Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையை மிரட்டுகிறது அமெரிக்கா! Posted by admin On March 2nd, 2011 at 12:10 pm / இறுதிப்போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து ஒழுங்கான விசாரணைகளை கொழும்பு மேற்கொள்ளவில்லை எனில் போர்க்குற்ற விசாரணைத் தீர்ப்பாயத்தின் முன்பாக இலங்கை இழுத்து வரப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. சுயாதீன சர்வதேச விசாரணை ஒன்றுக்கு இலங்கை முகங்கொடுக்க வேண்டிய ஆபத்திருக்கின்றது என்று தெரிவித்துள்ளார் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்கச் செயலர் ரெபேர்ட் ஓ பிளேக். சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் சபையின் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அமெரிக்காவின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஐ.நா. கூ…

  2. இலங்கையில் அதிகமாக இடம்பெற்று வரும் சித்ரவதைகள் - 02 மார்ச் 2011 இலங்கையில் அதிகமாக இடம்பெற்று வரும் சித்ரவதைகள் குறித்து ஆசிய சட்ட வளங்கள் மத்திய நிலையம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. இவ்வாறான சித்ரவதைகளை தடுக்க இலங்கை ஐக்கிய நாடுகளின் இணக்கப்பாடுகளை அமுல்படுத்த தவறியுள்ளது எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் 16வது கூட்டத் தொடரில் எழுத்து மூலமான விடயங்களை முன்வைத்து, இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இலங்கையில் அமுல்படுத்தப்படாத ஐக்கிய நாடுகள் இணக்கப்பாடுகள் தொடர்பில் ஆசிய சட்ட வளங்கள் மத்திய நிலையம் விரிவான கருத்துக்களை முன்வைத்துள்ளது. தேசிய இறையாண்மைக்கு பங்கம் ஏற்படும் எனக் …

  3. Wednesday, March 2nd, 2011 | Posted by thaynilam திருகோணமலைக்கும் விசாகப்பட்டினத்திற்கும் இடையில் கப்பல் சேவை இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்திற்கும், இலங்கைக்கும் இடையில் நேரடி விமான, பயணிகள் கப்பல் சேவையை நடத்துவதற்கான ஒழுங்குகள் இப்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இதனடிப்படையில் கொழும்பிலிருந்து நேரடியாக விசாகப்பட்டினத்திற்கு விமான சேவையும், திருகோணமலை துறைமுகத்திலிருந்து ஆந்திராவிலுள்ள விசாகப்பட்டின துறைமுகத்திற்கு நேரடி பயணிகள் கப்பல் சேவையும் ஆரம்பிக்கப்படுமென்று இந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் அறிவித்துள்ளார். ஆந்திர பிரதேசத்தின் கிட்டான் பல்கலைக்கழகம் ஒழுங்கு செய்த வணிகர்கள் சங்க கூட்டத்தில் உரையாற்றியபோதே இலங்கைத் தூதுவர் இ…

  4. திருகோணமலையில் பாரிய கைத்தொழில் பேட்டை Posted by saritham On March 2nd, 2011 at 3:56 pm தற்போது இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்தவண்ணம் உள்ள இக்காலகட்டத்தில் இதனை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில் சகல உட்கட்டுமான வசதிகளுடன் கூடிய பாரிய கைத்தொழில் பேட்டையொன்று திருகோணமலையில் அமைக்கப்படவுள்ளது. இதற்கென 97 சதுரக் கிலோமீற்றர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டு திருகோணமலை சம்பூரில் இக்கைத் தொழில்பேட்டை அமைக்கப்படவுள்ளது. இதனுல் நிலக்கரி சூழை,இரும்பு உருக்குச் சூழை, பாரிய இயந்திரங்களைப் பொருத்தக்கூடிய வலயமொன்றை மிஷேல் பல்தேசிய நிறுவனம் அவுஸ்திரேலியா, பிரேசில் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுடன் இணைந்து உருவாக்கவுள்ளது. saritham.com

  5. கல்கிஸ்ஸ கடற்கரையில் மீட்கப்பட்ட இரு சடலங்களையும் அடையாளம் காண முடியாத நிலை: கொலை செய்யப்பட்டமை உறுதி [Wednesday, 2011-03-02 11:54:37] கல்கிஸ்ஸ கடற்கரையில் இன்று காலையில் கரையொதுங்கிய இரு சடலங்களும் இதுவரை (இலங்கை நேரப்படி மாலை.05.55) இனங் காணப்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உடலில் பல இடங்களில் காயங்களுடன் காணப்பட்ட இந்த இரு சடலங்களும் கரை ஒதுங்கிய நிலையில் இன்று காலை கல்கிஸ்ஸ கடற்கரையில் பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தன. தற்போது இந்த இரு சடலங்களும் களுபோவிலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட இந்த இருவரும் கொலை செய்யப்பட்ட பின்னர் கடலில் அல்லது கரையில் போடப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் தெரிவித்தனர். seithy.com

  6. தெற்கே ஒரு காஷ்மீரை உருவாக்காதீர்கள்! ஆவேச வைகோ... உஷாராகும் உளவுத்துறை ஈழத் தாய் பார்வதி அம்மாள் இறந்துபோனாலும்இ கடந்த காலங்களில் அரசுகள் அரங்கேற்றிய கூத்துகள்இ இன்னமும் எதிரொலித்தபடியே இருக்கின்றன. சென்னை தியாகராய நகர் செ.தெ. நாயகம் பள்ளியில் பார்வதி அம்மாளுக்கு புகழ் அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. தேனிசை செல்லப்பா பாடிய ஈழ எழுச்சிப் பாடல்​களால் சூடான கூட்டம்இ தமிழறிஞர் அரசேந்திரனின்இ 'கொள்ளி வைப்பானா பிள்ளை... கொள்ளி வைப்பானா பிள்ளை’ கவிதையால் உறைந்துபோனது. அந்தக் கவிதையைத் தன் கணீர்க் குரலில் மீண்டும் வாசித்துப் பேச்சைத் தொடங்கினார் வைகோ. மலேசியாவில் இருந்து சிகிச்சைக்காக விசா பெற்று சென்னைக்கு வந்த பார்வதி அம்மாளை விமான நிலையத்தில் வைத்து திருப்பி அன…

  7. தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய பங்காளியான தமிழரசு கட்சியின் உபதலைவர், பேராசிரியர் எஸ்.கே. சிற்றம்பலம் அவர்கள் சீனாவால் அழைக்கப்பட்டுள்ளார். 27 ஆம் திகதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இது தெரிவிக்கப்பட்டது. இது ஒரு வழமையான நிகழ்வுதான் என தமிழரசு கட்சி கூறியபோதும் முன்பு எப்போது இவ்வாறு அழைக்கப்பட்டனர் என கேட்கப்பட்டதற்கு பதில் தரப்படவில்லை. தமிழர் தேசிய கூட்டமைப்பை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை அவர்களின் தனித்துவத்தை அழிப்பதே இந்தியாவின் நோக்கமாக பரவலாக எண்ணப்படுகின்றது. தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு எது நிராகரிக்கப்பட்டதோ அதை மகிந்த அரசால் தரமுடியாது. தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு நிராகரிக்கப்பட்ட கோரிக்கைகள் …

    • 6 replies
    • 1.5k views
  8. Tuesday, March 1st, 2011 | Posted by thaynilam மதுவுக்கு அடிமையாகும் யாழ்ப்பாண பாடசாலை மாணவர்கள் யாழ்ப்பாணத்தின் பிரபல்லய பாடசாலைகளின் மாணவர்கள் மதுப்பாவனைக்கு அடிமையாகிவருகின்றமை தொடர்பிலான தகவல்கள் அதிகமாக வெளியாகிவருகின்றன. இதன் அடிப்படையில் யாழ்.இந்துக்கல்லூரியின் உயர்தர மாணவர்கள் பாடசாலை நேரத்தில் மது அருந்துவதற்காக குழுவாக பாடசாலையை விட்டு வெளியே செல்வதாக பாடசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காலை வேளை பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் பகல் 10.30மணியளவில் எவருடைய அனுமதியும் இன்றி வெளியேறுவதாக தெரியவருகின்றது. இந் நடவடிக்கையில் 50 வரையான மாணவர்கள் ஈடுபடுவதாக கல்லூரியில் கல்விபயிலும் மாணவன் ஒருவர் தெரிவித்தார். கணிதப்பிரிவினைச் சேர்ந்த மாணவர்களே இந்நடவடிக…

  9. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 16வது அமர்வில் சிறிலங்காவின் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று (28.02.11) உரையாற்றியுள்ளார். ஜெனீவாவில் இன்று ஆரம்பமான ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வு மார்ச் மாதம் 25ஆம் திகதி வரை ஜெனீவாவில் நடைபெறுகின்றது. இந் நிலையில், இலங்கையின் தற்போதைய மனிதவுரிமை நிலைமைகள், வடக்குக் கிழக்கு மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மற்றும் தென்னிலங்கையின் அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அவர் இவ்வமர்வில் உரையாற்றியுள்ளார். 186 நாடுகள் கலந்து கொண்டுள்ள இந்த அமர்வில் அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹில்லரி கிளிண்டனும் கலந்துக் கொண்டிருப்பமதக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவ…

  10. திருமலை - விசாகப்பட்டினம் கப்பல் சேவை விரைவில் இலங்கை உயர் ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் [Wednesday, 2011-03-02 03:01:20] இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்திற்கும், இலங்கைக்கும் இடையில் நேரடி விமான, பயணிகள் கப்பல் சேவையை நடத்துவதற்கான ஒழுங்குகள் இப்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன இதனடிப்படையில் கொழும்பிலிருந்து நேரடியாக விசாகப்பட்டினத்திற்கு விமான சேவையும், திருகோணமலை துறைமுகத்திலிருந்து ஆந்திராவிலுள்ள விசாகப்பட்டின துறைமுகத்திற்கு நேரடி பயணிகள் கப்பல் சேவையும் ஆரம்பிக்கப்படுமென்று இந்தியாவிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் அறிவித்துள்ளார். ஆந்திர பிரதேசத்தின் கிட்டான் பல்கலைக்கழகம் ஒழுங்கு செய்த வணிகர்கள் சங்க கூட்டத்தில் உரையாற்றிய போதே இலங்கைத…

  11. விஜய் நம்பியார் ஒரு போர்க் குற்றவாளி?! சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு 2009இ மே 18-ம் தேதிஇ வெள்ளைக் கொடி ஏந்தி சரண​டைய வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்கள் நடேசன்இ புலித்தேவன்இ ரமேஷ் ஆகியோரையும் அவர்களுடன் வந்த வீரர்களையும் ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்தது சிங்கள ராணுவம். தமிழீழத் தலைவர்களை சரணடைவதற்காக வெளியே வரும்படி அழைத்​த​வர்இ ஐ.நா. பொதுச் செய​லாளர் பான் கி மூனின் அலுவலக தலைமை அதிகாரியான கேரளாவைச் சேர்ந்த விஜய் நம்பியார். அதனால்இ 'அவர் பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த குற்றத்தில் பங்கு பெற்று இருக்கிறார்’ என்று நெதர்லாந்தில் உள்ள சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. 'இனப் படுகொலைக்கு எதிரான அமெரிக…

  12. ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்திய இனப் படுகொலைப் போரின் இறுதி கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்காக பன்னாட்டுப் போர்க் குற்ற நீதிமன்றத்தில் சிறிலங்க அரசு நிறுத்தப்படும் நிலை ஏற்படும் என்று அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தின் தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான செயலர் ரொபர்ட் பிளேக் எச்சரித்துள்ளார். ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைப் பேரவையில் பேசிய ரொபர்ட் பிளேக், விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின் இறுதி மாதங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்காக பன்னாட்டு போர்க்குற்ற தீர்ப்பாயத்தை சிறிலங்க அரசு எதிர்கொள்ள வேண்டிய அபாயம் உள்ளது. சிறிலங்க அரசு மீது பன்னாட்டு விசாரணை திணிக்கப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது” என்…

    • 2 replies
    • 1k views
  13. படையினரால் பெற்றுக் கொள்ளப்பட்ட யுத்த வெற்றியினை தான் ஒருபோதும் காட்டிக்கொடுக்க தயார் இல்லை என மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். இலங்கை விமானப் படையின் 60ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளினால் அழிக்கப்பட்ட நாட்டை கட்டியெழுப்பும் முயற்சிகளில் முப்படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், நாட்டின் சரித்திரத்தில் விமானப்படையினர் பாரிய கடமையொன்றை ஆற்றியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும், 4 விமானங்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட விமானப்படை இன்று புதிய ரக ஆயதங்களுடன் கூற முடியாதளவு வளர்ச்சி கண்டுள்ளதாகவும் நாட்டில் இடம்பெற்…

  14. வல்வெட்டித் துறையில் குடிமக்களை பதிவு செய்யும் நடவடிக்கையை படைத்தரப்பு திடிரென ஆரம்பித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் மக்களைப் பதிவு செய்யும் முறையை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழக்குத் தாக்கல் செய்துள்ள நிலையில் வல்வெட்டித் துறையில் குடிமக்களை பதிவு செய்யும் நடவடிக்கையை படைத்தரப்பு திடிரென ஆரம்பித்துள்ளது. நேற்றைய தினம் வீடு வீடாகச் சென்ற படையினர், அனைத்து வர்த்தக நிலையங்களிலும் விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டு உள்ளதாகவும் அவற்றை உடன் வாங்கி படிவத்தை பூர்த்தி செய்து இன்று இரவுக்குள் கிராமசேவையாளரிடம் சமர்ப்பிக்க வெண்டும் என உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கிராம சேவையாளர் வல்வெட்டித்துறை படைத்தளத்தில…

  15. இலங்கைக் கடற்படையுடன் பயிற்சி - கொழும்பு வந்துள்ளது இந்தோனேசியப் போர்க் கப்பல் [Wednesday, 2011-03-02 03:11:17] இலங்கைக் கடற்படையுடன் இணைந்து போர்ப் பயிற்சி நடவடிக்கை ஒன்றில் ஈடுபடுவதற்காக இந்தோனேசியப் போர்க்கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளது. கே.ஆர்.ஐ �சுல்தான் இஸ்கந்தர் முடா 367� என்ற இந்தோனேசியக் கடற்படைக் கப்பலே கொழும்பு வந்துள்ளது. நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த இந்தப் போர்க்கப்பலுக்கு இலங்கைக் கடற்படையினர் வரவேற்பு அளித்தனர். 90.71 மீற்றர் நீளமும், 2103 தொன் எடையும் கொண்ட இந்தப் போர்க்கப்பலில் 28 அதிகாரிகளும் 70 மாலுமிகளும் பணியாற்றுகின்றனர். இந்தப் போர்க்கப்பல் நாளை வரை கொழும்புத் துறைமுகத்தில் தங்கி நிற்கும். எதிர்வரும் 17…

  16. தமிழர்கள் தங்களது அடிமைகள் என இலங்கைப் படையினர் முள்ளிவாய்க்காலில் உயிர் தப்பிய தமிழர்களிடம் கூறியமை தெரியவந்துள்ளது. முள்ளிவாய்க்காலில் இருந்து உயிருடன் வெளியேற அனுமதிக்கப்பட்ட தமிழர்களைப் பார்த்துக் கேலியாகச் சிரித்த இலங்கையின் சிறப்புப் படையினர், தமிழர்கள் இனிமேல் தங்கள் அடிமைகள் எனக் கூறினார்களெனத் தெரியவந்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற போரின் முடிவு குறித்து நியூயோர்க்கர் மகசீனில் ஜனவரி மாதம் வெளியான கட்டுரை ஒன்றை எழுதிய ஊடகவியலாளர் ஜொன் லீ அன்டர்சன் (Jon Lee Anderson,) அமெரிக்க வானொலி நிலையம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார். போரின் இறுதிக் கட்டத்தில் உயிருடன் தப்பியிருந்த அனைவரையும் கொல்லும் உத்தரவுடன் சிறப்புப் படையினர் அனுப்…

    • 1 reply
    • 1.4k views
  17. http://www.yarl.com/files/110301_cvksivajanam.mp3

    • 0 replies
    • 646 views
  18. http://www.yarl.com/files/110301_thirumurukandi-school.mp3 பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் காலணிகள் வழங்கும் விழா முல்லைத்தீவு மாவட்டம் திருமுறிகண்டியைச் சேர்ந்த இந்து வித்தியாலய மாணவ மாணவிகளுக்கான கொப்பிகள் மற்றும் காலணிகள் வழங்கும் வைபவம் கடந்த 21.02.2011 திங்கட்கிழமையன்று நடைபெற்றது. வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் புலம்பெயர் உறவுகளிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினரின் அனுசரணையுடன் புலம்பெயர் உறவுகளின்மூலம் ரூ269,000 நிதிதிரட்டப்பட்டு அந்தத்தொகையில் மேற்படி கொப்பிகள் மற்றும் காலணிகள் என்பன கொள்வனவு செய்யப்பட்டு மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது. இந்ந…

    • 0 replies
    • 742 views
  19. இதுவரை முன்னாள் போராளிகள் 6000 பேர் விடுவிப்பாம் – இன்று 300 பேர் விடுதலை! Posted by admin On March 1st, 2011 at 1:31 pm / No Comments இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்த மற்றும் கைதாகி புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 6 ஆயிரம் முன்னாள் புலி உறுப்பினர்கள் இதுவரை விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் இன்றும் 300 பேர் விடுதலை செய்யப்படுவதாகவும் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சதீஷ் குமார் தெரிவித்தார். படையினரிடம் சரணடைந்த இவர்களுக்கு வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு நிலையங்களில் தொழிற்பயிற்சி மற்றும் மனவள பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களை பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கையளிக்கும் இன்றைய வைபவம் புனர்வாழ்வு மற்றும் சிறைச்…

  20. Tuesday, March 1st, 2011 | Posted by thaynilam 21 வருடங்களுக்குப் பின் அம்பாறையில் திருக்கோவிலில் இருந்த அதிரடிப் படை முகாம் வாபஸ் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் அமைக்கப்பட்டு இருந்த விசேட அதிரடிப் படை முகாம் 21 வருடங்களுக்கு பின் வாபஸ் பெறப்பட்டு உள்ளது. விசேட அதிரடிப் படையினர் இம்முகாமை விட்டு நேற்று முன் தினம் புறப்பட்டுச் சென்றனர். இம்முகாம் தனியார் குடியிருப்புக்களில் அமைக்கப்பட்டு இருந்தது. குடியிருப்புக்களின் சொந்தக்காரர்கள் இனி மேல் மீள்குடியேற முடியும். Short URL: http://thaynilam.com/tamil/?p=3328

  21. பிரித்தானியாவில் இருந்து சிறீலங்கா செல்லும் தமிழருக்கு மகிந்தா அரசின் புதிய கெடுபிடி பிரித்தானியாவில் இருந்து சிறீலங்கா செல்லும் தமிழர்கள் சிறீலங்காவில் உள்ள குடிவரவு திணைக்களத்தில் தம்மை உரிய முறையில் அடையாள படுத்தி பதிவு செய்த அடையாள அத்தாட்சி பத்திரத்தை பெற்று கொண்டே வடக்கு கிழக்கு மற்றும் தென்னிலங்கையில் உலவுவதற்கு அனுமதிக்க படுகின்றனர். அவ்வாறு அல்லாதவர்கள் விசாரணை என்ற பெயரில் கடத்த பட்டு பணம் அறவிட படுவதுடன் சிலர் காணாமலும் போய் உள்ளனர் .இந்த சிறீலங்கா இராணுவ அரச கெடு பிடிகாளில் சிக்கி பாதிப்படைந்து வந்த மக்கள் எமக்கு தெரிவித்துள்ளனர் . இதில் விசேடமாக ஓமந்தை பகுதியிலும் புதிய பதிவு முகாம் ஒன்று இயங்குவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழீழ விடுதலை …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.