ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
'விளையாட்டு'க்காக இந்தியாவுடன் சண்டை பிடிக்கும் இலங்கையும் 'தடவி'க் கொடுத்துச் சமாளிக்கும் இந்தியாவும் [Thursday, 2011-04-14 12:11:22] இந்திய பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) போட்டிகளில் விளையாடும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தொடர்பான சர்ச்சை குறித்து இலங்கை கிரிக்கெட் சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்திய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இங்கிலாந்து சுற்றுலாவ பயிற்சிகளுக்காக மே 5 ஆம் திகதிக்கு முன் திரும்பிவர வேண்டும் என இலங்கை வீரர்களுக்கு உத்தரவிடுமாறு இலங்கை கிரிக்கெட் சபையை தான் அறிவுறுத்தியுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இலங்கை அணி மே 10 ஆம் திகதி இங்கிலாந்துக்குப் புறப்படவுள்ளது. ஆனால் ஐ.பி.எல். போட்டிகள் மே 28 …
-
- 0 replies
- 1.2k views
-
-
கடற்புலிகள் தளபதி என கூறப்பட்டவரை விடுவிக்க கனேடிய நீதிமன்றம் உத்தரவு: அகதி உரிமையினை வழங்கவும் பணிப்பு [Thursday, 2011-04-14 12:34:04] கடந்த ஆண்டு இறுதியில் சன் சீ கப்பலில் 490 பேருடன் கனடா சென்றிருந்த அகதிகளில் மூவர் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் என தடுத்து வைக்க பட்டவர்கள் மீது நீதிமன்ற விசாரணைகள் இடமபெற்றது. இந்த நிலயில் நீதி மன்றில் நடைபெற்று வந்த வழக்கில் குறித்த நபர் முன்னாள் கடல் புலி தளபதி நிலை உறுப்பினர் எனவும் அவர் ஆயுதப் பயிற்சி எடுத்தவர் எனவும் ஆனால் தற்போது அவர் விடுதலைப் புலி உறுப்பினர் இல்லையென கூறிய நீதி மன்றம் அவரை விடுதலை செய்துள்ளது. அத்துடன் குறித்த நபருக்கான அகதி உரிமையினை வழங்கும் படியும்குடி வரவு குடியகல்வு அமைச்சுக்கு நீதி மன்றம…
-
- 0 replies
- 1.3k views
-
-
போரின் இறுதி மாதங்களில் 83,130 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் Thursday, April 14, 2011, 11:56 சிறீலங்கா, தமிழீழம் சிறீலங்காவில் இடம்பெற்ற போரின் இறுதி மாதங்களில் 70,000 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், சிறீலங்கா அரசின் தடை முகாம்களில் இருந்த 13,130 பேர் காணாமல்போயுள்ளதாக அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள சிராகோஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்துப்பட்டறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 12 ஆம் நாள் நடைபெற்ற இந்த கருத்துபட்டடறையில் அமெரிக்காவை தளமாகக் கொண்ட அமைதி முயற்சிக்கான தமிழர் அமைப்பின் பணிப்பாளர் கலாநிதி கருண்யன் அருள்நாதன் ஆற்றிய உரையிலோயே இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8,000 தமிழ் மக்களும், …
-
- 0 replies
- 2.3k views
-
-
அடுத்த கட்டம் குறித்த முடிவுகள் சில தினங்களில் – பான் கீ மூன் அறிவிப்பு! Posted by admin On April 14th, 2011 at 10:39 am / No Comments இலங்கையின் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நிபுணர் குழு வழங்கியுள்ள அறிக்கையை ஆராய்ந்த பின்னர் அடுத்து என்னசெய்வதென்று சில தினங்களில் தீர்மானிக்கப்படும் என ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இலங்கையின் இறுதிக்கட்டயுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப் பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக பொறுப்புக் கூறுதல் தொடர்பாக ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக அவரால் கடந்த வருடம் மே மாதம் நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட நிபுணர்கள் குழு தனது பணியை செப்டம…
-
- 1 reply
- 766 views
-
-
இலங்கை தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள ஐ.நா.நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபையும் வலியுறுத்தியுள்ளது. ஏற்கனவே மனித உரிமை காப்பகமும் இது தொடர்பில் அறிக்கையொன்றினை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இலங்கையில் நீண்டகாலம் நிலைத்திருக்கத் தக்கதான சமாதான சூழலைக் கட்டியெழுப்புவது தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இதற்கு முன் அளித்திருந்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும் என்றும் மன்னிப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசிபிக் வலயப் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் சாம் ஷரீபி இதற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளார். விசாரணை அறிக்கை குறித்து அறிந்து கொள்ளும் உரிமை ஒவ்வ…
-
- 2 replies
- 1.2k views
-
-
இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தம் தொடர்பான போர்க்குற்ற குற்றச்சாட்டுகள் பற்றி ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூனுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை பான்கீ மூனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதன் பிரதி ஒன்றும் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற நிலையில் அந்த அறிக்கையை இலங்கை அரசு கடுமையாக விமர்சித்து நிராகரித்தும் உள்ளது. இந்நிலையில் இந்த நிபுணர் குழுவின் அறிக்கையில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பது பற்றிய விபரங்கள் உத்தியோகபூர்வமாக இன்னமும் வெளியிடப்படாத நிலையில் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.. இந்த நிபுணர் குழு அறிக்கையின் முக்கிய அம்சமாக சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்றை பான்கீ மூன் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிபாரிசு செய்திருப்ப…
-
- 5 replies
- 1.3k views
- 1 follower
-
-
வியாழக்கிழமை, ஏப்ரல் 14, 2011 ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவின், இலங்கை தொடர்பான அறிக்கையை பொதுச்செயலர் பான் கீ மூன் ஆராய்ந்து வரும் பின்னணியில் சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளன என்பதை இராஜதந்திரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கள்தொடர்பில் ஆலோசனைகளை வழங்கவென பான் கீ மூன் நியமித்த மூவர் கொண்ட நிபுணர் குழு நேற்றுமுன் தினம் தனது அறிக்கையை கையளித்தது. மேற்கொண்டு என்ன நடவடிக்கையை எடுப்பது என்பதை முடிவு செய்வதற்காக அந்த அறிக்கையை ஐ.நா. பொதுச் செயலாளர் கவனமாக ஆராய்ந்து வருகிறார். அந்த அறிக்கையில் இலங்கை அரசுக்கு எதிரான, பாதகமான அம்சங்களே அதிகம் காணப்படுகின்றன என்று உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் போர்க் குற…
-
- 1 reply
- 956 views
-
-
நிபுணர் குழு அறிக்கையினை எதிர்கொள்ள மஹிந்தவின் வியூகம் கொழும்பு நிருபர் வியாழக்கிழமை, ஏப்ரல் 14, 2011 ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட மூவர் கொண்ட நிபுணர் குழுவின் அறிக்கை காரணமாகக் கலங்கிப் போயிருக்கும் சிறிலங்கா அரசு தற்போது உள்நாட்டில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பதவிக் காலத்தை மீண்டும் நீடிக்கவுள்ளதாக தீர்மானித்துள்ளது. பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கையானது முற்று முழுதாக சிறிலங்கா அரசின் மீது போர்க் குற்றங்களுக்கான சுட்டு விரலை நீட்டுவதாக அமைந்திருக்கும் நிலையில், உள்ளுர் ஆணைக் குழுவின் அறிக்கையும் வெளியிடப்பட்டால் அது மேலும் பாதகத்தன்மை கொண்டதாக அமையலாம் என்பதன் காரணமாகவே இந்த ஆ…
-
- 0 replies
- 990 views
-
-
அண்மையில் கல்விச் சுற்றுலாவுக்கு சென்ற யாழ் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் இசைத் துறை மாணவர்களை ஜனாதிபதியுடன் சந்திக்க வைத்து அங்கு கலாநிதி நவரத்தினம் தெரிவித்த கருத்துக்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மட்டத்தில் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதி ஒருவர் குளோபலுக்குத் தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் இசைத்துறைத் தலைவர் கலாநிதி நவரத்தினம் இசைத்துறை மாணவர்களை கல்விச்சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்ற பொழுது அவர்களை ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவை சந்திக்க வைத்துள்ளார். அங்கு ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கு பொன்னாடை போர்த்தி பரிசில் வழங்கி கௌரவித்துமுள்ளார் அங்கு கருத்துத் தெரிவித்த கலாநிதி நவரத்தினம் 2009மே இற்க…
-
- 5 replies
- 1.8k views
-
-
புதுவருசம்: ஒரு பொழுது உணவுக்குத் தவித்திருக்க பலகாரத்துக்கு எப்படி ஆசைப்படுவது? 14 ஏப்ரல் 2011 வழமைய நாட்களே பெரும் துக்கங்களைதான் தருகின்றன. இதனிடையில் வரும் கொண்டாட்டங்களுக்குரிய நாட்கள் அதைவிடப் பெரும் துக்கங்களை தருகின்றன. ஏனேன்றால் அந்த நாட்கள் வாழ்வையும் போராட்டங்களையும் தவிர்க்க முடியாதபடி ஞாபகத்துக்குக் கொண்டு வருகின்றன. எப்படி இருந்த வாழ்வு? எப்படி இருந்த நாங்கள்? என்ற கேள்விகளை மனமெங்கும் நிரப்புகின்றன. யாராவது வாழ்த்துச் சொல்லும்பொழுதுதான் இன்னுமின்னும் வலியெடுக்கிறது. விரக்தி நிரம்பிய ஈழத் தமிழர்களின் வாழ்க்கையில் எது கொண்டாட்டத்திற்குரிய நாள் என்பதை எப்படியோ எல்லாம் சொல்லிக் களைத்திருக்கிறார்கள். இன்று சித்திரைப் புதுவருசம். சில தொலைபேசி நிறுவன…
-
- 1 reply
- 911 views
-
-
SRI LANKA: Kevin Rudd silent on the plight of the Tamils It is two years since the civil war ended in Sri Lanka between the majority Sinhalese government in Colombo and the Tamil minority struggling for autonomy in their north-east homeland. he Tamils were crushed by overwhelming, undiscriminating firepower that rained down on them from the Sinhalese air force and ranks of artillery. Only when the guns fell silent were civilians separated from soldiers. The former were herded into largely known concentration camps while the fate of the latter is still unknown. The entire Tamil population of the north-east was caught up in the conflict. According to the Ca…
-
- 0 replies
- 965 views
-
-
வியாழக்கிழமை, ஏப்ரல் 14, 2011 கிரிக்கெட் தோல்வியின் விரக்தியில் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் மூன்றாவது சடலம் கரை ஒதுங்கியது. தமிழ்நாட்டில் தொண்டி என்னும் இடத்திலுள்ள சோழியக் குடி கரையிலேயே அந்தச் சடலம் கரையொதுங்கியுள்ளது. காணாமற்போன நான்கு மீனவர்களில் ஒருவரான எவ்.அந்தோனிராஜ் (வயது 36) என்பவரின் சடலமே அது என்று உறவினர்களால் இனங்காணப்பட்டுள்ளது. கடந்த வாரம் இராமேஸ்வரம் தங்கச்சி மடத்திலிருந்து படகுகளில் புறப்பட்ட நான்கு மீனவர் கள் காணாமற்போயிருந்தனர். அவர்களில் ஒருவரின் சடலம் குடாநாட்டு கடற்பரப்பில் கரையொதுங்கியதும் இராமநாதபுரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த சேவியர் விக்ரஸின் அந்தச் சடலம் பின்னர் அவரின் உறவினர்களால் யாழ்ப்பாணத்தில் அடக்கம் செய்யப்பட்…
-
- 1 reply
- 862 views
-
-
இலங்கையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சன்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்குத் தொடர்பு இருக்கின்றதா? அல்லது இலங்கை அரசாங்கம் இந்தப் படுகொலையில் அவரை மாட்டிவிடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதா? பிரித்தானிய அதிகாரி ஒருவர் தெரிவித்ததாகக் கூறப்படும் தகவல் ஒன்றை இலங்கை அரசாங்கம் வெளியிட்டதையடுத்தே இந்தக் கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுப்பப்பட்டிருக்கின்றது. 2009 ஜனவரி 8 ஆம் திகதி கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெஹிவளைப் பகுதியில் வைத்து பட்டப்பகலில் பலர் பார்த்துக்கொண்டிருக்கத்தக்கதாக இனந்தெரியாத ஆயுதக்குழு ஒன்றினால் லசந்த விக்கிரமதுங்க சுட்டுக்கொல்லப்பட்டார். லசந்த பணயம் செய்த காரைப் ப…
-
- 0 replies
- 787 views
-
-
மீண்டும் சீனா ஆரம்பித்துவிட்டது. இலங்கையின் உள் நாட்டுப்பிரச்சினைகளில் அமெரிக்கா தலையிடக்கூடாதாம். 2009 ம் ஆண்டிற்குப்பிறகு........... ஐ நா வின் அறிக்கை அம்பலமாகுவதற்கு முன்பு சீனாவின் அறிக்கை............. இதைதொடர்ந்து இந்தியா ரசீயா மேலும் பல நாடுகளின் அறிக்கைகளும் வெளிவரலாம். எமக்கு இவையெல்லாம் புதியவை இல்லை, ஆனால் இப்பொழுது நம் பக்கம் வீசும் காற்று கொஞ்சம் புதியது [புதுமை] போல்த்தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
-
- 3 replies
- 1.7k views
-
-
வியாழக்கிழமை, ஏப்ரல் 14, 2011 சிங்கள அரசின் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கைகள் இன்று சிதறடிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச சமூகத்தின் தலையீட்டுடனேயே ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். இதற்கான செயற்பாடுகள் விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் ஈழநாதத்துக்குத் தெரிவித்தார். “இலங்கை அரசாங்கத்துடன் எமது தரப்பினரின் பேச்சுவார்த்தை தொடர்கிறதே தவிர, ஆக்கபூர்வமாக இதுவரை எதுவும் இல்லை” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கடந்த வாரம் வெளியான ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.…
-
- 0 replies
- 801 views
-
-
வியாழக்கிழமை, ஏப்ரல் 14, 2011 திருக்கோவில் காஞ்சனாங்குடா சாகம வீதியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தொன்றில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்துள்ளனர் . அம்பாறையிலிருந்து உல்லை கடற்கரைப் பகுதிக்கு சென்ற உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் கனரக வாகனம் மீண்டும் அம்பாறைக்கு திரும்பிக் கொண்டிருக்கையிலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது. வேகமாக பயணித்துக் கொண்டிருந்த குறித்த வாகனம் திடீரென நிறுத்த முனைகையில் கட்டுப்பாட்டினை இழந்து தடம்புரண்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமுற்ற அனைவரும் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். My link
-
- 0 replies
- 946 views
-
-
நிபுணர்கள் குழுவின் அறிக்கையை நேற்று பெற்றுக்கொண்ட இலங்கை அரசு அதனை அடியோடு நிராகரித்தது. அறிக்கை தவறானது, பக்கச்சார்புடையது என்று வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. ஐ.நா. பொதுச்செயலரிடம் நேற்றுமுன்தினம் கையளிக்கப் பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக் கையின் ஒரு பிரதி இலங்கை அரசுக்கும் வழங்கப்பட்டது. அறிக்கை கிடைத்தது என்பதை நேற்றுப் புதன்கிழமை வெளி விவகார அமைச்சு உறுதிப்படுத்தியது.இந்த அறிக்கையில் பல்வேறு அடிப்படைக் குறைபாடுகள் உள்ளன. மேலும் பக்கச்சார்பான தகவல்களைக் கொண்டு ஆராய்ந்து பார்க்காமல் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் உள்ளடக்கம் தொடர்பான அரசின் விரிவான கருத்துப் பின்னர் வெளியிடப்படும் என்று அமைச்சு நேற்று வெளியிட்ட சுருக்க அறிக்கை கூறியது.முன்னத…
-
- 0 replies
- 1.9k views
-
-
கறுப்புச் சந்தையில் நுழைவுச் சீட்டைப் பெற்று கிரிக்கெட் இறுதிப்போட்டியை பார்த்த அமைச்சர்கள்! வியாழன், 14 ஏப்ரல் 2011 10:55 உலகக்கிண்ணக் கிரிக்கட் இறுதிப் போட்டியைக் கண்டுகளிக்க மும்பை சென்றிருந்த இலங்கையின் அமைச்சர்கள் பலர் கறுப்புச் சந்தையில்தான் நுழைவுச்சீட்டை வாங்கினர் என விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இறுதிப் போட்டியைக் கண்டுகளிக்க மும்பை சென்றிருந்த இலங்கையின் அரசியல் பிரமுகர்கள் முறையற்ற விதத்தில் நடத்தப்பட்டனர் இதுகுறித்து அனைத்துலக கிரிக்கட் சபையிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மும்பைக்குச் சென்றிருந்த 20 இற்கும் அதிகமான அமைச்சர்கள் இந்திய கிரிக்கட் சபையினால் தொந்தரவிற்கு …
-
- 0 replies
- 949 views
-
-
Thursday, 14 April 2011 03:34 கனடியத் தலைவர்களின் விவாதத்தில் ஓங்கியொலித்த தமிழ்க் கப்பல் விவகாரம் கனடாவின் பொதுத் தேர்தலின் ஒரு அங்கமாக கனடாவின் நான்கு பிரதான கட்சிகளின் தலைவர்களும் பொதுவாக ஒரு நாள் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொள்வார்கள். இந்த வருடம் இடம்பெறும் தேர்தலிற்கான விவாதம் நேற்று ஆங்கில் மொழியிலும் இன்று பிரெஞ்சு மொழியிலும் இடம்பெற்றது. இதுவே கனடியர்கள் அதிகம் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக இருக்கிறது. கட்சியின் தலைவர்கள் மிகவும் பண்பாகவும், நட்புரிமையுடனும் கலந்து கொள்ளும் இவ் விவாதம் இவர்களா இத் தேர்தலில் எதிர் எதிராகப் போட்டியிடுகிறார்கள் என்று தோன்ற வைக்கும். இவ் விவாதத்தில் கொன்சவேட்டிக் கட்சியின் தலைவர் ஸ்ரீபன் கார்ப…
-
- 0 replies
- 428 views
-
-
கிளிநொச்சி நகரப்பகுதியில் வீதிகளில் மின்விளக்குகள் பொருத்த ஏற்பாடு! Posted by uknews On April 14th, 2011 at 2:32 am / No Comments கிளிநொச்சி நகரப்பகுதியில் வீதி மின் விளக்குகளை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. போருக்குப் பின்னர் புனரமைக்கப்பட்டு வரும் கிளிநொச்சி நகரில் இரணைமடுச் சந்தி தொடக்கம் பரந்தன் வரையான 15 கிலோமீற்றர் தொலைவு தூரத்துக்கு இந்த மின் விளக்குகள் பொருத்தப்படவுள்ளன. இதற்கான நடவடிக்கைகளை இலங்கை மின்சாரசபையும் கரைச்சிப் பிரதேசசபையும் கிளிநொச்சி நகர வர்த்தக சங்கத்தினரும் இணைந்து மேற்கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. saritham.com
-
- 0 replies
- 282 views
-
-
Apr 13, 2011 / பகுதி: செய்தி / சரணடைந்தோரைக் கொல்லும் சிறிலங்கா இராணுவம் எத்தனை ஆதாரங்களை முன்வைத்தாலும் மறுப்புத் தெரிவிப்பதில் சிறிலங்கா இராணுவமும் அரசும் முனைப்பாக இருக்கிறது. சரணடைந்த பொது மக்களையும் போராளிகளையும் கொலை செய்வதை உலகின் மனிதநேயச் சட்டங்கள் தடை செய்கின்றன. இந்தச் சட்டங்களைச் சிறிலங்கா இராணுவம் மீண்டும் மீண்டும் மீறிவருகின்றது. படுகொலைக் காட்சிகள் அடங்கிய காணொளி படங்கள், கைபேசிப் படங்கள் ஆகியவற்றை சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பியுள்ளது. அதே தொலைக்காட்சி நிறுவனம் சிறிலங்கா இராணுவம் புரிந்த போர் குற்றங்கள் தொடர்பான விசாரணைக் குழுவிடம் இந்தப் படுகொலைக் காட்சிகள் அடங்கிய ஒளிப்படங்களை வழங்கியுள்ளது. மிக அண்மையில் நியூயோர்க் நகரைத் த…
-
- 1 reply
- 2.2k views
-
-
ஐ.நா செயலாளர் நாயக்கத்திடம் நிபுணர் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கையின் பிரதி இதுவரை இலங்கைக்கு கையளிக்கப்படவில்லை என வெகுசன ஊடக மற்றும் தகவல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இன்று பல சர்வதேச ஊடகங்களிலும் இலங்கைக்கு நிபுணர் குழுவின் அறிக்கை பிரதி கையளிக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து நாம் அவரிடம் கேள்வியெழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை நேற்றைய தினம் குறித்த அறிக்கையின் பிரதி இலங்கைக்கு கையளிக்கப்படும் என ஐ.நா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் ஃபர்ஹான் ஹக் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://eelanatham.net/story/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%…
-
- 1 reply
- 1.3k views
-
-
இராணுவ அடக்கு முறைகளின் மத்தியில் சித்திரை புத்தாண்டை கொண்டாடும் மனநிலையில் தமிழ்மக்கள் இல்லையென தமிழத் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது இராணுவ அடக்கு முறைகள் தொடர்வதால் சித்திரை புத்தாண்டை கொண்டாடும் மனநிலையில் தமிழ்மக்கள் இல்லையென தமிழத் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது. சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை விடுத்தது. யுத்தம் முடிவடைந்து சமாதானம் மலாந்து விட்டதென்று அரசாங்கம் கற்பனையில் பிரசாரம் செய்து வருவதாக அறிக்கை குறை கூறுகிறது. இடம்பெயர்க்கப்பட்ட மக்கள் இன்னமும் முழுமையாக மீள் குடியமாத்தப்படவில்லையெனவும், மீளக்குடியமர்ந்த மக்கள் தற்காலிக கூடாரங்களில் தங்கியுள்ளதாகவும், இந்த நிலையில் சித்திரைப் பு…
-
- 0 replies
- 823 views
-
-
மட்டக்களப்பின் மற்றொரு கிராமமும் பறிபோகிறது! Posted by admin On April 13th, 2011 at 10:24 pm / மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கெவிலியமடு தமிழ் கிராமம் முழுமையாக சிங்களவர்களிடம் பறிபோகும் நிலை உள்ளதாக இக்கிராமத்தில் குடியேறியுள்ள தமிழ் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கெவிலியமடு எல்லைக் கிராமத்தில் பூர்வீகமாக வசித்து வந்த தமிழ் மக்கள் கடந்த 83யூலை இனக்கலவரத்தின் பின்னர் முழுமையாக இடம்பெயர்ந்ததோடு 2004ம் ஆண்டு சமாதான காலத்தில் குடியேறிய சில குடும்பத்தினரும் இறுதியுத்த காலத்தில் முழுமையாக வெளியேறியிருந்தனர். இன் நிலையில் 27ஆண்டுகளுக்குப் பிறகு கடந்தவருடம் குடியேறிய தங்களுக்கு இத…
-
- 0 replies
- 869 views
-
-
"ஈழமுரசு லீக்ஸ்" - ஈழப்போரின் கடைசிக்கட்டம் பற்றிய அதிர்ச்சித் தகவல்கள்: ஜூனியர் விகடன் Posted by: on Apr 13, 2011 பிரிட்டன், ஃபிரான்ஸ் நாடுகளில் வெளியாகும் ‘ஈழமுரசு’ பத்திரிகையில், ஈழப்போரின் கடைசிக்கட்டம் பற்றி அதிர்ச்சித் தகவல்கள் இந்த வாரம் வெளியாகியுள்ளன! ஈழமுரசு லீக்ஸ் என்ற பெயரில் ‘தந்திரிகளின் மறுமுகம்’ என்று ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதியையும் அவரது மகள் கனிமொழியையும் கடுமையாக விமர்சிக்கிறது அந்தக் கட்டுரை. »ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில், நூற்றுக்கணக்கில் அப்பாவி மக்கள் செத்துக்கொண்டு இருக்க, அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என கடைசியில் போர்நிறுத்த முயற்சியில் புலிகள் இறங்கினர். இதற்காக, மத்திய அரசை வலியுறுத்துவதற்காக, தங்க…
-
- 0 replies
- 2.1k views
-