Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்ப்பாணத்துக் கோயில்களில் எல்லாம் இப்போது திருவிழா சீசன். வண்ண மின் விளக்குகள், கச்சேரிகள், காதைப்பிளக்கும் ஒலிபெருக்கிகள், மணிக் கடைகள் என்பவற்றுக்கு இனிப் பஞ்சமிருக் காது. வழமையாகவே இத்தகைய தடல் புடல்களுடன் நடந்தேறுகின்ற திரு விழாக்களை தமது பணச்செருக்கை வெளிப்படுத்த உதவும் நிகழ்வாகவே பெரும்பாலான உபயகாரர்கள் பயன் படுத்துவதுண்டு. முதல்நாள் திருவிழாவை விடவும் தங்களுடைய திருவிழாவை எப்படி வித்தியாசப்படுத்தலாம்? மற்றவர்கள் வியக்கும்படி என்ன செய்யலாம்? என்பதெல்லாம் ரூம் போட்டு யோசித்து அரங்கேற்றுவார்கள். பணம் தண்ணீராய்ச் செலவழிவது பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளமாட்டார்கள். அவர்களுக்குத் தேவையானதெல்லாம் "உன்னை மாதிரி ஒருத்தரும் திருவிழாச் செய்யமுடியாது'' என்ற பெயர்…

  2. Wednesday, June 1, 2011, 12:34 சிறீலங்காவில் நடைபெறும் பாதுகாப்பு படையினரின் மாநாட்டை கனேடிய அரசு புறக்கணித்துள்ளது வரவேற்கத்தக்கது என கனேடிய தமிழ் பேரவையின் பேச்சாளர் டேவிட் பூபாலப்பிள்ளை தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் (30) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறீலங்காவில் நடைபெறும் படைத்துறை மாநாட்டில் கலந்துகொள்வதற்கு கனேடிய அரசு தனது பிரதிநிதிகளை அனுப்பவில்லை. கனடா அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. சுவிற்சலாந்து, அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய ஜனநாயக நாடுகளின் வழியை பின்பற்றி கனடா அரசும் செயற்பட்டுள்ளது போற்றத்தக்கது. சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் காத்திரமான விசாரணைகள் தேவை என…

  3. Wednesday, June 1, 2011, 12:28சிறீலங்கா தமிழ் மக்களிற்கு நீதி கிடைக்க துணை நிற்பேன் என, ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் போர் மேர்பி (Paul Murphy) உறுதியளித்துள்ளார்.பிரித்தானிய தமிழர் பேரவையின் மூத்த உறுப்பினர்கள் டப்ளினிற்கான ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் போர் மேர்பியை நேற்று (31-05-2011) பெல்ஜியத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியபோது அவர் இந்த வாக்குறுதியை வழங்கியிருக்கின்றார். ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கையின் மனித உரிமை விடங்கள் பற்றி பேசப்பட்டன. தமிழ் மக்களின் விடயம் அனைத்துலகின் பார்வைக்கு வருவதற்கு நீண்ட காலம் எடுத்திருப்பதைச் சுட்டிக்காட்டிய போல் மேர்பி, தற்பொழுது முன்னிலைக்கு வந்துள்ள தமிழ் …

  4. Wednesday, June 1, 2011, 12:13இந்தியா, உலகம் 1ம் திகதி புதன்கிழமை ஐரோப்பிய ஒன்றிய நடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வந்திருக்கின்ற மதிமுக பொதுச்செயலாளர் மதிப்புக்குரிய வை. கோபாலசாமி அவர்கள் இன்று காலை பெல்ஐயத்திற்கு வருகை தந்து 1ம் நாள் நிகழ்வு ஏற்பாட்டாளர்களுடைய சந்திப்பில் கலந்து கொண்டு விட்டு மாலை பாரிசுக்கு வருகை மேற்கொண்டிருந்தார். தமிழின விடுதலைச் செயற்பாட்டாளர்கள், உணர்வாளர்கள், இளையவர்கள் மற்றும் இன்னும் பல முக்கியஸ்தர்களையும் சந்தித்திருந்தார். இச்சந்திப்பில் பல்வேறு தரப்பினரின் பலதரப்பட்ட கேள்விகளுக்கு தனது பயணக்களைப்பையும் பொருட்படுத்தாது பதிலளித்திருந்தார். ஈற்றில் அவர் கூறியதானது தமிழீழ விடுதலையும், அதன் பிதாமகன் தமிழின தேசியத்த…

  5. கட்டுநாயக்காவில் நடந்த மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து இலங்கை பொலிஸ் மா அதிபர் மீது நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பால சூரியா பதவி விலகவுள்ளார் என கொழும்பு தகவல்கள் கூறுகின்றன. . கட்டு நாயக்க போராட்டத்தை அடக்க கோத்தபாய கீழ் நிலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும் நிலமை மோசமானதாக மாற கோத்தா பந்தினை பால சூரியா மீது எறிந்துள்ளார். இதனால் மஹிந்த பாலசூரியா வருத்தமடைந்துள்ளதுடன் தான் பதவி விலகப்போவதாகவும் கூறியுள்ளார். . கட்டு நாயக்க போராட்டத்தினால் மஹிந்தவிற்கு மிகப்பஎரும் எதிர்ப்பு அலை தோன்றியுள்ளது. ஈழநாதம்

    • 0 replies
    • 367 views
  6. Wednesday, June 1, 2011, 2:16உலகம்ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் நாடுகடந்த தமிழீழ அரசு பிரதிநிதிகள்! Wednesday, June 1, 2011, 2:16உலகம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்கா அரசின் பரப்புரைகளை முறியடிக்க, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரிதிநிதிகள் பங்கெடுத்துள்ளனர். ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை மையப்படுத்தி, உலக நாடுகள் – மனித உரிமை அமைப்புக்கள் – அரசசார்பற்ற நிறுவனங்கள் ஆகியன, தங்களது கருத்துக்களை கூட்டத் தொடரில் முன்வைத்து வருகின்றன. இந்நிலையில், கூட்டத் தொடர் இடம்பெறும் காலப்பகுதி முழுவதும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தொடர்சியாக பங்கெடுக்கவுள்ளதாக கூட்டத்தொடரில் பங்கெடுத்திருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்…

  7. Wednesday, June 1, 2011, 0:40தமிழீழம் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் சிங்கள வன்முறைக் குழுவொன்றால் இடம்பெற்றது. இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. இந்த நூலகஎரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர். நூலகம் எரிக்கப்பட்டது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்த…

  8. வவுனியா நிருபர் புதன்கிழமை, யூன் 1, 2011 போர்க்குற்றங்கள் தொடர்பில் சுதந்திரமானதொரு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியது அதி சக்தி வாய்ந்த நாடுகளின் பொறுப்பு என ஐ.நா செயலாளர் நாயகம் தெளிவுபடுத்தியுள்ளதாக அவரது பேச்சாளர் மார்டீன் நெசர்க்கி கூறியுள்ளார். நேற்று இடம்பெற்ற ஐ.நா சபையின் நாளாந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை தொடர்பில் ஏற்ப்பட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். மேலும், சர்வதேச விசாரணை ஒன்றினை மேற்கொள்ள இலங்கை அரசோ அல்லது அரசு சார்ந்த பல அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு கூட்டமைப்போ உடன்படும் என ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நம்புவதாக மார்டீன் நெசர்க்கி தெரிவித்துள்ளார். புதிதாக இலங்கை யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் உரிமை மீறல் தொடர…

  9. புனர்வாழ்வு பெற்றதன் பின்னர் சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளை மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் குறிப்பிட்ட சில கிராமசேவை அதிகாரிகள் உதாசீனம் செய்து புறக்கணித்து வருவதாகப் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் கவலை வெளியிட்டுள்ளார்கள். குறிப்பாக பெண் கிராமசேவை அதிகாரிகளே இவ்வாறு நடந்து கொள்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முக்கிய தேவை கருதி தமது வசிப்பிடத்தை உறுதி செய்யவும் தங்களுக்கு உடல் ரீதியாக வெளியில் தெரியும் வகையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உறுதிப்படுத்தி இவர்களுக்கு உதவி தேவை என்பதை சிபாரிசு செய்ய இந்த அதிகாகள் மறுப்பு தெரிவித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கண்ட கண்ட கடிதங்கள் விண்ணப்பப் படிவங்களில் எல்லாம் உங்களுக்காகக் கையெழுத…

  10. Workflow: Public வவுனியா நிருபர் புதன்கிழமை, யூன் 1, 2011 ”போர்க்குற்ற ஆதாரங்களான படங்கள், வீடியோக்கள் ஆகியன எல்லாமே போலியானவை, மெருகூட்டப்பட்டு தயாரிக்கப்பட்டவை என்றாலும் நாம் விசாரணை ஒன்றை நடத்த இணங்குகின்றோம்” இவ்வாறு கூறியுள்ளது இலங்கை வெளி நாட்டமைச்சு. . இதன்படி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் போர்க் குற்றம் என்று நிரூபிக்கப்பட்ட, சனல்4 தொலைக்காட்சியின் புதிய வீடியோ ஆதாரம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு இலங்கை அரசு இணங்கி உள்ளது. ஆனாலும் அந்த விசாரணையும் உள் நாட்டிலேயே நடக்கும் வெளியார் வரக்கூடாது என கூறியுள்ளது இலங்கை வெளி நாட்டு அமைச்சு. Bookmark/Search this post with: http://www.eelanatham.net/story/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0…

  11. நிபுணர்குழு அறிக்கைக்கு பதில்கள் அடங்கிய 5 புத்தகங்கள் கையளிப்பு! புதன், 01 ஜூன் 2011 07:45 ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய நிபுணர் குழு அறிக்கைக்கான பதில்கள் உள்ளடங்கிய ஐந்து புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது. நிபுணர்குழு அறிக்கைக்கான பதில்கள் அடங்கிய மேற்படி ஐந்து புத்தகங்களும் அறிக்கைக்கு எதிராக சேகரிக்கப்பட்ட பத்தாயிரம் கையெழுத்துக்கள் அடங்கிய மகஜரும் பிரித்தானிய பிரதமரின் பிரதிநிதியொருவருக்கு பிரதமர் இல்லத்துக்கு முன்னால் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான இலங்கை ஒன்றியம் உள்ளடங்கலான 5 அமைப்புக்கள் ஒன்றிணைந்து இவற்றை கையளித்துள்ளன. tamilenn

  12. ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் சனல் 4 தொலைக்காட்சியின் கானொளி குறித்த அறிக்கை சமர்ப்பிப்பு! வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது சிறிலங்கா படைத்தரப்பினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் போராளிகள் சுட்டுக் கொல்லப்படுவது தொடர்பான சனல் 4 தொலைக்காட்சியின் கானொளி குறித்த அறிக்கை ஜெனிவாவில் நாளை (30.05.11) ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சர்வதேச போர் நியமங்களுக்கு எதிரான நீதிக்குப் புறம்பான வகையில் இடம்பெற்ற இப்படுகொலைகள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கை ஒன்றிலேயே இந்தக் கானொளிப் பதிவு தொடர்பான விபரங்கள் உள்ளடக்கபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடு…

  13. ராஜபக்ஸ சகோதரர்கள் தண்டிக்கப்படுவார்களா? யமுனா ராஜேந்திரன் 01 ஜூன் 2011 18 மே 2009 ஈழத்தில் முள்ளிவாய்க்கால் பேரழிவு நடந்து முடிந்தது. அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னால், போர் நடந்து கொண்டிருந்த வேளையில், 23 மார்ச் 2009 இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளரும் தென் கொரியப் பிரஜையுமான பான் கி மூன் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவை கொழும்பில் சந்தித்தார். அப்போது அவர்கள் இருவரும் ஒரு கூட்டறிக்கை வெளியிட்டார்கள். அந்தக் கூட்டறிக்கையில் போர்நிகழ்வுக்கான ‘பொறுப்புக் கூறலையும் வெகுமக்கள் அதனால் அடையும் துயர்களையும் கவனம் கொள்வது’ என இருவரும் ஒப்புக் கொண்டார்கள். இலங்கை ஜனாபதி மற்றும் ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளர் என இருவரதும் கூட்டறிக்கையினை நடைம…

  14. ஜனாதிபதி மஹிந்தர் புத்த பகவானின் இரத்த உறவினரா? புதன், 01 ஜூன் 2011 00:52 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை புத்த பகவானின் இரத்த உறவினர் என்று தெரிவித்து உள்ளார் இலங்கையின் பிரபல சினிமா மற்றும் தொலைக்காட்சி நாடக நடிகர் ஜக்சன் அந்தனி. படையினருக்காக உள்நாட்டு தொலைக்காட்சி சேவை ஒன்றால் நடத்தப்பட்டு வந்த ரணவிரு ரியல் ஸ்டார் ரியாலிட்டி ஷோ என்கிற நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி அண்மையில் இடம்பெற்றது. இவ்விறுதிப் போட்டியில் மத்தியஸ்த்தர்களில் ஒருவராக ஜக்சன் அன்ரனி கலந்து கொண்டிருந்தார். இதில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சி குறித்து பேச வேண்டும் என்று ஜக்சன் அன்ரனி கோரப்பட்டார். ஆனால் நிகழ்ச்சி குறித்த அவதானங்களை தெரிவிக்க…

  15. செவ்வாய், 31 மே 2011 16:55 இலங்கைத் தமிழரும், படத் தயாரிப்பாளரான சந்திரன் இரத்தினம், புலிகளினால் கொழும்பு நகரம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவது போன்ற ஹொலிவூட் திரைப்படமொன்றை இயக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இத்திரைப்படத்தின் பெயர் ஏ கொமன் மான். ஒஸ்கார் விருது பெற்ற ஹொலிவூட் நடிகர் சேர் வென் கிங்ஸ்லி நடித்திருந்த பாத்திரம் ஒன்றை சார்ந்ததாக திரைக்கதை நகர்கின்றது. இப்படம் இலங்கை மற்றும் ஹொலிவூட் கூட்டுத் தயாரிப்பாக உருவாகி உள்ளது. படத்தின் திரைக் கதை, இயக்கம் ஆகியவற்றை இலங்கைத் தமிழரான சந்திரன் இரத்தினம் மேற்கொண்டு உள்ளார். ஹொலிவூட் படம் ஒன்றை முதன் முதல் இயக்கி இருக்கின்ற இலங்கையர் என்கிற பெருமையை இப்படத்தின் மூலம் இவர் பெறுகின்றார். 27 நாட்களில்…

  16. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் இருமடங்கு உலகில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அடுத்த இருபது வருடங்களில் இரண்டு மடங்காக அதிகரித்துவிடும் என்று எச்சரித்துள்ள ஆக்ஸ்ஃபாம் தொண்டு நிறுவனம், புவி வெப்பமடைந்துவருவதாலும், விவசாயத்தில் முதலீடுகள் போதிய அளவில் இல்லாமையாலும் இந்த விலையேற்றத்துக்கு காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ளது. உலகின் ஜனத்தொகை 2050 வாக்கில், தற்போதைய எண்ணிக்கையை விட மூன்றில் ஒரு பங்கு கூடி தொள்ளாயிரம் கோடிகளாக அதிகரித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், விளைச்சலின் அளவைக் கூடுவதென்பது மந்த கதியிலேயே அமைந்திருந்தால், ஜனத்தொகை அதிகரிப்பின் வேகத்துக்கு விளைச்சல் அதிகரிப்பின் வேகத்தால் ஈடுகொடுக்க முடியாமல் போய்விடும் என்றும் ஆக்ஸ்ஃபா…

    • 0 replies
    • 721 views
  17. இலங்கைத் தமிழர்களுக்கு ஆட்சியில் அதிகாரப் பகிர்வு வழங்குவதாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் இலங்கை அரசு மெத்தனம் காட்டி வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றம்சுமத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு டெல்லி சென்றார். வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, வெளியுறவுத்துறைச் செயலாளர் நிருபமா ராவ், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரைத் திங்கள்கிழமை காலையில் சந்தித்து இலங்கைப் பிரச்சினை தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். …

  18. May 31, 2011 இலங்கைப் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்று ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உயர் ஆணையாளர் நவிப்(நவநீதம்)பிள்ளை தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தால், அவரது அலுவலகத்து டன் இனிவரும் காலங்களில் ஆக்கபூர்வமாகப் பணியாற்ற முடியாது என்று சீறியிருக்கிறது இலங்கை அரசு. போர்க் குற்றங்களை விசாரிக்க உள்நாட்டிலேயே முழுமையான ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்றும் அதனைக் கண்காணிப்பதற்கு சுயாதீனமான சர்வதேசப் பொறிமுறை ஒன்றும் தேவை என்று நவிப்பிள்ளை நேற்றுத் தெரிவித்திருந்தார். இது இலங்கை அரசுக்குக் கடும் சீற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. நிபுணர் குழுவின் அறிக்கையை தனது பேச்சின் இடையே இழுத்திருப்பதன் மூலம் மனித உரிமைகள் சபையின் சட்டதிட்டங்களையும் நடைமுறை…

  19. ''இருக்கிறம்!'' ''எப்படி இருக்கீங்க?' என்று தமிழ்நாட்டின் இலங்கை அகதிகள் முகாம்களில் வசிப்பவர்களிடம் விசாரித்தால், இப்படியான விரக்தி தொனிக்கும் பதிலையே எதிர்கொள்ள நேர்கிறது. ஈழம் - கண்ணீர்த் துளியாய் உறைந்து நிற்கும் கனவு! மண்ணை மீட்கவும் முடியாமல், உரிமைகொள்ளவும் இயலாமல், அந்நிய மண்ணில் கையேந்தி நிற்கும் அவலத்துக்கு இணையாக எதைச் சொல்வது? முகாம்களில் ஒரு குடும்பத்துக்கு பத்துக்குப் பத்து அளவில் வீடு. பலர் முன்னும் பின்னும் இழுத்துக்கட்டி இருக்கிறார்கள். அடித்தட்டு மக்களும் முகஞ்சுளிக்கும் வாழ்க்கைத் தரத்தில்தான் பல முகாம்களின் நிலை அமைந்திருக்கிறது. ஆனால் அதற்கே, 'தமிழ்நாட்டு மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும் அன்புக்கு என்றைக்கும் நன்றிக்கடன்பட…

  20. 31 மே 2011 பிரிகேடியர் டென்சில் கொப்பாகடுவ, கேணல் விஜய விமலரட்ன ஆகிய இருவரும்.. 1987ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியை இந்திய மத்திய அரசாங்கம் தடுத்து நிறுத்தியதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் மாநாட்டில் கலந்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 1987ம் ஆண்டு இந்தியாவுடனான உறவு சரியான முறையில் பேணப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். 1987ம் ஆண்டு வடமராட்சி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய அரசாங்கத்தின் தலையீட்டினால் இந்த இராணுவ முன்நகர்வை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியவில…

    • 19 replies
    • 1.6k views
  21. மஹிந்தவின் போர் பற்றிய அனுபவங்களை கற்றுக்கொள்ளும் மா நாடு இன்று ஆரம்பமாகியது. இதில் 52 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் மிகப்பெரும் நாடுகள் கலந்துகொள்ளவில்லை. குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ்,ஐரோப்பிய ஒன்றியம், சுவிஸ்,அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் உட்பட 22 நாடுகள் கலந்துகொள்ளவில்லை. இதே வேளை சீனா, இரஸ்யா தமது கீழ் மட்ட இராணுவ அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளது. போர்க்குற்றம் புரிந்ததாக குற்ற சாட்டப்பட்ட நிலையில் இராணுவத்தின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் இந்த மா நாட்டை பல நாடுகள் புறக்கணித்தமை குறிப்பிடத்தக்கது. Eelanatham

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.