Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சென்னை சேத்துப்பட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கை தொழிலதிபரின் மனைவியும், 2 மகள்களும் தீப்பிடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இலங்கை தொழிலதிபரும் அவருடைய இன்னொரு மகளும் பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சென்னை சேத்துப்பட்டு ஸ்பர்டாங் சாலையில் உள்ள லாமக் அவென்யூவில், ராயல் என்கிளேவ் என்ற பெயரில் புதிதாக 3 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு உள்ளது. இந்தக் குடியிருப்பில் 7 வீடுகள் இருக்கின்றன. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் பெங்களூருவில் வசிக்கிறார். இந்தக் குடியிருப்பில் உள்ள வீடுகள் மிகவும் ஆடம்பரமானவை ஆகும். ஏழு வீடுகளில் 4 வீடுகளுக்கு மட்டும் மாதம் ரூ.50 ஆயிரம் வாடகை கொடுத்து 4 குடும்பத்தினர் வ…

  2. Sunday Leader Interview in Tamil. பேராசிரியர். றோகான் குணரத்ன சர்வதேச பயங்கரவாதம் பற்றிய விடயத்தில் ஒரு புகழ்பெற்ற நிபுணராக பெயர் பெற்றுள்ளார். அல் - கைதா மற்றும் எல்.ரீ.ரீ.ஈ என்பன பற்றி பல புத்தகங்களை எழுதியுள்ளதுடன், சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் உள்ள அரசியல் வன்முறைகள் மற்றும் பயங்கரவாதம் பற்றிய ஆராய்ச்சிகளுக்கான சர்வதேச நிலையத்தின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இந்த வாரம் அவர் கொழும்பில் பாதுகாப்பு அமைச்சு ஏற்பாடு செய்திருந்த “பயங்கரவாதத்தை தோற்கடித்ததில் ஸ்ரீலங்காவின் அனுபவங்கள் என்கிற தொனிப் பொருளிலமைந்த கருத்தரங்கில் கலந்து கொண்டிருந்தார். மே 31 முதல் ஜூன் 2 வரை கொழும்பில் நடைபெற்ற அந்தக் கருத்தரங்கில் பேராசிரியர். றோகான் க…

  3. இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்கக்கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்: வைகோ வரவேற்பு இலங்கை மீது மத்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையில் ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள அரசு மீது, ஐ.நா. சபை போர்க் குற்றவாளி என்று அறிவித்து, விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதற்கு இந்திய அரசு ஐ.நா. சபையை வற்புறுத்த வேண்டும் என்றும், மேலும் தமிழர்களுக்கு சிங்கள அரசு துன்பம் விளைவிப்பதைத் தடுக்கவும் தமிழர்களுக்குப் பாதுகாப்பான நிலை ஏற்படுத்தவும் இலங்கை அரசு மீது பிற நாடுகளோடு சேர்ந்து இந்…

  4. Monday, June 6, 2011, 22:58சிறீலங்கா விடுதலைப்புலிகள் தற்போது தமது ஆயுத நடவடிக்கைகளை கைவிட்டுள்ளனர் எனவே அவர்கள் மீது தொடரப்படும் தடை அவசியமற்றது என அம்ஸ்ரடாம் நாட்டை தளமாகக் கொண்ட போகெல் சட்டவாளர் குழுவின் சட்டவாளர் விக்டர் கோப் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள தமிழ் மக்கள் சார்பில் விடுதலைப்புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை எதிர்த்து கடந்த வியாழக்கிழமை (02) அவர் மேற்கொண்ட வாதத்தின் போதே இந்த கருத்துக்களை அவர் முன்வைத்துள்ளார். முள்ளிவாய்க்காலின் பின்னர் விடுதலைப்புலிகள் தமது ஆயுதச் செயற்பாடுகளை நிறுத்திக்கொண்டுள்ளனர். தமிழ் மக்களின் அரசியல் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அரசியல் வழிகளிலும், வன்முறைகள் அற்ற போராட்டங்களிலுமே அவர்கள் ஈடுபடுகின்றன…

  5. 08 ஜூன் 2011 சிவசக்தி ஆனந்தன் 08.06.2011 புதன்கிழமை அன்று இலங்கை அரசாங்கத்தின்மீது பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும் என்று இந்திய மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் ஒருமனதாகத் தீர்மானம் இயற்றப்பட்டதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவிற்கு பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வாழ்த்தையும் பாராட்டுதல்களையும் தெரிவித்தார். அவசரகாலச் சட்டத்தை நீட்டிப்பதற்கான பிரேரணையின்மீது நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு அதற்கு எதிராக உரையாற்றும்போதே அவர் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொண்டார். அப்பொழுது அவர் மேலும் கூறியதாவது: இந்த நாடாளுமன்றம் இ…

  6. கே.பியால் சர்வதேச பொலிஸாரிடம் சிக்கித்தவிக்கும் இலங்கை ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேசத்தின் அழுத்தங்களை எதிர்கொள்வதற்கு இந்தியாவின் உதவியினை இலங்கை அரசு எதிர்பார்த்திருக்கிறது. இதற்கு வலு சேர்ப்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்களின் ஒருவரான கே.பி.யை அரசு பயன்படுத்தி அனுதாபம் தேட முற்படுகிறது. அண்மையில் கே.பி. நேர்காணல் ஒன்றில் ராஜிவ்காந்தியின் கொலை தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். இக்கருத்து இந்தியாவின் அனுதாபத்தினை பெறுவதற்காக இலங்கை அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தபோதிலும், கே.பி.யின் அக்கருத்தினால் இப்போது இலங…

  7. இராஜபக்க்ஷே மீது போர்க்குற்றவாளி என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்க இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும், இந்தியா இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும் என்றும், தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானம் தமிழர்களின் ஒருமித்த உணர்வைப் பிரதிபலிக்கிறது, இந்தத் தீர்மானத்தை தமிழக முதல்வரே முன் மொழிந்து ஒருமனதாக நிறைவேற்றச் செய்ததை பெரியார் திராவிடர் கழகம் பாராட்டி வரவேற்கிறது. ஈழத்தமிழர் பிரச்சனையில் சரியான பார்வையோடு தமிழக முதல்வர் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது உலகம் முழுதும் வாழும் தமிழர்களுக்கு உவப்பான நம்பிக்கையூட்டும் செய்தியாகும்,. தமிழ்நாட்டு சிறப்புமுகாம்களில் பலஆண்டுகளாக விசாரணை ஏதும்இன்றி அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்கள் தங்களை உறவினர்களுடன் …

  8. Thursday, June 9, 2011, 0:08சிறீலங்கா கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டது முதல் இன்றுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 300 இளைஞர், யுவதிகள் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா இன்று சிறிலங்கா நாடாளுமன்றில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இத்தகவலை தெரிவித்தார்.கடந்த மாதம் மாத்திரம் மட்டக்களப்பில் நான்கு கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இரண்டு இடம்பெற்றுள்ளன. விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக அரசாங்கமே அறிவித்திருக்கிறது. இந்நி…

  9. [Wednesday, 2011-06-08 16:01:57] அவசரகா சட்டம் மேலும் ஒரு மாதகாலத்திற்கு பாராளுமன்றத்தால் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது 97 மேலதிக வாக்குகளால் இம்முறை அவசரகால சட்டம் நீடிக்கப்பட்டது. அவசரகால சட்டத்திற்கு ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக 22 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனநாயக தேசிய முன்னணி ஆகியன அவசரகால சட்டத்திற்கு எதிராக வாக்களித்தன. source:seithy.

  10. Posted by சோபிதா on 08/06/2011 in செய்தி சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நாவின் நிபுணர் குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு எதிராக அறிக்கையை அல்லது கண்டனத்தை வெளியிடுமாறு நாம் எந்த ஒரு நாட்டையும் கோரவில்லை என சிறீலங்காவில் வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரீஸ் தெரிவித்துள்ளார். சிறீலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று (07) இடம்பெற்ற விவாத்தில் பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தேவை ஏற்படும்போது உதவிகளை பெறுவதற்காகவே நான் இந்தியா சென்றிருந்தேன். ஐ.நா அறிக்கைக்கு எதிராக கண்டனத்தை வெளியிடுமாறு இந்தியாவுக்கு கோரிக்கை விடுப்பதற்காக நான் அங்கு செல்லவில்லை. ஐ.நா அறிக்கைக்கு எதிரான கண்டனங்களை வெளியிடும…

  11. யூன் 14ம் திகதி லண்டன் சனல்4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பவுள்ள இலங்கையில் கொலைக்களம் என்ற தொகுப்பு காண்பிக்கப்படல் வேண்டுமா? காண்பிக்கப்படக்கூடாதா? என்ற வாதம் பிபிசி வானொலியில் இன்று நடைபெற்றுள்ளது. இவ்வாதத்தில் இக்காணொலித் தொகுப்பினை தயாரித்து வெளியிடும் ஊடகவியலாளர்கள் பங்கெடுத்தனர். இப்படியான கொலைகள் இனிமேல் உலகின் எந்த ஊடகங்களிலும் வெளிவராமல் இருக்க வேண்டுமாயின் இந்த தொகுப்பு காண்பிக்கப்படல் வேண்டும் என இவர்கள் வலியுறுத்தினார்கள். மேலும் இவை காண்பிக்கப்படாது போனால் இலங்கை அரசும், இதுபோன்ற சம்பவங்களைச் செய்பவர்களும், இப்படியான சம்பவங்கள் நடைபெறவில்லை என்றே கருத்து வெளியிடுவார்கள் என்றும் கருத்துத் தெரிவித்தார்கள். இந்த தொகுப்பை பலர் பார்ப்பதை தவிர்த்துக் கொள்ளவார…

  12. Posted by குணா on 08/06/2011 in செய்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை (03-06-2011) பாரிஸ் புறநகர்ப் பகுதியான நந்தேரில் ஆரம்பமாகியது. தொடர்ந்து மூன்று நாட்கள் இடம்பெற்ற இந்த அமர்வில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஜனநாயகவாதிகளால் கூட்டப்பட்ட இந்த அமர்வில் அவுஸ்திரேலிய, ஐரோப்பிய மற்றும் வட அமரிக்க மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த அமர்வில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான யாப்பு விவாதிக்கப்பட்டு, பல திருத்தங்கள் உள்வாங்கப்பட்டு ஏகமனதாக அவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அத்துடன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான அவைத்தலைவர், ஆட்சிக்குழு மற்றும் நிறைவேற்றுக்குழுக்களுக்கான தெரிவுகள…

  13. இந்திய - இலங்கை காங்கேசன்துறை கடல் எல்லையில் 19 ஆவது கடல் எல்லைச் சந்திப்பு இலங்கை கடற்படையினருக்கும் இந்திய கடற்படையினருக்கும் இடையில் நேற்று சயூரா படகில் இடம்பெற்றுள்ளது . இலங்கை கடற்படை சார்பில் வடக்கு பிராந்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ரவிந்திர விஜேகுணரட்ன தலைமையிலான குழுவினரும், இந்திய சார்பில் தமிழ்நாடு கடற்படை கட்டளைத் தளபதி ராஜீவ் கிரோட்ரேயும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். நாடுகளுக்கிடையிலான கடற்படை உறவினை விருத்தி செய்து கொள்ள இவ்வாறான சந்திப்பு வருடத்துக்கு ஒருமுறை இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பின் போது மன்னார் கடற்பரப்பிலும் மற்றும் பாக்குநீரிணை தொடர்பிலும் மீன்பிடி நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. …

  14. [ புதன்கிழமை, 08 யூன் 2011, 00:27 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] உயர்மட்ட இந்திய அதிகாரிகள் குழு எதிர்வரும் வெள்ளிக்கிழமை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளிவிவகாரச் செயலர் நிருபமா ராவ், பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் ஆகியோரைக் கொண்ட குழுவே வெள்ளியன்று கொழும்பு வரவுள்ளது. இரண்டு நாட்கள் கொழும்பில் தங்கியிருக்கும் இந்தக் குழுவினர் இருதரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுக்களை நடத்தவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட இந்திய – சிறிலங்கா கூட்டறிக்கையின் அடிப்படையில் அரசியல் தீர்வு மற்றும் இந்தியாவின் திட்டங்களை துரித…

  15. Posted by சோபிதா on 08/06/2011 in பிரதான செய்தி விடுதலைப்புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்துவரும் தடைக்கு எதிராக விடுதலைப்புலிகள் சார்பில் மேற்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணைகளை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான அறிவித்தலை லக்ஸம்பேர்க்கை தளமாகக் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப்புலிகளின் சார்பில் வாதாடும் அம்ஸ்ரடாமை தளமாகக் சட்டவாளர் விக்டர் கோப்புக்கு நேற்று (07) அனுப்பியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இந்த வழக்கு ( வழக்கு இலக்கம்: T-208/11-9) நீதிமன்றத்தின் இரண்டாவது சபையில் நடைபெறவுள்ளதாக நீதிமன்றத்தின் பதிவாளர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்த…

  16. Posted by குணா on 08/06/2011 in செய்தி தமிழினப் படுகொலை செய்த சிறிலங்க அதிபர் ராஜபக்சவை போர்க் குற்றவாளியென்றும், சிறிலங்க அரசிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு நன்றி தெரிவித்தும் நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை. ஈழத் தமிழினத்தை திட்டமிட்டு இனப் படுகொலை செய்த சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவை போர்க் குற்றவாளி என்றும், இன்றளவும் தமிழின அழிப்பில் ஈடுபட்டுவரும் அந்நாட்டிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதை நாம் தமிழர் கட்சி மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. சிங்கள பெளத்த இனவாத அரசின் …

  17. இலங்கை மீது மத்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார் முதல்வர் ஜெயலலிதா. இதனால் பழ. நெடுமாறன் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’ராஜபக்சே போர்க் குற்றவாளி என ஐ.நா. விசாரணைக் குழு அளித்தப் பரிந்துரையை ஏற்று சர்வதேச நீதிமன்றம் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை நடவடிக்கைகளை எடுக்கவும் இந்திய அரசு முன் வரவேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்து நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை வரவேற்பதோடு அவரை மனப்பூர்வமாகப் பாராட்டுகிறேன். ஆறரைக் கோடி தமிழ் மக்களின் பிரதிநிதித்துவ அமைப்பா…

  18. Posted by சோபிதா on 08/06/2011 in செய்தி சணல்4 தொலைக்காட்சியினால் ஒளிபரப்பு செய்து காட்டப்பட்ட கொலைக்களம் எனும் ஒளிப்பேளை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையர் நவ நீதம் பிள்ளை அவர்கள் உத்தியோகப்பற்றற்ற கூட்டங்களை நாடுகளுடன் நடாத்தி வருகின்றார். .மனித உரிமை சபையில் இந்த போர்க்குற்றம் தொடர்பில் விவாதிக்க வேண்டும் சர்வதேச விசாரணை ஒன்றிற்கான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என்பதே நவ நீதம் பிள்ளையின் கருத்தாக உள்ளது. . ஆனால் சில நாடுகளுக்கு முடிவு எடுப்பது பற்றி தளம்பல்கள் இருக்கின்றன. முக்கியமாக மணி கட்டுவது யார்|? இதில் பெரும்பாலும் அமெரிக்காவின் நிலைப்பாட்டினை பலர் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அமெரிக்காவோ தமக்குள் வாக்குவாதபட்டுக்கொண்டிருக்கின்றது. . அம…

  19. [ புதன்கிழமை, 08 யூன் 2011, 00:40 GMT ] [ தா.அருணாசலம் ] சிறிலங்கா அரசுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்களின் முடிவு எவ்வாறானதாக இருக்கும் என்பதை இப்போதே கணித்து விட முடியாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஜேவிபி உறுப்பினர் அனுரகுமார திசநாயக்கவின் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு சந்தேகம் வெளியிட்டுள்ளார். “சிறிலங்கா அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈபிடிபியுடன் பேச்சுக்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்தப் பேச்சுக்களின் மூலம் உருப்படியான தீர்வுகளை எட்டவே முற்படுகிறோம். அரசியலமைப்பில் திருத்தங்களைக் கொண்டு வர வேண்டுமானால் அத…

    • 1 reply
    • 495 views
  20. [ புதன்கிழமை, 08 யூன் 2011, 00:12 GMT ] கொழும்பிலுள்ள ரஸ்யத் தூதுவர் விளாடிமிர் மிக்கெலோவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று சந்தித்துப் பேசியுள்ளது. நேற்று முன்தினம் கொழும்பிலுள்ள ரஸ்யத் தூதரகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது மகிந்த ராஜபக்ச அரசுக்கான ஆதரவை ரஸ்யா விலக்கிக் கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. புலம்பெயர் தமிழர்கள் சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பரப்புரைகளை மேற்கோண்டு வரும் நிலையில், சிறிலங்கா அரசுக்கு ஆதரவளித்து வரும் ரஸ்யாவிடம் தமிழ்த் தேசியக் கூட…

  21. orkflow: Public வவுனியா நிருபர் புதன்கிழமை, யூன் 8, 2011 பான் கி மூனின் இரண்டாம் பதவிக்காலத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. ஒரு மாதிரி பான் கி மூனின் அடுத்த பதவிக்காலம் உறுதியாக்கபட்டு வருகின்றது. இந்தியாவிற்கும் பான் கி மூன் இற்குமான நெருக்கமான உறவை நம்பியார் அவர்களே மேற்கொண்டு வருகின்றார். முள்ளிவாய்க்காலில் இந்தியாவின் சொற்படி ஆடிய பான் கி மூனிற்கு இப்போ இந்தியா நல்ல கைமாறுதலை செய்துள்ளது. . நேற்று முந்தினம் நியூயோர்க்கில் நடந்த ஆசிய குழுவினுடனான சந்திப்பிலேயே இந்தியா தனது ஆதரவினை உறுதிப்படுத்தியுள்ளது. ஈழ நாதம்

  22. கொச்சியிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமா செல்லமுற்பட்ட இலங்கை குழுவினரை நகர பொலிஸார் நேற்று தடுத்து நிறுத்தியுள்ளனர் என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. குறித்த இலங்கை குழுவில் 2 சிறுவர்கள் உட்பட 11 பேர் அடங்குவதாகவும், இவர்கள் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல 1 மாதத்தின் முன்பே இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இவர்கள் கொச்சி மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் விமானம் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://akkinikkunchu.com/new/

  23. 08 ஜூன் 2011 மஹிந்தவின் கட்டுக்கதை -திசாராணி குணசேகர. தமிழில் குளோபல் தமிழ்ச்செய்திகள் : '..... பெரிய பொய்யொன்றில் எப்போதுமே குறிப்பிடத்தக்களவிலான நம்பகத்தன்மையின் வலு இருக்கும்.' ஹிட்லர் (எனது போராட்டம்) 'வரலாற்றை நான் தான் எழுதுவேன் என்பதால் வரலாறு உங்களை தவறாகத் தான் காணும் - 1930களில் மக்களவையில் நிகழ்ந்த வாதப் பிரதிவாதங்களின் போது பிரித்தானியப் பிரதமர் ஸ்ரான்சி போல்ட்வின்னுக்கு வின்ஸ்ரன் சேர்ச்சில் கூறியதாகக் கூறப்படுவது. ஸ்ரீலங்காவிலே ஈழப் போரின் வரலாறு அதில் வெற்றியாளர் ஆகிவிட்ட ராஜபக்ஷ சகோதரர்களால் எழுதப்படுகிறது. (மீள எழுதப்படுகிறது.) இந்த 'வெற்றியாளர் எழுதும் வரலாறு,' சிங்கள மேலாண்மை ரீதியானதும் ராஜபக்ஷ மேலாண்மை ரீதியானதுமான ஒரு கதை கூறல…

  24. [ புதன்கிழமை, 08 யூன் 2011, 04:49 GMT ] [ அ.எழிலரசன் ] ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது அரசின் மீது அனைத்துலக போர்க்குற்ற விசாரணை நடத்தக் கோரும் தீர்மானம் ஒன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வரப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று நண்பகல் இந்தத் தீர்மானத்தைத் கொண்டு வரும் முயற்சிகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக சென்னைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏகமனதாக இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றி இந்திய மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. நேற்றைய சட்டமன்ற கூட்டத்தில் உரையாற்றிய இந்திய கம்னியூனிஸ்ட் கட்சி உறுப்பினர் குணசேகரன், மகிந்த ராஜபக்சவை தண்டிக்கக் கோரும் தீ…

  25. சிறிலங்கா அரசின் திறைசேரியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 17 தொன் தங்கம் சவூதி அரேபியாவைச் சேர்ந்த சேக் முகம்மத் என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. . இவ்வாறு ஒரு கிலோ தங்கம் 4"475"000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதன் மூலம் சிறிலங்கா ஜனாதிபதியின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸவுக்கு 25 கோடி ரூபா தரகுப் பணம் கிடைத்துள்ளதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. . இதன்படி ஒரு கிலோ தங்கத்துக்கு அமெரிக்க டாலர்கள் 150 (சராசரியாக 15,000 ரூபா) என்ற விகிதத்தில் 17 தொன் தங்கத்துக்குமாக 25 கோடி ரூபா (2"55"000"000) தரகுப் பணம் வழங்கப்பட்டுள்ளது. . சவூதி அரேபிய கோடீஸ்வரரான சேக் முகம்மத் என்பவர் இதற்கான பணத்தை HSBC வங்கியின் மூ…

    • 2 replies
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.