Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மக்கள் மீது எறிகணை வீசிய தூதுவர்: அவுஸ்திரேலிய வானொலி ! சனி, 21 மே, 2011 கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் பாதுகாப்பு வலையத்தினுள் சிக்கியிருந்த 300,000 இற்கு மேற்பட்ட பொதுமக்கள் மீது கடற்படைக் கப்பல்களில் இருந்து கண்மூடித்தனமாக எறிகணை வீச்சுக்களை மேற்கொண்ட சிறீலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் திஸ்ஸரா சமரசிங்கா அவுஸ்திரேலியாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இக் கூற்றுகள் இலங்கைக்கு மேலும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. 1974 ஆம் ஆண்டு சிறீலங்கா கடற்படையில் இணைந்துகொண்ட சமரசிங்கா 2011 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றுள்ளார். சிறீலங்கா கடற்படையின் பிரதம அதிகாரியாக அவர் பணியாற்றியபோது தான் கடந…

  2. எம்மை நாமே ஆளும் உரிமை கிடைக்கும் வரை போராடுவோம்; உடுவிலில் மாவை நேற்றுச் சூளுரை பிரசுரித்தவர்: Sukkran May 21, 2011Add a comment மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்து எம்மை நாமே ஆளும் உரிமையை வெல்லும் வரை தமிழர்களின் போராட்டம் தொடரும் என்று சூளுரைத்துள்ளார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா. உடுவிலில் நேற்று உரையாற்றிய அவர், இலங்கையில் நடந்து வந்த ஆயுதப் போர் முடிந்து விட்டாலும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் தொடரும் என்றும் அறிவித்தார். அமைச்சர்களின் வருகைக்காக நீண்டகாலமாகக் காத்துக் கிடந்த உடுவில் பிரதேச செயலகத்துக்கான புதிய கட்டடம் நேற்றுத் திறந்துவைக்கப்பட்டது. இந்தக் கட்டடத் தொகுதியை அமைப்பதற்கு 50 மில்லியன் ரூபா…

  3. மாணவருக்கு இராணுவ முகாம்களில் பயிற்சி வழங்குவதை நிறுத்துங்கள்; கூட்டமைப்பு வலியுறுத்து பிரசுரித்தவர்: Sukkran May 21, 2011Add a comment பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலைமைத்துவப் பயிற்சி வழங்குவதை உடன் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.நேற்று யாழ்ப்பாணம் வந்திருந்த பொது நிர்வாக உள்ளூராட்சி அதிகாரசபைகள் அமைச்சர் ஜோன் செனிவிரத்தினவிடம் இந்தக் கோரிக்கையை நேரில் வலியுறுத்தி உள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் இணைச் செயலாளருமான மாவைசேனாதிராசா.பல்கலை. மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கான பயிற்சிகள் கண்டி, ரன்தம்பே இராணுவ முகாமில் வைத்…

  4. இரட்டைக் கோபுரத்தை தகர்த்ததற்காக ஒசாமா கொல்லப்பட்டார் ஈழத் தமிழரை கொன்றதற்காத ராஜீவ் கொலை செய்யப்பட்டார் இதில் என்ன தவறென்கிறார் - சீமான் சனி, 21 மே, 2011 வேலூர்: அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத்தை தகர்த்த ஒசாமாவை பாகிஸ்தானில் வைத்து அமெரிக்கா கொன்றது சரியானால் ஈழத்திலே 12,500 தமிழர்களை படுகொலை செய்த ராஜீவை கொன்றதில் என்ன தவறென நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கைக்கு ஆதரவு கோரியும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் 20 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள நளினி, முருகன் உள்ளிட்டோரை விடுதலை செய்யக் கோரியும் நாம் தமிழர் கட்சி சார்பில் வேலூரில் பொதுக் கூட்டம் புதன்கிழமை இரவு நடத்தது. கூட்டத்தில் கட்சியின் நிறுவனரும் இ…

  5. தமிழகத்துக்கு வருகை தருமாறு ரணிலுக்கு ஜெயலலிதா அழைப்பு . தமிழகத்துக்கு வருகைதருமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு புதிய முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் அழைப்பு விடுத்திருப்பதாக ஐ.தே.க. வட்டாரங்கள் தெரிவித்தன. ஜெயலலிதா வெற்றியடைந்ததையிட்டு ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துத் தெரிவித்திருந்தார். இதற்கு தொலைபேசி மூலம் நன்றி தெரிவிக்க ஜெயலலிதா தமிழகத்துக்கு வருகைதருமாறு ரணிலுக்கு அழைப்பு விடுத்திருப்பதாக ஐ.தே.க. வட்டாரங்கள் கூறுகின்றன. இருவரும் நீண்டநேரம் தொலைபேசியில் உரையாடியதாகவும் கட்சி பேச்சாளர் கூறியுள்ளார். இலங்கையின் வட,கிழக்கு மாகாண நிலைவரம் குறித்தும் சகல தரப்பினதும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டிய தேவையுள்ளது பற்ற…

  6. சனிக்கிழமை , மே 21, 2011 யாழ். மாவட்டம், கந்தரோடையில் இடம்பெற்று வரும் அகழ்வாராய்ச்சி தொடர்பில் சிங்களப் பத்திரிகை ஒன்றில் வெளியான தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. கந்தரோடையில் புராதன காலத்துக் குடியிருப்பு மற்றும் பௌத்த குருமாரின் புராதன வாழ்விடம் என்பன அமைந்திருந்தமைக்கான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல்துறை நிறைவேற்றுப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத் திஸாநாயக்க தெரிவித்தார் என்று லங்காதீப என்ற சிங்களப் பத்திரிகை தனது 17ஆம் திகதிய பதிப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியை யாழ்.பல்கலைக்கழக தொல்லியல்துறை மறுத்துள்ளது. அதேவேளை, குறித்த செய்தி தொடர்பாக தொல்லியல் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, அது பொய்யான செய்தி கலாசார அமைச்சின் அ…

    • 0 replies
    • 895 views
  7. இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கம் இல்லலை என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி பேர்னாட் சவாஜ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஐ.நா. நிபுணர் குழு பரிந்துரைகளுக்கு அமைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்திய போதிலும், ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமென எதிர்பார்க்கவில்லை எனவும் இலங்கையுடன் நீண்ட காலமாக மனிதாபிமான மற்றும் பொருளாதார உறவுகளைப் பேணி வருவதாகவும் தொடர்ந்தும் உறவுகளைப் பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். My link

    • 0 replies
    • 563 views
  8. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீது நோர்வேயில் கட்டாயம் தடை கொண்டு வரப்பட வேண்டும் என்று அந்நாட்டு எதிர்க் கட்சியான கொன்சர்வேர்ட்டிவ் கட்சி வலியுறுத்தி உள்ளது. கொன்சர்வேர்ட்டிவ் கட்சியில் பாதுகாப்பு விவகாரங்கள் குழுவுக்கு பொறுப்பாக இருக்கும் பீற்றர் கிற்மார்க் இவ்வாறு வலியுறுத்தி உள்ளார். இவர் இது குறித்து தெரிவித்து உள்ளவை வருமாறு: ஐரோப்பிய ஒன்றியத்தை நோர்வே பின்பற்றி புலிகள் இயக்கம் மீது கட்டாயம் தடை கொண்டு வர வேண்டும். நெடியவனை விசாரிக்க நெதர்லாந்து நாட்டின் புலனாய்வுக் குழு ஒன்று நோர்வே வந்து உள்ளது. நோர்வேயில் புலிகளின் நடவடிக்கைகள் குறித்த தகவல்களைப் பெறுகின்றமைக்காக நோர்வே பொலிஸாரும் இவரை விசாரிப்பார்கள் என்று நம்புகின்றேன். இலங்கையில் யுத்தத்தில் ஈடுபட…

    • 0 replies
    • 671 views
  9. ஈழத்தமிழர்தம் வரலாற்று பெருந்துயரின் இரண்டாம் ஆண்டு. இதனை ஈழத்தமிழ்த் தேசியத்தை வரலாறு தண்டித்த இரண்டாம் ஆண்டெனவும் கொள்ளலாம். அதாவது, ஆயுதவழி போராட்டத்தை நடாத்திய தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைமை முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் அழிக்கப்பட்டு, ஈழத்தமிழரது ஆயுதப்போராட்டம் தோல்விக்குள் தள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்து போயுள்ளன. இதுவரை கார்த்திகை மாதத்தில் தியாகத்தின் பெருமைகள் பற்றிப் பேசி வந்த நாம் தற்போது மே மாதத்தின் வலிகள் பற்றியும் பேசத் தொடங்கி உள்ளோம். சிறிது காலம் பெருமை. சிறிது காலம் கவலை என்பதாகத்தான் நமது காலம் கழியப் போகிறதா? இவைதான் நாம் நமது தலைமுறைக்கு விட்டுச் செல்லவிருக்கும் அரசியல் முதுசமா? ஈழத் தமிழர் அரசியல் வரலாற்றில் மே மாதத…

    • 2 replies
    • 1.1k views
  10. இலங்கையின் பிரச்சினைகளுக்கு உள்ளுரிலேயே தீர்வு காணப்பட வேண்டும்: சர்வதேச அழுத்தங்களைத் தவிர்க்கவும் இதுவே வழியெனவும் இந்தியா புத்திமதி கூறுகிறது [Friday, 2011-05-20 15:43:36] உள்ளுரில் பிரச்சினைகளுக்கு தீர்வை முன்னெடுப்பதன் மூலம் சர்வதேச அழுத்தத்தை தவிர்க்கமுடியும் என்று இந்தியா, இலங்கைக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. த ஹிந்து செய்திதாள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இலங்கை போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு அண்மித்த குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான நிலையில், இந்த ஆலோசனையை இந்தியா வழங்கியுள்ளது இந்தியாவுக்கு சென்றிருந்த இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ், அங்கு உயர்தரப்பினருடன் மேற்கொண்ட சந்திப்புகளின் போது இந்த விடயம் முன்கொண்டு வரப்பட்டுள்ளது. இலங்கையின் ஜன…

  11. சிங்கப்பூர் நாட்டு துணைப் பிரதமரும் நிதியமைச்சரான தர்மன் சண்முகரட்னத்தை சர்வதேச நிதிக் கழகத்தின் (International Monetary Fund) தலைவராக நியமிக்க வேண்டும் என தெற்காசிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. யாழ்ப்பாண வம்சாவளித் தமிழரான இவர் 2007ம் ஆண்டு முதல் சிங்கப்பூர் நிதியமைச்சராக உள்ளார். கடந்த வாரம் இவரை துணைப் பிரதமராகவும் நியமித்தார் அந் நாட்டு பிரதமர் லீ சென் லூங். அந் நாட்டு முக்கிய அரசியல் பிரமுகர்களில் ஒருவரான சண்முகரட்னம் நேற்று தான் சிங்கப்பூர் நிதி ஆணையத்தின் (Monetary Authority of Singapore-MAS) தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இந் நிலையில் இவரை சர்வதேச நிதிக் கழகத்தின் தலைவராக நியமிக்க வேண்டும் என்று பிலிப்பான்ஸ், தாய்லாந்து நிதியமைச்சர்கள் கோரிக்கை வி…

    • 2 replies
    • 1.4k views
  12. 2009 ஆம் ஆண்டு இறுதிப் போரில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதில் பாரிய பொறுப்பு இந்தியாவுக்கும் உள்ளது. இந்தியா அந்த பாவத்தில் இருந்து ஓரளவு விடுபட வேண்டுமென்றால் தமிழ் மக்கள் தம்மைத்தாமே ஆளும் ஒரு நிரந்தர தீர்வுத்திட்டத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்ட மைப்பின் மட்டு. மாவட்ட எம்.பி. சீ.யோகேஸ்வரன் தெவித்தார். ஐ.நாடுகள் சபையினால் கொண்டுவரப்பட்டுள்ள அறிக்கை தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல வழியை ஏற்படுத்தும். மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பதில் கூறியே ஆகவேண்டும் என்றும் அவர் கூறினார். 2009 ஆண்டு வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரில் உயிழந்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் களுவாஞ்சிக்குடி சக்தி இல்லத்தில் அனாத…

  13. நெடியவன் கைது செய்யப்பட்டுள்ளதாக நோர்வே தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. http://www.tv2nyhetene.no/innenriks/terroravhoert-tamil-jobber-i-barnehage-3498052.html

    • 37 replies
    • 3.6k views
  14. NCET Reflections on UN Report and legal persuits against Sri Lanka

    • 0 replies
    • 1.3k views
  15. சல்மான் ருஸ்டியின் நாவலைத் தழுவிய திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு சிறிலங்காவில் இரகசிய அனுமதி! - ஈரான் கடும் கண்டனம்! சர்ச்சைக்குரிய பிரபல எழுத்தாளர் சல்மான் ருஸ்டியின் Midnight Childrens எனும் நாவலை சிறிலங்காவில் திரைப்படமாக்க அனுமதி வழங்கியமைக்கு ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது. இந் நாவலைத் தழுவி கனேடிய இயக்குனரான தீபா மேத்தா திரைப்படம் ஒன்றைத் தயாரித்து வருகின்றார். இத் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் இரகசியமான முறையில் சிறிலங்காவில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான தகவல்களை வெளியிடக்கூடாது எனவும் திரைப்படத் தொழில்நுட்பக் கலைஞர்களிடம் இருந்து வாக்குறுதியும் பெறப்பட்டிருந்தது. இந் நிலையில், இத் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு முடிவடையும் நிலையில், இது குறித்…

    • 1 reply
    • 699 views
  16. இந்தியாவிற்கு வாலை காட்டிய பீரிஸ் சீனாவிற்கு தலையை காட்ட பயணம் உள்நாடு முக்கிய-செய்தி இணைய-பதிப்பு வவுனியா நிருபர் வெள்ளிக்கிழமை, மே 20, 2011 இலங்கை அரசு இந்தியாவிற்கு வாலையும் சீனாவிற்கு தலையையும் காட்டும் தந்திரத்தை எப்போதும் கைவிடப்போவதில்லை. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் எதிர்வரும் 23 ஆம் திகதி சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்தியாவிற்கு சென்று இந்திய அதிகாரிகளுக்கு வாக்குறுதி அளித்தார் அதாவது இந்தியாவிற்கு எதிராக சீனா இலங்கையினை பயன்படுத்த ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என கூறினார். இனி சீனாவிற்கு என்ன சொல்லப்போகின்றார்? சீன வெளிவிவகார அமைச்சருடன் முக்கிய அதிகாரிகளை சந்தித்து அமைச்சர் பீரிஸ் பேச்சு நடத்தவுள்ளார்.…

    • 5 replies
    • 1.2k views
  17. கிழக்குப் பல்கலைக்கழக மாணவன் கொலை May 20, 2011 பிரதேச வீடொன்றில் இளைஞன் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. . கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலைப்பீட வருடத்தில் இரண்டாம் வருடப்பிரிவில் கல்வி கற்று வந்த 23 வயதுடைய நாகராசா சபேஷ் ரூபன் என்ற இளைஞரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. . சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், களுவாஞ்சிக்கொடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. viyapu.

  18. போர்க்குற்றச்சாட்டிலிருந்து தப்புவதற்காகவே சிறிலங்கா அரசு கூட்டமைப்புடன் பேசுகிறது- செல்வம் அடைக்கலநாதன் May 20th, 2011 nila சிறிலங்கா அரசாங்கம் தன்மீது முன்வைக்கப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பிப்பதற்காகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசி வருகின்றது என கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். சிறிலங்கா இராணுவத்தினரின் கொடூரத் தாக்குதலால் முள்ளிவாய்க்காலில் மரணித்த உறவுகளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு நேற்று மாலை வவுனியா நகரசபை பழைய மண்டபத்தில் நடைபெற்றது. இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே செல்வம் அடைக்கலநாதன் எம். பி. இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து …

    • 1 reply
    • 880 views
  19. பேருந்துகளிலிருந்து மக்களை இறக்கி கையெழுத்து வாங்கும் பாதுகாப்புத் தரப்பினர் : 20 மே 2011 ஐ.நா.அறிக்கைக்கு எதிர்ப்புதெரிவிப்பதற்காகவா என்ற சந்தேகத்தில் மக்கள் மன்னாரிலிருந்து வெளிச்செல்லும் பயணிகள் பேருந்துகளை பறையனாளங்குளத்தில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் நிறுத்தி மக்களை இறக்கி சோதனையிடுவதாகக்கூறி மக்களின் அடையாள அட்டை இலக்கத்தைக் குறித்துக்கொண்டு கையெழுத்துப் போடுமாறு பயணிகளிடம் கேட்கப்படுகின்றனர். ஏற்கனவே அச்சத்தில் உள்ள மக்கள் அங்கிருந்து வெளிச்சென்றால் போதும் என்ற நினைப்பில் கையெழுத்துப் போட்டு தமது பயணத்தைத் தொடர்கின்றனர். இதனைப்போன்றே வவுனியா மகாவித்தியாலயத்தில் நடைபெற்றுவருகின்ற பல்மதப் பிரார்த்தனை நடைபெறுவதாகக் கூறப்படும் நிகழ்வி…

  20. யுத்தம் வெற்றி கொள்ளப்பட்ட இரண்டு வருட பூர்த்தியை ஒரு மாதத்திற்கு கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்ற அரசாங்கம் சிங்கள மக்கள் மத்தியில் தனது பொய்யான முகத்தைச் சுட்டிக் காட்டுகின்ற அதே வேளை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை வஞ்சித்து மீண்டும் மீண்டும் புண்படுத்தும் காயங்களையே மேற்கொண்டு வருகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம். பி. செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் மேலும் கருத்து தெவிக்கையில்; யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது சமூகம் இன்றும் அவல வாழ்க்கையே அனுபவித்து வருகின்றது. மீள்குடியேற்றம் என்ற பெயரில் முகாம்களில் இருந்து முகாம்களுக்கு மக்களை மாற்றியிருக்கின்ற அரசாங்கம் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றி விட்டதாக சர்வதேசத்துக்கு படம் …

  21. சவேந்திர சில்வாவும் அரசாங்கத்துக்கு எதிராகத் திரும்பக்கூடியவர் தான்: ஜனாதிபதி மஹிந்தவின் கணிப்பு வெள்ளிக்கிழமை, 20 மே 2011 11:44 பயனாளர் மதிப்பீடு: / 0 மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா எந்த நேரத்திலும் அரசாங்கத்துக்கு எதிராகத் திரும்பும் சாத்தியமிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளரிடம் வலியுறுத்தியுள்ளார். தற்போதைக்கு ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு கொழும்பில் காணியொன்றையும், வீடொன்றையும் பெற்றுக் கொடுப்பதற்கான அமைச்சரவை அனுமதியைப் பெற்றுத்தருமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்குப் பதிலளிக்கும…

  22. புலிகள் புலம்பெயர்ந்த மக்களின் ஆதரவுடன் மீண்டும் வந்து தாக்கப்போகின்றார்களாம். ஏனென்ரால் அவர்கள் இப்போதும் நிதி வசூலிக்கின்றார்கள். வெளினாடுகளில் புலிச்செயற்பாடுகள் நடக்கின்றன. இவ்வாறு பீரிஸ் பித்தலாட்டம் ஆடுகின்றார். எப்படித்தான் பேராசிரியர் என கூறிக்கொண்டு இப்படி வாய் கூசாமல் பொய்களை உரைக்கின்றார்களோ. . ரைம்ஸ் ஒஃப் இந்தியா இது பற்றி பலரிடம் கருத்துக்கேட்டு ஒரு செய்தியாக ஒளிபரப்பியது. . கேணல் ஹரிகரன் கூறினார். அப்படி புலிகள் மீண்டும் வருவது என்பது ஒரு அரிதான காரியம் ஆனால் அவர்கள் சிறு குழுவாக ஓரிரண்டு குழுக்கள் உள்ளார்கள் தான். என கூறினார். . அடுத்து லெப் ஜெனரல் அசோக் மேத்தா முன் நாள் அமைதிப்படை அதிகாரி கூறுகையில்.. சிறிலங்கா அரசாங்கம் மிகபப்டுத்துகின்றது போல…

    • 1 reply
    • 2k views
  23. முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளை மேலும் மேலும் அவமதிப்பதற்க்காக பிணம் தின்னி சிங்களவர் 366A Stag Lane Kingsbury , London, NW9 9AA என்னும் இடத்தில் ஞாயிற்றுக் கிழமை 22ம் திகதி பார்ட்டி வைக்கிறார்களாம். இதை இவர்கள் அனுமதிக்கலாமா? அவர்களையே தொடர்பு கொண்டு கேட்டால் விடை தெரியும். RNB Banqueting Suites, 020 8206 1141, Email: sales@rnbvenue.co.uk, Alternate Mobile Contacts: 079814652280, Telephone Lines are open from 11:00 - 21:00

    • 0 replies
    • 909 views
  24. ராஜீவ்காந்தி நினைவு நாள்: ஜெ. உறுதிமொழி மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட நாளை (மே 21-ந்தேதி) ஆண்டுதோறும் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளாக அனுசரித்து உறுதிமொழி ஏற்கப்படுகிறது. நாளை அரசு விடுமுறை தினம் என்பதால் தமிழக அரசின் சார்பில் இன்று கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் விசேஷ பந்தல் அமைக்கப்பட்டு ராஜீவ் காந்தியின் திருஉருவ படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. பகல் 12 மணி அளவில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா வருகை தந்து ராஜீவ் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்து கொட…

  25. வெள்ளிக்கிழமை, 20, மே 2011 (18:33 IST) காங்கிரஸ் கட்சியுடன் சுமூக உறவு நீடிக்கிறது : கலைஞர் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் திமுக கொள்கைபரப்புச்செயலாளர் ஆ. ராசா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் பல மாதங்களாக அடைக்கப்பட்டுள்ளார். இன்று டெல்லி சிபிஐ கோர்ட் உத்தரவுப்படி கனிமொழி எம்.பியும், கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமாரும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து திமுக தலைவர் கருணாநிதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘’2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக திமுக உயர்நிலைக்குழு கூடித்தான் முடிவெடுக்கும். திமுக ஜனநாயக இயக்கம். தனிப்பட்ட முறையில் முடிவு எடுக்க முடியாது. திமுக உயர்மட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.