Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பயங்கரத்தின் நிழல் - இலங்கைப் போர்க்குற்றம் குறித்த சேனல் நான்கு ஆவணப்படம் - 28 ஏப்ரல் 2011 மேற்கத்திய நாடுகளில் வாழ்பவர்களில் அரசியல் கலாச்சார விஷயங்களில் அதிகமும் ஈடுபாடுள்ளவர்கள் இங்கிலாந்தின் சேனல் நான்கு, பிரான்சின் ஆர்த்தே, இங்கிலாந்தன் பிபிசி நான்கு, கத்தார் நாட்டின் அல்ஜஜீரா போன்ற தொலைக்காட்சி வரிசைகளைத் தொடர்ந்து அவதானித்து வருவார்கள். காத்திரமான அரசியல் விவாதங்களை மட்டுமல்ல, கலை இலக்கிய தத்துவ விவாதங்களையும்; கூட இந்தத் தொலைக்காட்சிச் சேனல்களில் நாம் கண்ணுறலாம். சேனல் நான்கின் அறிவிப்பாளரான ஜோன் ஸ்நோவை ஓரளவு காத்திரமான நிகழ்வகளைத் தொடர்பவர்கள் நிச்சயமாக அறிந்திருப்பார்கள். சேனல் நான்கு தொலைக்காட்சிக்காக ஐடிஎன் நிறுவனம் தயாரித்தளிக்கும் விவரண…

  2. 40 ஆயிரம் தமிழர்கள் கொன்று குவிப்பு: ஐ.நா.குழு அறிக்கையை குப்பை தொட்டியில் வீசுவோம்: இலங்கை மந்திரி திமிர் பேச்சு இலங்கை இறுதிக்கட்ட போர் குறித்து விசாரணை நடத்திய ஐ.நா. குழு அங்கு போர் குற்றம் நடந்ததாகவும், 40 ஆயிரம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதாகவும் தனது அறிக்கையில் கூறி உள்ளது. இதனால் அதிபர் ராஜபக்சே மற்றும் ராணுவ தளபதிகள் சர்வதேச போர் குற்ற விசாரணைக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது இலங்கை அரசை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இந்த நிலையில் ஐ.நா. குழு அறிக்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும், இந்த அறிக்கையை குப்பை தொட்டியில் வீசுவோம் என்றும் இலங்கை மந்திரி கலாநிதி சரத் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, ஐ.ந…

  3. பிரித்தானியா அரசாங்கம் நிபுணர் குழுவின் அறிக்கையினை வரவேற்றுள்ளதோடு சர்வதேச விசாரணை ஒன்றினை தாம் மீண்டும் வலியுறுத்துவதாகவும் கூறியுள்ளது. இது தொடர்பாக பிரித்தானிய வெளியுறவு செயலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் பிரித்தானியா ஏற்கனவே சர்வதேச விசாரணை ஒன்றினை வலியுறுத்தி வந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையானது அதற்கான வழியை ஏற்படுத்தும். இலங்கையில் நடந்த சம்பவங்களுக்கு உண்மையான , நடு நிலைமையான விசாரணை ஒன்றின் மூலமே தீர்வு கான முடியும். அந்த வகையில் நிபுணர் குழு அறிக்கையானது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த அறிக்கையினை பிரித்தானியா முழுமையாக வரவேற்கின்றது என கூறப்பட்டுள்ளது. http://www.eelanatham.net/story/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B…

    • 0 replies
    • 868 views
  4. கொல்லப்பட்ட மக்களின் தொகையை மறைத்தது ஏன்? ஐ.நா செயலருடன் இன்னர் சிற்றி பிரஸ் நேரடி மோதல் 2009 ம் ஆண்டு போரின் இறுதிக்கட்டம் நெருக்கடியானதாகவும் யாருடைய பாதுகாப்பிற்கும் உத்திரவாதமற்றதாகவுமே இருந்தது. இந்நிலையில் இலங்கையில் பணிபுரிந்த ஐ.நா அதிகாரிகளின் பாதுகாப்பை தம்மால் உறுதிப்படுத்த முடியாது என சிறிலங்கா அரசாங்கம் எமக்கு அறிவித்திருந்தது. சிறிலங்கா அரசின் இந்த அறிவிப்பினால் எமது பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம். இவ்வாறு ஐ.நா சபையின் செயலாளர் நாயகம் பான்.கி.மூன் இன்னர் சிற்றி பிரஸ் இற்கு கருத்துத் தெரிவிக்கையில் கூறியுள்ளார். வன்னிப் போரின் இறுதிக் கட்டத்தில் அரச படைகளின் தாக்குதல்களிலிருந்து பொதுமக்களைக் காப்பாற்றத் …

    • 4 replies
    • 1.2k views
  5. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனின் தருஸ்மன் அறிக்கைக்கு எதிராக மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீதா பிரபாகரன் தலைமையில் மாநகரசபை உறுப்பினர்கள் இன்று காலை முதல் அடையாள உண்ணாவிரதமொன்றில் ஈடுபட்டுள்ளனர். மட்டக்களப்பு மாநகரசபைக்கு முன்னால் இன்று வியாழக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமான இந்த உண்ணாவிரதம் தொடர்ந்து நடைபற்று வருகின்றது. இவரின் உடம்பை குறைக்க சொல்லி வைத்திய ஆலோசனைகள் வளங்கப்பட்டதை நினைவில் கொள்க......

  6. முன்னாள் போராளி மகனை விடுதலை செய்ய கோரிய மனு நிராகரிப்பு Thursday, April 28, 2011, 3:58 இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளுக்கான வவுனியா புனர்வாழ்வு நிலையம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மகன் சட்ட விரோதமாக அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதனால் அவரை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி, வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாயார் ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு ஒன்று நீதிபதியினால் நிராகரிக்கப்பட்டுள்ளது என பீபீசி அறிக்கை வெளியிட்டுள்ளது. வவுனியா தர்மபுரம் புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மகன் மல்லாவியில் படப்பிடிப்பாளராகத் தொழில் செய்து கொண்டிருந்தபோது, கடந்த 2006 ஆம் ஆண்டு விடுதலைப்புலி…

  7. Wednesday, 27 April 2011 18:49 அதிரும் சிங்களம் இணைவார்களா தமிழர்கள்? – இதயச்சந்திரன் பேரினவாத சிங்கள அரசுகளால், ஈழத் தமிழினத்தின் மீது நிகழ்த்தப்பட்டது இன அழிப்புத்தான் என்கிற வகையில் அமைந்துள்ளது,… …கசிந்துவரும் ஐ.நா.நிபுணர் குழு சமர்ப்பித்த அறிக்கை. சிறீலங்கா அரசினால், தமக்குச் சார்பான ஊடகங்களினூடாகக் கசிய விடப்பட்ட அறிக்கையின் சில பக்கங்களின் நம்பகத்தன்மை குறித்தும் சிலர் கேள்வி எழுப்புகின்றார்கள். இந்த அறிக்கையை மகிந்த ராஜபக்ச அரசு, ஊடகங்களினூடாக வெளிப்படுத்தியதன் சூத்திரத்தை இவர்கள் புரிந்து கொள்ளவில்லை. இதை வெளியிடுவதனூடாக சிங்கள மக்களை இதற்கெதிராக அணிதிரட்டலாம் என்பதுதான் மகிந்தரின் திட்டம். அரசின் மந்திரி பிரதானிகள், பௌத்த, கத்தோலிக்க மதகுரு தலை…

  8. மிருசுவில் படுகொலை நடந்த இடத்திற்கு செல்கிறது நீதிபதிகள் குழு! Posted by uknews On April 26th, 2011 at 12:09 pm மிருசுவிலில் இடம்பெற்ற கூட்டுப்படு கொலை புதைகுழியைப் பார்வையிட கொழும் பிலிருந்து நீதிபதிகள் குழாம் நாளை யாழ்ப்பாணத்திற்கு வரவுள்ளது.இரண்டு குழந்தைகள் உள்ளிட்டட எட்டு பேர் கூட்டாகக் படுகொலை செய்யப்பட்டு மிருசுவிலில் புதைக்கப்பட்டமை தொடர்பான வழக்கிற்காகவே இந்த நீதிபதிகள் குழு இங்கு வருகின்றது. 2000ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த தினமொன்றில் மிருசுவில் வாசியான ஞானபாலன் ரவிவர் மன் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட எட்டுப்பேரை கொன்றது தொடர்பாக 5 இரா ணுவத்தினருக்கு எதிராக ஏற்கனவே வழக்குத் தொடரப்பட்டுள்ளது.வழக்கு தற்போதைக்கு ட்ரையல் …

  9. ஐ.நா நிபுணர் குழுவுக்கு எதிரான மகஜரில் கையெழுத்திட வற்புறுத்தப்படும் கொழும்புத் தமிழர்கள்! வியாழன், 28 ஏப்ரல் 2011 07:34 ஐ.நா நிபுணர் குழு அறிக்கைக்கு எதிரான மகஜரில் திரட்டப்பட்டு வரும் கையெழுத்துக்களில் கொழும்பில் வாழும் தமிழர்களையும் ஒப்பமிட வற்புறுத்தப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான என்.சிறிகாந்தா மற்றும் எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர். பஸ் வண்டிகளில் பயணம் செய்யும் தமிழர்கள் கூட இதில் ஒப்பமிட வற்புறுத்தப்படுகின்றனர் என்று யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது சிறிகாந்தா தெரிவித்துள்ளார். இதனிடையே இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச நடவடிக்கைகளுக்கு வற்புறுத்தும் வகையில் தமிழ் புத்தி…

  10. 4 எயார் பஸ் விமானங்கள் டிசம்பருக்குள் கொள்வனவு! Posted by uknews On April 28th, 2011 at 6:10 am / ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான நிறு வனங்களுக்கு மேலும் நான்கு புதிய எயார் பஸ் விமானங் கள் இவ்வாண்டு முடிவடைவதற்குள் கொள்வனவு செய்யப்படும். இதன் மூலம் இவ்விரு விமான நிறுவனங்களுக்கு இருக்கும் விமானங்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிக்கப்படும் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன தெரிவித்தார். இந்த நான்கு புதிய எயார் பஸ் விமா னங்களில் முதலாவது விமானம் அடுத்த மாதம் இங்கு வந்து சேரும். எஞ்சிய விமானங்கள் இவ்வாண்டு முடிவடைவதற்குள் இலங்கைக்கு வந்து சேரும். சிவில் விமான சேவை போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் ஆசியாவில…

  11. தமிழீழ விடுதலை நோக்கி, அழுத்தமாகக் கால் பதிக்கும் உலகத் தமிழர் பேரவையைப் பலப்படுத்துவது காலத்தின் கட்டாயம்! அரண்மனை இல்லை… ஆட்சி அதிகாரம் இல்லை… மந்திரி பிரதானிகள் இல்லை… அடியாட்கள் இல்லை… ரௌடிசம் இல்லை… அறிக்கைப் போர்கள் இல்லை… ஆனாலும், உலகத் தமிழர் பேரவை எடுக்கும் விஸ்வரூபம் புலம்பெயர் தமிழர்களுக்குப் புதிய பல நம்பிக்கைகளை உருவாக்கி வருகின்றது. எந்த விதமான ஆர்ப்பரிப்பும் இல்லாமல், பிரித்தானிய தமிழர் பேரவையுடன் இணைந்து போர்க் குற்ற ஆதாரங்களைப் பெற்று சனல் 4 தொலைக்காட்சிக்கு அனுப்பியதில் தனது அர்ப்பணிப்பை உலகுக்குப் புரியவைத்த உலகத் தமிழர் பேரவை, சோனியாவுடனான சந்திப்பால் சிறிய சறுக்கலை எதிர் கொண்டாலும், தெற்காசியாவுக்கான உதவி ராஜாங்க அதிபர் ஓ பிளேக் அவர்களைச் சந…

  12. அங்கத்துவ நாடு ஒன்றின் ஆதரவு தேவை சிறிலங்காவை விசாரிப்பதற்கு - பான் கி மூன் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளிவந்துள்ளது. இலங்கையில் இறுதிப் போர் நடைபெற்ற காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணை ஒன்று நடைபெற வேண்டுமா இல்லையா என்பதை பரிந்துரைக்க அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை தற்போது முழுமையாகக் வெளிவந்துள்ளது. 214 பக்கங்களை உள்ளடக்கிய அந்த அறிக்கையின் எந்தப் பாகமும் தணிக்கைக்கு உட்படாமல் வெளிவந்துள்ளது. முழு வடிவத்தினை நேரடியாக பார்வையிட / தரவிறக்கம் செய்ய: http://www.un.org/News/dh/infocus/Sri_Lanka/POE_Report_Full.pdf Ne…

  13. அறுபது வருட இனஅழிப்பு தொடர்பான முழுமையான விசாரணை தேவை! அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் த.தே.ம.மு மகஜர் இலங்கை அரசு மேற்கொண்ட போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையை தமிழ்த் தேசிய முன்னணி வரவேற்கிறது. அதேநேரம் கடந்த அறுபது வருடங்களாக இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான முழுமையான ஒரு சர்வதேச விசாரணை தேவை என்பதையும் வலியுறுத்துகிறது. அத்துடன் தமிழ்த் தேசத்தின் இறைமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான தீர்வு சர்வதேச கண்காணிப்பில் வழங்கப்படல் வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பின்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிருக்கும…

  14. தமிழினத் துரோகிகள்..! ( ஆசிரியர் தலையங்கம் ) இலங்கை அரசு திட்டமிட்டு இனப்படுகொலை நடத்தி வருகிறது என்று 2009-ல் எல்லோரும் கூறியதைத்தான் இப்போது ஐக்கிய நாடுகள் குழு அறிக்கை உறுதிப்படுத்தி இருக்கிறது. அப்போது, இந்தியா எப்படி, இந்த இனப்படுகொலை குறித்து எல்லோரும் குரல் எழுப்பியபோதும் அமைதி காத்ததோ, அதே அமைதியை இப்போதும் கையாள்கிறது. இலங்கை அதிபர் ராஜபட்ச ஒரு போர்க் குற்றவாளி என்று தண்டிக்கப்படுவதற்கான அனைத்துக் காரணிகளும் இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இலங்கை அரசு இதுபற்றித் துளியும் கவலை கொள்ளவில்லை. மாறாக, முழு அறிக்கையை வெளியிட்டால் இலங்கையில் நடைபெற்றுவரும் தமிழர்களின் இணக்கமான வாழ்க்கைக்கான அரசின் முயற்சிகள் பாதிக்கப்படும் என்று எதிர்ப்புத் தெரிவ…

    • 0 replies
    • 1.2k views
  15. புலம்பெயர்ந்த தமிழர்களை ஐக்கிய நாடுகள் அறிக்கை வலிந்து இணைத்துள்ளதன் மர்மம் என்ன? வியாழன், 28 ஏப்ரல் 2011 02:26 .தமிழ்நெற் இணையத்தின் இன்றைய தலையங்கச் செய்தி ஆய்வில் ஐ.நா. யுத்தக்குற்ற அறிக்கை ஈழத் தமிழர்களின் உரிமைகளில் அத்துமீறிக் கருத்துத் தெரிவித்துள்ளதைத் தெளிவாகக் சுட்டிக்காட்டி அறிக்கையின் ஒரு பக்கத்தையும் அந்தச் செய்தி ஆய்வில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. இங்கே இணைக்கப்பட்டுள்ள அந்த அறிக்கையின் ஒரு பக்கமானது புலம்பெயர்ந்த தமிழர்களை வலிந்து இந்த அறிக்கைக்குள் கொண்டு வந்திருப்பதை ஆணித்தரமாக சுட்டிக்காட்டி அந்த அறிக்கையின் குறிப்புக்கள் 417ல் இருந்து 420 வரையான நான்கு குறிப்புக்களையும் விலாவாரியாக ஆராய்ந்துள்ளது. தமிழ்நெற் இணையத்தளத்திற்கு யாழ்ப்ப…

    • 0 replies
    • 849 views
  16. சுரேஸ் எம்பியின் செயலாளர் மீது அடையாளம் தெரியாதோர் தாக்குதல்! Posted by admin On April 27th, 2011 at 10:55 pm தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களின் செயலாளர் ரமேஷ் என்றழைக்கப்படுகின்ற அன்னலிங்கம் உதயகுமார் புதன்கிழமை (இன்று) மாலை மோட்டார் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாதவர்களினால் தாக்கப்பட்டுள்ளார். அச்சுவேலியில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றுவிட்டுத் திரும்புகையிலேயே அவர் தாக்கப்பட்டுள்ளார். இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் ரமேஷையும், அவருடன் வந்த மற்றுமொருவரையும் இரும்புக் கம்பிகளினால் தாக்க முற்பட்டபோது மற்றவர் தப்பியோடிவிட்டார். ரமேஷை அவர்கள் இரும்புக்கம்பிகளினால் ஓட ஓட துரத்தித் துரத…

    • 1 reply
    • 797 views
  17. [ புதன்கிழமை, 27 ஏப்ரல் 2011, 17:39 GMT ] [ புதினப் பணிமனை ] ஈழத்தமிழராகிய நாம் பல சந்தர்ப்பங்களை தவறவிட்டுள்ளோம். அதாவது நமது அரசியல், சமூக, பொருளாதார விடுதலைக்கான போராட்டம் பலவாய்ப்புக்களினை அறுவடைசெய்யாமலேயே நகர்ந்து வந்திருக்கின்றது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் முதிர்ந்த தமிழ் அரசியலாளருமான திரு.இராசம்பந்தன் அவர்களும் எமது இணையத்தளத்திற்கு அண்மையில் வழங்கிய செவ்வியில் இவ்வொத்தகருத்தினையே தெரிவித்திருந்தார். இந்நிலையில், எமது அரசியல் நகர்வுகள் முன்னோக்கியதாக இருக்கின்றதா அல்லது வட்டப்பாதையில் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றதா என்னும் கேள்விக்கு ஈழத்தமிழ்மக்கள் இன்று வந்தடைந்துள்ள சூழமைவே விடைதருகின்றது. அதாவது குளிர் வலைய தெரு…

    • 0 replies
    • 538 views
  18. [ புதன்கிழமை, 27 ஏப்ரல் 2011, 04:20 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சிறிலங்கா மீதான ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் ஒன்று மாகாண முதலமைச்சர்களின் மாநாட்டில் நிறைவேற்றப்படவுள்ளது. அகலவத்தையில் உள்ள குகுலேகங்க விடுதியில் மாகாண முதலமைச்சர்களின் வருடாந்த மாநாடு நாளையும் நாளை மறுநாளும் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் சிறிலங்காவில் உள்ள எட்டு மாகாண முதலமைச்சர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த மாநாட்டிலேயே சிறிலங்கா மீது போர்க்குற்றம் சுமத்தும் அறிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாக வடமத்திய மாகாண முதலமைச்சர் அத்துல விஜேசிங்க தெரிவித்துள்ளார். இரட்டை நிலைப்பாட்டில் சிலகட்சிகள் சிறிலங்காவ…

    • 0 replies
    • 670 views
  19. [ புதன்கிழமை, 27 ஏப்ரல் 2011, 08:47 GMT ] [ தி.வண்ணமதி ] சிறிலங்காவில் போர்க் குற்ற விசாரணைகளை விரைந்து முன்னெடுக்கத் தவறியமைக்காக பான் கீ மூன் மீது தொடர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் ரசியாவினையும் சீனாவும்தான் இதற்குக் குறைகூறவேண்டுமே தவிர பான் கீ மூனையல்ல என்றும் அவர் அதிகாரமற்ற ஒருவர் என்றும் ஐ.நாவின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் சனல்-4 தொலைக்காட்சியிடம் தெரிவித்திருக்கிறார். சிறிலங்காவினது போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் சீனாவையும் ரசியாவையும் தனது வழிக்குக் கொண்டுவருவதற்குப் பான் கீ மூன் தவறிவிட்டார் என எழுந்து குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ஐ.நாவின் முன்னாள் மூத்த அதிகாரி ஒருவர் பான் கீ மூனின் இயலாத்தன்மையினை நியாயப்படுத்துகிறார். …

    • 0 replies
    • 640 views
  20. சென்னை, ஏப்.27: இலங்கையில் உள்ள மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய அந்நாட்டு அரசை நிர்ப்பந்திக்கும் வகையில் சர்வதேச இயக்கம் ஒன்றைத் தொடங்க இந்தியா முன்னின்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா வலியுறுத்தினார். தேவைப்பட்டால் எதற்கும் அடிபணியாத இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்த வேண்டும் என்றார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கை அரசின் பொறுப்புடைமை குறித்த ஐக்கிய நாடுகள் சபை வல்லுநர்கள் குழுவின் அறிக்கை இறுதியாக வெளியிடப்பட்டுள்ளது. “அப்பாவி மக்களுக்கு சேதமின்மை” என்ற கொள்கையின் அடிப்படையில் “மனிதாபிமான மீட்புப் பணி” நடத்தப்பட்டதாக தெரிவிக்கும் இலங்கை அரசின் வாதத்தினை 214 பக்கங்க…

  21. பான் கீ மூன் தமது நிபுணர் குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் நடவடிக்கை எடுத்து, சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும்: மனித உரிமை கண்காணிப்பகம்! [Wednesday, 2011-04-27 06:24:56] இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் அறிக்கையில் இணைத்துள்ள 16 செய்மதிப் படங்களை ஆதாரமாக வைத்துக்கொண்டு, அக்குழு பரிந்துரைத்துள்ள யோசனைகளை பான் கீ மூன் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நியூயோர்க்கில் உள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான நிபுணர் குழு அறிக்கையின் பரிந்துரைகளில் சிறிலங்கா அரசாங்கமோ அல்லது சர்வதேசமோ தடங்கலை ஏற்படுத்துவதற்கோ அல்லது தலையிடுவதற்கோ அனுமதிக்கக்கூ…

  22. ஐ நா அறிக்கை -அமெரிக்கா வரவேற்பு இலங்கை போரின் இறுதி நிகழ்வுகள் குறித்து ஐநா செயலருக்கு ஆலோசனை வழங்குவதற்கான குழுவின் அறிக்கையை அமெரிக்க வெகுவாக வரவேற்றுள்ளது. இந்தக் குழுவின் விபரமான, நீண்ட பணிகளை தாம் பாராட்டுவதாக அறிக்கை ஒன்றில் கூறியுள்ள ஐநாவுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதியான சூசன் ஈ ரைஸ் அவர்கள், இலங்கையில் நீதி, பொறுப்புக் கூறல், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை நோக்கிய அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு இந்த அறிக்கை பெறுமதியான பங்களிப்பை செய்துள்ளதாக தான் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார். அனைத்து தரப்பாலும் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் குறித்த பொறுப்புக் கூறல் உட்பட, அங்கு போருக்குப் பின்னான வெளிப்படைத்தன்மையுடைய நல்லிணக்கத்துக்கான…

    • 2 replies
    • 1.3k views
  23. இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான தமது அறிக்கையை ஐ.நா. நிபுணர் குழு, செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கையளித்துள்ளது. இந்த அறிக்கை முழுமையாக வெளியிடப்படப்போவதாகவும், கிடப்பில் போடப்படவிருப்பதாகவும் பலவிதமான செய்திகள் வெளிவந்தவண்ணமுள்ளன. இதனிடையே, இந்த அறிக்கை ஏதோ தமிழர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி போலவும், இத்தோடு தமிழர்களுடைய பிரச்சினைகள் யாவும் தீர்ந்துவிடும் என்பது போலவும் சில உள்நாட்டு, வெளிநாட்டுத் தமிழ்த் தரப்புக்களும், ஊடகங்களும் இதற்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து மாறி மாறி கருத்து வெளியிட்டு வருகின்றன. அறிக்கையின் முக்கியத்துவம் இறுதி யுத்த காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் பல்வேறு போர்க்குற்றங்கள் தொடர்பான தகவல்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.