீம் அரசியல்வாதிகள் போன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி அரசாங்கத்துடன் சேரும் நோக்கம் எதுவும் தம்மிடம் இல்லையென கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோதராகலிங்கம் தெரிவித்தார். கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்றுபேர் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக பொறுப்பற்ற சில இணையத்தளங்கள் வெளியிட்ட செய்திகளை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உதயன் ஏடு பிரசுரித்தமைக்கு கண்டனம் வெளியிட்ட அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் செய்திகளுக்கு இடமளிக்க வேண்டாமெனக் கோரிக்கை விடுத்தார். அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத…

    • 0 replies
    • 608 views
  19. Posted by சோபிதா on 09/06/2011 in செய்தி யூன் 14ம் திகதி லண்டன் சனல்4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பவுள்ள இலங்கையில் கொலைக்களம் என்ற தொகுப்பு காண்பிக்கப்படல் வேண்டுமா? காண்பிக்கப்படக்கூடாதா? என்ற வாதம் பிபிசி வானொலியில் நேற்று நடைபெற்றுள்ளது. இவ்வாதத்தில் இக் காணொளித் தொகுப்பினை தயாரித்து வெளியிடும் ஊடகவியலாளர்கள் பங்கெடுத்தனர். இப்படியான கொலைகள் இனிமேல் உலகின் எந்த ஊடகங்களிலும் வெளிவராமல் இருக்க வேண்டுமாயின் இந்த தொகுப்பு காண்பிக்கப்படல் வேண்டும் என இவர்கள் வலியுறுத்தினார்கள். மேலும் இவை காண்பிக்கப்படாது போனால் இலங்கை அரசும், இதுபோன்ற சம்பவங்களைச் செய்பவர்களும், இப்படியான சம்பவங்கள் நடைபெறவில்லை என்றே கருத்து வெளியிடுவார்கள் என்றும் கருத்துத் தெரிவித்தார்கள். இந்த…

    • 1 reply
    • 611 views
  20. யுத்த குற்றம் புரிந்த இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்பட வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு கனேடிய தமிழ் காங்கிரஸ் தமது வரவேற்பினை தெரிவித்துள்ளது என சர்வதேச ஊடகங்களில் செய்திவெளியாகியுள்ளது. சர்வதேச நாடுகள் விதித்து வருகின்ற தடையினை போன்று இந்திய அரசும் இலங்கை அரசுக்கு பொருளாதார தடை விதித்து சர்வதேச நாடுகளுடன் இணைந்து கொள்ள வேண்டும் என டொரன்டோவை தளமாக கொண்ட கனேடிய தமிழ் காங்கிரஸின் இலங்கைப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் ஓங்கிக் குரல் எழுப்பியுள்ளமையானது, அவர் செயற்பாட்டு பெண் என்பதனை உணர்த்துவதாக கனேடிய தமிழ் காங்கிரஸ் தேசிய பேச்சாளர் டேவிட் பூபாலப்பிள்ளை தெரிவித்…

  21. 09 ஜூன் 2011 அரசாங்கம், மக்களை அமைதியாக வாழ்வதற்கு இடமளிக்கவில்லை.. அமெரிக்க கடவுச் சீட்டை உடைய அரசாங்கத்தின் உயரதிகாரியொருவர் நாட்டை இராணுவ மயப்படுத்த முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். குறித்த அதிகாரி, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் போன்று சிந்திப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் பல பகுதிகளும் இராணுவ மயப்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக மாத்தறை மாவட்டம் அரசாங்கத்தின் திட்டங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் நிறைவடைந்து இரண்டு ஆண்டுகள் பூர்த்தியடைந்த போதிலும் அரசாங்கம், மக்களை அமைதியாக வாழ்வதற்கு இடமளிக்கவில்லை என அவ…

  22. Posted by சோபிதா on 09/06/2011 in செய்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தின்போது விதவைகளாக்கப்பட்ட தமிழ்ப் பெண்களின் எண்ணிக்கைகையைக் கூற முடியாத நிலையில் கால அவகாசம் கேட்டுள்ளனர் அமைச்சர்கள். அம்பாந்தோட்டை மாவட்ட ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினரான சஜித் பிரேமதாஸ நேற்று நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சரிடமே மேற்படி கேள்வியைக் கேட்டிருந்தார். நாடாளுமன்றம் நேற்றுப் பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. வழமைபோல் வாய்மூல விடைக்கான கேள்விக்கான பதில் அளிக்கும் நேரத்தில் சில சுவாரஸ்யமான கேள்வி பதில்களும் இடம்பெற்றன. இதன்போது யுத்தம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. வெற்…

  23. Posted by சோபிதா on 09/06/2011 in செய்தி ஐ.நா.பொதுச் செயலாளராக இரண்டாவது தடவையாக பான் கீ மூன் தெரிவுசெய்யப்படுவதற்கு இலங்கை அரசாங்கம் ஆதரவளிக்க முன்வந்துள்ள நிலையில் இலங்கையின் போர்க்குற்ற விவகாரம் தொடர்பாக பான் கீ மூன் மெளனம் சாதிப்பதாக இன்னர்சிற்றி பிரஸ் சந்தேகம் வெளியிட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக இன்னர் சிற்றி பிரஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த 40 நாட்களாக இலங்கை விவகாரத்தில் ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கீ மூன் எவ்வித மீளாய்வு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. இலங்கை மனித உரிமைகள் மற்றும் இறுதிக் கட்டப் போர் விவகாரங்களுக்கான பொறுப்புக் கூறும் நடவடிக்கைகள் தொடர்பான நிபுணர்குழு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய ஐ.நாவி…

  24. Posted by சோபிதா on 09/06/2011 in செய்தி இலங்கையில் உள்ள வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த பெறுமதியான நிலங்களைக் கண்டறிய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சே நியமித்த 20 பேர் கொண்ட குழு, அது தொடர்பான அறிக்கையை பாதுகாப்புச் செயலாளரிடம் வழங்கியுள்ளது. இந்த காணிகள் அனைத்தையும் அரசாங்கம் கையகப்படுத்த உள்ளதுடன், காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொழும்பு,களுத்துறை, மாத்தறை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள காணிகளே இவ்வாறு கையகப்படுத்தப்பட உள்ளன. பாதுகாப்புச் செயலாளர் நியமித்த குழு 15 ஆயிரம் ஏக்கர் தொடர்பான தகவல்களை தமது அறிக்கையில் உள்ளடக்கியுள்ளது. source:Eelam press.

  25. மத்திய அரசை உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி டெல்லியில் முதல்வர் ஜெயலலிதா முகாமிட்டு வலியுறுத்த வேண்டும் என திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் கோரிக்கை விடுத்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்று லட்சம் தமிழர்களின் உயிரிழப்பும் நாற்பதாயிரம் போராளிகளின் முப்பது ஆண்டுகளுக்கு மேலான போராட்டமும் வீணாகிப் போனதே என தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தவித்திருந்த வேளையில், ஐ.நா.சபை விசாரணைக் குழுவின் போர்க்குற்ற அற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.